புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களுக்கான சிறப்பு உணவு... பூப்பெய்தல் முதல் மெனோபாஸ் வரை !
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
பெண்களுக்கான 30 வகை சிறப்பு உணவு... பூப்பெய்தல் முதல் மெனோபாஸ் வரை !
எள்ளுருண்டை
தேவை: கறுப்பு எள் - 100 கிராம், துருவிய வெல்லம் - 100 கிராம், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
முதலில் வெறும் கடாயில் கறுப்பு எள்ளை வெடிக்கும் வரை நன்கு வறுத்து ஆறவிடவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு சுற்று சுற்றி கொரகொரப்பாக அரைக்கவும். இதனுடன் துருவிய வெல்லம் சேர்த்து மேலும் இரண்டு சுற்று சுற்றி, பின்னர் நல்லெண்ணெய்விட்டு நன்கு கலந்து சிறிய சிறிய உருண்டைகளாகப் பிடித்துவைக்கவும். இதை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு, 20 நாள்கள் வரை கெடாமல் வைத்துப் பயன்படுத்தலாம். விருப்பப்பட்டால் ஒரு கைப்பிடி வறுத்த வேர்க்கடலையும் சேர்க்கலாம்.
சிறப்பு: கறுப்பு எள் பெண்களுக்கு நன்மை அளிக்கும். இது கருப்பைக்கு மிகவும் நல்லது. இதில் அதிக அளவு உள்ள கால்சியம் சத்து எலும்புகளை வலுப்படுத்தும். பற்களை உறுதிப்படுத்தும். மாதவிடாய் நேரத்தில் வரும் இடுப்பு வலியையும் சரிசெய்யும். இதில் இருக்கும் மெக்னீசியம் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். இரும்புச்சத்து ரத்த விருத்திக்கு உதவும்; ஒழுங்கற்ற மாதவிடாய்ப் பிரச்னையையும் சரிசெய்யும்.
பெண்களுக்கான 30 வகை சிறப்பு உணவு... பூப்பெய்தல் முதல் மெனோபாஸ் வரை !
எள்ளுருண்டை
தேவை: கறுப்பு எள் - 100 கிராம், துருவிய வெல்லம் - 100 கிராம், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
முதலில் வெறும் கடாயில் கறுப்பு எள்ளை வெடிக்கும் வரை நன்கு வறுத்து ஆறவிடவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு சுற்று சுற்றி கொரகொரப்பாக அரைக்கவும். இதனுடன் துருவிய வெல்லம் சேர்த்து மேலும் இரண்டு சுற்று சுற்றி, பின்னர் நல்லெண்ணெய்விட்டு நன்கு கலந்து சிறிய சிறிய உருண்டைகளாகப் பிடித்துவைக்கவும். இதை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு, 20 நாள்கள் வரை கெடாமல் வைத்துப் பயன்படுத்தலாம். விருப்பப்பட்டால் ஒரு கைப்பிடி வறுத்த வேர்க்கடலையும் சேர்க்கலாம்.
சிறப்பு: கறுப்பு எள் பெண்களுக்கு நன்மை அளிக்கும். இது கருப்பைக்கு மிகவும் நல்லது. இதில் அதிக அளவு உள்ள கால்சியம் சத்து எலும்புகளை வலுப்படுத்தும். பற்களை உறுதிப்படுத்தும். மாதவிடாய் நேரத்தில் வரும் இடுப்பு வலியையும் சரிசெய்யும். இதில் இருக்கும் மெக்னீசியம் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். இரும்புச்சத்து ரத்த விருத்திக்கு உதவும்; ஒழுங்கற்ற மாதவிடாய்ப் பிரச்னையையும் சரிசெய்யும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வெந்தயக்கஞ்சி
தேவை: வெந்தயம் - ஒரு கைப்பிடி அளவு, பச்சரிசி - 200 கிராம், பூண்டு - 8 பல், உளுந்து - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் (துருவியது) - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - 4 - 5 டம்ளர்.
செய்முறை: முதலில் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றைக் கழுவி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு அதனுடன் பூண்டு, துருவிய தேங்காய், பெருங்காயத்தூள், சீரகம், கறிவேப்பிலை, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஐந்து விசில் விட்டு இறக்கவும். சத்தான, குளிர்ச்சியான வெந்தயக் கஞ்சி தயார். இதை சூடாகப் பருகவும்.
சிறப்பு: உடல் சூட்டைத் தணிக்கும். மலச்சிக்கலைப் போக்கும். இதில் கரையும் நார்ச்சத்து அதிகம். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். இரும்புச்சத்து அதிகம். இது நரம்புகளை வலுப்படுத்தி நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். இன்சுலின் சுரப்பைச் சரிசெய்யும். தாய்ப்பால் சுரப்புக்கு உதவும். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்திக்கு உதவும். பொட்டாசியம் சத்தும் அதிகம். கூந்தல் வளர்ச்சிக்கு உதவும். பால் சுரப்பை அதிகரிக்கும்.
தேவை: வெந்தயம் - ஒரு கைப்பிடி அளவு, பச்சரிசி - 200 கிராம், பூண்டு - 8 பல், உளுந்து - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் (துருவியது) - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - 4 - 5 டம்ளர்.
செய்முறை: முதலில் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றைக் கழுவி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு அதனுடன் பூண்டு, துருவிய தேங்காய், பெருங்காயத்தூள், சீரகம், கறிவேப்பிலை, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஐந்து விசில் விட்டு இறக்கவும். சத்தான, குளிர்ச்சியான வெந்தயக் கஞ்சி தயார். இதை சூடாகப் பருகவும்.
சிறப்பு: உடல் சூட்டைத் தணிக்கும். மலச்சிக்கலைப் போக்கும். இதில் கரையும் நார்ச்சத்து அதிகம். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். இரும்புச்சத்து அதிகம். இது நரம்புகளை வலுப்படுத்தி நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். இன்சுலின் சுரப்பைச் சரிசெய்யும். தாய்ப்பால் சுரப்புக்கு உதவும். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்திக்கு உதவும். பொட்டாசியம் சத்தும் அதிகம். கூந்தல் வளர்ச்சிக்கு உதவும். பால் சுரப்பை அதிகரிக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவப்பு அரிசி சிங்காரப் புட்டு
தேவை: பதப்படுத்திய சிவப்பு அரிசி புட்டு மாவு - ஒரு கப், துருவிய தேங்காய் - 3 கைப்பிடி அளவு, துருவிய வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை - அரை கப், தண்ணீர் - தேவையான அளவு, ஊறவைத்த பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: முதலில் சிறிதளவு தண்ணீரை உப்பு சேர்த்து கொதிக்கவைத்து மாவில் தெளித்து, புட்டுக்குப் பிசைவதுபோல பொலபொலவென பிசிறவும். அதனுடன் 2 கைப்பிடி தேங்காய்த் துருவல், ஊறவைத்த பாசிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பிசிறி இட்லிப் பாத்திரத்தில், 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து இறக்கவும். பிறகு புட்டை உதிர்த்துவிட்டு அதனுடன் நெய், ஒரு கைப்பிடி தேங்காய்த் துருவல், துருவிய வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து சூடாகச் சாப்பிடவும்.
சிறப்பு: இதில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக உள்ளது. இது உடல் எடை குறைய உதவுகிறது. இதில் செலினீயம், துத்தநாகம், வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அகியவை அதிகம். தயாமின் சத்தும் உள்ளது. குழந்தையின்மை பிரச்னைக்குத் தீர்வாகும்.
தேவை: பதப்படுத்திய சிவப்பு அரிசி புட்டு மாவு - ஒரு கப், துருவிய தேங்காய் - 3 கைப்பிடி அளவு, துருவிய வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை - அரை கப், தண்ணீர் - தேவையான அளவு, ஊறவைத்த பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: முதலில் சிறிதளவு தண்ணீரை உப்பு சேர்த்து கொதிக்கவைத்து மாவில் தெளித்து, புட்டுக்குப் பிசைவதுபோல பொலபொலவென பிசிறவும். அதனுடன் 2 கைப்பிடி தேங்காய்த் துருவல், ஊறவைத்த பாசிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பிசிறி இட்லிப் பாத்திரத்தில், 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து இறக்கவும். பிறகு புட்டை உதிர்த்துவிட்டு அதனுடன் நெய், ஒரு கைப்பிடி தேங்காய்த் துருவல், துருவிய வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து சூடாகச் சாப்பிடவும்.
சிறப்பு: இதில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக உள்ளது. இது உடல் எடை குறைய உதவுகிறது. இதில் செலினீயம், துத்தநாகம், வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அகியவை அதிகம். தயாமின் சத்தும் உள்ளது. குழந்தையின்மை பிரச்னைக்குத் தீர்வாகும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உளுந்து கேரட் போண்டா
தேவை: உளுந்து - 250 கிராம், கேரட் (துருவியது) - அரை கப், பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்), பெரிய வெங்காயம் - ஒன்று, கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை (சேர்த்து) - ஒரு கைப்பிடி அளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி (துருவியது) - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.
செய்முறை: முதலில் உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைத்து நன்கு அரைக்கவும். பிறகு அதில் துருவிய கேரட் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். சூடான எண்ணெயில் மாவைச் சிறிய போண்டாக்களாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
சிறப்பு: இதில் பீட்டாகரோட்டினாய்டு அதிகம் உள்ளது. இது கண்களுக்கு மிகவும் நல்லது. சருமத்துக்கு மினுமினுப்பைத் தருகிறது. மாதவிடாய் நேரத்தில் வரும் சிறுநீர்கடுப்பை சரிசெய்கிறது. எலும்புகளை வலுப்படுத்தும். நரம்புகளை உறுதிப்படுத்தும். நார்ச்சத்து, பொட்டாசியம் மிகுந்து காணப்படுகிறது. பூப்பெய்தல் காலத்தில் மாலை நேர சிற்றுண்டியாக இதைப் பெண் குழந்தை களுக்குச் செய்து தரலாம்.
தேவை: உளுந்து - 250 கிராம், கேரட் (துருவியது) - அரை கப், பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்), பெரிய வெங்காயம் - ஒன்று, கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை (சேர்த்து) - ஒரு கைப்பிடி அளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி (துருவியது) - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.
செய்முறை: முதலில் உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைத்து நன்கு அரைக்கவும். பிறகு அதில் துருவிய கேரட் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். சூடான எண்ணெயில் மாவைச் சிறிய போண்டாக்களாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
சிறப்பு: இதில் பீட்டாகரோட்டினாய்டு அதிகம் உள்ளது. இது கண்களுக்கு மிகவும் நல்லது. சருமத்துக்கு மினுமினுப்பைத் தருகிறது. மாதவிடாய் நேரத்தில் வரும் சிறுநீர்கடுப்பை சரிசெய்கிறது. எலும்புகளை வலுப்படுத்தும். நரம்புகளை உறுதிப்படுத்தும். நார்ச்சத்து, பொட்டாசியம் மிகுந்து காணப்படுகிறது. பூப்பெய்தல் காலத்தில் மாலை நேர சிற்றுண்டியாக இதைப் பெண் குழந்தை களுக்குச் செய்து தரலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கறுப்பு உளுந்தங்கஞ்சி
தேவை: கறுப்பு உளுந்து - 100 கிராம், பனிவரகு - 100 கிராம், பூண்டு - 12 பல், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் (பொடித்தது) - அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 5, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா (சேர்த்து) - ஒரு கைப்பிடி அளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மோர் - 200 மில்லி, உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் அல்லது நெய் - ஒரு டீஸ்பூன், தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை: பனிவரகு, கறுப்பு உளுந்தை 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். ஒரு குக்கரில் எண்ணெய்விட்டு ஊறிய பனிவரகு மற்றும் பருப்பை லேசாக மணம் வரும்வரை வதக்கவும். பிறகு அதனுடன் வெந்தயம், பொடித்த மிளகு, சீரகம், நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, புதினா, பெருங்காயத்தூள், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஐந்து விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் மோர்விட்டு நன்கு கலந்து இளம்சூடாகப் பருகவும்.
சிறப்பு: கால்சியம், பாஸ்பரஸ் சம அளவில் உள்ளது. இது பித்தத்தைத் தணிக்க உதவும். உடலின் நச்சுகளை வெளியேற்றும். கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். சிறுநீர் சார்ந்த பிரச்னைகளைச் சரிசெய்கிறது. கருத்தரிப்புக்கு உதவுகிறது. பால் சுரப்புக்கும் உதவுகிறது.
தேவை: கறுப்பு உளுந்து - 100 கிராம், பனிவரகு - 100 கிராம், பூண்டு - 12 பல், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் (பொடித்தது) - அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 5, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா (சேர்த்து) - ஒரு கைப்பிடி அளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மோர் - 200 மில்லி, உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் அல்லது நெய் - ஒரு டீஸ்பூன், தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை: பனிவரகு, கறுப்பு உளுந்தை 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். ஒரு குக்கரில் எண்ணெய்விட்டு ஊறிய பனிவரகு மற்றும் பருப்பை லேசாக மணம் வரும்வரை வதக்கவும். பிறகு அதனுடன் வெந்தயம், பொடித்த மிளகு, சீரகம், நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, புதினா, பெருங்காயத்தூள், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஐந்து விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் மோர்விட்டு நன்கு கலந்து இளம்சூடாகப் பருகவும்.
சிறப்பு: கால்சியம், பாஸ்பரஸ் சம அளவில் உள்ளது. இது பித்தத்தைத் தணிக்க உதவும். உடலின் நச்சுகளை வெளியேற்றும். கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். சிறுநீர் சார்ந்த பிரச்னைகளைச் சரிசெய்கிறது. கருத்தரிப்புக்கு உதவுகிறது. பால் சுரப்புக்கும் உதவுகிறது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வேப்பிலை மஞ்சள் உருண்டை
தேவை: கொழுந்து வேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, சுத்தமான விரலி மஞ்சள் - ஒரு சிறிய துண்டு, இந்துப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: முதலில் விரலி மஞ்சளை ஒரு மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். பிறகு சுத்தம் செய்த வேப்பிலையுடன் ஊறிய மஞ்சள் சேர்த்து நன்கு மையாக அரைத்து இதனுடன் ஒரு சிட்டிகை இந்துப்பு கலந்து ஒரு சிறிய கோலிகுண்டு அளவு எடுத்து உள்ளுக்குச் சாப்பிடவும். பிறகு ஒரு டம்ளர் வெந்நீர் பருகவும். இந்த விழுதை நன்கு உலர்த்தி டப்பாவில் அடைத்து ஒரு டீஸ்பூன் வீதம் ஒரு டம்ளர் (200 மில்லி) வெந்நீருடன் கலந்தும் அருந்தலாம். வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.
சிறப்பு: வேம்பில் வைட்டமின் இ நிறைய உள்ளது. கரோட்டினாய்டு அதிகம். ஆன்டி இன்ஃப்ளமேடரி பிராப்பர்டீஸ் அதிகம். எனவே, இது வலியைக் குறைக்க உதவும். எசென்ஷியல் ஃபேட்டி ஆசிட்ஸ் அதிகம் காணப்படுகிறது. இது இதயம் மற்றும் தோல் ஆகியவற்றின் பாதுகாப்புக்கு உதவுகிறது. இதனுடன் மஞ்சளும் சேரும்போது இது ஒரு சிறந்த ஆன்டி பேக்டீரியல் ஆகும். இது வயிற்றில் மற்றும் கர்ப்பப்பையில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. கர்ப்பப்பைப் புற்றுநோய் வராமல் பாதுகாக்கும்.
தேவை: கொழுந்து வேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, சுத்தமான விரலி மஞ்சள் - ஒரு சிறிய துண்டு, இந்துப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: முதலில் விரலி மஞ்சளை ஒரு மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். பிறகு சுத்தம் செய்த வேப்பிலையுடன் ஊறிய மஞ்சள் சேர்த்து நன்கு மையாக அரைத்து இதனுடன் ஒரு சிட்டிகை இந்துப்பு கலந்து ஒரு சிறிய கோலிகுண்டு அளவு எடுத்து உள்ளுக்குச் சாப்பிடவும். பிறகு ஒரு டம்ளர் வெந்நீர் பருகவும். இந்த விழுதை நன்கு உலர்த்தி டப்பாவில் அடைத்து ஒரு டீஸ்பூன் வீதம் ஒரு டம்ளர் (200 மில்லி) வெந்நீருடன் கலந்தும் அருந்தலாம். வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.
சிறப்பு: வேம்பில் வைட்டமின் இ நிறைய உள்ளது. கரோட்டினாய்டு அதிகம். ஆன்டி இன்ஃப்ளமேடரி பிராப்பர்டீஸ் அதிகம். எனவே, இது வலியைக் குறைக்க உதவும். எசென்ஷியல் ஃபேட்டி ஆசிட்ஸ் அதிகம் காணப்படுகிறது. இது இதயம் மற்றும் தோல் ஆகியவற்றின் பாதுகாப்புக்கு உதவுகிறது. இதனுடன் மஞ்சளும் சேரும்போது இது ஒரு சிறந்த ஆன்டி பேக்டீரியல் ஆகும். இது வயிற்றில் மற்றும் கர்ப்பப்பையில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. கர்ப்பப்பைப் புற்றுநோய் வராமல் பாதுகாக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாதுளை மணப்பாகு
தேவை: ஃபிரெஷ் மாதுளைச்சாறு - 300 மில்லி, இஞ்சிச்சாறு - 100 மில்லி, தேன் - 2 டேபிள்ஸ்பூன், வெல்லம் அல்லது கருப்பட்டி - 200 கிராம், சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் - தலா கால் டீஸ்பூன், தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை: வெல்லம் அல்லது கருப்பட்டியுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கரைத்து வடிகட்டி, அடுப்பிலேற்றி கம்பி பதம் வரும் வரை நன்கு காய்ச்சி பிறகு அதனுடன் (தண்ணீர் சேர்க்காத) மாதுளைச்சாறு, இஞ்சிச் சாறு கலந்து இரண்டு நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும். அதில் சுக்கு மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து பிறகு தேன் சேர்த்து ஒரு பாட்டிலில் சேகரித்துக்கொள்ளலாம். தினமும் கால் பங்கு மணப்பாகு முக்கால் பங்கு தண்ணீர் சேர்த்து காலை வேளைகளில் பருகி வரலாம்.
சிறப்பு: மாதவிடாய் கால அதிக ரத்த இழப்பை சமன் செய்ய உதவுகிறது. இதில் ஊட்டச்சத்துகள், பைட்டோ கெமிக்கல்கள் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைய உள்ளன. கெட்ட கொழுப்புகள் படிவதைத் தடுக்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதில் இயற்கையாக உள்ள `ஆஸ்பிரின்’ ரத்தம் உறைவதைத் தடுக்கும். ரத்த பேதியை நிறுத்தும். மாதவிடாய்க் காலங்களில் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய பழம் மாதுளை.
தேவை: ஃபிரெஷ் மாதுளைச்சாறு - 300 மில்லி, இஞ்சிச்சாறு - 100 மில்லி, தேன் - 2 டேபிள்ஸ்பூன், வெல்லம் அல்லது கருப்பட்டி - 200 கிராம், சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் - தலா கால் டீஸ்பூன், தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை: வெல்லம் அல்லது கருப்பட்டியுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கரைத்து வடிகட்டி, அடுப்பிலேற்றி கம்பி பதம் வரும் வரை நன்கு காய்ச்சி பிறகு அதனுடன் (தண்ணீர் சேர்க்காத) மாதுளைச்சாறு, இஞ்சிச் சாறு கலந்து இரண்டு நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும். அதில் சுக்கு மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து பிறகு தேன் சேர்த்து ஒரு பாட்டிலில் சேகரித்துக்கொள்ளலாம். தினமும் கால் பங்கு மணப்பாகு முக்கால் பங்கு தண்ணீர் சேர்த்து காலை வேளைகளில் பருகி வரலாம்.
சிறப்பு: மாதவிடாய் கால அதிக ரத்த இழப்பை சமன் செய்ய உதவுகிறது. இதில் ஊட்டச்சத்துகள், பைட்டோ கெமிக்கல்கள் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைய உள்ளன. கெட்ட கொழுப்புகள் படிவதைத் தடுக்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதில் இயற்கையாக உள்ள `ஆஸ்பிரின்’ ரத்தம் உறைவதைத் தடுக்கும். ரத்த பேதியை நிறுத்தும். மாதவிடாய்க் காலங்களில் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய பழம் மாதுளை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கற்றாழை மோர் கடையல்
தேவை: கற்றாழை மடல் - ஒன்று, மோர் - 100 மில்லி, சீரகத்தூள் - கால் டீஸ்பூன், புதினா, கொத்தமல்லித்தழை (சேர்த்து) - ஒரு கைப்பிடி அளவு, வெள்ளை மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை: கற்றாழை மடலுக்குள் இருக்கும் சோற்றுப் பகுதியை எடுத்து குறைந்து 6 - 8 முறை நன்கு கழுவி பிறகு அதனுடன் புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து, அதனுடன் நன்கு கரைத்த மோர், உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து உடனே பருகவும் (வடிகட்டாமல் அருந்துவதே சிறந்தது. விருப்பப்பட்டால் மட்டும் வடிகட்டலாம்).
சிறப்பு: பித்தத்தைக் குறைக்கவும், உடல் சூட்டைத் தணிக்கவும் உதவுகிறது. நீர்க்கடுப்பு, நீர் எரிச்சலைச் சரிசெய்யும் மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். கண் சிவப்பு மறையும். பாத எரிச்சலைப் போக்கும். தலை சூட்டைக் குறைக்கும். வெள்ளைப்படுதல் சரியாகும். பதற்றம் நீங்கும். வயிற்று உபாதைகளைப் போக்கும்.
தேவை: கற்றாழை மடல் - ஒன்று, மோர் - 100 மில்லி, சீரகத்தூள் - கால் டீஸ்பூன், புதினா, கொத்தமல்லித்தழை (சேர்த்து) - ஒரு கைப்பிடி அளவு, வெள்ளை மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை: கற்றாழை மடலுக்குள் இருக்கும் சோற்றுப் பகுதியை எடுத்து குறைந்து 6 - 8 முறை நன்கு கழுவி பிறகு அதனுடன் புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து, அதனுடன் நன்கு கரைத்த மோர், உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து உடனே பருகவும் (வடிகட்டாமல் அருந்துவதே சிறந்தது. விருப்பப்பட்டால் மட்டும் வடிகட்டலாம்).
சிறப்பு: பித்தத்தைக் குறைக்கவும், உடல் சூட்டைத் தணிக்கவும் உதவுகிறது. நீர்க்கடுப்பு, நீர் எரிச்சலைச் சரிசெய்யும் மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். கண் சிவப்பு மறையும். பாத எரிச்சலைப் போக்கும். தலை சூட்டைக் குறைக்கும். வெள்ளைப்படுதல் சரியாகும். பதற்றம் நீங்கும். வயிற்று உபாதைகளைப் போக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தினை அரிசி அதிரசம்
தேவை: தினை அரிசி - 500 கிராம், வெல்லம் - 400 கிராம், சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் - தலா அரை டீஸ்பூன், எள் - ஒரு டீஸ்பூன், நெய் (அ) நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன். பொரிக்க: எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: முதலில் தினை அரிசியை மூன்று மணி நேரம் ஊற வைத்து பிறகு நீரை வடியவிட்டு நிழலில் 20 நிமிடங்கள் உலரவிட்டு, அது சற்று ஈரமாக இருக்கும்போதே அரைத்து சலித்துவைக்கவும். பிறகு வெல்லத்தை சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டி கொதிக்கவிட்டு உருட்டு பதத்தில் பாகு எடுத்து அடுப்பை அணைத்துவிடவும். அதனுடன் எள், சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து அதனுடன் இந்த மாவைக் கொட்டிக் கலந்து, நெய் (அ) நல்லெண்ணெய் சேர்த்து, அதிரச மாவுப் பக்குவத்தில் கிளறி வைக்கவும் பிறகு மூன்று மணி நேரம் கழித்து சிறிய தட்டைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால் மணமணக்கும் அதிரசம் தயார்.
சிறப்பு: இதில் புரதம், கால்சியம், நார்ச்சத்து, பீட்டாகெரோட்டின் அதிகம். கூந்தல், கண் ஆகியவற்றுக்கு நல்லது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம். இறந்த செல்கள் மீண்டும் வளர உதவும். கருமுட்டை வளர்ச்சிக்கு உதவும். மன அழுத்தத்தைக் குறைக்கும்.
தேவை: தினை அரிசி - 500 கிராம், வெல்லம் - 400 கிராம், சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் - தலா அரை டீஸ்பூன், எள் - ஒரு டீஸ்பூன், நெய் (அ) நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன். பொரிக்க: எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: முதலில் தினை அரிசியை மூன்று மணி நேரம் ஊற வைத்து பிறகு நீரை வடியவிட்டு நிழலில் 20 நிமிடங்கள் உலரவிட்டு, அது சற்று ஈரமாக இருக்கும்போதே அரைத்து சலித்துவைக்கவும். பிறகு வெல்லத்தை சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டி கொதிக்கவிட்டு உருட்டு பதத்தில் பாகு எடுத்து அடுப்பை அணைத்துவிடவும். அதனுடன் எள், சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து அதனுடன் இந்த மாவைக் கொட்டிக் கலந்து, நெய் (அ) நல்லெண்ணெய் சேர்த்து, அதிரச மாவுப் பக்குவத்தில் கிளறி வைக்கவும் பிறகு மூன்று மணி நேரம் கழித்து சிறிய தட்டைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால் மணமணக்கும் அதிரசம் தயார்.
சிறப்பு: இதில் புரதம், கால்சியம், நார்ச்சத்து, பீட்டாகெரோட்டின் அதிகம். கூந்தல், கண் ஆகியவற்றுக்கு நல்லது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம். இறந்த செல்கள் மீண்டும் வளர உதவும். கருமுட்டை வளர்ச்சிக்கு உதவும். மன அழுத்தத்தைக் குறைக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொண்டைக்கடலை அவல் வெஜிடபிள் சாலட்
தேவை: வேகவைத்த வெள்ளைக் கொண்டைக்கடலை - ஒரு கப், கார்குருவை அரிசி அவல் (அ) கவுனி அரிசி அவல் - அரை கப் (ஊற வைக்கவும்), மஞ்சள், பச்சை, சிவப்பு குடமிளகாய் கலவை - கால் கப், கேரட் (பொடியாக நறுக்கியது) - கால் கப், முட்டைகோஸ் (துருவியது) - ஒரு கைப்பிடி அளவு, துருவிய தேங்காய் - ஒரு கைப்பிடி அளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள், மிளகுத்தூள், சாட் மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், எள்ளு பேஸ்ட் - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை, புதினா (நறுக்கியது) - ஒரு கைப்பிடி அளவு, நறுக்கிய வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு, உப்பு - தேவைக்கேற்ப. எள்ளு பேஸ்ட் செய்ய: கறுப்பு எள் - ஒரு கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் - 3, வேர்க்கடலை - ஒரு கரண்டி, எலுமிச்சைச்சாறு - தேவைக்கேற்ப.
செய்முறை: கறுப்பு எள்ளை நன்கு வெடிக்கும் வரை வறுத்து பிறகு காய்ந்த மிளகாய், வேர்க்கடலை சேர்த்து வறுத்து நன்கு அரைத்து, எலுமிச்சைச்சாறு விட்டு கலந்து வைத்துக்கொள்ளவும். எள்ளு பேஸ்ட் தயார்.
ஒரு பவுலில் வேகவைத்த கடலை, ஊறவைத்த அவல் ஆகியவற்றுடன் குடமிளகாய், கேரட், முட்டைகோஸ், வெங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும். அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் எள்ளு பேஸ்ட்டும் சேர்த்து நன்கு கலக்கவும். சீரகத்தூள், மிளகுத்தூள், சாட் மசாலாத்தூள், தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து நன்கு கலந்து, இறுதியாக எலுமிச்சைச் சாறு விட்டு, உப்பு சேர்த்துக் கலக்கவும். காலை உணவாக இதை ஒரு கப் சாப்பிடலாம்.
சிறப்பு: முழு ஊட்டச் சத்தும் ஒருசேர உடலுக்குக் கிடைக்கும். நோய் எதிர்ப்புத் திறனைக்கூட்ட உதவும்.
தேவை: வேகவைத்த வெள்ளைக் கொண்டைக்கடலை - ஒரு கப், கார்குருவை அரிசி அவல் (அ) கவுனி அரிசி அவல் - அரை கப் (ஊற வைக்கவும்), மஞ்சள், பச்சை, சிவப்பு குடமிளகாய் கலவை - கால் கப், கேரட் (பொடியாக நறுக்கியது) - கால் கப், முட்டைகோஸ் (துருவியது) - ஒரு கைப்பிடி அளவு, துருவிய தேங்காய் - ஒரு கைப்பிடி அளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள், மிளகுத்தூள், சாட் மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், எள்ளு பேஸ்ட் - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை, புதினா (நறுக்கியது) - ஒரு கைப்பிடி அளவு, நறுக்கிய வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு, உப்பு - தேவைக்கேற்ப. எள்ளு பேஸ்ட் செய்ய: கறுப்பு எள் - ஒரு கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் - 3, வேர்க்கடலை - ஒரு கரண்டி, எலுமிச்சைச்சாறு - தேவைக்கேற்ப.
செய்முறை: கறுப்பு எள்ளை நன்கு வெடிக்கும் வரை வறுத்து பிறகு காய்ந்த மிளகாய், வேர்க்கடலை சேர்த்து வறுத்து நன்கு அரைத்து, எலுமிச்சைச்சாறு விட்டு கலந்து வைத்துக்கொள்ளவும். எள்ளு பேஸ்ட் தயார்.
ஒரு பவுலில் வேகவைத்த கடலை, ஊறவைத்த அவல் ஆகியவற்றுடன் குடமிளகாய், கேரட், முட்டைகோஸ், வெங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும். அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் எள்ளு பேஸ்ட்டும் சேர்த்து நன்கு கலக்கவும். சீரகத்தூள், மிளகுத்தூள், சாட் மசாலாத்தூள், தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து நன்கு கலந்து, இறுதியாக எலுமிச்சைச் சாறு விட்டு, உப்பு சேர்த்துக் கலக்கவும். காலை உணவாக இதை ஒரு கப் சாப்பிடலாம்.
சிறப்பு: முழு ஊட்டச் சத்தும் ஒருசேர உடலுக்குக் கிடைக்கும். நோய் எதிர்ப்புத் திறனைக்கூட்ட உதவும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இரும்புச்சத்து சூப்
தேவை: முருங்கைக்கீரை - 5 கைப்பிடி அளவு, பொன்னாங்கண்ணிக்கீரை - 5 கைப்பிடி அளவு, சின்ன வெங்காயம் - 8 - 10, பூண்டு - 10 பல், கிராம்பு - 2, பட்டை - ஒன்று, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் (பொடித்தது) - ஒரு டீஸ்பூன், தக்காளி - ஒன்று, பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, இரண்டாவது முறை அரிசியைக் களைந்த தண்ணீர் - 5 டம்ளர்.
செய்முறை: முதலில் கீரைகளைச் சுத்தம் செய்து அலசி ஒரு குக்கரில் போடவும். பிறகு அதனுடன் தோலுரித்த சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, நறுக்கிய தக்காளி, கிராம்பு, பட்டை, பாசிப்பருப்பு ஆகியவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 5 டம்ளர் அரிசி களைந்த சுத்தமான தண்ணீர்விட்டு ஐந்து விசில் வந்ததும் இறக்கி வடிகட்டவும். அதில் வடிகட்டிய சக்கையை ஒரு மிக்ஸியில் ஓர் ஓட்டு ஓட்டி அதை மீண்டும் வடிகட்டிய தண்ணீர்விட்டு கலந்து வடிகட்டவும் (இதனால் சத்துகள் வீணாகாமல் இருக்கும்). பிறகு அதில் பொடித்த மிளகு, சீரகம் மற்றும் எலுமிச்சைச்சாறுவிட்டு சூடாகப் பருகவும்.
சிறப்பு: முக்கிய அமினோ அமிலங்கள் அடங்கிய ஒரே கீரை முருங்கைக்கீரை. இதில் அபரிமிதமான இரும்புச்சத்து அடங்கியுள்ளது. ரத்த விருத்திக்கும், உடல் வலுப்பெறவும், மூளை சுறுசுறுப்படையவும் உதவும். இதில் வைட்டமின்கள், கனிமச்சத்துகள், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ஆகியவை உள்ளன.
தேவை: முருங்கைக்கீரை - 5 கைப்பிடி அளவு, பொன்னாங்கண்ணிக்கீரை - 5 கைப்பிடி அளவு, சின்ன வெங்காயம் - 8 - 10, பூண்டு - 10 பல், கிராம்பு - 2, பட்டை - ஒன்று, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் (பொடித்தது) - ஒரு டீஸ்பூன், தக்காளி - ஒன்று, பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, இரண்டாவது முறை அரிசியைக் களைந்த தண்ணீர் - 5 டம்ளர்.
செய்முறை: முதலில் கீரைகளைச் சுத்தம் செய்து அலசி ஒரு குக்கரில் போடவும். பிறகு அதனுடன் தோலுரித்த சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, நறுக்கிய தக்காளி, கிராம்பு, பட்டை, பாசிப்பருப்பு ஆகியவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 5 டம்ளர் அரிசி களைந்த சுத்தமான தண்ணீர்விட்டு ஐந்து விசில் வந்ததும் இறக்கி வடிகட்டவும். அதில் வடிகட்டிய சக்கையை ஒரு மிக்ஸியில் ஓர் ஓட்டு ஓட்டி அதை மீண்டும் வடிகட்டிய தண்ணீர்விட்டு கலந்து வடிகட்டவும் (இதனால் சத்துகள் வீணாகாமல் இருக்கும்). பிறகு அதில் பொடித்த மிளகு, சீரகம் மற்றும் எலுமிச்சைச்சாறுவிட்டு சூடாகப் பருகவும்.
சிறப்பு: முக்கிய அமினோ அமிலங்கள் அடங்கிய ஒரே கீரை முருங்கைக்கீரை. இதில் அபரிமிதமான இரும்புச்சத்து அடங்கியுள்ளது. ரத்த விருத்திக்கும், உடல் வலுப்பெறவும், மூளை சுறுசுறுப்படையவும் உதவும். இதில் வைட்டமின்கள், கனிமச்சத்துகள், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ஆகியவை உள்ளன.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|