புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:57 am

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_m10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10 
17 Posts - 94%
Geethmuru
நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_m10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_m10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10 
144 Posts - 57%
heezulia
நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_m10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_m10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_m10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10 
9 Posts - 4%
prajai
நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_m10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_m10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_m10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_m10நீலவானில் நீந்த வேண்டும்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீலவானில் நீந்த வேண்டும்!


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Sep 17, 2010 2:56 am

நீலமேகமதில் ஆயிரம்தாரகை
நீந்திட எங்குமொளிப் பிழம்பு
காலவெளி விண்ணின் மாயகுழம்பினில்
காணும் சிவப்பொளி மஞ்சளுடன்
ஊதாக் கடும்நீலம் உள்ளதொரு அண்டம்
உள்ளே வெளிதாண்டி ஓடுகிறேன்
காது ஓம் என்னுமோர் ரீங்கார ஓசையில்
காற்றில்லா ஆழத்தில் நீந்துகிறேன்

சட்டென்று சத்தமோர் நட்சத்திரம் வெடித்
தெங்கும் ஒளிச் சீற்ற மூடுருவ
வட்டக்குழம்பிலே பற்பலவண்ணத்
துகள்கள் பரந்தென்னைச் சுற்றிவர
வெப்ப மெழுந்தென்னைச் சுட்டுவிடஒரு
நீலக்கரும்குழி தானுறிஞ்ச
குப்புற வீழ்ந்து சுழன்றுதொலைகின்றேன்
சட்டென்று கண்ணை விழித்துவிட்டேன்

காணும்பகற்கன வாலெழுந்து ஒரு
கட்டிலில் சாய்ந்து முகில்களினை
வானில் குரங்காக வண்ணத்துப் பூச்சியாய்
வட்ட முகமாய் வடிவெடுக்கும்
மீளப் பரந்து உருக்குலைந்துபஞ்சாய்
மெல்லிய மேகம் பறந்துசெல்லும்
கோலம் ரசித்துகிடந்தேன் அடஆங்கே
தேவதையொன் றெழில் வானில்வந்தாள்

அந்தோஅழகிய தேவதையே வெண்மை
ஆடைகள் பூண்ட எழிலரசி
எந்தன் மனதினில் கேள்வி யொன்றுஇந்த
மண்ணில் வந்து நானும் ஏன்பிறந்தேன்
எங்கேயிருந்து பிறந்து வந்தேன் மீண்டும்
எங்குசென்றே அமைதி கொள்வேன்
அங்கே யிருப்பது என்ன இந்தப்பெரும்
ஆழவிண்ணின் வெளிகண்டதென்ன

வானோ பிரபஞ்சமா யாக்கி விரித்ததில்
வண்ணக் குழம்புகள் வைத்தது யார்
ஏனோ இதுமர்மமென்று இருப்பதன்
காரணமென்ன அறிந்துளயோ
ஆவி துறந்ததும் அண்ட வெளியினில்
நாம்போகு பாதையோர் பால்வெளியோ
தாவிப் பறந்துவான் கல்லிற் படாமலே
தூரம் சென்றேநாம் உறங்குவமோ

சூரியன்கள் பலதாண்டி வெறுமையில்
காற்றுமில்லாப் பெரும் சூனியத்தில்
சீறிவரும் ஒளிச் சீற்றங்கள் மத்தியில்
செல்லும் இடம்வெகு தூரமாசொல்
நெல்லை விதைத்து கதிர்வளர்ப்போமது
முற்றியதும் அன்னம் உண்பதற்கு
கல்லை யுடைத் தில்லம் கட்டுகிறோம்குளிர்
காற்றும் விலங்கும் தவிர்ப்பதற்கு

ஆனசெய லெல்லாம்காரணத் தோடுதான்
ஆயின் பிறந்திட்ட காரணமென்
மேனி எடுத்திந்தப் பூமியில் வந்ததால்
யாருக்கென்ன பயன் என்று கேட்டேன்
வானில் தெரிந்திட்ட தேவதையோஒரு
வண்ணத்தடியினைக் கையெடுத்தாள்
தேனில் குழைத்திட்ட மென்குரலாலொரு
சேதி சொல்லியொரு கோடுபோட்டாள்

சின்ன மனிதனே உன்னைப் படைத்தவன்
விண்ணில் பரந்தெங்கும் வாழுகிறான்
பொன்னில் நதியினில் பூவில் குழந்தையில்
பூமியெங்கும் அவன் ஆளுகின்றான்
மின்னு மிடியையும் மேகத்து நீரையும்
அள்ளி யெடுத்துப் பொழியவைத்தான்
இன்பமிழைத்து மகிழவைத்தான் பின்பு
துன்ப மெதுவென்று கொள்ளவைத்தான்


கண்ணைவிழித்து கிடக்குமட்டுமொரு
காரணமேதும் பெரிது இல்லை
கண்ணைமூடி உயிர் சென்றுவிட்டால் இந்தக்
காயமழிந்திட ஆவது என்?
விண்ணின் திருமகள் வேடிக்கையாய்
நகைசெய்து சுடரெழும் பூவிழிகள்
எண்ணிச்சிரித்திட ஈதுசொன்னள்அந்த
இன்பக் குரல்மணிநாதமெழ

மண்ணில் விளைந்திட்ட உன்னுடல் மீண்டும்
மண்ணுக்கென விட்டுஏகிடுவாய்
விண்ணில் பறந்து, உலவி விளையாடி
வேண்டும்வரை சுகம் காணுகிறாய்
கண்ணில் தெரிகின்றகாட்சியெல்லாம் கடு
வண்ணமலரின் வடிவங்களாம்
விண்ணின் பெரு வாண வேடிக்கை என்பது
வேண்டும்வரை காணும் இன்பங்களாம்

மண்ணில் கொடுமைகள் செய்தவரோ பெரு
மாயக் குழம்பினில் சிக்கவைத்து
கன்னிச் சிவந்திட வெப்பமிட்டுஅவர்
காது கிழிந்திடச் சத்தமிட்டு
பொன்னைப் புடமிடச் செய்வது போலவர்
பொல்லா மனதைப் புடமிடுவோம்
முன்னர் இழைத்திட்ட பாவங்கள் தீர்ந்திட
மீண்டும்பிறந்திட செய்துகொள்வோம்

என்ன இழைத்துமே ஏது பயனவர்
இத்தரை மீண்டதும் செய்வதெல்லாம்
கன்னமிடுதலும் பொய்கொலையும்ஓர்
காரணமின்றிக் கொடுமைகளே
சொல்லச் சிறுதடி மீதிருந்துஒரு
சின்னப்பொறி எழுந்தேபரவ
இல்லையென அவள் ஆகியிருந்தது
வெள்ளைமுகிலும் விண்நீலமுமே!

மெல்லவிழிகளைமூடிநின்றேன் இந்த
மேதினி மீது நடப்பதென்ன
சொல்லிய தேவதை உண்மையிலோ அல்ல
சொப்பனமோ புரியவில்லை
தொல்லையிலா வாழ்வுக் கென்றேபல சில
விஞ்ஞான ஆய்வில் கருவி கண்டோம்
செல்லை கணனியை சின்னத்திரை கண்டு
இன்பமாக வாழ்வை மாற்றிவிட்டோம்

ஆயினும் எத்தனை பெற்றும் மனிதர்கள்
அன்பினை மட்டு மிழந்துவிட்டார்
நாயினும் கேவல மாகச்சண்டை யிட்டு
நாட்டைப் பிடித்திடக் கொல்லுகிறார்
யுத்தம் அரசுகள் செய்யும் கொலைகளை
கேட்பதற்கு இங்கு யாருமில்லை
ரத்தம்துடித்து அடங்கும்வரை கையில்
கத்தி எடுப்பவன் தானே இறை

எத்தனை நல்லவன் நேர்மைகொள்வோன்தமக்
கிவ்வுலகில் நீண்ட ஆயுளில்லை
மொத்தத்தில் ஏது நடக்குது மானிட
வாழ்வுதனில் என்று தோன்றவில்லை
நேர்மை நீதியற்ற வாழ்விதை விட்டுஅந்த
நீண்ட வெளிதன்னில் நீந்துகிறேன்
மீளப்பிறந்திங்கு வாழப்பிடிப்பில்லை
தேவதையே கொஞ்சம் நில்லுஎன்றேன்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Sep 17, 2010 7:55 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 18, 2010 7:57 pm

///மண்ணில் கொடுமைகள் செய்தவரோ பெரு
மாயக் குழம்பினில் சிக்கவைத்து
கன்னிச் சிவந்திட வெப்பமிட்டுஅவர்
காது கிழிந்திடச் சத்தமிட்டு
பொன்னைப் புடமிடச் செய்வது போலவர்
பொல்லா மனதைப் புடமிடுவோம்///

இப்படியொரு தண்டனை உண்டென நம்பினால் நாடு வளமாகும், வாழ்வு மகிழ்வாகும் அண்ணா!



நீலவானில் நீந்த வேண்டும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Sep 18, 2010 8:46 pm

இதை கற்பனயாக எழுதினேன். முன்னையோர் சொர்க்கம் நரகம் என்றுசொல்லுவது எங்கே? சொர்க்கம் ஆகாயத்தில் என்கிறார்கள். நரகம் பாதாளத்தில் என்கிறார்கள்.இருக்கிறதா?

தெரியவில்லை. ஆனல் இந்த நம்பிக்கையை பொய் என்றால் பாவம் செய்பவன் பயப்படமாட்டான். எனவே வானில்
காணும் Galaxy ல் சொர்க்கமுண்டு நரகமுமுண்டு என கற்பனை செய்தேன். அவ்வளவுதான்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 18, 2010 8:49 pm

kirikasan wrote:இதை கற்பனயாக எழுதினேன். முன்னையோர் சொர்க்கம் நரகம் என்றுசொல்லுவது எங்கே? சொர்க்கம் ஆகாயத்தில் என்கிறார்கள். நரகம் பாதாளத்தில் என்கிறார்கள்.இருக்கிறதா?

தெரியவில்லை. ஆனல் இந்த நம்பிக்கையை பொய் என்றால் பாவம் செய்பவன் பயப்படமாட்டான். எனவே வானில்
காணும் Galaxy ல் சொர்க்கமுண்டு நரகமுமுண்டு என கற்பனை செய்தேன். அவ்வளவுதான்!

கற்பனையை ரசிக்கும்படி கவிதையாக்கியதற்கு வாழ்த்துகள் அண்ணா! நீலவானில் நீந்த வேண்டும்! 154550



நீலவானில் நீந்த வேண்டும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Sep 18, 2010 8:53 pm

நெஞ்சு குளிரவைக்கும் உங்களுக்கு நன்றிகள்.
தங்கள் அனைவரின் வார்த்தைகளும் கவிபயிருக்கு நீர் வார்க்கின்றன

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 18, 2010 8:56 pm

kirikasan wrote:நெஞ்சு குளிரவைக்கும் உங்களுக்கு நன்றிகள்.
தங்கள் அனைவரின் வார்த்தைகளும் கவிபயிருக்கு நீர் வார்க்கின்றன

எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு பாராட்டும், அவர்களின் கற்பனையைப் பட்டை தீட்டுகிறது என்பது உலகறிந்த விடயம்தானே அண்ணா!



நீலவானில் நீந்த வேண்டும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Oct 27, 2010 12:32 pm

அழகிய படிமங்கள்... மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக