புதிய பதிவுகள்
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 16:45
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 14:50
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 14:46
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:27
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51
by ayyasamy ram Today at 16:45
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 14:50
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 14:46
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:27
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சபரிமலையில் சரியும் தமிழன்! உள்ளுக்குள் ஓர் இன ஒதுக்கல்
Page 1 of 1 •
- rajkingபுதியவர்
- பதிவுகள் : 20
இணைந்தது : 26/03/2009
மாநிலம்,
மொழி வேறுபாடுகளைக் கடந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் சபரிமலை யாத்திரை
சென்றுவருகிறார்கள் தமிழர்கள். அப்படிச் செல்லும்போது அங்கே எல்லோரையும்
போல, தமிழர்கள் உள்ளிட்ட மற்றவர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற
ஆதங்கத்தில் விளைந்ததுதான் இந்தக் கட்டுரை...
சபரிமலை புனிதப்பயணம்... மெக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது
பெரிய பக்திப் பயணம் என்ற பெருமை, சபரிமலை பெரிய பாதை சாமி தரிசனத்துக்கு
உண்டு. ஆனால், சபரி மலை யாத்திரை பிரபலமான விதம்?
சுமார்
75 ஆண்டுகளுக்கு முன்பு எல்லா மலையாளிகளின் குல தெய்வமும் முருகன்தான்.
சரியாகச் சொல்ல வேண்டுமானால் பழனிமலை முருகன். இன்றும் மிக வயதான
மலையாளத் தாய்மார்களும், பெரியவர்களும், பக்திப் பரவசத்தோடு கண்ணில் நீர்
பெருக மலையேறுவதைப் பழனியில் பார்க்க முடியும்& சற்றுக் கூர்ந்து
கவனித்தால்.
தமிழுக்கு எதிராக மலையாளப் போக்கு பரபரப்பாக வளர்ந்தபோது, பக்தி என்ற
பெயரில் மலையாளிகளின் பணம், பழனி உண்டியலில் விழுவதை, பொறாமை
கொண்டவர்களால் பொறுக்க முடியவில்லை. அவர்களுக்கு ஒரு மாற்று
தேவைப்பட்டது. மலையாளிகளின் பணம் பழனிக்கும் தமிழ் மண்ணுக்கும் வருவதைத்
தடுக்க வேண்டும்.
தேடியபோது அவர்களின் கண்ணில் பட்டதுதான் மலைகளுக்கும், அருவிகளுக்கும்
அடர்ந்த கானகத்துக்கும் உள்ளே இருந்த அந்த அற்புதமான சிறிய அய்யப்பன்
கோயில். விடுதலை உணர்வுள்ள புலிகள் உலவிய காடு அது. பிடித்து அடைப்பது
முடியாது. ஆனால் சபரிமலையில் ஆதியில் கோயில் கட்டியவர்களுக்கும்,
நியமங்கள் அமைத்தவர்களுக்கும், ஏன் அன்றைய அய்யப்பனுக்கும்கூட இந்தப்
பிரிவினை வஞ்சகம் தெரியாது.
அதற்கு அய்யப்பனின் வரலாறே சாட்சி. அரக்கனை அழிக்க பெண் உரு பூண்ட
நாராயணனுக்கும் சிவனுக்கும் உருவான அய்யப்பன், பந்தள ராசன் என்பவனின்
வளர்ப்பு மகன் ஆகிறார். பந்தள ராசன், தமிழ் மூவேந்தர்களில் தெற்குப்
பகுதிக்குச் சொந்தமான பாண்டிய வம்சத்தில் வந்தவன்தான். பழசிராஜா
வம்சத்திலோ, வடக்கன் வம்சத்திலோ வந்தவன் அல்ல. இதை அப்படியே
சொன்னால்தான் தமிழர்கள் அய்யப்பனை நாடி வருவார்கள். மறைக்க முடியாது என்ற
நிலைமை அந்தக் காலத்தில்.
தவிர ஒரு மலை ஏறி முருகனை தரிசிப்பதை விட, பல மலைகள் கடந்து அய்யப்பனை
பார்க்கப் போகிற த்ரில், போதை முதலிய பழக்கங்களில் ஊறியிருக்கிற மக்களை,
42 நாள் கட்டாயமாக விரதத்தில் இருக்கச் செய்வதன் மூலம், பெண்கள் சபரிமலை
பயணத்தைத் தன் வீட்டு ஆண்களிடம் ஊக்குவித்த தன்மை.
முருகனின் தம்பியானார் அய்யப்பன், சிவன் என்ற பொதுவான தகப்பனின் மகன்
என்பதால். தவிர, அய்யப்பன் கோயில் பயணத்தின் பெரும்பாலான பகுதிகள்,
தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்த பகுதிகள். மொழிவாரி மாநிலங்கள்
பிரிக்கப்பட்டு அவை கேரளாவோடு சேர்க்கப்பட்டு தமிழனும் தமிழும்
புறக்கணிக்கப்படும் வரை அவை பெரும்பாலும் தமிழ் நிலப் பகுதிகளாகவே
இருந்தன.
எனவே, சபரிமலை என்பது தமிழர்களின் கோயிலாகவே இருந்த காலம் உண்டு. பூஜை
செய்பவர்கள் தவிர, இன்றைக்கும் பல மலையாளிகள் சபரிமலைக்கு இருமுடி சுமந்து
வருவது இல்லை. பதினெட்டாம் படி ஏறாமல் பக்கவாட்டில் வந்து, ஆனால் முதல்
மரியாதையோடு சாமி கும்பிட்டுவிட்டுப் போய்விடுவார்கள்.
சபரிமலையைப்
பிரபலமாக்கியவர்கள் என்றால், எம்.என்.நம்பியார் என்று சொல்வார்கள்.
இருக்கட்டும். ஆனால் எம்.என்.நம்பியாருக்கு சபரிமலையைப் பற்றி அய்யப்பனைப்
பற்றிச் சொல்லி மாலை போட வைத்தவர் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை என்ற
பச்சைத் தமிழர். அய்யப்பனின் தீவிர பக்தர் அவர். அவரது நாடகக் குழுவில்
இருந்தபோதுதான், அய்யப்பன் என்ற கடவுள் இருப்பதே நம்பியாருக்குத்
தெரியவந்தது. அந்தக் காலத்தில் பெரிய பாதையில் மலை ஏற, இப்போது இருக்கிற
குறுகியப் பாதைகள்கூடக் கிடையாது. தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்கிற
அய்யப்ப சாமிகள் இருமுடியோடு, கூடவே ஒரு கூரிய கத்தியும் கொண்டு
செல்வார்கள்.
வழியெங்கும் செடி-கொடிகளை வெட்டி பாதையமைத்துக்கொண்டே செல்வார்கள்.
அவ்வளவு சிரமப்பட்டு சபரிமலையைச் செப்பனிட்டவர்கள் தமிழர்கள். தமிழர்களைப்
பார்த்துதான் தெலுங்கர்கள், கன்னடர்கள், வட இந்தியர்கள் வந்தனர்.
மலையாளிக்கும் தமிழர்கள் கடைப்பிடிக்கிற அதே நியமங்களோடு இருமுடி
ஏற்றினார்கள். மலையாளிகள் பழனிக்குத் தந்த முக்கியத்துவம் குறைந்தது.
சபரிமலை புகழ் பெற்றது.
ஆக, உலகில் இரண்டாவது நீண்ட புனிதப்பயணம் என்கிற பெருமையுடன், சபரிமலைக்கு
இவ்வளவு பெயரும், புகழும் கிடைத்ததில் தமிழர்களுக்கு கணிசமாகப் பங்கு
உண்டு.
ஏன்... ஆண்டவன்களுக்குப் பிறந்த ஆண்டவனான அய்யப்பனின் வளர்ப்புத் தந்தையான
பந்தள ராசனே ஒரு தமிழன்தானே...
‘‘ஸ்டாப்... ஸ்டாப்.... சரண கோஷத்தில் மனம் கரையும் நேரத்தில் இதெல்லாம்
இப்போது எதற்கு?’’ என்று கேட்பவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்தக்
கட்டுரையே. சபரிமலை வரலாறு பற்றிய தமிழ் வெளியீடுகளில்தான் பந்தள
ராசனுக்கு, உரிய முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆனால், அய்யப்பன் பற்றி
வரும் தற்போதைய மலையாள வெளியீடுகளில் பந்தள அரசன் பெயரும் அவன் ஒரு
பாண்டிய மன்னன், தமிழன் என்பதும் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. சும்மா
ஒப்புக்குச் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள். போகப் போக இதுவும்
இல்லாமல் போய்விடலாம் என்ற நிலை.
அதே முன்பு அய்யப்பன் பற்றிய மலையாள வரலாற்று வெளியீடுகளில் பந்தள ராசன்,
அவன் பாண்டிய மன்னன், அதுவும் மூவேந்தர்களில் ஒருவன் என்று வணங்கி வணங்கி
விலாவாரியாகச் சொன்ன காலங்கள் உண்டு.
இப்போது ‘‘அயாள் ஒரி பாண்டியானு...’’ என்று பாண்டி என்ற சொல்லையே
கேவலமாகச் சொல்லும் மலையாளிகளால், அய்யப்பனே அந்தப் ‘பாண்டி’யின் மகன்
என்ற உண்மையை ஏற்க விரும்பவில்லை. சபரிமலை சன்னிதானத்தில் பதினெட்டாம் படி
ஏறி தளத்தில் நாம் நடக்கும் இடத்தில் முன்பெல்லாம் ‘‘சாமியே சரணம்
அய்யப்பா’’ என்ற வாசகம் மிகப்பெரிய வடிவில் தமிழிலும் மலையாளத்திலும்
வைக்கப்பட்டு இருக்கும். சில வருடங்களுக்கு முன்பு தமிழைத் தூக்கி
எறிந்துவிட்டார்கள்.
அய்யப்பனின் திருவாபரணப் பெட்டி தனது சபரிமலை நோக்கியப் பயணத்தில்
செங்கோட்டை சிவன் கோயிலுக்கும் வந்து போவது காலம்காலமான ஐதீகம்.
அங்கும் வழிபடும் பக்தர்கள் ஏராளம். ‘அதைத் தடுத்தால் அவர்களும்
கேரளாவிற்குள் வந்து வழிபடுவார்கள். இன்னும் கொஞ்சம் கல்லா கட்டலாம்’
என்று கேரள அரசு முடிவு செய்தபோது, அய்யப்பனின் தீவிர பக்தரான
செங்கோட்டை குருசாமி நாடார் என்பவர், கேரள அரசின் கையில் காலில் விழுந்து
அந்த உரிமையை மீட்டு வந்தார். அதற்குள் அவருக்கு நுரை தள்ளிவிட்டது.
பழைய கதையை விடுங்கள், நீங்கள் இந்த ஜோதி தரிசனத்திற்கு சபரி மலை
போகிறீர்களா? கேரளாவின் பதிவு எண் கொண்ட வாகனத்தில் போனால்
பிரச்னையில்லை. பம்பா நதி வரை வாகனம் போகலாம். அதே தமிழ்நாட்டின் பதிவு
எண் கொண்ட வாகனத்தில் போனால்... அய்யோ பாவம்... வெகு தூரத்திலேயே
நீங்கள் உங்கள் வாகனத்தைவிட்டு இறங்கவேண்டும். மலையேறி சாமி கும்பிட்டு
உடல்சோர்ந்த பின்னரும் சுமார் ஒன்பது கிலோ மீட்டர் நடந்த பின்னர்தான்
உங்கள் வாகனத்தை அடையமுடியும். ஏனென்றால் நீங்கள் தமிழன்.
இன்னும் சில வருடம் போகட்டும் மலையாளியாக இருந்தால் பதினெட்டாம் படிவரையே
வாகனம் செல்லும் வசதி கிடைக்கலாம். தமிழர்கள் தரிசனம் முடிந்த பின்னரும்
ஒரு பெரிய பாதைப் பயணம் நடக்க வேண்டி வரலாம். பயணப்பாதைகளிலும்
கோயிலிலும் பெரும்பாலும் ஐயப்பா சேவாசங்கம் நடத்துவது தமிழர்கள்தான்.
அங்கு எல்லோருக்கும் சம உரிமை உண்டு. ஆனால், மலையாளிகள் நடத்தும் கடைகள்,
சன்னிதானக் கடைகள் இவற்றில் தமிழனுக்கு என்றால் விலை அதிகம். சன்னிதான
அலுவலகத்தில் தமிழன் இரண்டாம் தரக் குடிமகன்தான்.
தவிர்க்க முடியாதது மலையாள போலீஸாரின் அராஜகம். எந்த ஒரு விஷயம்
என்றாலும் மலையாளிகளிடம் மென்மையாகவும், தமிழர்களிடம் கடுமையாகவும்
நடந்துகொள்வார்கள். இருமுடி சுமந்து செல்லும் பக்தர்கள் சன்னிதானத்தில்
நுழைந்ததும் அப்படியே பதினெட்டாம் படியேறி ஐயப்பனிடம் இருமுடியைக்
கட்டிவிட்டு பிறகுதான் முடியைப் பிரிக்கவேண்டும் என்பார்கள்.
இப்படியாக, தமிழன் வளர்த்த சபரிமலையில் மலையாளிகள் தமிழனைப் புறக்கணிப்பது
ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிறது. சரங்குத்தியில் குத்தப்படும் ஒவ்வொரு
சரமும் தமிழினத்தின் நெஞ்சில் குத்தப்படும் ஊசியாகவே மாறிக்
கொண்டிருக்கிறது சபரிமலையில்.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, கடவுள் மறுப்புக்கொள்கையை
வெளியே முழங்கிக்கொண்டு, தமதுவீட்டுப் பெண்களை ரகசியமாகக் கோயிலுக்கு
அனுப்பிய இரட்டை வேடக்காரர்களே மக்களிடம் ஆரவாரச் செல்வாக்கு
பெற்றிருந்தனர். எனவே கண்ணகிக் கோயில், சபரிமலைப் பாதையின் பெரும்பகுதி,
திருப்பதி, காளஹஸ்தி போன்ற தமிழனின் பக்தி கலாசாரச் செல்வங்கள் வேறு
மாநிலங்களுக்குப் பறிபோனதை வேடிக்கை பார்த்தனர். தமிழன் எல்லாம்
இழந்தான்.
ஒருவேனை இவர்கள் மக்களை வாழ வைக்கிற நல்லாட்சி கொடுத்திருந்தால் மக்களுக்குக் கடவுள் நம்பிக்கையாவது குறைந்திருக்கும்.
அப்படியில்லை. விளைவு?-
இவர்களை நம்புவதைவிட, கடவுளை நம்புவது மேல் என்ற மனநிலைக்கு தமிழன்
வந்தான். அந்தக் கடவுள்கள் எந்த மாநிலத்தில் இருந்தாலும் பரவாயில்லை என்று
ஓடி வணங்கி, தான் சிறுகச் சிறுக சம்பாதிக்கும் பணத்தின் ஒருபகுதியை வேற்று
மாநில அரசுகளுக்குக் கொட்டிவிட்டு அவப்பெயரையும் சம்பாதித்து வருகிறான்.
அதன் விளைவுதான் திருப்பதி, சபரிமலை என்று அபயம் தேடிப்போகிற இடங்களிலும்கூட தமிழன் அவலம் சுமக்கும் நிலை.
சரணம் சொல்வதும் சரணம் அடைவதுமே தமிழனின் தலையெழுத்தாகிவிட்டது.
சாமியே... சரணம் ஐயப்பா!
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
மொழி வேறுபாடுகளைக் கடந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் சபரிமலை யாத்திரை
சென்றுவருகிறார்கள் தமிழர்கள். அப்படிச் செல்லும்போது அங்கே எல்லோரையும்
போல, தமிழர்கள் உள்ளிட்ட மற்றவர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற
ஆதங்கத்தில் விளைந்ததுதான் இந்தக் கட்டுரை...
சபரிமலை புனிதப்பயணம்... மெக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது
பெரிய பக்திப் பயணம் என்ற பெருமை, சபரிமலை பெரிய பாதை சாமி தரிசனத்துக்கு
உண்டு. ஆனால், சபரி மலை யாத்திரை பிரபலமான விதம்?
சுமார்
75 ஆண்டுகளுக்கு முன்பு எல்லா மலையாளிகளின் குல தெய்வமும் முருகன்தான்.
சரியாகச் சொல்ல வேண்டுமானால் பழனிமலை முருகன். இன்றும் மிக வயதான
மலையாளத் தாய்மார்களும், பெரியவர்களும், பக்திப் பரவசத்தோடு கண்ணில் நீர்
பெருக மலையேறுவதைப் பழனியில் பார்க்க முடியும்& சற்றுக் கூர்ந்து
கவனித்தால்.
தமிழுக்கு எதிராக மலையாளப் போக்கு பரபரப்பாக வளர்ந்தபோது, பக்தி என்ற
பெயரில் மலையாளிகளின் பணம், பழனி உண்டியலில் விழுவதை, பொறாமை
கொண்டவர்களால் பொறுக்க முடியவில்லை. அவர்களுக்கு ஒரு மாற்று
தேவைப்பட்டது. மலையாளிகளின் பணம் பழனிக்கும் தமிழ் மண்ணுக்கும் வருவதைத்
தடுக்க வேண்டும்.
தேடியபோது அவர்களின் கண்ணில் பட்டதுதான் மலைகளுக்கும், அருவிகளுக்கும்
அடர்ந்த கானகத்துக்கும் உள்ளே இருந்த அந்த அற்புதமான சிறிய அய்யப்பன்
கோயில். விடுதலை உணர்வுள்ள புலிகள் உலவிய காடு அது. பிடித்து அடைப்பது
முடியாது. ஆனால் சபரிமலையில் ஆதியில் கோயில் கட்டியவர்களுக்கும்,
நியமங்கள் அமைத்தவர்களுக்கும், ஏன் அன்றைய அய்யப்பனுக்கும்கூட இந்தப்
பிரிவினை வஞ்சகம் தெரியாது.
அதற்கு அய்யப்பனின் வரலாறே சாட்சி. அரக்கனை அழிக்க பெண் உரு பூண்ட
நாராயணனுக்கும் சிவனுக்கும் உருவான அய்யப்பன், பந்தள ராசன் என்பவனின்
வளர்ப்பு மகன் ஆகிறார். பந்தள ராசன், தமிழ் மூவேந்தர்களில் தெற்குப்
பகுதிக்குச் சொந்தமான பாண்டிய வம்சத்தில் வந்தவன்தான். பழசிராஜா
வம்சத்திலோ, வடக்கன் வம்சத்திலோ வந்தவன் அல்ல. இதை அப்படியே
சொன்னால்தான் தமிழர்கள் அய்யப்பனை நாடி வருவார்கள். மறைக்க முடியாது என்ற
நிலைமை அந்தக் காலத்தில்.
தவிர ஒரு மலை ஏறி முருகனை தரிசிப்பதை விட, பல மலைகள் கடந்து அய்யப்பனை
பார்க்கப் போகிற த்ரில், போதை முதலிய பழக்கங்களில் ஊறியிருக்கிற மக்களை,
42 நாள் கட்டாயமாக விரதத்தில் இருக்கச் செய்வதன் மூலம், பெண்கள் சபரிமலை
பயணத்தைத் தன் வீட்டு ஆண்களிடம் ஊக்குவித்த தன்மை.
முருகனின் தம்பியானார் அய்யப்பன், சிவன் என்ற பொதுவான தகப்பனின் மகன்
என்பதால். தவிர, அய்யப்பன் கோயில் பயணத்தின் பெரும்பாலான பகுதிகள்,
தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்த பகுதிகள். மொழிவாரி மாநிலங்கள்
பிரிக்கப்பட்டு அவை கேரளாவோடு சேர்க்கப்பட்டு தமிழனும் தமிழும்
புறக்கணிக்கப்படும் வரை அவை பெரும்பாலும் தமிழ் நிலப் பகுதிகளாகவே
இருந்தன.
எனவே, சபரிமலை என்பது தமிழர்களின் கோயிலாகவே இருந்த காலம் உண்டு. பூஜை
செய்பவர்கள் தவிர, இன்றைக்கும் பல மலையாளிகள் சபரிமலைக்கு இருமுடி சுமந்து
வருவது இல்லை. பதினெட்டாம் படி ஏறாமல் பக்கவாட்டில் வந்து, ஆனால் முதல்
மரியாதையோடு சாமி கும்பிட்டுவிட்டுப் போய்விடுவார்கள்.
சபரிமலையைப்
பிரபலமாக்கியவர்கள் என்றால், எம்.என்.நம்பியார் என்று சொல்வார்கள்.
இருக்கட்டும். ஆனால் எம்.என்.நம்பியாருக்கு சபரிமலையைப் பற்றி அய்யப்பனைப்
பற்றிச் சொல்லி மாலை போட வைத்தவர் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை என்ற
பச்சைத் தமிழர். அய்யப்பனின் தீவிர பக்தர் அவர். அவரது நாடகக் குழுவில்
இருந்தபோதுதான், அய்யப்பன் என்ற கடவுள் இருப்பதே நம்பியாருக்குத்
தெரியவந்தது. அந்தக் காலத்தில் பெரிய பாதையில் மலை ஏற, இப்போது இருக்கிற
குறுகியப் பாதைகள்கூடக் கிடையாது. தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்கிற
அய்யப்ப சாமிகள் இருமுடியோடு, கூடவே ஒரு கூரிய கத்தியும் கொண்டு
செல்வார்கள்.
வழியெங்கும் செடி-கொடிகளை வெட்டி பாதையமைத்துக்கொண்டே செல்வார்கள்.
அவ்வளவு சிரமப்பட்டு சபரிமலையைச் செப்பனிட்டவர்கள் தமிழர்கள். தமிழர்களைப்
பார்த்துதான் தெலுங்கர்கள், கன்னடர்கள், வட இந்தியர்கள் வந்தனர்.
மலையாளிக்கும் தமிழர்கள் கடைப்பிடிக்கிற அதே நியமங்களோடு இருமுடி
ஏற்றினார்கள். மலையாளிகள் பழனிக்குத் தந்த முக்கியத்துவம் குறைந்தது.
சபரிமலை புகழ் பெற்றது.
ஆக, உலகில் இரண்டாவது நீண்ட புனிதப்பயணம் என்கிற பெருமையுடன், சபரிமலைக்கு
இவ்வளவு பெயரும், புகழும் கிடைத்ததில் தமிழர்களுக்கு கணிசமாகப் பங்கு
உண்டு.
ஏன்... ஆண்டவன்களுக்குப் பிறந்த ஆண்டவனான அய்யப்பனின் வளர்ப்புத் தந்தையான
பந்தள ராசனே ஒரு தமிழன்தானே...
‘‘ஸ்டாப்... ஸ்டாப்.... சரண கோஷத்தில் மனம் கரையும் நேரத்தில் இதெல்லாம்
இப்போது எதற்கு?’’ என்று கேட்பவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்தக்
கட்டுரையே. சபரிமலை வரலாறு பற்றிய தமிழ் வெளியீடுகளில்தான் பந்தள
ராசனுக்கு, உரிய முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆனால், அய்யப்பன் பற்றி
வரும் தற்போதைய மலையாள வெளியீடுகளில் பந்தள அரசன் பெயரும் அவன் ஒரு
பாண்டிய மன்னன், தமிழன் என்பதும் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. சும்மா
ஒப்புக்குச் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள். போகப் போக இதுவும்
இல்லாமல் போய்விடலாம் என்ற நிலை.
அதே முன்பு அய்யப்பன் பற்றிய மலையாள வரலாற்று வெளியீடுகளில் பந்தள ராசன்,
அவன் பாண்டிய மன்னன், அதுவும் மூவேந்தர்களில் ஒருவன் என்று வணங்கி வணங்கி
விலாவாரியாகச் சொன்ன காலங்கள் உண்டு.
இப்போது ‘‘அயாள் ஒரி பாண்டியானு...’’ என்று பாண்டி என்ற சொல்லையே
கேவலமாகச் சொல்லும் மலையாளிகளால், அய்யப்பனே அந்தப் ‘பாண்டி’யின் மகன்
என்ற உண்மையை ஏற்க விரும்பவில்லை. சபரிமலை சன்னிதானத்தில் பதினெட்டாம் படி
ஏறி தளத்தில் நாம் நடக்கும் இடத்தில் முன்பெல்லாம் ‘‘சாமியே சரணம்
அய்யப்பா’’ என்ற வாசகம் மிகப்பெரிய வடிவில் தமிழிலும் மலையாளத்திலும்
வைக்கப்பட்டு இருக்கும். சில வருடங்களுக்கு முன்பு தமிழைத் தூக்கி
எறிந்துவிட்டார்கள்.
அய்யப்பனின் திருவாபரணப் பெட்டி தனது சபரிமலை நோக்கியப் பயணத்தில்
செங்கோட்டை சிவன் கோயிலுக்கும் வந்து போவது காலம்காலமான ஐதீகம்.
அங்கும் வழிபடும் பக்தர்கள் ஏராளம். ‘அதைத் தடுத்தால் அவர்களும்
கேரளாவிற்குள் வந்து வழிபடுவார்கள். இன்னும் கொஞ்சம் கல்லா கட்டலாம்’
என்று கேரள அரசு முடிவு செய்தபோது, அய்யப்பனின் தீவிர பக்தரான
செங்கோட்டை குருசாமி நாடார் என்பவர், கேரள அரசின் கையில் காலில் விழுந்து
அந்த உரிமையை மீட்டு வந்தார். அதற்குள் அவருக்கு நுரை தள்ளிவிட்டது.
பழைய கதையை விடுங்கள், நீங்கள் இந்த ஜோதி தரிசனத்திற்கு சபரி மலை
போகிறீர்களா? கேரளாவின் பதிவு எண் கொண்ட வாகனத்தில் போனால்
பிரச்னையில்லை. பம்பா நதி வரை வாகனம் போகலாம். அதே தமிழ்நாட்டின் பதிவு
எண் கொண்ட வாகனத்தில் போனால்... அய்யோ பாவம்... வெகு தூரத்திலேயே
நீங்கள் உங்கள் வாகனத்தைவிட்டு இறங்கவேண்டும். மலையேறி சாமி கும்பிட்டு
உடல்சோர்ந்த பின்னரும் சுமார் ஒன்பது கிலோ மீட்டர் நடந்த பின்னர்தான்
உங்கள் வாகனத்தை அடையமுடியும். ஏனென்றால் நீங்கள் தமிழன்.
இன்னும் சில வருடம் போகட்டும் மலையாளியாக இருந்தால் பதினெட்டாம் படிவரையே
வாகனம் செல்லும் வசதி கிடைக்கலாம். தமிழர்கள் தரிசனம் முடிந்த பின்னரும்
ஒரு பெரிய பாதைப் பயணம் நடக்க வேண்டி வரலாம். பயணப்பாதைகளிலும்
கோயிலிலும் பெரும்பாலும் ஐயப்பா சேவாசங்கம் நடத்துவது தமிழர்கள்தான்.
அங்கு எல்லோருக்கும் சம உரிமை உண்டு. ஆனால், மலையாளிகள் நடத்தும் கடைகள்,
சன்னிதானக் கடைகள் இவற்றில் தமிழனுக்கு என்றால் விலை அதிகம். சன்னிதான
அலுவலகத்தில் தமிழன் இரண்டாம் தரக் குடிமகன்தான்.
தவிர்க்க முடியாதது மலையாள போலீஸாரின் அராஜகம். எந்த ஒரு விஷயம்
என்றாலும் மலையாளிகளிடம் மென்மையாகவும், தமிழர்களிடம் கடுமையாகவும்
நடந்துகொள்வார்கள். இருமுடி சுமந்து செல்லும் பக்தர்கள் சன்னிதானத்தில்
நுழைந்ததும் அப்படியே பதினெட்டாம் படியேறி ஐயப்பனிடம் இருமுடியைக்
கட்டிவிட்டு பிறகுதான் முடியைப் பிரிக்கவேண்டும் என்பார்கள்.
இப்படியாக, தமிழன் வளர்த்த சபரிமலையில் மலையாளிகள் தமிழனைப் புறக்கணிப்பது
ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிறது. சரங்குத்தியில் குத்தப்படும் ஒவ்வொரு
சரமும் தமிழினத்தின் நெஞ்சில் குத்தப்படும் ஊசியாகவே மாறிக்
கொண்டிருக்கிறது சபரிமலையில்.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, கடவுள் மறுப்புக்கொள்கையை
வெளியே முழங்கிக்கொண்டு, தமதுவீட்டுப் பெண்களை ரகசியமாகக் கோயிலுக்கு
அனுப்பிய இரட்டை வேடக்காரர்களே மக்களிடம் ஆரவாரச் செல்வாக்கு
பெற்றிருந்தனர். எனவே கண்ணகிக் கோயில், சபரிமலைப் பாதையின் பெரும்பகுதி,
திருப்பதி, காளஹஸ்தி போன்ற தமிழனின் பக்தி கலாசாரச் செல்வங்கள் வேறு
மாநிலங்களுக்குப் பறிபோனதை வேடிக்கை பார்த்தனர். தமிழன் எல்லாம்
இழந்தான்.
ஒருவேனை இவர்கள் மக்களை வாழ வைக்கிற நல்லாட்சி கொடுத்திருந்தால் மக்களுக்குக் கடவுள் நம்பிக்கையாவது குறைந்திருக்கும்.
அப்படியில்லை. விளைவு?-
இவர்களை நம்புவதைவிட, கடவுளை நம்புவது மேல் என்ற மனநிலைக்கு தமிழன்
வந்தான். அந்தக் கடவுள்கள் எந்த மாநிலத்தில் இருந்தாலும் பரவாயில்லை என்று
ஓடி வணங்கி, தான் சிறுகச் சிறுக சம்பாதிக்கும் பணத்தின் ஒருபகுதியை வேற்று
மாநில அரசுகளுக்குக் கொட்டிவிட்டு அவப்பெயரையும் சம்பாதித்து வருகிறான்.
அதன் விளைவுதான் திருப்பதி, சபரிமலை என்று அபயம் தேடிப்போகிற இடங்களிலும்கூட தமிழன் அவலம் சுமக்கும் நிலை.
சரணம் சொல்வதும் சரணம் அடைவதுமே தமிழனின் தலையெழுத்தாகிவிட்டது.
சாமியே... சரணம் ஐயப்பா!
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
- சொரூபன்இளையநிலா
- பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
எதுக்கு இப்படி அடுத்த மாநில கோவிலுக்கு போகனும்? இருக்கிற இடத்தில் இருந்து சாமி கும்பிட்டால் ஆகாதா?யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாம இருந்தாலே கடவுள் நம்மை தேடி வருவார்.
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
அருமையான பதிவு, மலையாளிகளை கொலையாளிகள் என்று சொல்வதில் எந்த தப்பும் இல்லை, உலகமே ஆச்சரியப்படத்தக்க வகையில் இருந்த ஈழமக்களை, இந்த மலையாளிகளின் ஓர வஞ்சனையால், பின் முதுகில் குத்தி, வெற்றி கொண்டாடுகிறான் சிங்களவன். பதிவிற்கு நன்றி ராஜ்!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|