புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_m10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10 
48 Posts - 45%
heezulia
நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_m10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_m10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_m10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_m10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10 
3 Posts - 3%
jairam
நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_m10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10 
2 Posts - 2%
சிவா
நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_m10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10 
1 Post - 1%
Manimegala
நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_m10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_m10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_m10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_m10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10 
14 Posts - 4%
prajai
நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_m10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_m10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10 
6 Posts - 2%
jairam
நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_m10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10 
4 Posts - 1%
Jenila
நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_m10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10 
4 Posts - 1%
Rutu
நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_m10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_m10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_m10நாட்டியப் பேரொளி பத்மினி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டியப் பேரொளி பத்மினி


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 21, 2023 2:56 am

நாட்டியப் பேரொளி பத்மினி Padmin11

அழகு, ஆற்றல், இளமை, ஈடுபாடு, உழைப்பு, உற்சாகம், ஊக்கம், எளிமை, ஏற்றம், ஓய்வறியா அர்ப்பணிப்பு, ஓங்கு புகழ் போன்ற தமிழ்ச் சொற்களின் ஒரே உருவம் பத்மினி. தாய்நாட்டின் விடுதலையோடு வேர் விடத் தொடங்கிய, நர்த்தன நந்தவனம்.

திரும்பத் திரும்பத் திரையில் வெவ்வேறு வயதுகளில் தோன்றினாலும், இந்திய ரசிகர்கள் பத்மினியை மட்டும் மனத்துக்குள் பாசப்பதியம் போட்டு வைத்துக்கொண்டார்கள். அவரது பாதச் சதங்கைகளின் ரீங்காரம் இன்னமும் சின்னத்திரைகளில் இந்தியா முழுதும் கேட்கிறது. மற்ற எந்த நடிகைக்கும் கிடைக்காத வரவேற்பு பத்மினிக்கு மாத்திரம் நிலைத்து நின்றது. பத்மினியின் நடிப்பு உயரத்தை அவ்வளவு எளிதில் வேறு யாரும் தொட்டுவிட முடியாது

மேடைகளில் கொண்ட பற்று காரணமாக பாடசாலைகளைத் துரிதமாகத் துறந்தவர் பத்மினி. பால்யத்தில் சமஸ்க்ருதம் கற்றுக்கொண்டவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளிலும் நீடித்த அவரது தொடர் பங்களிப்பு உன்னதமானது. நடித்த அத்தனை படங்களிலும் சொந்தக் குரலில் பேசியது அன்றைக்கு அபூர்வம். அவரது சாதனைகளின் பிள்ளையார் சுழி அது!

அதனாலேயே, தமிழில் பத்மினி நடித்த படங்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால், அவர் ஏற்று ஜொலித்த பாத்திரங்கள் தந்த மன நிறைவில், யாரும் அதை உணர்ந்ததே கிடையாது. அவரது படப் பட்டியலை சற்றே எண்ணிப் பார்த்தபோது வியப்பு தோன்றியது. ஆண்டுக்கு நான்கு ஐந்து படங்களில் நடித்திருந்தார். 1970-களில் அவர் இந்தியாவை விட்டு அமெரிக்காவுக்குக் குடும்பம் நடத்தச் சென்றார். அப்போது, ஏறக்குறைய எட்டுப் படங்கள் (1971-ல்) பத்மினி நடிப்பில் ஒரு சேரத் தமிழில் வெளிவந்தன. அவற்றில் அன்னை வேளாங்கன்னி, ஆதிபராசக்தி போன்ற பக்திச் சித்திரங்களும் அடங்கும்

வண்ணத்திரையில் பத்மினியின் ஒட்டுமொத்த சாதனைகளுக்கும் இந்தியர்கள் நன்றி சொல்ல வேண்டியது இருவருக்கு மட்டுமே. முதலாமவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். இரண்டாமவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கலைவாணர் வற்புறுத்தி பத்மினியை நாயகியாக்கியவர். கணேசனோ, பத்மினியின் பரவசமூட்டும் நடிப்புக்குப் பாதை வகுத்துத் தந்தவர்.

தமிழில் பத்மினி பங்கேற்ற நூற்றுச் சொச்சம் படங்களில், அவர் கணேசனோடு நடித்ததே அதிகம். பணம் படத்தில் தொடங்கி லட்சுமி வந்தாச்சு (சூப்பர் டைட்டில் பொருத்தம் இயல்பாகவே அமைந்துவிட்டது. திரையில் அவர்களது முதலுக்கும் நிறைவுக்கும்) கடந்தும், கடைசி வரையில் நட்போடு நீடித்தது அவர்களின் மிக நீண்ட கலைப்பயணம், தோழமை யாவும்.

85 ஆண்டு காலத் தமிழ் சினிமா சரித்திரத்தில், இட்லியும் சாம்பாருமாக இணை சேர்ந்த ஒப்பற்ற ஜோடி அவர்கள். நிஜ வாழ்வில் (1960-களில்) தாலி கட்டி முடித்ததும், கால் கட்டு போட்டதும், தமிழர்களின் கல்யாணங்களில் சிவாஜி - பத்மினிபோல் சேர்ந்து வாழ திருமண வீட்டார் வாழ்த்தியது காலத்தின் கல்வெட்டு.

திருவனந்தபுரம் அரண்மனையில் ஆஸ்தான வித்வானாக இருந்தவர் குரு கோபிநாத். அவரிடம் நாலு வயது பத்மினியும் (பப்பி) அக்கா லலிதாவும் நடனம் கற்றுக்கொள்ளத் தொடங்கினர். கடைக்குட்டி ராகினி அப்போது குழந்தை. பப்பியின் எட்டு வயசுக்கெல்லாம் அரங்கேற்றம் ஆனது. ஒன்பது கெஜம் சேலையில் பாலகி பத்மினி ஆடிய ஆட்டத்துக்கு, சிறப்பு விருந்தினர் ஜோத்பூர் மகாராஜா ஜோராகக் கை தட்டினார்.

அக்கா லலிதாவோடு ஏழு வயது பத்மினி இணைந்து தர்பார் நாட்டியங்களில் பங்கேற்றார். அன்றைக்குப் 'பாரிஜாத புஷ்பகரணம்' நாடகம். அதில், பத்மினிக்கு நாரதர் வேடம். தலைமை கலைவாணர்.

'தேவலோகத்தில் எல்லாரும் அழகாக இருப்பாங்கன்னு இப்பத்தான் தெரியுது. நாரதர்கூட ரொம்ப அழகாக இருக்கிறார்'. என்.எஸ்.கே.யின் பாராட்டில் த்வனித்த கிண்டலுக்கும் கேலிக்கும் எல்லாரும் சிரித்தார்கள். ஆனால் பப்பிக்கோ, வெட்கச் சிறகுகள் முளைத்தன. தம்பூராவால் தன் தாழம்பூ முகத்தை மூடிக்கொண்டார்.

பரம்பரையான கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல லலிதாவும் பத்மினியும். அவர்களுக்குள் அந்த ஆசை விதையை ஆழமாக ஊன்றியவர் மிஸஸ் பிள்ளை. பப்பியின் அம்மாவுக்கு அக்கா. பெரியம்மாவுக்கு, ஆறுமுகங்கள்போல் அத்தனையும் ஆண் பிள்ளைகள். எனவே, தங்கை மகள்களின் மீது தனிப் பிரியம்! பெரியம்மாவுக்கு, மலேசியாவில் நாலாயிரம் ஏக்கரில் ரப்பர் எஸ்டேட் இருந்தது. வசதியான வாழ்க்கை. பணம் லட்சியமில்லை. தங்கை பெற்ற செல்வங்களுக்குத் தங்கத்தில் உருத்திராட்சம் கட்டிப் போட்டார்.

பப்பியின் மாமா, பம்பாயில் கடற்படையில் கமாண்டர். உலகப் புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர் உதயசங்கரின் பக்கத்து வீட்டுக்காரர். விடுமுறைக்கு வந்திருந்த சகோதரியின் பெண்களை அவரிடம் அறிமுகப்படுத்தினார். சலங்கைகள் பேசின. இளம் தளிர்களின் அங்க அசைவுகளில், ஜதிக்குப் பதில் சொல்லும் நயண பாஷைகளில், நான்கு பாதங்களின் அதிவேகப் பாய்ச்சலில், கலா மேதை கண் கலங்கினார். ஏற்கெனவே திருவிடைமருதூர் மகாலிங்கம் பிள்ளையிடம் தேர்ச்சி பெற்றவர்களை சினிமாவில் ஆட அழைத்தார்.

'ஜெமினி எஸ்.எஸ்.வாசன் ஆதரவில் கல்பனா என்ற பெயரில் முழுநீள நாட்டியச் சித்திரம் தயாரிக்கப்போகிறேன். அதில் நீங்களும் ஆடுகிறீர்களா' என்றார். நிஜத்தில் மெய்சிலிர்த்துப் போனது இருமலர்களுக்கும். கலைச் சமூகத்தின் மேட்டுக்குடிகளிடம் வாசம் பரப்ப வந்திருக்கும் வசந்த அழைப்பைத் தவறவிடலாமா? எல்லோருக்கும் கிடைக்கிற வாய்ப்பா அது!

அரண்மனை அந்தப்புரங்களில் ஆடியவர்கள், சினிமா ஸ்டுடியோவில் தடம் பதித்தார்கள். சந்திரலேகா ஷூட்டிங்கும், கல்பனாவுக்கான நடனப் பயிற்சிகளும் வருடங்களை விழுங்கியபடி நடந்தன. ராஜ வம்சத்து யவன ராணிகளை, வாசனின் ஊழியர்கள் பிரியத்தோடு கவனித்தார்கள். அவர்களில் நல்ல பெர்சனாலிடியும் சுறுசுறுப்பும் உடையவராக, பத்மினியின் கண்களுக்குத் தட்டுப்பட்டவர் ஜெமினி கணேசன்!

கல்பனா ரிலீஸுக்கு பிறகு காலத்தை விரயம் செய்யாமல் 'டான்ஸ் ஆஃப் இந்தியா'வைத் தொடங்கினார்கள். எட்டுப் பேர் கொண்ட சொந்தக் குழு அமைந்தது. பாம்பாட்டி நடனம், சிவாபார்வதி, ராதாகிருஷ்ணன் போன்றச் சின்னச் சின்ன அயிட்டங்களைத் தாங்களே உருவாக்கி ஆடினர்.

சென்னைக்கு வந்தால், பட அதிபர் ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரின் கவனத்தில் நின்றவை, லலிதா - பத்மினியின் நாட்டிய நிகழ்ச்சி விளம்பரங்கள். ஒரு நாள் எழும்பூர் மியூசியம் தியேட்டரில் அவர்களது நடனத்தைப் பார்த்தார்.

'ஆஹா, எவ்வளவு களையான முகம் இருவருக்கும். அவர்கள் தன் சொந்த மண்ணான காரைக்குடியில் வந்து ஆடமாட்டார்களா. வேதாள உலகத்தில் நடிக்கவைத்தால் வசூல் கூடுதலாக இருக்குமே...' இதய வீணை மீட்டிய இனிய ராகத்துக்கு விடை தேடிப் புறப்பட்டார்.

'நாங்கள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள். நாட்டியம் மட்டுமே ஆடுவோம். படங்களில் நடிக்கமாட்டோம்'. கலை உலகம் தேடிச் சென்று கேட்டபோதெல்லாம் ஏமாற்றத்தோடு திருப்பி அனுப்பினார்கள் ஆடல் அரசிகள் இருவரும்.

சொல் புதிது. பொருள் புதிது என்று புதுமை விரும்பியாக வாழ்ந்தவர் மெய்யப்பன். நினைத்ததை முடிக்கும் திறமைசாலி. பலமுறை தீர யோசித்துத் தொண்டைக்குழிக்குள் ஒத்திகை பார்க்காமல் ஒரு வார்த்தை பேசமாட்டார்.

'உங்களுக்கு இஷ்டம் இல்லையென்றால் நீங்கள் கேரக்டர் ரோலில் நடிக்க வேண்டாம். ஆடினால் போதும்'. உடனடியாக, நான்கு நடனங்களுக்கு ஒப்பந்தம் செய்துகொண்டு ஊருக்குத் திரும்பினார் செட்டியார்.

வேதாள உலகம், 1948 ஆகஸ்டு 11-ல் வெளியானது. லலிதா - பத்மினி ஆடிய பவளக்கொடி, பாம்பாட்டி நடனக் காட்சிகளுக்கு தடபுடலாகப் பிரமாதமாக விளம்பரம் செய்திருந்தார் ஏவிஎம். ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தின் பார்வையும் பத்மினி மீது பதிந்தது. விளைவு, திருவிதாங்கூர் சகோதரிகளின் பங்களிப்பு இல்லாமல் எந்தப் படமும் போணி ஆகாது என்ற நிலை விரைவில் வந்தது. சுமார் நூற்றைம்பது சினிமாக்களில் வெறும் நடனம் மாத்திரம் ஆடினர்

எல்லோரையும் போலவா கிருஷ்ணன். குடும்ப நண்பர் ஆயிற்றே! தேவதைகளின் தாயாரை நேரடியாகவே அணுகினார், நாயகி வாய்ப்போடு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 21, 2023 2:57 am

'மணமகள்னு ஒரு படம் எடுக்கலாம்னு இருக்கிறேன். அதில் ஹீரோயின்களா உங்க பொண்ணுங்க நடிக்கணும்'.

சரஸ்வதி அம்மாளுக்குச் சந்தேகம். பப்பிக்குள் அந்தத் திறமையெல்லாம் அடங்குமா? டி.ஆர்.ராஜகுமாரி, பானுமதி, அஞ்சலி, வசுந்தராபோல் நடிப்பதெல்லாம் அவளுக்குச் சாத்தியமா? தகுதி இருக்கட்டும். அதற்கான பக்குவம் இன்னமும் வரவில்லையே. இந்தக் கார்த்திகை போனால்தானே பதினாறும்கூடப் பூர்த்தி ஆகும். (பத்மினி பிறந்த தேதி டிசம்பர் 13).

'சினிமால நடிக்கிறதுன்னா கதையை காட்சியைப் புரிஞ்சிக்கிட்டு செய்யணுமே. அவ சின்னவ. இன்னும் விவரம் போதாது' அன்னை சிந்தித்தார். அவரது தயக்கத்தின் நொடிகளில், கலைவாணர் தாயம் போட்டார்.

'நல்லா நடனம் ஆடறவங்களால நல்லா நடிக்கவும் முடியும். நீங்க சம்மதம் சொல்லுங்க. உங்க பப்பியை ஸ்டார் ஆக்கிக் காட்டறேன்'.

கிருஷ்ணன் சொன்னது அதுவரையில் நிரூபிக்கப்படாத ஒன்று. ஏவிஎம்மின் வாழ்க்கை படம் மூலம் வைஜெயந்திமாலா அறிமுகமாகிய நேரம். குமாரி கமலா, குசலகுமாரி, சாய் சுப்புலட்சுமி போன்றோர் நாட்டியத் தாரகைகளாக ஒளி வீசிய அளவு, நடிப்பில் அரிச்சுவடி வகுப்பைக்கூடத் தாண்டாமல் போனார்கள்.

தண்டவாளத்தின் இரு பக்கங்கள்போல் நடனம், நடிப்பு இரண்டிலும் எடுத்த எடுப்பில் எழிலரசி பத்மினிபோல் புகழின் தொடர்வண்டியை ஓட்டி, சிகரம் தொட்டவர் இன்றுவரை எவரும் கிடையாது.

சரஸ்வதி அம்மாளுக்குக் கண்டிப்பு ஜீவ நாடி. அவரது விழி அசைவுகளுக்குள் பத்மினியின் கால்ஷீட் கடைசிவரையில் கட்டுண்டு நின்றது. ரசத்துக்குப் பெருங்காயம் போடுவதில் சந்தேகம் வந்தாலும், நியூஜெர்ஸியில் இருந்து ட்ரங்க்கால் போட்டு அம்மாவிடம் கேட்பார் திருமதி பத்மினி ராமச்சந்திரன்.

டி.ஏ.மதுரம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, டைரக்டர் கே.சுப்ரமணியம் போன்ற கலை மேதைகள் மிக வேண்டியவர்களாக இருந்ததால், சரஸ்வதி அம்மாள் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். கே.சுப்ரமணியம், கதகளி ஆடிக்கொண்டிருந்த சகோதரிகளுக்கு, பரதநாட்டியத்தையும் கட்டாயமாகக் கற்றுத் தரச் சொன்னப் பிதாமகன். 1944-ல் பத்மினியின் குடும்பம் சென்னைக்குக் குடி வந்தபோது, தன் வீட்டில் தங்க இடம் தந்து ஆதரவு அளித்தவர்.

1950-ம் ஆண்டின் மிகச் சிறந்த காவியம், ஏழை படும் பாடு. கே.ராம்நாத் என்ற மாபெரும் திரைச்சிற்பி இயக்கியது. அதில், வி.கோபாலகிருஷ்ணனுடன் கனவுக் காட்சியில் பத்மினி தோன்ற வேண்டும்.

'பப்பி அப்படி நடிக்கமாட்டாள்' என, தயாரிப்பாளரைத் தவிக்க வைத்தார் தாயார். இயக்குநர் என்ன சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை. கடைசியில், தங்கை ராகினிக்கு ஆண் வேடம் போடப்பட்டது. இளைய சகோதரியுடன் தன் முதல் காதல் பாடலைப் பாடி நடித்தார் பத்மினி.

மணமகள் தொடங்கியது. முதல் நாள் ஷூட்டிங்கில், வியர்வைக் குளத்தில் நீராடினார் பத்மினி. தமிழை கொச்சையாகப் பேச மட்டும் தெரிந்த அவரிடம், மு.கருணாநிதியின் வசனத்தைக் கொடுத்தார்கள். அடுத்து, புடைவையை நீட்டி கட்டிக்குங்க என்றார் காஸ்ட்யூமர். சேலை, இடுப்பை விட்டு நழுவிற்று. நாயகியின் தவிப்பைப் புரிந்துகொண்டார் மதுரம். 'போய் ரெடிமேட் ஸாரியை வாங்கிட்டு வாங்க என்றார் தயாரிப்பு நிர்வாகியிடம்.

பத்மினி அணிந்துகொண்டு நடிக்க, தன் சொந்த நகைகளைப் பூரிப்போடு வாரி வழங்கினார் இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி. மற்றொரு சங்கீதவாணி எம்.எல்.வசந்தகுமாரி, பத்மினிக்காகத் திரையில் பாடினார். எல்லாம் இன்பமயம் எனத் தொடங்கி, 65 ஆண்டுகளாக வசீகரிக்கிறது அந்த அற்புத கீதம்.

மணமகளில் பத்மினிக்குக் காதலன் யார் தெரியுமா? பிரபல குணச்சித்திர நடிகர் எஸ்.வி.சகஸ்ரநாமம். பாவம் பத்மினி. சிவாஜி கணேசனின் இணையற்ற ஜோடியாகப் புகழ்பெறும் வரையில், அவருக்கு நாயகனாக வாய்த்தவர்கள் அவரைவிட வயதில் மூத்த டி.எஸ்.பாலையா, கே.ஆர்.ராமசாமி, நாகையா, எஸ்.வி.சுப்பையா எனப் பட்டியல் நீள்கிறது.

மணமகள் மகத்தான வெற்றியைப் பெற்றது. கலைவாணர், பப்பியை விடுவதாக இல்லை. தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார். அவரது பணம், சிவாஜி கணேசனின் இரண்டாவது படமாக வெளியானது. அதைத் தயாரித்தபோதும் பத்மினியை மறக்கவில்லை.

கணேசனுக்குப் பத்மினியோடு நடிப்பது கனவுபோல் இருந்தது. பராசக்தி எப்போது ரிலீஸாகும் என்று தெரியாத நிலை. பப்பி ஏற்கெனவே புகழ் பெற்ற நட்சத்திரம். இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம் என்பது போன்ற அற்புதமான முகத்தோற்றம்! அழகின் ஆலயத்துடன் நடிக்கும் ஆனந்தத்தில், இளமை கரை புரண்டு ஓடியது புதுமுகத்துக்கு.

அவர்கள் இருவரும் நடித்த முதல் காட்சி, மங்களகரமாக ஆரம்பித்தது. அன்றைய இரவு, தன்னுடைய நிஜ திருமணத்துக்காக சுவாமிமலைக்குச் செல்ல வேண்டியவர் கணேசன். காலையில், மணமகள் பத்மினியின் கழுத்தில் சினிமா தாலியைக் கட்டி அவரை மாமியார் வீட்டுக்கு அழைத்து வருவதாகப் படம் பிடித்தார்கள். பிற்பாடு சந்தித்த வேளைகளில் சிரித்துச் சிரித்து மகிழ, சிவாஜிக்கும் பத்மினிக்கும் கிடைத்த இனிப்பு அவல், அந்தத் தித்திப்பான முதல் சம்பவம்.

பணம் படத்தைத் தொடர்ந்து அன்பு, இல்லற ஜோதி எனத் தொடர்ந்தது சிவாஜி - பத்மினி ஜோடி. இரண்டிலும் ஒரு விசேஷம். படங்களுக்கு நடுவில் ஓரங்க நாடகம். ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோவாக கணேசனும், டெஸ்டிமோனாவாக பத்மினியும், அன்பில் வாழ்ந்து காட்டினார்கள்.

கண்ணதாசன் வசனம் எழுதிய மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான இல்லற ஜோதியில் சலீம் - அனார்கலியாக சிவாஜி - பத்மினியைச் சந்தித்தார்கள் ரசிகர்கள். ஓரங்க நாடகத்துக்கு மட்டும் காதல் வசனம் எழுதியவர் கலைஞர்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 21, 2023 2:57 am

தினம் ஓயாமல் ஒலித்த சலங்கை ஒலிகளுக்கு நடுவே, பத்மினி கேமரா முன்பு தோன்றினார் என்றே சொல்ல வேண்டும். தூக்கம் தொலைத்த இரவுகளில், பத்மினியின் பஞ்சுப் பாதங்கள் ஓய்வுக்காக ஏங்கும். கடிகாரங்கள்கூட சாவி கொடுத்தால்தான் ஓடும். திருவிதாங்கூர் சகோதரிகளுக்கு அந்த வாய்ப்பும் இல்லை. ராத்திரி பகல் பார்க்காமல், பதத்துக்கு ஆடினார்கள். ராமாயணம், கண்ணகி, தசாவாதாரம், வள்ளித் திருமணம் என நீண்ட நெடிய நாட்டிய நாடகங்கள். கலைத் தாகமா... புகழ் மோகமா எனப் பட்டிமன்றம் நடத்தலாம். வெகு சீக்கிரத்தில், சென்னை, மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்த 12 பங்களாக்கள் அவர்களுக்குச் சொந்தமானது.

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14-ம் தேதியை பாரதப் பிரதமருக்காக ஒதுக்கினார்கள். பத்மினி குழுவினரின் 'கீதோபதேசம்', நேருவுக்கு மிகவும் பிடிக்கும். பாதி ஆட்டத்தில் தன்னை மறந்து அபாரம் அபாரம் என்று கைகளைத் தட்டுவார் ஜவஹர். இந்தியர்களின் ரசிப்புத்தன்மைக்கு நேற்றைய உதாரண புருஷர். உலகின் ஒப்பற்ற தலைவரின் முன், அவரது பிறந்த நாள் தோறும் ஆடும் பாக்கியம், இந்தியாவில் எத்தனை நடன மணிகளுக்குக் கிடைக்கும்!

Nehru.jpg

பத்மினி நாயகியாக அறிமுகமானபோது, தென் இந்தியா முழுவதும் தெலுங்கு நடிகைகளின் ஆதிக்கம் அதிகம்.

1. உணர்ச்சி மிகுந்த நடிப்புக்கும், தெளிவாக வசனம் பேசுவதற்கும் கண்ணாம்பா...

2. நளினமாக நடிக்கவும் இளமையாகப் பாடவும் பானுமதி...

3. டி.ஆர்.மகாலிங்கத்துக்கு முத்தம் கொடுத்து நடித்து கவர்ச்சிக் கன்னியாக அரங்கேறிய அஞ்சலிதேவி...

4. அழகான தோற்றத்துக்கும் வசீகரமான குரலுக்கும் எஸ்.வரலட்சுமி...

5. மனத்தை உருக்கும் நடிப்புக்கு ஜி.வரலட்சுமி

ஆகியோர் போதாது என்று புதுமுகங்களாக வந்த சௌகார் ஜானகி, கிரிஜா, மாலதி, சாவித்ரி போன்றோர், ரசிகப் பெருமக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டார்கள். ஏறக்குறைய நவரத்தினங்கள் மாதிரி அவர்கள் அனைவரும் தமிழிலும் தெலுங்கிலும் ஒரு சேர ஒளிவீசினார்கள்.

அத்தகைய போட்டி மிகுந்த சந்தர்ப்பத்தில், கேரளத்தில் இருந்து முதன் முதலில் தடம் பதித்து, தமிழர்களின் அபிமான நடிகை ஆனவர் பத்மினி. எழுத்தாளர் லஷ்மியின் காஞ்சனையின் கனவு, ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. அதில், லலிதாவும் பத்மினியும்தான் நடிக்க வேண்டும் எனத் தமிழ்நாட்டின் தாய்க்குலங்கள் அபிப்பிராயம் சொன்னார்கள். தட்டாமல் அதை நிறைவேற்றினார், தயாரிப்பாளர் ஸ்ரீராமுலு நாயுடு. மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, லஷ்மியின் படைப்பு காஞ்சனா என்ற பெயரில் வெளியாகி வசூலைக் குவித்தது.

திரையில் பத்மினியை ரசிகர்கள் ஏனோ அதிகம் சிரிக்க விடவில்லை. அவர் அழும்போதும் அழகாக இருந்தார். இறைவனின் வரப்பிரசாதம். அதுவே போதும் என திருப்தி அடைந்தார்கள். புகழின் சமுத்திரத்தில் உற்சாக அலைகளில், தமிழ் சினிமா உலகம் பப்பியைக் கொண்டாடியது.

பத்மினியின் பெயரில் தன் புது சினிமா கம்பெனியை ஆரம்பித்தார் பி.ஆர்.பந்தலு. அதில் முதல் தயாரிப்பு காமெடியாக வளர்ந்தது. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்கிற டைட்டிலில் 100 நாள்கள் ஓடியது. ஆரம்ப நாள்களில், கணேசனைவிட பத்மினிக்கு ஊதியம் மிகவும் கூடுதல். உச்ச நட்சத்திரம் அல்லவா.

தூக்குதூக்கியும் கூண்டுக்கிளியும், 22 ஆகஸ்டு 1954-ல் ஒரே நாளில் வெளியாகின. முதலும் கடைசியுமாக சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த கூண்டுக்கிளியை, வசூலில் தூர வீசி எறிந்த மகத்தான வெற்றிச்சித்திரம் தூக்குதூக்கி. திருவிதாங்கூர் சகோதரிகள் மூவரும் சேர்ந்து நடித்த முதல் படம். சிவாஜி - பத்மினி ஜோடியின் நகைச்சுவை நடிப்பும், இனிய பாடல்களுமாகச் சிகரம் தொட்டது. கூண்டுக்கிளியின் தோல்விக்கான காரணங்களில் முக்கியமானது, பத்மினி அதில் நாயகி இல்லை என்பது.

1954. சிவாஜிக்கும் பத்மினிக்கும் மறக்க முடியாத மன்மத ஆண்டு. வருடக் கடைசியில் வெளியான எதிர்பாராதது, நிஜத்திலும் அப்படியே. தமிழ் சினிமாவின் முதல் மாறுபட்ட காதல் சித்திரம். ஸ்ரீதர் எழுதியது. அன்றைய கல்லூரிகளில் பாடத்தைவிட அதிகம் ஒப்பிக்கப்பட்டவை ஸ்ரீதரின் வசனங்கள். சுமதியாக பத்மினியும் சுந்தராக கணேசனும் பேசியதில் இருந்து சில வரிகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 21, 2023 2:58 am

சுந்தர் - சுமதி! உன் பாட்டிலே நான் அப்படியே மெய்மறந்து...

சுமதி - தூங்கிட்டீங்களா!

சுந்தர் - இல்லை சுமதி. நீ பாடியது வெறும் பாட்டல்ல! என் இதய நரம்புகளை ஒவ்வொன்றாக மீட்டி...

சுமதி - அடடே, வர்ணனை பண்ணக்கூடத் தெரியுமா?

சுந்தர் - இதென்ன பிரமாதம்! இன்னும் கேள். அந்தரங்கத்தில் அரங்கம் நிர்மாணித்து... அ... அ...

சுமதி - என்ன அ'னாவிலே வரணும்னு தேடறீங்களா?

சுந்தர் - ஆமா... இரு இரு. ஆழ்கடலின் நீளத்தைச் சுவராக நிறுத்தி, தவழ்ந்து செல்லும் காற்றைத் தரையாக்கி, வண்ணமலர் இதழ்களை வகையாக அதில் பரப்பி, அந்த இனிய மாளிகையில் இதய ராணியான உன்னோடு இரவும் பகலும் இன்பத்தின் எல்லையில் மிதக்கத் துடிக்கிறேன் சுமதி!

சுமதி - ஒன்ஸ்மோர்!

சுந்தர் - நான் என்ன சொன்னேன்னு எனக்கே புரியல்லை. ஒன்ஸ்மோராம்லே ஒன்ஸ்மோர்!

padmini-4.jpg

அதன் உச்சகட்டக் காட்சியில், நடிப்பு என்பதை மறந்து கணேசனைக் கன்னத்தில் அறைந்தார் பத்மினி. அந்த நிகழ்வு, பப்பியின் வார்த்தைகளில்..

'சிவாஜியின் காதலியான நான், விதி வசத்தால் அவருக்குச் சித்தி ஆகிறேன். கணேசனுக்கோ பார்வை பறி போய்விடுகிறது. அப்பா நாகையாவின் இளம் மனைவியான என்னிடம், பழைய ஞாபகத்தில் சிவாஜி பழகுவதாக நினைக்கிறேன். மனம் பதறி அதைத் தவிர்க்க அவரை அறைவதாக சீன்.

டைரக்டர் சி.எச்.நாராயணமூர்த்தி என்னிடம், 'ரியலிஸ்டிக்கா இருக்கணும். கணேசனை நீ நிஜமாகவே அடிக்கணும்' என்றார். சிவாஜியும், 'பரவாயில்ல தைரியமா விடு ஒரு அறை. சீன் பிரமாதமா வரணும்' எனத் தூண்டினார். இருவருக்குமே அப்படி ஒரு ரிசல்ட் கிடைக்கும் என்று தெரியாது.

ஒரு ஆவேசத்தில், பளார் பளாரென்று சிவாஜியை அடித்து வெளுத்து வாங்கிவிட்டேன். சிவாஜியின் கன்னமெல்லாம் வீங்கிவிட்டது. உடம்பு சரி இல்லாமல் ரெண்டு மூன்று நாள்கள் செட்டுக்கே வரவில்லை.

'பார்க்க சின்னப் பெண்ணாக இருக்கிறாய். உனக்கு எப்படி இவ்வளவு பலம் இருந்தது...?' என்று திகைப்புடன் கேட்டார்.

'நான் பரத நாட்டியம் ஆடி ஆடி, கை விரல்களுக்கு அதிகம் பயிற்சி கொடுத்திருக்கேன் சார். உடல் பலம் எப்படியோ. கைகளின் வலுவுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை’ என்றேன்.

சிவாஜிக்கு என்னால் நேர்ந்த கதியை நினைத்து வருத்தப்பட்டேன். சிவாஜி அதை சட்டை செய்யவில்லை. 'ரொம்ப இயற்கையாக நடித்தாய். அடியால் வலி இருந்தாலும், உன் நடிப்புத் திறமையை நினைத்து சந்தோஷமாகவே இருந்தது பப்பி' என மிகவும் பெருந்தன்மையோடு சொன்னார்.

எதிர்பாராதது படத்தின் இமாலய வெற்றி, சிவாஜி - பத்மினி ஜோடியைத் திரையில் நிரந்தரமாக்கியது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 21, 2023 3:00 am

1955-ம் ஆண்டு பொங்கல் வெளியீடான காவேரி, ராஜாராணி கதை. அந்நாளில் ஏவிஎம்மைவிடப் பிரபலமான லேனா செட்டியாரின் கிருஷ்ணா பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பு. காவேரியும் சிவாஜி - பத்மினி நடிப்பில் 100 நாள்கள் ஓடியது. கிருஷ்ணா பிக்சர்ஸ், பத்மினியின் சொந்த வீடுபோல. அவர் நடிக்க, தொடர்ந்து தமிழிலும் தெலுங்கிலும் படங்களைத் தயாரித்தது.

'நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு. திடீர்னு ஏன் இப்படி’ என வடிவேலு காமெடியாகச் சொல்லும் வசனத்தை, அன்றைக்குத் திரையுலகில் எல்லோரும் சீரியஸாகப் பேசினார்கள். காரணம், டைரக்டர் எல்.வி.பிரசாத். அவர் இயக்கிய மங்கையர் திலகம் படத்தில் தாயாரை அறியாத, அண்ணியையே தெய்வமாகப் போற்றும் வாசுவாக சிவாஜி. அண்ணி சுலோசனாவாக பத்மினி. அண்ணன் கருணாகரனாக எஸ்.வி.சுப்பையா. அண்ணிக்கும் மைத்துனனுக்கும் உள்ள பாசப்பிணைப்பைப் புரிந்துகொள்ள மறுக்கும் மனைவி பிரபாவாக எம்.என்.ராஜம் நடித்தார்கள். இந்த நான்கு கேரக்டர்களின் உணர்ச்சிக் குமுறல்களே திரைக்கதை. கே.ஏ.தங்கவேலு - ராகினி காமெடி இருந்தாலும், படம் ரொம்ப சீரியஸ். வாஹினியின் வளையல்கள் என்கிற மராட்டிய சினிமாவின் மறு வடிவம்.

நிஜத்தில், இயக்குநருக்கு மிகப்பெரிய சவால். டஜன் கணக்கில் சிவாஜியும் பத்மினியும் ஜோடியாக நடித்து வந்த சூழல். மங்கையர் திலகத்தில் நிகழ்ந்த மாற்றத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்கிற சந்தேகம். இந்தப் படத்தின் வெற்றி தோல்வி, நிச்சயம் தமிழ் சினிமா வணிகத்தைப் பாதிக்கக்கூடும் என்றெல்லாம் பேசினார்கள், கோலிவுட் பண்டிதர்கள்.

பிரசாத் புத்திசாலி. சிவாஜியும் பத்மினியும் தனியாகச் சேர்ந்து நிற்கும் காட்சியே வராமல், படத்தை இயக்கினார். 21 வயதுகூட நிறைவு பெறாத பத்மினிக்கு மிகப்பெரிய லைஃப் டைம் ரோல். முக்கியமான காட்சிகளில், சிவாஜியும் பிரசாத்தும் பத்மினிக்கு நடிக்கக் கற்றுக் கொடுத்தனர். ஆகஸ்ட் 26, 1955-ல் படம் வெளியானபோது, ரசிகர்களால் திரையில் பத்மினியைப் பார்க்க முடியவில்லை. சுலோசனாவைத்தான் கண்டார்கள்.

நாயகியின் மேக் அப்பில் மிகப்பெரிய மாற்றம் செய்திருந்தார் பிரசாத். பத்மினியின் அழகும் யவ்வனமும் எளிதில் வெளிப்பட்டுவிடாதபடி, சேலைகளில் பத்மினியை மிக கௌரவமாகக் காட்டினார். பத்மினியிடம் அவ்வளவு மெச்சூரிட்டியான மிக இயல்பான நடிப்பு. கடைசியில் அவர் இறந்துவிடுவார். கதறி அழுத சிவாஜியோடு சேர்ந்து ஜனங்களும் கண்ணீர் விட்டனர். திரை முழுக்க முழுக்க பத்மினியின் சுய ராஜ்ஜியம். சிவாஜி ஸ்கிரீனில் வர ஏறக்குறைய ஒரு மணி நேரம் ஆகிவிடும். அதுவரை சின்ன சிவாஜியாக வரும் பொடி நடிகனின் அற்புதமான நடிப்பு நெஞ்சை அள்ளும். இன்றும் 21 வயதில் நிறைய அழகான நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பத்மினிகூட நிச்சயம் அகப்படமாட்டார்.

பத்மினிக்குப் பிறகு அறிமுகமாகி, நடிப்பில் அவரையும் முந்திக்கொண்டு, 'நடிகையர் திலகம்’ எனப் பட்டம் பெற்றவர் சாவித்ரி ஒருவரே. ஒரே நேரத்தில் தமிழிலும் தெலுங்கிலும் வெற்றிகளை விடாது குவித்தவர். ரூபாவாக பத்மினியும், அருணாவாக சாவித்ரியும், அசோக்காக சிவாஜியும் நிறைவாக நடித்த படம், வீனஸ் பிக்சர்ஸ் அமரதீபம்.

இளமை வழிந்தோடிய அந்தக் காதல் சித்திரம், டைரக்டர் ஆவதற்கு முன்பாகவே கதாசிரியர் ஸ்ரீதரை வெற்றிகரமான பட முதலாளியாக ஆக்கியது. கையில் நயா பைசா முதல் போடாமல், நட்சத்திரங்களுக்கு அட்வான்ஸ் கொடுக்கவும் தரவும் வாய்ப்பு இல்லாத நிலை. ஸ்ரீதரின் எழுத்தின் மேல் உள்ள நம்பிக்கையில், அன்றைய பெரிய நட்சத்திரங்கள் மூவரும் உடனடியாக கால்ஷீட் தந்தனர். பத்மினி - சாவித்ரி இருவரும் சிவாஜியோடு ஜோடி சேர்ந்து நடிப்பதாக தினசரிகளில் பட விளம்பரங்கள் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்ரீதரிடம் கோலிவுட் சீமான்கள் லட்சக்கணக்கில் கொண்டு வந்து கொட்டி விநியோக உரிமை பெற்றனர். நட்சத்திர செல்வாக்கு என்பதன் முழுமையான அர்த்தம் அது. அந்த நொடி முதலே ரசிகைகளின் உள்ளத்துக்குள் பத்மினியா, சாவித்ரியா? யார் அமரதீபம் என்ற ஆர்வத்தீ. க்ளைமாக்ஸில், தன் தங்கை அருணாவுக்காக அசோக்கை தியாகம் செய்துவிட்டு, நாடோடிப் பெண் ரூபாவாக வரும் பத்மினி இறந்துவிடுவார். அமரதீபம் மகத்தான சக்ஸஸ். உடனடியாக இந்தியிலும் எடுத்தார்கள். இந்தியிலும் ரூபாவாக பத்மினி. அருணா வேடத்தில் வைஜெயந்திமாலா. ஹீரோ தேவ் ஆனந்த்.

இன்றைய அனேகன் தனுஷின் டங்கா மாரி ஊதாரிக்கெல்லாம் பிள்ளையார் சுழி, அமரதீபத்தில் ஒலித்த ஜாலிலோ ஜிம்கானா பாடல். ஜிப்ஸி பெண்ணான பத்மினி, தெருவில் ஆடுவதற்காக, தஞ்சை ராமையாதாஸ் எழுதிய அர்த்தம் நிறைந்த பாட்டு! இப்போதும் பெரிசுகள் அதைக் கேட்டவுடன், பப்பியை எண்ணிக் கனவு காண்பார்கள். பத்மினியின் சக்கைப் போடு போட்ட 'ம' வரிசைப் படங்கள்போல், வசூலில் நிறைவை தராவிட்டாலும், ரசிகர்களின் மனத்தில் நீங்கா இடம் பிடித்த படம், கலைஞரின் புதையல். துரையாக சிவாஜி, பரிமளமாக பத்மினி, துக்காராமாக சந்திரபாபு. மூவரும் முற்றிலும் மாறுபட்டு நடித்தார்கள்.

நட்சத்திரங்கள், செட்டுக்குள் காகிதப்பூக்களுக்கு நடுவே பொய்க் காதல் பேசி நடித்ததே வாடிக்கை. அதை மீறி, சிவாஜி - பத்மினி ஜோடியை, கடற்கரையில் 'விண்ணோடும் முகிலோடும்...’ என தங்களை மறந்து இயற்கையோடு ஐக்கியப்படுத்தி, ஆடிப்பாட வைத்தனர், டைரக்டர்கள் கிருஷ்ணன் - பஞ்சு.

எல்லா டிவி சேனல்களிலும் அடிக்கடி இடம்பெறும் அந்தப் பாடல் காட்சியில், சிவாஜியின் அந்தர் பல்டியும், பத்மினியுடனான கொஞ்சலும் எப்போது பார்த்தாலும் புதிதாகவே தோன்றும். காதல் வசனங்களை பத்மினிக்காக எழுதுகிறோம் என்பதில் கலைஞருக்கும் குஷி போலும். புதையல் படத்தில் ஹைலைட் அவை.

'லவ் சீன் நியூ ஸ்டைல்! சிவாஜி, பத்மினி மூக்கைப் பிடிச்சுண்டு விளையாடறதும், தலை மயிரைப் பிடிச்சி இழுக்கறதும் பிரமாதம்! ஓரணா நாணயத்தின் விளிம்புபோல் அழகு உன் கூந்தல் என்கிறான். காதல் சீன் டயலாக் எல்லாம் கல்கண்டாட்டமா இருக்கு’ என மனம் திறந்து பாராட்டியது ஆனந்த விகடன் விமரிசனம்.

தங்கப்பதுமையும், தெய்வப்பிறவியும் சிவாஜி - பத்மினி சேர்ந்து நடித்ததில் எவராலும் மறக்க முடியாத கலைப் பொக்கிஷங்கள். நிஜத்தில், பத்மினியின் குரல் ஆண்மையோடு ஒலிக்கும். தொலைபேசியில் அவர் பேசினால், புதிதாகக் கேட்பவர்களுக்குப் பேசுவது பத்மினியா, அவரது அண்ணன் தம்பி யாராவதா என்ற குழப்பம் நிச்சயம் வரும். ஆணின் குரலை வைத்துக்கொண்டா மலையாளத்து பத்மினி, அருந்தமிழில் அத்தனை அற்புதமாகப் பெண்மையின் இயல்புகளை, சிறப்பை வெளிப்படுத்தினார் என்கிற திகைப்பு தோன்றும்.

தன் கணவனுடைய கண்கள் குருடாகிவிட்டன எனத் தெரிந்ததும், தங்கப்பதுமையில் 'உங்கள் கண்கள் எங்கே அத்தான்...’ என வீறிட்டு அலறுவாரே. அப்போது கல் நெஞ்சங்களும் கரையும். ஏதோ நிஜமான புருஷனுக்காகக் கூச்சலிடும் மனைவியின் அடிவயிற்றுக் கதறலாக நினைத்து, நிசப்தத்தின் அரங்குகள் கண்ணீரில் நீச்சல் அடிக்கும். 1959 பொங்கலுக்கு தங்கப்பதுமை ரிலீசானபோது, ஏனோ பிரமாதமாக ஓடாமல் போனது. மறு வெளியீடுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. எடுத்த எடுப்பில் வெற்றி பெறாவிட்டாலும், தங்கப்பதுமையில் சிவாஜி - பத்மினி நடிப்பு, ஏவி.எம். செட்டியாரின் திட்டத்தைக் கிடப்பில் போட்டது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 21, 2023 3:00 am


கலைஞர் வசனத்தில் கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் மீண்டும் கண்ணகியை திரையில் காட்ட முயற்சி நடந்தது. கோவலனாக கணேசன், கண்ணகியாக பத்மினியை நடிக்க வைக்கத் திட்டம் உருவானது. தங்கப்பதுமையும் ஏறக்குறைய பத்தினிப் பெண் ஒருவரின் பரிதவிப்பு. அதை பத்மினி பிரமாதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். அதுவே போதும் என செட்டியார் புத்திசாலித்தனமாக முடிவெடுத்தார்.

தங்கமாக பத்மினியும் மாதவனாக சிவாஜியும் தெய்வப்பிறவியில் நடித்ததாகச் சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். நிஜமாக வாழ்ந்தார்கள். சந்தேகச் சுவர்களுக்குள், குழப்பத்தின் கால்களில் சதிராடும் தம்பதிகள். கணவர் சிவாஜியை அடிக்கப் பாயும் தம்பி எஸ்.எஸ்.ஆரை, அக்கா பத்மினி குடையால் பிளக்கும் காட்சியில், மீண்டும் நிஜமாகவே பிய்த்து உதறிவிட்டார்! குடையை அல்ல ராஜேந்திரனை. அந்த ஒரு காட்சிக்காகவே தியேட்டர்களில் மீண்டும் மீண்டும் ரசிகர்கள் குவிந்தனர்.

உணர்ச்சிக் காவியம் என்று சொன்னால், உடனே அடையாளம் காட்டப்பட்ட அன்றைய உன்னதம் தெய்வப்பிறவி. கருப்பு வெள்ளைக் காலத்தில் வந்த மிகச் சிறந்த 10 படங்களில் தெய்வப்பிறவி ஒன்று! மிக முக்கியமானது.

திருமணத்துக்குப் பிறகு பத்மினி திரும்பவும் நடிக்க வந்த வேளையில், தமிழ் சினிமா தேவிகாவுக்கு மாறி இருந்தது. பத்மினியின் இடத்தில் சிவாஜிக்குப் பக்கத்தில் தேவிகாவின் அன்புக்கரங்கள். தமிழில் தலை தூக்க பத்மினி ரொம்பவே சிரமப்பட்டார். 1966 பொங்கலுக்கு கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் சித்தி வரும் வரையில், மாடர்ன் தியேட்டர்ஸ் காட்டு ரோஜாவாக தனித்து வாடினார்.

சித்தியில் எம்.ஆர்.ராதாவின் கெடுபிடிக்கு ஆளாகும் மனைவி மீனாட்சியாக ஜொலி ஜொலிப்பான நடிப்பு. பி.சுசிலாவின் தாய்மை சிந்தும் குரலில் 'பெண்ணாகப் பிறந்தவருக்கு கண் உறக்கம் இரண்டு முறை’ என்கிற கண்ணதாசனின் ஆறு நிமிடத் தாலாட்டுப் பாடல், பத்மினிக்குப் புது வாழ்வை உறுதிப்படுத்தியது. அட்டகாசமாக 100 நாள்கள் ஓடி, பெண்களிடையே பத்மினியின் மதிப்பு மீண்டும் உயர்ந்தது. சித்தியில் பத்மினியின் நடிப்பை பாராட்டாத பத்திரிகைகள் கிடையாது.

சித்தியின் உச்சகட்டப் பெருமிதம், ஜெமினி ஸ்டூடியோ அதை ஹிந்தியில் தயாரித்தது. அவ்ரத் என்ற அந்தப் படத்தில், நாயகி பத்மினிக்குத் தம்பியாக, முத்துராமன் வேடத்தில் வந்தவர் புதுமுகம் ராஜேஷ் கன்னா.

ஏ.பி.நாகராஜனின் சரஸ்வதி சபதத்தில் பார்வதியாக பத்மினி தோன்றினார். 1967-ல், சிவாஜி கணேசனோடு மறுபடியும் ஜோடி சேரும் வாய்ப்பை, பேசும் தெய்வத்தில் கே.எஸ்.ஜி. அளித்தார். மீண்டும் வசந்தம்!

மார்க்கெட் போனால் அம்மா, அக்கா வேஷம்தான் என்பதை, முதன் முதலில் முறியடித்தவர் பத்மினி! நாற்பதை நெருங்கியும், கனவுக்காட்சிகளில் 'அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்ததோ’ என்று சிவாஜியை பத்மினியுடன் டூயட் பாடவைத்தார் கே.எஸ்.ஜி.

கோபாலகிருஷ்ணனின் இன்னொரு மறக்கமுடியாத படைப்பு, கண் கண்ட தெய்வம். அதில் எஸ்.வி.ரங்காராவ், எஸ்.வி.சுப்பையா ஆகியோருடன் பத்மினிக்கும் பலத்த நடிப்புப் போட்டி. தமிழகத்தின் மண்வாசனை வீசும் பண்பாட்டுக் காட்சிகளில், பத்மினியின் புகழ் கூடுதலாயிற்று. அதைத் தொடர்ந்து, 1967 தீபாவளிக்கு வெளியான இருமலர்களில் ஒரு மலர் பத்மினி. 100 நாள்கள் ஓடியது. விடா முயற்சியோடு போராடி வெற்றிக்கோட்டைச் சீக்கிரத்தில் தொட்டு விட்டார் பத்மினி.

எந்த ஹீரோவும் இல்லாமல், 1968 இறுதியில் பத்மினி நடித்த படம் குழந்தைக்காக. கொலைக்கார வில்லன்களுடன் போராடி, பேபி ராணியைக் காப்பற்ற வேண்டி, இரும்புப் பெண்மணியாக, காட்சிக்கு காட்சி பதற்றம் காட்டி பப்பி தனி ஆவர்த்தனம் புரிந்தார். 100 நாள்கள் ஓடியது. அதே படம் ஹிந்தியில் உருவானபோதும் பத்மினியே நாயகி.

1969-ல் பத்மினி நடித்து வெளியான ஒரே படம் குருதட்சணை. புராணப் படங்கள் தயாரித்து வந்த ஏ.பி.நாகராஜனின் சமூகச் சித்திரம். சிவாஜி, கல்வி கற்க விரும்பும் கிராமத்தானாகவும், பள்ளி ஆசிரியையாக பத்மினியும் நடித்தனர். தன் படிக்கும் ஆசையை சொல்லி பத்மினியின் கால்களில் விழுவார் சிவாஜி. அவரது ரசிகர்கள் அதை ஏற்கவில்லை. நிஜத்தில் மாறுபட்ட கதையாக இருந்தாலும், படம் படுதோல்வி.

1970-ல் கணேசனோடு இரண்டு வெற்றிப்படங்கள். 1. ஜெமினியின் விளையாட்டுப்பிள்ளை, 2. சிவாஜி புரொடக்ஷன்ஸ் முதல் தயாரிப்பு வியட்நாம் வீடு. விளையாட்டுப்பிள்ளையில் நடிக்கும்போது ஒரு விபரீதம் எதிர்பாராமல் நடந்தது. எமோஷனல் சீனில் தன்னை மறந்து, பாசாங்கு இன்றி பத்மினியின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டார் சிவாஜி. அதன் விளைவு, பத்மினியின் கம்மல் கழன்று அடுத்த ஃப்ளோரில் போய் விழுந்தது. காட்சி ஓகே.

ஷாட் முடிந்ததும் பத்மினியைக் காணோம். அடுத்த சீனுக்காக தேடிப் போய்ப் பார்த்தால், ஓர் ஓரமாக நாற்காலியில் உட்கார்ந்து பத்மினி கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தார். கன்னம் வீங்கி, அழுது அழுது கண்களும் முகமும் சிவந்து, 'ஸாரி ஒண்ணுமில்ல. வலி தாங்கல. அஞ்சு நிமிஷம் கழிச்சி முழுசா அழுதுட்டு வரேன். ப்ளீஸ் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க’ என்றார்.

வியட்நாம் வீடு நாடகத்தில், கணேசனின் ஜோடியாக சாவித்ரி மாமியாக பிரமாதப்படுத்தியவர் ஜி.சகுந்தலா. டிராமா சினிமா ஆகிறது என்றதும் தனக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று கனவு கண்டார். ஆனால், சிவாஜியின் சாய்ஸ் பத்மினி. 'அவருக்குதான் நட்சத்திர அந்தஸ்து இருக்கிறது. சினிமா வெற்றி பெற மார்க்கெட் உள்ள ஆர்ட்டிஸ்ட் ரொம்ப முக்கியம்’ என்று சகுந்தலாவுக்கு சந்தர்ப்பம் தரவில்லை. வேதனையோடு வீடு திரும்பினார் சகுந்தலா. பத்மினி அவருக்குப் பிராண சிநேகிதி. அவர் தனக்காக சிவாஜியிடம் சிபாரிசு செய்யாமல் போய்விட்டாரே என்கிற தீராத காயம், சகுந்தலாவுக்கு அவர் மறையும் வரையில் நீடித்தது.

சாவித்ரி மாமியாக பத்மினி, மடிசார் புடவை கட்டிக்கொண்டு 'பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா’வுக்காகப் பாடி ஆடினார். வித்தியாசமாக, பிராமண பாஷை பேசி வியட்நாம் வீடு படத்தில் வலம் வந்தார். ஆனால், ஜி.சகுந்தலா அவரை விடச் சிறப்பாக நடித்ததாக, ரசிகர்கள் சிலர் பத்திரிகைகளில் எழுதினர்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 21, 2023 3:00 am


கணவர் ராமச்சந்திரனின் மருத்துவப் படிப்பு லண்டனில் முடிந்தது. அடுத்து அவரோடு பத்மினி அமெரிக்காவுக்குக் குடி போக வேண்டிய நிர்ப்பந்தம். கே.பாலாஜியின் எங்கிருந்தோ வந்தாள் படத்திலும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் குறத்தி மகனிலும் தொடர்ந்து நடிக்க இயலாமல் போனது.

1971-ல் சிவாஜி - பத்மினி நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் பி.எஸ்.வீரப்பாவின் இருதுருவம். திலீப்குமார் - வைஜெயந்தி மாலா நடித்த ஹிந்தி சூப்பர் டூப்பர் கங்கா ஜமுனாவின் தமிழ் வடிவம். பொங்கலுக்கு வெளியாகி ஏனோ வெற்றிபெறாமல் போனது.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் குலமா குணமா, சிவாஜி - பத்மினி ஜோடிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தது. அவர்களின் கடைசி 100 நாள் படம் அது. அதற்குப் பிறகு வெளியான தேனும் பாலும் படமும் வசூலாகியது. பத்மினியும் சரோஜா தேவியும் சிவாஜியோடு முதலும் கடைசியுமாக தேனும் பாலுமாகத் தோன்றினார்கள்.

1986-ல், சிவாஜியுடன் நிறைவாக தாய்க்கு ஒரு தாலாட்டு, லட்சுமி வந்தாச்சு என கை கோர்த்தார். புதிய பறவையில் ஒலித்தது விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் 'உன்னை ஒன்று கேட்பேன்’ பாடல். அதே மெட்டில், இசைஞானியின் கைவண்ணத்தில் 'பழைய பாடல்போல புதிய பாடல் இல்லை’ என டிஎம்எஸ் - பி.சுசிலா குரல்களில், தாய்க்கு ஒரு தாலாட்டில் சிவாஜி - பத்மினி ஜோடி வாயசைத்துப் பாடியது. அதுவே அவர்களின் கடைசி டூயட்!

ஏறக்குறைய 40 சினிமாக்களில் தமிழர்களின் வாழ்க்கையோடு ஒன்றிக் கலந்துவிட்ட, சிவாஜி - பத்மினி ஜோடியின் ஒப்பற்ற ஆற்றலை, தினந்தோறும் சின்னத்திரைகளில் பார்க்கலாம்.1955-ம் ஆண்டு பொங்கல் வெளியீடான காவேரி, ராஜாராணி கதை. அந்நாளில் ஏவிஎம்மைவிடப் பிரபலமான லேனா செட்டியாரின் கிருஷ்ணா பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பு. காவேரியும் சிவாஜி - பத்மினி நடிப்பில் 100 நாள்கள் ஓடியது. கிருஷ்ணா பிக்சர்ஸ், பத்மினியின் சொந்த வீடுபோல. அவர் நடிக்க, தொடர்ந்து தமிழிலும் தெலுங்கிலும் படங்களைத் தயாரித்தது.

'நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு. திடீர்னு ஏன் இப்படி’ என வடிவேலு காமெடியாகச் சொல்லும் வசனத்தை, அன்றைக்குத் திரையுலகில் எல்லோரும் சீரியஸாகப் பேசினார்கள். காரணம், டைரக்டர் எல்.வி.பிரசாத். அவர் இயக்கிய மங்கையர் திலகம் படத்தில் தாயாரை அறியாத, அண்ணியையே தெய்வமாகப் போற்றும் வாசுவாக சிவாஜி. அண்ணி சுலோசனாவாக பத்மினி. அண்ணன் கருணாகரனாக எஸ்.வி.சுப்பையா. அண்ணிக்கும் மைத்துனனுக்கும் உள்ள பாசப்பிணைப்பைப் புரிந்துகொள்ள மறுக்கும் மனைவி பிரபாவாக எம்.என்.ராஜம் நடித்தார்கள். இந்த நான்கு கேரக்டர்களின் உணர்ச்சிக் குமுறல்களே திரைக்கதை. கே.ஏ.தங்கவேலு - ராகினி காமெடி இருந்தாலும், படம் ரொம்ப சீரியஸ். வாஹினியின் வளையல்கள் என்கிற மராட்டிய சினிமாவின் மறு வடிவம்.

நிஜத்தில், இயக்குநருக்கு மிகப்பெரிய சவால். டஜன் கணக்கில் சிவாஜியும் பத்மினியும் ஜோடியாக நடித்து வந்த சூழல். மங்கையர் திலகத்தில் நிகழ்ந்த மாற்றத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்கிற சந்தேகம். இந்தப் படத்தின் வெற்றி தோல்வி, நிச்சயம் தமிழ் சினிமா வணிகத்தைப் பாதிக்கக்கூடும் என்றெல்லாம் பேசினார்கள், கோலிவுட் பண்டிதர்கள்.

பிரசாத் புத்திசாலி. சிவாஜியும் பத்மினியும் தனியாகச் சேர்ந்து நிற்கும் காட்சியே வராமல், படத்தை இயக்கினார். 21 வயதுகூட நிறைவு பெறாத பத்மினிக்கு மிகப்பெரிய லைஃப் டைம் ரோல். முக்கியமான காட்சிகளில், சிவாஜியும் பிரசாத்தும் பத்மினிக்கு நடிக்கக் கற்றுக் கொடுத்தனர். ஆகஸ்ட் 26, 1955-ல் படம் வெளியானபோது, ரசிகர்களால் திரையில் பத்மினியைப் பார்க்க முடியவில்லை. சுலோசனாவைத்தான் கண்டார்கள்.

நாயகியின் மேக் அப்பில் மிகப்பெரிய மாற்றம் செய்திருந்தார் பிரசாத். பத்மினியின் அழகும் யவ்வனமும் எளிதில் வெளிப்பட்டுவிடாதபடி, சேலைகளில் பத்மினியை மிக கௌரவமாகக் காட்டினார். பத்மினியிடம் அவ்வளவு மெச்சூரிட்டியான மிக இயல்பான நடிப்பு. கடைசியில் அவர் இறந்துவிடுவார். கதறி அழுத சிவாஜியோடு சேர்ந்து ஜனங்களும் கண்ணீர் விட்டனர். திரை முழுக்க முழுக்க பத்மினியின் சுய ராஜ்ஜியம். சிவாஜி ஸ்கிரீனில் வர ஏறக்குறைய ஒரு மணி நேரம் ஆகிவிடும். அதுவரை சின்ன சிவாஜியாக வரும் பொடி நடிகனின் அற்புதமான நடிப்பு நெஞ்சை அள்ளும். இன்றும் 21 வயதில் நிறைய அழகான நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பத்மினிகூட நிச்சயம் அகப்படமாட்டார்.

பத்மினிக்குப் பிறகு அறிமுகமாகி, நடிப்பில் அவரையும் முந்திக்கொண்டு, 'நடிகையர் திலகம்’ எனப் பட்டம் பெற்றவர் சாவித்ரி ஒருவரே. ஒரே நேரத்தில் தமிழிலும் தெலுங்கிலும் வெற்றிகளை விடாது குவித்தவர். ரூபாவாக பத்மினியும், அருணாவாக சாவித்ரியும், அசோக்காக சிவாஜியும் நிறைவாக நடித்த படம், வீனஸ் பிக்சர்ஸ் அமரதீபம்.

இளமை வழிந்தோடிய அந்தக் காதல் சித்திரம், டைரக்டர் ஆவதற்கு முன்பாகவே கதாசிரியர் ஸ்ரீதரை வெற்றிகரமான பட முதலாளியாக ஆக்கியது. கையில் நயா பைசா முதல் போடாமல், நட்சத்திரங்களுக்கு அட்வான்ஸ் கொடுக்கவும் தரவும் வாய்ப்பு இல்லாத நிலை. ஸ்ரீதரின் எழுத்தின் மேல் உள்ள நம்பிக்கையில், அன்றைய பெரிய நட்சத்திரங்கள் மூவரும் உடனடியாக கால்ஷீட் தந்தனர். பத்மினி - சாவித்ரி இருவரும் சிவாஜியோடு ஜோடி சேர்ந்து நடிப்பதாக தினசரிகளில் பட விளம்பரங்கள் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்ரீதரிடம் கோலிவுட் சீமான்கள் லட்சக்கணக்கில் கொண்டு வந்து கொட்டி விநியோக உரிமை பெற்றனர். நட்சத்திர செல்வாக்கு என்பதன் முழுமையான அர்த்தம் அது. அந்த நொடி முதலே ரசிகைகளின் உள்ளத்துக்குள் பத்மினியா, சாவித்ரியா? யார் அமரதீபம் என்ற ஆர்வத்தீ. க்ளைமாக்ஸில், தன் தங்கை அருணாவுக்காக அசோக்கை தியாகம் செய்துவிட்டு, நாடோடிப் பெண் ரூபாவாக வரும் பத்மினி இறந்துவிடுவார். அமரதீபம் மகத்தான சக்ஸஸ். உடனடியாக இந்தியிலும் எடுத்தார்கள். இந்தியிலும் ரூபாவாக பத்மினி. அருணா வேடத்தில் வைஜெயந்திமாலா. ஹீரோ தேவ் ஆனந்த்.

இன்றைய அனேகன் தனுஷின் டங்கா மாரி ஊதாரிக்கெல்லாம் பிள்ளையார் சுழி, அமரதீபத்தில் ஒலித்த ஜாலிலோ ஜிம்கானா பாடல். ஜிப்ஸி பெண்ணான பத்மினி, தெருவில் ஆடுவதற்காக, தஞ்சை ராமையாதாஸ் எழுதிய அர்த்தம் நிறைந்த பாட்டு! இப்போதும் பெரிசுகள் அதைக் கேட்டவுடன், பப்பியை எண்ணிக் கனவு காண்பார்கள். பத்மினியின் சக்கைப் போடு போட்ட 'ம' வரிசைப் படங்கள்போல், வசூலில் நிறைவை தராவிட்டாலும், ரசிகர்களின் மனத்தில் நீங்கா இடம் பிடித்த படம், கலைஞரின் புதையல். துரையாக சிவாஜி, பரிமளமாக பத்மினி, துக்காராமாக சந்திரபாபு. மூவரும் முற்றிலும் மாறுபட்டு நடித்தார்கள்.

நட்சத்திரங்கள், செட்டுக்குள் காகிதப்பூக்களுக்கு நடுவே பொய்க் காதல் பேசி நடித்ததே வாடிக்கை. அதை மீறி, சிவாஜி - பத்மினி ஜோடியை, கடற்கரையில் 'விண்ணோடும் முகிலோடும்...’ என தங்களை மறந்து இயற்கையோடு ஐக்கியப்படுத்தி, ஆடிப்பாட வைத்தனர், டைரக்டர்கள் கிருஷ்ணன் - பஞ்சு.

எல்லா டிவி சேனல்களிலும் அடிக்கடி இடம்பெறும் அந்தப் பாடல் காட்சியில், சிவாஜியின் அந்தர் பல்டியும், பத்மினியுடனான கொஞ்சலும் எப்போது பார்த்தாலும் புதிதாகவே தோன்றும். காதல் வசனங்களை பத்மினிக்காக எழுதுகிறோம் என்பதில் கலைஞருக்கும் குஷி போலும். புதையல் படத்தில் ஹைலைட் அவை.

'லவ் சீன் நியூ ஸ்டைல்! சிவாஜி, பத்மினி மூக்கைப் பிடிச்சுண்டு விளையாடறதும், தலை மயிரைப் பிடிச்சி இழுக்கறதும் பிரமாதம்! ஓரணா நாணயத்தின் விளிம்புபோல் அழகு உன் கூந்தல் என்கிறான். காதல் சீன் டயலாக் எல்லாம் கல்கண்டாட்டமா இருக்கு’ என மனம் திறந்து பாராட்டியது ஆனந்த விகடன் விமரிசனம்.

தங்கப்பதுமையும், தெய்வப்பிறவியும் சிவாஜி - பத்மினி சேர்ந்து நடித்ததில் எவராலும் மறக்க முடியாத கலைப் பொக்கிஷங்கள். நிஜத்தில், பத்மினியின் குரல் ஆண்மையோடு ஒலிக்கும். தொலைபேசியில் அவர் பேசினால், புதிதாகக் கேட்பவர்களுக்குப் பேசுவது பத்மினியா, அவரது அண்ணன் தம்பி யாராவதா என்ற குழப்பம் நிச்சயம் வரும். ஆணின் குரலை வைத்துக்கொண்டா மலையாளத்து பத்மினி, அருந்தமிழில் அத்தனை அற்புதமாகப் பெண்மையின் இயல்புகளை, சிறப்பை வெளிப்படுத்தினார் என்கிற திகைப்பு தோன்றும்.

தன் கணவனுடைய கண்கள் குருடாகிவிட்டன எனத் தெரிந்ததும், தங்கப்பதுமையில் 'உங்கள் கண்கள் எங்கே அத்தான்...’ என வீறிட்டு அலறுவாரே. அப்போது கல் நெஞ்சங்களும் கரையும். ஏதோ நிஜமான புருஷனுக்காகக் கூச்சலிடும் மனைவியின் அடிவயிற்றுக் கதறலாக நினைத்து, நிசப்தத்தின் அரங்குகள் கண்ணீரில் நீச்சல் அடிக்கும். 1959 பொங்கலுக்கு தங்கப்பதுமை ரிலீசானபோது, ஏனோ பிரமாதமாக ஓடாமல் போனது. மறு வெளியீடுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. எடுத்த எடுப்பில் வெற்றி பெறாவிட்டாலும், தங்கப்பதுமையில் சிவாஜி - பத்மினி நடிப்பு, ஏவி.எம். செட்டியாரின் திட்டத்தைக் கிடப்பில் போட்டது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 21, 2023 3:01 am


கலைஞர் வசனத்தில் கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் மீண்டும் கண்ணகியை திரையில் காட்ட முயற்சி நடந்தது. கோவலனாக கணேசன், கண்ணகியாக பத்மினியை நடிக்க வைக்கத் திட்டம் உருவானது. தங்கப்பதுமையும் ஏறக்குறைய பத்தினிப் பெண் ஒருவரின் பரிதவிப்பு. அதை பத்மினி பிரமாதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். அதுவே போதும் என செட்டியார் புத்திசாலித்தனமாக முடிவெடுத்தார்.

தங்கமாக பத்மினியும் மாதவனாக சிவாஜியும் தெய்வப்பிறவியில் நடித்ததாகச் சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். நிஜமாக வாழ்ந்தார்கள். சந்தேகச் சுவர்களுக்குள், குழப்பத்தின் கால்களில் சதிராடும் தம்பதிகள். கணவர் சிவாஜியை அடிக்கப் பாயும் தம்பி எஸ்.எஸ்.ஆரை, அக்கா பத்மினி குடையால் பிளக்கும் காட்சியில், மீண்டும் நிஜமாகவே பிய்த்து உதறிவிட்டார்! குடையை அல்ல ராஜேந்திரனை. அந்த ஒரு காட்சிக்காகவே தியேட்டர்களில் மீண்டும் மீண்டும் ரசிகர்கள் குவிந்தனர்.

உணர்ச்சிக் காவியம் என்று சொன்னால், உடனே அடையாளம் காட்டப்பட்ட அன்றைய உன்னதம் தெய்வப்பிறவி. கருப்பு வெள்ளைக் காலத்தில் வந்த மிகச் சிறந்த 10 படங்களில் தெய்வப்பிறவி ஒன்று! மிக முக்கியமானது.

திருமணத்துக்குப் பிறகு பத்மினி திரும்பவும் நடிக்க வந்த வேளையில், தமிழ் சினிமா தேவிகாவுக்கு மாறி இருந்தது. பத்மினியின் இடத்தில் சிவாஜிக்குப் பக்கத்தில் தேவிகாவின் அன்புக்கரங்கள். தமிழில் தலை தூக்க பத்மினி ரொம்பவே சிரமப்பட்டார். 1966 பொங்கலுக்கு கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் சித்தி வரும் வரையில், மாடர்ன் தியேட்டர்ஸ் காட்டு ரோஜாவாக தனித்து வாடினார்.

சித்தியில் எம்.ஆர்.ராதாவின் கெடுபிடிக்கு ஆளாகும் மனைவி மீனாட்சியாக ஜொலி ஜொலிப்பான நடிப்பு. பி.சுசிலாவின் தாய்மை சிந்தும் குரலில் 'பெண்ணாகப் பிறந்தவருக்கு கண் உறக்கம் இரண்டு முறை’ என்கிற கண்ணதாசனின் ஆறு நிமிடத் தாலாட்டுப் பாடல், பத்மினிக்குப் புது வாழ்வை உறுதிப்படுத்தியது. அட்டகாசமாக 100 நாள்கள் ஓடி, பெண்களிடையே பத்மினியின் மதிப்பு மீண்டும் உயர்ந்தது. சித்தியில் பத்மினியின் நடிப்பை பாராட்டாத பத்திரிகைகள் கிடையாது.

சித்தியின் உச்சகட்டப் பெருமிதம், ஜெமினி ஸ்டூடியோ அதை ஹிந்தியில் தயாரித்தது. அவ்ரத் என்ற அந்தப் படத்தில், நாயகி பத்மினிக்குத் தம்பியாக, முத்துராமன் வேடத்தில் வந்தவர் புதுமுகம் ராஜேஷ் கன்னா.

ஏ.பி.நாகராஜனின் சரஸ்வதி சபதத்தில் பார்வதியாக பத்மினி தோன்றினார். 1967-ல், சிவாஜி கணேசனோடு மறுபடியும் ஜோடி சேரும் வாய்ப்பை, பேசும் தெய்வத்தில் கே.எஸ்.ஜி. அளித்தார். மீண்டும் வசந்தம்!

மார்க்கெட் போனால் அம்மா, அக்கா வேஷம்தான் என்பதை, முதன் முதலில் முறியடித்தவர் பத்மினி! நாற்பதை நெருங்கியும், கனவுக்காட்சிகளில் 'அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்ததோ’ என்று சிவாஜியை பத்மினியுடன் டூயட் பாடவைத்தார் கே.எஸ்.ஜி.

கோபாலகிருஷ்ணனின் இன்னொரு மறக்கமுடியாத படைப்பு, கண் கண்ட தெய்வம். அதில் எஸ்.வி.ரங்காராவ், எஸ்.வி.சுப்பையா ஆகியோருடன் பத்மினிக்கும் பலத்த நடிப்புப் போட்டி. தமிழகத்தின் மண்வாசனை வீசும் பண்பாட்டுக் காட்சிகளில், பத்மினியின் புகழ் கூடுதலாயிற்று. அதைத் தொடர்ந்து, 1967 தீபாவளிக்கு வெளியான இருமலர்களில் ஒரு மலர் பத்மினி. 100 நாள்கள் ஓடியது. விடா முயற்சியோடு போராடி வெற்றிக்கோட்டைச் சீக்கிரத்தில் தொட்டு விட்டார் பத்மினி.

எந்த ஹீரோவும் இல்லாமல், 1968 இறுதியில் பத்மினி நடித்த படம் குழந்தைக்காக. கொலைக்கார வில்லன்களுடன் போராடி, பேபி ராணியைக் காப்பற்ற வேண்டி, இரும்புப் பெண்மணியாக, காட்சிக்கு காட்சி பதற்றம் காட்டி பப்பி தனி ஆவர்த்தனம் புரிந்தார். 100 நாள்கள் ஓடியது. அதே படம் ஹிந்தியில் உருவானபோதும் பத்மினியே நாயகி.

1969-ல் பத்மினி நடித்து வெளியான ஒரே படம் குருதட்சணை. புராணப் படங்கள் தயாரித்து வந்த ஏ.பி.நாகராஜனின் சமூகச் சித்திரம். சிவாஜி, கல்வி கற்க விரும்பும் கிராமத்தானாகவும், பள்ளி ஆசிரியையாக பத்மினியும் நடித்தனர். தன் படிக்கும் ஆசையை சொல்லி பத்மினியின் கால்களில் விழுவார் சிவாஜி. அவரது ரசிகர்கள் அதை ஏற்கவில்லை. நிஜத்தில் மாறுபட்ட கதையாக இருந்தாலும், படம் படுதோல்வி.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 21, 2023 3:01 am


1970-ல் கணேசனோடு இரண்டு வெற்றிப்படங்கள். 1. ஜெமினியின் விளையாட்டுப்பிள்ளை, 2. சிவாஜி புரொடக்ஷன்ஸ் முதல் தயாரிப்பு வியட்நாம் வீடு. விளையாட்டுப்பிள்ளையில் நடிக்கும்போது ஒரு விபரீதம் எதிர்பாராமல் நடந்தது. எமோஷனல் சீனில் தன்னை மறந்து, பாசாங்கு இன்றி பத்மினியின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டார் சிவாஜி. அதன் விளைவு, பத்மினியின் கம்மல் கழன்று அடுத்த ஃப்ளோரில் போய் விழுந்தது. காட்சி ஓகே.

ஷாட் முடிந்ததும் பத்மினியைக் காணோம். அடுத்த சீனுக்காக தேடிப் போய்ப் பார்த்தால், ஓர் ஓரமாக நாற்காலியில் உட்கார்ந்து பத்மினி கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தார். கன்னம் வீங்கி, அழுது அழுது கண்களும் முகமும் சிவந்து, 'ஸாரி ஒண்ணுமில்ல. வலி தாங்கல. அஞ்சு நிமிஷம் கழிச்சி முழுசா அழுதுட்டு வரேன். ப்ளீஸ் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க’ என்றார்.

வியட்நாம் வீடு நாடகத்தில், கணேசனின் ஜோடியாக சாவித்ரி மாமியாக பிரமாதப்படுத்தியவர் ஜி.சகுந்தலா. டிராமா சினிமா ஆகிறது என்றதும் தனக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று கனவு கண்டார். ஆனால், சிவாஜியின் சாய்ஸ் பத்மினி. 'அவருக்குதான் நட்சத்திர அந்தஸ்து இருக்கிறது. சினிமா வெற்றி பெற மார்க்கெட் உள்ள ஆர்ட்டிஸ்ட் ரொம்ப முக்கியம்’ என்று சகுந்தலாவுக்கு சந்தர்ப்பம் தரவில்லை. வேதனையோடு வீடு திரும்பினார் சகுந்தலா. பத்மினி அவருக்குப் பிராண சிநேகிதி. அவர் தனக்காக சிவாஜியிடம் சிபாரிசு செய்யாமல் போய்விட்டாரே என்கிற தீராத காயம், சகுந்தலாவுக்கு அவர் மறையும் வரையில் நீடித்தது.

சாவித்ரி மாமியாக பத்மினி, மடிசார் புடவை கட்டிக்கொண்டு 'பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா’வுக்காகப் பாடி ஆடினார். வித்தியாசமாக, பிராமண பாஷை பேசி வியட்நாம் வீடு படத்தில் வலம் வந்தார். ஆனால், ஜி.சகுந்தலா அவரை விடச் சிறப்பாக நடித்ததாக, ரசிகர்கள் சிலர் பத்திரிகைகளில் எழுதினர்.

கணவர் ராமச்சந்திரனின் மருத்துவப் படிப்பு லண்டனில் முடிந்தது. அடுத்து அவரோடு பத்மினி அமெரிக்காவுக்குக் குடி போக வேண்டிய நிர்ப்பந்தம். கே.பாலாஜியின் எங்கிருந்தோ வந்தாள் படத்திலும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் குறத்தி மகனிலும் தொடர்ந்து நடிக்க இயலாமல் போனது.

1971-ல் சிவாஜி - பத்மினி நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் பி.எஸ்.வீரப்பாவின் இருதுருவம். திலீப்குமார் - வைஜெயந்தி மாலா நடித்த ஹிந்தி சூப்பர் டூப்பர் கங்கா ஜமுனாவின் தமிழ் வடிவம். பொங்கலுக்கு வெளியாகி ஏனோ வெற்றிபெறாமல் போனது.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் குலமா குணமா, சிவாஜி - பத்மினி ஜோடிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தது. அவர்களின் கடைசி 100 நாள் படம் அது. அதற்குப் பிறகு வெளியான தேனும் பாலும் படமும் வசூலாகியது. பத்மினியும் சரோஜா தேவியும் சிவாஜியோடு முதலும் கடைசியுமாக தேனும் பாலுமாகத் தோன்றினார்கள்.

1986-ல், சிவாஜியுடன் நிறைவாக தாய்க்கு ஒரு தாலாட்டு, லட்சுமி வந்தாச்சு என கை கோர்த்தார். புதிய பறவையில் ஒலித்தது விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் 'உன்னை ஒன்று கேட்பேன்’ பாடல். அதே மெட்டில், இசைஞானியின் கைவண்ணத்தில் 'பழைய பாடல்போல புதிய பாடல் இல்லை’ என டிஎம்எஸ் - பி.சுசிலா குரல்களில், தாய்க்கு ஒரு தாலாட்டில் சிவாஜி - பத்மினி ஜோடி வாயசைத்துப் பாடியது. அதுவே அவர்களின் கடைசி டூயட்!

ஏறக்குறைய 40 சினிமாக்களில் தமிழர்களின் வாழ்க்கையோடு ஒன்றிக் கலந்துவிட்ட, சிவாஜி - பத்மினி ஜோடியின் ஒப்பற்ற ஆற்றலை, தினந்தோறும் சின்னத்திரைகளில் பார்க்கலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 21, 2023 3:05 am

கணேசனுக்கு முன்பாகவே பத்மினிக்கு நன்கு அறிமுகமானவர் எம்ஜிஆர். ‘மோகினி’ சினிமாவில் நாட்டியம் ஆட, கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவுக்கு சென்றனர் திருவாங்கூர் சகோதரிகள். அந்த நொடி முதலே, எம்.ஜி.ஆர். - பத்மினி நட்பு அரும்பு விட்டது.

எம்.ஜி.ஆர். பிரபலமாகி மிக நீண்ட காலம் கடந்தே, எம்.ஜி.ஆரின் நிழல் காதலி பத்மினி ஆனார். அவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம், 1956 ஏப்ரலில் வெளியான மதுரை வீரன். அதில் பத்மினி, வெள்ளையம்மாளாகத் தோன்றினார். மதுரை வீரனின் முதல் மனைவி பொம்மியாக பானுமதி நடித்திருந்தார். எம்.ஜி.ஆருடன் பானுமதி - பத்மினி இருவரும் இணை சேர்ந்தது, மதுரைவீரனுக்குப் புது மகத்துவத்தை ஏற்படுத்தியது. புரட்சி நடிகரின் முதல் வெள்ளிவிழாப் படம் என்கிற அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது.

பத்மினி நாயகியாக நடித்த படங்களில் நாட்டியங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. மதுரை வீரன், கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரிப்பு. செலவைப் பற்றி சிறிதும் கவலைப்படாதவர் அதன் முதலாளி லேனா செட்டியார். அதில், பத்மினிக்கு மட்டுமல்லாமல் எம்.ஜி.ஆரின் முழங்கால்களுக்கும் வேலை சற்றுக் கூடுதல்.

‘உத்தமவில்லன்’ கமலுக்கு அறியாப் பருவத்தில் நடனத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது, ‘ஏச்சிப் பிழைக்கும்…’ பாடலுக்கான எம்.ஜி.ஆர். - பத்மினியின் அங்க அசைவுகள்தான். அந்தக் காட்சிக்காகவே, மதுரை வீரனை மறக்காமல் நூறு நாள்களுக்கு மேல் பார்த்து ரசித்து, அதேபோல் பாதம் தூக்கி ஆடினார் பரமக்குடி கூத்தபிரான். கமலின் கலை வாழ்க்கைக்குப் பிள்ளையார் சுழி, மதுரை வீரனில் இருந்து மையம் கொண்டது.

அந்நாளில், எம்.ஜி.ஆரின் ஆஸ்தான டான்ஸ் மாஸ்டர் தங்கராஜ். மதுரை வீரனில் எம்.ஜி.ஆரும் – பத்மினியும் தனக்கு அளித்த ஒத்துழைப்பு குறித்து கூறியுள்ளார் –

‘பட்சிராஜா ஸ்டுடியோஸ் ஏழை படும் பாடு, பிரசன்னா படங்களின்போதே பத்மினிக்கு சினிமா நடனம் சொல்லித் தந்துள்ளேன். பத்மினி நல்ல டான்ஸர். அவரை மாதிரி பரதம் தெரிந்தவர்களுக்கு, ஒருமுறை சொல்லிக்கொடுத்தால் போதும். புரிந்துகொண்டு ஆடி பிரமாதப்படுத்திவிடுவார்கள்.

‘ஏய்த்துப் பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப்பாருங்க…’ பாடலுக்கான ஒத்திகையில் நான் ஆடிக்காட்டியதும், இந்த மூவ்மென்ட் கஷ்டமாக இருக்கும்போலிருக்கிறதே’ என எம்ஜிஆர் முணுமுணுத்தார். பிறகு அவரே, ’எனக்குத்தானே பெயர் கிடைக்கும்; நானே முயற்சி செய்து ஆடிடறேன்’ என்று சொன்னபடியே நன்றாக ஆடினார். எம்.ஜி.ஆர். தயங்கியதுகூட, பத்மினியுடன் ஆடும்போது நம் ஆட்டம் அவருக்கு இணையாக இருக்க வேண்டும் என்றுதான்’.

எம்.எல்.வசந்தகுமாரியின் குரலில் ஒலித்த, 'ஆடல் காணீரோ...' சூப்பர் ஹிட் பாடலுக்கு பத்மினி ஆடிய திருவிளையாடல் நடனம், மிகப் பிரமாதமாகப் படமாக்கப்பட்டது. ஒப்பற்ற அந்த நாட்டியம், படத்தின் வேகமான ஓட்டத்துக்குத் தடையாக இருக்கும் என்று, எம்.ஜி.ஆர். அதை நீக்கி விடுமாறு சொல்லி விட்டார்.

செட்டியார், பப்பியின் பரம விசிறி. அதேநேரத்தில், எம்.ஜி.ஆரின் உத்தரவை அவரால் உதாசீனம் செய்யவும் முடியவில்லை. யவ்வன பம்பரமாகச் சுழன்றாடும் பப்பியின் பாதங்களை விட்டுத்தர முடியாது என மனத்தின் குரல் கூவியது. ஹீரோவின் தயவும் தேவை. வேறு வழியின்றி, இடைவேளையில் தசாவதார பாடல் காட்சி காட்டப்பட்டது.

எம்.ஜி.ஆர். - பத்மினி ஜோடியாக நடித்த ஐந்தும் சமூகப்படங்கள் அல்ல. அத்தனையும் ராஜா - ராணி கதைகள். மதுரைவீரனுக்கு அடுத்து, மெர்ரிலாண்ட் ஸ்டுடியோ தயாரித்த ராஜராஜன், மன்னாதி மன்னன், ராணிசம்யுக்தா, விக்ரமாதித்தன் ஆகியவை மற்ற நான்கு படங்கள்.

டாக்டர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் - ஏ.பி.கோமளா ரேர் காம்பினேஷனில், ‘நிலவோடு வான் முகில் விளையாடுதே…’ பாடல் மட்டும் ராஜராஜனை ஞாபகப்படுத்துகிறது.

ராஜராஜனில் ஒரு விசேஷம். அண்ணன் - தம்பிகளான எம்.ஜி.சக்ரபாணியும் எம்.ஜி.ராமச்சந்திரனும், அக்கா - தங்கைகளான லலிதா, பத்மினியுடன் நடித்த ஒரே படம். ‘ஆடும் அழகே அழகு…’ எனத் தொடங்கும் பாடலுக்கு, லலிதா - பத்மினியின் நடனம் நிறைவாக இடம் பெற்றது. அதன்பின்னர், லலிதா திருமணமாகிச் சென்றுவிட்டார். மீண்டும் நடிக்க வரவில்லை.

1960-ல் ராஜா தேசிங்கு - எஸ்.எஸ்.ஆர்., 1961-ல் அரசிளங்குமரி - எம்.என்.நம்பியார், 1971-ல் ரிக்ஷாகாரன் - ஆர்.எஸ்.மனோகர் ஆகியோரது மனைவியாகவும் பத்மினி, எம்.ஜி.ஆர். படங்களில் நடித்துள்ளார். சகோதரி பத்மினியுடன் கடைசியாக நடித்த ராசியோ என்னவோ, ரிக்ஷாக்காரனுக்காக எம்.ஜி.ஆருக்கு சிறந்த நடிகருக்கான பாரத் விருது கிடைத்தது.

தனக்கு முக்கியத்துவம் தராத எந்த சீனிலும் தான் இடம் பெறுவதை எம்.ஜி.ஆர். அனுமதிக்கமாட்டார். நாயகன் வெறும் காட்சிப் பொருளாகக் காட்டப்படுவதை விரும்பாதவர். அவரது ஆரம்ப சினிமா நாள்களில், வசனம் பேசவும் வாய்ப்பு கிடைக்காமல் வதைக்கப்பட்டிருக்கிறார். முந்தைய உள்குத்துக் காயங்களின் எதிரொலியால், எப்போதும் எச்சரிக்கையாக இருப்பார். ஆனால், அதற்கு விதிவிலக்கு மன்னாதி மன்னன்.

கறந்த பால் போல் கொஞ்சமும் கலப்படமற்ற லதாங்கி ராகப் பாடல், ‘ஆடாத மனமும் உண்டோ…’

எம்.எல்.வசந்தகுமாரி - டி.எம்.சௌந்தரராஜன் குரல்களில் அது ஒரு கோமள கீதம்! கேட்கக் கேட்கத் திகட்டாத கானம் என்பார்களே அப்படி.

காட்சியைச் சற்றே மனத்தில் இருத்திப் பாருங்கள். பத்மினியும் எம்.ஜி.ஆரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொண்டே பாடும், பப்பி அற்புதமாக ஆடும் அபிநயச் சித்திரம்! அதில் ஒரே இடத்தில் உதயசூரியன்போல் தகதகக்கும் திறந்த மார்போடு அமர்ந்து, எம்.ஜி.ஆர். வாத்தியம் வாசிக்க, அதற்கேற்ப பத்மினியின் பாதங்களும் ஒலிக்கும். புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் நூற்றுக்கான சினிமாக்களில், அவர் இதுபோல் வேறு எந்தப் படத்திலாவது சும்மா உட்கார்ந்து பாடியதை யாரும் பார்ப்பது துர்லபம்.

நாடோடி மன்னனுக்கும் மன்னாதி மன்னனுக்கும் ஒரே வசனகர்த்தா கண்ணதாசன். மன்னாதி மன்னனில், ‘அச்சம் என்பது மடமையடா…’ உள்ளிட்ட பெரும்பாலான பாடல்கள் அவர் எழுதியவை. ஆனால், ‘ஆடாத மனமும்…’ மட்டும், மருதகாசியின் கை வண்ணம். எத்தனை முயன்றும் கவிஞருக்கு வார்த்தைகள் சரியாக அமையாததால், மருதகாசியிடம் எழுதி வாங்கினர்.

வரலாறு காணாத நாடோடி மன்னனின் மகத்தான வெற்றி, மருதகாசியின் கன்னித்தமிழில் சீரும் சிறப்புமாக மன்னாதி மன்னனில் திக்கெட்டும் ஒலித்தது. சிவாஜி கணேசனின் சிரஞ்சீவி ஜோடியான பத்மினியும் வேறு எந்த சினிமாவிலும், மக்கள் திலகத்தின் அங்க அழகை, ஆற்றலை வர்ணித்து இத்தனை எடுப்பாகப் பாடி ஆடியிருப்பாரா... யாம் அறியோம்!

நாடெங்கும் கொண்டாடும் புகழ்ப் பாதையில்
வீரநடை போடும் திருமேனி தரும் போதையில்
ஆடாத மனமும் உண்டோ
ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்
தனியிடம் கொண்ட உமைக் கண்டும் இப்பூமியில்
ஆடாத மனமும் உண்டோ
பசும் தங்கம் உனது எழில் அங்கம்
அதன் அசைவில் பொங்கும் நயம் காணவே
ஆடாத மனமும் உண்டோ…

1960 தீபாவளி ரிலீஸின்போது, இப்பாடல் வரிகள் இல்லாத, மன்னாதி மன்னன் விளம்பரங்களை அன்றைய தமிழர்கள் பார்த்திருக்க இயலாது.


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக