புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_m10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
11 Posts - 50%
heezulia
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_m10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_m10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
53 Posts - 60%
heezulia
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_m10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_m10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_m10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Aug 10, 2010 2:29 pm

First topic message reminder :


ரசித்த கவிதை (எழுதியது யாரோ)

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!

ٌ சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
ٌ என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!

ٌ சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
ٌ பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!

ٌ அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...

பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
ٌ கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது
குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !


ٌ மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகை சொல்லி...
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
ٌ இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்... என் துபாய் கணவா!
ٌ கணவா... - எல்லாமே கனவா.......?

கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
ٌ 12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....

4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... .....

2 வருடமொருமுறை கணவன் ...

நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
ٌ இது வரமா ..? சாபமா..?

அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?
ٌ கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?

நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
ٌ விட்டுகொடுத்து.... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவை புரிந்து...
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...

வாரவிடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி...
ٌ இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்

ٌ இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!

ٌ தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?

ٌ விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தை தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?

ٌ நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?

பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?
ٌ பாலையில் நீ வறண்டது என் வாழ்வு!

வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!


உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
ٌ விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!

விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா! (இல்லையேல் விவாக ரத்து செய்துவிட்டுப்போ )

நன்றி: எனது மின்னஞ்சலுக்கு






raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Sun Apr 07, 2013 10:45 pm

சூப்பருங்க அய்யோ, நான் இல்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 07, 2013 11:07 pm

ராஜ சேகர் ஓடாதீங்க துபாயப் பத்தி தான் சொன்னாங்க மால்டீவ்சை இல்ல புன்னகை




தமிழ் ப்ரியன்
தமிழ் ப்ரியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 17/08/2012

Postதமிழ் ப்ரியன் Mon Apr 08, 2013 7:44 pm

தகவலுக்கு நன்றி.............

பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Thu Apr 11, 2013 4:18 pm

" நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய் "

என்னவொரு ஆழமான .வரி ... ! ! !

நெஞ்சுக்குழி ஒரு நொடி அடைத்து வெளியேறியது கண் கலங்களில் !

திரும்பி வந்து விடுங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களே ... திரும்பி வந்து விடுங்கள்.

இதுபோல் எத்தனை எத்தனை மனைவியர் தத்தம் கணவன்மார்களுக்காக ஏங்கித் தவிக்கின்றனர் ...

எத்தனை எத்தனை பெற்றோர் குழந்தைகள் உற்றார் உறவினர் தத்தம் உறவுகளுக்காக காத்துக் கிடக்கின்றனர்.

ஏன் நம் நாடே உங்களுக்காகத்தானே காத்துக் கிடக்கிறது.

வெளிநாடு சென்று ராஜ வாழ்க்கையா வாழ்கிறோம் ... ? நம் நாட்டில் நம்மை அடிமையாய்

வைத்தவர்கள் இன்று இங்கு முடியவில்லை என்று தங்கள் நாட்டிற்கு அழைத்து அங்கு

அடிமைப்படுத்துகின்றனர் .

" என்ன இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையேந்த வேண்டும் வெளிநாட்டில் "

என்றெல்லாம் சொல்லத் தோன்றினாலும் இன்றைய காலக்கட்டத்தில் பணம் என்கின்ற

புதைகுழியில் மீள முடியாமல் சிக்கிப் புதை கொள்வதை எவராலும் தடுத்த நிறுத்த முடியவில்லையே

என்ற ஆதங்கம் மனதில் ஓங்கார ஒளியாக மௌனித்துக் கொண்டுதான் இருக்கிறது.

ஆனால், வெளிநாடு வாழ் இந்தியர் அனைவரும் திரும்பி விட்டால் ... அவ்வளவுதான் எந்தவொரு நாடும் தாங்க மற்றும் தடுக்க முடியாது நம் விஸ்வரூபத்தை என்பது ஆணித்தரம்.

ஆனால் அதற்காக நாம் நம் இன்றைய சந்ததியினை சிறிது வருத்திக்கொண்டு வாழ பழகிக் கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்தால் ...!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அடுத்த சில காலங்களில் இந்தியா அனைத்து நாட்டிற்கும் முன் மாதிரியாக ஏன் முதல் மாதிரியாக விளங்கும்.

நடக்காது என்று நினைப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக இதோ நம் கண்முன்னே வளர்ந்து நிற்கிறது ஜப்பான் சிங்கப்பூர் போன்ற நாடுகள்.

நடக்கும் ... ஆனால் நாம் நம் நாட்டில் கஷ்டப்பட விரும்புவதில்லை ... வெளிநாட்டில்
என்றால் பரவாயில்லை ...

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் சோகம்



அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக