புதிய பதிவுகள்
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
Abiraj_26 | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே...
Page 1 of 1 •
-
எஸ். வி. வேணுகோபாலன்
நண்பர் ஒருவர் சில மாதங்களுக்குமுன்
'இந்தப் பாடலை இரவு நேரத்தில் கேளுங்களேன்' என்று
அனுப்பிவைத்தார், நீண்ட காலத்துக்குமுன் கேட்டிருந்த
அருமையான பாடல் அது.
ஆஹா.. நிசப்தமான அந்த நேரத்தில் கேட்கத்
தொடங்கியவுடன் உள்ளம் ஒரு விவரிக்க இயலாத
அனுபவத்தில் ஆழ்ந்து கிறங்கத் தொடங்கிவிட்டது:
‘அம்மம்மா... கேளடி தோழி’ (படம்: கறுப்புப்பணம்).
ஒரு சூழலின் இதத்தைத் தமது குரலால் ஒருவர்,
பாடலைக் கேட்பவருக்கும் கடத்திவிட முடியுமா என்ன!
அதுதான் லூர்து மேரி ராஜேஸ்வரி! அப்படிச் சொன்னால்
சட்டென்று தெரியாது, ஆனால் எல்.ஆர்.ஈஸ்வரி என்றால்
அடுத்த கணம், தனித்துவமான ஓர் இசைக்குரல் ரசிக
உள்ளங்களில் ஒலிக்கத் தொடங்கிவிடும்.
மேடையில் அவ்வளவு எளிதில் 'போலப் பாடுதல்' செய்ய
முடியாத வித்தியாசமான வளமும் வசீகரமும் நிறைந்த
குரல் அவருடையது.
தனியாகவும், இணை குரலாக ஆண் பாடகரோடும்,
பெண் பாடகரோடும் எல்.ஆர்.ஈஸ்வரி இசைத்த
திரைப்பாடல்கள் இரவுக்கானவை, பகலுக்கானவை,
காலை புலர்தலுக்கானவை, மாலை கவிதலுக்கானவை,
எந்தப் பொழுதுக்குமானவை என்று வேதியியல்
வினைகளை நிகழ்த்திக்கொண்டே இருந்த காலம்,
அறுபதுகளும் எழுபதுகளும்!
தோழிபோல் வந்தார்
குழுப் பாடல்களை இசைத்துக்கொண்டிருந்த தமது
அன்னையோடு பாடல்பதிவுகளுக்குச் சென்று
கொண்டிருந்தவர், திரை இசைத் திலகம்
கே.வி.மகாதேவனால் அடையாளம் காணப்பட்டு,
பாடல்கள் வளர்த்த பயணத்தில்,
விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் ‘பாச மல’ரின்
'வாராய் என் தோழி வாராயோ' எனும் அசத்தலான
பாடலுக்குப் பின் அதிகம் பேசப்பட்டார்.
‘கறுப்புப் பணம்’ படத்தில் இடம்பெற்ற 'ஆடவரெல்லாம்
ஆட வரலாம்' பாடல் அவரது குரலின் வேறொரு வலுவைக்
காட்டியது. பின்னாளில் கேபரே வகை நடனத்துக்கான
பாடல்கள் என்றாலே ஈஸ்வரிதான் என்றாயிற்று.
‘பளிங்கினால் ஒரு மாளிகை’ (வல்லவன் ஒருவன்),
‘அதிசய உலகம்’ (கௌரவம்) என்று போகும் வரிசையில்
அவருடைய குரல்களில் இழையும் பரவசமும்,
கொண்டாட்டமும் புதிதான இழைகளில்
நெய்யப்பட்டிருக்கும்.
'குடி மகனே' (வசந்த மாளிகை) பாடலில்
‘கடலென்ன ஆழமோ..கருவிழி ஆழமோ..’ என்ற ஏற்ற
இறக்கங்களும் சேர, கொஞ்சுதலும் கெஞ்சுதலும்
சொற்களில் போதையூட்டும் வண்ணம் குழைத்தலுமாக
உயிர்த்தெழும் குரல் அது.
வேறோர் உலகில்
தொடக்கத்திலோ, இடையிலோ, நிறைவிலோ ஹம்மிங்
கலந்த அவரது பாடல்கள் வேறு உலகத்தில் கொண்டு
சேர்க்கவல்லவை. பற்றைத் துறக்கத் துடிக்கும்
ஆடவனை இவ்வுலக வாழ்க்கைக்கு ஈர்க்கும்
'இது மாலை நேரத்து மயக்கம்' (தரிசனம்) பாடலில் மோக
மயக்கத்தின் பாவங்களைக் கொட்டி நிரப்பி இருப்பார்
ஈஸ்வரி.
பணம் படைத்தவன் படத்தில் ‘மாணிக்கத் தொட்டில்
இங்கிருக்க' பாடலில் ஒரு விதம் என்றால்,
‘பவளக்கொடியிலே முத்துக்கள்' பாடலில் வேறொரு
விதமாக உருக்கி வார்த்திருப்பார் ஹம்மிங்கை.
‘என் உள்ளம் உந்தன் ஆராதனை' (ராமன் தேடிய சீதை),
‘நாம் ஒருவரை ஒருவர்' (குமரிக்கோட்டம்) பாடல்களை
எல்லாம் எழுத்தில் வடித்துவிட முடியுமா என்ன?
யேசுதாஸ் குரலின் பதத்திற்கேற்பவும் பாட முடியும்
அவருக்கு! ‘ஹலோ மை டியர் ராங் நம்பர்’ (மன்மத லீலை),
‘பட்டத்து ராணி பார்க்கும்' (சிவந்த மண்) என்று அதிரடி
பாடலைக் கொடுக்கவும் முடிந்தது.
‘காதோடு தான் நான் பாடுவேன்' (வெள்ளி விழா) என்ற
அற்புதமான மென்குரலை வழங்கிய அவரால்,
‘அடி என்னடி உலகம்' (அவள் ஒரு தொடர்கதை) என்று
உரத்துக் கேட்கவும் சாத்தியமாயிற்று.
இணையற்ற இணை
பி. பி. ஸ்ரீனிவாஸ் குரலுக்கேற்ப எத்தனை எத்தனை
பாடல்கள் ( ‘ராஜ ராஜ ஸ்ரீ’, ‘கண்ணிரண்டும் மின்ன
மின்ன’, ‘சந்திப்போமா இனி சந்திப்போமா..’).
சந்திரபாபுவோடு இணைந்து 'பொறந்தாலும்
ஆம்பளையா' (போலீஸ்காரன் மகள்) பாடலின்
சேட்டைகள், எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் மயக்கக்
குரலோடு சேர்ந்த பாடல்கள்தான் ( ‘மறந்தே போச்சு’,
‘அநங்கன் அங்கஜன்’, ‘ஆரம்பம் இன்றே ஆகட்டும்’,
‘கல்யாணம் கச்சேரி’ ) எத்தனை! பி. சுசீலாவோடு
இணைந்து இசைத்த அக்காலப் பாடல்கள்
( ‘கட்டோடு குழலாட’ - பெரிய இடத்துப் பெண்,
‘அடி போடி’ - தாமரை நெஞ்சம்,
‘தூது செல்ல’ - பச்சை விளக்கு,
‘உனது மலர்க்கொடியிலே’ - பாத காணிக்கை,
‘மலருக்குத் தென்றல்’ - எங்க வீட்டுப் பிள்ளை,
‘கடவுள் தந்த’ - இருமலர்கள்).
இவை தோழியரது வெவ்வேறு மனநிலையின்
பிரதிபலிப்புகளைக் கச்சிதமாக வார்த்த பாடல்களில்
சில. டி. எம். சவுந்திரராஜன் - எல். ஆர். ஈஸ்வரி இணை
குரல்கள், பல்வேறு ரசங்களைப் பருகத் தந்தவை.
‘கேட்டுக்கோடி உறுமி மேளம்' (பட்டிக்காடா பட்டணமா),
'சிலர் குடிப்பது போலே' (சங்கே முழங்கு),
‘மின்மினியைக் கண்மணியாய்' (கண்ணன் என் காதலன்),
‘உன் விழியும் என் வாளும்; (குடியிருந்த கோயில்),
‘அவளுக்கென்ன' (சர்வர் சுந்தரம்) என்ற பாடல்
வரிசைக்கும் முடிவில்லை.
ஆண், பெண் என இணைக் குரல்களின் தனித்தன்மை
எப்படியிருப்பினும், அவற்றுக்கு ஏற்ப இயைந்து பாடுவதில்
எல்.ஆர்.ஈஸ்வரி ஓர் இணையற்ற இணை.
கதாபாத்திரங்களின் குரல்
பரிதவிப்பின் வேதனையை, தாபத்தைச் சித்தரிக்கும்
பாடல்களுக்கு ( ‘எல்லோரும் பார்க்க' - அவளுக்கென்று
ஒரு மனம் ) உயிரும் உணர்ச்சியும் ஊட்டிய குரல்
ஈஸ்வரியுடையது.
ஆர்ப்பாட்டமான களியாட்டத்தை ( ‘இனிமை நிறைந்த’,
‘வாடியம்மா வாடி’, ‘கண்ணில் தெரிகின்ற வானம்’,
‘ர்ர்ர்ர்ர்ருக்கு மணியே..’, ) அவரால் இலகுவாக
வெளிப்படுத்த முடிந்தது. மனோரமாவுக்காக அவர் பாடிய
'பாண்டியன் நானிருக்க...' (தில்லானா மோகனாம்பாள்)
என்ற அற்புதப் பாடல் அந்தக் கதாபாத்திரத்தோடே
ஐக்கியமாகிப் போன ஒன்று.
‘குபு குபு குபு குபு நான் எஞ்சின்’
(மோட்டார் சுந்தரம் பிள்ளை) என ஏ.எல்.ராகவனோடு
இணைந்து அவர் ஓட்டிய ரயிலின் வேகம் இளமையின்
வேகம்.
ஜெயச்சந்திரனோடு இசைத்த 'மந்தார மலரே'
(நான் அவனில்லை) காதலின் தாகம். ஒரு சாதாரணப்
பூக்காரியின் அசல் குரலாகவே ஒலிக்கும், உருட்டி
எடுக்கும் ‘முப்பது பைசா மூணு முழம்'!
பல்வேறு இசையமைப்பாளர்களுடைய இசையின்
பொழிவில் எல். ஆர். ஈஸ்வரியின் குரல் தனித்தும்,
இணைந்தும் கொடிகட்டிப் பறந்த அந்த ஆண்டுகள்,
ரசிக உள்ளத்தின் விழாக் காலங்கள்.
தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று வெவ்வேறு
மொழியிலும் இன்றும் கொண்டாடப்படுவது அவரின்
குரல்.
-
‘எல்லாருக்குமான’ ஈஸ்வரி
ஒரு கட்டத்தில் இறையுணர்வுத் தனிப்பாடல்களில்
வேகமாக ஒலிக்கத் தொடங்கிய அவரது குரலில்
பதிவான கற்பூர நாயகியேவும், மாரியம்மாவும்,
செல்லாத்தாவும் இப்போதும் எண்ணற்ற சாதாரண
மக்களின் உள்ளத்தைக் கவர்ந்த பாடல்களாகத்
திகழ்கின்றன.
கடவுள் நம்பிக்கை அற்றோரையும் ஈர்க்கும் இவ்வகைப்
பாடல்கள், மத வெறிக்கு அப்பாற்பட்டது இந்த மண்,
இந்த மக்கள் என்ற இயல்பைத் திரும்பத் திரும்ப
நினைவூட்டிக் கொண்டிருப்பவை.
அதற்காகத் தான் ‘எல்லார் ஈஸ்வரி’ என்று பொதுவான
பெயரிட்டார்கள் என்று ஒருமுறை அவரே சொன்னதாகப்
படித்த நினைவு.
முறைப்படியான சங்கீதப் பயிற்சி இல்லாமலே மகத்தான
இசையைச் சலிக்காத குரலில் சளைக்காமல் வழங்கி
இருக்கும் ஈஸ்வரி எல்லாக் காலங்களுக்குமானவர்.
இனிய வாழ்த்துக்கள் அவரது எண்பது வயதுக்கு!
அடுத்து நூற்றாண்டைக் கொண்டாடுவதற்கு!
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடிக்கு அருகே
இளையான்குடியைச் சேர்ந்த அந்தோணி தேவராஜ்,
ரெஜினாமேரி நிர்மலா தம்பதியின் மூத்த மகளாக
சென்னையில் பிறந்தார் ஈஸ்வரி.
இவருடைய தாயார் எம்.ஆர்.நிர்மலா ஜெமினி
ஸ்டுடியோவில் குழுப்பாடகியாக கலை வாழ்க்கையைத்
தொடங்கியவர். எழும்பூரில் உள்ள மாநிலப் பெண்கள்
உயர்நிலைப் பள்ளியில் படித்தவர் ஈஸ்வரி.
இளம் வயதிலேயே தந்தையை இழந்த எல்.ஆர்.ஈஸ்வரி
தனது குரலால் குடும்பத்தைத் தூக்கி நிறுத்தினார்.
அமல்ராஜ் என்ற தம்பியும், எல்.ஆர்.அஞ்சலி என்ற தங்கையும் இவருக்கு உண்டு.
படங்கள் உதவி: ஞானம்
நன்றி- இந்து தமிழ் திசை
'சிலர் குடிப்பது போலே' (சங்கே முழங்கு),
‘மின்மினியைக் கண்மணியாய்' (கண்ணன் என் காதலன்),
‘உன் விழியும் என் வாளும்; (குடியிருந்த கோயில்),
‘அவளுக்கென்ன' (சர்வர் சுந்தரம்) என்ற பாடல்
வரிசைக்கும் முடிவில்லை.
ஆண், பெண் என இணைக் குரல்களின் தனித்தன்மை
எப்படியிருப்பினும், அவற்றுக்கு ஏற்ப இயைந்து பாடுவதில்
எல்.ஆர்.ஈஸ்வரி ஓர் இணையற்ற இணை.
கதாபாத்திரங்களின் குரல்
பரிதவிப்பின் வேதனையை, தாபத்தைச் சித்தரிக்கும்
பாடல்களுக்கு ( ‘எல்லோரும் பார்க்க' - அவளுக்கென்று
ஒரு மனம் ) உயிரும் உணர்ச்சியும் ஊட்டிய குரல்
ஈஸ்வரியுடையது.
ஆர்ப்பாட்டமான களியாட்டத்தை ( ‘இனிமை நிறைந்த’,
‘வாடியம்மா வாடி’, ‘கண்ணில் தெரிகின்ற வானம்’,
‘ர்ர்ர்ர்ர்ருக்கு மணியே..’, ) அவரால் இலகுவாக
வெளிப்படுத்த முடிந்தது. மனோரமாவுக்காக அவர் பாடிய
'பாண்டியன் நானிருக்க...' (தில்லானா மோகனாம்பாள்)
என்ற அற்புதப் பாடல் அந்தக் கதாபாத்திரத்தோடே
ஐக்கியமாகிப் போன ஒன்று.
‘குபு குபு குபு குபு நான் எஞ்சின்’
(மோட்டார் சுந்தரம் பிள்ளை) என ஏ.எல்.ராகவனோடு
இணைந்து அவர் ஓட்டிய ரயிலின் வேகம் இளமையின்
வேகம்.
ஜெயச்சந்திரனோடு இசைத்த 'மந்தார மலரே'
(நான் அவனில்லை) காதலின் தாகம். ஒரு சாதாரணப்
பூக்காரியின் அசல் குரலாகவே ஒலிக்கும், உருட்டி
எடுக்கும் ‘முப்பது பைசா மூணு முழம்'!
பல்வேறு இசையமைப்பாளர்களுடைய இசையின்
பொழிவில் எல். ஆர். ஈஸ்வரியின் குரல் தனித்தும்,
இணைந்தும் கொடிகட்டிப் பறந்த அந்த ஆண்டுகள்,
ரசிக உள்ளத்தின் விழாக் காலங்கள்.
தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று வெவ்வேறு
மொழியிலும் இன்றும் கொண்டாடப்படுவது அவரின்
குரல்.
-
‘எல்லாருக்குமான’ ஈஸ்வரி
ஒரு கட்டத்தில் இறையுணர்வுத் தனிப்பாடல்களில்
வேகமாக ஒலிக்கத் தொடங்கிய அவரது குரலில்
பதிவான கற்பூர நாயகியேவும், மாரியம்மாவும்,
செல்லாத்தாவும் இப்போதும் எண்ணற்ற சாதாரண
மக்களின் உள்ளத்தைக் கவர்ந்த பாடல்களாகத்
திகழ்கின்றன.
கடவுள் நம்பிக்கை அற்றோரையும் ஈர்க்கும் இவ்வகைப்
பாடல்கள், மத வெறிக்கு அப்பாற்பட்டது இந்த மண்,
இந்த மக்கள் என்ற இயல்பைத் திரும்பத் திரும்ப
நினைவூட்டிக் கொண்டிருப்பவை.
அதற்காகத் தான் ‘எல்லார் ஈஸ்வரி’ என்று பொதுவான
பெயரிட்டார்கள் என்று ஒருமுறை அவரே சொன்னதாகப்
படித்த நினைவு.
முறைப்படியான சங்கீதப் பயிற்சி இல்லாமலே மகத்தான
இசையைச் சலிக்காத குரலில் சளைக்காமல் வழங்கி
இருக்கும் ஈஸ்வரி எல்லாக் காலங்களுக்குமானவர்.
இனிய வாழ்த்துக்கள் அவரது எண்பது வயதுக்கு!
அடுத்து நூற்றாண்டைக் கொண்டாடுவதற்கு!
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடிக்கு அருகே
இளையான்குடியைச் சேர்ந்த அந்தோணி தேவராஜ்,
ரெஜினாமேரி நிர்மலா தம்பதியின் மூத்த மகளாக
சென்னையில் பிறந்தார் ஈஸ்வரி.
இவருடைய தாயார் எம்.ஆர்.நிர்மலா ஜெமினி
ஸ்டுடியோவில் குழுப்பாடகியாக கலை வாழ்க்கையைத்
தொடங்கியவர். எழும்பூரில் உள்ள மாநிலப் பெண்கள்
உயர்நிலைப் பள்ளியில் படித்தவர் ஈஸ்வரி.
இளம் வயதிலேயே தந்தையை இழந்த எல்.ஆர்.ஈஸ்வரி
தனது குரலால் குடும்பத்தைத் தூக்கி நிறுத்தினார்.
அமல்ராஜ் என்ற தம்பியும், எல்.ஆர்.அஞ்சலி என்ற தங்கையும் இவருக்கு உண்டு.
படங்கள் உதவி: ஞானம்
நன்றி- இந்து தமிழ் திசை
“அம்மம்மா கேளடி தோழி
சொன்னானே ஆயிரம் சேதி
கண்ணாலே வந்தது பாதி
சொல்லாமல் வந்தது மீதி”
பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முந்திய இரவுகளில் வானொலிக்கூடத்தில் தனிமையில், அந்த ஏகாந்தத்தை அனுபவித்துக் கொண்டே அடிக்கடி ஒலிபரப்பிய இந்தப் பாடலை நினைத்துக் கொண்டேன் இன்று. காலையில் வானொலி நிகழ்ச்சி படைக்கும் போதும் இந்தப் பாடலையே L.R.ஈஸ்வரிக்கான பிறந்த நாள் பாடலாக ஒலிபரப்பி நேயர்களின் தெரிவுகளுக்கும் வழி விட்டேன்.
லூர்து மேரி ராஜேஸ்வரி என்ற L.R.ஈஸ்வரியின் பிறந்த நாள் இன்று.
ஒரு பக்கம் P.சுசீலாத்தனமான முந்தானையை இழுத்து மூடியது போல அடக்கம் தொனிக்கும் குரல், இன்னொரு பக்கம் உஷா உதூப் போல துள்ளிசையில் தெறிக்கும் குரல் இப்படியாகப்பட்ட இரு வேறு பரிணாமங்களில் எல்.ஆர்.ஈஸ்வரியைத் தாண்டி இன்னொருவரின் உச்சத்தைக் காண முடியவில்லை. அவ்வளவு தூரம் பன்முகம் கொண்ட பாடகி இவர். அது மட்டுமா?
ஆடி மாசம் அம்மனுக்குக் கூழ் ஊத்துற நினைப்போடு குழாய் கட்டி அம்மன் பாடல்கள் முந்திக் கொள்ளும். சந்திக்குச் சந்தி “கற்பூர நாயகியே கனகவல்லி” எல்.ஆர்.ஈஸ்வரிகள் பாடிக் கொண்டிருப்பார்கள்.
பக்திப் பாடல் மரபில் சீர்காழி கோவிந்தராஜனைத் தொடர்ந்து எல்.ஆர்.ஈஸ்வரியையும் சேர்த்து விட்டுத் தான் மற்றவர்கள் வரிசையில் வரக் கூடிய அளவுக்கு பக்தி இலக்கியத்திலும் புகழோச்சியவர்.
கே.பாலசந்தரின் இரண்டு படங்கள்.
ஒன்று வி.குமார் இசையமைத்த “வெள்ளி விழா”, இன்னொன்று எம்.எஸ்.விஸ்வநாதன் இசை கொடுத்த “மன்மத லீலை”.
“காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் உறவாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்”
என்று கணவனின் நெஞ்சத் தொட்டிலில் முகம் சாய்த்து ஆரும், ஊரும் கேளா வண்ணம் “வெள்ளி விழா”வில் பாடும் இந்தக் குரல் தான்
“ஹல்லோ....
பூவை என்னைப் பார்த்தால் காதல் வரக்கூடும்
பூஜையறை பார்க்கும் ஆசை வரக்கூடும்”
என்று தொலைபேசி வழியே சல்லாபம் கொட்டக் கிசிகிசுப்பார். இந்த மாதிரிக் காட்சியின் திறன் அறிந்து தன் குரலின் தொனியை மாற்றி, பாடலைக் கேட்கும் போதே நம் மனக் கண்ணில் அந்தச் சூழலைக் கொண்டு வருவது தான் எப்பேர்ப்பட்ட வல்லமை.
அது எல்.ஆர்.ஈஸ்வரியிடம் இருக்கிறது.
“இனிமை நிறைந்த உலகம் இருக்கு
இதிலே உனக்குக் கவலை எதுக்கு
Love Birds.......”
அப்படியே ஒரு ஆர்ப்பாட்டமான மன நிலைக்குத் தூக்கிக் கொண்டு போய் வைத்து விடுவார். ஆரம்ப இசை கூட இல்லாமல் நேரே அந்தத் துள்ளல் உணர்வைச் சுமக்க வேண்டிய தார்ப்பரியத்தை உணர்ந்து அப்படியே வெகு இலகுவாகக் கடத்தி விடுவார் நமக்கும்.
கூடப் பாடிய ஆனானப்பட்ட எஸ்.பி.பியே ஆளை விடுங்கய்யா எல்.ஆர்.ஈஸ்வரி போல இவ்வளவு தூரம் பாட யாரால் முடியும் என்று சரணாகதி அடைந்து விடுவார். அந்த ஆங்கில உச்சரிப்பில் பக்கா இங்கிலீஷ்காரி இந்த எல்.ஆர்.ஈஸ்வரி.
“தேடினேன் வந்தது நாடினேன் தந்தது” ஊட்டி வரை உறவு படத்துக்காக பி.சுசீலா பாடியது எல்.ஆர்.ஈஸ்வரிக்குத் தான் போய் சேர வேண்டியது ஆனால் அந்தச் சூழலில் அவர் இல்லாததால் சுசீலாவுக்குப் போனதாக ஒரு செய்தி. அந்தப் பாடலில் எல்.ஆர்.ஈஸ்வரிகான நளினத்தை உணரலாம். ஊட்டி வரை உறவு படத்தில் பி.சுசீலாத்தனமான பாட்டு “ராஜ ராஜஶ்ரீ” பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாடியது புதுமை.
“எலந்தப் பழம்....எலந்தப் பழம்” இந்தப் பாட்டு அந்த நாளில் கேட்டால் சரஸ்வதிப் பெரியம்மா நமுட்டுச் சிரிப்பு சிரிப்பார். தான் பள்ளிச் சிறுமியாக இருந்த காலத்தில் வந்தது என்று கொள்ளைப் பிரியத்தோடு கேட்பார்.
கே.வி.மகாதேவன் இசையில் பின்னாளில் சர்வசாதாரணமாக அங்கீகரிக்கப்பட்டாலும் வெளிவந்த காலத்தில் ஒரு ஆபாசக் கிளப்பி என்று பொங்கித் தீர்த்ததாக ஊர்ப் பெருசுகள் சொல்வார்கள். எல்.ஆர்.ஈஸ்வரிக்கு மிகப் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது இந்தப் பாட்டு. “வாராய் என் தோழி வாராயோ” கூட ஆரம்ப கால அடையாளம் இவருக்கு.
“பட்டத்து ராணி பார்க்கும் பார்வை” இல்லாத் பாட்டுப் போட்டி மேடைகளைக் காட்ட முடியுமா? சிவந்த மண் படம் வெளிவந்து இந்த ஆண்டோடு ஐம்பது ஆண்டுகள் கழித்தும் இந்தப் பாட்டு நினைவில் நிறைந்திருக்க அந்தச் சாட்டையடி வாங்கிக் கொண்டே உதறும் குரலும், நளினமான பாவங்களும் கொடுத்த எல்.ஆர். ஈஸ்வரி தானே முக்கிய பங்காளி?
இதே மாதிரி “ஆடவரலாம் ஆடவரெல்லாம்”, “முத்துக் குளிக்க வாரீகளா” என்று துள்ளிசை ஒரு பக்கம்,
“ பேசாத கண்ணும்
பேசுமா......
பெண் வேண்டுமா
பார்வை போதுமா”
என்னவொரு நக்கல் தொனியைக் கொடுப்பார் ஈஸ்வரி, பாவம் T.M.செளந்தரராஜன் தன் பாட்டுக்கு வெகு கர்ம சிரத்தையாக “பார்வை ஒன்றே போதுமே” பாடிக் கொண்டிருக்கையில்.
இல்லற சுகத்தை இனிமை தரும் பாட்டாய் இன்னொன்று “இது மாலை நேரத்து மயக்கம்”.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் வழியாக ஏராளம் நன் முத்துகள் வித விதமாக எல்.ஆர்.ஈஸ்வரிக்குக் கிடைத்தது.
அதே நேரம் “அம்மனோ சாமியோ” என்று
“நான்” படத்தில் பக்கா துள்ளிசை ஒன்றைக் கொடுத்துத் தனியாக இசையமைக்கச் சென்ற
T.K.ராமமூர்த்தி எல்.ஆர்.ஈஸ்வரிக்கு இன்று வரை ஒரு முகவரிப் பாடலாகவும் ஆக்கி விட்டார்.
“அடி என்ன உலகம் இதில் எத்தனை கலகம்”
ஒரு படத்தின் சாரத்தை அசரீரியாகக் கொண்டு வரும் நுட்பம் அவள் ஒரு தொடர்கதை படத்தின் வழியே ஈஸ்வரியின் குரலாய், அது போலவே மூன்று முடிச்சில் “அவள் ஒரு கதாநாயகி”. அது போல எழுபதுகளில் ஒரு அரிய முத்து “நிலவே நீ சாட்சி” படத்தில் மெல்லிசை மன்னரோடு இவர் களியாட்டம் போட்ட “நீ நினைத்தால் ஏதேதோ நடக்கும்”
அந்தக் காலத்து மார்டன் தியேட்டர்ஸ், விஜயலலிதா எல்லாம் நினைப்புக்கு வந்தால் எல்.ஆர்.ஈஸ்வரியும் கூட வருவார். உதாரணத்துக்கு “வல்லவன் ஒருவன்” படத்தில்
“பளிங்கினால் ஒரு மாளிகை” பாட்டில் எப்பேர்ப்பட்ட கவர்ச்சிகரமான வில்லத்தனம் காட்டுகிறது இந்த ஈஸ்வரிக் குரல்.
இன்னோர் பக்கம்
“அன்னை போல என்னைக் காத்த
அன்பு தெய்வமே.....”
என்று தானும் உருகி நம்மையும் உருக்கி விடுகிறாரே?
அறுபது ஆண்டுகளைக் கடந்து பாடிக் கொண்டிருப்பவரை ஒரு கட்டுரையின் கொள்ளளவில் அடக்க முடியாதெனினும் ஆசை தீர நினைவில் நின்றவைகள அவரின் அகவை எண்பதில் நினைத்துப் பார்த்து இசையால் வாழ்த்துகிறேன்.
இதுதான் சுகமோ இன்னும் வருமோ
இளமை தருமோ மயக்கம் வருமோ...
அம்மம்மா கேளடி தோழி....
இலங்கை வானொலியின் எண்பதுகளின் இரவின் மடிகளில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடுவது போன்றொரு அசரீரி காதில் கேட்கிறது.
எல்.ஆர்.ஈஸ்வரி நம் எல்லார் ஈஸ்வரி.
கானா பிரபா
07.12.2019
தமிழ்முரசு- ஆஸ்திரேலியா
“எலந்தப் பழம்....எலந்தப் பழம்” இந்தப் பாட்டு அந்த நாளில் கேட்டால் சரஸ்வதிப் பெரியம்மா நமுட்டுச் சிரிப்பு சிரிப்பார். தான் பள்ளிச் சிறுமியாக இருந்த காலத்தில் வந்தது என்று கொள்ளைப் பிரியத்தோடு கேட்பார்.
கே.வி.மகாதேவன் இசையில் பின்னாளில் சர்வசாதாரணமாக அங்கீகரிக்கப்பட்டாலும் வெளிவந்த காலத்தில் ஒரு ஆபாசக் கிளப்பி என்று பொங்கித் தீர்த்ததாக ஊர்ப் பெருசுகள் சொல்வார்கள். எல்.ஆர்.ஈஸ்வரிக்கு மிகப் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது இந்தப் பாட்டு. “வாராய் என் தோழி வாராயோ” கூட ஆரம்ப கால அடையாளம் இவருக்கு.
“பட்டத்து ராணி பார்க்கும் பார்வை” இல்லாத் பாட்டுப் போட்டி மேடைகளைக் காட்ட முடியுமா? சிவந்த மண் படம் வெளிவந்து இந்த ஆண்டோடு ஐம்பது ஆண்டுகள் கழித்தும் இந்தப் பாட்டு நினைவில் நிறைந்திருக்க அந்தச் சாட்டையடி வாங்கிக் கொண்டே உதறும் குரலும், நளினமான பாவங்களும் கொடுத்த எல்.ஆர். ஈஸ்வரி தானே முக்கிய பங்காளி?
இதே மாதிரி “ஆடவரலாம் ஆடவரெல்லாம்”, “முத்துக் குளிக்க வாரீகளா” என்று துள்ளிசை ஒரு பக்கம்,
“ பேசாத கண்ணும்
பேசுமா......
பெண் வேண்டுமா
பார்வை போதுமா”
என்னவொரு நக்கல் தொனியைக் கொடுப்பார் ஈஸ்வரி, பாவம் T.M.செளந்தரராஜன் தன் பாட்டுக்கு வெகு கர்ம சிரத்தையாக “பார்வை ஒன்றே போதுமே” பாடிக் கொண்டிருக்கையில்.
இல்லற சுகத்தை இனிமை தரும் பாட்டாய் இன்னொன்று “இது மாலை நேரத்து மயக்கம்”.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் வழியாக ஏராளம் நன் முத்துகள் வித விதமாக எல்.ஆர்.ஈஸ்வரிக்குக் கிடைத்தது.
அதே நேரம் “அம்மனோ சாமியோ” என்று
“நான்” படத்தில் பக்கா துள்ளிசை ஒன்றைக் கொடுத்துத் தனியாக இசையமைக்கச் சென்ற
T.K.ராமமூர்த்தி எல்.ஆர்.ஈஸ்வரிக்கு இன்று வரை ஒரு முகவரிப் பாடலாகவும் ஆக்கி விட்டார்.
“அடி என்ன உலகம் இதில் எத்தனை கலகம்”
ஒரு படத்தின் சாரத்தை அசரீரியாகக் கொண்டு வரும் நுட்பம் அவள் ஒரு தொடர்கதை படத்தின் வழியே ஈஸ்வரியின் குரலாய், அது போலவே மூன்று முடிச்சில் “அவள் ஒரு கதாநாயகி”. அது போல எழுபதுகளில் ஒரு அரிய முத்து “நிலவே நீ சாட்சி” படத்தில் மெல்லிசை மன்னரோடு இவர் களியாட்டம் போட்ட “நீ நினைத்தால் ஏதேதோ நடக்கும்”
அந்தக் காலத்து மார்டன் தியேட்டர்ஸ், விஜயலலிதா எல்லாம் நினைப்புக்கு வந்தால் எல்.ஆர்.ஈஸ்வரியும் கூட வருவார். உதாரணத்துக்கு “வல்லவன் ஒருவன்” படத்தில்
“பளிங்கினால் ஒரு மாளிகை” பாட்டில் எப்பேர்ப்பட்ட கவர்ச்சிகரமான வில்லத்தனம் காட்டுகிறது இந்த ஈஸ்வரிக் குரல்.
இன்னோர் பக்கம்
“அன்னை போல என்னைக் காத்த
அன்பு தெய்வமே.....”
என்று தானும் உருகி நம்மையும் உருக்கி விடுகிறாரே?
அறுபது ஆண்டுகளைக் கடந்து பாடிக் கொண்டிருப்பவரை ஒரு கட்டுரையின் கொள்ளளவில் அடக்க முடியாதெனினும் ஆசை தீர நினைவில் நின்றவைகள அவரின் அகவை எண்பதில் நினைத்துப் பார்த்து இசையால் வாழ்த்துகிறேன்.
இதுதான் சுகமோ இன்னும் வருமோ
இளமை தருமோ மயக்கம் வருமோ...
அம்மம்மா கேளடி தோழி....
இலங்கை வானொலியின் எண்பதுகளின் இரவின் மடிகளில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடுவது போன்றொரு அசரீரி காதில் கேட்கிறது.
எல்.ஆர்.ஈஸ்வரி நம் எல்லார் ஈஸ்வரி.
கானா பிரபா
07.12.2019
தமிழ்முரசு- ஆஸ்திரேலியா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|