|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» மர்ம மரம்by யினியவன் Today at 12:56 am
» அம்மாடியோவ்...........எவ்ளோ பெரிய வாழை
by யினியவன் Today at 12:52 am
» வணக்கம்!
by யினியவன் Today at 12:46 am
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by யினியவன் Today at 12:43 am
» நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு!
by சாமி Today at 12:32 am
» சிரிக்காமல் விடமாட்டேன் - நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு
by சார்லஸ் mc Today at 12:15 am
» பாிசுத்த வேதாகமம் - ஓா் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 12:04 am
» திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:02 am
» தைராய்டு
by Aathira Yesterday at 11:27 pm
» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by Aathira Yesterday at 11:25 pm
» ஒரு அரிய தமிழ் கல்வெட்டு - சீனாவில் இருந்து !
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:22 pm
» நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:18 pm
» சதாம் உசேனை விட மோசமாக நடந்த சங்கர் பிதரிக்கு டி.ஜி.பி., பதவி வழங்கியது சரியல்ல: ஐகோர்ட்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:15 pm
» தலையாலங்கானத்துப் பெரும் போர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:03 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:51 pm
» தென்னாடுடைய சிவனே போற்றி!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:46 pm
» அமெரிக்காவில் சலவை இயந்திரத்தில் குழந்தையை வைத்து வேடிக்கை பார்த்த தம்பதியர்,
by ரா.ரா3275 Yesterday at 10:18 pm
» மும்பையில் போதை விருந்து: ஐ.பி.எல். வீரர்கள் ராகுல்சர்மா, பர்னல் கைது
by ரா.ரா3275 Yesterday at 10:12 pm
» Spain நாட்டு Gibraltar's Airport அரிய புகைப்படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:11 pm
» ஹைக்கூ என்னும் ஆயுதம்
by ரா.ரா3275 Yesterday at 10:10 pm
» அரிய புகைப்படக் காட்சிகள்
by ரா.ரா3275 Yesterday at 10:08 pm
» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
by ரா.ரா3275 Yesterday at 10:05 pm
» இரண்டாம் உலகப்போர் பீரங்கி
by ரா.ரா3275 Yesterday at 9:58 pm
» பிரம்மிப்பூட்டும் 700 வருட பழமையான குகை வீடுகள்
by முரளிராஜா Yesterday at 9:56 pm
» கல்லீரல் பாதிப்பு தீர சிறந்த மருத்துவமணை
by baskars11 Yesterday at 9:55 pm
» காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி?
by ரா.ரா3275 Yesterday at 9:49 pm
» வாழ்க தமிழ்
by ரா.ரா3275 Yesterday at 9:47 pm
» யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்?
by ரா.ரா3275 Yesterday at 9:46 pm
» என்னை தின்னும் உலகம்....
by ரா.ரா3275 Yesterday at 9:42 pm
» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Yesterday at 9:32 pm
» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Yesterday at 9:25 pm
» Pearl துறைமுகம் அழிக்கப் பட்ட காட்சிகள் ( 7 DEC 1941 )
by முரளிராஜா Yesterday at 8:52 pm
» மோட்சம் கொடு!
by பார்த்திபன் Yesterday at 8:43 pm
» பிரபலமானவர்களின் இளமைக்காலம் 2
by கேசவன் Yesterday at 8:35 pm
» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by balakarthik Yesterday at 8:25 pm
» சில புகைப்படங்கள்
by கேசவன் Yesterday at 8:05 pm
» மீண்டும் 60 அணு உலைகள்...
by SajeevJino Yesterday at 7:55 pm
» அறிந்ததும் அறியாததும்!!!
by கேசவன் Yesterday at 7:53 pm
» 1969 இல் ஆம்ஸ்ரோங் நிலவில் கால்பதித்த வீடியோ....
by கேசவன் Yesterday at 7:50 pm
» Phone WLAN Connection உதவி
by SajeevJino Yesterday at 7:47 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!
Page 1 of 1 • Share •
தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!
அனைவருக்கும் எனது பணிவான வணக்கம்!
நமது பூமியை நாளுக்கு நாள் வெப்பப்படுத்திக்கொண்டிருகிறோம்
இது பற்றிய விளக்கங்களை புதிய தலைமுறை என்ற இதழில்(மாலன்) நான் படித்ததை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டென்மார்க் நாட்டின் தலைநகரமான கோபன்ஹேகனில்109நாடுகளின் தலைவர்களும்,அதிகாரிகளும் புவி வேப்பமடைதலைப்பற்றி விவாதித்தார்கள்.
புவி வெப்பமடைதல் என்றால் என்ன ?
பூமியின் சராசரி வெப்பம் அதிகரிப்பதுதான் புவி வெப்பமடைதல்.
பலவிதமான வாயுக்கள் நம் பூமியை சூழ்ந்துள்ளன.அதைத்தான் வளிமண்டலம்(Atmosphere) என்கிறோம்.
இந்த வளிமண்டலத்தில் 5குவின்டில்லியன் கிலோ வாயுக்கள் உள்ளன.(ஒரு குவின்டில்லியன் என்பது ஒன்றுக்குபின் 19 பூஜ்யங்களை கொண்டது)
இந்த வாயுக்கள் பூமியிலிருந்து 11கி.மீ. உயரத்திலேயே இருக்கின்றன.(அதற்கு மேலே போகப்போக வாயுக்களின் அளவு குறைந்துகொண்டே போகிறது)அந்த வாயுக்களில் 78%நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன்.0.038%கார்பன்டைஆக்சைடு எனும் கரியமில வாயுவின் அளவு அதிகரிபதால்தான் பிரச்சனை.
சூரியனிலிருந்து நமக்கு வெளிச்சம் மட்டுமல்ல வெப்பமும் வருகிறது.சூரியன் பூமியைவிட 109மடங்கு பெரியது.ஆனால் அங்குஆக்சிஜன்குறைவு.நாம் சூரியனிடமிருந்து ரொம்ப தள்ளித்தான் இருக்கின்றோம்(15கோடி கி.மீ.)ஆனால் அங்கிருந்து புறப்படும் ஒளிநம்மை 8 நிமிடம் 19நொடிகளில் பூமியை அடைகிறது. அந்த ஒளி நமக்கு சக்தியையும் கொண்டு வருகிறது.மின்சாரத்தை அளக்கும் வாட்ஸ் என்ற அளவைக்கொண்டு அளந்தால்,ஒரு சதுரமீட்டருக்கு 1368வாட்ஸ்!நமது வீட்டில் எரியும் குண்டு பல்பே60வாட்ஸ்.இதுவே 1300வாட்சாக இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துபாருங்கள்.நாம் கருகிவிடுவோம்.ஆனால் இந்த சூரிய சக்தி மொத்தமும் நம் மீது பாய்ந்து நம்மை கருகிவிடாமல் வளிமண்டலம் நம்மை பாதுகாக்கிறது.அந்த சக்தியை வடிகட்டி 1000 வாட்சிற்கும் குறைவாகத்தான் அனுப்புகிறது.
சுவற்றில் பந்தை எறிந்தால் அது திரும்பி நம்மிடமே வருவது போல பூமி தன் மீது விழும் சூரிய சக்தியை மீண்டும் விண்வெளிக்கே திருப்பி அனுப்ப முயல்கிறது.ஆனால் வளிமண்டலத்தில் உள்ள சில வாயுக்கள் வெளியே செல்லும் அந்த சக்தியை விண்வெளிக்கு செல்லவிடாமல் தடுக்கின்றன.அந்த வாயுக்களை 'பசுமைநிறவாயுக்கள்' என்கிறோம்.கார்பன்டைஆக்சைடு,மீத்தேன்,ஓசோன்,நைட்ரஸ் ஆக்சைடு வாயுக்களின் கலவையாகும்.இந்த வாயுக்களின் அளவு குறைந்தால் பூமி உயிர்கள் வாழ தகுதியற்ற பனிப்பாலைவனமாகிவிடும்.இந்த வாயுக்களின் அளவு அதிகமாகும்போது பிரச்சினையாகிறது.பிரச்சினை வாயுக்கள் அல்ல அவைகளின் அளவு!
அவற்றின் அளவு ஏன் அதிகரிக்கிறது ?
நம்முடைய,அதாவது மனிதர்களுடைய செயல்பாடுகள்தான் காரணம்.நம் தொழிற்சாலைகள் ஏராளமாகக் கரியை எரித்து கார்பன்டைஆக்சைடை வளிமண்டலத்தில் நிரப்புகின்றன.பூமிக்கடியில் உள்ள ஹைட்ரோகார்பன்களை கச்சா எண்ணையாக எடுத்து பெட்ரோல் டீசலாக வடித்து,கார்கள்,லாரிகளில் எரித்து கார்பன்டைஆக்சைடை வளிமண்டலதிற்கு அனுப்புகிறோம்.சுருக்கமாக சொன்னால் பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் கரியைஎடுத்துக் காற்றில் ஏற்றி வளிமண்டலத்திற்கு அனுப்புகிறோம்.இன்னொருபுறம் பெரிய தவறு கட்டிடங்களுக்காகவும்,காகிதங்களுக்காகவும் மரங்களை வெட்டுகிறோம்.மரங்கள் வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டைஆக்சைடை எடுக்கொண்டு சூரிய ஒளியின் உதவியால் உணவு தயாரிக்கின்றன.மரங்களில் கிட்டத்தட்ட 47% கார்பன்.காகிதத்தை எரித்தால் கரி கிடைப்பதில்லை.மரத்தை எரித்தால் கரி கிடைப்பது அதனால்தான்.அதாவது ஒருபுறம் பூமிக்கு கீழே உள்ள கார்பன் எடுத்து எரித்து வளிமண்டலதிற்க்கு அனுப்பிகொண்டிருகிறோம்.
புவியின் வெப்பம் அதிகரித்தால்என்ன ஆகும்?
இந்தியாவிற்கு என்ன ஆகும் என்பதை சொல்கிறேன்.இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் உருகும்.அதனால் கங்கை உள்பட பல நதிகளில் வெள்ளபெருக்கு ஏற்படும்.அந்த வெள்ள நீர்,கடலில் சேர்ந்து கடல் மட்டம் உயரும்.வங்காளகடலில் உள்ள சுந்தரவனக்காடுகள்,கேரளத்தில் உள்ள குட்டநாடு போன்ற பகுதிகள்,அந்தமான் அருகில் உள்ள சிறு தீவுகள் அழிந்து போகும்.பனிப்பாறைகள் உருகுவதால் அதன் அளவு சிறிதாகி பிறகு நதிகளில் நீர் வரத்து குன்றி,வரச்சி ஏற்படும்.மழை பெய்யாது.வேளாண்மை பாதிப்படையும்.
தமிழ்நாடு தப்பித்துக்கொள்ளுமா?நாம்தான் இமயத்தில் இருந்து வெகுதொலைவில் இருக்கிறோமே?என்று அனைவரும் கருதலாம்.
தமிழ்நாட்டுக்கு இரண்டு விதமான ஆபத்துக்கள் காத்திருக்கின்றன.
1.தண்ணீர் பஞ்சம் 2.உணவுபற்றாகுறை
இந்தியாவிலேயே நீளமான கடற்கரை கொண்ட மூன்றாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு. 910கி.மீ.கடல் மட்டத்திலிருந்து 10மீட்டர்உயரத்திற்கும் குறைவான பகுதிகளை தாழ்நிலை கடலோரப் பகுதிகள் (Low Elevation Coastal Zones)எனக்கூறுவார்கள்.தமிழ்நாட்டின் பெரும்பாலான கடலோரபகுதிகள்,சென்னை உள்பட,கடல் மட்டத்திலிருந்து 2மீட்டரிலிருந்து 10மீட்டருக்குள்ளான உயரத்தில் அமைந்திருக்கின்றன.கடல் மட்டம் உயரும்போது இவை அழிவையோ,சேதத்தையோ சந்திக்கநேரிடும்.இந்த பகுதிகளில் சுமார் ஒன்றரை கோடி மக்கள் வசிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் 40,319ஏரிகளும் கண்மாயிகளும் இருக்கின்றன.இவைதான் நமக்கு குடிநீருக்கும் வேளாண்மைக்கும் ஆதாரம்.இவற்றில் சில ஏரிகள் பிரம்மாண்டமானவை.வீராணம் ஏரி 11கி.மீ.நீளமும், 4கி.மீ.அகலமும் கொண்டது.பழவேற்காடு ஏரி 60கி.மீ. நீளமும்,18கி.மீ.அகலமும் கொண்டது.இது போன்ற ஏரிகளில் உள்ள தண்ணீர்,புவியின் வெப்பம் இரண்டு டிகிரி கூடும்போது விரைவாக ஆவியாகும்.இதோடு பருவநிலை மாற்றத்தால் பருவ மழை பெய்யாமல் போனால் நிலைமை மோசமாகிவிடும்.ஏனெனில் தமிழ்நாட்டில் 54% நிலங்கள் மழையை நம்பித்தான் விவசாயம்செய்கின்றன.
நமது பூமி வெப்பமடைவதை தடுக்க நிறுத்த முடியாதா?
முற்றிலும் முடியாது.ஆனால் சமாளிக்கிற நிலையை ஏற்படுத்த முடியும்.
இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் செய்வதை செய்யட்டும்.
நாம் என்ன செய்ய வேண்டும்?
1.மரக்கன்றுகளை நடலாம்(ஆலமரம்,வேம்பு...)
2.மரம் வெட்டுவதை தடுக்கலாம்
3.ஏசி உபயோகத்தை குறைத்துகொள்ளலாம்
4.எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தலாம்
5.நாம் குண்டு பல்புகளை பயன்படுத்துவதை விட்டுவிட்டு Compact Flurescent Lamp(CFL)ஐ பயன்படுத்தலாம்.
இவற்றை எல்லாம் நமக்காக என நினைக்காமல் நமது அடுத்த தலைமுறையினருக்காக செய்யலாமே! இது என்னுடைய வேண்டுகோள்!


நமது பூமியை நாளுக்கு நாள் வெப்பப்படுத்திக்கொண்டிருகிறோம்
இது பற்றிய விளக்கங்களை புதிய தலைமுறை என்ற இதழில்(மாலன்) நான் படித்ததை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டென்மார்க் நாட்டின் தலைநகரமான கோபன்ஹேகனில்109நாடுகளின் தலைவர்களும்,அதிகாரிகளும் புவி வேப்பமடைதலைப்பற்றி விவாதித்தார்கள்.
புவி வெப்பமடைதல் என்றால் என்ன ?
பூமியின் சராசரி வெப்பம் அதிகரிப்பதுதான் புவி வெப்பமடைதல்.
பலவிதமான வாயுக்கள் நம் பூமியை சூழ்ந்துள்ளன.அதைத்தான் வளிமண்டலம்(Atmosphere) என்கிறோம்.
இந்த வளிமண்டலத்தில் 5குவின்டில்லியன் கிலோ வாயுக்கள் உள்ளன.(ஒரு குவின்டில்லியன் என்பது ஒன்றுக்குபின் 19 பூஜ்யங்களை கொண்டது)
இந்த வாயுக்கள் பூமியிலிருந்து 11கி.மீ. உயரத்திலேயே இருக்கின்றன.(அதற்கு மேலே போகப்போக வாயுக்களின் அளவு குறைந்துகொண்டே போகிறது)அந்த வாயுக்களில் 78%நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன்.0.038%கார்பன்டைஆக்சைடு எனும் கரியமில வாயுவின் அளவு அதிகரிபதால்தான் பிரச்சனை.
சூரியனிலிருந்து நமக்கு வெளிச்சம் மட்டுமல்ல வெப்பமும் வருகிறது.சூரியன் பூமியைவிட 109மடங்கு பெரியது.ஆனால் அங்குஆக்சிஜன்குறைவு.நாம் சூரியனிடமிருந்து ரொம்ப தள்ளித்தான் இருக்கின்றோம்(15கோடி கி.மீ.)ஆனால் அங்கிருந்து புறப்படும் ஒளிநம்மை 8 நிமிடம் 19நொடிகளில் பூமியை அடைகிறது. அந்த ஒளி நமக்கு சக்தியையும் கொண்டு வருகிறது.மின்சாரத்தை அளக்கும் வாட்ஸ் என்ற அளவைக்கொண்டு அளந்தால்,ஒரு சதுரமீட்டருக்கு 1368வாட்ஸ்!நமது வீட்டில் எரியும் குண்டு பல்பே60வாட்ஸ்.இதுவே 1300வாட்சாக இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துபாருங்கள்.நாம் கருகிவிடுவோம்.ஆனால் இந்த சூரிய சக்தி மொத்தமும் நம் மீது பாய்ந்து நம்மை கருகிவிடாமல் வளிமண்டலம் நம்மை பாதுகாக்கிறது.அந்த சக்தியை வடிகட்டி 1000 வாட்சிற்கும் குறைவாகத்தான் அனுப்புகிறது.
சுவற்றில் பந்தை எறிந்தால் அது திரும்பி நம்மிடமே வருவது போல பூமி தன் மீது விழும் சூரிய சக்தியை மீண்டும் விண்வெளிக்கே திருப்பி அனுப்ப முயல்கிறது.ஆனால் வளிமண்டலத்தில் உள்ள சில வாயுக்கள் வெளியே செல்லும் அந்த சக்தியை விண்வெளிக்கு செல்லவிடாமல் தடுக்கின்றன.அந்த வாயுக்களை 'பசுமைநிறவாயுக்கள்' என்கிறோம்.கார்பன்டைஆக்சைடு,மீத்தேன்,ஓசோன்,நைட்ரஸ் ஆக்சைடு வாயுக்களின் கலவையாகும்.இந்த வாயுக்களின் அளவு குறைந்தால் பூமி உயிர்கள் வாழ தகுதியற்ற பனிப்பாலைவனமாகிவிடும்.இந்த வாயுக்களின் அளவு அதிகமாகும்போது பிரச்சினையாகிறது.பிரச்சினை வாயுக்கள் அல்ல அவைகளின் அளவு!
அவற்றின் அளவு ஏன் அதிகரிக்கிறது ?
நம்முடைய,அதாவது மனிதர்களுடைய செயல்பாடுகள்தான் காரணம்.நம் தொழிற்சாலைகள் ஏராளமாகக் கரியை எரித்து கார்பன்டைஆக்சைடை வளிமண்டலத்தில் நிரப்புகின்றன.பூமிக்கடியில் உள்ள ஹைட்ரோகார்பன்களை கச்சா எண்ணையாக எடுத்து பெட்ரோல் டீசலாக வடித்து,கார்கள்,லாரிகளில் எரித்து கார்பன்டைஆக்சைடை வளிமண்டலதிற்கு அனுப்புகிறோம்.சுருக்கமாக சொன்னால் பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் கரியைஎடுத்துக் காற்றில் ஏற்றி வளிமண்டலத்திற்கு அனுப்புகிறோம்.இன்னொருபுறம் பெரிய தவறு கட்டிடங்களுக்காகவும்,காகிதங்களுக்காகவும் மரங்களை வெட்டுகிறோம்.மரங்கள் வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டைஆக்சைடை எடுக்கொண்டு சூரிய ஒளியின் உதவியால் உணவு தயாரிக்கின்றன.மரங்களில் கிட்டத்தட்ட 47% கார்பன்.காகிதத்தை எரித்தால் கரி கிடைப்பதில்லை.மரத்தை எரித்தால் கரி கிடைப்பது அதனால்தான்.அதாவது ஒருபுறம் பூமிக்கு கீழே உள்ள கார்பன் எடுத்து எரித்து வளிமண்டலதிற்க்கு அனுப்பிகொண்டிருகிறோம்.
புவியின் வெப்பம் அதிகரித்தால்என்ன ஆகும்?
இந்தியாவிற்கு என்ன ஆகும் என்பதை சொல்கிறேன்.இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் உருகும்.அதனால் கங்கை உள்பட பல நதிகளில் வெள்ளபெருக்கு ஏற்படும்.அந்த வெள்ள நீர்,கடலில் சேர்ந்து கடல் மட்டம் உயரும்.வங்காளகடலில் உள்ள சுந்தரவனக்காடுகள்,கேரளத்தில் உள்ள குட்டநாடு போன்ற பகுதிகள்,அந்தமான் அருகில் உள்ள சிறு தீவுகள் அழிந்து போகும்.பனிப்பாறைகள் உருகுவதால் அதன் அளவு சிறிதாகி பிறகு நதிகளில் நீர் வரத்து குன்றி,வரச்சி ஏற்படும்.மழை பெய்யாது.வேளாண்மை பாதிப்படையும்.
தமிழ்நாடு தப்பித்துக்கொள்ளுமா?நாம்தான் இமயத்தில் இருந்து வெகுதொலைவில் இருக்கிறோமே?என்று அனைவரும் கருதலாம்.
தமிழ்நாட்டுக்கு இரண்டு விதமான ஆபத்துக்கள் காத்திருக்கின்றன.
1.தண்ணீர் பஞ்சம் 2.உணவுபற்றாகுறை
இந்தியாவிலேயே நீளமான கடற்கரை கொண்ட மூன்றாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு. 910கி.மீ.கடல் மட்டத்திலிருந்து 10மீட்டர்உயரத்திற்கும் குறைவான பகுதிகளை தாழ்நிலை கடலோரப் பகுதிகள் (Low Elevation Coastal Zones)எனக்கூறுவார்கள்.தமிழ்நாட்டின் பெரும்பாலான கடலோரபகுதிகள்,சென்னை உள்பட,கடல் மட்டத்திலிருந்து 2மீட்டரிலிருந்து 10மீட்டருக்குள்ளான உயரத்தில் அமைந்திருக்கின்றன.கடல் மட்டம் உயரும்போது இவை அழிவையோ,சேதத்தையோ சந்திக்கநேரிடும்.இந்த பகுதிகளில் சுமார் ஒன்றரை கோடி மக்கள் வசிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் 40,319ஏரிகளும் கண்மாயிகளும் இருக்கின்றன.இவைதான் நமக்கு குடிநீருக்கும் வேளாண்மைக்கும் ஆதாரம்.இவற்றில் சில ஏரிகள் பிரம்மாண்டமானவை.வீராணம் ஏரி 11கி.மீ.நீளமும், 4கி.மீ.அகலமும் கொண்டது.பழவேற்காடு ஏரி 60கி.மீ. நீளமும்,18கி.மீ.அகலமும் கொண்டது.இது போன்ற ஏரிகளில் உள்ள தண்ணீர்,புவியின் வெப்பம் இரண்டு டிகிரி கூடும்போது விரைவாக ஆவியாகும்.இதோடு பருவநிலை மாற்றத்தால் பருவ மழை பெய்யாமல் போனால் நிலைமை மோசமாகிவிடும்.ஏனெனில் தமிழ்நாட்டில் 54% நிலங்கள் மழையை நம்பித்தான் விவசாயம்செய்கின்றன.
நமது பூமி வெப்பமடைவதை தடுக்க நிறுத்த முடியாதா?
முற்றிலும் முடியாது.ஆனால் சமாளிக்கிற நிலையை ஏற்படுத்த முடியும்.
இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் செய்வதை செய்யட்டும்.
நாம் என்ன செய்ய வேண்டும்?
1.மரக்கன்றுகளை நடலாம்(ஆலமரம்,வேம்பு...)
2.மரம் வெட்டுவதை தடுக்கலாம்
3.ஏசி உபயோகத்தை குறைத்துகொள்ளலாம்
4.எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தலாம்
5.நாம் குண்டு பல்புகளை பயன்படுத்துவதை விட்டுவிட்டு Compact Flurescent Lamp(CFL)ஐ பயன்படுத்தலாம்.
இவற்றை எல்லாம் நமக்காக என நினைக்காமல் நமது அடுத்த தலைமுறையினருக்காக செய்யலாமே! இது என்னுடைய வேண்டுகோள்!
வ.விஜய் இயந்திரவியல்துறை விரிவுரையாளர்
தந்தை ரோவர் தொழில்நுட்பக் கல்லூரி ,பெரம்பலூர்-621212.
வாய்ப்புக்கு நன்றி!
வாழ்க வளமுடன்
தந்தை ரோவர் தொழில்நுட்பக் கல்லூரி ,பெரம்பலூர்-621212.
வாய்ப்புக்கு நன்றி!
வாழ்க வளமுடன்
Last edited by vijaybemech on Wed Feb 10, 2010 3:00 am; edited 1 time in total

vijaybemech- புதியவர்

- பதிவுகள்: 43
வசிப்பிடம்: perungalur
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 0
Re: தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!
நல்ல வேண்டு கோள்
1.மரக்கன்றுகளை நடலாம்(ஆலமரம்,வேம்பு...)
2.மரம் வெட்டுவதை தடுக்கலாம்
3.ஏசி உபயோகத்தை குறைத்துகொள்ளலாம்
4.எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தலாம்
5.நாம் குண்டு பல்புகளை பயன்படுத்துவதை விட்டுவிட்டு Compact Flurescent Lamp(CFL)ஐ பயன்படுத்தலாம்.
இவற்றை எல்லாம் நமக்காக என நினைக்காமல் நமது அடுத்த தலைமுறையினருக்காக செய்யலாமே! இது என்னுடைய வேண்டுகோள்!

1.மரக்கன்றுகளை நடலாம்(ஆலமரம்,வேம்பு...)
2.மரம் வெட்டுவதை தடுக்கலாம்
3.ஏசி உபயோகத்தை குறைத்துகொள்ளலாம்
4.எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தலாம்
5.நாம் குண்டு பல்புகளை பயன்படுத்துவதை விட்டுவிட்டு Compact Flurescent Lamp(CFL)ஐ பயன்படுத்தலாம்.
இவற்றை எல்லாம் நமக்காக என நினைக்காமல் நமது அடுத்த தலைமுறையினருக்காக செய்யலாமே! இது என்னுடைய வேண்டுகோள்!


அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!
நல்ல தகவல் தோழரே...வாழ்த்துக்கள்

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

vijaybemech- புதியவர்

- பதிவுகள்: 43
வசிப்பிடம்: perungalur
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 0
Re: தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!
ஒவ்வருத்தருக்கும் இருக்கும் வருத்தம் தான் நண்பா.
நல்ல தகவல்
வாழ்த்துக்கள் 
நல்ல தகவல்
வாழ்த்துக்கள் 
Re: தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!
இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் செய்வதை செய்யட்டும்.
நாம் என்ன செய்ய வேண்டும்?
1.மரக்கன்றுகளை நடலாம்(ஆலமரம்,வேம்பு...)
2.மரம் வெட்டுவதை தடுக்கலாம்
3.ஏசி உபயோகத்தை குறைத்துகொள்ளலாம்
4.எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தலாம்
5.நாம் குண்டு பல்புகளை பயன்படுத்துவதை விட்டுவிட்டு Compact Flurescent Lamp(CFL)ஐ பயன்படுத்தலாம்.
இவற்றை எல்லாம் நமக்காக என நினைக்காமல் நமது அடுத்த தலைமுறையினருக்காக செய்யலாமே! இது என்னுடைய வேண்டுகோள்!
இவை பின்பற்றுவதால் நம் தலைமுறைக்கு நல்லது என்று நினைபவர்கள் மிகவும் குறைவு.
இதை சட்டமாக கொண்டுவந்தால் தான் இங்கு நடைமுறை படுத்த முடியும்.
இங்கு இந்த குளிர் காலத்திலும் 24 மணி நேரமும் ஏசியில் இருப்பவர்களை என்ன செய்வது ???????????
CFL பல்புகளை பயன்படுத்த ஒரு சிக்கல் அதன் விலை சாதாரண பல்புகளை விட பல மடங்கு அதிகம்.............


சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107
Re: தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!
நல்ல தகவல் நன்றி



தண்டாயுதபாணி- தளபதி

- பதிவுகள்: 1303
வசிப்பிடம்: தென்கொரியா
சேர்ந்தது: 24/10/2009
மதிப்பீடு: 12
Re: தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!
நல்ல தகவல்.........

VIJAY- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9526
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009
மதிப்பீடு: 165
Re: தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!
இதை சொல்லவே இல்லை 


mohan-தாஸ்- வி.ஐ.பி

- பதிவுகள்: 9967
வசிப்பிடம்: தேன் கூடு
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 38
Re: தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!
நல்ல தகவல் நன்றி ..

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9189
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1294
Re: தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!
நல்ல தகவல்.நன்றி

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11449
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 926
Re: தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!
இன்றய தகவல்



இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!
அனைவருக்கும் பணிவனான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன் வ.விஜய்
அன்புடன் வ.விஜய்

vijaybemech- புதியவர்

- பதிவுகள்: 43
வசிப்பிடம்: perungalur
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 0
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








