புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்திகள்  - Page 2 Poll_c10செய்திகள்  - Page 2 Poll_m10செய்திகள்  - Page 2 Poll_c10 
42 Posts - 63%
heezulia
செய்திகள்  - Page 2 Poll_c10செய்திகள்  - Page 2 Poll_m10செய்திகள்  - Page 2 Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
செய்திகள்  - Page 2 Poll_c10செய்திகள்  - Page 2 Poll_m10செய்திகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
செய்திகள்  - Page 2 Poll_c10செய்திகள்  - Page 2 Poll_m10செய்திகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்திகள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Apr 02, 2019 9:31 pm

First topic message reminder :

21 நாட்களில் ரூ. 302 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை..>
....புதுடில்லி தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடத்திய வாகன சோதனைகளில், கணக்கில் வராத, 302 கோடி ரூபாய், நாடு முழுவதும் கைப்பற்றப்பட்டுள்ளது.கடந்த, மார்ச், 10ல், லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தேர்தல் ஆணைய அதிகாரிகள், போலீசார் துணையுடன், வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் சிக்குவோர், தங்கள் பணத்திற்கு கணக்கு காட்டத் தவறும்பட்சத்தில், அவர்கள் வைத்துள்ள தொகை, பறிமுதல் செய்யப்பட்டு, வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது.இந்த வகையில், மார்ச், 31 வரையிலான, 21 நாட்களில், 302 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டு உள்ளது. இத்துடன், அமலாக்கத் துறையினரால், 63 லட்சம் லிட்டர் மது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது; இதன் மதிப்பு, 135 கோடி ரூபாய்.ஆந்திராவில், அதிகப்பட்சமாக, 94 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம், 91 கோடி ரூபாயுடன், இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதிக அளவில் மது பறிமுதல் செய்யப்பட்ட மாநிலங்களில், மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், முதல் இரண்டு இடங்களில் உள்ளன.தேர்தல் ஆணையம், அன்றாடம் கைப்பற்றப்படும், கணக்கில் காட்டாத பணம், நகை உள்ளிட்ட விபரங்களை, அதன் இணையதளத்தில் வெளியிடுகிறது. உரிய கணக்கு காட்டு வோருக்கு, பறிமுதல் செய்த பணம், நகை ஆகியவை, திரும்ப வழங்கப்படுகிறது.




சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Apr 05, 2019 8:32 pm

நிரவ் மோடி சொகுசு கார்களை ஏலம் விடும் அமலாக்க துறை
புதுடில்லி:வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான சொகுசு கார்களை, 'ஆன்லைன்' வாயிலாக ஏலம் விட, அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம், மும்பையை சேர்ந்த வைர வியாபாரி, நிரவ் மோடி, 48. இவன், பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திரும்பச் செலுத்தாமல், வெளிநாடு தப்பிச் சென்றார். ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனில், சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த அவரை, லண்டன் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவரை, இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சியில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.நிரவ் மோடிக்கு சொந்தமான பல சொத்துகளை, அமலாக்கத் துறையினர், பறிமுதல் செய்தனர். அதில் இருந்த, 68 கலை பொருட்களை, தனியார் ஏல நிறுவனத்தின் உதவியுடன், வருமான வரித்துறையினர் ஏலம் விட்டனர். அவை, 59.37 கோடி ரூபாய்க்கு ஏலம் போயின.
இந்நிலையில், நிரவ் மோடிக்கு சொந்தமான சொகுசு கார்களை, ஏலம் விட, அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது.அரசு நிறுவனமான, எம்.எஸ்.டி.சி., எனப்படும், இரும்பு கழிவுகள் வர்த்தக கழகம் மூலம், இந்த ஏலம் நடத்தப்பட உள்ளது.வரும், 18ல், இரும்பு கழிவுகள் வர்த்தக கழகத்துக்கு சொந்தமான, இணையதளத்தில், 'ஆன்லைன்' வாயிலாக இந்த ஏலம் நடக்கவுள்ளது.நிரவ் மோடிக்கு சொந்தமான, 'ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், பார்ஷே பனாமெரா, டொயோட்டோ பார்சூனர், இன்னோவா, ஹோண்டா சிஆர் - வி' உட்பட, பல சொகுசு கார்கள், ஏலம் விடப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Apr 05, 2019 8:32 pm

நிரவ் மோடி சொகுசு கார்களை ஏலம் விடும் அமலாக்க துறை
புதுடில்லி:வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான சொகுசு கார்களை, 'ஆன்லைன்' வாயிலாக ஏலம் விட, அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம், மும்பையை சேர்ந்த வைர வியாபாரி, நிரவ் மோடி, 48. இவன், பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திரும்பச் செலுத்தாமல், வெளிநாடு தப்பிச் சென்றார். ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனில், சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த அவரை, லண்டன் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவரை, இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சியில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.நிரவ் மோடிக்கு சொந்தமான பல சொத்துகளை, அமலாக்கத் துறையினர், பறிமுதல் செய்தனர். அதில் இருந்த, 68 கலை பொருட்களை, தனியார் ஏல நிறுவனத்தின் உதவியுடன், வருமான வரித்துறையினர் ஏலம் விட்டனர். அவை, 59.37 கோடி ரூபாய்க்கு ஏலம் போயின.
இந்நிலையில், நிரவ் மோடிக்கு சொந்தமான சொகுசு கார்களை, ஏலம் விட, அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது.அரசு நிறுவனமான, எம்.எஸ்.டி.சி., எனப்படும், இரும்பு கழிவுகள் வர்த்தக கழகம் மூலம், இந்த ஏலம் நடத்தப்பட உள்ளது.வரும், 18ல், இரும்பு கழிவுகள் வர்த்தக கழகத்துக்கு சொந்தமான, இணையதளத்தில், 'ஆன்லைன்' வாயிலாக இந்த ஏலம் நடக்கவுள்ளது.நிரவ் மோடிக்கு சொந்தமான, 'ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், பார்ஷே பனாமெரா, டொயோட்டோ பார்சூனர், இன்னோவா, ஹோண்டா சிஆர் - வி' உட்பட, பல சொகுசு கார்கள், ஏலம் விடப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Apr 05, 2019 8:39 pm

ராஜஸ்தான் மாநில கவர்னர்கல்யாண்சிங்கிற்கு...தேர்தல்விதிமுறைகளைமீறியதால்
ஜனாதிபதி அதிரடி

புதுடில்லி: 'பிரதமர் மோடிக்கு ஆதரவாக, ராஜஸ்தான் கவர்னர் கல்யாண் சிங் பேசியது, தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்' என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம், தேர்தல் ஆணையம் புகார் அளித்தது. இதையடுத்து, கல்யாண் சிங்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பரிந்துரை செய்துள்ளார். இதனால், கல்யாண் சிங்கின் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.ராஜஸ்தான் மாநில கவர்னராக பதவி வகிப்பவர், கல்யாண் சிங், 87. உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வரான இவர், பா.ஜ., வில், பல முக்கிய பொறுப்புகளையும் வகித்தவர். லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின், உ.பி., மாநிலத்தில் உள்ள, தன் சொந்த ஊரான அலிகாருக்கு, கல்யாண் சிங், சமீபத்தில் சென்றிருந்தார். அலிகார் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட, பா.ஜ., வேட்பாளருக்கு அதிருப்தி தெரிவித்து, அந்த கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அவர்களை தன் வீட்டுக்கு அழைத்து, கல்யாண் சிங் சமாதானப்
படுத்தினார். அப்போது, கல்யாண் சிங் பேசுகையில், 'நாடு வளர்ச்சி பெற, பிரதமர் மோடி, மீண்டும் வெற்றிபெற வேண்டும்; அதுதான் நம் லட்சியம். அதற்காக தான், நாம் பணியாற்ற வேண்டும். கருத்து வேறுபாடுகளை மறந்து, மோடியை மீண்டும் பிரதமராக்க பாடுபடுவோம்' என்றார். கல்யாண் சிங்கின் இந்தப் பேச்சு, சமூக வலை தளங்களிலும், ஊடகங்களிலும் வெளியானது. கவர்னராக உள்ள ஒருவர், தேர்தலில், பிரதமரை தேர்வு செய்வது தொடர்பாக கருத்து தெரிவித்தது, சர்ச்சையை கிளப்பியது. காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தன.இதையடுத்து, உ.பி., மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு, தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில், 'ராஜஸ்தான் கவர்னர் கல்யாண் சிங், அலிகாரில் பேசிய விபரங்கள் குறித்த அறிக்கையை, ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. அலிகாரில், கல்யாண் சிங் பேசியது தொடர்பான, 'வீடியோ, ஆடியோ' பதிவுகளை, மாநில தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தார். அதை, ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், 'பிரதமர் மோடிக்கு ஆதரவாக, கல்யாண் சிங் பேசியது உண்மை' என, உறுதி செய்தது.இதையடுத்து, 'அரசியல் அமைப்பு சட்டப் பதவியில் உள்ள ஒருவர், இவ்வாறு பேசுவது, தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்' என, தெரிவித்த தேர்தல் ஆணையம், இது பற்றி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் அனுப்பியது. வெளிநாடு பயணத்தை முடித்து, நேற்று முன்தினம் டில்லி திரும்பிய, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கல்யாண் சிங் தொடர்பாக, தேர்தல் ஆணையம் அனுப்பிய புகார் கடிதத்தை, ஆய்வு செய்தார். அந்த கடிதத்தை, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, நேற்று அனுப்பி வைத்தார்.மேலும், 'தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது தொடர்பாக, கல்யாண் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உள்துறை அமைச்சகத்தை, ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார். 'அரசியல் சட்ட பதவிகளில் உள்ளவர்களை, தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்படுத்தாது; எனினும், அந்த பதவியில் உள்ளவர், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதை ஏற்க முடியாது' என, ஜனாதிபதி தெரிவித்ததாக, அவரது அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து, ராஜஸ்தான் கவர்னர் கல்யாண் சிங்கின் பதவிக்கு, சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அவர், தன் பதவியை, ராஜினாமா செய்வார் என, எதிர் பார்க்கப்படுகிறது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Apr 05, 2019 8:39 pm

ராஜஸ்தான் மாநில கவர்னர்கல்யாண்சிங்கிற்கு...தேர்தல்விதிமுறைகளைமீறியதால்
ஜனாதிபதி அதிரடி

புதுடில்லி: 'பிரதமர் மோடிக்கு ஆதரவாக, ராஜஸ்தான் கவர்னர் கல்யாண் சிங் பேசியது, தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்' என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம், தேர்தல் ஆணையம் புகார் அளித்தது. இதையடுத்து, கல்யாண் சிங்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பரிந்துரை செய்துள்ளார். இதனால், கல்யாண் சிங்கின் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.ராஜஸ்தான் மாநில கவர்னராக பதவி வகிப்பவர், கல்யாண் சிங், 87. உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வரான இவர், பா.ஜ., வில், பல முக்கிய பொறுப்புகளையும் வகித்தவர். லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின், உ.பி., மாநிலத்தில் உள்ள, தன் சொந்த ஊரான அலிகாருக்கு, கல்யாண் சிங், சமீபத்தில் சென்றிருந்தார். அலிகார் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட, பா.ஜ., வேட்பாளருக்கு அதிருப்தி தெரிவித்து, அந்த கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அவர்களை தன் வீட்டுக்கு அழைத்து, கல்யாண் சிங் சமாதானப்
படுத்தினார். அப்போது, கல்யாண் சிங் பேசுகையில், 'நாடு வளர்ச்சி பெற, பிரதமர் மோடி, மீண்டும் வெற்றிபெற வேண்டும்; அதுதான் நம் லட்சியம். அதற்காக தான், நாம் பணியாற்ற வேண்டும். கருத்து வேறுபாடுகளை மறந்து, மோடியை மீண்டும் பிரதமராக்க பாடுபடுவோம்' என்றார். கல்யாண் சிங்கின் இந்தப் பேச்சு, சமூக வலை தளங்களிலும், ஊடகங்களிலும் வெளியானது. கவர்னராக உள்ள ஒருவர், தேர்தலில், பிரதமரை தேர்வு செய்வது தொடர்பாக கருத்து தெரிவித்தது, சர்ச்சையை கிளப்பியது. காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தன.இதையடுத்து, உ.பி., மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு, தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில், 'ராஜஸ்தான் கவர்னர் கல்யாண் சிங், அலிகாரில் பேசிய விபரங்கள் குறித்த அறிக்கையை, ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. அலிகாரில், கல்யாண் சிங் பேசியது தொடர்பான, 'வீடியோ, ஆடியோ' பதிவுகளை, மாநில தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தார். அதை, ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், 'பிரதமர் மோடிக்கு ஆதரவாக, கல்யாண் சிங் பேசியது உண்மை' என, உறுதி செய்தது.இதையடுத்து, 'அரசியல் அமைப்பு சட்டப் பதவியில் உள்ள ஒருவர், இவ்வாறு பேசுவது, தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்' என, தெரிவித்த தேர்தல் ஆணையம், இது பற்றி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் அனுப்பியது. வெளிநாடு பயணத்தை முடித்து, நேற்று முன்தினம் டில்லி திரும்பிய, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கல்யாண் சிங் தொடர்பாக, தேர்தல் ஆணையம் அனுப்பிய புகார் கடிதத்தை, ஆய்வு செய்தார். அந்த கடிதத்தை, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, நேற்று அனுப்பி வைத்தார்.மேலும், 'தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது தொடர்பாக, கல்யாண் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உள்துறை அமைச்சகத்தை, ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார். 'அரசியல் சட்ட பதவிகளில் உள்ளவர்களை, தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்படுத்தாது; எனினும், அந்த பதவியில் உள்ளவர், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதை ஏற்க முடியாது' என, ஜனாதிபதி தெரிவித்ததாக, அவரது அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து, ராஜஸ்தான் கவர்னர் கல்யாண் சிங்கின் பதவிக்கு, சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அவர், தன் பதவியை, ராஜினாமா செய்வார் என, எதிர் பார்க்கப்படுகிறது.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக