புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் விரும்புவதை அடைவது எப்படி? Poll_c10நீங்கள் விரும்புவதை அடைவது எப்படி? Poll_m10நீங்கள் விரும்புவதை அடைவது எப்படி? Poll_c10 
62 Posts - 49%
heezulia
நீங்கள் விரும்புவதை அடைவது எப்படி? Poll_c10நீங்கள் விரும்புவதை அடைவது எப்படி? Poll_m10நீங்கள் விரும்புவதை அடைவது எப்படி? Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
நீங்கள் விரும்புவதை அடைவது எப்படி? Poll_c10நீங்கள் விரும்புவதை அடைவது எப்படி? Poll_m10நீங்கள் விரும்புவதை அடைவது எப்படி? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நீங்கள் விரும்புவதை அடைவது எப்படி? Poll_c10நீங்கள் விரும்புவதை அடைவது எப்படி? Poll_m10நீங்கள் விரும்புவதை அடைவது எப்படி? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நீங்கள் விரும்புவதை அடைவது எப்படி? Poll_c10நீங்கள் விரும்புவதை அடைவது எப்படி? Poll_m10நீங்கள் விரும்புவதை அடைவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நீங்கள் விரும்புவதை அடைவது எப்படி? Poll_c10நீங்கள் விரும்புவதை அடைவது எப்படி? Poll_m10நீங்கள் விரும்புவதை அடைவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நீங்கள் விரும்புவதை அடைவது எப்படி? Poll_c10நீங்கள் விரும்புவதை அடைவது எப்படி? Poll_m10நீங்கள் விரும்புவதை அடைவது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் விரும்புவதை அடைவது எப்படி? Poll_c10நீங்கள் விரும்புவதை அடைவது எப்படி? Poll_m10நீங்கள் விரும்புவதை அடைவது எப்படி? Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் விரும்புவதை அடைவது எப்படி?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 12 Apr 2019 - 12:50


நீங்கள் விரும்புவதை அடைவது எப்படி?



"ஈர்ப்பு விதி" 


நம் மனதின் எண்ண அலைகள் வலிமையானவை..


ஒவ்வொரு வினைக்கும் அதற்கு ஈடான ஒரு எதிர்வினை உண்டு என்னும் நியூட்டனின் விதிபோல், நாம் நினைக்கும் ஒவ்வொரு நினைப்பிற்கும் ஒரு விளைவு உள்ளது.


நாம் எந்த நிலையில் இன்று இருக்கிறோமோ, அதற்குக் காரணம் நமது எண்ண அலைகள்தான். நாம் எதைக்குறித்து எப்பொழுதும் சிந்திக்கிறோமோ, அதுவே நம்மை வந்தடைகிறது. ஏனெனில், நம் மனதின் எண்ண அலைகள் வலிமையானவை. 


அவை இந்தப்பிரபஞ்சத்தில் உள்ள அதே தன்மையை உடைய அலைகளை ஈர்க்க வல்லவை என்று இந்தக் கோட்பாடு கருதுகிறது.


'நம்முடன் இருப்பவர்கள், நம்மிடம் உள்ள பொருட்கள், நாம் செய்யும் பணி போன்ற எல்லாவற்றையும் தீர்மானிப்பது நமது எண்ணங்கள்தான்' என்றால் நாம் விரும்புவது, விரும்பாதது எல்லாமே நம்முடன் இருக்கின்றனவே! 


யார் வறுமையையும், தனிமையையும் துன்பங்களையும் விரும்புகிறார்கள்! இக்கோட்பாடு உண்மையானால், உலகில் எல்லோரும் மகிழ்ச்சியாக அல்லவா இருக்கவேண்டும்? உலகில் எவரேனும் பிரச்னைகள் வேண்டுமென்று ஆசைப்படுகிறார்களா என்ன? என்று ஐயம் தோன்றுகிறது அல்லவா?


ரோண்டா பைர்னே (Rhonda Byrne) என்பவர் எழுதிய 'The Secret' என்ற நூலின் அடிப்படையில் இதே பெயரில் 2006ம் ஆண்டு, ஒரு திரைப்படம் வெளிவந்தது.


அது முதல், இது குறித்து பலரும் பல நூல்களை எழுதிவிட்டார்கள். பலர், 'உங்கள் வாழ்க்கையினை மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்' என்ற அறைகூவலுடன் பல பயிற்சி வகுப்புக்களை நேர்முகமாகவும், இணைத்தளம் மூலமாகவும் நடத்தி வருகின்றனர்.


இந்தக் கோட்பாடு ஒன்றும் அத்தனை புதியதில்லை, குறிப்பாக, தமிழினத்திற்கு இது ஒரு புதுமையே அன்று.
திருவள்ளுவரின் தமிழ் மறையே இதற்குச் சான்றாகும்.


 ஊக்கமுடைமை அதிகாரத்தின் இரு குறள்கள், இக்கோட்பாட்டை எடுத்தியம்புகின்றன.


"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு' - (குறள் எண் 595)


நீரில் உள்ள ஆம்பல் மலரின் தண்டின் நீளமானது, நீர்மட்டத்தால் தீர்மானிக்கப் படுகிறது. நீர்மட்டம் உயர உயர, தண்டின் நீளமும் அதிகரிக்கும். நீர்மட்டம் இறங்கினால், தண்டின் நீளமும் குறைந்துகொண்டே வரும். அதைப்போலவே, மனிதர்கள் வாழ்வில் உயர்வதும் தாழ்வதும் அவரது மனத்தை, அதாவது அவர்களது எண்ணத்தைப் பொறுத்ததுதான்.


என்று கூறும் அவர் தமது அடுத்த குறளிலும் "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" என்று இதையே வலியுறுத்துகிறார்.


நீங்கள் விரும்புவதை அடைவது எப்படி?


ஈர்த்தல் விதி, கேட்பதற்கு மிக எளிமையானதுதான், கடைப்பிடிக்க எளிதுதான். ஆனாலும், ஒருவர் அதைப் பின்பற்றவேண்டும் எனில் அந்த விதியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். எதிர்மறையாக எண்ணங்களை விடுத்து, நல்லவற்றையே சிந்திக்கவேண்டும்.


ஈர்த்தல் விதியின் மூன்று படிகள்..


கேளுங்கள்: 'தட்டுங்கள் திறக்கப்படும்; கேளுங்கள் கொடுக்கப்படும்' என்கிறது விவிலியம். ஆம், நமக்கு என்ன தேவை என்று உணர்ந்து கொள்வதுதான், இந்த ஈர்த்தல் விதியின் முதல்படி. 'அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்' என்ற பழமொழி நினைவு வருகிறதா? 


நமக்கு என்ன தேவையென்று நாம் அறிந்துகொண்டால்தான், இந்தப் பிரபஞ்சம் அதை நாம் அடைய உதவி செய்யும் என்று இந்த விதியினைப் பின்பற்றுபவர்கள் கருதுகிறார்கள்.


தொடரும்....




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 12 Apr 2019 - 12:51


நம்புங்கள்: நீங்கள் விரும்புவது உங்களுக்குக் கிடைக்கும் என்று நம்புங்கள். சந்தேகப் படாதீர்கள். நீங்கள் எதை அதிகமான் நினைக்கிறீர்களோ அதுவே வந்தடையும் என்பதுதான் இதன் இரண்டாவது விதி. 


பல நேரங்களில் "நான் கிளம்பும்போதே நினைத்தேன், இந்த வேலை சரியாக நடக்காது என்று" , "வண்டி நடுவழியில் தகராறு செய்யும் என்று முதலிலேயே தோன்றியது" என்றெல்லாம் நாம் கூறுவது உண்டு, அதற்குக் காரணம், நடக்கப் போவதை முன்கூட்டியே அறியும் சக்தி நமக்கு இருக்கிறது என்பதா?


 கண்டிப்பாக இல்லை, நமது எதிர்மறை எண்ணமானது, அத்தகைய விளைவை உருவாக்கிவிட்டது என்றுதான் அர்த்தம்.


வெற்றியடைவோம் என்று உறுதியாக நம்புபவர்கள் வெற்றி அடைவதர்கும், தோல்வியடைந்துவிடுவோமோ என்று அச்சப்படுகிறவர்கள் தோல்வி அடைவதற்கும், அவர்களால் ஈர்க்கப்படும் அலைகளே காரணமாகின்றன.


அடையுங்கள் : பெரும்பாலான சமயங்களில், நாம் விரும்புவது நம்மை வந்தடைகின்ற பொழுது, அதை நாம் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதுண்டு. நீங்கள் ஒரு வேலையில் இருக்கிறீர்கள், அதன் வேலை நேரம், சம்பளம் இவை எல்லாம் உங்களுக்கு ஒத்துவரவில்லை. 


உங்களுக்கு அதைவிட ஒரு நல்ல வேலை கிடைக்கும் பொழுது, 'புதிய வேலை எப்படி இருக்குமோ! இது பழக்கப்பட்ட இடம், நண்பர்கள் இருக்கிறார்கள். புதிய இடம் நமக்கு ஒத்து வராவிட்டால் என்ன செய்வது?' என்பது போன்ற தயக்கங்கள் உண்டாவதால் நாம் பல வாய்ப்புக்களை இழக்கிறோம். 


சொந்தத் தொழில் தொடங்க விரும்பும் பலர், தம்மிடம் அதற்கான தகுதியும் திறமையும் இருந்தும், இலாபம் கிடைக்காவிடில் என்ன செய்வது, நட்டமாகிவிட்டால் என்ன செய்வது என்று வாய்ப்புக் கிடைத்தாலும் அதை நழுவ விடுவதுண்டு. 


அவ்வாறின்றி, நாம் விரும்புவதை, இந்த உலகம் நம்மிடம் அளிக்கும்பொழுது, அதை இரு கரம் நீட்டிப் பெற்றுக்கொள்ளவும் வேண்டும்.


'ஓம் சாந்தி ஓம்' என்னும் இந்தித் திரைப்படத்தில் ' நீங்கள் ஒன்றை விரும்பி அடைய நினைத்தால், இந்த உலகம், அதை உங்களிடம் கொடுக்க முயலும்' என்ற பொருளில் ஒரு வசனம் வரும்.


ஆம்...... 


நீங்கள் என்ன ஆகவேண்டும் என்று விரும்புகிறீர்களோ அது உங்கள் கையில்தான்...... 


இல்லை இல்லை.... 


உங்கள் மனத்தில்தான் இருக்கிறது....


நன்றி - பிரபஞ்ச சக்தி - Cosmic Energy






http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 12 Apr 2019 - 14:05

Code:

"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு' - (குறள் எண் 595)


நீரில் உள்ள ஆம்பல் மலரின் தண்டின் நீளமானது, நீர்மட்டத்தால் தீர்மானிக்கப் படுகிறது. நீர்மட்டம் உயர உயர, தண்டின் நீளமும் அதிகரிக்கும். நீர்மட்டம் இறங்கினால், தண்டின் நீளமும் குறைந்துகொண்டே வரும். அதைப்போலவே, மனிதர்கள் வாழ்வில் உயர்வதும் தாழ்வதும் அவரது மனத்தை, அதாவது அவர்களது எண்ணத்தைப் பொறுத்ததுதான்.




உயரிய கருத்து உண்மையும் கூட..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 13 Apr 2019 - 0:38

பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு' - (குறள் எண் 595)


நீரில் உள்ள ஆம்பல் மலரின் தண்டின் நீளமானது, நீர்மட்டத்தால் தீர்மானிக்கப் படுகிறது. நீர்மட்டம் உயர உயர, தண்டின் நீளமும் அதிகரிக்கும். நீர்மட்டம் இறங்கினால், தண்டின் நீளமும் குறைந்துகொண்டே வரும். அதைப்போலவே, மனிதர்கள் வாழ்வில் உயர்வதும் தாழ்வதும் அவரது மனத்தை, அதாவது அவர்களது எண்ணத்தைப் பொறுத்ததுதான்.




உயரிய கருத்து உண்மையும் கூட..
மேற்கோள் செய்த பதிவு: 1296328


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ....... அன்பு மலர் நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக