Latest topics
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!by சடையப்பர் Today at 12:19 am
» புதிய சொந்தமான வீடுபெற வேண்டுவோர் பாராயணம் செய்ய வேண்டி திருப்புகழ்
by இளமாறன் Today at 12:14 am
» 05.02.2012 அன்று பிறந்த நாள் கொண்டாடும் கோவிந்தராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by கபாலி Today at 12:09 am
» சரணாகதி - பொருள் தெரியுமா ?
by கோவிந்தராஜ் Yesterday at 11:52 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by Aathira Yesterday at 11:32 pm
» 4.2.012 அன்று பிறந்தநாள் காணும் கார்த்திக் எம்.ஆா் அவா்களை வாழ்த்துவோம்
by கார்த்திக்.எம்.ஆர் Yesterday at 11:00 pm
» hai ai am kundalakesi
by குண்டலகேசி Yesterday at 10:57 pm
» கின்னஸ் சாதனை புரிந்த உலகின் ராட்சத பைக்! படங்கள் இணைப்பு
by அல்கெனா ரிஷி Yesterday at 10:44 pm
» வணக்கம் நண்பர்களே.
by அல்கெனா ரிஷி Yesterday at 10:40 pm
» தன்னுடைய 2000 ஆம் பதிவைக் கடந்த ஐயா டாக்டர் சுந்தரராஜ் தயாளன் அவர்களை வாழ்த்தி வணங்குவோம் உறவுகளே!!!
by அல்கெனா ரிஷி Yesterday at 10:35 pm
» தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
by கபாலி Yesterday at 10:23 pm
» முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்
by மகா பிரபு Yesterday at 10:13 pm
» பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்
by கோவிந்தராஜ் Yesterday at 10:07 pm
» தொடராத வீணை
by முபா Yesterday at 10:02 pm
» என்னையும் கூட்டிச்செல்லுங்கள்
by முபா Yesterday at 9:59 pm
» திருச்சி அருகே வினோத குட்டியை ஈன்ற ஆடு
by இளமாறன் Yesterday at 9:24 pm
» ரகசியமாக செய்திகளை அனுப்புவதற்கு ?
by அருள் Yesterday at 9:21 pm
» மொள்ளமாரி பயலே!!!
by மகா பிரபு Yesterday at 9:18 pm
» பெண்கள் அதிகம் கவலைப்படும் வரி வரியாய் ஏற்பட்ட தழும்புகளை எப்படி போக்குவது ?
by அருள் Yesterday at 9:17 pm
» நிறம் !
by இளமாறன் Yesterday at 9:08 pm
» போதிதர்மரை பற்றிய தகவல் தேவை ?
by மகா பிரபு Yesterday at 9:02 pm
» மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
by இளமாறன் Yesterday at 8:56 pm
» கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்)
by kirikasan Yesterday at 8:22 pm
» மீலாடி நபி திருநாள் வாழ்த்துக்கள்
by மகா பிரபு Yesterday at 8:06 pm
» வேண்டுதல் :(
by கபாலி Yesterday at 7:40 pm
» மகிழம்பூ மனமெல்லாம்
by T.N.Balasubramanian Yesterday at 7:38 pm
» காதலர் தினம்....!
by இளமாறன் Yesterday at 7:30 pm
» மௌனத்தால் வென்றுவிடு...!
by இளமாறன் Yesterday at 7:23 pm
» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by சதாசிவம் Yesterday at 6:59 pm
» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
by சதாசிவம் Yesterday at 6:25 pm
» நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்
by Aathira Yesterday at 5:55 pm
» நீ பாதி நான் பாதி...!
by அல்கெனா ரிஷி Yesterday at 5:39 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-41
by வை.பாலாஜி Yesterday at 5:22 pm
» Johnny Johnny - Gulf version
by kumaran.msk Yesterday at 5:14 pm
» சாப்பிட்டதும் "தம் " "டீ" -- ரொம்ப தப்புங்க
by ரேவதி Yesterday at 4:48 pm
» நெகிழ வைத்த நிஜங்கள்
by சிவா Yesterday at 4:36 pm
» நினைவுடன்!......
by சிவா Yesterday at 4:24 pm
» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by சிவா Yesterday at 3:55 pm
» 4000 பதிவுகள் + 500 மதிப்பீடுகள் கடந்த தம்பி கார்த்திக்கை வாழ்த்துவோம் உறவுகளே !!!
by ந.கார்த்தி Yesterday at 3:50 pm
» 8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம் ?
by சிவா Yesterday at 3:50 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
20 ரூபாயில் இரண்டு மணி நேர போதை
Page 1 of 1 • Share •
20 ரூபாயில் இரண்டு மணி நேர போதை
20 ரூபாயில் இரண்டு மணி
நேர போதை : பள்ளி மாணவர்கள் அடிமையாகும் பரிதாபம்
மதுரை: மதுரை கடைகளில் கிடைக்கும் சிந்தடிக் ரப்பர்
பேஸ்ட்டை (ஒட்டும் பசை) நுகர்ந்து, அதன் மூலம் போதையாகும் பள்ளி மாணவர்கள்
அதிகரிக்கின்றனர். குறிப்பாக, 13 வயது முதல் 15 வயதிற்குட்பட்டவர்கள், இதற்கு
அடிமையாகி உள்ளனர். முனிச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் முருகன்; ரியல் எஸ்டேட்
புரோக்கர். இவரது மகன் சந்துரு (13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அப்பகுதி நடுநிலைப்
பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறான். இவனது வீட்டருகே வசிக்கும் நண்பர்கள் சிலரால்,
இந்த போதைக்கு அடிமையானான்.
உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், மரச்சாமான்களை ஒட்ட
பயன்படுவது, சிந்தடிக் ரப்பர் பேஸ்ட். இதிலிருந்து வெளிப்படும் மணம், யாராக
இருந்தாலும் மீண்டும் ஒருமுறை சுவாசிக்க தூண்டும். இதுவே போதைக்கு காரணமாக
இருக்கிறது. எப்படி போதையாகிறது? காலியான பாலிதீன் தண்ணீர் பாக்கெட்டில், இந்த
பேஸ்ட்டை பிதுக்குகின்றனர். பின், பாக்கெட்டை இறுக்கமாக மூடி, பல முறை
குலுக்குகின்றனர். உடனடியாக வாய், மூக்கில் வைத்து, மூச்சை இழுக்க, இழுக்க, அந்த
மணத்தை மூளை நரம்பு உள்வாங்கி, ஒருவித கிறக்கத்தை உண்டாக்குகிறது. "இதுதான்
எங்களுக்கு போதை' என்கிறான் சந்துரு.
அவன் கூறியதாவது: கொத்தனாராக உள்ள எனது நண்பர்கள்
மூலம், இரு மாதங்களுக்கு முன், இதற்கு அடிமையானேன். வீட்டில் கொடுக்கும், "பாக்கெட்
மணியை' பொறுத்து, 13, 20, 34 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த பேஸ்ட்டை கடைகளில்
வாங்குவோம். ஒரே ஆள், ஒரே கடையில் வாங்கினால் சந்தேகம் வரும் என்பதால், தினமும்
ஒவ்வொரு கடைக்கு ஒவ்வொரு ஆள் செல்வோம். விடுமுறை நாட்களில் காலை முதல் இரவு வரை
உறிஞ்சி கொண்டே இருப்போம். இப்பழக்கம் எனது பள்ளி நண்பர்களிடமும்
இருக்கிறது.
இவ்வாறு சந்துரு கூறினான். ஒரு முறை வீட்டிற்கு சந்துரு தள்ளாடியபடி
வந்தபோதுதான் பெற்றோருக்கு தெரிந்தது. அவர்கள் கண்டிக்க, சந்துரு திருந்தவில்லை.
"இந்த வாயும், மூக்கும் தானே போதையை உறிஞ்சுது...' என்றுக்கூறி, சந்துருவின் வாய்,
மூக்கில் சூடு வைத்திருக்கின்றனர். இது வெளியே தெரிந்தால் அவமானம் என்றுக் கருதி,
ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறான் சந்துரு.
தந்தை
முருகன் கூறுகையில், ""இதற்கு காரணமான அவனது நண்பர்களிடமும், பெற்றோரிடமும் சொல்லி
பார்த்தாச்சு. அவர்கள் கண்டுகொள்ளவில்லை. ஒரு கடையில் ஒரு மாதத்திற்கு ஒன்றிரண்டு
விற்பனையாகும் இந்த பேஸ்ட், தற்போது 50 வரை விற்பனையாகிறது என கடை வியாபாரிகளே
கூறுகின்றனர். எங்கள் மகன் மூலம், மற்றவர்கள் திருந்த வேண்டும் என்பதற்காகவே இப்படி
செய்தோம். அவனும் திருந்திவிட்டான்'' என்றார்.
இந்த போதையால் ஏற்படும் பாதிப்பு குறித்து, மதுரை அரசு
மருத்துவமனை மூளை நரம்பியல் பிரிவுத் தலைவர் டாக்டர் கயிலைராஜன் கூறுகையில்,
""போதைக்கு காரணம், பேஸ்ட்டில் உள்ள காரீயம். இதை நுகரும்போது, நரம்பு செல்கள்
பாதிப்படைகின்றன. தொடர்ந்து பயன்படுத்தினால், மூளை தண்டு வடமும், மனநலமும்
பாதிக்கப்படும்,'' என்றார்.
எப்படி தடுப்பது? : டாக்டரின் மருந்து சீட் இருந்தால்
மட்டுமே, மருந்து கடைகளில் தூக்க மாத்திரை தருகின்றனர். அதுபோல், பெரியவர்கள்
கேட்டால் மட்டுமே இந்த பேஸ்ட்டை, கடை உரிமையாளர்கள் தர வேண்டும். அதேசமயம்,
பிள்ளைகளின் நடவடிக்கையில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், உடனடியாக கண்காணித்து
கண்டிக்க வேண்டும். இப்படி நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே, அவர்களை ஒழுக்கம்
உடையவர்களாக இந்த சமூகத்திற்கு அடையாளம் காட்ட முடியும்.
நேர போதை : பள்ளி மாணவர்கள் அடிமையாகும் பரிதாபம்
மதுரை: மதுரை கடைகளில் கிடைக்கும் சிந்தடிக் ரப்பர்
பேஸ்ட்டை (ஒட்டும் பசை) நுகர்ந்து, அதன் மூலம் போதையாகும் பள்ளி மாணவர்கள்
அதிகரிக்கின்றனர். குறிப்பாக, 13 வயது முதல் 15 வயதிற்குட்பட்டவர்கள், இதற்கு
அடிமையாகி உள்ளனர். முனிச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் முருகன்; ரியல் எஸ்டேட்
புரோக்கர். இவரது மகன் சந்துரு (13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அப்பகுதி நடுநிலைப்
பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறான். இவனது வீட்டருகே வசிக்கும் நண்பர்கள் சிலரால்,
இந்த போதைக்கு அடிமையானான்.
உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், மரச்சாமான்களை ஒட்ட
பயன்படுவது, சிந்தடிக் ரப்பர் பேஸ்ட். இதிலிருந்து வெளிப்படும் மணம், யாராக
இருந்தாலும் மீண்டும் ஒருமுறை சுவாசிக்க தூண்டும். இதுவே போதைக்கு காரணமாக
இருக்கிறது. எப்படி போதையாகிறது? காலியான பாலிதீன் தண்ணீர் பாக்கெட்டில், இந்த
பேஸ்ட்டை பிதுக்குகின்றனர். பின், பாக்கெட்டை இறுக்கமாக மூடி, பல முறை
குலுக்குகின்றனர். உடனடியாக வாய், மூக்கில் வைத்து, மூச்சை இழுக்க, இழுக்க, அந்த
மணத்தை மூளை நரம்பு உள்வாங்கி, ஒருவித கிறக்கத்தை உண்டாக்குகிறது. "இதுதான்
எங்களுக்கு போதை' என்கிறான் சந்துரு.
அவன் கூறியதாவது: கொத்தனாராக உள்ள எனது நண்பர்கள்
மூலம், இரு மாதங்களுக்கு முன், இதற்கு அடிமையானேன். வீட்டில் கொடுக்கும், "பாக்கெட்
மணியை' பொறுத்து, 13, 20, 34 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த பேஸ்ட்டை கடைகளில்
வாங்குவோம். ஒரே ஆள், ஒரே கடையில் வாங்கினால் சந்தேகம் வரும் என்பதால், தினமும்
ஒவ்வொரு கடைக்கு ஒவ்வொரு ஆள் செல்வோம். விடுமுறை நாட்களில் காலை முதல் இரவு வரை
உறிஞ்சி கொண்டே இருப்போம். இப்பழக்கம் எனது பள்ளி நண்பர்களிடமும்
இருக்கிறது.
இவ்வாறு சந்துரு கூறினான். ஒரு முறை வீட்டிற்கு சந்துரு தள்ளாடியபடி
வந்தபோதுதான் பெற்றோருக்கு தெரிந்தது. அவர்கள் கண்டிக்க, சந்துரு திருந்தவில்லை.
"இந்த வாயும், மூக்கும் தானே போதையை உறிஞ்சுது...' என்றுக்கூறி, சந்துருவின் வாய்,
மூக்கில் சூடு வைத்திருக்கின்றனர். இது வெளியே தெரிந்தால் அவமானம் என்றுக் கருதி,
ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறான் சந்துரு.
தந்தை
முருகன் கூறுகையில், ""இதற்கு காரணமான அவனது நண்பர்களிடமும், பெற்றோரிடமும் சொல்லி
பார்த்தாச்சு. அவர்கள் கண்டுகொள்ளவில்லை. ஒரு கடையில் ஒரு மாதத்திற்கு ஒன்றிரண்டு
விற்பனையாகும் இந்த பேஸ்ட், தற்போது 50 வரை விற்பனையாகிறது என கடை வியாபாரிகளே
கூறுகின்றனர். எங்கள் மகன் மூலம், மற்றவர்கள் திருந்த வேண்டும் என்பதற்காகவே இப்படி
செய்தோம். அவனும் திருந்திவிட்டான்'' என்றார்.
இந்த போதையால் ஏற்படும் பாதிப்பு குறித்து, மதுரை அரசு
மருத்துவமனை மூளை நரம்பியல் பிரிவுத் தலைவர் டாக்டர் கயிலைராஜன் கூறுகையில்,
""போதைக்கு காரணம், பேஸ்ட்டில் உள்ள காரீயம். இதை நுகரும்போது, நரம்பு செல்கள்
பாதிப்படைகின்றன. தொடர்ந்து பயன்படுத்தினால், மூளை தண்டு வடமும், மனநலமும்
பாதிக்கப்படும்,'' என்றார்.
எப்படி தடுப்பது? : டாக்டரின் மருந்து சீட் இருந்தால்
மட்டுமே, மருந்து கடைகளில் தூக்க மாத்திரை தருகின்றனர். அதுபோல், பெரியவர்கள்
கேட்டால் மட்டுமே இந்த பேஸ்ட்டை, கடை உரிமையாளர்கள் தர வேண்டும். அதேசமயம்,
பிள்ளைகளின் நடவடிக்கையில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், உடனடியாக கண்காணித்து
கண்டிக்க வேண்டும். இப்படி நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே, அவர்களை ஒழுக்கம்
உடையவர்களாக இந்த சமூகத்திற்கு அடையாளம் காட்ட முடியும்.

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12539
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1318
Re: 20 ரூபாயில் இரண்டு மணி நேர போதை
தடுக்க படவேண்டியதும் தண்டிக்க படவேண்டியதும் கூட .

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: 20 ரூபாயில் இரண்டு மணி நேர போதை
kalaimoon70 wrote:தடுக்க படவேண்டியதும் தண்டிக்க படவேண்டியதும் கூட .


http://azhkadalkalangiyam.blogspot.com
நேசிக்கப்படவதுமே
வாழ்க்கை 
VIJAY- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9526
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009
மதிப்பீடு: 165
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










