புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவலோகத்து மாலை! Poll_c10தேவலோகத்து மாலை! Poll_m10தேவலோகத்து மாலை! Poll_c10 
19 Posts - 49%
heezulia
தேவலோகத்து மாலை! Poll_c10தேவலோகத்து மாலை! Poll_m10தேவலோகத்து மாலை! Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
தேவலோகத்து மாலை! Poll_c10தேவலோகத்து மாலை! Poll_m10தேவலோகத்து மாலை! Poll_c10 
2 Posts - 5%
Shivanya
தேவலோகத்து மாலை! Poll_c10தேவலோகத்து மாலை! Poll_m10தேவலோகத்து மாலை! Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
தேவலோகத்து மாலை! Poll_c10தேவலோகத்து மாலை! Poll_m10தேவலோகத்து மாலை! Poll_c10 
1 Post - 3%
Guna.D
தேவலோகத்து மாலை! Poll_c10தேவலோகத்து மாலை! Poll_m10தேவலோகத்து மாலை! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேவலோகத்து மாலை! Poll_c10தேவலோகத்து மாலை! Poll_m10தேவலோகத்து மாலை! Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
தேவலோகத்து மாலை! Poll_c10தேவலோகத்து மாலை! Poll_m10தேவலோகத்து மாலை! Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
தேவலோகத்து மாலை! Poll_c10தேவலோகத்து மாலை! Poll_m10தேவலோகத்து மாலை! Poll_c10 
17 Posts - 4%
prajai
தேவலோகத்து மாலை! Poll_c10தேவலோகத்து மாலை! Poll_m10தேவலோகத்து மாலை! Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
தேவலோகத்து மாலை! Poll_c10தேவலோகத்து மாலை! Poll_m10தேவலோகத்து மாலை! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தேவலோகத்து மாலை! Poll_c10தேவலோகத்து மாலை! Poll_m10தேவலோகத்து மாலை! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
தேவலோகத்து மாலை! Poll_c10தேவலோகத்து மாலை! Poll_m10தேவலோகத்து மாலை! Poll_c10 
4 Posts - 1%
Jenila
தேவலோகத்து மாலை! Poll_c10தேவலோகத்து மாலை! Poll_m10தேவலோகத்து மாலை! Poll_c10 
4 Posts - 1%
jairam
தேவலோகத்து மாலை! Poll_c10தேவலோகத்து மாலை! Poll_m10தேவலோகத்து மாலை! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தேவலோகத்து மாலை! Poll_c10தேவலோகத்து மாலை! Poll_m10தேவலோகத்து மாலை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவலோகத்து மாலை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 14, 2010 4:12 pm

வெகு காலத்திற்கு முன், வளசபுரி என்ற நாட்டை சதுர்வேதி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒவ்வொரு ஆண்டும், தன் தலைநகரில் பிரமாண்டமான விழா எடுப்பது வழக்கம். பல நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், வேற்று நாட்டு மன்னர்களும், மக்களும் கலந்து கொள்வர். கடைகளும், கேளிக்கைகளும், நகரத்துக்குப் புது மெருகூட்டும். வீடுகள் அலங்காரத்துடன் காட்சியளிக்கும். வண்ண வண்ணக் கோலங்கள் வாசலில் மிளிரும். மக்களின் உள்ளத்தில் உவகை; உடலில் புத்தாடை; நகரே சொர்க்கலோகமாய்க் காட்சியளிக்கும்.

விழா நாளை, ஆடவரும், பெண்டிரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பர். தேவர்களும்கூட மனித உருவில் விழாக்கோலம் காண வருவது வழக்கம்.

அப்படித்தான் அந்த ஆண்டில் நான்கு தேவகுமாரர்கள் விழாவைக் கண்டுகளிக்க வந்திருந்தனர். அவர்கள் அணிந்திருந்த தேவலோகத்து மலர் மாலைகளின் வாசனை அந்த நாட்டையே மயக்கியது.

அவர்கள் தேவகுமாரர்கள் என்று, விரைவில் மக்கள் தெரிந்துகொண்டனர். அவர்களைச் சுற்றிக் கூட ஆரம்பித்தனர்.

பலர், தங்களுக்கு அந்த மாலைகள் வேண்டுமென்றனர். அரசன், இளவரசர்களையும், ராஜகுருவையும் கூட அந்த ஆசை ஆட்டிப்படைத்தது. அந்த மாலையைச் சிறிது நேரம் அணிந்திருப்பது தங்கள் பாக்கியம் என்று கருதினர்.

''இம்மாலை தேவலோகத்து மாலை... வாடாது மணம் பரப்பும். இம்மாலையை அணிவதற்கு உங்களுக்கென்று சில தனித் தகுதிகள் வேண்டும். தீய செயல், தீய சிந்தனை, தீய இயல்பு கொண்டவர்கள் இம்மாலையை அணியத் தகுதியற்றவர்கள். இப்போது சொல்லுங்கள், உங்களில் யாருக்கு இத்தகுதிகள் இருக்கின்றன? நீங்களே சுயசோதனை செய்து கொள்ளுங்கள்!'' என்று நான்கு தேவகுமாரர்களில் ஒருவர் கூறினார்.

அந்தக் கூட்டத்தில், எந்த மனிதக் குரலும், அந்த மலர் மாலையைக் கேட்கவில்லை. ஆனால், ஒரேயொரு மனிதக் குரல் அந்த மாலையைக் கேட்டது. அதுதான் ராஜகுருவின் குரல்.

''உண்மையில் உங்களை சுயசோதனை செய்து கொண்டீர்களா?''

'எந்தத் தீய இயல்பும் என்னிடம் இல்லை. இதை அணிந்துகொள்ள நானே முற்றிலும் தகுதியானவன்!''

பொய்யும், புரட்டும், உருட்டும், திருட்டும் நிறைந்த ராஜகுரு, தன் இயல்புகளை மறைத்துக்கொண்டு கேட்டார். தன் மலர் மாலையைக் கழற்றி, முதல் தேவகுமாரன் அவர் கழுத்தில் போட்டார்.

இப்போது இரண்டாவது தேவகுமாரன் பேசினார்.

''என் மலர் மாலையைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள் யார் தெரியுமா? திடமான அறிவும், மனமும் கொண்டு தினமும் நற்காரியங்களில் ஈடுபடுவோர், இம்மலர் மாலையை அணிந்துகொள்ளலாம்.''

கூட்டத்தில் எந்தக் குரலும் ஒலிக்கவில்லை. ராஜகுருவின் குரல் மட்டுமே ஒலித்தது. மலர் மாலை அவர் கழுத்தில் விழுந்தது.

இப்போது மூன்றாவது தேவகுமாரன், தன் மலர் மாலையைப் பெறத் தகுதியானவர் யாரென்று கூறினார்.

''அறநெறிகளில் செல்வம் சேர்த்தவர், போகப் பொருட்களுக்கு அடிமையாகாதவர்கள், தானென்ற செருக்கு இல்லாதவர்கள் இம்மலர் மாலையைப் பெற்றுக்கொள்ளலாம்,'' என்றுரைத்தார்.

தானென்ற அகந்தையும், தற்பெருமையும்மிக்க ராஜகுரு, பிறர் உரிமை கொண்டாடுவதற்கு முன், ''எனக்கே இத்தகுதியும் இருக்கிறது,'' என்றார். மூன்றாவது மாலையும் அவர் கழுத்தில் விழுந்தது.

''புறம்பேசித் திரியாதவர், பிறரைச் சொல்லாலும், மனதாலும் நிந்திக்காதவர், பண்போடு வாழ்பவருக்கே என் மாலை சொந்தம்,'' என்ற நான்காவது தேவகுமாரனின் விதிகளையும் ஏற்று அம்மாலையையும் பெற்றுக்கொண்டார்.

''ஆகா, இத்தனை இயல்புகளும் கொண்ட நல்ல மனிதர், நம்மிடையே இருக்கிறாரே! நல்ல மனிதர் வாழ்க! வாழ்க!'' என்று கூடியிருந்த மக்கள் கோஷமிட்டனர்.
தேவகுமாரர்கள் தேவலோகத்துக்குச் சென்றுவிட்டனர்.

பிறர் மெச்ச மாலைகள் அனைத்தையும் பெற்றுவிட்ட ராஜகுருவிற்கு மனம் குறுகுறுத்தது. 'தேவகுமாரர்கள் சொன்ன எந்தத் தகுதியும் இல்லாத நான், இவற்றைப் பொய் சொல்லி பெற்றுவிட்டேனே... எதும் விபரீதம் நடந்துவிடுமோ!' என்று அவர் பயந்தார். விறுவிறுவென்று வீட்டிற்கு வந்தார். மாலைகளைக் கழற்ற முயன்றார்; முடியவில்லை. மாலைகளை உற்று நோக்கினார். அவை வாடி இருந்தன. இப்போது அவருக்கு பயம் ஏற்பட்டுள்ளது.

மறுநாள் காலை எழுந்ததும், ராஜகுருவிற்கு உடம்பெல்லாம் அரிப்பு, தலைவலி. மாலைகளைக் கழற்றவே முடியவில்லை. அரசவைக்கு சொறிந்துகொண்டே சென்றார். நமைச்சல் தாங்க முடியவில்லை.

மிகவும் அதிகமாக வாடிய மாலைகளிலிருந்து வந்த துர்நாற்றம் சகிக்க முடியவில்லை. அரசவையில் கூடியிருந்தவர்களின் குடலைப் புரட்டியது. சிலர் மூக்கைப் பிடித்துக்கொண்டனர்; முகத்தைச் சுளித்தனர். ராஜகுருவோ, 'சர்சர்'ரென்று சொறிந்து கொண்டிருந்தார்.

அரசரிடம் மன்னிப்புக் கேட்டார். ''தகுதி எதுவும் இல்லாத நான், தேவலோக மலர் மாலையை அணிய ஆசைப்பட்டது குற்றம் தான்,'' என மனம் நொந்து கூறினார்.

அரசனுக்கு, அவர்பால் இரக்கம் ஏற்பட்டது. மறுபடியும் மங்களப் பெருவிழாவிற்கு ஏற்பாடு செய்தான். மீண்டும் கோலாகலம். அந்த தேவகுமாரர்கள் வரவேண்டுமென்று ராஜகுரு இறைஞ்சினார். அப்படியே அவர்களும் வந்தனர். ராஜகுரு, அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கதறி அழுதார். மனமிரங்கிய தேவகுமாரர்கள், அவரை மன்னித்து, தங்கள் மாலைகளைக் கழற்றிக் கொண்டனர்.

மாலைகளின் நறுமணம், மீண்டும் அந்நகரில் பரவியது; மக்கள் மகிழ்ந்தனர்.

குட்டீஸ்... உங்களுக்கு இந்த மாலை வேண்டுமா? அய்யோ வேணாமா! அப்போ நீங்க என்ன தப்பு செய்தீங்க?

***

சிறுவர் மலர்




தேவலோகத்து மாலை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக