புதிய பதிவுகள்
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
JGNANASEHAR | ||||
Geethmuru | ||||
Barushree | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (97 - 100 )
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (37 - 39 )
37 . வாங்க, ஆட்டோவில் போகலாம்!
நம்ம முத்து மக்களே!
ஆட்டோ நண்பர் வந்தாரே!
கூப்பிட்ட உடனே
வீட்டின்முன் நிற்பாரே!
பள்ளிக்கூடம் கொண்டுபோய்
நம்மையும் சேர்ப்பாரே!
பள்ளி முடிந்து வீட்டுக்கும்
கொண்டுவந்து சேர்ப்பாரே!
ஆட்டோ நண்பரே!
நம்ம ஆட்டோ நண்பரே!
38 .வருதே இரயிலு!
வருதே இரயிலு!
வருதே இரயிலு!
இருப்புப் பாதையில்
வருதே இரயிலு!
சனங்கள் நிரம்பிய
அழகிய இரயிலு இது!
புகையை உமிழும்
நல்ல இரயிலு இது!
மக்கள் மெச்சும்
அழகான இரயில் இது!
மக்கள் விரும்பும்
உன்னத இரயில் இது!
கூகூ…. என்று
கூவும் இரயில் இது!
மக்கள் மெச்சும்
அழகு இரயில் இது!
வருதே இரயிலு!
வருதே இரயிலு!
39 . அழகு வண்ணங்கள் !
அழகு அழகான வண்ணங்கள்!
வாவா அவற்றைத் தெரிந்து கொள்ளலாம்!
காக்கையின் நிறம்பார் அதுவே
கறுப்பு கறுப்பு!
கோழியின் நிறமே சிவப்பு!
சிவப்பு! அது சிவப்பு!
மரங்கள் செடிகள் இவற்றின் நிறம்
பச்சை ! அது பச்சை!
மேகத்தின் நிறம் என்ன?
வெள்ளை! அது வெள்ளை!
பூக்களின் நிறமே மஞ்சள்!
மஞ்சள் ! அது மஞ்சள்!
ஆரஞ்சுப் பழத்தின் நிறத்தைப் பார்!
ஆரஞ்சு! அது ஆரஞ்சு!
வானத்தின் நிறம்தான் நீலம்
நீலம் ! அது நீலம்!
காமன் வில்லின் நிறம் பார்!
ஏழுவண்ணம்! அது ஏழுவண்ணம்!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன். கன்னட ஒலி மூலம் :
infobells.com & KidsTVKannada)
***
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (37 - 39 )
37 . வாங்க, ஆட்டோவில் போகலாம்!
நம்ம முத்து மக்களே!
ஆட்டோ நண்பர் வந்தாரே!
கூப்பிட்ட உடனே
வீட்டின்முன் நிற்பாரே!
பள்ளிக்கூடம் கொண்டுபோய்
நம்மையும் சேர்ப்பாரே!
பள்ளி முடிந்து வீட்டுக்கும்
கொண்டுவந்து சேர்ப்பாரே!
ஆட்டோ நண்பரே!
நம்ம ஆட்டோ நண்பரே!
38 .வருதே இரயிலு!
வருதே இரயிலு!
வருதே இரயிலு!
இருப்புப் பாதையில்
வருதே இரயிலு!
சனங்கள் நிரம்பிய
அழகிய இரயிலு இது!
புகையை உமிழும்
நல்ல இரயிலு இது!
மக்கள் மெச்சும்
அழகான இரயில் இது!
மக்கள் விரும்பும்
உன்னத இரயில் இது!
கூகூ…. என்று
கூவும் இரயில் இது!
மக்கள் மெச்சும்
அழகு இரயில் இது!
வருதே இரயிலு!
வருதே இரயிலு!
39 . அழகு வண்ணங்கள் !
அழகு அழகான வண்ணங்கள்!
வாவா அவற்றைத் தெரிந்து கொள்ளலாம்!
காக்கையின் நிறம்பார் அதுவே
கறுப்பு கறுப்பு!
கோழியின் நிறமே சிவப்பு!
சிவப்பு! அது சிவப்பு!
மரங்கள் செடிகள் இவற்றின் நிறம்
பச்சை ! அது பச்சை!
மேகத்தின் நிறம் என்ன?
வெள்ளை! அது வெள்ளை!
பூக்களின் நிறமே மஞ்சள்!
மஞ்சள் ! அது மஞ்சள்!
ஆரஞ்சுப் பழத்தின் நிறத்தைப் பார்!
ஆரஞ்சு! அது ஆரஞ்சு!
வானத்தின் நிறம்தான் நீலம்
நீலம் ! அது நீலம்!
காமன் வில்லின் நிறம் பார்!
ஏழுவண்ணம்! அது ஏழுவண்ணம்!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன். கன்னட ஒலி மூலம் :
infobells.com & KidsTVKannada)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (61 - 63 )
61 . தந்தையர் நாள் !
நம் அப்பா முத்தான அப்பா!
நமக்கு அவர்தானே சூப்பர் ஹீரோ!
குடும்பத்தை நன்றாய் நடத்துவாரு!
நம்முடன் ஆடி மகிழ்வாரே!
நீரில் குதித்து விளையாடும்போது
அவரும் வந்து குதிப்பாரே!
நம அப்பா முத்து அப்பா!
நமக்கு அவர்தான் சூப்பர் ஹீரோ!
தப்பு நாங்கள் செய்தாலுமே
தலையில் குட்டு வைப்பாரே!
தலை நோகக் கூடாதென்றே
முத்தம் தந்து மகிழ்விப்பாரே!
இப்படிப் பட்ட அப்பாவைத் தந்த
கடவுளுக்கு வந்தனை! வந்தனை!
62 . அம்மா வேண்டும் !
குழந்தை அழுதது! குழந்தை அழுதது!
குவாகுவா என்றே அழுதது!
அண்ணன் ஓடியே வந்தானே!
கையில் பொம்மையைத் தந்தானே!
பொம்மையைத் தூக்கி வீசிவிட்டு
மீண்டும் குழந்தை குவாகுவா!
தங்கை ஓடி வந்தாளே!
தோளில் தூக்கிக் கொண்டாளே!
குழந்தை குவாகுவா நிற்கவில்லையே!
அப்பா ஓடி வந்தாரே!
தோளில் தூக்கியேதான்
தட்டிக் கொடுத்தாரே!
குவாகுவா சத்தம் நிற்கவில்லையே!
அம்மா குவாகுவா கேட்டாளே
‘வந்துவிட்டேன்’ சத்தம் கொடுத்தாளே!
அம்மா சத்தம் கேட்டுக் குழந்தை
சட்டென்று அழுகையை நிறுத்தியதே!
அம்மா குழந்தையைத்
தூக்கி மகிழ்ந்தாளே!
63 . ஒன்று, இரண்டு!
ஒன்று!
எல்லோருக்கும் தலை ஒன்று!
இரண்டு!
முகத்தில் கண்ணிரண்டு!
மூன்று!
தேசியக்கொடி வண்ணம் மூன்று!
நான்கு!
நாற்காலிக்குக் கால்கள் நான்கு!
ஐந்து!
கையில் விரல்கள் ஐந்து!
ஆறு!
உணவின் சுவைகள் ஆறு!
ஏழு!
வாரத்தின் நாட்கள் ஏழு!
எட்டு!
எட்டுக்கால் பூச்சியின் கால்கள் எட்டு!
ஒன்பது!
தானிய வகை ஒன்பது!
பத்து!
இரண்டு கைவிரல்கள் பத்து!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன். கன்னடக் காட்சி
ஒலி மூலம் : infobells.com)
***
61 . தந்தையர் நாள் !
நம் அப்பா முத்தான அப்பா!
நமக்கு அவர்தானே சூப்பர் ஹீரோ!
குடும்பத்தை நன்றாய் நடத்துவாரு!
நம்முடன் ஆடி மகிழ்வாரே!
நீரில் குதித்து விளையாடும்போது
அவரும் வந்து குதிப்பாரே!
நம அப்பா முத்து அப்பா!
நமக்கு அவர்தான் சூப்பர் ஹீரோ!
தப்பு நாங்கள் செய்தாலுமே
தலையில் குட்டு வைப்பாரே!
தலை நோகக் கூடாதென்றே
முத்தம் தந்து மகிழ்விப்பாரே!
இப்படிப் பட்ட அப்பாவைத் தந்த
கடவுளுக்கு வந்தனை! வந்தனை!
62 . அம்மா வேண்டும் !
குழந்தை அழுதது! குழந்தை அழுதது!
குவாகுவா என்றே அழுதது!
அண்ணன் ஓடியே வந்தானே!
கையில் பொம்மையைத் தந்தானே!
பொம்மையைத் தூக்கி வீசிவிட்டு
மீண்டும் குழந்தை குவாகுவா!
தங்கை ஓடி வந்தாளே!
தோளில் தூக்கிக் கொண்டாளே!
குழந்தை குவாகுவா நிற்கவில்லையே!
அப்பா ஓடி வந்தாரே!
தோளில் தூக்கியேதான்
தட்டிக் கொடுத்தாரே!
குவாகுவா சத்தம் நிற்கவில்லையே!
அம்மா குவாகுவா கேட்டாளே
‘வந்துவிட்டேன்’ சத்தம் கொடுத்தாளே!
அம்மா சத்தம் கேட்டுக் குழந்தை
சட்டென்று அழுகையை நிறுத்தியதே!
அம்மா குழந்தையைத்
தூக்கி மகிழ்ந்தாளே!
63 . ஒன்று, இரண்டு!
ஒன்று!
எல்லோருக்கும் தலை ஒன்று!
இரண்டு!
முகத்தில் கண்ணிரண்டு!
மூன்று!
தேசியக்கொடி வண்ணம் மூன்று!
நான்கு!
நாற்காலிக்குக் கால்கள் நான்கு!
ஐந்து!
கையில் விரல்கள் ஐந்து!
ஆறு!
உணவின் சுவைகள் ஆறு!
ஏழு!
வாரத்தின் நாட்கள் ஏழு!
எட்டு!
எட்டுக்கால் பூச்சியின் கால்கள் எட்டு!
ஒன்பது!
தானிய வகை ஒன்பது!
பத்து!
இரண்டு கைவிரல்கள் பத்து!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன். கன்னடக் காட்சி
ஒலி மூலம் : infobells.com)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (64 - 66 )
64 . ஜிராஃபி !
ஜிராஃபி ! ஜிராஃபி !
நம்முடைய ஜிராஃபி!
உயரமான கால்கள் தானே!
நீண்ட கழுத்துத் தானே!
ஜிராஃபி! ஜிராஃபி!
உடலில் வட்ட வட்டமாக
அழகு வடிவு கொண்டது தானே!
ஜிராஃபி! ஜிராஃபி!
உயரத்தில் இருக்கும் பழத்தைத் தானே
எளிதில் பறிக்கும் ஜிராஃபி தானே!
ஜிராஃபி! ஜிராஃபி!
65 . ஹோலி !
ஹோலி! ஹோலி ! ஹோலீ!
வண்ண மயமான ஹோலி!
வண்ண வண்ணப் பொடிகளையுமே!
தூவி மகிழும் ஹோலி!
நண்பர்கள் முகத்தில் வண்ணப் பொடி!
வண்ண நீரைப் பீச்சியே!
கொண்டாடி மகிழும் ஹோலீ!
இனிப்பு வகைகள் தருவாரே!
ஜிலேபி , லட்டுத் தின்போமே!
ஹோலி ஹோலி ஹோலீ!
66 . சாலை !
குறுகிய அகலப் பாதைகள் !
அவற்றில் வருவது கார்கள்!
நடப்பவர்கள் எல்லாம் ஓரத்தில் நடக்க!
சாலை நடுவே போகாதீர்!
சாலை நடுவே போகாதீர்!
சாலை நடுவே போனாலே
விபத்து நடகும் அறிவீரே!
தெரிந்தும் தப்பைச் செய்யாதீர்!
தெரிந்தும் தப்பைச் செய்யாதீர்!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன். கன்னடக் காட்சி ஒலி
மூலம் : infobells.com)
***
64 . ஜிராஃபி !
ஜிராஃபி ! ஜிராஃபி !
நம்முடைய ஜிராஃபி!
உயரமான கால்கள் தானே!
நீண்ட கழுத்துத் தானே!
ஜிராஃபி! ஜிராஃபி!
உடலில் வட்ட வட்டமாக
அழகு வடிவு கொண்டது தானே!
ஜிராஃபி! ஜிராஃபி!
உயரத்தில் இருக்கும் பழத்தைத் தானே
எளிதில் பறிக்கும் ஜிராஃபி தானே!
ஜிராஃபி! ஜிராஃபி!
65 . ஹோலி !
ஹோலி! ஹோலி ! ஹோலீ!
வண்ண மயமான ஹோலி!
வண்ண வண்ணப் பொடிகளையுமே!
தூவி மகிழும் ஹோலி!
நண்பர்கள் முகத்தில் வண்ணப் பொடி!
வண்ண நீரைப் பீச்சியே!
கொண்டாடி மகிழும் ஹோலீ!
இனிப்பு வகைகள் தருவாரே!
ஜிலேபி , லட்டுத் தின்போமே!
ஹோலி ஹோலி ஹோலீ!
66 . சாலை !
குறுகிய அகலப் பாதைகள் !
அவற்றில் வருவது கார்கள்!
நடப்பவர்கள் எல்லாம் ஓரத்தில் நடக்க!
சாலை நடுவே போகாதீர்!
சாலை நடுவே போகாதீர்!
சாலை நடுவே போனாலே
விபத்து நடகும் அறிவீரே!
தெரிந்தும் தப்பைச் செய்யாதீர்!
தெரிந்தும் தப்பைச் செய்யாதீர்!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன். கன்னடக் காட்சி ஒலி
மூலம் : infobells.com)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (67 - 69 )
67 . நான் ஒரு மங்கண்ணா !
நானு ஒரு மங்கண்ணா !
எனக்கு வாலு ஒன்று உண்டண்ணா!
நாலு காலால் நான் நடப்பேன்!
டான்ஸ்களும் ஆடுவேன்!
இடுப்பில் வளையம் வைத்தேதான்
ஆட்டமும் காட்டுவேன்!
நானு ஒரு மங்கண்ணா!
68 .சிறுவன் வாங்கிய பரிசு !
தாத்தா தாத்தா !
என் முத்துத் தாத்தா !
நான் பெற்று வந்த பரிசையுமே !
பார் தாத்தா!
பாட்டி பாட்டி!
என் முத்துப் பாட்டி!
நான் கொண்டு வந்த பரிசையுமே
பார் பாட்டி!
ஓட்டப் பந்தயத்தில் எனக்கு முன்னே
இரண்டுபேர் ஓடினார்கள்!
நான் முந்திக் கொண்டு
முதலிடம் பிடித்தேன்!
நான் பெற்று வந்த பரிசையுமே
பாருங்கள்! பாருங்கள்!
முத்துப் பையா உன்னோடு
இருப்பதே எனக்கு ஆனந்தம்!
நீஎனக்கு என்றென்றும்
பெருமையே கண்ணா!
அங்கே இங்கே ஓடியாடி
நானும் வருவேனே!
எப்போதும் எங்கள் ஆசீர்வாதம்
உனக்கும் தானே உண்டப்பா!
ஆட்டத்தில் மட்டும் அல்ல
ஓட்டத்திலும் நான்தான்
முதலில் வருவேனே!
69 .வாகனங்கள்! வாகனங்கள் !
வகை வகை வண்டிகள் உள்ளனவே !
ஆட்டம் ஆடுக அவற்றுடனே !
பலவகைச் சத்தங்க ளுடனே
சாலையில் வண்டிகள் ஓடுமே!
வண்ண வண்ண வண்டிகளும்
ஓசை யுடனே ஓடுமே!
பள்ளி மாணவர்களைக்
கொண்டு செல்லுமே பஸ்!
அலுவலகம் செல்லப் புதுப்புதுப்
பைக்குகள் உள்ளனவே!
பாரங்களையே ஏற்றிச் செல்லப்
பெரிய வண்டிகள் இருக்கின்றன!
எல்லா மக்களும் எறிச் செல்லப்
பெரிய பஸ்களும் ஓடுகின்றன!
டிக்கட் எடுக்காத ஆட்களையுமே
இடையில் இறக்கி விடுவாரே!
உடல்நல மில்லா ஆட்களை ஏற்றி
மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லும்
ஆம்பு லன்ஸுகளும் ஓடுகின் றனவே!
தீயை அணைக்க மணியடித்தே
விரைவாய் ஓடும் வண்டியுமே!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னடக் காட்சி ஒலி
மூலம் : infobells.com)
67 . நான் ஒரு மங்கண்ணா !
நானு ஒரு மங்கண்ணா !
எனக்கு வாலு ஒன்று உண்டண்ணா!
நாலு காலால் நான் நடப்பேன்!
டான்ஸ்களும் ஆடுவேன்!
இடுப்பில் வளையம் வைத்தேதான்
ஆட்டமும் காட்டுவேன்!
நானு ஒரு மங்கண்ணா!
68 .சிறுவன் வாங்கிய பரிசு !
தாத்தா தாத்தா !
என் முத்துத் தாத்தா !
நான் பெற்று வந்த பரிசையுமே !
பார் தாத்தா!
பாட்டி பாட்டி!
என் முத்துப் பாட்டி!
நான் கொண்டு வந்த பரிசையுமே
பார் பாட்டி!
ஓட்டப் பந்தயத்தில் எனக்கு முன்னே
இரண்டுபேர் ஓடினார்கள்!
நான் முந்திக் கொண்டு
முதலிடம் பிடித்தேன்!
நான் பெற்று வந்த பரிசையுமே
பாருங்கள்! பாருங்கள்!
முத்துப் பையா உன்னோடு
இருப்பதே எனக்கு ஆனந்தம்!
நீஎனக்கு என்றென்றும்
பெருமையே கண்ணா!
அங்கே இங்கே ஓடியாடி
நானும் வருவேனே!
எப்போதும் எங்கள் ஆசீர்வாதம்
உனக்கும் தானே உண்டப்பா!
ஆட்டத்தில் மட்டும் அல்ல
ஓட்டத்திலும் நான்தான்
முதலில் வருவேனே!
69 .வாகனங்கள்! வாகனங்கள் !
வகை வகை வண்டிகள் உள்ளனவே !
ஆட்டம் ஆடுக அவற்றுடனே !
பலவகைச் சத்தங்க ளுடனே
சாலையில் வண்டிகள் ஓடுமே!
வண்ண வண்ண வண்டிகளும்
ஓசை யுடனே ஓடுமே!
பள்ளி மாணவர்களைக்
கொண்டு செல்லுமே பஸ்!
அலுவலகம் செல்லப் புதுப்புதுப்
பைக்குகள் உள்ளனவே!
பாரங்களையே ஏற்றிச் செல்லப்
பெரிய வண்டிகள் இருக்கின்றன!
எல்லா மக்களும் எறிச் செல்லப்
பெரிய பஸ்களும் ஓடுகின்றன!
டிக்கட் எடுக்காத ஆட்களையுமே
இடையில் இறக்கி விடுவாரே!
உடல்நல மில்லா ஆட்களை ஏற்றி
மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லும்
ஆம்பு லன்ஸுகளும் ஓடுகின் றனவே!
தீயை அணைக்க மணியடித்தே
விரைவாய் ஓடும் வண்டியுமே!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னடக் காட்சி ஒலி
மூலம் : infobells.com)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (70 - 72 )
70 . லாலாஜியும் தண்ணீரும் !
லாலாஜி குளிக்கப் போனாரே!
உடம்பில் சோப்பைத் தேய்த்தாரே!
தண்ணீரைத் திருகி விட்டே
குளிக்கவும் ஆரம் பித்தாரே!
கிணிகிணி கிணிகிணி
தொலைபேசி மணியும் அடித்ததே!
லாலாஜி திறந்த தண்ணீர்
கொட்டிக் கொண் டிருந்ததே!
லாலாஜி பேசி முடித்து வந்துமே
உடம்பில் சோப்பைப் போட்டாரே!
தண்ணீரைத் திருகிப் பார்த்தாரே
தண்ணீரோ காலி! காலி!
தண்ணீர் இல்லாமல்
அவஸ்தையும் அடைந்தார் அடைந்தாரே!
71 . லாலாஜியின் பொய் !
தண்ணீர் வண்டி வந்ததே!
பலரும் பிடிக்கச் சென்றனரே!
லாலாஜி வந்து பார்த்தாரே!
அவருக்கு நீர் அவசியம் ! அவசியம்!
லாலாஜி தந்திரம் செய்தாரே!
‘உடல்நலம் இல்லாதவன்’
என்றொரு பொய்யைச் சொன்னாரே!
வரிசையில் முந்தியும் நின்றாரே!
வரிசையில் நின்றோர் கண்டுபிடித்து
லாலாஜியைத் திட்டினரே ! விரட்டினரே!
பின்னர் வரிசைக்கு வந்தார் லாலாஜி!
இப்படித்தான் நாமும் எப்போதுமே
வரிசையைப் பேண வேண்டுமே!
72 . பொம்மை வீடு !
பிளாஸ்டிக் கட்டிகளை!
ஒன்றோடு ஒன்றாய்ச் சேர்த்தேதான்
நானும் வீடு கட்டுவேனே !
நாலு பக்கமும் சுவரை எழுப்பி
மேலே ஒரு கூரை கட்டி
புகை போக்கி ஒன்றையுமே இட்டு
வீடு கட்டினேன்!
வீட்டுக்கு வண்ணமும் அடித்தேனே
காற்றுக்காகச் சன்னலும்
வாசலுக்காகக் கதவும் கூடக்
கட்டினேனே!
அம்மா அப்பா பார்த்து மிகவும்
மெச்சினாரே!
முத்தமும் இட்டாரே!
மிகவும் பெருமைப் பட்டாரே!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னடக் காட்சி ஒலி
மூலம் : infobells.com)
***
70 . லாலாஜியும் தண்ணீரும் !
லாலாஜி குளிக்கப் போனாரே!
உடம்பில் சோப்பைத் தேய்த்தாரே!
தண்ணீரைத் திருகி விட்டே
குளிக்கவும் ஆரம் பித்தாரே!
கிணிகிணி கிணிகிணி
தொலைபேசி மணியும் அடித்ததே!
லாலாஜி திறந்த தண்ணீர்
கொட்டிக் கொண் டிருந்ததே!
லாலாஜி பேசி முடித்து வந்துமே
உடம்பில் சோப்பைப் போட்டாரே!
தண்ணீரைத் திருகிப் பார்த்தாரே
தண்ணீரோ காலி! காலி!
தண்ணீர் இல்லாமல்
அவஸ்தையும் அடைந்தார் அடைந்தாரே!
71 . லாலாஜியின் பொய் !
தண்ணீர் வண்டி வந்ததே!
பலரும் பிடிக்கச் சென்றனரே!
லாலாஜி வந்து பார்த்தாரே!
அவருக்கு நீர் அவசியம் ! அவசியம்!
லாலாஜி தந்திரம் செய்தாரே!
‘உடல்நலம் இல்லாதவன்’
என்றொரு பொய்யைச் சொன்னாரே!
வரிசையில் முந்தியும் நின்றாரே!
வரிசையில் நின்றோர் கண்டுபிடித்து
லாலாஜியைத் திட்டினரே ! விரட்டினரே!
பின்னர் வரிசைக்கு வந்தார் லாலாஜி!
இப்படித்தான் நாமும் எப்போதுமே
வரிசையைப் பேண வேண்டுமே!
72 . பொம்மை வீடு !
பிளாஸ்டிக் கட்டிகளை!
ஒன்றோடு ஒன்றாய்ச் சேர்த்தேதான்
நானும் வீடு கட்டுவேனே !
நாலு பக்கமும் சுவரை எழுப்பி
மேலே ஒரு கூரை கட்டி
புகை போக்கி ஒன்றையுமே இட்டு
வீடு கட்டினேன்!
வீட்டுக்கு வண்ணமும் அடித்தேனே
காற்றுக்காகச் சன்னலும்
வாசலுக்காகக் கதவும் கூடக்
கட்டினேனே!
அம்மா அப்பா பார்த்து மிகவும்
மெச்சினாரே!
முத்தமும் இட்டாரே!
மிகவும் பெருமைப் பட்டாரே!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னடக் காட்சி ஒலி
மூலம் : infobells.com)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (73 - 75 )
73 . பால் !
பாலு பாலு பாலு!
மியாவ் மியாவ் மியாவ்
என்று கத்தியே
பூனை ஒன்று வந்ததே!
பாலின் சக்தியை அறிந்தே அது
வந்ததே!
குவா குவா என்று
குழந்தை அழுதது!
அம்மா எடுத்துப் பால் கொடுத்ததும்
அழுகையை நிறுத்தியதே!
பசுவைப் போன்ற சக்தி
பசுவின் பாலில் உள்ளதே!
பால் நமது உடலுக்கு நல்லது!
நோய்களைத் தீர்ப்பது பால் தானே!
74 . சுதந்திர தினப் பாடல் !
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
பாரத தேசம் நம்ம தேசம்!
கோடி கோடி நம்
மக்களின் தேசம்!
மொழி ஆடைகள் பலவிதம்!
ஆனால் நாடு ஒன்று பாரதமே!
அகிம்சை தர்மம் தருவதே
நமது பாரத தேசமே!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
உலகுக் கெல்லாம் குருவாக
இருப்பது நம்ம பாரதம்!
தேசங்கள் இடையே பேதம் காட்டாத
உன்னத நாடு பாரதம்!
தேசிய கீதம் கேட்பதாலே
தேசப் பற்று உண்டாகுமே!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
75 . எலிகளின் பாட்டு !
இரண்டு எலிகளே!
சின்ன எலிகளே!
பாலைக் குடிக்கத் தாவியே!
நன்றாகக் குடித்தனவே!
பெரிய எலி வந்தது!
‘நானும் வரவா பால் குடிக்க?’
என்றே தானே கேட்டது!
‘ஐயோ வேண்டாமே!
நீ வந்தால் எம்மைக் கொல்லுவாய்!
எங்கள் வாலை வெட்டுவாய்!’
என்றே பதில் சொன்னவே!
இரண்டு எலிகள் சின்ன எலிகளே!
இலட்டைத் தின்று மகிழ்ந்தனவே!
நாய் ஒன்று வந்ததே
‘நானும் வரவா? இலட்டுத் தின்ன?’
என்றும் தானே கேட்டது!
‘ஐயோ வேண்டாமே!
நீ வந்தால் எங்களையே
கொல்லுவாய் வாலையுமே
வெட்டிடு வாயே!’
என்றன எலிகளும் தாமே!
இரண்டு எலிகள் வந்தன!
இரண்டு எலிகள் வந்தன!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.
கன்னடக் காட்சி ஒலி மூலம் : infobells.com)
***
73 . பால் !
பாலு பாலு பாலு!
மியாவ் மியாவ் மியாவ்
என்று கத்தியே
பூனை ஒன்று வந்ததே!
பாலின் சக்தியை அறிந்தே அது
வந்ததே!
குவா குவா என்று
குழந்தை அழுதது!
அம்மா எடுத்துப் பால் கொடுத்ததும்
அழுகையை நிறுத்தியதே!
பசுவைப் போன்ற சக்தி
பசுவின் பாலில் உள்ளதே!
பால் நமது உடலுக்கு நல்லது!
நோய்களைத் தீர்ப்பது பால் தானே!
74 . சுதந்திர தினப் பாடல் !
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
பாரத தேசம் நம்ம தேசம்!
கோடி கோடி நம்
மக்களின் தேசம்!
மொழி ஆடைகள் பலவிதம்!
ஆனால் நாடு ஒன்று பாரதமே!
அகிம்சை தர்மம் தருவதே
நமது பாரத தேசமே!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
உலகுக் கெல்லாம் குருவாக
இருப்பது நம்ம பாரதம்!
தேசங்கள் இடையே பேதம் காட்டாத
உன்னத நாடு பாரதம்!
தேசிய கீதம் கேட்பதாலே
தேசப் பற்று உண்டாகுமே!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
75 . எலிகளின் பாட்டு !
இரண்டு எலிகளே!
சின்ன எலிகளே!
பாலைக் குடிக்கத் தாவியே!
நன்றாகக் குடித்தனவே!
பெரிய எலி வந்தது!
‘நானும் வரவா பால் குடிக்க?’
என்றே தானே கேட்டது!
‘ஐயோ வேண்டாமே!
நீ வந்தால் எம்மைக் கொல்லுவாய்!
எங்கள் வாலை வெட்டுவாய்!’
என்றே பதில் சொன்னவே!
இரண்டு எலிகள் சின்ன எலிகளே!
இலட்டைத் தின்று மகிழ்ந்தனவே!
நாய் ஒன்று வந்ததே
‘நானும் வரவா? இலட்டுத் தின்ன?’
என்றும் தானே கேட்டது!
‘ஐயோ வேண்டாமே!
நீ வந்தால் எங்களையே
கொல்லுவாய் வாலையுமே
வெட்டிடு வாயே!’
என்றன எலிகளும் தாமே!
இரண்டு எலிகள் வந்தன!
இரண்டு எலிகள் வந்தன!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.
கன்னடக் காட்சி ஒலி மூலம் : infobells.com)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (76 - 78 )
76 . மாட்டு வண்டி !
கடமட கடமட வண்டி !
இது எருது இழுக்கும் வண்டி !
கடமட கடமட வண்டி !
கற்களில் ஏறும் வண்டி!
கடமட கடமட வண்டி !
பாதையில் போகும் வண்டி!
கடகட குடுகுடு வண்டி!
உறுதி யான வண்டி!
நம் வினைஞர் செய்த வண்டி!
கடகட கடமட குடுகுடு வண்டி!
எருது இழுக்கும் வண்டி!
77 . குழந்தையின் முதல் சித்திரம் !
சின்னக் குழந்தை ! அது
சுவற்றில் இரு வட்டம் போட்டதே !
நடுவே இரண்டு சின்ன வட்டமே
கீழே ஒரு கோடு போட்டு
அதன்கீழே வளைவுக் கோடு ஒன்று!
இரண்டு சித்திரம் கண்ட தாயும்
சிரித்தபடி வந்தாளே!
ஆசையாய்க் கையில் தூக்கி
‘என்ன படம்?’ என்றாளே!
பெரிய படம் நீங்களே!
சின்னப் படம் நானே!
என்றே குழந்தையும் கூறியது தானே!
78 . அண்ணன் தம்பி சண்டை!
அண்ணன் தம்பி இருவரிடையே
சண்டைதானே எப்போதுமே !
இரச குல்லா உண்பதிலே
இருவருக்கும் சண்டை ஆனதே!
அம்மா வந்தார் சண்டை தீர்க்க !
‘ஆளுக் கொன்று தின்பீரே!’
ஆளுக் கொன்று கொடுத்தாரே!
‘சண்டை கூடாது எப்போதும்
என்றென்றும் ஒற்றுமையாய் இருக்கவேண்டும்!’
எண்றாள் அம்மா ஆனாலும்
மீண்டும் சோபாவில் அமர்வதில் சண்டை!
அப்பா வந்தார் சோபாவில் அமர்ந்தார்!
இருவரையும் அழைத்து இருதொடையில் அமர்த்திச்
சொன்னாரே அப்பாவும்
‘சண்டை கூடாது சண்டை கூடாது!
என்றென்றும் ஒற்றுமையாய் இருந்திடுக!’
என்று புத்திமதியும் சொன்னாரே!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு. சௌந்தரபாண்டியன்.
கன்னடக் காட்சி ஒலி மூலம் : infobells.com)
76 . மாட்டு வண்டி !
கடமட கடமட வண்டி !
இது எருது இழுக்கும் வண்டி !
கடமட கடமட வண்டி !
கற்களில் ஏறும் வண்டி!
கடமட கடமட வண்டி !
பாதையில் போகும் வண்டி!
கடகட குடுகுடு வண்டி!
உறுதி யான வண்டி!
நம் வினைஞர் செய்த வண்டி!
கடகட கடமட குடுகுடு வண்டி!
எருது இழுக்கும் வண்டி!
77 . குழந்தையின் முதல் சித்திரம் !
சின்னக் குழந்தை ! அது
சுவற்றில் இரு வட்டம் போட்டதே !
நடுவே இரண்டு சின்ன வட்டமே
கீழே ஒரு கோடு போட்டு
அதன்கீழே வளைவுக் கோடு ஒன்று!
இரண்டு சித்திரம் கண்ட தாயும்
சிரித்தபடி வந்தாளே!
ஆசையாய்க் கையில் தூக்கி
‘என்ன படம்?’ என்றாளே!
பெரிய படம் நீங்களே!
சின்னப் படம் நானே!
என்றே குழந்தையும் கூறியது தானே!
78 . அண்ணன் தம்பி சண்டை!
அண்ணன் தம்பி இருவரிடையே
சண்டைதானே எப்போதுமே !
இரச குல்லா உண்பதிலே
இருவருக்கும் சண்டை ஆனதே!
அம்மா வந்தார் சண்டை தீர்க்க !
‘ஆளுக் கொன்று தின்பீரே!’
ஆளுக் கொன்று கொடுத்தாரே!
‘சண்டை கூடாது எப்போதும்
என்றென்றும் ஒற்றுமையாய் இருக்கவேண்டும்!’
எண்றாள் அம்மா ஆனாலும்
மீண்டும் சோபாவில் அமர்வதில் சண்டை!
அப்பா வந்தார் சோபாவில் அமர்ந்தார்!
இருவரையும் அழைத்து இருதொடையில் அமர்த்திச்
சொன்னாரே அப்பாவும்
‘சண்டை கூடாது சண்டை கூடாது!
என்றென்றும் ஒற்றுமையாய் இருந்திடுக!’
என்று புத்திமதியும் சொன்னாரே!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு. சௌந்தரபாண்டியன்.
கன்னடக் காட்சி ஒலி மூலம் : infobells.com)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (79 - 81 )
79 . கிறிஸ்துமஸ் !
ஹேப்பி கிறிஸ்துமஸ் !
ஹேப்பி கிறிஸ்துமஸ் !
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
வண்ண வண்ண விளக்குகளே!
நட்சத்திர வடிவ விளக்குகளே!
கிறிஸ்துமஸ் மரம் ஒளிர்கிறதே!
கிறிஸ்துமஸ் ! கிறிஸ்துமஸ்!
நமக்காகாவே கிறிஸ்துமஸ்!
இனிப்புகள் கேக்குகள் எல்லாமே
நம் வாயில் இருக்கிறதே கிறிஸ்துமஸ்!
கிறிஸ்துமஸ் தாத்தா வந்தாரே!
விதவிதமான பரிசுகள் தந்தாரே!
புத்தாடை பொருட்கள் எல்லாமே
ம்கிழ்ச்சியாகத் தந்தரே!
புத்தாடைகளில் பிள்ளைகள்!
தேவா லயத்தில் தொழுதோமே!
கிறிஸ்துமஸ்! கிறிஸ்துமஸ்!
80 . சுத்தமாய் வைத்திருப்போம் !
தூய்மைப் படுத்துவோம் - நாம்
தூய்மைப் படுத்துவோம் !
குப்பைத் தொட்டியில் போடாது
தெருவில் குப்பையை வீசாதே!
தெருவில் கிடக்கும் குப்பைகளைக்
குப்பை யள்ளும் அண்ணா வந்து
பொறுக்கிக் கொண்டு போகணுமே!
அவரும் நம் போல மனிதரன்றோ!
தேசத்தில் எங்கும் குப்பை இல்லாது
பார்த்துக் கொள்வோம் நமே !
81 . புலியப்பா !
புலியப்பா! புலியப்பா!
நம்ம ஊரு எது அப்பா?
நம்ம ஊரு ஆசியா மகனே!
நம்ம வீடு எங்கே உளதப்பா?
பெரிய காடே நம்ம வீடப்பா!
நம்ம இனத்தில் ஒன்பது வகையப்பா!
மூன்று வகை மட்டுமே
இப்போ உள்ளதப்பா!
புலி ஒரு கம்பீரமான பிராணி ஆகும்!
புலி நமது தேசிய விலங்காகும்!
அதைக் காப்பது நமது கடமையாகும்!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு. சௌந்தரபாண்டியன்.
கன்னடக் காட்சி ஒலி மூலம் : infobells.com)
***
79 . கிறிஸ்துமஸ் !
ஹேப்பி கிறிஸ்துமஸ் !
ஹேப்பி கிறிஸ்துமஸ் !
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
வண்ண வண்ண விளக்குகளே!
நட்சத்திர வடிவ விளக்குகளே!
கிறிஸ்துமஸ் மரம் ஒளிர்கிறதே!
கிறிஸ்துமஸ் ! கிறிஸ்துமஸ்!
நமக்காகாவே கிறிஸ்துமஸ்!
இனிப்புகள் கேக்குகள் எல்லாமே
நம் வாயில் இருக்கிறதே கிறிஸ்துமஸ்!
கிறிஸ்துமஸ் தாத்தா வந்தாரே!
விதவிதமான பரிசுகள் தந்தாரே!
புத்தாடை பொருட்கள் எல்லாமே
ம்கிழ்ச்சியாகத் தந்தரே!
புத்தாடைகளில் பிள்ளைகள்!
தேவா லயத்தில் தொழுதோமே!
கிறிஸ்துமஸ்! கிறிஸ்துமஸ்!
80 . சுத்தமாய் வைத்திருப்போம் !
தூய்மைப் படுத்துவோம் - நாம்
தூய்மைப் படுத்துவோம் !
குப்பைத் தொட்டியில் போடாது
தெருவில் குப்பையை வீசாதே!
தெருவில் கிடக்கும் குப்பைகளைக்
குப்பை யள்ளும் அண்ணா வந்து
பொறுக்கிக் கொண்டு போகணுமே!
அவரும் நம் போல மனிதரன்றோ!
தேசத்தில் எங்கும் குப்பை இல்லாது
பார்த்துக் கொள்வோம் நமே !
81 . புலியப்பா !
புலியப்பா! புலியப்பா!
நம்ம ஊரு எது அப்பா?
நம்ம ஊரு ஆசியா மகனே!
நம்ம வீடு எங்கே உளதப்பா?
பெரிய காடே நம்ம வீடப்பா!
நம்ம இனத்தில் ஒன்பது வகையப்பா!
மூன்று வகை மட்டுமே
இப்போ உள்ளதப்பா!
புலி ஒரு கம்பீரமான பிராணி ஆகும்!
புலி நமது தேசிய விலங்காகும்!
அதைக் காப்பது நமது கடமையாகும்!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு. சௌந்தரபாண்டியன்.
கன்னடக் காட்சி ஒலி மூலம் : infobells.com)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (82 - 84 )
82 . நாணயம் !
ஜன ! ஜன! ஜன!
பை நிறையப் பணம்!
மேலே சுண்டி விட்டால்
கீழே வந்து உருளுமே!
டண்! டண்! டண்!
நதியில் ஒரு கொக்கு!
முகத்தைக் கீழே வளைத்தபடியே
ஒரு காலைத் தூக்கி
நடனம் ஆடுமே!
தையத் தக்கா தையா!
சுற்றிலும் பச்சை வனம்!
நடுவே பசுக்கள் மேய்ந்தபடி!
இடையன் குழலை ஊதியே
தனனா! தனனா! தனனா!
83 . பெரிய விமானம் !
எவ்வளவு பெரிய விமானம்!
எப்படிப் பறக்கிறது பார்!
விமானத்தை ஓட்டுவது யாரு?
விமானத்தை ஓட்டுவது விமானி!
யூனிஃபார்ம் அணிந்து இருப்பாரே!
கஷ்டப்பட்டு விமானம் ஓட்டுவாரே!
ஆழமான கடல் எல்லாம்
பயமில்லாமல் கடப்பாரே!
பாதுகாப்பாக நம்மை எல்லாம்
கொண்டு போய்ச் சேர்ப்பாரே!
கண்டம் விட்டுக் கண்டம் பறப்பாரே!
முயற்சி செய்தால் விமானிஆக முடியுமே!
84 . வானவில் !
வான வில்லு! வான வில்லு !
எவ்வளவு அழகான வில்லு!
கண்ணுக்கு அழகான வில்லு!
ஏழு வண்ணங்கள் கொண்ட வில்லு!
பழங்கள் பூக்கள் நிறத்தைக்
கொண்ட வில்லு!
வானத்தையும் பூமியையும்
சேர்க்கும் வில்லு!
- (கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னடக் காட்சி ஒலி மூலம் :
infobells.com& YouTube.com/user/APPUSERI)
***
82 . நாணயம் !
ஜன ! ஜன! ஜன!
பை நிறையப் பணம்!
மேலே சுண்டி விட்டால்
கீழே வந்து உருளுமே!
டண்! டண்! டண்!
நதியில் ஒரு கொக்கு!
முகத்தைக் கீழே வளைத்தபடியே
ஒரு காலைத் தூக்கி
நடனம் ஆடுமே!
தையத் தக்கா தையா!
சுற்றிலும் பச்சை வனம்!
நடுவே பசுக்கள் மேய்ந்தபடி!
இடையன் குழலை ஊதியே
தனனா! தனனா! தனனா!
83 . பெரிய விமானம் !
எவ்வளவு பெரிய விமானம்!
எப்படிப் பறக்கிறது பார்!
விமானத்தை ஓட்டுவது யாரு?
விமானத்தை ஓட்டுவது விமானி!
யூனிஃபார்ம் அணிந்து இருப்பாரே!
கஷ்டப்பட்டு விமானம் ஓட்டுவாரே!
ஆழமான கடல் எல்லாம்
பயமில்லாமல் கடப்பாரே!
பாதுகாப்பாக நம்மை எல்லாம்
கொண்டு போய்ச் சேர்ப்பாரே!
கண்டம் விட்டுக் கண்டம் பறப்பாரே!
முயற்சி செய்தால் விமானிஆக முடியுமே!
84 . வானவில் !
வான வில்லு! வான வில்லு !
எவ்வளவு அழகான வில்லு!
கண்ணுக்கு அழகான வில்லு!
ஏழு வண்ணங்கள் கொண்ட வில்லு!
பழங்கள் பூக்கள் நிறத்தைக்
கொண்ட வில்லு!
வானத்தையும் பூமியையும்
சேர்க்கும் வில்லு!
- (கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னடக் காட்சி ஒலி மூலம் :
infobells.com& YouTube.com/user/APPUSERI)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (85 - 87 )
85 . பள்ளிக்குப் போகலாம் வா !
பள்ளிக்குப் போகலாம் வா !
முத்துப் பையா போகலாம் வா !
பள்ளிக்குப் போனால்தான்
பாடங்கள் படிக்கலாம்!
பாடத்தில் பயிற்சி கொண்டாலே
நல்ல வேலை கிடைக்கும் பையா!
வேலை கிடைத்தால்தான் – நல்ல
ஆளாக வரமுடியுமே!
நல்ல ஆளாக இருந்தால்தான்
தேசத்தைக் காக்க முடியுமே!
மக்கள் நம்மைப் புகழுவார்களே!
86 . கர்ர்ர் …காகம் !
கர்ரென்று கத்திக் கொண்டு
சர்ரென்று மேலே பறந்து
கிர்ரென்று குப்புற விழுந்ததே
பர்ரென்று இறக்கையில் காயம் வந்ததே !
87 . ஆனை ராஜன் !
ஆனை ராஜன் ஒன்று !
குளத்தில் சுகமாய்க் குளித்ததே
துதிக்கையால் நீரைச் சுற்றிலுமே
பீச்சித் தெளித்ததுவே!
ஆனை தெளித்த நீரால்
செடிகொடி பூக்கள்
மரங்கள் பழங்கள் உண்டாயினவே!
கரடி சிங்கம் இளைப்பாற
நிழல் மரங்கள் தோன்றினவே!
பறவை கூடு கட்டவுமே
மரங்கள் பலவும் முளைத்தனவே!
எல்லோரும் இன்பமாய் இருந்தனரே!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னடக் காட்சி ஒலி மூலம் :
infobells.com)
85 . பள்ளிக்குப் போகலாம் வா !
பள்ளிக்குப் போகலாம் வா !
முத்துப் பையா போகலாம் வா !
பள்ளிக்குப் போனால்தான்
பாடங்கள் படிக்கலாம்!
பாடத்தில் பயிற்சி கொண்டாலே
நல்ல வேலை கிடைக்கும் பையா!
வேலை கிடைத்தால்தான் – நல்ல
ஆளாக வரமுடியுமே!
நல்ல ஆளாக இருந்தால்தான்
தேசத்தைக் காக்க முடியுமே!
மக்கள் நம்மைப் புகழுவார்களே!
86 . கர்ர்ர் …காகம் !
கர்ரென்று கத்திக் கொண்டு
சர்ரென்று மேலே பறந்து
கிர்ரென்று குப்புற விழுந்ததே
பர்ரென்று இறக்கையில் காயம் வந்ததே !
87 . ஆனை ராஜன் !
ஆனை ராஜன் ஒன்று !
குளத்தில் சுகமாய்க் குளித்ததே
துதிக்கையால் நீரைச் சுற்றிலுமே
பீச்சித் தெளித்ததுவே!
ஆனை தெளித்த நீரால்
செடிகொடி பூக்கள்
மரங்கள் பழங்கள் உண்டாயினவே!
கரடி சிங்கம் இளைப்பாற
நிழல் மரங்கள் தோன்றினவே!
பறவை கூடு கட்டவுமே
மரங்கள் பலவும் முளைத்தனவே!
எல்லோரும் இன்பமாய் இருந்தனரே!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னடக் காட்சி ஒலி மூலம் :
infobells.com)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 )
» யுவன் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடல்கள் வெளியீடு!
» பட்டுக்கோட்டையாரின் காதல் பாடல்கள், கற்பனைப் பாடல்கள் வேண்டும்
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
» யுவன் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடல்கள் வெளியீடு!
» பட்டுக்கோட்டையாரின் காதல் பாடல்கள், கற்பனைப் பாடல்கள் வேண்டும்
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|