புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவளை ராஜாவின் கர்வம் Poll_c10தவளை ராஜாவின் கர்வம் Poll_m10தவளை ராஜாவின் கர்வம் Poll_c10 
20 Posts - 65%
heezulia
தவளை ராஜாவின் கர்வம் Poll_c10தவளை ராஜாவின் கர்வம் Poll_m10தவளை ராஜாவின் கர்வம் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவளை ராஜாவின் கர்வம் Poll_c10தவளை ராஜாவின் கர்வம் Poll_m10தவளை ராஜாவின் கர்வம் Poll_c10 
62 Posts - 63%
heezulia
தவளை ராஜாவின் கர்வம் Poll_c10தவளை ராஜாவின் கர்வம் Poll_m10தவளை ராஜாவின் கர்வம் Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
தவளை ராஜாவின் கர்வம் Poll_c10தவளை ராஜாவின் கர்வம் Poll_m10தவளை ராஜாவின் கர்வம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தவளை ராஜாவின் கர்வம் Poll_c10தவளை ராஜாவின் கர்வம் Poll_m10தவளை ராஜாவின் கர்வம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவளை ராஜாவின் கர்வம்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 12, 2021 2:10 pm

மரங்கள் அடர்ந்த குளத்தூரில் மிகப் பெரிய குளம் ஒன்று இருந்தது. ஆண்டு முழுவதும் அந்தக் குளத்தில் தண்ணீர் வற்றவே வற்றாது. அதனால் ஊர் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தாலும், இரவு நேரத்தில் அவர்களின் தூக்கம் தொலைந்து போனது. காரணம், தவளைகளின் இரைச்சல். மழைக் காலம் என்றால் இரைச்சல் அதிகமாகிவிடும்.

அந்த ஊரே தவளைகளின் சாம்ராஜ்யமாக இருந்தது. இந்தக் குளத்தூருக்கே ராஜா என்று ஒரு தவளை தனக்குத் தானே முடிசூட்டிக்கொண்டது.
அடிக்கடி தவளைகளைக் கூப்பிட்டு கூட்டம் நடத்தும் தவளை ராஜா. “நண்பர்களே, நம் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதில் மகிழ்ச்சி. இந்தக் குளம் வற்றாமல் இருப்பதற்குக் காரணம், மழை. நாம் போடும் ‘குர்...குர்...’ சத்தத்தால்தான் மழை வருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டது.
“ஆமாம் ராஜா...ஆமாம் ராஜா...” என்று எல்லாத் தவளைகளும் குரல் கொடுத்தன.

அந்த வழியே வந்த நரி ஒன்று, தவளை ராஜா சொன்னதைக் கேட்டது. ‘என்னது, தவளைகள் கத்தினால்தான் மழை வருமா? புதுக் கதையாக இருக்கிறதே! ஒருவேளை இந்தத் தவளை ராஜா சொல்வது உண்மையாக இருக்குமோ? இல்லாவிட்டால், இப்படி உறுதியாக எப்படிச் சொல்ல முடியும்? யாரிடமாவது இந்தச் சந்தேகத்தைக் கேட்டு, தெளிவு படுத்திக்கொள்ளாவிட்டால் என் தலையே வெடித்துவிடும்’ என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டது நரி.
உடனே காட்டுக்குள் சென்றது. வழியில் ஒரு குதிரை தென்பட்டது.
“குதிரை அண்ணா, எனக்கு ஒரு சந்தேகம்...”
“என்ன சந்தேகம்?”
“தவளைகள் குர்குர் என்று கத்துவதால்தான் மழையே வருகிறதா?”
“அப்படியா! எனக்குத் தெரியாது. நேரம் ஆகிறது. நான் போறேன்” என்று வேகமாக ஓடிவிட்டது குதிரை.

தொடருகிறது ---------------
நன்றி கு அசோகன் /தமிழ் ஹிந்து



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 12, 2021 2:17 pm

-----------தொடர்ச்சி 2
சிறிது தூரம் சென்றவுடன் எருமைக் கூட்டம் வந்தது. குதிரையிடம் கேட்ட அதே கேள்வியை ஓர் எருமையிடம் கேட்டது நரி.
“என் மேல் மழை பெய்யுதான்னுகூட எனக்குத் தெரியாது. இதுல தவளை கத்தி மழை பெய்யுதா,கத்தாமல் இருக்கும் போது மழை பெய்யுதா என்ற கவலை எல்லாம் எனக்கு எதுக்கு?” என்று சொல்லிவிட்டு, கிளம்பியது அந்த எருமை.

காட்டில் நீண்ட தூரம் நடந்ததால் நரிக்குக் களைப்பு ஏற்பட்டது. ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கியது. அங்கே பூனை ஒன்று குட்டிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தது.
“என்ன பூனை, ஒரே உற்சாகமாக இருக்கறே? நீ புத்திசாலி. என் சந்தேகத்தைக் கொஞ்சம் தீர்த்து வைக்கறீயா?” என்று கேட்டது நரி.
“உனக்குச் சந்தேகமா? சரி கேள். தெரிந்தால் பதில் சொல்கிறேன். இல்லையென்றால் குட்டிகளோடு விளையாடறேன்” என்று அந்தப் பூனை அவசரப்படுத்தியது.

“தவளைகள் கத்தினால்தான் மழையே வருமா?”
“அப்படியா! இது என்ன புதுக் கதையா இருக்கு! எங்க இனம்கூட கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருட்டாகிவிடும்னு மக்கள் பேசிக்கிறாங்களே...அது உண்மையா?” என்று நரியை மடக்கியது பூனை.
‘நான் ஒரு சந்தேகம் கேட்டால் இந்தப் பூனை ஒரு சந்தேகம் கேட்குதே’ என்று நினைத்த நரி, அங்கிருந்து வேகமாகச் சென்றது.

சிறிது தூரத்தில் நரியின் கண்களில் பெரிய உருவங்கள் தென்பட்டன. ‘அடடா! யானைக் கூட்டம் வருது! சந்தேகத்தைக் கேட்டுப் பார்ப்போம்’ நினைத்தது.
யானைகளின் உடல் முழுவதும் புழுதியாக இருந்தது.
“குளித்து நாளாச்சு போல! உடம்பெல்லாம் ஒரே புழுதியா இருக்கே?” என்று பேச்சுக் கொடுத்தது நரி.
“ஆமாம், குளிப்பதற்குத் தண்ணீரைத் தேடித்தான் போய்க்கொண்டிருக்கிறோம். பெரிய குளம் இருந்தால் சொல்லேன்” என்று கேட்டது ஒரு யானை.
“சொல்றேன். அதுக்கு முன்னால எனக்கொரு சந்தேகம். அதுக்கு பதில் சொன்னா குளத்துக்கு நானே வழி காட்டுறேன்” என்றது நரி.
“என்ன சந்தேகம்? சீக்கிரமா கேள்.உடம்பெல்லாம் அரிக்குது” என்றது யானை.

தொடருகிறது--------



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 12, 2021 2:33 pm

-------தொடர்ச்சி

தவளை ராஜாவின் கர்வம் 631946
“தவளைகளுடைய சத்தத்தால்தான் மழை வருகிறதா?”
“யார் சொன்னது? மேகம் திரண்டால் மழை வரும். தவளைக்கும் மழைக்கும் தொடர்பில்லை. ஆனால், மழையைக் கண்டால் தவளைகள் குஷியில் அதிகமாகச் சத்தம் போடும். சரி, குளத்தைக் காட்டு” என்றது யானை.

பதில் கிடைத்தும் நரிக்குத் திருப்தி இல்லை. அனுபவப்பூர்வமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பியது.
“இதோ வழி காட்டுறேன், வாங்க” என்று நரி முன்னால் சென்றது.
வழியில் பாம்புகள் ஊர்ந்துகொண்டிருந்தன.
“பாம்புகளே, எங்கே போறீங்க?“ என்றது நரி.
“பெரிய குளமா தேடிப் போறோம்” என்றது ஒரு பாம்பு.
“அப்படியா! யானை அண்ணன் அங்கேதான் போறார். நீங்களும் வாங்க நான் வழி காட்டுறேன்” என்று பாம்புக் கூட்டத்தையும் சேர்த்துக்கொண்டது.

சற்று நேரத்தில் பெரிய குளத்தைக் கண்டது யானைக் கூட்டம். சந்தோஷத்தில் பிளிறியது. பாம்பு கூட்டம் உஸ்... உஸ்... என்று சீறியது.
ஒரு கரையில் யானைகள் குளத்திற்குள் இறங்கின. இன்னொரு கரையில் பாம்புகள் இறங்கின. அவற்றைக் கண்ட தவளைகள் பயத்தில் அலறின.

“ஓடுங்க... ஓடுங்க... ஆபத்து” என்று எச்சரிக்கை செய்தது தவளை ராஜா.
தவளைகளின் சத்தத்தைக் கேட்டு, பாம்புகளுக்கு உற்சாகமாகிவிட்டது.
“தவளைகளே, சத்தம் போடாமல் தப்பிச் செல்லுங்க. இல்லையென்றால் பாம்புகளுக்கு இரையாகிவிடுவீங்க” என்றது தவளை ராஜா.

“ராஜா, சத்தம் போட்டால்தானே மழை வரும்னு சொன்னீங்க? இப்ப சத்தம் போடாதீங்கன்னு சொல்றீங்களே?” என்று கேட்டது ஒரு சுட்டித் தவளை.
“உயிர் முக்கியமா? மழை முக்கியமா? முதலில் உயிர் பிழைக்க உங்கள் வாயை மூடிக்கொண்டு தாவி ஓடுங்கள்” என்று கட்டளையிட்டது தவளை ராஜா.
தவளைகள் அனைத்தும் மௌனமாக இடத்தைக் காலி செய்தன. சட்டென்று மழை கொட்ட ஆரம்பித்தது.

தூரத்தில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த நரி, “அப்பாடா! என் சந்தேகம் தீர்ந்தது. தவளைகள் சத்தம் போடா விட்டாலும் மழை பெய்யும் என்பதைத் தெரிந்துகொண்டேன். அதே நேரம் தவளை ராஜாவின் கர்வத்தையும் தந்திரத்தால் அடக்கிவிட்டேன்” என்ற பெருமிதத்துடன் காட்டை நோக்கி நடந்தது.
---------------------------------------




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 12, 2021 4:39 pm

நுதலும் தன் வாயால் கெடும்...!
-
கதை... தவளை ராஜாவின் கர்வம் 3838410834
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 18, 2021 11:40 pm

இந்தக் கதையும் நான் என் வீடியோவில் சொல்லி இருக்கிறேன் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக