புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணனைக் காணாத கண் Poll_c10கண்ணனைக் காணாத கண் Poll_m10கண்ணனைக் காணாத கண் Poll_c10 
42 Posts - 63%
heezulia
கண்ணனைக் காணாத கண் Poll_c10கண்ணனைக் காணாத கண் Poll_m10கண்ணனைக் காணாத கண் Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
கண்ணனைக் காணாத கண் Poll_c10கண்ணனைக் காணாத கண் Poll_m10கண்ணனைக் காணாத கண் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கண்ணனைக் காணாத கண் Poll_c10கண்ணனைக் காணாத கண் Poll_m10கண்ணனைக் காணாத கண் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணனைக் காணாத கண்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 05, 2020 1:24 pm


மதங்களிலே உயர்ந்த மதம் எந்த மதம்?

-
கண்ணனைக் காணாத கண் 10a
இந்தக் கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதிலைச் சொல்வது
மிகவும் சிரமம். காரணம், எல்லாரும் தங்களுடைய மதம்தான்
உயர்ந்தது என்று நினைக்கிறார்கள்.

அதோடு நிறுத்தினால்தான் பரவாயில்லையே. சிலர், தாங்கள்
சார்ந்திருக்கிற மதத்தைத் தவிர, ஏனைய மதங்கள் அனைத்தும்
தாழ்ந்தவை என்றும் உறுதியாக நம்புகிறார்கள்.

எல்லா மதங்களும் போதிப்பது, அன்பு என்கிற செய்தியைதான்.
அப்படி இருக்கும்போது, இது உசத்தி, அது மட்டம் என்று பிரித்துப்
பேசுவது நியாயமே இல்லை.

குறிப்பாக, இந்தியாபோல் பல்வேறு மதத்தினரும் ஒன்றாக
வாழ்கிற ஒரு தேசத்தில் இதுபோன்ற நல்லிணக்க உணர்வு
மிகவும் அவசியம்.

 இலக்கியத்தில் இதற்கு ஒரு நல்ல உதாரணம் வேண்டுமென்றால்,
இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம்! ‘அடிகள்’ என்பது
சமணத் துறவிகளைக் குறிப்பிடும் ஒரு சொல்.
ஆகவே, இளங்கோவடிகள் சமண மதத்தைச் சார்ந்தவர் என்று
நம்பப்படுகிறது, சிலப்பதிகார நூலிலும் அதற்கான பல
சாட்சியங்கள் உள்ளன.

இளங்கோவடிகள் நினைத்திருந்தால்,


சிலப்பதிகாரத்தின் கதாநாயகனாகிய கோவலன், கதாநாயகி
கண்ணகி, கதையில் வருகிற மற்ற முக்கிய பாத்திரங்கள்
எல்லாவற்றையும் தன்னுடைய சமண மதம் சார்ந்தவர்களாகப்
படைத்திருக்கலாம்.

மற்ற மதங்களை அவ்வப்போது கண்டபடி ஏசியிருக்கலாம்.
அப்படிச் செய்த புலவர்கள் பலர் உண்டு.

ஆனால், இளங்கோவடிகளின் மனம் அதை விரும்பவில்லை.
சிலப்பதிகாரத்தில் அவர் அவ்வப்போது சமண மதம் சார்ந்த
கருத்துகளைச் சொன்னாலும் வாசகர்கள் மீது அதனை
வலுக்கட்டாயமாகத் திணிக்கவில்லை.

மற்ற மதங்கள், கடவுளர்கள், மக்களின் நம்பிக்கைகளுக்கும்
தன்னுடைய நூலில் போதுமான இடம் அளித்து
கௌரவித்திருக்கிறார் அவர்.

உதாரணமாக, சிலப்பதிகாரத்தின் மிகச் சிறந்த பகுதிகளில்
ஒன்று, ‘ஆய்ச்சியர் குரவை’. அதில் திருமாலைப் போற்றிப்
பாடுகிற பல அருமையான தமிழ்ப் பாடல்கள் உள்ளன.

இவற்றை வாசிக்கிற எவரும், ‘‘ஆழ்வார்கள் எழுதிய நாலாயிர
திவ்யப் பிரபந்தத்தில் வருகிற பாடல்கள்தானே இவை?’’
என்றுதான் கேட்பார்கள். அந்த அளவுக்கு வைணவ நெறியில்
ஊறித் திளைத்த ஒருவரைப்போல் பக்தி ரசம் நிறைந்த
அற்புதமான வரிகளை எழுதியுள்ளார் சமணரான
இளங்கோவடிகள்.

 ‘ஆய்ச்சியர் குரவை’யின் இனிமைப் பாடல்களுடைய
சுவைக்கு உதாரணமாக, ஒன்றுமட்டும் இங்கே:


பெரியவனை, மாயவனை, பேருலகம்
                                எல்லாம்
விரி கமல உந்தி உடை விண்ணவனை,
                                 கண்ணும்
திரு அடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே!
கண் இமைத்துக் காண்பார்தம் கண் என்ன
                                     கண்ணே!

-‘கரிய நிறமுடைய திருமால், எல்லாத் தேவர்களையும்
விடப் பெரியவன், மாயங்களில் வல்லவன், பெரிய உலகங்கள்
அனைத்தையும் விரித்துக் காண்பிக்கின்ற நாபிக் கமலத்தை
உடையவன், விண்ணிலே சிறந்து விளங்குபவன்!’ என்று
தொடங்கி, ஆய்ச்சியர்கள் அவனுடைய தோற்றத்தைப்
படிப்படியாக ரசித்து வர்ணிக்கிறார்கள்,

‘அவனுடைய கண்ணும் புனிதமான பாதங்களும் கையும்
அழகிய வாயும் சிவந்து காணப்படுகின்றன, அந்த அழகை
நாம் கண்டு ரசிக்க வேண்டாமா?’ என்று நெகிழ்கிறார்கள்.

 அடுத்து, இன்னொரு ஒரு படி மேலே சென்று, ‘ஒருவேளை,
அத்தகைய அழகு நிறைந்த இந்த இறைவனைத் தரிசிக்கும்
பாக்கியம் வாய்க்காவிட்டால், இந்தக் கண்கள் இருந்து என்ன
பயன்?’ என்கிறார்கள் அந்த ஆய்ச்சியர்கள்.

 ‘‘சரி, எனக்கு இறைவன் தரிசனம் கிடைத்துவிட்டது,
அவனுடைய அழகுத் தோற்றத்தை மனமாரப் பார்த்து ர
சிக்கிறேன், நான்பாக்கியசாலிதானே?’’

ஆய்ச்சியர்கள் நம்மை உற்றுக் கவனித்துவிட்டு,
‘‘ம்ஹூம், பிரயோஜனமில்லை’’ என்கிறார்கள்.

 ‘‘ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?’’

 ‘‘நீங்கள் அடிக்கடி கண் இமைக்கிறீர்களே!’’

 ‘‘அதனால் என்ன? அது எல்லாருக்கும் உள்ள இயல்புதானே?’’

‘‘என்ன இயல்போ, எங்களுக்குத் தெரியாது, ஆனால், கண்
இமைக்கும்போது அந்த நொடிப்பொழுது இறைவனின் அழகைத்
தரிசிக்கமுடியாமல் போய்விடுகிறதே!’’ என்று
ஆதங்கப்படுகிறார்கள் ஆய்ச்சியர்கள்.

ஆக, நொடிப்பொழுதும் கண்ணிமைக்காமல் நாள்முழுவதும்
திருமாலின் அழகுத் தோற்றத்தை அனுபவித்துப் பருகிக்கொண்டே
இருக்க வேண்டும் என்பதுதான் ஆய்ச்சியர்களின் ஆசை.

சமணரான இளங்கோவடிகள் அந்த இயல்பான நேசத்தையும்
பக்தியையும் உணர்ந்து ரசித்திருக்கிறார், மத நல்லிணக்கத்தோடு
சிலப்பதிகாரத்தில் பொருத்தமான இடத்தில் அதனை அழகுறப்
பதிவு செய்துள்ளார்.
-
-------------------------------------------
ஆன்மிக தகவல்
நன்றி- குங்குமம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக