புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_m10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10 
74 Posts - 44%
heezulia
இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_m10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10 
71 Posts - 43%
prajai
இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_m10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_m10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10 
6 Posts - 4%
Jenila
இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_m10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10 
2 Posts - 1%
jairam
இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_m10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_m10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_m10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10 
2 Posts - 1%
kargan86
இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_m10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_m10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_m10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_m10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_m10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10 
10 Posts - 5%
prajai
இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_m10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10 
8 Posts - 4%
Jenila
இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_m10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_m10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10 
3 Posts - 1%
jairam
இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_m10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_m10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_m10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_m10இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 07, 2010 7:30 pm

இறைவனை பற்றிய சில கேள்விகள் பலநாட்களாக என்னுள் இருந்து வந்தது,இறைவனை பாடுபொருளாக வைத்து எழுத எனக்கு தகுதியில்லை என்பதை நன்கு அறிவேன். அச்சமயம், எனது ஆசான், வள்ளுவன் என் நினைவுக்கு வந்தான். நாம் தினம் தினம் சந்திக்கும் பிரச்சனைகள், கேள்விகள், சந்தேகங்கள், அனைத்திற்கும் வள்ளுவனின் குறளில் தீர்வு உள்ளது. அப்படியென்றால் இறைவனை பற்றிய எனது கேள்விக்கும் வள்ளுவனிடம் பதில் இல்லாமலா போய்விட போகிறது. இறைவனை பற்றிய எனது ஏழு (ஒவ்வொரு குறளின் நீளம் ஏழு வார்த்தைகள்தானே..) கேள்விகளுக்கு வள்ளுவன் கூறும் பதிலை காணலாம்.


குறிப்பு:- முதலில் எனது கேள்வி இருக்கும். அதன் பின்னர் பதிலாக வள்ளுவனின் குறள்/குறளின் சில வார்த்தைகள் இருக்கும். வள்ளுவனின் அந்த பதிலை நான் எவ்வாறு புரிந்து கொண்டேன் என்பதை, அதன்பின்னர் விளக்கி இருக்கிறேன். எனது கேள்விக்கு ஏற்றாற் போல குறளின் வரிசையை மட்டும் மாற்றி இருக்கிறேன். பொருளை மாற்றவில்லை.

முதல் கேள்வி : இறைவன் இருக்கிறானா??

பதில் : ஆதி பகவன் முதற்றே உலகு.

விளக்கம்: 'உலகு' என்பது ஆகுபெயர். இந்த பூமியை மட்டுமில்லாமல், பூமியில் வாழும் உயிர்களையும் சேர்த்து உலகு என்று குறிப்பிடுகிறார். ஆக இப்புவியில் முதலில் தோன்றிய உயிருக்கும், கடைசியில் தோன்றும் உயிருக்கும் முதன்மையானவன் அவன். அப்படிப்பட்ட முதன்மையானவன் இல்லாமல் இருப்பானா?? நம்மை இந்த உலகிற்கு கொண்டு வந்த தாய்-தந்தையரும் இறைவனின் அம்சமாக கருதப்படுவதற்கும் காரணம் இதுவே... தாய் மூலம்தான் நாம் இந்த உலகிற்கு பிறந்தோம் என்று நம்புவோமேயானால், இறைவன் இருப்பதையும் நம்பித்தான் தீர வேண்டும்.

இரண்டாம் கேள்வி: 'எனது தாயை காண்கிறேன். அவளுடன் பேசுகிறேன். அவள் பேச்சை கேட்கிறேன்.' என்பதனால் அவள் இருப்பை நான் நம்புகிறேன். பார்க்க முடியாத, கேட்க முடியாத, இறைவனை இருப்பதாய் நான் எப்படி நம்ப முடியும்?

பதில் : தனக்குவமை இல்லாதான், எண்குணத்தான்.

விளக்கம்:- புரியாத ஒன்றை எளிதாய் புரிய வைக்க 'உவமை' கையாளப்படும். 'வெள்ளத்தனைய...', 'இனிய உளவாக...' போன்ற குறள்களில் உவமைகளை வெகுவாக, அழகாக கையாண்ட வள்ளுவனே இறைவனை ஒரு உவமைக்குள் அடக்க இயலவில்லை. ஐம்பொறிகளால் நாம் இறைவனை உணர முடியுமென்றால், வள்ளுவன் உவமையுடன் விளக்கி இருப்பான். ஆக மனதினால் மட்டுமே இறைவனை நீ உணர முடியும் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

பிறவிக்குருடர்கள் யானையை தொட்டுப்பார்த்து அவரவர் கற்பனைக்கு ஏற்றபடி உணர்ந்து கொள்வதுபோல், மனதினால் இறைவனின் எண்குணத்தை உணரலாம்.

மூன்றாவது கேள்வி: மனதினால் மட்டுமே உணர முடிகின்ற இறைவனின் இயல்புகள் என்னென்ன?? (அல்லது) நான் இறைவனாக முடியுமா??

பதில் : வேண்டுதல் வேண்டாமை இலான், பொறிவாயில் ஐந்தவித்தான், அறவாழி.

விளக்கம் : இறைவன் விருப்பு-வெறுப்பு அற்றவன். இவ்வுலக பொருள்களின்,உயிர்களின் மேல் விருப்பு-வெறுப்பு இருக்கும்பட்சத்தில் மனிதனுக்கு மன அமைதி இல்லாமல் போய்விடுகிறது. ஆக இந்த இரண்டும் இல்லாமல் சமநிலையில் இருக்கும்போது நாம் இறைவனாவோம். உதாரணம்: ரமணர். மனோநாசம் செய்து, விருப்பு-வெறுப்பு அற்றவர்.
இறைவன் ஐம்புல ஆசைகளை ஒழித்தவன். உலக ஆசைகள் எல்லாம் துறந்தால், நாமும் இறைவனாய் போற்றப்படுவோம். உதாரணம்: புத்தர், பட்டினத்தார்.
இறைவன் அறக்கடல். 'அறன் வலியுறுத்தல்' அதிகாரத்தில் அறத்தை பற்றி இன்னும் நிறைய சொல்லியிருக்கிறார். வள்ளுவன் வலியுறுத்தும் அறங்களை,நெறிகளை பின்பற்றினால், 'வானுறையும் தெய்வத்துள் வைக்கபடும்' என்று அவரே கூறியிருக்கிறார். உதாரணம்: பகவான் ராம கிருஷ்ணர், வள்ளலார்.

நான்காம் கேள்வி: அத்தகைய இயல்புடைய இறைவன் அவர் வேலையை பார்த்துக் கொண்டு இருக்கட்டும். நான் என் வேலையை பார்த்து கொண்டு இருக்கிறேன். எனக்கும் அவருக்கும் தொடர்பற்ற நிலையில் இருந்துவிட்டு போகிறோமே.. என்ன கெட்டு போச்சு??

பதில் : கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

விளக்கம் : என்னை அடித்து துவைத்த குறள் இது. இது வள்ளுவனின் இரண்டாவது குறள். முதல் குறளில் இறைவனை வணங்குகின்றார். அடுத்த குறளிலேயே நம் அனைவரையும் வணங்க சொல்கிறார். தனது குறளை படித்து அர்த்தம் புரிந்து கற்க முடியுமென்றால், அக்கல்வியின் பயனாக இறைவனை தொழுதே தீர வேண்டும் என ஆணித்தரமாக அடித்து சொல்கிறார்.

படிப்பது வேறு, கற்பது வேறு. படித்த,கேட்ட, மற்றவர் செய்து காட்டிய ஒன்றை நாம் செய்து பார்த்து அதை உணர்ந்து கொள்வதே கற்பது. அப்படி, நாம் உணர்ந்து கற்றுக்கொள்ள உறுதுணையாய் இருக்கும் இறைவனை தொழாமல் இருப்பது தவறு என்று இடித்துரைக்கிறார்.

ஐந்தாம் கேள்வி: இறைவனை தொழ வேண்டும் என்று சொல்கிறீர்கள். நான் தொழுவதால் எனக்கு என்ன பயன்?

பதில்: இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

விளக்கம்: இறைவனின் உண்மையான புகழை விரும்பி நினைக்கும் அன்பர்க்கு அறியாமையால் வரும் நல்வினை, தீவினை ஆகிய இரண்டும் அடைவதில்லை.

ஆறாம் கேள்வி: தொழ வேண்டிய அந்த இறைவனை நான் தொழாமல் போனால் என்னாகும் ? (அல்லது) இறைவனை தொழுவதால் ஏற்படும் பயன் எனக்கு ஒன்றும் தேவையில்லை. அப்படி தொழாமல் இருந்து விட்டு போகிறேனே... என்ன கெட்டு போச்சு??

பதில்: பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

விளக்கம்: பிறவி என்னும் பெருங்கடலில் நாம் அனைவரும் விழுந்து விட்டோம். அதான், பிறந்து விட்டோமே. கரை சேர வேண்டுமென்றால் இறைவனடியை தொழ வேண்டும். இல்லையென்றால் கரை சேர முடியாது.

ஏழாவது கேள்வி: ஒரு செயலை செய்யாவிட்டால் தீங்கு கண்டிப்பாக ஏற்படும். செய்தால் நன்மை ஏற்படும். அப்படிப்பட்ட செயலை செய்பவன் அறிவாளி, செய்யாதவன் கற்றறிந்த மூடன். இறைவனை தொழுவதும் அப்படிப்பட்ட செய்கையே ஆகும். நான் எப்படி இறைவனை தொழ வேண்டும்?? எந்த முறை சிறந்த முறை?

பதில் : மலர்மிசை ஏகினான்

விளக்கம் : அன்பரின் நெஞ்ச மலரில் வீற்றிருப்பவன் இறைவன். நமக்கு விருப்பபட்ட உருவத்தில் (விநாயகராய்,முருகனாய்,பெருமாளாய், அபிராமியாய்,இயேசுவாய்,அல்லாவாய், ராமனாய், கிருஷ்ணனாய், புத்தரை, அனுமானாய், ஈஷ்வரனாய்) இறைவனை அன்புடன் மனத்தினில் நினைத்தாலே, நமது இதய கமலத்தில் வந்து வீற்றிருப்பான். நமது வீட்டிற்கு வந்த ஒரு விருந்தினரை, குழந்தையை கனிவாய் கவனிப்பது போல், நமது இதய கமலத்தில் வந்து குடியேறிய இறைவனையும் விருப்பபடி உபசரிப்பதே மிகச்சிறந்த தொழுகையாகும்.

குறிப்பு :- இது முழுக்க முழுக்க எனக்கு தோன்றிய கேள்விகளும் , அதற்க்கு எனக்கு திருப்ப்தியளித்த குரல் பதில்களுமே தவறு இருப்பின், வள்ளுவனின் நேசர்கள் என்னை மன்னிக்கவும்.இதுபோல் உங்களுக்கு ஏதாவது கேள்வி இருந்தால் அதையும் இங்கே தெரிவிக்கலாம் தெரிந்தவர் அதற்கு பதிலளிக்கலாம்





ஈகரை தமிழ் களஞ்சியம் இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 25, 2010 11:12 am

இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  678642 மிக அருமையாக , இருக்கிறது பாலா .... இந்த பதிவை இத்தனை நாள் பார்க்காமல் விட்டதற்காக வருத்தபடுகிறேன் .......

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 25, 2010 11:17 am

அருமை பாலா.... உங்கள் வழிகாட்டுதலுக்கும் நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 15, 2010 7:50 pm

ராஜா wrote:இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  678642 மிக அருமையாக , இருக்கிறது பாலா .... இந்த பதிவை இத்தனை நாள் பார்க்காமல் விட்டதற்காக வருத்தபடுகிறேன் .......

நன்றி தலை



ஈகரை தமிழ் களஞ்சியம் இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 15, 2010 7:50 pm

பிளேடு பக்கிரி wrote:அருமை பாலா.... உங்கள் வழிகாட்டுதலுக்கும் நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி மாப்பு



ஈகரை தமிழ் களஞ்சியம் இறைவன்!! எனது தேடலும் வள்ளுவன் வழிகாட்டுதலும்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக