|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» மர்ம மரம்by யினியவன் Today at 12:56 am
» அம்மாடியோவ்...........எவ்ளோ பெரிய வாழை
by யினியவன் Today at 12:52 am
» வணக்கம்!
by யினியவன் Today at 12:46 am
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by யினியவன் Today at 12:43 am
» நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு!
by சாமி Today at 12:32 am
» சிரிக்காமல் விடமாட்டேன் - நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு
by சார்லஸ் mc Today at 12:15 am
» பாிசுத்த வேதாகமம் - ஓா் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 12:04 am
» திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:02 am
» தைராய்டு
by Aathira Yesterday at 11:27 pm
» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by Aathira Yesterday at 11:25 pm
» ஒரு அரிய தமிழ் கல்வெட்டு - சீனாவில் இருந்து !
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:22 pm
» நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:18 pm
» சதாம் உசேனை விட மோசமாக நடந்த சங்கர் பிதரிக்கு டி.ஜி.பி., பதவி வழங்கியது சரியல்ல: ஐகோர்ட்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:15 pm
» தலையாலங்கானத்துப் பெரும் போர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:03 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:51 pm
» தென்னாடுடைய சிவனே போற்றி!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:46 pm
» அமெரிக்காவில் சலவை இயந்திரத்தில் குழந்தையை வைத்து வேடிக்கை பார்த்த தம்பதியர்,
by ரா.ரா3275 Yesterday at 10:18 pm
» மும்பையில் போதை விருந்து: ஐ.பி.எல். வீரர்கள் ராகுல்சர்மா, பர்னல் கைது
by ரா.ரா3275 Yesterday at 10:12 pm
» Spain நாட்டு Gibraltar's Airport அரிய புகைப்படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:11 pm
» ஹைக்கூ என்னும் ஆயுதம்
by ரா.ரா3275 Yesterday at 10:10 pm
» அரிய புகைப்படக் காட்சிகள்
by ரா.ரா3275 Yesterday at 10:08 pm
» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
by ரா.ரா3275 Yesterday at 10:05 pm
» இரண்டாம் உலகப்போர் பீரங்கி
by ரா.ரா3275 Yesterday at 9:58 pm
» பிரம்மிப்பூட்டும் 700 வருட பழமையான குகை வீடுகள்
by முரளிராஜா Yesterday at 9:56 pm
» கல்லீரல் பாதிப்பு தீர சிறந்த மருத்துவமணை
by baskars11 Yesterday at 9:55 pm
» காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி?
by ரா.ரா3275 Yesterday at 9:49 pm
» வாழ்க தமிழ்
by ரா.ரா3275 Yesterday at 9:47 pm
» யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்?
by ரா.ரா3275 Yesterday at 9:46 pm
» என்னை தின்னும் உலகம்....
by ரா.ரா3275 Yesterday at 9:42 pm
» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Yesterday at 9:32 pm
» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Yesterday at 9:25 pm
» Pearl துறைமுகம் அழிக்கப் பட்ட காட்சிகள் ( 7 DEC 1941 )
by முரளிராஜா Yesterday at 8:52 pm
» மோட்சம் கொடு!
by பார்த்திபன் Yesterday at 8:43 pm
» பிரபலமானவர்களின் இளமைக்காலம் 2
by கேசவன் Yesterday at 8:35 pm
» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by balakarthik Yesterday at 8:25 pm
» சில புகைப்படங்கள்
by கேசவன் Yesterday at 8:05 pm
» மீண்டும் 60 அணு உலைகள்...
by SajeevJino Yesterday at 7:55 pm
» அறிந்ததும் அறியாததும்!!!
by கேசவன் Yesterday at 7:53 pm
» 1969 இல் ஆம்ஸ்ரோங் நிலவில் கால்பதித்த வீடியோ....
by கேசவன் Yesterday at 7:50 pm
» Phone WLAN Connection உதவி
by SajeevJino Yesterday at 7:47 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
தூக்கம் விற்ற காசுகள்
Page 1 of 1 • Share •
தூக்கம் விற்ற காசுகள்
இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்!
விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது!
நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்...
வாசனைகள் இருக்கலாம்!
ஆனால் வாழ்க்கையில்...?
தூக்கம் விற்ற காசில்தான்...
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...
இளமை கழிக்கின்றோம்!
எங்களின் நிலாக்கால
நினைவுகளையெல்லாம்...
ஒரு விமானப்பயணத்தூனூடே
விற்றுவிட்டு கனவுகள்
புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம்!
மரஉச்சியில் நின்று
ஒரு தேன் கூட்டை கலைப்பவன் போல!
வாரவிடுமுறையில்தான்..
பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!
அம்மாவின் ஸ்பரிசம்
தொட்டு எழுந்த நாட்கள்
கடந்து விட்டன!
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!
பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள் தினமும் ஒரு இரவு
நேர கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது!
நண்பர்களோடு ஆற்றில்
விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம்
நோன்புநேரத்துக் கஞ்சி
கண்ணாமூச்சி - பம்பரம் - கிட்டிபுல் - கோலி - பட்டம் என
சீசன் விளையாட்டுக்கள்!
ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...
விளையாடி மகிழ்ந்த உள்ளுர்
உலககோப்பை கிரிக்கெட்!
இவைகளை
நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...
விசாவும் பாஸ்போட்டும் வந்து...
விழிகளை நனைத்து விடுகிறது.!
வீதிகளில் ஒன்றாய்
வளர்ந்த நண்பர்களின் திருமணத்தில்!
மாப்பிள்ளை அலங்காரம்!
கூடிநின்று கிண்டலடித்தல்!
கல்யாணநேரத்து பரபரப்பு!
பழையசடங்குகள்
மறுத்து போராட்டம்!
பெண்வீட்டார் மதிக்கவில்லை
எனகூறி வறட்டு பிடிவாதங்கள்!
சாப்பாடு பரிமாறும் நேரம்...
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!
மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!
இவையெதுவுமே கிடைக்காமல்
"கண்டிப்பாய் வரவேண்டும்"
என்ற சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
சங்கடத்தோடு
ஒரு தொலைபேசி வாழ்த்தூனூடே...
தொலைந்துவிடுகிறது
எங்களின் நீ..ண்ட நட்பு!
எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள் அயல்தேசத்து ஏழைகள்தான்!
காற்றிலும் கடிதத்திலும்
வருகின்ற சொந்தங்களின்...
நண்பர்களின் மரணச்செய்திக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!
ஆம்
இதயம் தாண்டி
பழகியவர்களெல்லாம்...
ஒரு கடலைத்தாண்டிய
கண்ணீரிலையே...
கரைந்துவிடுகிறார்கள்;!
"இறுதிநாள்" நம்பிக்கையில்தான்...
இதயம் சமாதானப்படுகிறது!
இருப்பையும் இழப்பையும்
கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்...
பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு.....
முதல் பார்வை... முதல் கழிவு...
இவற்றின் பாக்கியத்தை
தினாரும் - திர்ஹமும்
தந்துவிடுமா?
கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!
கிள்ளாமலையே
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ?
ஒவ்வொருமுறை ஊருக்கு
வரும்பொழுதும்...
பெற்ற குழந்தையின்
வித்தியாச பார்வை...
நெருங்கியவர்களின் திடீர்மறைவு
இப்படி புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு...
மீண்டும்
அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்.....
தங்கையின் திருமணமும்...
தந்தையின் கடனும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!
சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா...
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்!
விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது!
நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்...
வாசனைகள் இருக்கலாம்!
ஆனால் வாழ்க்கையில்...?
தூக்கம் விற்ற காசில்தான்...
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...
இளமை கழிக்கின்றோம்!
எங்களின் நிலாக்கால
நினைவுகளையெல்லாம்...
ஒரு விமானப்பயணத்தூனூடே
விற்றுவிட்டு கனவுகள்
புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம்!
மரஉச்சியில் நின்று
ஒரு தேன் கூட்டை கலைப்பவன் போல!
வாரவிடுமுறையில்தான்..
பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!
அம்மாவின் ஸ்பரிசம்
தொட்டு எழுந்த நாட்கள்
கடந்து விட்டன!
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!
பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள் தினமும் ஒரு இரவு
நேர கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது!
நண்பர்களோடு ஆற்றில்
விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம்
நோன்புநேரத்துக் கஞ்சி
கண்ணாமூச்சி - பம்பரம் - கிட்டிபுல் - கோலி - பட்டம் என
சீசன் விளையாட்டுக்கள்!
ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...
விளையாடி மகிழ்ந்த உள்ளுர்
உலககோப்பை கிரிக்கெட்!
இவைகளை
நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...
விசாவும் பாஸ்போட்டும் வந்து...
விழிகளை நனைத்து விடுகிறது.!
வீதிகளில் ஒன்றாய்
வளர்ந்த நண்பர்களின் திருமணத்தில்!
மாப்பிள்ளை அலங்காரம்!
கூடிநின்று கிண்டலடித்தல்!
கல்யாணநேரத்து பரபரப்பு!
பழையசடங்குகள்
மறுத்து போராட்டம்!
பெண்வீட்டார் மதிக்கவில்லை
எனகூறி வறட்டு பிடிவாதங்கள்!
சாப்பாடு பரிமாறும் நேரம்...
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!
மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!
இவையெதுவுமே கிடைக்காமல்
"கண்டிப்பாய் வரவேண்டும்"
என்ற சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
சங்கடத்தோடு
ஒரு தொலைபேசி வாழ்த்தூனூடே...
தொலைந்துவிடுகிறது
எங்களின் நீ..ண்ட நட்பு!
எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள் அயல்தேசத்து ஏழைகள்தான்!
காற்றிலும் கடிதத்திலும்
வருகின்ற சொந்தங்களின்...
நண்பர்களின் மரணச்செய்திக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!
ஆம்
இதயம் தாண்டி
பழகியவர்களெல்லாம்...
ஒரு கடலைத்தாண்டிய
கண்ணீரிலையே...
கரைந்துவிடுகிறார்கள்;!
"இறுதிநாள்" நம்பிக்கையில்தான்...
இதயம் சமாதானப்படுகிறது!
இருப்பையும் இழப்பையும்
கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்...
பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு.....
முதல் பார்வை... முதல் கழிவு...
இவற்றின் பாக்கியத்தை
தினாரும் - திர்ஹமும்
தந்துவிடுமா?
கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!
கிள்ளாமலையே
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ?
ஒவ்வொருமுறை ஊருக்கு
வரும்பொழுதும்...
பெற்ற குழந்தையின்
வித்தியாச பார்வை...
நெருங்கியவர்களின் திடீர்மறைவு
இப்படி புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு...
மீண்டும்
அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்.....
தங்கையின் திருமணமும்...
தந்தையின் கடனும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!
சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா...
gillipandian- இளையநிலா

- பதிவுகள்: 364
வசிப்பிடம்: kumbakonam
சேர்ந்தது: 10/07/2010
மதிப்பீடு: 8
Re: தூக்கம் விற்ற காசுகள்
அய்யா ,கில்லி வந்துடுச்சு ,,என்னமா கண்ணு சௌக்கியமா ?

ரபீக்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556
Re: தூக்கம் விற்ற காசுகள்
நல்ல சௌக்கியம் அண்ணா
gillipandian- இளையநிலா

- பதிவுகள்: 364
வசிப்பிடம்: kumbakonam
சேர்ந்தது: 10/07/2010
மதிப்பீடு: 8
Re: தூக்கம் விற்ற காசுகள்
என் அண்ணனுக்கு இந்த பாசமிகு தம்பியின் ரமலான் நல்வாழ்த்துக்கள்
இந்த நாளை போல எல்லா நாளும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்
இந்த நாளை போல எல்லா நாளும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்
gillipandian- இளையநிலா

- பதிவுகள்: 364
வசிப்பிடம்: kumbakonam
சேர்ந்தது: 10/07/2010
மதிப்பீடு: 8
Re: தூக்கம் விற்ற காசுகள்
gillipandian wrote:என் அண்ணனுக்கு இந்த பாசமிகு தம்பியின் ரமலான் நல்வாழ்த்துக்கள்
இந்த நாளை போல எல்லா நாளும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்

ரபீக்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556
Re: தூக்கம் விற்ற காசுகள்
"தூக்கம் விற்ற காசில்தான்...
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...
இளமை கழிக்கின்றோம்!"
உண்மையான வரிகள்....
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...
இளமை கழிக்கின்றோம்!"
உண்மையான வரிகள்....

புவனா- வி.ஐ.பி

- பதிவுகள்: 3318
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 14/08/2010
மதிப்பீடு: 69
Re: தூக்கம் விற்ற காசுகள்
bhuvi wrote:"தூக்கம் விற்ற காசில்தான்...
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...
இளமை கழிக்கின்றோம்!"
உண்மையான வரிகள்....



உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: தூக்கம் விற்ற காசுகள்
அருமை வரிகள்

கார்த்திக்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








