|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm
» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:23 pm
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by gilmakvp Today at 8:13 pm
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm
» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm
» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm
» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
திருமணச் சடங்குகளும் திருமணமும்!
Page 1 of 1 • Share •
திருமணச் சடங்குகளும் திருமணமும்!
திருமணச் சடங்குகளைப் பரிபூரணமாக நடத்துவதும் ஈற்றில் திருமண பந்தத்தில் நுழைவதும் இன்று இரு வேறு வித்தியாசமான கருத்தியல்களாகப் பரிணமித்துள்ளன. திருமண பந்தத்தினுள் நுழைவதன் ஆரம்பத்தைக் குறித்துக் காட்டுகின்ற வைபவங்கள் முன்னதாகவே நிகழ்ந்து விடுகின்றன. எல்லாமே வர்த்தக மயமாகிவிட்ட இந்தக் காலத்தில், ஆயுள் முழுவதும் நிலைத்திருக்கும் உறவினை உருவாக்குவதில் காட்டப்படும் கரிசனையை விட இச்சடங்குகளுக்கே அதிக கரிசனையும் முக்கியத்துவமும் வழங்கப்படுகின்றது.
மணப்பெண் அவளின் கற்பின் சின்னமாக வெள்ளை ஆடை அணிந்திருக்கின்றாளா அல்லது அவளின் கருவளத்தின் அடையாளமாக சிவப்பு ஆடை அணிந்திருக்கிறாளா என்பது நவீன திருமணங்களில் ஒரு பொருட்டாகக் கருதப்படுவதில்லை.அவை வெறும் சமுதாய ஒன்றுகூடல்களே. திருமணம் என்பது தாமே இரண்டு தனி நபர்கள் அவர்கள் பிறந்த குடும்பங்களில் இருந்து விலகி ஒன்றாக வருவதாகும். திருமணம் என்பது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவும் பிணைப்புமாகும். இதுவே பல குடும்பங்களினதும் வரைவிலக்கணத்தில் பிரதான பாத்திரத்தினை வகிக்கின்றது.
திருமணமானது இரு மனிதர்களுக் கிடையிலான தனிப்பட்ட உறவாக இருப்பதுடன் அது சமூகத்தின் மிகவும் முக்கியமான மற்றும் அடிப்படையான நிறுவனங்களில் ஒன்றாகவும் இருக்கின்றது. எவ்வாறாயினும், இலங்கையில் மிகவும் பிரசித்தமான நடைமுறை என்ற ரீதியில் திருமணம் தாமே, தமக்கு இடையில் வாக்குறுதி எடுத்துக் கௌளும் இரு மனிதர்கள் மீதான முக்கியத்துவத்தினைத் தாண்டி மலர் அலங்காரம், திருமண மண்டபங்கள் மற்றும் ஒப்பனைக் கலைஞர்கள் என்பவற்றின் மீது படிந்து விடுகின்றது.
கிறிஸ்தவத் திருமணங்களிலே, திருமண பந்தத்தில் நுழைபவர்கள் பின்வருமாறு வாக்குறுதி எடுத்துக் கொள்வர்: “இன்பத்திலும், துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் வாழ்வின் முடிவு வரை ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாய் இருப்போம்! திருமண உறவின் முக்கியத்துவத்தினைப் புரிந்து கொண்ட கோயில், ஒரு நிறுவனம் என்ற ரீதியில், கிறிஸ்தவத் திருமணங்களுக்கான ஒரு முன்தேவையாக, திருமணத்திற்கு முன்பான வகுப்புகளை நடத்துகின்றது. எவ்வாறாயினும், இதன் முக்கியத்துவமானது இன்று எழுந்துள்ள கவர்ச்சிகரமான திருமண ஏற்பாடுகளினால் பெருமளவிற்கு மறைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் திருமணம் என்பது பெருமளவிற்கு சீதனம், மணப் பெண்ணிற்கான கிரயம், மற்றும் ஒருவரின் அந்தஸ்தினை உறுதிப் படுத்தல் என்பவற்றின் மீதான ஒரு ஒப்பந்தத்தினையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. திருமணம் என்பது பல சமுதாயங்களினாலும் சமூகத்தின் மேல் மட்டத்தினை நோக்கிய நகர்விற்கான ஒரு வழியாக, அல்லது இருக்கின்ற பிணைப்புக்களை வலுப்படுத்துவதற்கான ஒரு வழியாகவே நோக்கப்படுகின்றது. பொருத்தமான பிள்ளைகளை உடைய பெற்றோர் தமது பிள்ளைகளுக்குச் சிறந்த துணைகளைத் தேடுவதற்காக வலையமைப்புக்களை அமைத்துக் கொள்கின்றனர்.
ஒரு சமுதாயத்திலே கல்யாணத் தரகர் என்பவர் மிகவும் முனைப்பான பாத்திரத்தினை வகிக்கும் ஒருவராவார். அவரே இலங்கையில் திருமணங்களை நடத்தி வைக்கும் ஏற்பாடுகளைச் செய்வதில் முயற்சி எடுப்பவராக இருக்கின்றார். மோதிரம் மாற்றுவது, தம்பதிகளின் ஆடைகளைச் சேர்த்துக் கட்டி விடுவது, தாலி கட்டுவது, திலகமிடுவது அல்லது தம்பதிகளின் விரல்களைப் பிணைத்து விடுவது போன்றவை ஒன்று சேரலைக் குறிப்பதாகவே இருக்கின்றன. திருமண வைபவத்தின் முக்கியத்துவம் காலத்துடன் சேர்ந்து மாறிவிட்டது. திருமணம் என்பதன் முக்கியத்துவம் அதனை ஒட்டி நடக்கும் சடங்குகளால் மழுங்கடிக்கப்பட்டுள்ளது. 1847 ம் ஆண்டின் திருமணச் சட்டவாக்கத்திற்கு முன்பு, இலங்கையிலுள்ள கிராமப் புறங்களில், பாரம்பரியத், திருமணங் களுக்கு, இவ்வாறான வைபவங்களோ அல்லது இணைவின் சட்டபூர்வமான பதிவுகளோ தேவைப்படுவனவாக இருக்கவில்லை. இன்றோ இவை எல்லாம் பரிபூரணமாக நிகழ்த்தப்படுகின்ற திருமணத்திற்கே முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது.
அவ்வாறாயின் நடக்கும் பரிபூரணமான சம்பிரதாயங்கள் யாவை?
நான் இரண்டு காரணிகளின் மீது கவனம் குவிக்க விரும்புகின்றேன்: வைபவத்திற்கு முன்னர் நடக்கும் சம்பிரதாயங்களும் ஏற்பாடுகளும், வைபவமும். என்னுடைய பதிவுகள், நான் கலந்து கொண்ட, அதில் பகுதியாயிருந்த கேள்விப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும். இச்சம்பிரதாயங்களின் ஏற்பாடுகள் பல செயற்பாடுகளின் ஆரவாரங்களினால் நிறைந்திருக்கின்றன. ஆடை, அணி கலன், திருமண மண்டபம் போன்றவற்றிற்கான தெரிவுகள் எல்லையற்றவையாக இருக்கின்றன. மணவாளன் மற்றும் மணப்பெண் பரிவாரம் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப் படுகின்றது. மணப் பெண்ணின் தோழியர் மணப் பெண்ணின் உயரம் மற்றும் நிறம் என்பவற்றிற்கு பொருத்தமானவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகையில் மணமகனின் தோழர்களும் அவ்வாறே மணமகனின் உயரம் மற்றும் நிறம் என்பவற்றிற்கு பொருந்துபவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சம்பிரதாயங்களை கச்சிதமாகவும், கவர்ச்சிகரமாகவும் நடத்துவதே முக்கியம் என்கின்ற காரணத்தினாலும், மணப்பெண்ணின் தோழியரையும் மணவாளனின் தோழர்களையும் தெரிவு செய்வது தோற்றத்தினை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதாலும் கடந்த காலங்களைப் போல் உறவுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது அருகிவிட்டது. வகை வகையாக இனிப்புப் பதார்த்தங்கள் வைபவத்திற்கெனத் தயாரிக்கப் படுகின்றன. பாரம்பரிய உணவு வகைகளான முறுக்குகள், பணியாரங்கள் மற்றும் பாற்சோறு போன்றவற்றின் இடத்தை நவீன திருமணங்களில் திருமண கேக்குகளும், பாதாம் பருப்புகளும், சொக்லேற்றுகளும் எடுத்துக் கொண்டு விட்டன.
திருமணத்திற்கு முன் நடக்கும் சம்பிரதாயங்களை ஏற்பாடு செய்ய திருமண ஏற்பாட்டாளர் நியமிக்கப்படுகின்றார். அவரே இச்சம்பிரதாயங்களுக்கான ஓர் அடிப்படையை உருவாக்குகின்றார். இனிப்புப் பண்டங்களை எவ்வாறு அலங்காரத் தாளினால் சுற்றுவது என்பது கூட இந்த அடிப்படையின் பிரகாரமே தீர்மானிக்கப்படுகின்றது. ஒப்பனைகள், சிகை அலங்காரம் மற்றும் ஆடைத் தெரிவு போன்றவை பற்றிய ஆலோசனைகளைப் பெறுவதற்கு அழகுபடுத்தல் நிபுணர்களின் ஆலோசனையே பெறப்படுகின்றது. வைபவத்திற்கு பல மாதங்களிற்கு முன்பே முகஅழகுச் சிகிச்சையும் ஏனைய அழகுச் சிகிச்சைகளும் திட்டமிடப்படுகின்றன. நகைகளைத் தயாரித்து வழங்குவதற்கான கட்டளைகள் வழங்கப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் பிரத்தியேகமாக மணமகளுக்கென்றே நகைகளை வடிவமைக்கவும் கட்டளைகள் வழங்கப்படுகின்றன.
வைபவத்திற்கான மண்டபம் ஏற்கனவே ஒதுக்கப்படுகின்றது. பரிமாறப்பட வேண்டிய உணவு வகைகள் தெரிவு செய்யப்படுகின்றன. தெரிவு செய்யப்பட முன்பு அவற்றின் மாதிரிகள் ருசி பார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்படுகின்றன. திருமண மோதிரங்களும் பல வகைகளிலும் பல உலோகங்களிலும் மாணிக்கக்கற்கள் பதிக்கப்பட்ட வையாகத் தெரிவு செய்யப்படுகின்றன. இவற்றினையெல்லாம் தொடர்ந்து, திருமண நாள் நெருங்க தம்பதியினர் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் ஓர் ஒற்றுமை காணப்படும். அதுதான் காலியாகிவிட்ட பணப்பை. திருமண நாளன்று தாமே பல்வேறு சமயக் குழுக்களுக்கு மத்தியில் பல்வேறு விதமான சமயச் சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. மங்கள நேரம் குறிக்கப்பட்டால், மணமகள் சில வேளைகளில் அதிகாலை மூன்று மணியில் இருந்தே ஆடை அணியத் தயாராகத் தொடங்கி விடுகின்றார். அழகுபடுத்தல் நிபுணர்களின் வேலை முடிந்ததும், புகைப்படக் கலைஞர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கி விடுவர்.
புகைப்படங்கள் சிறப்பான முறையில் அமைய வேண்டும் என்பதற்காக மணப்பெண்ணும் அவரது பரிவாரங்களும் மணமகனும் அவரது பரிவாரங்களும் பல்வேறு கோணங்களில் நிறுத்தப்படுகின்றார்கள். வைபவம் முழுவதுமாகப் படம் பிடிக்கப்படுகின்றது. சமயவைபவங்களும் உத்தியோகபூர்வ வைபவமும் முழுவதுமே படம் பிடிக்கப்படுகின்றது. சமய வைபவங்களும், உத்தியோகபூர்வ வைபவமும் முடிவடைந்ததன் பின்னர், வரவேற்பு நிகழ்ச்சி ஆரம்பிக்கின்றது. தாள வாத்தியங்கள் முழங்க, கேக் வெட்டப்படும், கேக் பரிமாறப்படும், மதுபானங்கள் பரிமாறப்படும். களிப்பினைக் குறித்து மதுபானம் அருந்த அழைப்பு விடுக்கப்படும். நடனமாடத் தொடங்கி ஈற்றில் இரவு விருந்துபசாரம் நடக்கும். வைபவம் நடனத்துடன் முடிவடைந்ததும் தம்பதிகள் வரவேற்பு மண்டபத்திற்கு வெளியே, அலங்காரக் குழை வண்ணத் துணுக்குகள் வீசி அழைத்து வரப்படுகின்றனர். அவர்களுக்கு அங்கே வாழ்த்துக்கள் கூறப்படுகின்றன.
திருமண வைபவத்தைத் தொடர்ந்து வருகின்ற மாதங்களில் தான், தம்பதியினர் தமது திருமண வைபவ ஏற்பாடுகளின் தீவிர ஈடுபாட்டு ஆர்வத்திலிருந்து விடுபட்டு தம் வாழ்வினைப் பற்றிச் சிந்திப்பார்கள் என ஒருவர் எதிர்பார்க்கலாம். திருமணத்திற்கான ஏற்பாடுகளில் செலவிடப்பட்ட ஆர்வமும் சக்தியும் உறவினை வளர்ப்பதிலும் செலவிடப்படும் எனவும் ஒருவர் எதிர்பார்க்கலாம்.
மிஹிரி பர்டிநான்டோ
மணப்பெண் அவளின் கற்பின் சின்னமாக வெள்ளை ஆடை அணிந்திருக்கின்றாளா அல்லது அவளின் கருவளத்தின் அடையாளமாக சிவப்பு ஆடை அணிந்திருக்கிறாளா என்பது நவீன திருமணங்களில் ஒரு பொருட்டாகக் கருதப்படுவதில்லை.அவை வெறும் சமுதாய ஒன்றுகூடல்களே. திருமணம் என்பது தாமே இரண்டு தனி நபர்கள் அவர்கள் பிறந்த குடும்பங்களில் இருந்து விலகி ஒன்றாக வருவதாகும். திருமணம் என்பது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவும் பிணைப்புமாகும். இதுவே பல குடும்பங்களினதும் வரைவிலக்கணத்தில் பிரதான பாத்திரத்தினை வகிக்கின்றது.
திருமணமானது இரு மனிதர்களுக் கிடையிலான தனிப்பட்ட உறவாக இருப்பதுடன் அது சமூகத்தின் மிகவும் முக்கியமான மற்றும் அடிப்படையான நிறுவனங்களில் ஒன்றாகவும் இருக்கின்றது. எவ்வாறாயினும், இலங்கையில் மிகவும் பிரசித்தமான நடைமுறை என்ற ரீதியில் திருமணம் தாமே, தமக்கு இடையில் வாக்குறுதி எடுத்துக் கௌளும் இரு மனிதர்கள் மீதான முக்கியத்துவத்தினைத் தாண்டி மலர் அலங்காரம், திருமண மண்டபங்கள் மற்றும் ஒப்பனைக் கலைஞர்கள் என்பவற்றின் மீது படிந்து விடுகின்றது.
கிறிஸ்தவத் திருமணங்களிலே, திருமண பந்தத்தில் நுழைபவர்கள் பின்வருமாறு வாக்குறுதி எடுத்துக் கொள்வர்: “இன்பத்திலும், துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் வாழ்வின் முடிவு வரை ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாய் இருப்போம்! திருமண உறவின் முக்கியத்துவத்தினைப் புரிந்து கொண்ட கோயில், ஒரு நிறுவனம் என்ற ரீதியில், கிறிஸ்தவத் திருமணங்களுக்கான ஒரு முன்தேவையாக, திருமணத்திற்கு முன்பான வகுப்புகளை நடத்துகின்றது. எவ்வாறாயினும், இதன் முக்கியத்துவமானது இன்று எழுந்துள்ள கவர்ச்சிகரமான திருமண ஏற்பாடுகளினால் பெருமளவிற்கு மறைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் திருமணம் என்பது பெருமளவிற்கு சீதனம், மணப் பெண்ணிற்கான கிரயம், மற்றும் ஒருவரின் அந்தஸ்தினை உறுதிப் படுத்தல் என்பவற்றின் மீதான ஒரு ஒப்பந்தத்தினையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. திருமணம் என்பது பல சமுதாயங்களினாலும் சமூகத்தின் மேல் மட்டத்தினை நோக்கிய நகர்விற்கான ஒரு வழியாக, அல்லது இருக்கின்ற பிணைப்புக்களை வலுப்படுத்துவதற்கான ஒரு வழியாகவே நோக்கப்படுகின்றது. பொருத்தமான பிள்ளைகளை உடைய பெற்றோர் தமது பிள்ளைகளுக்குச் சிறந்த துணைகளைத் தேடுவதற்காக வலையமைப்புக்களை அமைத்துக் கொள்கின்றனர்.
ஒரு சமுதாயத்திலே கல்யாணத் தரகர் என்பவர் மிகவும் முனைப்பான பாத்திரத்தினை வகிக்கும் ஒருவராவார். அவரே இலங்கையில் திருமணங்களை நடத்தி வைக்கும் ஏற்பாடுகளைச் செய்வதில் முயற்சி எடுப்பவராக இருக்கின்றார். மோதிரம் மாற்றுவது, தம்பதிகளின் ஆடைகளைச் சேர்த்துக் கட்டி விடுவது, தாலி கட்டுவது, திலகமிடுவது அல்லது தம்பதிகளின் விரல்களைப் பிணைத்து விடுவது போன்றவை ஒன்று சேரலைக் குறிப்பதாகவே இருக்கின்றன. திருமண வைபவத்தின் முக்கியத்துவம் காலத்துடன் சேர்ந்து மாறிவிட்டது. திருமணம் என்பதன் முக்கியத்துவம் அதனை ஒட்டி நடக்கும் சடங்குகளால் மழுங்கடிக்கப்பட்டுள்ளது. 1847 ம் ஆண்டின் திருமணச் சட்டவாக்கத்திற்கு முன்பு, இலங்கையிலுள்ள கிராமப் புறங்களில், பாரம்பரியத், திருமணங் களுக்கு, இவ்வாறான வைபவங்களோ அல்லது இணைவின் சட்டபூர்வமான பதிவுகளோ தேவைப்படுவனவாக இருக்கவில்லை. இன்றோ இவை எல்லாம் பரிபூரணமாக நிகழ்த்தப்படுகின்ற திருமணத்திற்கே முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது.
அவ்வாறாயின் நடக்கும் பரிபூரணமான சம்பிரதாயங்கள் யாவை?
நான் இரண்டு காரணிகளின் மீது கவனம் குவிக்க விரும்புகின்றேன்: வைபவத்திற்கு முன்னர் நடக்கும் சம்பிரதாயங்களும் ஏற்பாடுகளும், வைபவமும். என்னுடைய பதிவுகள், நான் கலந்து கொண்ட, அதில் பகுதியாயிருந்த கேள்விப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும். இச்சம்பிரதாயங்களின் ஏற்பாடுகள் பல செயற்பாடுகளின் ஆரவாரங்களினால் நிறைந்திருக்கின்றன. ஆடை, அணி கலன், திருமண மண்டபம் போன்றவற்றிற்கான தெரிவுகள் எல்லையற்றவையாக இருக்கின்றன. மணவாளன் மற்றும் மணப்பெண் பரிவாரம் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப் படுகின்றது. மணப் பெண்ணின் தோழியர் மணப் பெண்ணின் உயரம் மற்றும் நிறம் என்பவற்றிற்கு பொருத்தமானவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகையில் மணமகனின் தோழர்களும் அவ்வாறே மணமகனின் உயரம் மற்றும் நிறம் என்பவற்றிற்கு பொருந்துபவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சம்பிரதாயங்களை கச்சிதமாகவும், கவர்ச்சிகரமாகவும் நடத்துவதே முக்கியம் என்கின்ற காரணத்தினாலும், மணப்பெண்ணின் தோழியரையும் மணவாளனின் தோழர்களையும் தெரிவு செய்வது தோற்றத்தினை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதாலும் கடந்த காலங்களைப் போல் உறவுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது அருகிவிட்டது. வகை வகையாக இனிப்புப் பதார்த்தங்கள் வைபவத்திற்கெனத் தயாரிக்கப் படுகின்றன. பாரம்பரிய உணவு வகைகளான முறுக்குகள், பணியாரங்கள் மற்றும் பாற்சோறு போன்றவற்றின் இடத்தை நவீன திருமணங்களில் திருமண கேக்குகளும், பாதாம் பருப்புகளும், சொக்லேற்றுகளும் எடுத்துக் கொண்டு விட்டன.
திருமணத்திற்கு முன் நடக்கும் சம்பிரதாயங்களை ஏற்பாடு செய்ய திருமண ஏற்பாட்டாளர் நியமிக்கப்படுகின்றார். அவரே இச்சம்பிரதாயங்களுக்கான ஓர் அடிப்படையை உருவாக்குகின்றார். இனிப்புப் பண்டங்களை எவ்வாறு அலங்காரத் தாளினால் சுற்றுவது என்பது கூட இந்த அடிப்படையின் பிரகாரமே தீர்மானிக்கப்படுகின்றது. ஒப்பனைகள், சிகை அலங்காரம் மற்றும் ஆடைத் தெரிவு போன்றவை பற்றிய ஆலோசனைகளைப் பெறுவதற்கு அழகுபடுத்தல் நிபுணர்களின் ஆலோசனையே பெறப்படுகின்றது. வைபவத்திற்கு பல மாதங்களிற்கு முன்பே முகஅழகுச் சிகிச்சையும் ஏனைய அழகுச் சிகிச்சைகளும் திட்டமிடப்படுகின்றன. நகைகளைத் தயாரித்து வழங்குவதற்கான கட்டளைகள் வழங்கப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் பிரத்தியேகமாக மணமகளுக்கென்றே நகைகளை வடிவமைக்கவும் கட்டளைகள் வழங்கப்படுகின்றன.
வைபவத்திற்கான மண்டபம் ஏற்கனவே ஒதுக்கப்படுகின்றது. பரிமாறப்பட வேண்டிய உணவு வகைகள் தெரிவு செய்யப்படுகின்றன. தெரிவு செய்யப்பட முன்பு அவற்றின் மாதிரிகள் ருசி பார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்படுகின்றன. திருமண மோதிரங்களும் பல வகைகளிலும் பல உலோகங்களிலும் மாணிக்கக்கற்கள் பதிக்கப்பட்ட வையாகத் தெரிவு செய்யப்படுகின்றன. இவற்றினையெல்லாம் தொடர்ந்து, திருமண நாள் நெருங்க தம்பதியினர் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் ஓர் ஒற்றுமை காணப்படும். அதுதான் காலியாகிவிட்ட பணப்பை. திருமண நாளன்று தாமே பல்வேறு சமயக் குழுக்களுக்கு மத்தியில் பல்வேறு விதமான சமயச் சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. மங்கள நேரம் குறிக்கப்பட்டால், மணமகள் சில வேளைகளில் அதிகாலை மூன்று மணியில் இருந்தே ஆடை அணியத் தயாராகத் தொடங்கி விடுகின்றார். அழகுபடுத்தல் நிபுணர்களின் வேலை முடிந்ததும், புகைப்படக் கலைஞர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கி விடுவர்.
புகைப்படங்கள் சிறப்பான முறையில் அமைய வேண்டும் என்பதற்காக மணப்பெண்ணும் அவரது பரிவாரங்களும் மணமகனும் அவரது பரிவாரங்களும் பல்வேறு கோணங்களில் நிறுத்தப்படுகின்றார்கள். வைபவம் முழுவதுமாகப் படம் பிடிக்கப்படுகின்றது. சமயவைபவங்களும் உத்தியோகபூர்வ வைபவமும் முழுவதுமே படம் பிடிக்கப்படுகின்றது. சமய வைபவங்களும், உத்தியோகபூர்வ வைபவமும் முடிவடைந்ததன் பின்னர், வரவேற்பு நிகழ்ச்சி ஆரம்பிக்கின்றது. தாள வாத்தியங்கள் முழங்க, கேக் வெட்டப்படும், கேக் பரிமாறப்படும், மதுபானங்கள் பரிமாறப்படும். களிப்பினைக் குறித்து மதுபானம் அருந்த அழைப்பு விடுக்கப்படும். நடனமாடத் தொடங்கி ஈற்றில் இரவு விருந்துபசாரம் நடக்கும். வைபவம் நடனத்துடன் முடிவடைந்ததும் தம்பதிகள் வரவேற்பு மண்டபத்திற்கு வெளியே, அலங்காரக் குழை வண்ணத் துணுக்குகள் வீசி அழைத்து வரப்படுகின்றனர். அவர்களுக்கு அங்கே வாழ்த்துக்கள் கூறப்படுகின்றன.
திருமண வைபவத்தைத் தொடர்ந்து வருகின்ற மாதங்களில் தான், தம்பதியினர் தமது திருமண வைபவ ஏற்பாடுகளின் தீவிர ஈடுபாட்டு ஆர்வத்திலிருந்து விடுபட்டு தம் வாழ்வினைப் பற்றிச் சிந்திப்பார்கள் என ஒருவர் எதிர்பார்க்கலாம். திருமணத்திற்கான ஏற்பாடுகளில் செலவிடப்பட்ட ஆர்வமும் சக்தியும் உறவினை வளர்ப்பதிலும் செலவிடப்படும் எனவும் ஒருவர் எதிர்பார்க்கலாம்.
மிஹிரி பர்டிநான்டோ

பதிவுகள்: 790448 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81954 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








