புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_c10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_m10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_c10 
32 Posts - 56%
heezulia
நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_c10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_m10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_c10 
22 Posts - 39%
rajuselvam
நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_c10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_m10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_c10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_m10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_c10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_m10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_c10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_m10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_c10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_m10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_c10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_m10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_c10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_m10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_c10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_m10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_c10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_m10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_c10 
9 Posts - 1%
jairam
நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_c10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_m10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_c10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_m10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_c10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_m10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_c10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_m10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா..


   
   

Page 2 of 2 Previous  1, 2

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jul 12, 2010 7:26 pm

First topic message reminder :

நாடித் துடிக்குது துடிக்குது...உன்னை நாடித் துடிக்குது துடிக்குது...என்று பாடல் கேட்டிருப்போம். இப்பாடலைக் கேட்கும் போது நாடி, எதை நாடித் துடிக்கிறது? எப்படி துடிக்கிறது? ஏன் துடிக்கிறது? அது துடிக்காவிட்டால் என்ன நடக்கும்? அதன் துடிப்பைக் கண்டறிவது எப்படி? இது போன்ற ஆயிரம் கேள்விகள். இறைவனின் படைப்பில் மனித உடலில் உள்ள உறுப்புகளில் மனிதனின் நல வாழ்வைக் கருதி துடித்துக்கொண்டு இருக்கின்ற நாடிகளை நோயறியும் கருவிகள் எனலாம். ஆங்கில மருத்துவர்கள் நோய்களைக் கண்டறிய பயன் படுத்தும் ஸ்டெத்தாஸ்கோப், தர்மாமீட்டர் போன்று நம் உடல் பொருத்திக் கொண்டுள்ள நரம்பால் ஆன நோயறி கருவியே நாடிகள். நம் முன்னோர்களாகிய ஆதிமருத்துவ மேதைகள் கண்டறிந்த, கண்கண்ட
நோயறி கருவி இவை என்று கூறுவதில் சிறிதளவும் தடையிருக்காது ஒருவருக்கும்.


மருத்துவத்திற்கு நான்கு முக்கிய படிநிலைகள் உள்ளன. மருத்துவம் தொடங்குமுன் 1. மருத்துவர் நோய் இன்னது என்று நன்கு ஆராய்ந்து கண்டறிய வேண்டும். 2. அதன் பின் நோய் வந்த காரணம் என்ன என்று ஆயாய வேண்டும். 3. பிறகு நோயைத் தணிக்கும் (குறைக்கும்) மார்க்கம் எது என்று அறிந்து கொள்ள வேண்டும். 4. அதன் பின்னே தேவையான மருத்துவத்தைச் செய்யத்தொடங்க வேண்டும். .
.
அவற்றுள் நோய் இன்னது என்று கண்டறிவதுவே முதல் படிநிலை என்பர். உடல் நோய்க்கும், உள்ள நோய்க்கும் ஈரடியில் மருந்து சொன்ன தமிழ்ப்பேராசான் திருவள்ளுவரும்,


நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்


என்று கூறி நோய் அறிவதையே முன் வைத்தார். தமிழ் மருத்துவத்தில் நோய் தேர்வு, அதாவது நோய் என்ன என்று கண்டறிவது எட்டு முறைகளில் காணப்படும்.. நாடி, தொடுதல், நாக்கு, நிறம், மொழி, விழி, மலம், சிறுநீர் ஆகிய எட்டும் நோய் தேர்வுக்குப் பயன் படுத்தும் முறைகளாக இருந்து வந்துள்ளன.இன்னும் இருக்கின்றன. ஆயினும் நாடித் துடிப்பின் வழி நோயை அறிவதே முதன்மையாக இருந்து வந்துள்ளது.. இதன் காரணத்தாலே வள்ளுவரும் நோய் அறிதலை முன்வைத்ததுடன் நாடி என்ற சொல்லை எடுத்தாண்டார்.. உயிர்களின் நலம் நாடுவது மட்டுமின்றி, நோய் இன்னது என்று நாடிக் கூறுவதும் இதன் தலையாய பணி என்பதால் நாடி ஆயிற்று எனலாம். இன்றும் பல மருத்துவ முறைகளிலும் தொட்டுப் பார்ப்பது, நாக்கை .நீட்டச்சொல்லிப் பார்ப்பது, விழியைத் திறக்கச்சொல்லிப் பார்ப்பதும், மலம், சிறுநீர் ஆகியவற்றை சோதித்துப்பார்ப்பதும் வழக்கில் உள்ளன. என்றாலும் நாடிச்சோதனை எல்லா மருத்துவத்திலும் முதன்மையாகக் கருதபடுவதே உண்மை.. இதனையே ஆங்கிலத்தில் Pulls என்ற சொல்லால் கூறுகின்றனர். இந்த நாடிகளின் எண்ணிக்கையை 72,000 எனச்சுட்டும் சித்த மருத்துவம்..

இருப்பன நாடி எழுபத்தோடீரா
யிரமான தேகத்தில் ஏலப் பெருநாடி
ஒக்கதசமத்தொழிலை ஊக்கதச வாயுக்கள்
தக்கபடி என்றே சாரும்

என்ற பாடல் வழி உணரலாம். அவற்றுள்ளும் கரு உருவாகும் போதே தோன்றும் நாடிகள் பத்து. அவை இடகலை, பிங்கலை, சுழுமுனை, சிங்குவை, புருடன், காந்தாரி, அசனி, அலம்பருடன், ச்ங்குனி, குரு என்பன. இவற்றுள்ளும் முதன்மையானவையும், முக்கியமானவையும் மூன்று. அவை இடகலை, பிங்கலை, சுழுமுனை. இவையே. வாதம், பித்தம், கபம் என்ற பெயர்ப்படும் நாடிகள். இதனை விளக்கும் கண்ணுசாமியம்பாடல் பின்வருவது.

வந்தகலை மூன்றில் வாயுவாமபானனுடன்
தந்த பிராணனைச் சமானனுக்குஞ் சந்தமறக்
கூட்டுறவு ரேசித்தல் கூறும் வாதம் பித்தம்
நாட்டுங்கபமேயாம் நாடு

நாடியைச் சிறை என்று சுட்டும் சீவக சிந்தாமணி. சிறையைந்தும் விடுதும் என்பர் சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கத் தேவர்என்று
கூறும் சீவகசிந்தாமணி நாடிகள் ஐந்து என்று எடுத்துரைக்கும். இவை
கையிரண்டு, காலிரண்டு, நெற்றி ஒன்று ஆகிய ஐந்து இடங்களில் இருப்பவை.
என்றுரைக்கும்.
இலக்கியங்கள் பலபடச் சுட்டினும் நாடி என்றழைக்கப்படும் அதி முக்க்யமான தாதுக்கள் மூன்றே என்று உரைக்கும் தமிழ் மருத்துவம்.

சரி, நாடியைச் சோதிக்கும் முறையை அறிய வேண்டாமா? பெருவிரல் பக்கமாக மணிக்கட்டிலிருந்து ஒரு அங்குலம் தள்ளி தெரியும் இரத்தக் குழாயையே நாடி நரம்பு என்பர். இதன் மேல் ஆள்காட்டிவிரல், நடுவிரல், மோதிரவிரல் ஆகிய மூன்று விரல்களையும் வைத்துப் பார்க்கும் போது, ஆள்காட்டி விரல் உணர்வது வாத நாடி. நடுவிரல் உணர்வது பித்தநாடி, மோதிர விரல் உணர்வது கப நாடி. இதனை,

கரிமுகனடியை வாழ்த்திக்
கைதனில் நாடி பார்க்கில்,
பெருவிர லங்குலத்தில்
பிடித்தபடி நடுவே தொட்டால்
ஒரு விரலோடில் வாதம்,
உயர்நடுவிரலிற் பித்தம்,
திருவிரல் மூன்றிலோடில்
சிலோத்தும நாடிதானே

என்று அகத்தியர் நாடி உரைக்கும், வழி வந்த திருமூலரும்,

“குறியாய் வலக்கரங்குவித்த பெருவிரல்,
வறியாயதன் கீழ் வைத்திடு மூவிரல்
பிரிவாய் மேலேறிப் பெலத்ததுவாதமாம்
அறிவாய் ந்டுவிரலமர்ந்தது பித்தமே

என்று உரைப்பார்.
இந்த நாடிகள் முறையே 1, 1/2 , 1/4 என்ற மாத்திரையளவில் துடிக்குமாயின் நல்ல ஆரோக்கியமான் உடல்நிலை உள்ளவர்கள் என்று சித்தர்கள் கணக்கிட்டு உள்ளனர். அந்த நாடிகளைப் பிடித்துப் பார்க்கும் போது அவற்றின் துடிப்புகளின் (அதிர்வுகளின்) வேறுபாட்டைக் உணரக்கூடியதாக இருக்கும். அதாவது ஆள்காட்டி விரலுக்கு நேராக உள்ள நாடி 1/4 ஆகவும் நடு விரல் உணரக்கூடிய நாடி 1/2 ஆகவும் மோதிர விரல் உணரும் நாடி 1 ஆகவும் அதிர்வுகள் இருக்க வேண்டும். இந்தெ அதிர்வு எண்ணிக்கை வீதம் மாறி வருமாயின் குறைபாடு இருக்கும் மனிதன் என்று உணரலாம். அல்லது குறைபாடு வரும் அறிகுறி என்றும் உணரலாம்.


அலோபதி முறையிலும் நாடி பார்க்கும் முறை உள்ளது என்பது நாம் அறிந்ததே..ஒரு வேறுபாடு என்னவென்றால் அம்முறையில் ஒரே எண்ணிக்கை, ஒரே நாடி. ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை அதிர்வு ஏற்படுகின்றன என்று கணக்கிட்டு சராசரியாக 75 முதல் 80 அதிர்வுகள் என்றால் அம்மனிதன் சாதாரணமாக உள்ளார் எனக் கொள்ளலாம் என்பர்.


இந்த நாடித்துடிப்புகள் சற்று கூடினாலும் குறைந்தாலும் நோய் என்பதை நாம் அறிய வேண்டும். இதனையே திருக்குறள் தந்த தெய்வ மருத்துவனும் முக்கியமாக வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளும் மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் என்பதை பின்வரும் குறட்பாவால் விளக்குவார்.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று

இந்த மூன்று நாடிகளைத் தவிர `பூத நாடி என்று ஒன்று உண்டு. இதைக் கண்டறிவது எளிதல்ல என்பர். இதில் என்ன ஒரு குறை என்றால் நாடி நூலகள் பலவும் இந்த நாடியைக் குறிப்பிடவே இல்லை என்பதே.ஒரு சில நூல்கள் மட்டும் சிறிய அளவிலேயே கூறியுள்ளன. இது வாத, பித்த, கப
நாடிகளுக்கு முன்னும் பின்னுமாக இருக்கும் என்பர். அதாவது ஐந்து
விரல்களாலும் நோயாளியின் கையைப் பிடித்துப் பார்க்கும் போது பெருவிரலும்
சிறுவிரலும் உணரும் நாடியே பூத நாடியாம். இந்த நாடியின் சிறப்பு, இந்த
நாடி சரியானபடி துடிக்குமானால் சாமாதி நிலை என்று கூறப்படும் பேருறக்க
நிலையை எளிதாக அடையலாமாம். சரி அது இருக்கட்டும்... இந்த நாடிகள்
நடக்கும் முறையை அல்லது அதிரும் முறையை நம் முன்னோர்கள் எவ்வெவற்றோடு ஒப்பிட்டுள்ளனர் என்று அறிந்தால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். அதனை அடுத்த பதிவில் பார்ப்போமா....உங்களுக்காக இந்த நாடி அடுத்த பதிவிலும் துடிக்கும்...


ஆதிரா...




நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Aநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Aநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Tநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Hநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Iநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Rநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Aநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jul 19, 2010 7:02 pm

kalaimoon70 wrote:நாடிக்குள் இதனை சிறப்பா?
நாடி,நம்மை தேடி சொல்லும் சொன்ன இந்த கட்டுரை ,நல்ல பயன் தரும்.................அறிய தந்த இந்த கட்டுரைக்கு நன்றி தோழியே ..........

மிக்க நன்றி கலைநிலா.. நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 154550



நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Aநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Aநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Tநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Hநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Iநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Rநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Aநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Empty
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jul 19, 2010 7:10 pm

நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 677196 நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 677196 நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 677196 நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 677196

நாடிய(ப்) பொருள் கிடைக்கப் பெற்றேன்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jul 19, 2010 7:14 pm

மிக அருமையான தொகுப்பு ஆதிரா....

உங்கள் கட்டுரைகளில் எப்போதும் ஒரு நேர்த்தியை பார்க்கிறேன்பா...

அகத்தியர் பாடலுடன் அழகாய் விளக்கி இருக்கீங்க....

நாங்க சின்ன பிள்ளையில் நாடி பிடிச்சு பார்க்கும் விளையாட்டு விளையாடுவோம்.. அப்ப நாடி துடிப்பை கை பிடித்து பார்த்து உணர்ந்திருக்கோம்பா....

அன்பு நன்றிகள்பா எங்களுக்கு நாடித்துடிப்பு பற்றி அறிய தந்தமைக்கு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jul 19, 2010 8:47 pm

உங்களின் கடும் உழைப்பு கட்டுரையில் தெரிகிறது எளிய முறையில் உள்ளது நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jul 26, 2010 5:43 pm

ஹாசிம் wrote:நாடி பிடித்து கதை சொல்வார்கள்
ஆனால் நாடிக்குள் இத்தனை விடயமா என வியக்கவைக்கிறது
தகவலுக்கு நன்றி அக்கா
மிக்க நன்றி ஹாசிம்.. நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 154550



நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Aநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Aநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Tநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Hநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Iநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Rநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Aநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Empty
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Jul 26, 2010 5:47 pm

மிக அருமையான தகவல் நன்றி ஆதிரா....

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jul 26, 2010 6:06 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:மிக அருமையான தகவல் நன்றி ஆதிரா....
மிக்க நன்றி தமிழ்ப்ரியன்..



நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Aநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Aநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Tநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Hநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Iநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Rநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Aநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jul 26, 2010 6:10 pm

maniajith007 wrote:உங்களின் கடும் உழைப்பு கட்டுரையில் தெரிகிறது எளிய முறையில் உள்ளது நன்றி
மிக்க நன்றி மணி..உங்கள் விமர்சனமே என்னை எழுதத் தூண்டுவது..நன்றி.. நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 154550



நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Aநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Aநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Tநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Hநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Iநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Rநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Aநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. - Page 2 Empty
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக