புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 16:50

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 16:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 16:15

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
’குங்குமச்சிமிழ்’ - திரைப்படத்திற்கு 34 வயது!  Poll_c10’குங்குமச்சிமிழ்’ - திரைப்படத்திற்கு 34 வயது!  Poll_m10’குங்குமச்சிமிழ்’ - திரைப்படத்திற்கு 34 வயது!  Poll_c10 
15 Posts - 58%
heezulia
’குங்குமச்சிமிழ்’ - திரைப்படத்திற்கு 34 வயது!  Poll_c10’குங்குமச்சிமிழ்’ - திரைப்படத்திற்கு 34 வயது!  Poll_m10’குங்குமச்சிமிழ்’ - திரைப்படத்திற்கு 34 வயது!  Poll_c10 
11 Posts - 42%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
’குங்குமச்சிமிழ்’ - திரைப்படத்திற்கு 34 வயது!  Poll_c10’குங்குமச்சிமிழ்’ - திரைப்படத்திற்கு 34 வயது!  Poll_m10’குங்குமச்சிமிழ்’ - திரைப்படத்திற்கு 34 வயது!  Poll_c10 
52 Posts - 59%
heezulia
’குங்குமச்சிமிழ்’ - திரைப்படத்திற்கு 34 வயது!  Poll_c10’குங்குமச்சிமிழ்’ - திரைப்படத்திற்கு 34 வயது!  Poll_m10’குங்குமச்சிமிழ்’ - திரைப்படத்திற்கு 34 வயது!  Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
’குங்குமச்சிமிழ்’ - திரைப்படத்திற்கு 34 வயது!  Poll_c10’குங்குமச்சிமிழ்’ - திரைப்படத்திற்கு 34 வயது!  Poll_m10’குங்குமச்சிமிழ்’ - திரைப்படத்திற்கு 34 வயது!  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
’குங்குமச்சிமிழ்’ - திரைப்படத்திற்கு 34 வயது!  Poll_c10’குங்குமச்சிமிழ்’ - திரைப்படத்திற்கு 34 வயது!  Poll_m10’குங்குமச்சிமிழ்’ - திரைப்படத்திற்கு 34 வயது!  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

’குங்குமச்சிமிழ்’ - திரைப்படத்திற்கு 34 வயது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82361
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 23 Aug 2019 - 17:08

’குங்குமச்சிமிழ்’ - திரைப்படத்திற்கு 34 வயது!  512604
-
வி.ராம்ஜி
ஒரு படத்துக்கு, அந்தப் படத்தை ஜனங்கள் ஆர்வத்துடன் பார்ப்பதற்கு,
அந்தப் படம் திரும்பத் திரும்பப் பார்ப்பதற்கு, படத்துக்கு வசூல் குவிவதற்கு...
என ஒவ்வொரு காரணங்கள் இருக்கும்.

அது இருந்தால் இது இல்லை, இது இருக்கு ஆனால் அதுவும் இருந்திருக்க
வேண்டும் என்றெல்லாம் ஒவ்வொரு படத்துக்கான இலக்கணங்கள்
மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் அவையெல்லாம் ஒருசேர அமைந்து,
மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அது... ‘குங்குமச்சிமிழ்’.

‘ஒரு பகவத் கீதையிலயோ குர் ஆன்லயோ பைபிள்லயோ... இப்படித்தான் ஒரு சம்பவம் நடக்கும்னு எழுதியிருந்தா, அதை யாராலயும் மாத்தமுடியாது’ என்கிற இந்தப் படத்தின் வசனம் மிகப்பிரபலம்.

கோவையில் இருந்து வேலை தேடி சென்னைக்கு வரும் பட்டதாரி ரவி (மோகன்). பஸ்சில் ஏறுகிறார். அதே பஸ்சில், பிலோமினா (இளவரசி) ஓடிவந்து ஏறிக்கொள்கிறார். யாரோ துரத்திக் கொண்டு வர, அவர்களிடம் இருந்து தப்பிக்கத்தான் பஸ்சில் ஏறியிருக்கிறார் இளவரசி. ஆனால் கையில் பணமில்லை. மோகன் உதவுகிறார்.

பிறகு சென்னை வருகிறார்கள். மோகனும் இளவரசியும் ஓடாத கூட்ஸ் வண்டி கேரேஜில் தங்கிக் கொள்கிறார்கள். தன் சித்தப்பா, அவருடைய முதலாளிக்கு செய்த துரோகத்தை தட்டிக்கேட்டதால், சித்தியின் தம்பி அவளைத் துரத்துகிறார். அங்கிருந்து தப்பி ஓட வந்த கதையை மோகனிடம் சொல்கிறார்.

வறுமையும் வேலையின்மையும் சோகமும் அவர்களுக்குள் இன்னும் அன்பை ஏற்படுத்துகிறது. அதுவே ஒருகட்டத்தில் காதலாகிறது. பிறகு, அங்கிருந்து வேறொரு இடத்துக்கு வந்து தங்குகிறார்கள். காதல் பலப்படுகிறது.

இந்த சமயத்தில் ஓரிடத்தில் வேலைக்குச் சேர, பத்தாயிரம் ரூபாய் டெபாசிட் கேட்க, கைபிசைந்து தவிக்கிறார்கள் இருவருமே! ஒருகட்டத்தில், கடிதம் எழுதிவைத்துவிட்டு, அதில் யாரும் யாருக்கும் பாரமாக இருக்கவேண்டாம், ஆறு மாதம் கழித்து சந்திப்போம் என்று குறிப்பிட்டுவிட்டு, இளவரசி சென்றுவிடுகிறார்.

அந்த சமயத்தில், டவுன்பஸ்சில் வரும் மோகனுக்கு அவர் காலடியில் ஒரு கவர் கிடைக்கிறது. பிரித்துப் பார்த்தால்... பத்தாயிரம் ரூபாய் பணமும் மாணிக்கம் என்ற பெயரும் இருக்கிறது. அந்தப் பணத்தைக் கொண்டு, டெபாசிட் கட்டி, முதுமலையில் வேலைக்குச் சேருகிறார்.

இதேபோல், ரோட்டில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை, காரில் அடிபடும் சூழலில், குழந்தையைக் காப்பாற்றி, மயங்குகிறார் இளவரசி. அங்கே, காரில் வி.கோபாலகிருஷ்ணன். சித்தப்பாவின் முதலாளி. காப்பாற்றியதுடன் தன் அரவணைப்பில் தங்கவைத்துக்கொள்கிறார்.

இங்கே, முதுமலையில் வேலைக்குச் சேர்ந்த ஊரில் டெல்லிகணேஷையும் அவரின் மகள் ரேவதியையும் பார்க்கிறார். ஆனாலும் இளவரசியின் நினைவாகவே மோகனும் மோகனின் நினைவாகவே இளவரசியுமாகவே இருக்கிறார்கள்.

அங்கே, ரேவதியின் ஊருக்கு ஒரு வேலையாக வருகிறார் சந்திரசேகர். ரேவதிக்கு கல்யாணம் நின்று போய்விட்டது தெரியவருகிறது. அவரை திருமணம் செய்துகொள்ள நினைக்கிறார். வீட்டை விட்டு லாரி டிரைவராக வந்து பெண் கேட்கிறார். என்ன சொல்வதென்று தெரியாமல் ரேவதியின் அப்பா டெல்லிகணேஷ் தவிக்கிறார்.

இதனிடையே, ரேவதியின் கல்யாணம் நின்றுபோக, காணாமல் போன பணம்தான் காரணம் என்பது மோகனுக்குத் தெரிகிறது. உடைந்துபோகிறார். தன் முதலாளியிடம் தெரிவிக்கிறார். அந்தப் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கோ என்கிறார். அந்தசமயத்தில், மோகன், ரேவதி குறித்து ஊர் தப்பாகப் பேசுகிறது. இறுதியில், கல்யாணம் செய்து கொள்ள ஏற்பாடுகள் நடக்கின்றன.

அப்போதுதான், முதலாளி வீட்டில் இருப்பது இளவரசிதான் எனும் விவரம் தெரிகிறது. திரும்பவும் கல்யாணம் நின்றால், ரேவதி இறந்துவிடுவார். ரேவதியைக் கல்யாணம் செய்துகொண்டால், இளவரசி இறந்தேபோய்விடுவார். இப்படியான குழப்பத்தை நோக்கி க்ளைமாக்ஸ் நகருகிறது.

மோகனுக்கும் ரேவதிக்கும் கல்யாணம். இளவரசி ஊரில் இருந்து வருகிறார். திருமணம் நடந்ததா... காதலர்கள் சேர்ந்ந்தார்களா என்பதுதான் படத்தின் முடிவு.

பஞ்சுஅருணாசலம் வழங்கிய ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ‘குங்குமச்சிமிழ்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மோகன், இளவரசி, ரேவதி, சந்திரசேகர், வி.கோபாலகிருஷ்ணன், டெல்லிகணேஷ் முதலானோர் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தனர்.

ராஜராஜனின் ஒளிப்பதிவு படத்துக்கு பக்கபலம். வாலியும் கங்கை அமரனும் எழுதிய பாடல்கள் வெற்றியைப் பெற்றன. மெல்லிய கதையும் அதற்கான தெளிவான திரைக்கதையும் சின்னச்சின்ன அழகான வசனங்களும் என சிறப்பாக இயக்கியிருப்பார் ஆர்.சுந்தர்ராஜன்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இளையராஜா படத்தின் வெற்றிக்கு முழு, முதல் காரணமாக இசையமைத்திருப்பார். ‘கூட்ஸ் வண்டியிலே...’, ‘நிலவு தூங்கும் நேரம்’, ‘கை வலிக்குது கை வலிக்குது மாமா’, ‘பூங்காற்றே தீண்டாதே...’ என்று எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்தார்.

மேலும் படத்தின் பின்னணி இசையில், தனக்கே உரிய ஸ்டைலில், ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இசை கோர்த்துக் கொடுத்திருந்தார். அது, ‘குங்குமச்சிமிழ்’ படத்துக்கே குங்குமமென சுடர் விட்டது.

1985ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி ரிலீசானது ‘குங்குமச்சிமிழ்’. படம் வெளியாகி, 34 வருடங்களாகிவிட்டன. ஆனாலும், ’குங்குமச்சிமிழ்’ நெற்றியில் ஒட்டிக்கொள்ளும் குங்குமம் போலவே, மனசுக்குள் ஒட்டிக்கொண்டிருக்கிறது.
-
இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக