புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாஸ்மாக்: கூச்சப்பட வேண்டாமா, அரசு? 90 மி.லி.யும் விடிகாலைக் கடைத்திறப்பும்
Page 1 of 1 •
இரு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார் மதுவிலக்கு ஆயத்துறைக்கும் அமைச்சரான சு. முத்துசாமி. _ கட்டட வேலை போன்ற கடுமையான வேலை செய்வோரைக் கருத்தில்கொண்டு காலை 7 மணி முதல் 9 மணி வரை மதுக்கடைகளைத் திறப்பது பற்றி யோசிக்கப்பட்டு வருகிறது. _ (குறைந்தபட்ச அளவாக) 90 மி.லி. அளவுக்கும் மது வகைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. |
ஒருபக்கம் மதுக்கடைகளை மூடுவதாகச் சொல்லிக் கொண்டு, இப்போது அமைச்சர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு மது விற்பனையை மேலும் பெருக்க மட்டுமே செய்யும்.
உள்ளபடியே அரசு மதுக் கடைகளில் விற்பனை பெருகக் கூடிய வகையில் எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கைக்காகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் கூச்சப்படத்தானே வேண்டும்?
இதற்காகவெல்லாம் என்ன பெருமையும் பேட்டிகளும் வேண்டிக் கிடக்கின்றன?
மதுக்கடைகளில் தற்போது விற்கப்படும் மது வகைகளின் குறைந்தபட்ச விலை ரூ. 130, ரூ. 140. இன்னமும் - அதாவது அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, துறையும் விலக்கிக் கொள்ளப்பட்ட பின்னும் - தொடர்ந்து எவ்வித மாற்றமுமின்றிக் கடைகளில் கிட்டத்தட்ட கட்டாயமாக வசூலிக்கப்படும் மொய்ப் பணம் ரூ. 10 சேர்த்து பாட்டிலுக்கு ரூ. 140, 150!
வழக்கமாகக் கையில் ரூ. 140-க்குக் குறைவாக இருந்தால் குடிக்க முடியாது என்பதால் மதுக் கடை வாசலிலேயே கொஞ்சம் பேர் காத்திருப்பார்கள், ஒரு பார்ட்னர் வருவதற்காக. இன்னொருவர் இதேமாதிரி குறைந்த தொகையைத் தேற்றிக் கொண்டு வந்ததும் இருவருமாக உள்ளே சென்று ஒரு குவார்ட்டர் (180 மி.லி.) பாட்டில் வாங்கி, ஆளுக்கொரு பிளாஸ்டிக் டம்ளரில் நூலளவுகூட வித்தியாசம் வராதபடி பார்த்து ஊற்றிப் பகிர்ந்துகொண்டு குடிப்பார்கள். ஆக, ரூ. 140-க்குக் குறைவாக இருந்தால் குடிக்க முடியாது, இன்னொருவரின் உதவி அல்லது கூட்டணி தேவை. இப்படியெல்லாம் குடிக்க விரும்பாதவர்கள், கொஞ்சம் பேர்தான், குடிக்க மாட்டார்கள்.
(ஆனால், நேர்மாறாக, குவார்ட்டர் பாட்டில் மதுவை முழுவதுமாகப் பயன்படுத்திவிட முடியாது என்பதால் குடிக்க வருவோரில் 40 சதவிகிதம் பேர் அரை மணி நேரத்துக்கும் மேலாகக் கடைகளில் காத்து நிற்கிறார்கள் என்று அறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் அமைச்சர் முத்துசாமி. ம். எவ்வளவு கரிசனம் கொண்ட ஆய்வு!).
இந்தக் குடிமகன்களின் இன்னலை மனப்பூர்வமாக உணர்ந்து, மதுவை மிகச் சரியாகப் பகிர்ந்துகொள்வதில் இருக்கும் சிரமத்தை, அதனால் ஏற்படக் கூடிய தகராறுகளை, மோதல்களை, அடிதடிகளை, மனவருத்தங்களை எல்லாம் கருதித்தான் இப்போது 90 மி.லி. டெட்ரா பாக்கெட்களை அறிமுகப்படுத்துகிறது போல இந்த அரசு. விற்பனை பிரமாதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஏனெனில், இந்த யோசனை அறிவிக்கப்பட்டவுடனேயே, அறிவிக்கப்பட்ட நாளான திங்கள்கிழமையே மதுக் கடை வாசல்களில் மிக நல்ல வரவேற்பு. அப்பாடா, ஒரு பெரிய பிரச்சினை தீர்ந்தது என்று பெருமூச்சு விட்டு வழக்கம்போல குவார்ட்டர்களைப் பகிர்ந்துகொண்டார்கள் குடிமகன்கள். ஒருவேளை ராஜா காலத்தைப் போல, அரசரோ, அமைச்சர்களோ, அதிகாரிகளோ யாரேனும் மாறுவேஷத்தில் வந்திருந்தால் அரசின் அறிவிப்புக்குக் கிடைத்துள்ள இந்த வரவேற்பை அறிந்து பெருமிதம் அடைந்திருக்க முடியும்.
மதுக் கடை வாசல்களில் உலவிய இன்னொரு முக்கியமான கேள்விக்கும் டாஸ்மாக்கின் அடுத்த ஆய்வுக் கூட்டத்திலாவது யோசித்து தக்க பதிலை அமைச்சர்களும் அதிகாரிகளும் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது - இந்த அரை குவார்ட்டருக்கும் அடிஷனலாக அந்த பத்து ரூபாய் தர வேண்டுமா? அல்லது ஐந்து ரூபாய் ஓகேயா?
இன்னோர் அறிவிப்பு, கடைத் திறப்பு நேரம் பற்றியது.
முதன்முதலில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டபோது, காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை கடைகள் திறக்கப்பட்டிருந்தன. பின்னர் இரவு 10 மணி வரைக்கும் என்று குறைக்கப்பட்டது. பின்னர் காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை என்றாக்கப்பட்டது. 2011-ல் இந்த நேரம் காலை 10 முதல் இரவு 10 வரை என்றாக்கப்பட்டது.
காந்தியவாதி சசிபெருமாள் மரணத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் மதுவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடந்துகொண்டிருந்த நிலையில், 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று திமுக கூட்டணி அறிவித்தது. கொஞ்சம் நிதானமாக அணுகிய அதிமுகவோ, உடனடி சாத்தியமில்லை, ஆனால், படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று வாக்குறுதியளித்தது. வெற்றி பெற்றதும் முதல்வரான ஜெயலலிதா, 500 மதுக் கடைகளை மூடும் அரசாணையில் கையெழுத்திட்டதுடன், டாஸ்மாக் மதுக் கடைகள் இனி காலை 10 மணிக்குப் பதிலாக பகல் 12 மணிக்குதான் திறக்கப்படும் என்று அறிவித்தார். இப்போதும் அதுதான் தொடருகிறது.
கடைத் திறப்பு நேரம் பற்றித் திடீரென இப்போது கருத்துத் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் முத்துசாமி.
காலை 7 மணி முதல் 9 மணி வரை, வேலைக்குப் போகக் கூடியவர்கள், கட்டட வேலை போன்ற கடுமையான வேலைக்குப் போகக் கூடியவர்கள் ஒருசில சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். அதற்கு என்ன ஏற்பாடு என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இன்னமும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் சு. முத்துசாமி.
தங்களுடைய நோக்கம் லாபம் அல்ல. தவறான இடங்களுக்குப் போய்விடக் கூடாது, தவறான விற்பனையும் வந்துவிடக் கூடாது என்பதுதான் என்று மீண்டும் மீண்டும் அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில் எப்போது வேண்டுமானாலும் மதுக்கடை விற்பனை நேர அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
கடுமையான வேலைகளுக்குச் செல்வோருக்கு உதவும் வகையில் காலையிலேயே கடைகளைத் திறந்த பின், குடித்துவிட்டு வேலைகளுக்குச் செல்வோர் விழுந்து செத்தால் யார் பொறுப்பு? அரசா அல்லது டாஸ்மாக்கா?
பணி நேரத்தில் போதையில் சாவோருக்கு இழப்பீடுகள் கிடைக்க வாய்ப்பு உண்டா? [பணியாளர் இழப்பீட்டுச் சட்டப் பிரிவு 3 (1)-ன் கீழ் பணி நேரத்தில் மது / லாகிரிப் பொருள் போதையில் இருந்து விபத்துக்குள்ளான தொழிலாளி இழப்பீடு பெறத் தகுதியற்றவர் என்பது அரசுக்கும் அமைச்சருக்கும் தெரிந்திருக்கும்தானே]. குடிபோதையில் அவர்கள் என்ன லட்சணத்தில் வேலை செய்வார்கள்? அவர்களை எவ்வளவு காலத்துக்கு உரிமையாளர்கள் வேலைக்கு வைத்துக் கொள்வார்கள்? அல்லது அரசுதான் போதையில் வேலை செய்வதை ஏற்றுக்கொள்ளுமா? தெரியவில்லை.
ஒரு நல்ல அரசின் கடமை மக்களிடையே குடிப் பழக்கத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக மட்டுமே இருக்க முடியும்.
மாறிவரும் இன்றைய சூழ்நிலையில், 'கட்டடப் பணி போன்ற கடுமையான வேலைகளைச் செய்வோரைக் கவனத்தில்கொண்டு', நள்ளிரவில் திடீரென போதை தெளிந்து விழித்துக்கொள்ளும் வேளையில் மதுக் கடைகள் அடைக்கப்பட்டிருப்பதால் மீண்டும் குடிக்க முடியாமல் ஏற்படும் சிரமத்தையும் மனவேதனையையும் அறிந்து, 'தவறான இடங்களுக்குப் போய்விடக் கூடாது, தவறான விற்பனையும் வந்துவிடக் கூடாது' என்பதால் 24 மணி நேரமும் மதுக் கடைகளைத் திறந்துவைப்பது பற்றியும்கூட மேலும் சில மாதங்களில் அறிவிக்கப்படலாம் என்றே அஞ்சப்படுகிறது.
ஆனால், இந்தக் குடிக்குப் பின்னால் இன்னொரு பக்கம், அல்ல, நிறைய பக்கங்கள் இருக்கின்றன. அரசும் மக்களும் அக்கறை கொள்ள விஷயங்கள் இருக்கின்றன.
_ தமிழ்நாடு முழுவதும் மதுக் கடைகள் திறந்த காலந்தொட்டுக் குடித்துச் செத்தவர்கள், குடியால் செத்தவர்கள் எத்தனை பேர்?
_ தமிழகம் முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டும் ஒவ்வோராண்டும் குடியால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுபவர்கள் எத்தனை பேர்?
_ எத்தனை பேர் நலம் பெற்றிருக்கிறார்கள்? எத்தனை பேர் செத்துப் போனார்கள்?
_ குடிப்பழக்கத்தால் தந்தையை, சகோதரனை, கணவனை, மகனை, பேரனை இழந்ததால் ஆதரவற்றுப்போன பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு?
_ தமிழ்நாட்டில் குடியால் நாசமாய்ப் போன குடும்பங்கள் பற்றி இதுவரையிலும் அரசால் எந்தவொரு கணக்கெடுப்பேனும் எடுக்கப்பட்டிருக்கிறதா? புள்ளிவிவரம் இருக்கிறதா?
_ குடி காரணமாக நடைபெறும் குற்றச் செயல்கள், கொலை, கொள்ளை, களவு, பாலியல் வன்கொடுமைகள் பற்றிய கணக்கெடுப்பு, புள்ளிவிவரங்கள் இருக்கிறதா?
யாருக்கும் தெரியாது! ஒரு கணக்கு வழக்கும் கிடையாது!!
ஆண்டுதோறும் டாஸ்மாக் மதுக்கடைகளின் மூலம் கிடைக்கும் வருமானம் பெருகிக்கொண்டே செல்வதற்காகப் பெருமையாகத் தெரிவிப்போர், இந்தப் பணம் எல்லாம் யாரிடமிருந்து வருகிறது? எங்கிருந்து வருகிறது? எப்படியெல்லாம் வருகிறது? அரசுக்குக் கிடைக்கிற இந்த வருமானத்தால் இழப்பவர்கள், பாதிக்கப்படுகிறவர்கள் எல்லாம் யார், யார்? என்று எண்ணிப் பார்த்திருக்கிறார்களா?
மதுக்கடைகளைக் காலை 7 மணிக்கே திறந்து வைத்தால் 'கடும் சிரமப்படுகிறவர்கள் பலனடைவதைவிட' குடி தொடர்பான குற்றங்கள் அதிகரிப்பதற்கே வழிவகுக்கும்.
90 மி.லி. மது பாக்கெட்களை அறிமுகப்படுத்தும்போது, குறைந்த விலைக்கே கிடைப்பதால் மேலும் பலர், குறிப்பாக சிறார்களும் இளம் வயதினரும் மதுவை நோக்கி ஈர்க்கப்படும் ஆபத்து இருக்கிறது.
மது விற்பனையில் 'ஆழ்ந்த யோசனையுடன்' ஆய்வு நடத்திப் புதிய புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த நினைக்கும் அரசு, இவற்றைச் செயல்படுத்தும் முன் நேரிடக்கூடிய எதிர்மறையான விளைவுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
குறைத்துக்கொண்டே வந்திருக்கும் மதுக் கடைகள் திறப்பு நேரத்தை மேலும் குறைப்பது பற்றிதான் யோசிக்க வேண்டுமே தவிர, எக்காரணத்தைக் கொண்டும் அதிகரிக்க நினைப்பது நல்லதல்ல, மக்களுக்கு மட்டுமின்றி ஆளும் அரசுக்கும்கூட.
'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி'யின் மக்கள், இப்படி பாட்டில்களோடு தோன்றித் தெருக்களில் தள்ளாடிக் கொண்டிருப்பதும் வீதியோரங்களில் விழுந்துகிடப்பதும் ஒரு காலத்திலும் எந்தவோர் அரசுக்கும் பெருமைப்படக்கூடிய ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை!
தினமணி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
சாராயத்திற்கு எதிராக மக்களே இல்லையே! சாராயத்திற்கு எதிராக தலைவர்களே இல்லையே! சாராயத்திற்கு எதிராக ‘மேதாவி’ நிர்வாகிகளே இல்லையே ! இந்த லட்சணத்தில் ‘நாங்கள்தான் உங்களைக் காக்க வந்தவர்கள்! மற்றவர்கள் மோசம்!’என்ற வசனம் வேறு!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|