புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_m10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10 
68 Posts - 53%
heezulia
பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_m10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_m10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_m10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_m10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_m10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Guna.D
பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_m10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Shivanya
பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_m10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_m10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_m10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_m10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_m10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10 
15 Posts - 3%
prajai
பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_m10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_m10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10 
9 Posts - 2%
jairam
பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_m10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_m10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Jenila
பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_m10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_m10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள்


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 4:39 pm

First topic message reminder :

1. அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே 1

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. 2


muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Jul 19, 2011 3:09 pm

32. சத்ரபதி சிவாஜி
தன் சைனியத்திற்குக் கூறியது
ஜயஜய பவானி!ஜயஜய பாரதம்!
ஜயஜய மாதா!ஜயஜய துர்க்கா!
வந்தே மாதரம்!வந்தே மாதரம்!

சேனைத் தலைவர்காள்! சிறந்தமந் திரிகாள்!
யானைத் தலைவரும் அருந்திறல் வீரர்காள்! 5

அதிரத மன்னர்காள்! துரகத் ததிபர்காள்!
எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள்!

வேலெறி படைகாள்!சூலெறி மறவர்காள்!
கால னுருக்கொளும் கணைதுரந் திடுவீர்,

மற்றுமா யிரவிதம் பற்றலர் தம்மைச் 10
செற்றிடும் திறனுடைத் தீரரத் தினங்காள்!

யாவிரும் வாழிய! யாவிரும் வாழிய!
தேவிநுந் தமக்கெலாம் திருவருள் புரிக!

மாற்றலர் தம்புலை நாற்றமே யறியா
ஆற்றலகொண் டிருந்நததிவ் வரும்புகழ் நாடு! 15

வேத நூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பளோ பாரத தேவி?

வீரரும் அவரிசை விரித்திடு புலவரும்
பாரெலாம் பெரும்புகழ் பரப்பிய நாடு!

தர்மமே உருவமாத் தழைத்தபே ரரசரும் 20
நிர்மல முனிவரும் நிறைந்தநன் னாடு!

வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை
ஊரவர் மலடி யென் றுரைத்திடு நாடு!

பாரத பூமி பழம்பெரும் பூமி;
நீரதன் புதல்வர்; இந் நினைவகற் றாதீர்! 25





வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Jul 19, 2011 3:10 pm

பாரத நாடு பார்க்கெலாம் திலகம்
நீரதன் புதல்வர்;இந் நினைவகற் றாதீர்!

வானக முட்டும் இமயமால் வரையும்
ஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும்

காத்திடும் நாடு! கங்கையும் சிந்துவும் 30
தூத்திரை யமுயையும் சுனைகளும் புனல்களும்

இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும்
உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு!

மைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க
பைந்நிற முகில்கள் வழங்குபொன் னாடு! 35

தேவர்கள் வாழ்விடம், திறலுயர் முனிவர்
ஆவலோ டடையும் அரும்புகழ் நாடு!

ஊனமொன் றறியா ஞானமெய்ப் பூமி
வானவர் விழையும் மாட்சியர் தேயம்!

பாரத நாட்டிசை பகரயான் வல்லனோ? 40
நீரதன் புதல்வர்;இந் நினைவகற் றாதீர்!

தாய்த் திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர்,
பேய்த்தகை கொண்டோர்,பெருமையும் வண்மையும்,

ஞானமும் அறியா நவைபுரி பகைவர்,
வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல் 45
இந்நாள் படைகொணர்ந்து இன்னல்செய் கின்றார்!

ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்
பாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும்

மாதர்கற் பழித்தலும் மறையவர் வேள்விக்கு
ஏதமே சூழ்வதும் இயற்றிநிற் கின்றார்! 50
சாத்திரக் தொகுதியைத் தாழ்த்துவைக் கின்றார்
கோத்திர மங்கையர் குலங்கெடுக் கின்றார்!

எண்ணில துணைவர்காள்!எமக்கிவர் செயுந்துயர்;
கண்ணியம் மறுத்தனர்;ஆண்மையுங் கடிந்தனர்;

பொருளினைச் சிதைத்தனர்;மருளினை விதைத்தனர்; 55
திண்மையை யழித்துப் பெண்மையிங் களித்தனர்;

பாரதப் பெரும்பெயர் பழிப்பெய ராக்கினர்;
சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்;

வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்துநம்
ஆரியம் புலையருக் கடிமைக ளாயினர் 60

மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை?
வெற்றிகொள் புலையர்தாள் வீழ்நதுகொல் வாழ்வீர்?

மொக்குள்தான் தோன்றி முடிவது போல
மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்!

தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை 65
மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்?

மானமொன் றிலாது மாற்றலர் தொழும்பராய்
ஈனமுற் றிருக்க எவன்கொலோ விரும்புவன்?

தாய்பிறன் கைப்படச் சகிப்பவ னாகி
நாயென வாழ்வோன் நமரில்இங் குளனோ? 70

பிச்சைவாழ் வுகந்து பிறருடை யாட்சியில்
அச்சமுற் றிருப்போன் ஆரிய னல்லன்.

புன்புலால் யாக்கையைப் போற்றியே தாய்நாட்டு
அன்பிலா திருப்போன் ஆரிய னல்லன்.

மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி யாளும் 75
ஆட்சியி லடங்குவோன் ஆரிய னல்லன்



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Jul 19, 2011 3:11 pm

ஆரியத் தன்மை அற்றிடுஞ் கிறியர்
யாரிவன் உளரவர் யாண்டேனும் ஒழிக!

படைமுகத்து இறந்து பதம்பெற விரும்பாக்
கடைபடு மாக்களென் கண்முன்நில் லாதீர்! 80

சோதரர் தம்மைத் துரோகிகள் அழிப்ப
மாதரார் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க!

நாடெலாம் பிறர்வசம் நண்ணுதல் நினையான்
வீடுசென் றொளிக்க விரும்புவோன் விரும்புக!

தேசமே நலிவொடு தேய்ந்திட மக்களின் 85
பாசமே பெரிதெனப் பார்ப்பவன் செல்க!

நாட்டுளார் பசியினால் நலிந்திடத் தன்வயிறு
ஊட்டுதல் பெரிதென உன்னுவோன் செல்க!

ஆணுருக் கொண்ட பெண்களும் அலிகளும்
வீணில்இங் கிருந்தெனை வெறுத்திடல் விரும்பேன் 90

ஆரியர் இருமின்!ஆண்கள் இங்கு இருமின்!
வீரியம் மிருந்த மேன்மையோர் இருமின்!

மானமே தெரிதென மதிப்பவர் இருமின்!
ஈனமே பொறாத இயல்பினர் இருமின்!

தாய்நாட்டன்புறு தனையர்இங்கு இருமின்! 95
மாய்நாட் பெருமையின் மாய்பவர் இருமின்!

புலையர்தம் தொழும்பைப் பொறுக்கிலார் இருமின்!
கலையறு மிலேச்சரைக் கடிபவர் இருமின்!

ஊரவர் துயரில் நெஞ் சுருகுவீர் இருமின்!
சோரநெஞ் சில்லாத் தூயவர் இருமின்! 100

தேவிதாள் பணியுந் தீரர்இங்கு இருமின்!
பாவியர் குருதியைப் பருகுவார் இருமின்!

உடலினைப் போற்றா உத்தமர் இருமின்!
கடல்மடுப் பினும்மனம் கலங்கலர் உதவுமின்!

வம்மினோ துணைவீர்? மருட்சிகொள் ளாதீர்! 105
நம்மனோ ராற்றலை நாழிகைப் பொழுதெனும்

புல்லிய மாற்றலர் பொறுக்கவல் லார்கொல்?
மெல்லிய திருவடி வீறுடைத் தேவியின்

இன்னருள் நமக்கோர் இருந்துணை யாகும்.
பன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும் 110

வீமனும் துரோணனும் வீட்டுமன் தானும்
இராமனும் வேறுள இருந்திறல் வீரரும்

நற்றுணை புரிவர்;வானக நாடுறும்;
வெற்றியே யன்றி வேறெதும் பெறுகிலேம்.

பற்றறு முனிவரும் ஆசிகள் பகர்வர் 115
செற்றினி மிலேச்சரைக் தீர்த்திட வம்மின்!

ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்!
நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்!

வாளுடை முனையினும் வயந்திகழ் சூலினும்,
ஆளுடைக் கால்க ளடியினுந் தேர்களின் 120





வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Jul 19, 2011 3:12 pm

உருளையி னிடையினும், மாற்றலர் தலைகள்
உருளையிற் கண்டுநெஞ் சுவப்புற வம்மின்!

நம் இதம்;பெருவளம் நலிந்திட விரும்பும்
(வன்மியை)வேரறத் தொலைத்தபின் னன்றோ

ஆணெனப் பெறுவோம்;அன்றிநாம் இறப்பினும் 125
வானுறு தேவர் மணியுல கடைவோம்!

வாழ்வமேற் பாரத வான்புகழ் தேவியைத்
தாழ்வினின் றுயர்த்திய தடம்புகழ் பெறுவோம்!

போரெனில் இதுபோர்!புண்ணியத் திருப்போர்!
பாரினில் இதுபோற் பார்த்திடற்கெளிதோ? 130

ஆட்டினைக் கொன்று வேள்விகள் இயற்றி
வீட்டினைப் பெறுவான் விரும்புவார் சிலரே;

நெஞ்சகக் குருதியை நிலத்திடை வடித்து
வஞ்சக மழிக்கும் மாமகம் புரிவம்யாம்.

வேள்வியில் இதுபோல் வேள்வியொன் றில்லை; 135
தவத்தினில் இதுபேவால் தவம்பிறி தில்லை

முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று
தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட

மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர்
காதலின் நண்பர் கலைதரு குரவரென்று 140

இன்னவர் இருத்தல்கண்டுஇதயம்நொந் தோனாய்த்
தன்னருந் தெய்விகச் சாரதி முன்னர்

"ஐயனே!" இவர்மீ தம்பையோ தொடுப்பேன்!
வையகத் தரசும் வானக ஆட்சியும்

போயினும் இவர்தமைப் போரினில் வீழ்த்தேன் 145
மெய்யினில் நடுக்கம் மேவுகின் றதுவால்;
கையினில் வில்லும் கழன்றுவீழ் கின்றது;

வாயுலர் கின்றது;மனம் பதைக் கின்றது;
ஓய்வுறுங் கால்கள்;உலைந்தது சிரமும்;

வெற்றியை விரும்பேன்;மேன்மையை விரும்பேன்; 150
சுற்றமிங் கறுத்துச் சுகம்பெறல் விரும்பேன்;

எனையிவர் கொல்லினும் இவரையான் தீண்டேன்;
சினையுறுத் திட்டபின் செய்வதோ ஆட்சி?"

எனப்பல கூறியவ் விந்திரன் புதல்வன்
னப்படை வில்லைக் களத்தினில் எறிந்து 155

சோர்வொடு வீழ்ந்தனன்; சுருதியின் முடிவாய்த்
தேர்வயின் நின்றநம் தெய்விகப் பெருமான்

வில்லெறிந் திருந்த வீரனை நோக்கி,
"புல்லிய அறிவொடு புலம்புகின் றனையால்,

அறத்தினைப் பிரிந்த சுயோதனா தியரைச் 160
செறுத்தினி மாய்ப்பது தீமையென் கின்றாய்.

உண்மையை அறியாய்;உறவையே கருதிப்
பெண்மைகொண் டேதோ திற்றிநிற் கின்றாய்

வஞ்சகர்,தீயர்,மனிதரை வருத்துவோர்,
நெஞ்சகத் தருக்குடை நீசர்கள்;இன்னோர் 165

தம்மொடு பிறந்த சகோதர ராயினும்,
வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம்,

ஆரிய நீதிநீ அறிந்திலை போலும்!
பூரியர் போல்மனம் புழுங்குற லாயினை

அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைக்தும் 170
பெரும்பதத் தடையுமாம் பெண்மையெங் கெய்தினை?

பேடிமை யகற்று!நின் பெருமையை மறந்திடேல்!
ஈடிலாப் புகழினாய்!எழுகவோ எழுக!

என்றுமெய்ஞ் ஞானம்நம் இறையவர் கூறக்
குன்றெனும் வயிரக் கொற்றவான் புயத்தோன் 175

அறமே பெரிதென அறிந்திடு மனத்தனாய்
மறமே உருவுடை மாற்றலர் தம்மைச்

சுற்றமும் நோக்கான் தோழமை மதியான்
பற்றலர் தமையெலாம் பார்க்கிரை யாக்கினன்,

விசயனன் றிருந்த வியன்புகழ் நாட்டில் 180
இசையுநற் றவத்தால் இன் றுவாழ்ந் திருக்கும்

ஆரிய வீரர்காள்! அவருடை மாற்றலர்,
தேரில்,இந் நாட்டினர்,செறிவுடை உறவினர்;

நம்மையின் றெதிர்க்கும் நயனிலாப் புல்லோர்
செம்மைதீர் மிலேச்சர், தேசமும் பிறிதாம் 185

பிறப்பினில் அன்னியர்,பேச்சினில் அன்னியர்
சிறப்புடை யாரியச் சீர்மையை அறியார்.



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Jul 19, 2011 3:12 pm

33. கோக்கலே சாமியார் பாடல்
இராமலிங்க சுவாமிகள்
"களங்கமறப் பொதுநடம் நான் கண்டு கொண்ட தருணம்"
என்று பாடிய பாட்டைத் திரித்துப் பாடியது.

களங்கமுறும் மார்லிநடம் கண்டுகொண்ட தருணம்
கடைச் சிறியேன் உளம்த்துக் காய்த்ததொரு காய்தான்,
விளங்கமுறப் பழுத்திடுமோ? வெம்பிவிழுந் திடுமோ?
வெம்பாது விழினுமென் றன் கரத்திலகப் படுமோ?
வளர்த்த பழம் கர்சானென்ற குரங்குகவர்ந் திடுமோ?
மற்றிங்ஙன் ஆட்சிசெய்யும் அணில்கடித்து விடுமோ?
துளக்கமற யான்பெற்றிங் குண்ணுவனோ, அல்லால்
தொண்டைவிக்கு மோஏதும் சொல்லரிய தாமோ?



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Jul 19, 2011 3:13 pm

34. தொண்டு செய்யும் அடிமை
சுயராஜ்யம் வேண்டுமென்ற பாரதவாசிக்கு
ஆங்கிலேய உத்தியோகஸ்தன் கூறுவது

நந்தனார் சரித்திரத்திலுள்ள
"மாடு தின்னும் புலையா!-உனக்கு மார்கழித் திருநாளா?"
என்ற பாட்டின் வர்ண மெட்டு

1.
தொண்டு செய்யும் அடிமை!-உனக்குச்
சுதந்திர நினைவோடா?
பண்டு கண்ட துண்டோ?-அதற்குப்
பாத்திர மாவாயோ? (தொண்டு)

2.
ஜாதிச் சண்டை போச்சோ?-உங்கள்
சமயச் சண்டை போச்சோ?
நீதி சொல்ல வந்தாய்!-கண்முன்
நிற்கொ ணாது போடா! (தொண்டு)

3.
அச்சம் நீங்கி னாயோ?-அடிமை!
ஆண்மை தாங்கி னாயோ?
பிச்சை வாங்கிப் பிழைக்கும்-ஆசை
பேணுத லொழித் தாயோ? (தொண்டு)

4.
கப்ப லேறு வாயோ?-அடிமை!
கடலைத் தாண்டு வாயோ?
குப்பை விரும்பும் நாய்க்கே-அடிமை!
கொற்றத் தவிசுமுண் டோ? (தொண்டு)

5.
ஒற்று மைபயின் றாயோ?-அடிமை!
உடம்பில் வலிமையுண் டோ?
வெற்றுரை பேசாதே!-அடிமை!
வீரியம் அறிவாயோ? (தொண்டு)

6.
சேர்ந்து வாழு வீரோ-உங்கள்
சிறுமைக் குணங்கள் போச்சோ?
சோர்ந்து வீழ்தல் போச்சோ?-உங்கள்
சோம்பரைத் துடைத்தீரோ? (தொண்டு)

7.
வெள்ளை நிறத்தைக் கண்டால்-பதறி
வெருவலை ஒழித்தாயோ?
உள்ளது சொல்வேன் கேள்-சுதந்திரம்
உனக்கில்லை மறந்திடடா! (தொண்டு)

8.
நாடு காப்ப தற்கே-உனக்கு
ஞானம் சிறிதுமுண்டோ?
வீடு காக்கப் போடா!-அடிமை!
வேலை செய்யப் போடா; (தொண்டு)

9.
சேனை நடத்து வாயோ?-தொழும்புகள்
செய்திட விரும்பாயோ?
ஈன மான தொழிலே உங்களுக்கு
இசைவதாகும் போடா! (தொண்டு)



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Jul 19, 2011 3:14 pm

35.நம்ம ஜாதிக்கு அடுக்குமோ?
புதிய கட்சித் தலைவரை நோக்கி நிதானக் கட்சியார்
சொல்லுதல்

"ஓய் நந்தனாரே!நம்ம ஜாதிக் கடுக்குமோ? நியாயந் தானோ?
நீர் சொல்லும்?" என்ற வர்ண மெட்டு
பல்லவி

ஓய் திலகரே!நம்ம ஜாதிக் கடுக்குமோ?
செய்வது சரியோ? சொல்லும்

1.
முன்னறி யாப்புது வழக்கம்-நீர்
மூட்டி விட்டதிந்தப் பழக்கம்-இப்போது
எந்நக ரிலுமிது முழக்கம்-மிக இடும்பை செய்யும் இந்த ஒழுக்கம். (ஓய் திலகரே!)

2.
சுதந்திரம் என்கிற பேச்சு-எங்கள்
தொழும்புக ளெல்லாம் வீணாய்ப் போச்சு-இது
மதம்பிடித் ததுபோ லாச்சு-எங்கள்
மனிதர்க் கெல்லாம் வந்த தேச்சு (ஓய் திலகரே!)

3.
வெள்ளை நிறத்தவர்ககே ராஜ்யம்-அன்றி
வேறெவ ருக்குமது தியாஜ்யம்-சிறு
பிள்ளைக ளுக்கேஉப தேசம்-நீர்
பேசிவைத்த தெல்லாம் மோசம்.



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Jul 19, 2011 3:15 pm

36. நாம் என்ன செய்வோம்!
"நாம் என்ன செய்வோம்! புலையரே! இந்தப் பூமியி லில்லாத
புதுமையைக் கண்டோம்" என்ற வர்ண மெட்டு

ராகம்-புன்னாகவரானி தாளம்-ரூபகம்
பல்லவி


நாம் என்ன செய்வோம்!துணைவரே!-இந்தப்
பூமியி லில்லாத புதுமையைக் கண்டோம். (நாம்)

1.
திலகன் ஒருவனாலே இப்படி யாச்சு
செம்மையும் தீமையும் இல்லாமலே போச்சு;
பலதிசையும் துஷ்டர் கூட்டங்க ளாச்சு
பையல்கள் நெஞ்சில் பயமென்பதே போச்சு (நாம்)

2.
தேசத்தில் எண்ணற்ற பேர்களுங் கெட்டார்
செய்யுந் தொழில்முறை யாவையும் விட்டார்
பேசுவோர் வார்த்தை தாதா சொல்லிவிட்டார்
பின்வர வறியாமல் சுதந்திரம் தொட்டார் (நாம்)

3.
தேசத்தில் எண்ணற்ற பேர்களுங் கெட்டார்
செய்யுந் தொழில்முறை யாவையும் விட்டார்
பேசுவோர் வார்த்தை தாதா சொல்லிவிட்டார்
பின்வர வறியாமல் சுதந்திரம் தொட்டார் (நாம்)

4.
தேசத்தில் எண்ணற்ற பேர்களுங் கெட்டார்
செய்யுந் தொழில்முறை யாவையும் விட்டார்
பேசுவோர் வார்த்தை தாதா சொல்லிவிட்டார்
பின்வர வறியாமல் சுதந்திரம் தொட்டார்



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Jul 19, 2011 3:15 pm

37.பாரத தேவியின் அடிமை
நந்தன் சரித்திரத்திலுள்ள "ஆண்டைக் கடிமைக்கார னல்லவே"என்ற பாட்டின் வர்ணமெட்டையும் கருத்தையும் பின்பற்றி எழுதப்பட்டது.

பல்லவி


அன்னியர் தமக்கடிமை யல்லவே-நான்
அன்னியர் தமக்கடிமை யல்லவே. (நாம்)
சரணங்கள்

1.
மன்னிய புகழ்ப் பாரத தேவி
தன்னிரு தாளிணைக் கடிமைக் காரன். (அன்)

2.
இலகு பெருங்குணம் யாவைக்கும் எல்லையாம்
திலக முனிக்கொத்த அடிமைக் காரன் (அன்)

3.
வெய்ய சிறைக்குள்ளே புன்னகை யோடுபோம்
ஐயன் பூ பேந்த்ரனுக் கடிமைக் காரன் (அன்)

4.
காலர் முன்நிற்பினும் மெய்தவறா எங்கள்
பாலர் தமக்கொத்த அடிமைக் காரன் (அன்)

5.
காந்தன லிட்டாலும் தர்மம் விடாப்ரம்ம
பாந்தவன் தாளிணைக் கடிமைக் காரன்.



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Jul 19, 2011 3:16 pm

38.வெள்ளைக்கார விஞ்ச் துரை கூற்று

ராகம்-தண்டகம் தாளம்-ஆதி

1.
நாட்டி லெங்கும் சுதந்திர வாஞ்சையை
நாட்டினாய்;-கனல்-மூட்டினாய்;
வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே
மாட்டுவேன்;-வலி-காட்டுவேன். (நாட்டி)

2.
கூட்டங் கூடி வந்தே மாதரமென்று
கோஷித்தாய்;-எமைத் தூஷித்தாய்;
ஓட்டம்நாங்களெடுக்க வென்றே கப்பல்
ஓட்டினாய்; பொருள்-ஈட்டினாய். (நாட்டி)

3.
கோழைப் பட்ட ஜனங்களுக் குண்மைகள்
கூறினாய்;-சட்டம்-மீறினாய்;
ஏழைப்பட் டிங்கு இறத்தல் இழிவென்றே
ஏசினாய்;-வீரம்-பேசினாய் (நாட்டி)

4.
அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள்
ஆக்கினாய்;-புன்மை-போக்கினாய்;
மிடிமை போதும் நமக்கென் றிருந்தோரை
மீட்டினாய்;-ஆசை-ஊட்டினாய் (நாட்டி)

5.
தொண்டொன் றேதொழி லாக்கொண் டிருந்தோரைத்
தூண்டினாய்; புகழ்-வேண்டினாய்
கண்ட கண்டதொழில் கற்க மார்க்கங்கள்
காட்டினாய்;-சோர்வை-ஓட்டினாய். (நாட்டி)

6.
எங்கும் இந்தசுய ராஜ்ய விருப்பத்தை
ஏவினாய்;-விதை-தூவினாய்;
சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல்
செய்யவோ?-நீங்கள்-உய்யவோ?- (நாட்டி)

7.
சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திடச்
சொல்லுவேன்:-குத்திக்-கொல்லுவேன்;
தட்டிப் பேசுவோ ருண்டோ?சிறைக்குள்ளே
தள்ளுவேன்:-பழி-கொள்ளுவேன்.



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக