புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 4 Poll_c10இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 4 Poll_m10இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 4 Poll_c10 
60 Posts - 48%
heezulia
இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 4 Poll_c10இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 4 Poll_m10இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 4 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 4 Poll_c10இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 4 Poll_m10இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 4 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 4 Poll_c10இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 4 Poll_m10இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 4 Poll_c10இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 4 Poll_m10இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 4 Poll_c10இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 4 Poll_m10இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 4 Poll_c10இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 4 Poll_m10இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்


   
   

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 24, 2010 1:48 pm

First topic message reminder :

அன்புள்ள வாசகர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).


“இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்” என்ற தொடரின் மூலம்இ பல ஆண்டுகள் ஆய்வு செய்துஇ பல நூறு அறிவியல் அறிஞர்களின் கடுமையான உழைப்பிற்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை 15 நூற்றாண்டுகளுக்கு முன்புஇ அறிவியல் வாடையைக்கூட அறிந்திராத மக்களுக்கு முன்பு மிக எளிமையாக இறைவன் குர்ஆனில் கூறியிருக்கும் அறிவியல் அதிசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முன்வந்திருக்கிறேன்.
இறைவன் கூறியிருக்கும் விதம் அறிவியல் அறியாத மக்களும்இ அறிவியலின் உச்சானியில் இருக்கும் மக்களும் மிக எளிமையாக புரிந்து கொள்ளும் அமைப்பில் இருப்பது அதன் அதிசயங்களில் பேரதிசயமாகும். எந்த காலத்தில் வாழ்ந்த மக்களும் அவர்கள் புரிந்து கொண்ட அறிவியல் உண்மைகளுக்கு எதிராக குர்ஆனின் வசனங்கள் ஒரு போதும் இருந்ததில்லைஇ இனிமேலும் அவ்வாறு இருக்கப்போவதுமில்லை.


வெவ்வேறு காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை அந்தந்த காலத்தில் வாழ்ந்த அறிவியல் அறிஞர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் குர்ஆன் வசனங்கள் அமைந்திருப்பது அதன் தனிச்சிறப்பாகும்.
ஒரு காலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் தவறு என நிரூபணம் செய்யப்படும் போதுஇ குர்ஆன் சொன்ன கருத்து தவறு என்று ஆகாதுஇ மாறாக அவர்கள் திருகுர்ஆனை விளங்கிக் கொண்ட விதம்இ குர்ஆனின் வசனத்திற்கு அவர்கள் கொடுத்த பொருள்தான் தவறு என்றாகும்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 24, 2010 6:26 pm

“விரை” செயல்படும் அதிசயம்



விரைப்பகுதி இரத்த ஓட்டம் அதிகமாக உள்ள பகுதியாக இருந்தும்இ அதன் வெட்பநிலையை 33-34 டிகிரிக்கு மேல் அதிகரிக்கவிடாமல் வைத்திருப்பதில் அல்லாஹ் காட்டிய அற்புதம் வியக்கத்தக்கதாகும்.


எவ்வாறெனில் அங்கு இரத்த ஓட்டம் ஊழரவெநச ஊரசசநவெ நுஒஉhயபெந என்ற விஞ்ஞான அடிப்படையிலும்இ ஏநழெரள Pடநஒரளஇ என்ற பிரத்யோக இரத்தக் குழாய் அமைப்பினாலும்இ மற்றும் நிணநீர் நாளங்கள் (டுலஅphயவiஉ Pடநஒரள) என்ற அமைப்பினாலும் செயல் பட்டுக் கொண்டிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.


ஊழரவெநச ஊரசசநவெ நுஒஉhயபெந என்பது ஒரு திசையில் (விரையை நோக்கி) இரத்தம் வந்து கொண்டும் அதன் எதிர் திசையில் இரத்தம் கடத்தப்பட்டுக் கொண்டுமிருக்கும் போது ஏற்படும் இயற்பியல் மாற்றமாகும். அந்த இயற்பியல் மாற்றம் அங்கு தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் விரையின் வெட்ப நிலை ஒரே சீரான கட்டுப்பாட்டில் நிரந்தரமாக இருந்து கொண்டிருக்கிறது.


“ஏநழெரள Pடநஒரள” முறை என்றால் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளும் முன்பு விரை படைக்கப்பட்டிருக்கும் அமைப்பினை சற்று நினைவுக்குக் கொண்டுவருவோம். விரை பல மீட்டர் நீளமுள்ள இரத்தக் குழாய்களால் சூழப்பட்டுள்ளது. அந்த இரத்தக் குழாய்கள் இடியப்பச் சிக்கல் போன்று ஒன்றோடு ஒன்று பின்னிஇ வளைந்துஇ மடிந்துஇ சுருண்டு சிறிய பை வடிவம் பெற்று விரையை தாங்கிப்பிடித்துக் கொண்டிருக்கின்றன. இருதயத்திலிருந்து விரையை நோக்கி வரும் சுத்திகரிக்கப்பட்ட இரத்தம்இ அதற்கென உள்ள விரையைச் சுற்றியுள்ள குழாய்களின் வழியாக விரையை கடந்துஇ மாசடைந்து மீண்டும் இருதயத்தை நோக்கிச் செல்லும்.

அவ்வாறு விரையைக் கடந்து செல்லுவதற்கு சற்று நேரம் எடுத்துக் கொள்ளும். அதனால் அந்த குழாய்களில் எப்போதும் இரத்தம் தேங்கியிருக்கும் நிலை ஏற்படுகிறது. விரையை நோக்கி ஒரு திசையிலிருந்து எந்தளவு இரத்தம் வருகிறதோ அதே அளவு இரத்தம் எதிர் திசையில் அந்த விரையிலிருந்து வெளியேறிவிடுகிறது.

அவ்வாறு வெளியேறும் இரத்தம் ஏற்கனவே இந்த இரத்தக்குழாயில் தேங்கி இருந்த இரத்தம் என்பது இங்கே கவனிக்கத் தக்கதாகும். இவ்வாறு விரையை சுற்றியுள்ள இரத்தக்குழாய்களின் வழியாக இரத்தம் கடந்து செல்தவதற்கு சற்று நேரம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் இரத்தத் தேக்கத்தினை “ஏநழெரள Pடநஒரள” என்று மருத்துவ துறையில் அழைக்கப்படுகிறது. விரையைச் சுற்றியுள்ள இரத்தக்குழாயில் ஏற்படும் இந்த இரத்தத் தேக்கத்தால் விரையில் “வெட்ப நிலை கட்டுபாட்டுத்தன்மை” ஏற்பட்டு அதன் வெட்ப நிலை ஒரே சீராக இருப்பதற்கு பெரிதும் உறுதுணையாக இருக்கிறது. இந்த விரையைச் சுற்றி நிணநீர் நாளங்கள் (டுலஅphயவiஉ Pடநஒரள) பின்னிப் பிணைந்து இருப்பதாலும் விரையின் வெட்ப நிலை சீராக இருப்பதற்கு உறுதுணை புரிகிறது.


மிகப்பெரும் அமானிதத்தைச் சுமந்து கொண்டிருக்கும் உயிரணுக்களை இந்த விரை பாதுகாப்பாக உற்பத்தி செய்யவேண்டும் என்பதற்கு அல்லாஹ் ஏற்படுத்திய ஒரு அற்புத அமைப்பாகும் இது.
இந்த இடத்தில் இறைவன் செய்துள்ள இன்னொரு அற்புதத்தையும் நம்மால் நினைத்துப் பார்க்கமால் இருக்க முடியவில்லை. விரையில் உள்ள இரத்தக்குழாய்களும்இ விந்து உற்பத்தியாகும் இடமும் அடுத்தடுத்த நெருக்கமாக இருந்தாலும் விந்துஇ இரத்தத்தில் கலந்து விடமுடியாதபடி மிகப் பெரிய தடுப்பை இறைவன் ஏற்படுத்திஇ விந்துக்கென உள்ள அதனுடைய பிரத்யேக குழாயை சென்றடையும் விதத்தில் பாதுகாப்பாக ஆக்கி இருப்பது பிரமிக்கத்தக்க ஒன்றாகும்.

காரணம் தடுப்பு மட்டும் இல்லையெனில்இ விந்து இரத்தத்துடன் கலந்து மிகப் பெரும் ஆபத்துகளை சந்தித்துஇ அழிவிற்குள்ளாகி விடும். அதாவது விந்து இரத்தத்துடன் கலந்து விடும்போதுஇ பாக்டீரியாக்கள் (நோய்கிருமிகள்) தன்னுள் புகுந்துவிட்டதாக கருதி இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் எதிர்ப்பு சக்தியை தோற்றுவித்துஇ விந்துவில் உள்ள எல்லா உயிரணுக்களையும் ஒன்றுவிடாமல் அழித்துவிடும். அது மட்டுமல்லாது இந்த எதிர்ப்பு சக்தி இரத்தத்தில் நிரந்தரமாகவே தங்கிஇ உயிரணுக்கள் உற்பத்தியாகும் போதல்லாம் அதனை அழித்துக் கொண்டே இருக்கும். அப்போது அந்த மனிதனுக்கு குழந்தை பெறும் வாய்ப்பு அறவே இல்லாமல் போய்விடும்.
தான் படைக்க விரும்பிய மனிதப்பிரதிநிதிகள் இந்த உலகில் வந்து சேர்வதற்கு அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள பாதுகாப்புகள்தான் எத்தனை? எத்தனை? சுப்ஹானல்லாஹ்!






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 24, 2010 6:38 pm

விலா எலும்பில்லாமல் பிறந்த குழந்தை
சவுதி அரபியாவில் புனித மக்காவில் உள்ள அலவி தூனிசி என்ற தனியார் மருத்துவ மனையில் வினோதமான முறையில் விலா எலும்பில்லாத ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும்இ விரை அதற்குரிய பையை நோக்கி இறங்காமலும்இ சிறுநீர் வழி அடைபட்ட நிலையிலும் குறையுடன் பிறந்த இந்த குழந்தையை ஆய்வு செய்த குழந்தை சிறப்பு மருத்துவ நிபுணர்இ முஹம்மது அப்துல் கரீம் அவர்கள்இ 40 ஆயிரம் குழந்தையில் ஒரு குழந்தை இவ்வாறு பிறக்கிறதுஇ பெண் குழந்தையை விட ஆண் குழந்தைக்குத்தான் அதிகமாக இது ஏற்படுகிறது. இது எதனால் ஏற்படுகிறது என்பது இதுவரைக்கும் மருத்துவ துறையில் கண்டுபிடிக்கப்படவில்லை. சிறுநீர் வழி அடைக்கப்படுவதால் இது போன்ற பிறவிக்குறைகள் ஏற்பட வாய்ப்பிருக்குமோ என அணுமானிக்கப்படுகிறது என்று கூறுகிறார்.

இது போன்ற குறையுடைய குழந்தைகள் இறந்தே பிறக்கிறது அல்லது பிறந்த சில மாதங்களில் இறந்து விடுகிறது என்று அவர் மேலும் கூறினார்.


குறிப்பு: கர்ப்பப்பையில் குழந்தை உருவாகும் ஆரம்ப நிலையில் விரை முதுகந்தண்டிற்கும்இ விலா எலும்களுக்குமிடையில் இருக்கும். குழந்தை முழு வளர்ச்சி அடைந்து பிறப்பதற்குள் விரை அதற்குரிய பையில் வந்து தங்கிவிடும். தற்போது இருப்பது போல. இவ்வாறு விரை இறக்கம் நடைபெற வில்லையானால் குழந்தையின் மரணத்திற்கே அது காரணமாக ஆகிவிடுகிறது என்பது இங்கே கவனிக்கத் தக்கதாகும்.


இந்த விந்து சம்பந்தப்பட்ட இன்னொரு மிக முக்கியமான தகவலையும் இந்த இடத்தில் பார்த்துக் கொள்வது மிகப்பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். அதாவது பாலை (ளுநஒ) தீர்மானிப்பதற்கும் விந்துவில் உள்ள உயிரணுதான் காரணமாக இருக்கிறது என்று இன்றைய மருத்துவ அறிஞர்கள் ஆதாரத்துடன் நிருபித்துள்ளார்கள். இந்த தகவலை குர்ஆன் 1430 ஆண்டுகளுக்கு முன்பே கூறி இருப்பதுடன்இ இந்த பாலை தீர்மானிப்பதற்கு பெண்ணை எந்த விதத்திலும் காரணமாக ஆக்க முடியாது என்ற தகவலையும் சேர்த்துச் சொல்வது குர்ஆனின் அற்புதமாக உள்ளது.


அறிவியல் தகவலையும்இ குர்ஆன் கூறும் உண்மைகளையும் பார்ப்பதற்கு முன்பு ஆண்இ பெண் குழந்தை உருவாகுவது குறித்து அன்றும் இன்றும் என்ன கருத்து இந்த சமுதாய மக்களிடையே நிலவிவருகிறது என்று சற்று அலசுவோம்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 24, 2010 6:39 pm

பெண்ணுக்கு உயிருடன் சமாதி கட்டிய அநியாயம்
குழந்தை ஆணாக அல்லது பெண்ணாக பிறப்பதற்கு பெண்தான் காரணம் என்ற கருத்து அன்று முதல் இன்றுவரை பாமர மக்களிடையே நம்பப்பட்டு வருகிறது. படித்த மருத்துவ அறிஞர்களிடமும் இந்த மூட நம்பிக்கை ஆழமாக வேரூன்றிருப்பது வேடிக்கையாகும். அதனால் அன்றும் இன்றும் ஆண் குழந்தை பெற்றுத்தராத மனைவிகளை கடும் சித்தரவதை செய்து வருகிறார்கள் இந்த ஆண்வர்க்கம்.


பெண் சிசுவைப் பெற்ற பெண்ணை வேதனைப்படுத்துவதில் தானும் ஒரு பெண் என்ற நினைவில்லாத மாமியாரும் சேர்ந்திருப்பது இன்றைய நவீன காலத்தின் சாதனையாகும். பெண் குழந்தை பெற்றதால் ஒரு தாய் வார்த்தையில் எழுதமுடியாத அளவிற்கு அன்றும் இன்றும் பல சங்கடத்திற்கு உள்ளாகிறாள்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 24, 2010 6:40 pm

அன்று பெண்குழந்தையின் நிலை:



ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்ற சந்தோஷமான சுப செய்தி சொல்லப்படும் போதுஇ தன்மீது இடிவிழுந்து தனது வாழ்க்கையே நாசமாகி விட்டது போன்ற பிரமை ஏற்பட்டுஇ பெண்ணைப் பெற்றுத்தந்த தனது மனைவியின் மீதுள்ள கோபத்தை விழுங்கிய நிலையில் செய்வதறியாது முகம் கருத்துப் போய்விடுகிறான். யாருக்கும் தெரியாமல் அந்த பெண் சிசுவை மண்ணுக்குள் புதைத்து விடுவதா? அல்லது காலம் முழுவதும் இழிவை சுமந்த நிலையில் அந்த குழந்தையை வளர்ப்பதா? என்ற வேதனையான யோசனையில் ஆழ்ந்துஇ தனக்கு நிவர்த்தி செய்யமுடியாத பேரிழப்பு ஏற்பட்டுவிட்டதாக நினைத்து கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி மக்களின் பார்வையிலிருந்து மறைந்து வாழ்கிறான். அந்தளவு பெண் குழந்தை பிறப்பதை வெறுத்து வந்தார்கள் அன்றைய ஆண்வர்க்கத்தினர். இந்த தகவலை குர்ஆன் பின் வருமாறு எடுத்துரைக்கிறது.


وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنْثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدّاً وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلا سَاءَ مَا يَحْكُمُونَ
இன்னும் அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை (பிறந்திருப்பது) கொண்டு நன்மாராயங் கூறப்பட்டால்இ கோபத்தை அடக்கி விழுங்கியவனாக அவன் இருக்க அவனுடைய முகம் (துக்கத்தால்) கருத்ததாக ஆகிவிடுகிறது. எதனைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ அதன் தீமையினால் இழிவுடன் அதை வைத்துக் கொள்வதா? அல்லது அதை மண்ணில் புதைத்து விடுவதா? என்று (கவலைப்பட்டுஇ மக்கள் முன் வராமல்) சமூகத்தாரை விட்டும் மறைந்து கொள்கிறான். அவர்கள் செய்யும் தீர்மானம் மிகக் கெட்டது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அல் குர்ஆன்: 16: 58இ59



பெண் குழந்தை பிறந்த இழிவைத்தாங்கிக் கொள்ள முடியாத அவர்கள்இ எந்தப் பாவமும்இ யாருக்கு எந்தத் தீமையும் செய்யாத அந்த குழந்தையை உயிருடன் மண்ணுக்குள் புதைத்துவந்தார்கள். உயிருக்குப் போராடும்இ கல் மனதையும் கரைய வைக்கும் தனது குழந்தையின் மரண ஓலத்தை கேட்டுக் கொண்டே இந்தக் கொடூரச் செயலை எவ்வாறு அவர்களால் செய்ய முடிந்தது.?





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 24, 2010 6:41 pm

பெண்ணுரிமை பேசப்படும் இன்று பெண்குழந்தையின் அவலம்:


அன்றைய அறியாமை காலத்தில் பெண்ணுரிமைச் சங்கம் இல்லை பெண் விடுதலை இயக்கம் நடத்தப்படவில்லை. அதனால் பெண்கள் உயிர் வாழும் உரிமை பறிக்கப்பட்டுஇ உயிருடன் புதைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆன்மா என்பது ஒன்று இருக்கிறதா? என்றெல்லாம் பேசப்பட்டுவந்த அறியாமைக்காலம் அது.

ஆனால் பெண்ணுரிமைச் சங்கம்இ பெண்விடுதலை இயக்கம் எல்லாம் தோன்றிஇ பெண்ணுரிமைகளுக்காக? பல மாநாடுகளும்இ போராட்டங்களும் நடத்தி பெண்ணுரிமைஇ பெண் விடுதலை? என மூச்சுக்கு மூச்சு பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தில் பெண்ணுரிமைகள் பாதுகாக்கப் படுகின்றனவா? அவர்களின் உயிருக்கும்இ உடமைக்கும்இ கற்புக்கும் பாதுகாப்பு உள்ளதா? அல்லது இந்த பெண்சிசுக் கொலைதான் இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறதா?.


பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்ட இந்த சங்கங்களின் காதுகளுக்கு இந்த செய்தி எட்டவில்லையா? பெண் சிசுக் கொலையை தடுத்து நிறுத்தி பெண்களுக்கு உயிர் வாழும் உரிமையை வாங்கித்தர ஏன் இந்த இயக்கங்கள் பாடுபட வில்லை. தஸ்லீமாவைப் போல் வேலிதாண்டியவர்களுக்கு வக்காலத்து வாங்கி களத்தில் இறங்கிய இயக்கங்கள் இந்தசிசுக் கொலை கொடுமையை கண்டிக்க முன்வரவில்லையே! ஏன்? இந்தக் கொடுமை தாங்கள் சார்ந்திருக்கும் இந்து மதமக்கள் மட்டும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற காரணத்தினாலேயா? அறியாமை காலத்தில் நடந்த முறையை விட மிகக் கொடூரமான முறையை பின்பற்றியல்லவா இன்று பெண் சிசுக்கள் கொல்லப்படுகிறது.


அன்று ஆண்கள் தான் இந்த மன்னிக்கமுடியாத குற்றத்தை செய்தார்கள் என்றால் இன்றோ தனது மாமியார்இ கணவனின் தொல்லைகளுக்கு பயந்துஇ பாலூட்டி தாலாட்டி வளர்க்க வேண்டிய அன்புள்ள அன்னையே தனது கருணையான உள்ளத்தை கல்லாக்கிஇ துடிதுடித்து உயிரை விடப்போகும் தனது அன்புக் குழந்தையைக் காண தைரியம் இல்லாமல் தனது இருக்கண்களையும் இறுக மூடிக் கொண்டுஇ அரவணைக்க வேண்டிய அன்புக் கரங்களாலேயே கள்ளிப்பாலை ஊற்றி சாகடிக்கும் கொடுமையான நிகழ்வுகள் அல்லவா அன்றாட செய்தியாக மாறிவிட்டது.


தனது அன்புத் தாய் தனது பசியை போக்க தனக்கு அமுதூட்டுகிறாள் என்று கருதி நாக்கை வளைத்துஇ சுழித்து சப்பைக் கொட்டிஇ சுவைத்து கள்ளிப்பாலை அருந்தும் அந்த குழந்தைக்கு இது கள்ளிப்பால்இ நீ துடிதுடிக்க உனது உயிரைக் குடிக்கப்போகும் பால்இ உனது பசியை நீக்க அல்லஇ அழுகிய இருதயம் பெற்ற மனிதர்கள் வாழும் இந்த உலகத்திலிருந்தே உன்னை நீக்கப்போகும் பால் என்பதை எடுத்துச் சொல்தவற்குக்கூட அப்போது யாருமில்லையே.
பெரியவர்களே உண்பதற்கு முடியாத உம்மியுடன் கூடிய நெல்லை அந்த சிசுவின் சிறிய வாயில் திணித்து கொல்லப்படும் கொடூரமான முறையையும் தமிழகத்தின் சில பகுதிகளில் கடைபிடித்து வருவதை எழுதுவதற்கே வெட்கமாக இருக்கிறது. வேதனையால் பேனா முணை எழுத மறுக்கிறது. இந்தளவிற்கு கொடூரமான வழிமுறையை பின்பற்றி கொல்லப்படும் அளவிற்கு அந்த சிசு என்ன மன்னிக்கமுடியாத பாவம் செய்தது?.

பெண்ணாக பிறந்தது அந்த சிசுவின் குற்றமா? அல்லது அதனைப் பெண்ணாகப் பெற்ற தாய் குற்றத்திற்காக அந்த சிசு தண்டிக்கப்படுகிறதா? பெண்ணாக பிறப்பதற்கு யார் காரணம்? ஆண் மகன் நீ அல்லவா? யோசனை செய்து பார்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 24, 2010 6:42 pm

இந்த கொடூரத்தை நிறுத்துவதற்கு உருப்படியான திட்டத்தை வகுத்து அதனை செயல்படுத்திஇ இந்த ஈனச்செயலை நிறுத்த முடிந்ததா இந்த பெண்ணுரிமை இயக்கங்களால்?.

தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம் அந்த பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக ஆக்கி இருப்பதுடன்இ அந்தப் பெண் வளர்ந்து புரிந்து கொள்ளும் பருவம் அடைந்தப்பின் தாய்இ தந்தை அறியாத தனக்கு ஏற்பட்டுள்ள இந்த அவமான நிலையை நினைத்து மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதற்கல்லவா இந்தத் திட்டம் வழிவகுத்துள்ளது. இதனால் சிசுக் கொலை குறைந்துள்ளதா? இல்லையே! கற்பனைக்கெட்டாத அளவிற்கு பல சமுதாயப்பிரச்சனைகள் தோன்றுவதற்கு இந்த திட்டம் காரணமாக ஆகிவிட்டது.


என்ன குற்றத்திற்காக இந்த சிசு கொடூரமாக கொல்லப்பட்டது என மறுமை நாளில் இந்த குழந்தை பற்றி விசாரிக்கப்படும் என்பது உணர்த்தப்படாத வரைஇ வேறு எந்த வழிமுறையினாலும் இந்த குற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. மறுமை நாள் விசாரணையில் மாட்டிக் கொள்வோம் என்று இந்த சமுதாய மக்கள் புரிய ஆரம்பித்துவிட்டால் அவர்களிடையே இந்த குற்றம் அறவே இல்லாமல் ஆகிவிடும். அன்று குர்ஆன் உருவாக்கிய மிகப்பெரிய இஸ்லாமிய சமுதாயம் அதற்கு மிகச் சரியானதொரு எடுத்துக்காட்டாக இன்றும் திகழ்கிறது.


وَإِذَا الْمَوْؤُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنْبٍ قُتِلَتْ
என்ன குற்றத்திற்காக அவள் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்ட பெண்பிள்ளை வினவப்படும் போது…. அல் குர்ஆன்: 81: 8இ9.



இந்த இறைவசனம் இறக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை முஸ்லிம் சமூகம் எவ்வளவு பெரிய வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழ்ந்து கொண்டிருந்தாலும்இ இந்த கொடூரத்தைச் செய்வதற்கு முன்வர மாட்டார்கள். உதாரணத்திற்குக் கூட முஸ்லிம் சமூகத்திடம் ஒரு நிகழ்வினை காண முடியாது.


அறியாமையால் ஒரு காலத்தில் அந்தக் குற்றத்தைச் செய்து வந்த மக்களும் இந்த வசனத்தை அருளிய அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பின் முற்றிலுமாக மாறிஇ தான் செய்த அந்த குற்றத்திற்காக அவனிடம் மன்றாடி மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 24, 2010 6:43 pm

பெண் சிசுவதைக்கு முற்றுப்புள்ளி


இந்த கொடுமைகளுக்குஇ ஈவு இரக்கமற்ற ஈனச்செயலுக்கு முற்றுபுள்ளி வைக்க மார்க்கமே இல்லையா? நிச்சயம் இருக்க வேண்டும். இந்த கொடூரத்திற்கு சமுதாயத்திலிருந்து இறுதி விடை கொடுத்துவிட வேண்டும்.
என்ன குற்றத்திற்காக இந்த சிசு கொடூரமாக கொல்லப்பட்டது என மறுமை நாளில் இந்த குழந்தை பற்றி விசாரிக்கப்படும் என்பது உணர்த்தப்படாத வரைஇ வேறு எந்த வழிமுறையினாலும் இந்த குற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. மறுமை நாள் விசாரணையில் மாட்டிக் கொள்வோம் என்று இந்த சமுதாய மக்கள் புரிய ஆரம்பித்துவிட்டால் அவர்களிடையே இந்த குற்றம் அறவே இல்லாமல் ஆகிவிடும். அன்று குர்ஆன் உருவாக்கிய மிகப்பெரிய இஸ்லாமிய சமுதாயம் அதற்கு மிகச் சரியானதொரு சிறந்த எடுத்துக்காட்டாக இன்றும் திகழ்கிறது.


உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தையானவளும் என்ன குற்றத்திற்காக அவள் கொல்லப்பட்டாள் என்று வினவப்படும் போது.. (அல் குர்ஆன்: 82: 8இ9)
இந்த இறைவசனம் இறக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை அந்த இஸ்லாமியச் சமூகமக்கள் எவ்வளவு பெரிய வறுமைக் கோட்டிற்கீழ் வாழ்ந்து கொண்டிருந்தாலும்இ இந்த கொடூரமான கொலை பாதகச் செயலைச் செய்வதற்கு முன்வர மாட்டார்கள்.
அறியாமையால் ஒரு காலத்தில் அந்தக் குற்றத்தைச் செய்து வந்த மக்களும் இந்த வசனத்தை அருளிய அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பின் முற்றிலுமாக மாறிஇ தான் செய்த அந்த குற்றத்திற்காக அவனிடம் மன்றாடி கால முழுவதும் மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 24, 2010 6:47 pm

பெண்ணுரிமை போற்றிய பெருமானார்(ஸல்) அவர்கள்


பெண் குலத்திற்கு பெருமைச் சேர்த்த இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இந்த சமுதாய மக்கள் ஒவ்வொருவரும் தனக்கு பெண் குழந்தை பிறக்காதா? என்று எதிர்பார்த்து வாழும் நிலைக்கு பெண்களின் புகழை பன்மடங்கு உயர்த்தி விட்டார்கள். அரபு மொழி பேசும் இஸ்லாமிய நாடுகளில் பெண்குழந்தையை பெருமைபடுத்தும் காட்சிகளைஇ தனக்கு பெண் குழந்தை பிறப்பதை பெருமையாக கருதும் நிலையை அங்கு பணிபுரியும் இந்தியர்கள் இன்றும் கண்கூடாக கண்டுகொண்டிருக்கிறார்கள். இந்த உயர் நிலை அவர்களிடையே எவ்வாறு ஏற்பட்டது?

பெண் குழந்தை பிறப்பது தனக்கு பெருத்த அவமானம் என்று கருதிக் கொண்டிருந்த அந்த அரபு மக்கள்இ பெண்களை போகப்பொருளாகஇ குழந்தை பெற்றுத் தரும் இயந்திரமாக கருதிக் கொண்டிருந்த அந்த அறியாமைக் காலத்து மக்களிடையேஇ பெண்களுக்கு உயிர்இ உரிமை உள்ளதா என்று விவாதம் புரிந்து கொண்டிருந்த காட்டு மிராண்டி குணம் படைத்த அந்த மக்களிடையே பெண்மைக்கு உயிருள்ளதுஇ ஆண் மகனுக்கு இருப்பது போன்ற உணர்ச்சிகள் பெண்ணுக்கும் உண்டுஇ வாழ்க்கையில் ஆண் ஒரு பக்கம் எனில்இ பெண் இன்னொரு பக்கம்இ பெண்மை இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை என்று உணர்ந்துஇ பெண்ணினத்தை மதிக்க அந்த மக்களுக்கு கற்றுத்தந்தது எது? அந்த அறியாமைக் காலத்து மக்கள் மிகக்குறைந்த நாட்களில் மனம் மாற்றம் அடைவதற்கு எது காரணமாக அமைந்தது? அதற்கெல்லாம் பின் வரும் நபி மொழி பதிலாக அமைகிறது.


நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் ஏதேனும் (தரும்படி) கேட்டு ஒரு பெண்மணி வந்தார். அவருடன் இரு பெண் குழந்தைகள் இருந்தனர். அப்போது ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறெதுவும் அவருக்கு கொடுக்க என்னிடம் கிடைக்கவில்லை. ஆகவே அதை அவருக்குக் கொடுத்தேன். உடனேஇ அதனை இரண்டாக பங்கிட்டு தனது குழந்தைகள் இருவருக்கும் கொடுத்தார். பிறகு அப்பெண்மணி எழுந்து சென்று விட்டார்.

பின்னர் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்களிடம் இது பற்றி நான் சொன்னேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள்இ யார் இந்தப் பெண் குழந்தைகளில் ஒன்றுக்குப் பொறுப்பேற்று நன்மை புரிவாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள் என்று கூறினார்கள். நூல்: புஹாரி
இந்த நபிமொழியைக் கேட்ட ஒவ்வொருவரும் தனக்கு பெண் குழந்தை பிறக்காதா? அதனை மனம் நோகாமல் சீராட்டிஇ சிறப்பாக வளர்க்க வேண்டும்இ அதற்கு பரிசாக இறைவனிடத்தில் சுவர்க்கத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இரவு பகலாக கனவு காண ஆரம்பித்து விட்டார்கள். பெண் குலத்தின் பெருமைக்கும்இ சிறப்புக்கும் மகுடம் வைத்தாற் போல் அமைந்துள்ள பின் வரும் இன்னொரு நபி மொழியைப் பாருங்கள்.


நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தனது குடும்பத்திற்கு (மனைவிக்கு) சிறந்தவனாக விளங்குகிறாரோ அவரே சிறந்தவராவார். எனது குடும்பத்திற்கு நான் சிறந்தவனாக விளங்குகிறேன். அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள்இ நூல் திர்மிதிஇ இப்னு ஹிப்பான்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 24, 2010 6:47 pm

இந்த நபிமொழியில் ஒரு ஆண்மகன் சிறந்தவனாக கருதப்படுவதற்கு அளவுகோலாக தனது மனைவியிடத்தில் நல்ல நடைமுறை கடைபிடித்துஇ அவளின் மதிப்பிற்குரிய சிறப்பான கணவனாக திகழவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது என்றால் பெண்குலத்தின் மரியாதைக்கு எவ்வளவு பெரிய மணிமகுடம் சூட்டியிருக்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். இந்த நிலையில் தனது மனைவிக்கு ஆறாத மனவேதனை தரும் சிசுவதை செய்வதற்கு அல்லாஹ்வை விசுவாசம் கொண்ட எந்த ஆண் மகன் துணிவான்? சிந்தித்துப் பாருங்கள். நபிகள் நாயகத்தின் இந்த மந்திர வார்த்தைகள்தான் பெண்சிசுக் கொலையில் இன்பம் கண்டுவந்த அந்த அரபிகளை முற்றிலுமாக மாற்றியமைத்தது.


அந்த இறைத்தூதரின் வார்த்தைகளை தங்களின் உயிரினும் மேலாக மதித்து வந்தார்கள் என்றால் அது மிகையாகாது. உலக அழிவுவரைக்கும் அவர்களிடையே இந்த சிசுக் கொலை நடைபெற முடியாத அளவிற்கு இந்த சமுதாயத்தை உருவாக்கிய பெருமை மனிதப்புனிதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்குத்தான் உண்டு. பெண்ணினத்திற்கு உயிர் வாழும் உரிமம் பெற்றுத்தந்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தான் என்பது இரண்டு கருத்துக்கு இடமில்லாத ஒன்றாகும்.
எனினும் இன்று வாழும் சாமான்ய இஸ்லாமியர்களில் சிலர் தங்களுக்கு பெண்குழந்தை பிறப்பதை வெறுத்து வருகிறார்கள்.

(அந்த வெறுப்பு பெற்ற குழந்தையை கொலை செய்யும் அளவிற்கு மாறவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்) காரணம் தூய இஸ்லாமிய நெறியிலிருந்து சற்று விலகி வாழும் சில நாடுகளில் உள்ள முஸ்லிம் சமுதாயத்தில் எப்படியோ வரதட்சிணைப் பேய் புகுந்துஇ அவர்களது இறைவிசுவாசத்தில் சிறிய சிராய்ப்பை ஏற்படுத்தி விட்டது.


அதனை சரிசெய்வது விவரம் அறிந்த ஒவ்வொரு இஸ்லாமியர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள கட்டாயக் கடமை என்றுணர்ந்து அதற்காக இந்த அறிவியல் தொடரில் சில வரிகளை எழுத வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறேன்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 24, 2010 6:49 pm

பெண்மையில்லாத உலகம்


பெண் குழந்தை பிறப்பதை வெறுத்துஇ தங்களுக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறார்கள். இவர்களது ஆசைப்படி ஆண்குழந்தையே அனைவருக்கும் பிறந்தால் என்ன பின் விளைவுகள்இ நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும் என்பதை சிந்தித்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது. பெண்மை இல்லாத ஓர் உலகத்தை எவ்வாறு கற்பனை செய்ய முடியும். அது சாத்தியமா? ஓவ்வொரு தாயும் ஆண்குழந்தைகளை மட்டுமே பெற்றெடுத்தால் மனித இனம் விரைவில் அழிந்து போய்விடுமே! இது இறைவிதிக்கு முற்றிலும் மாற்றமானது.

ஏனெனில் இறைவன் உலகில் எல்லாப் பொருளையும் ஆண்இ பெண் என ஜோடிகளாகத்தான் படைத்திருக்கிறான். அது பல்கிப் பெருக வேண்டும் என்பது அவனது திட்டம். இது அல்லாஹ் ஏற்படுத்திய எல்லாப்படைப்புகளுக்கும் உள்ள பொதுவான மாற்றி எழுதமுடியாத நியதி.


ஓவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் (ஆண்இ பெண் என இருவகை கொண்ட) ஜோடிகள் இரண்டை அதில் உண்டாக்கினான். (அல் குர்ஆன்: 13: 3)
நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காக ஒவ்வொரு பொருளிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) இருவகையை நாம் படைத்திருக்கிறோம். (அல் குர்ஆன்: 51: 49)


ஆண்இ பெண் என பாகுபடுத்தி பார்க்க முடியாத கனிவர்க்கங்களிலும்இ மரம் செடி முதல் எல்லாப் பொருளிலும் ஆண் பெண் என இரு இனம் இருக்கும் போது மனித குலம் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியுமா? எனவேஇ பெண்ணினம் இல்லாத ஓர் உலகை கற்பனை செய்து கூட பார்க்கமுடியாது. பெண்மை இல்லாத இனம் விரைவில் அழிந்து போய்விடும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக