புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_c10 
4 Posts - 27%
சிவா
அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_c10 
310 Posts - 42%
heezulia
அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_c10 
6 Posts - 1%
prajai
அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_c10 
4 Posts - 1%
manikavi
அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 17 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசூர் வம்சம் (நாவல்)


   
   

Page 17 of 17 Previous  1 ... 10 ... 15, 16, 17

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:00 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]
அரசூர் வம்சம் - இரா முருகன்


பாயிரம்

அரசூர் பற்றி எழுது.

முன்னோர்கள் சொன்னார்கள்.

அவர்கள் என் மேசையில் ஓரங்களில் புகை போல் ஒட்டிப் படிந்து சூழ்ந்தார்கள். என் கம்ப்யூட்டர் திரையில் பனியாகப் படர்ந்து மறைத்தார்கள். காப்பிக் கோப்பையிலும் அவர்களின் வாடை.

அது புகையிலை வாடை. வீபூதி வாடை. மஞ்சள் வாடை. தூரத்துணி வாடை. பெரிய கங்காளங்களில் சோறு பொங்கும் வாடை. எள்ளுருண்டை வாடை. மாதாகோவில் அப்பத்தின் வாடை.

அவர்கள் ஓரமாக உட்கார்ந்தபடி என்னைப் பார்த்தார்கள்.

அரசூரின் வரலாற்றை எழுது. எங்களைப் பற்றி எழுது.

குடுமி வைத்தவர்கள். நார்மடிச் சேலை போர்த்திய மொட்டைத் தலையோடு பெண்கள். முட்டுக்குக் கீழே தாழ்ந்த அரைவேட்டியோடு மலங்க மலங்க விழித்துப் பார்க்கும் சிறுவர்கள். வியர்வையில் நனைந்த கல்யாணச் சேலையும் நெற்றி முழுக்க மஞ்சள் குங்குமமும், கையில் வரட்டி தட்ட எடுத்த சாணமும், முகத்தை மறைக்கும் மூக்குத்தியுமாக மிரட்சியோடு சிறுமிகள். கழுத்தில் சிலுவை மாட்டிய சிலரும் உண்டு அங்கே.

எல்லோரும் சொன்னார்கள். அன்போடு இழையும் குரல்கள். கட்டளையிடும் குரல்கள். யாசிக்கும் குரல்கள்.

வாசலில் செருப்புச் சத்தம்.

திரும்பிப் பார்த்தேன். பனியன் சகோதரர்கள்.

முன்னோர்கள் இடம் ஒதுக்கிக் கொடுக்க, பனியன் சகோதரர்கள் தரையில் உட்கார்ந்தார்கள். ஐந்து நிமிடம் முன்னால் சிகரெட் குடித்த வாடை அவர்களிடம்.

எழுது.

பனியன் சகோதரர்களும் சொன்னார்கள்.

என்ன எழுதட்டும் ?

இவர்களைப் பற்றி எழுது. எங்களைப் பற்றி எழுது. அரசூர் பற்றி எழுது.

பனியன் சகோதரர்கள் திரும்பவும் சொன்னார்கள்.

எழுதலாம்தான். ஆனால் அரசூருக்கு என்ன வரலாறு இருக்கிறது ? பனியன் சகோதரர்கள் எப்படி சகோதரர்கள் இல்லையோ அரசூருக்கும் அதேபோல் சரித்திரம் இல்லை.

ஆனாலும் பனியன் சகோதரர்கள் இருக்கிறார்கள். நூறு வருடத்துக்கு முந்திய மோட்டார் காரில் பயணம் போய்க்கொண்டு, அரசூரின் சின்னத் தெருக்களில் புகுந்து புறப்பட்டுக் கொண்டு, எதிர்ப்படுகிறவர்களில் யார் ஏமாறுகிறான் என்று பார்த்துக்கொண்டு.

முன்னோர்கள் இருக்கிறார்கள். நான் எழுத ஆரம்பித்ததுமே சூழ வந்து கவிந்து கொண்டு.

அரசூரும் இருக்கிறது.

ஆத்தா சாமி கோவில். சுற்றி நாலு தெரு. நேர் எதிர்த்தாற்போல் அய்யா சாமி கோவில். அதற்குச் சுற்றி நாலு வெளிவீதி. குறுக்காக வளைந்து ஓடும் கடைத்தெரு. ராஜா சத்திரம். பிரசவ ஆஸ்பத்திரி. நல்ல தண்ணி ஊருணி. ஃபோட்டோ ஸ்டூடியோ. வால்வ் ரேடியோ ரிப்பேர்க்கடை. தெப்பக்குளம். வேலிகாத்தான் செடிகள் மறைக்கும் பள்ளிக்கூடம். முடவைத்திய சாலை. சத்தியாக்கிரஹ மேடை. கமலாம்பா காப்பி ஓட்டல். முன்சீப் கோர்ட்.

இதெல்லாம் அரசூர்தான். இது மட்டும் இல்லை. அரண்மனை கூட உண்டு. ரொம்பச் சின்னதாக ஒரு அரண்மனை. ராஜா. ஒரு ராணி. மட்டக்குதிரை. கேடயம். வாள். துடைப்பம். கரப்பான் பூச்சி. வரிக்கணக்குப் புத்தகம். காரியஸ்தன். திவசம் கொடுக்க வாழைக்காய். சமையல்காரன். மீன் செதிள் தேய்க்கப் பாறாங்கல். சீயக்காய்ப் பொடி. சேடிப்பெண். பல்லக்கு.

எல்லாமும் எல்லாரும் இருக்க இடம் உண்டு.

நாங்கள் அரண்மனைக்குப் போனோம்.

பனியன் சகோதரர்கள் தொடங்கி வைத்தார்கள்.

அவர்கள் அரண்மனைக்குள் போயிருக்கிறார்கள்.

கோவிலில் பூத்திருவிழா வருது . வசூல் பண்ண வந்திருக்கோம்.

வெள்ளை வேட்டி. ஒட்ட வெட்டின கிராப்பு. ஒருத்தன் நெடுநெடுவென்று நல்ல உயரம். இன்னொருத்தன் குட்டையாக, குண்டாக.

மேலே சட்டை கிடையாது இரண்டு பேருக்கும். பதிலாக பனியன் மட்டும் போட்டிருக்கிறார்கள். எப்போதும் அது தான் வேஷம்.

இந்த வேஷத்தோடு அரண்மனைக்குள் பூத்திருவிழாவுக்கு வசூல் பண்ண நுழைந்ததாகச் சொன்னதும் நான் கேட்டேன் - அங்கே ஆள் அரவமில்லாமல் போய் நூறு வருஷத்துக்கும் மேல் ஆகி இருக்குமே. யாரிடம் பணம் பெயருமா என்று பார்க்கப் போனீங்க ?

இல்லாமே என்ன ? ராஜா இருந்தார். கூடவே ராணி.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 11:48 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் ஐம்பத்திரெண்டு (நிறைவடைந்தது)


அரசூர் பற்றி எழுதிவிட்டேன்.

முன்னோர்களிடம் சொன்னேன்.

என்னத்தை எழுதினே போ. இப்பத்தானே ஆரம்பிச்சே.

அவர்கள் உட்கார்ந்த இடங்களிலிருந்து எழுந்து வந்து மறுபடியும் என் மேசையில் ஓரங்களில் புகை போல் ஒட்டிப் படிந்து சூழ்ந்தார்கள். என் கம்ப்யூட்டர் திரையில் இன்னொரு முறை பனியாகப் படர்ந்து மறைத்ததோடு இல்லாமல் அதன் இயக்கத்தை நிறுத்தினார்கள். காலியான காப்பிக் கோப்பையிலும் அவர்களின் வாடை.

அது என்ன வாடை என்று இன்னும் எனக்குப் பிடிபடவில்லை. கொஞ்சம் அது மூக்குத்தூள் வாடை. வைகைக்கரை மணல் வாடை. வெளவால் வாடை. வெள்ளைக்காரியின் கட்கத்தின் நெடி. பாழுங்கிணற்றில் பாசி வாடை. புறா எச்சத்தின் வாடை. வெடிக்குழலின் புகை வாடை. அத்தர் வாடை.

அதெல்லாம் ஒண்ணுமில்லேப்பா. சும்மாத் தோணறது உனக்கு அப்படியெல்லாம்.

பனியன் சகோதரர்கள். எழுந்ததபடி சொன்னார்கள்.

என்ன அவசரம் ? அதுக்குள்ளே போய் எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறீங்க ?

இவர் ராஜாவாக இருக்கலாம். குரலில் அதிகார நெடியடித்தது.

பூத்திருவிழா வருதில்லே ? வசூல் பண்ணிட்டு இருக்கோம். புதுத் தாசில்தார் வந்திருக்காராம். போய்க் கும்பிட்டு.

பழுக்காத்தட்டு விக்கப் போறீங்களா ?

பெரிய மீசை வைத்தவர் கேட்டார்.

ராஜாவின் மாமனாரா என்றேன்.

ராஜாவே இல்லை. மாமனார் எங்கே இருந்து வரப்போறாரு ?

அவர் கேட்டார். விடிகாலையில் ஏன் கையில் மல்லிகைப் பூவைச் சுற்றிக்கொண்டு வந்து நிற்கிறார் என்று தெரியவில்லை.

ராஜா என்ன வெறுங் கோமாளியா இருந்தாரா என்ன ?

முன்னால் பேசியவர் திரும்பவும் மேஜைமேல் ஏறினார். என்னை வம்புக்கிழுக்கிறார்.

புள்ளை தப்பா ஒண்ணும் எழுதலேப்பா. நல்லாத்தானே எல்லாரையும் பத்திச் சொன்னது ?

ராணி ஒண்ணும் கொளுத்திப் போடலை. நினைவு வச்சுக்கோ தம்பி.

அந்தப் பெண் அரச குடும்பத்து அடையாளங்களோடு இருந்தாள். வேண்டாம். விசாரித்தால் ராணி இல்லை என்று சொல்லப் போகிறாள் அவளும்.

ராஜாவுக்கு அப்புறம் அவர் வம்சம் என்னாச்சு ?

நான் விசாரித்தேன்.

எப்போதிலிருந்து அரசூர் அரண்மனை புழுதியடைந்து சிதிலமானது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

அது என்னப்பா அவரோட வம்சம்இ உன்னோடதுன்னு தனியா ? எல்லாம் ஒண்ணாத்தானே இருக்கு ?

அப்படியா ?

முன்குடுமி வைத்த ஒருத்தர் என்னை விடக் கூடுதலாக ஆச்சரியப்பட்டார். அவர் என் கம்ப்யூட்டர் திரை மேல் படிய அது திரும்ப உயிர் பெற்று வடிவங்கள். சதுரங்கள். முக்கோணங்கள்.

பதினேழு தேவதைகளை இங்கே நிறுத்தியிருக்கேன். இனிமே இந்த யந்திரம் பழுதில்லாமல் இயங்கும்.

இல்லை. நான் ஜோசியர் அண்ணாசாமி அய்யங்கார் இல்லை. அவர் அப்புறம் நாலு பிறப்பு எடுத்து முடித்து இப்போது வளைகுடாவில் நெருப்புக்கோழிகளை வைத்து ஓட்டப்பந்தயம் நடத்தும் அராபியாக இருக்கிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 11:48 pm

தான் எம்பிராந்திரியின் நேர் வம்சத்துஇ நாலாந் தலைமுறை என்றார் அவர்.

சுப்பம்மாள் என்ன ஆனாள் ?

நான் அவரைக் கேட்டேன்.

மகாபாவி நீயா பேரு வச்சே. சுவாதீனமாக் கூப்பிடறதைப் பாரு.

அவர் என்னமோ செய்ய திரையில் சதுரங்கள் சிவந்து வழிந்தன. இயக்கம் நிற்பதைத் தவிர வேறு வழியில்லை என்று தோன்றியது.

கோபிச்சுக்க வேணாம். தெரிந்துக்கத்தான் கேட்டேன். அந்தப் பெரிய பாட்டித் தள்ளைஇ மூத்த சுமங்கலிப் பெண்டு போன இடம்தான் என்ன ?

அந்தம்மா காசிக்குப் போய் ராத்திரி நேரங்களில் சுடலை எரியும்போது ஸ்நான கட்டங்களில் உட்கார்ந்து இந்துஸ்தானி சங்கீதம் பாடுகிறேன் என்று மனம் போனபடி இரைச்சல் போடஇ அவள்மேல் பரிதாபப்பட்டு ஒரு முகமதியப் பெரியவர் கூட்டிப்போய் வீட்டுக்கு வெளியே குடில் அமைத்துத் தங்க வைத்ததாகக் கேள்வி. அவர் ஓடிப்போன தன் வீட்டுக்காரர் என்று சாகும்போது கூவி மூத்த குடிப் பெண்களை அழைக்க அவர்கள் கேட்காமல் யார் வீட்டிலோ சுமங்கலிப் பிரார்த்தனைக்கு ஓடினார்கள்.

இதைச் சொன்னவர் முடிக்கும் முன்பே இன்னொருத்தர் அவசரமாக மறுத்தார். அத்தர் வாசமும்இ தோளில் புறாவுமாக இருந்த அவர் இந்த வீடு என்ன விலைக்குப் போகும் என்றார் சுற்றுமுற்றும் பார்த்தபடி. வீடு விற்பதற்கு இல்லை என்றேன்.

உனக்கு சுப்பம்மாள் யார்னே தெரியாது. ஜான் கிட்டாவய்யரின் மூத்த குமாரத்தி தெரிசா இருந்தாளே ? அவள் அந்த மூத்த குடியாள் சுப்பம்மாளை பட்டணத்தில் வைத்துச் சந்திக்க நேர்ந்தது. உடம்பு தளர்ந்து ரிடையர்ட் செஞ்ஜார்ஜ் கோட்டை நாவிகேஷன் கிளார்க் வைத்தியநாதய்யர் வீட்டைத் தேடிக் கொண்டிருந்தாளாம் சுப்பம்மாள். அவளைத் தன் பொறுப்பில் வைத்திருந்த அப்பெண்மணி கலாசாலையில் பிள்ளைகளுக்கு சாஸ்திரக் கல்வி போதித்து வந்தவள். அவள் குரிசு வரைந்து பிரார்த்திக்கவும் நல்ல நல்ல சுவிசேஷ கானங்களைப் பாடவும் எல்லாம் சுப்பம்மாளுக்குக் கற்பித்தாள்.

அவர் முடிக்கும் முன்பே அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும் தான் தெரசாம்மாளின் பெண் வயிற்றுப் பேத்தியாக ஜனித்திருக்க வேண்டியிருந்து கர்ப்பம் கலைந்து போய் மரித்ததால் பூர்வகதை முழுக்கத் தெரியும் என்றும் சோகையாக மெலிந்திருந்த இன்னொரு ஸ்திரி சொன்னாள். சங்கரய்யரின் மகன் சுவாமிநாதய்யர்இ ஜான் கிட்டாவய்யரின் இரண்டாவது பெண் அமலோற்பவம்மாளை வயது வித்தியாசம் பார்க்காமல் கல்யாணம் செய்து கொண்டதாகவும்இ அவரும் வேதத்தில் ஏறியதாகவும் சொன்னாள் அந்தப் பெண்.

கல்யாணம் ஆனது வாஸ்தவம் தான். அது வடக்கநாத க்ஷேத்ரத்துலே வச்சு நடந்தது. கமலா பத்து நெல்லை முழுங்கி வயசைக் குறைச்சுண்டுதான் கல்யாணம் பண்ணிண்டா. கல்யாணத்துகு முந்தின விருச்சிக மாசம் ஒண்ணாந்தேதி சாவக்காட்டான் முகத்துலே காசை வீசியெறிஞ்சுட்டு எல்லோரும் திரும்பி வந்தாச்சு.

கீசுகீசென்று இரைந்த பெண் என் திரையில் தட்டுப்பட்டுக் கலைந்து மறுபடி எழஇ முண்டு மடக்கிக் குத்திய வழுக்கைத் தலையனாகி இருந்தான்.

குரிகள். குரிகள். கேரளா கவர்மெண்ட் பாக்ய குரிகள். வேணுமோ சாரே ? அவன் விசாரித்தபோது இந்தக் கஷண்டித்தலையனை நம்பாதே. அதொண்ணும் காசு கிட்டாது என்றவர் பனை ஓலை விசிறியால் விசிறிக்கொண்டபடிஇ காலை நேரத்துக்குப் பொருந்தாமல் ஏப்பம் விட்டார்.

புகையிலைக் கடை என்ன ஆச்சு ?

சங்கரய்யர் மகன் சுவாமிநாதன் புகையிலை விற்பதற்குப் பிடிக்காமல் கலாசாலைக்குப் போய்விடஇ அவன் சகோதரி கல்யாணியும் அவளைக் கட்டிய மதுரை நாராயணய்யரும் அந்த வியாபாரத்தைத் தொடர்ந்ததாக பனியன் சகோதரர்கள் நினைவு வந்தது போல் குறிப்பிட்டார்கள்.

அடுத்து ரெண்டு தலைமுறை கடை நடந்தது. அப்புறம் வக்கீல் குமாஸ்தாக்களும்இ வங்கி குமஸ்தாக்களும் தலையெடுத்து அதை முடக்கிப் போட்டார்கள்.

கட்டையாய்க் குட்டையாய்க் கருப்புக் கோட்டோடு ஒருத்தர் சொல்ல பனியன் சகோதரர்களில் நெடியவர் அதுவும் அப்படியோ என்று ஆச்சரியமாக விசாரித்தார்.

உங்களுக்குத் தெரியாம ஊர்லே எதுதான் நடக்கும் என்றேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 11:49 pm

நாங்க என்னத்தைக் கண்டோம். திருவிழாஇ வசூல்இ பெரிய மனுஷங்க தரிசனம்இ சில்லுண்டி வியாபாரம்னு போய்ட்டு இருக்கோம். அடுத்த வேளை சாப்பாட்டுக்கும் காருக்கு பெட்ரோலுக்கும் கிடைக்குமான்னே நித்தியக் கவலையாயிடுச்சு.

படம் பிடிக்கும் பெட்டியோடு கப்பலில் ஏறினால் ஏகத்துக்குக் கிடைக்குமே என்றாள் ஒரு பெண். அவளுக்குக் கையிலும் காலிலும் ஆறாறு விரல்கள்.

கரு.பெரி.சொக்கலிங்கம் செட்டியார் கிட்டேப் பெட்டியை அடகு வைச்சோம். மூழ்கிடுச்சு அது என்றார்கள் பனியன் சகோதரர்கள் முகத்தை வருத்தமாக வைத்துக்கொண்டு.

சாமிநாத அய்யர் என்னதான் ஆனார் என்று விசாரித்தேன் அவர்களிடம்.

மருதையன் சேர்வை கலாசாலையின் உயர் ஆசிரியனாக திருவனந்தபுரம் போனபோது அவனுக்கு அடுத்த தரத்தில் சாமிநாத அய்யரும் உத்தியோகம் எடுத்துக் கூடவே போனதாகவும் இரண்டு பேரும் கணிதத்திலும் ஆங்கில மொழியறிவிலும் புலிகள் என்றும் அந்த ஆறுவிரல் பெண் தெரிவித்தாள். சாமிநாதய்யர் வேதத்தில் ஏறினாலும் வயது மூத்த பெண்ணைக் கல்யாணம் கழிக்கவில்லை என்றாள் அவள்.

ராணியம்மாள் அரண்மனையை விட்டுவிட்டு வரமாட்டேன் என்றதால் பேராசிரியர் மருதையன் தன் குடும்பத்தோடு திருவனந்தபுரம் போகும்போது அவளை சங்கரய்யர் மனைவி பகவதி அம்மாளின் பொறுப்பில் விட்டுப் போனதாகவும்இ சொந்தத் தாயைப் போல அந்தக் கிழவியை அவளும் மகள் கல்யாணியம்மாளும் அவள் வீட்டுக்காரர் புகையிலகை¢கடை நாராயணய்யரும் கவனித்து வந்ததாகவும்இ அவள் ஆயுசு முடிந்த அப்புறமும் அரண்மனை புகையிலைக் கிட்டங்கியாக நீடித்ததாகவும் இன்னொரு குரல்.

பனியன் சகோதரர்கள் என் பக்கத்தில் வந்து குனிந்து இவர்கள் யாருமே அரசூர் வம்சத்தில் பட்டவர்கள் இல்லை. சும்மா வார்த்தை சொல்லிக் கொண்டிருக்க இறங்கி வந்தவர்கள். நீ நேரத்தை வீணாக்காமல் ஆக வேண்டிய காரியத்தைப் பார் என்றார்கள்.

ஆனாலும்இ எங்க பெரிய தாத்தா அம்பலப்புழையில் புகையிலைக்கடை வைத்திருந்தாரேஇ அவர் உண்டல்லவா இந்தக் கூட்டத்தில் என்றேன்.

நான் தான் அது என்றாள் ஒரு சிறுமி. அரசூர் வம்சத்தின் மீதிக் கதையை நான் உனக்குச் சொல்கிறேன் என்று துருதுருவென்று என்னைச் சுற்றி ஓடினாள் அவள்.

பெரியம்மாஇ நீங்க இந்தப் பையன் எழுதினதுக்கு எழுபது எண்பது வருஷம் கழித்துல்லே பிறந்திருப்பீங்க ? நடுவிலே என்ன ஆச்சுன்னு தெரியுமா என்ன உங்களுக்கு ?

அது தெரிந்து என்ன ஆகப் போகிறது ? எல்லாத்தையும் சங்கிலி போல ஆதியிலிருந்து அந்தம் வரை பதிந்து வைக்கணுமா என்ன ?

அந்தப் பெண் காற்றில் கலந்து போனாள். கூடவே மற்றவர்களும்.

நேரமாறது. பூத்திருவிழாவுக்கு நீ ஒண்ணும் காசு எழுதலியே ?

பனியன் சகோதரர்கள் நோட்டுப் புத்தகத்தை நீட்டினார்கள்.

நாளைக்குத் தரேன் என்றேன் வழக்கம்போல்.

கம்ப்யூட்டரை நிறுத்திக் குளிக்கப் போனபோது சுலைமான் பற்றி விசாரிக்காமல் போனேனே என்று நினைவு வந்தது.

அடுத்த தடவை பனியன் சகோதரர்கள் வரும்போது கேட்க வேண்டும். இல்லை நாளைக் காலை புதுப்பால் காப்பிக்கு முன்னோர்கள் இறங்கி வரும்போது.

அவர்கள் என் முன்னோர்கள் இல்லாமல் இருந்தால் ?

பாதகமில்லை.அவர்களுக்குத் தெரிந்த ஒரு சுலைமான் இருப்பான். ஒரு சாமிநாதன் இருப்பான். அரசூர் வம்சம் இருக்கும். பெயர் மாறியிருக்கும். இடம் மாறியிருக்கும். காலம் முன்னே பின்னே இருக்கலாம். ஆனாலும் யாரோ எங்கோ இருந்ததையும் மகிழ்ந்ததையும் நடந்ததையும் நடக்காததையும் சொல்லட்டும்.

கேட்டு விட்டு எழுதுகிறேன்.

(நிறைவடைந்தது)

இரா.முருகன்.


திண்ணை.காம்


Sponsored content

PostSponsored content



Page 17 of 17 Previous  1 ... 10 ... 15, 16, 17

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக