புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு
Page 4 of 12 •
Page 4 of 12 • 1, 2, 3, 4, 5 ... 10, 11, 12
First topic message reminder :
ராஜ் சிவா !
ஈகரை அன்பர்களுக்கு நன்கு தெரிந்த பெயர் ,,,,
2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' என்ற சுவாரசியமான கட்டுரையின் ஆசிரியர் .
அவர் வேறொரு கட்டுரை தொடரை உயிரோசையில் ஆரம்பித்துள்ளார் அதுதான்
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன"
இந்த கட்டுரை பற்றிய அறிமுகத்தில் ராஜ் சிவா இப்படி குறிப்பிடுகிறார்
நான் எழுதப் போகும் அனைத்தும் உங்களால் நம்ப முடியாதவையாகவே இருக்கும். ஆனால் ஒரு நேரத்தில் நம்ப வேண்டிய கட்டாயங்கள் உங்களுக்கு வந்தே தீரும். இவற்றை நீங்கள் நம்ப வேண்டும், நம்பாமல் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் தாண்டி, இப்படியெல்லாம் உலகில் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியப்படுத்துவதே என் முதல் நோக்கமாக இருக்கிறது.
அப்படி என்ன தான் சொல்லபோகிறார் ராஜ் சிவா!
உங்களோடு அறிய நானும் ஆவல்கொண்டிருக்கிறேன் ..படிப்பதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்
இதோ முதல் பகுதி .......
நன்றி :உயிரோசை
ராஜ் சிவா !
ஈகரை அன்பர்களுக்கு நன்கு தெரிந்த பெயர் ,,,,
2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' என்ற சுவாரசியமான கட்டுரையின் ஆசிரியர் .
அவர் வேறொரு கட்டுரை தொடரை உயிரோசையில் ஆரம்பித்துள்ளார் அதுதான்
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன"
இந்த கட்டுரை பற்றிய அறிமுகத்தில் ராஜ் சிவா இப்படி குறிப்பிடுகிறார்
நான் எழுதப் போகும் அனைத்தும் உங்களால் நம்ப முடியாதவையாகவே இருக்கும். ஆனால் ஒரு நேரத்தில் நம்ப வேண்டிய கட்டாயங்கள் உங்களுக்கு வந்தே தீரும். இவற்றை நீங்கள் நம்ப வேண்டும், நம்பாமல் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் தாண்டி, இப்படியெல்லாம் உலகில் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியப்படுத்துவதே என் முதல் நோக்கமாக இருக்கிறது.
அப்படி என்ன தான் சொல்லபோகிறார் ராஜ் சிவா!
உங்களோடு அறிய நானும் ஆவல்கொண்டிருக்கிறேன் ..படிப்பதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்
இதோ முதல் பகுதி .......
நன்றி :உயிரோசை
- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
அருமையான மறம் ஆச்சரியமூட்டும் தகவல்கள்
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
நமது பூமியில் இருந்து தகவல் அவர்களை சென்றடைய 27 வருடங்கள் ஆனது ஆனால் அவர்களிடம் இருந்து மறுமொழிகள் 2 வருடங்களுக்கு உள்ளாகவே நம்மை வந்தடைந்திருக்கிறது எனில் அவர்கள் நம்மை விட எந்த அளவிற்கு தொழில்நுடபத்தில் முன்னோடியாக உள்ளனர்...கே. பாலா wrote:
இந்தச் செய்தி அனுப்பும் போதே, இதற்குப் பதில் கிடைக்க வேண்டுமென்றால் 25 வருடங்களுக்கு அதிகமான காலம் தேவை என்று கார்ல் சேகன் கணித்தே வைத்திருந்தார். அவர் கணித்தது போலவே 27 வருடங்களுக்குப் பின்னர் ஷில்போல்டனில் அந்தப் பயிர் வட்டங்கள் உருவாயின.
தொடருங்கள் அண்ணா ஆவலுடன் உள்ளோம் அதிசய தகவல்களை அறிந்து கொள்ள...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
கே. பாலா wrote:இல்லை ரமேஷ் ! அவர் கணித்தது போலவே 27 ஆண்டுகளுக்கு பிறகே செய்தி வந்துள்ளது செய்தி அனுப்பப்பட்ட ஆண்டு 1974
அண்ணா அங்கு நாம் அனுப்பிய செய்தி சென்றடைய 25 வருடங்கள் ஆவது ஆகும் என கொடுக்கப்பட்டு இருக்கிறதுஅனுப்பப்பட்ட இடம் நமக்கு மிக அண்மையிலுள்ள M13 நட்சத்திரக் கூட்டங்களை
நோக்கி. M13, நமக்கு மிக அண்மையில் உள்ளது என்று நான் சொன்னாலும்,
உண்மையில் அது இருபத்திதைந்து ஒளி வருடங்களுக்கு அப்பால் இருக்கிறது. நாம்
ஒளியின் வேகத்தில் (300000 கிமீ/செக்கன்) சென்றால், அந்த நட்சத்திரக்
கூட்டத்தை அடைய 25 வருடங்கள் நமக்குத் தேவை. அவ்வ்வ்வ்வ்வ்வளவு தொலைவு.
அதாவது நாம் அனுப்பிய செய்தி அங்கு சென்றடையக் குறைந்தபட்சம் 25 வருடங்கள்
தேவை.
ஆனால் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நமக்கு அவர்கள் மறுமொழியை கொடுத்து இருக்கிறார்கள் அவர் எதிர்பார்த்தது போலவே...அப்படியென்றால் அவர்களின் தொலைதொடர்பு வேகமும் விஞ்ஞான வளர்ச்சியும் நம்மை விட அபரிவிதமானதாக தானே அண்ணா இருக்கும்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
ஆச்சரியமூட்டும் தகவல்கள் ஒரே திகிலா இருக்கு
செந்தில்குமார்
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" =part 6
ஸ்டோன்ஹெஞ்ச் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர், இந்த வாரம் எனக்கு வந்த சில மின்னஞ்சல்கள் பற்றி நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். குறிப்பாகச் சிலர் ஒரே மாதிரியான சந்தேகத்தை மின்னஞ்சல் மூலம் கேட்டிருந்தனர். அந்தச் சந்தேகம் உங்களுக்கும் வந்திருக்கலாம். "கார்ல் சேகன் ஏலியன்களுகாக அனுப்பிய செய்தி, M13 நட்சத்திரக் கூட்டத்தைச் சென்றடைய 25 வருடங்கள் எடுக்கும் என்று சொன்னீர்கள். ஆனால் அவர்களிடமிருந்து பதில் எப்படி ஒரு வருடத்திலேயே, பயிர் வட்டமாக கிடைத்திருக்க முடியும்? அந்தச் செய்தி பூமியை நோக்கி வருவதற்கும் 25 வருடங்கள் தேவையல்லவா." இதுதான் அவர்களின் சந்தேகம். உண்மையில் மிகவும் புத்திசாலித்தனமான கேள்வி இது. தொடரில் சொல்லப்பட்ட ஷில்போல்டன் பயிர் வட்டம், M13 நட்டசத்திரக் கூட்டத்தை நோக்கி கார்ல் சேகன் அனுப்பிய செய்திக்கான பதிலாக இருக்கலாம் என்று சொல்லியிருந்தேன். அத்துடன் அந்த நட்சத்திரக் கூட்டம் 25 ஒளி வருடங்களுக்கு அப்பால் இருக்கிறது என்றும் சொல்லியிருந்தேன். கார்ல் சேகன் அனுப்பிய செய்தி அங்கு சென்றடைய குறைந்தபட்சம் 25 வருடங்கள் தேவை. அதே போல அங்கிருந்து பூமிக்கு செய்தி வருவதற்கும் 25 வருடங்கள் தேவை அல்லவா. மொத்தமாக 50 வருடங்கள் தேவையாகும்போது, 26 வருடங்களிலேயே பதில் எப்படி வந்திருக்க முடியும் என்ற கேள்வி நியாயமானதுதான். இது ஒன்றே ஷில்போல்டன் பயிர் வட்டம் ஏலியன்களால் செய்யப்படவில்லை, மனிதர்களால்தான் செய்யப்பட்டது என்பதற்கு சான்றாகவும் அமைந்துவிடும்.
இந்த நியாயமான சந்தேகத்துக்குப் பதிலை நான் இப்பொழுது சொல்லியே ஆகவேண்டும். கடந்த பதிவுகளில் கார்ல் சேகன் எழுதிய காண்டாக்ட் என்னும் புத்தகம், எந்த மாற்றமும் இல்லாமல், ‘காண்டாக்ட்’ (Contact) என்ற பெயரிலேயே படமாக எடுக்கப்பட்டதைப் பற்றிச் சொல்லியிருந்தேன். அந்தப் படத்தை முடிந்தால் பாருங்கள் என்றும் சொல்லியிருந்தேன். நிச்சயம் அந்தப் படத்தை உங்களில் பலர் பார்த்திருக்க மாட்டீர்கள். அந்தப் படத்தில் கார்ல் சேகன், மேலே சொல்லப்பட்ட சந்தேகத்துக்குப் பதிலும் சொல்லியிருக்கிறார். விளக்கமாக அந்தப் பதில் சொல்லப்படா விட்டாலும், அறிவியலில் சிறிது ஆர்வம் இருந்தால் அது புரியும் வகையில் சொல்லப்பட்டிருக்கிறது. அதை உங்களுக்குப் புரியும் படி விளக்கமாகச் சொல்வதற்கு நான் முயற்சிக்கிறேன்.
‘ காண்டாக்ட்’ படத்தின் கதையை மிகவும் சுருக்கமாக முதலில் நாம் பார்க்கலாம். படத்தில் நாயகியான ஜோடி ஃபோஸ்டர், சிறிய வயதிலிருந்தே வானியல் ஆராய்ச்சியில் நாட்டமுள்ளவள். சிறிய வயதில் தந்தை இறக்க, வானியல் ஆராய்ச்சியாளராகவே தன் படிப்பை முடித்து, போட்டோரிகாவில் உள்ள 'ஆரசிபோ' வானியல் ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிகிறாள் (நிஜத்திலும் இந்த ஆரசிபோ டெலஸ்கோப் மூலமாகத்தான் கார்ல் சேகன் ஏலியன்களுக்கு செய்தி அனுப்பினார் என்பதை முன்னர் சொல்லியிருக்கிறேன்). அங்கு அவள் பிரபஞ்சத்தில் அதியுயர் அறிவைக் கொண்ட உயிரினங்கள் எங்கேயாவது வாழ்கின்றனவா என்று ஆராய்ந்து வருகிறாள். திடீரென வேகா(Vega) என்னும் 26 ஒளிவருடங்களுக்கு அப்பால் இருக்கும் நட்சத்திரம் ஒன்றிலிருந்து பூமியை நோக்கிச் செய்திகள் வருவதை அவதானிக்கிறாள். வந்த செய்திகள் முப்பரிமாணப் படங்களாக வருகிறது. செய்திகளை ஆராய்ந்து பார்த்ததில், வேகாவில் இருப்பவர்களுடன் எப்படித் தொடர்பு கொள்வது என்ற குறிப்புகளும் இருக்கின்றன. மிக வேகமாக சுற்றிக் கொண்டிருக்கும் மூன்று வளையங்களின் நடுவே, ஒரு மனிதன் இருக்கக் கூடிய, பந்து போன்ற அமைப்பு உள்ள ஒரு கருவியின் மூலம் அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்று அந்தச் செய்தியில் காணப்படுகிறது. அந்த செய்திகளில் இருந்தபடி, பாரிய கருவி ஒன்றை உருவாக்குகின்றனர்.
அந்தக் கருவியின் நடுவே உள்ள பந்து போன்ற அமைப்பினுள்ளே, பலவித வீடியோக் கருவிகளைத் தன் உடம்பில் பொருத்தியபடி, வேகா நட்சத்திரத்துக்கான பயணத்துக்கு ஜோடி ஃபோஸ்டர் ஆயத்தமாகிறாள். பிரயாணம் ஆரம்பமாகப் போகும் கடைசித் தருணங்களான கவுண்ட் டவுன் (Countdown) ஆரம்பமாகிறது. 10, 9, 8...... என்று வரும்போதே ஜோடி ஃபோஸ்டர் பலவிதமான வெளிச்சங்களைக் காண்கிறாள். அத்துடன் அவளுக்கும் பூமிக்கும் உண்டான தொடர்பில் தெளிவில்லாமலும் போகிறது. கவுண்ட் டவுனின் பூச்சியத்தில் பிரயாணம் ஆரம்பமாகிறது. இந்த நேரத்தில் படத்தில் இரண்டு விதமாகக் காட்சிகள் அமைகின்றன. அந்தப் பந்தினுள் அமர்ந்திருக்கும் ஜோடி ஃபோஸ்டருக்கு என்ன நடக்கிறது என்ற அவளது பார்வையிலானது. மற்றது, வெளியே இருந்து அந்தப் பயணத்தை அவதானிக்கும் அமெரிக்க அரசு சார்ந்தவர்கள் பார்வையிலானது.
கவுண்ட் டவுன் ஆரம்பமாகியதும் ஜோடி ஃபோஸ்டர், தான் அமர்ந்திருக்கும் பந்தினுள்ளே, முழுவதும் வித்தியாசமான ஒளிகளைக் காண்கிறாள். அப்புறம் பிரயாணம் ஆரம்பமாகியதும், குழாய் போன்ற அமைப்புகளுக்கூடாகச் செல்கிறாள். ஒன்று மாறி ஒன்றாகப் பல குழாய்கள் போன்றவை தோன்ற, அவை வழியாகச் செல்கிறாள். இறுதியில், வேகாவை அடைகிறாள். அங்கு என்ன செய்கிறாள், யாருடன் பேசுகிறாள் என்பது பற்றியெல்லாம் இங்கு நான் சொல்லப் போனால் கதை விரிவடைந்துவிடும். வேகாவுக்குச் சென்றவள் பின்னர் மீண்டும் பூமிக்குத் திரும்புகிறாள். அவளைப் பொறுத்தவரை பயணத்தின் மொத்த நேரம் 18 மணித்தியாலங்கள். ஆனால் பூமியில் அவளின் பயணத்தை அவதானித்துக் கொண்டிருந்தவர்கள் காண்பதோ வேறு காட்சிகள். அவர்களின் பார்வையில், கவுண்ட் டவுன் ஆரம்பமாகி ஸ்டார்ட் பட்டன் அழுத்தப்பட்ட அடுத்த கணம் வேகமாக சுற்றும் கருவியில், தப்புகள் நடந்து பலத்த வெடி விபத்து ஏற்படுகிறது. ஜோடி ஃபோஸ்டர் அமர்ந்திருந்த பந்து அப்படியே கடலினுள் தூக்கியெறியப் படுகிறது. அதாவது பிரயாணம் என்ற ஒன்று நடக்காமலே சில செக்கன்களிலேயே எல்லாம் வெடித்துச் சிதறுகின்றன. உடனே ஜோடி ஃபோஸ்டர் அந்தப் பந்திலிருந்து காப்பாற்றப்படுகிறாள்.
பூமியில் இருந்தவர்களைப் பொறுத்தவரை சில செக்கன்களில், தோல்வியில் முடிந்த அந்தப் பிரயாணம், ஜோடி ஃபோஸ்டரைப் பொறுத்த வரை 18 மணி நேரப் பயணமாகவும், வெற்றிகரமான ஒரு பயணமாகவும் அமைகிறது. அமெரிக்கக் காங்கிரஸ் கமிட்டியின் விசாரணையின் போது, தான் கண்ட காட்சிகளை ஜோடி ஃபோஸ்டர் சொன்னாலும், அதை யாரும் நம்பவில்லை. அவளுடன் இணைக்கப்பட்ட வீடியோ சாதனங்களும், எந்தக் காட்சிகளும் பதிவு செய்யப்படாமல் வெறுமையாகவே இருக்கின்றன. சில செக்கன்களில் நடந்த ஒரு தோல்விப் பயணத்தை, 18 மணி நேரங்கள் நடந்த ஒரு வெற்றிப் பயணமாகச் சென்று வந்தது என்று அவள் சொல்வதற்கான ஒரு சாட்சியத்தையாவது கொடுக்கும்படி கமிட்டி கேட்கிறது. அத்துடன் 25 ஒளி வருடங்கள் தூரத்துக்கு, 18 மணி நேரத்தில் எப்படிப் போய் வரலாம் என்பதையும் விளக்கும்படி கேட்கிறது. அப்போது ஜோடி ஃபோஸ்டர் சொல்லும் விளக்கம்தான் இந்தப் பகுதியின் ஆரம்பத்தில், சிலர் மின்னஞ்சலில் கேட்ட சந்தேகத்துக்கான பதில்களாக இருக்கப் போகிறது. சொல்லப் போனால் ‘காண்டாக்ட்’ படத்தின் மொத்தக் கருவுமே கடைசியில் கொடுக்கப்படும் இந்த விளக்கத்தில்தான் தங்கியிருக்கிறது.
இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். மிகவும் கடினமாகப் புரிந்து கொள்ளக் கூடியதும், புரிய வைக்கக் கூடியதுமான ஒரு விசயத்தை உங்களுடன் பரிமாறிக் கொண்டிருக்கிறேன். நான் சொல்பவை உங்களுக்குப் புரியுமானால், அது நிச்சயம் எனக்கு ஒரு மகிழ்வான தருணமாக இருக்கும். இனி விசயத்துக்கு வருவோம்.
ஜோடி ஃபோஸ்டர் காங்கிரஸ் கமிட்டியிடம் சொல்லும் விளக்கம் இதுதான். "பூமியில் மனிதர்கள் உணர்ந்த நேரம்தான் அந்த சில செக்கன்கள். ஆனால் ஸ்பேஸ் (Space) என்னும் பிரபஞ்ச வெளியில் பிரயாணம் செய்யும் நேரம் என்பது வேறு. ஐன்ஸ்டைனும், ரோசன்பேர்க்கும் சொன்ன 'பாலம்' (Bridge) கோட்பாட்டின்படி, ஒரு வோர்ம் ஹோல் (Wormhole) உருவாகி, அதன் மூலம் நான் மிகக் குறைந்த நேரத்தில் வேகாவுக்கு சென்று வந்திருக்கலாம்" என்று யூடி ஃபோஸ்டர் சொல்கிறாள். 'அது கோட்பாடுதானேயொழிய இன்னும் நிரூபிக்கப்படாதவை' என்று சொல்லி அதை ஏற்க மறுக்கின்றார்கள் கமிட்டியினர். இந்த இடத்தில் நாம் படத்தில் இருந்து விலகி, 'ஐன்ஸ்டைன்-ரோசன்பேர்க் பாலம்' (Enstein-Resenberg Bridge) என்னும் கோட்பாடு பற்றிப் பார்க்கலாம்.
ஐன்ஸ்டைனை யாரென்று உங்களுக்கு நான் புரிய வைக்கத் தேவையில்லை. இன்றுவரை உலகத்தில் முதலாவது விஞ்ஞானியாக கருதப்படுபவர். பிரபஞ்சம் பற்றிய பல கோட்பாடுகளை உருவாக்கியவர். ஐன்ஸ்டைன் பிரபஞ்சத்தில் மூன்று துளைகள் (Holes) இருக்கின்றன என்று சொல்லியிருக்கிறார். ப்ளாக் ஹோல் (Black hole), வைட் ஹோல் (White hole), வோர்ம் ஹோல் (Wormhole) என்பவைதான் அந்த மூன்றும். ப்ளாக் ஹோல் பற்றி அனேகமாக நீங்கள் கேள்விப்பட்டிருந்தாலும், வைட் ஹோல், வோர்ம் ஹோல் என்பவை பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இந்த மூன்று துளைகளும் பிரபஞ்சம் எங்கும் இருப்பதாக ஐன்ஸ்டைன் சொன்னாலும், அவற்றைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு மனித விஞ்ஞானம் இன்னும் வளரவில்லை. இவை இருக்கின்றன என்று ஐன்ஸ்டைன் ஒரு நம்பிக்கையின் அடிப்படையிலோ, எழுந்தமானத்திலோ கூறிவிடவில்லை. மிகவும் சிக்கலான, நுணுக்கமான வானவியல் கணிதச் சமன்பாட்டின் மூலம் அவற்றை நிறுவியிருக்கிறார். இதுவரை இவை இல்லையென்று எந்த ஒரு விஞ்ஞானியும் மறுக்கவில்லை. அதுதவிர, இவற்றைக் கண்டு பிடிப்பதே தற்கால விஞ்ஞானிகளின் நோக்கமாகவும் இருக்கிறது.
இப்போது நாம் பார்க்கப் போவது வோர்ம் ஹோலைப் பற்றித்தான். ஒரு புழுவைப் போல அமைப்பில் விண்வெளியில் உருவாகும் ஒரு குழாய் போன்ற வடிவத்தைத்தான் வேர்ம் ஹோல் என்பார்கள். விண்வெளியில் ஒரு இடத்திலிருந்து இன்னுமொரு இடத்துக்குப் பிரயாணம் செய்வதற்கு, நேராக அந்த இடத்தை நோக்கி விண்கலத்தில் செல்வதை விட, வோர்ம் ஹோல் மூலமாகப் செல்வது இலகுவானதும், காலத்தை மிச்சம் பிடிப்பதுமாகும் என்கிறார் ஐன்ஸ்டைன். நமது பிரபஞ்சம் (Universum) தட்டையானது என்றே முன்னர் விஞ்ஞானிகள் நினைத்திருந்தனர். ஆனால் அது வளைந்த நிலையில் இருக்கிறது என்ற உண்மை பின்னர்தான் தெரிய வந்தது. இந்த நிலையில் ஐன்ஸ்டைனும், அவரது நண்பருமான ரோசன்பேர்க் என்பவரும் சேர்ந்து ஒரு மாபெரும் புரட்சிகரமான வானியல் விஞ்ஞானக் கோட்பாட்டை வெளியிட்டனர். அதுவே 'ஐன்ஸ்டைன்-ரோசன்பேர்க் பாலம்' எனப்படுகிறது. முதலில் இந்தப் படத்தைப் பாருங்கள். இது வோர்ம் ஹோலினால் உருவாகும் பாலம் கோட்பாட்டுக்கு மிக நல்ல உதாரணமாக இருக்கும்.
படத்தில் நமது பூமிக்கும் 'சிர்ரியஸ்' என்னும் நட்சத்திரத்துக்கும் உள்ள இடைவெளி 90 ட்ரில்லியன் கிலோமீட்டர் என்று காட்டப்பட்டிருக்கிறது. பிரபஞ்சம் வளைந்த நிலையில் உள்ளதால், வோர்ம் ஹோல் மூலமாக சிர்ரியஸ் நட்சத்திரத்துக்குச் செல்லலாம் என்றும் காட்டப்பட்டிருக்கிறது. வோர்ம் ஹோலினூடாக பிரயாணம் செல்லும்போது, காலம் மிகவும் சுருங்கிவிடும் என்பதால், அந்தப் பிரயாணமும் மிகக் குறுகிய நேரத்திலேயே நடக்கிறது.
இப்படியான ஒரு வோர்ம் ஹோல் மூலமாகத்தான் ‘காண்டாக்ட்’ படத்தின் நாயகி ஜோடி ஃபோஸ்ட்டரும் வேகா நட்சத்திரத்தை அடைகிறாள். ஆனால் அவள் சொல்வதை அமெரிக்கக் காங்கிரஸ் கமிட்டி நம்பவில்லை. ஆனால் படத்தின் இறுதியில் ஒரு முக்கிய சம்பவத்துடன் படம் முடிவடைகிறது. சில செக்கன்களில் நடந்ததை 18 மணி நேரம் நடந்த பிரயாணம் என்று ஜோடி ஃபோஸ்டர் சொன்னதற்குக் காரணம் கேட்கிறது கமிட்டி. அவள் உடம்பில் பொருத்தப்பட்ட வீடியோவில் கூடக் காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை. ஆனால் அந்த வீடியோவை இரகசியமாக ஆராய்ந்த போது, அதில் எந்தக் காட்சியும் இல்லாவிட்டாலும், ரெக்கார்ட் செய்யப்பட்ட நேரம் மொத்தமாக 18 மணி நேரம் ஆகியிருக்கிறது. 18 மணி நேரம் பதிவு செய்யப்பட்டிருக்குமானால், அவள் பிரயாணம் செய்ததும் 18 மணி நேரமாகத்தான் இருக்கும் என்பது நிரூபனமாகிறதல்லவா? ஆனால் அந்த வீடியோ ஆதாரத்தை அப்படியே யாருகும் தெரியாமல் மறைக்கிறது அமெரிக்க அரசு. ‘ஜோடி’ ஃபோஸ்டருக்குக் கூட அது சொல்லப்படுவதில்லை. "அந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?" என்று சொல்லப்படுவதில்லை.
நமது பூமிக்கு வரும் ஏலியன்கள் கூட இதே போன்று வோர்ம் ஹோலை உபயோகித்து வந்திருக்கலாம் என்றே பலர் நம்புகின்றனர். ஷில்போல்டனுக்குரிய செய்தி கூட இந்த வகையிலேயே வந்திருக்கலாம் எனவும் சொல்கிறார்கள். பயிர் வட்டங்கள் உருவாவதற்கு காரணமாகச் சொல்லப்படும் ஒளிப் பந்துகள் கூட, வோர்ம் ஹோல்கள்தானோ என்று சந்தேகப்படுபவர்களும் உண்டு. "என்னடா இந்த ஆள் ஏலியன் இருக்கு என்றே சொல்லிவிடுவார் போல இருக்கே!" என்று நீங்கள் நினைக்கலாம். நான் சொல்வது ஒருபுறம் இருக்க, காண்டாக்ட் படத்தில் ஜோடி ஃபோஸ்டருக்கு செய்தி கிடைத்தது போல, நிஜமாகவே பூமிக்கு விண்வெளியில் இருந்து ஒரு சிக்னல் கிடைத்தது. அதுவும் வெகு தொலைவில் இருந்த நட்சத்திரக் கூட்டங்களிலிருந்து ரேடியோ சிக்னலாக வந்தது. நம்பவே முடியாத அதிசயம் அது.
1977ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி ஜெர்ரி ஏமான் (Jerry Ehman) என்னும் வானியல் விஞ்ஞானி, விண்வெளியை ஆராய்ந்து கொண்டிருந்தபோது, செறிவான ரேடியோ சிக்னல் ஒன்று வருவதை அவதானித்தார். அதைப் பதிவும் செய்தார். ஆனால் 72 செக்கன்களின் பின்னர் அது நின்று விட்டது. அப்புறம் வரவேயில்லை. இதை 'வாவ்! சிக்னல்' (Wow! signal) என்கிறார்கள். பெயருக்கு ஏற்றால் போல பூமியில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளையும் 'வாவ்!' என்று வாயைப் பிளக்க வைத்தது அந்த சிக்னல்.
வாவ் சிக்னல் பற்றி விரிவாகவும், இந்தப் பகுதியில் சொல்லாமல் விடுபட்டுப் போன ஸ்டோன் ஹெஞ்ச் பற்றியும் அடுத்த தொடரில் பார்ப்போமா..!
உ
பகிர்வுக்கு நன்றி பாலா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கும் சந்தேகத்தை தீர்த்தமைக்கும்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Gulzaarபண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 23/03/2012
மிகவும் அறிய தகவல்களுடன் தகுந்த ஆதாரங்களுடன் கொடுக்கப்படும் இந்தத் தொடர் மிகவும் அருமை!!
ஆனால் இந்த 6 வது அத்தியாயம் தேவையில்லாதது என்றே நினைக்கின்றேன். ஏனென்றால் அனுப்பிய தகவலுக்கு பதில் கிடைக்க 25 வருடங்கள் ஆகும் என்று கார்ல் கேசன் கணித்திருந்தார் அதைப் போலவே 25 வருடங்கள் கடந்தே செய்தி வந்ததாக கருத முழுவதும் இடம் இருக்கின்றது.
அதாவது, அமெரிக்காவில் உள்ள ஒரு டாலருக்கு (அங்க ஒரு ரூபாய்) நம்ம நாட்டுல 47 ரூபாயாம்.!
அது எப்படி ஒரு ரூபாய் 47 ரூபாயா ஆக முடியும்? அப்படின்னு கேட்டா இந்தக் கேள்வி நியாயமானதா?
எனவே யாரோ சிலர் கேட்ட கேள்விக்கு(?) ஒரு அத்தியாயத்தையே வீணடிப்பது நியாயமா? மிகுந்த ஆவலுடன் இந்த ஆறாவது அத்தியாயத்தை எதிர் பார்த்தேன். ஆனால்....
சீக்கிரம் விசயத்துக்கு வாங்க ராஜ் சிவா! எங்களுக்கு ஹாலிவுட் படங்களைக் காப்பியடிக்கறது தான் முழு நேர வேலை!! தயவு செய்து இ-மெயிலில் கேள்வி கேட்பவர்களுக்கு இ-மெயிலிலேயே பதிலும் சொல்லுங்கள். கேள்வி கேட்பவர்களுக்கெல்லாம் ஒரு அத்தியாயம் எழுதுவீர்கள் என்றால் என்னிடம் நிறைய கேள்விகள் இருக்கிறது!....
தொடரை நீட்டுவதற்காக திரைப்பட விமர்சனம் எல்லாம் எழுதக் கூடாது!!...
ஆனால் இந்த 6 வது அத்தியாயம் தேவையில்லாதது என்றே நினைக்கின்றேன். ஏனென்றால் அனுப்பிய தகவலுக்கு பதில் கிடைக்க 25 வருடங்கள் ஆகும் என்று கார்ல் கேசன் கணித்திருந்தார் அதைப் போலவே 25 வருடங்கள் கடந்தே செய்தி வந்ததாக கருத முழுவதும் இடம் இருக்கின்றது.
அதாவது, அமெரிக்காவில் உள்ள ஒரு டாலருக்கு (அங்க ஒரு ரூபாய்) நம்ம நாட்டுல 47 ரூபாயாம்.!
அது எப்படி ஒரு ரூபாய் 47 ரூபாயா ஆக முடியும்? அப்படின்னு கேட்டா இந்தக் கேள்வி நியாயமானதா?
எனவே யாரோ சிலர் கேட்ட கேள்விக்கு(?) ஒரு அத்தியாயத்தையே வீணடிப்பது நியாயமா? மிகுந்த ஆவலுடன் இந்த ஆறாவது அத்தியாயத்தை எதிர் பார்த்தேன். ஆனால்....
இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். மிகவும் கடினமாகப் புரிந்து கொள்ளக் கூடியதும், புரிய வைக்கக் கூடியதுமான ஒரு விசயத்தை உங்களுடன் பரிமாறிக் கொண்டிருக்கிறேன். நான் சொல்பவை உங்களுக்குப் புரியுமானால், அது நிச்சயம் எனக்கு ஒரு மகிழ்வான தருணமாக இருக்கும். இனி விசயத்துக்கு வருவோம்.
சீக்கிரம் விசயத்துக்கு வாங்க ராஜ் சிவா! எங்களுக்கு ஹாலிவுட் படங்களைக் காப்பியடிக்கறது தான் முழு நேர வேலை!! தயவு செய்து இ-மெயிலில் கேள்வி கேட்பவர்களுக்கு இ-மெயிலிலேயே பதிலும் சொல்லுங்கள். கேள்வி கேட்பவர்களுக்கெல்லாம் ஒரு அத்தியாயம் எழுதுவீர்கள் என்றால் என்னிடம் நிறைய கேள்விகள் இருக்கிறது!....
தொடரை நீட்டுவதற்காக திரைப்பட விமர்சனம் எல்லாம் எழுதக் கூடாது!!...
- Sponsored content
Page 4 of 12 • 1, 2, 3, 4, 5 ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 12
|
|