புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Today at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகப் பழமொழிகள் - Page 5 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 5 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 5 Poll_c10 
85 Posts - 51%
heezulia
உலகப் பழமொழிகள் - Page 5 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 5 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 5 Poll_c10 
62 Posts - 37%
T.N.Balasubramanian
உலகப் பழமொழிகள் - Page 5 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 5 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 5 Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
உலகப் பழமொழிகள் - Page 5 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 5 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 5 Poll_c10 
7 Posts - 4%
prajai
உலகப் பழமொழிகள் - Page 5 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 5 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
உலகப் பழமொழிகள் - Page 5 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 5 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உலகப் பழமொழிகள் - Page 5 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 5 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகப் பழமொழிகள் - Page 5 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 5 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 5 Poll_c10 
127 Posts - 54%
heezulia
உலகப் பழமொழிகள் - Page 5 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 5 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 5 Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
உலகப் பழமொழிகள் - Page 5 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 5 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 5 Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
உலகப் பழமொழிகள் - Page 5 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 5 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 5 Poll_c10 
9 Posts - 4%
prajai
உலகப் பழமொழிகள் - Page 5 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 5 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
உலகப் பழமொழிகள் - Page 5 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 5 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உலகப் பழமொழிகள் - Page 5 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 5 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 5 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகப் பழமொழிகள்


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:15 am

First topic message reminder :

அங்கேரி


* அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது.
* உன் அன்பை மனைவியிடம் காட்டு; இரகசியத்தை அன்னையிடம் கூறு.
* எளிமையைப் பின் தொடர்ந்து சந்தேகம் வருகிறது.
* ஒரு செய்தியை நீ விளம்பரம் செய்ய வேண்டுமா? அதை மிக இரகசியமாக ஒரு பெண்ணிடம் கூறு.
* ஒரு கை மற்றொரு கையைக் கழுவுகிறது. இரண்டும் சேர்ந்து முகத்தைக் கழுவுகிறது.
* ஓடுகிறவன்தான் விழுவான்.
* கவலைக்கு மருந்து அதனைக் காலின் கீழ் போடுவதுதான்.
* குருடர் உலகில் ஒற்றைக் கண்ணன் அரசன்.
* சமாதானம் செய்து வைப்பவர் ஒருபோதும் தோல்வியே அடைவதில்லை.
* சமாதானம் விலைகொடுத்து வாங்கத் தகுந்தது.
* செயலே புகழ் பரப்பும்; வாய் அல்ல.
* சொந்தக் குழந்தை இல்லாதவன் மிகவும் அபாக்கியவான்.
* தூக்கி எறியும் குதிரையைவிட சுமந்து செல்லும் கழுதை மேலானது.
* தேன் இனித்தபோதிலும் அதை முள்ளோடு ஏற்காதே!
* பணம் பேசுகிறது; நாய்கள் குரைக்கின்றன.
* புத்தியுள்ளவன் மனதை மாற்றிக் கொள்வான். முட்டாள் அவ்வாறு செய்யமாட்டான்.
* பேராசை முடிகிற இடத்தில் மகிழ்ச்சி தொடங்குகிறது.
* பொன், பெண், ஆடை இவைகளைப் பகல் வெளிச்சத்தில் தேர்ந்தெடு
* நட்சத்திரங்கள் கூச்சல் இடுவதில்லை.
* நண்பன் இல்லாதபோது உன் கைத்தடியுடன் கலந்து ஆலோசனை செய்.
* நீ உன் தாய்க்குக் கீழ்படியாவிட்டால், உன் மாற்றாந் தாய்க்குக் கீழ்படிவாய்.
* நெருப்பு நெருப்பை அணைக்காது.
* மிகப்பெரிய உதவியும் உதவியே. மிகச்சிறிய உதவியும் உதவியே.
* மூன்று ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் இளைஞர், வயோதிகர், நடுவயதினர்.
* நீதிபதியைவிட காலம்தான் உண்மையை வெளிக்கொணர்கிறது.
* நாணச் சிவப்பு நல்ல குணங்களின் வண்ணம்.
* ஓர் இளைஞனுக்கு மனைவி ஓர் ஆதாரம். கைத்தடி அவனுக்கு ஆடம்பரம். ஒரு முதியவருக்கு மனைவி ஓர் ஆடம்பரம். கைத்தடி அவருக்கு ஆதாரம்.
* ஆந்தைக்கூட தன் குஞ்சைப் பருந்தாகத்தான் எண்ணுகிறது.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 3:13 pm

லத்தீன்

* நாம் எப்போது ஆரம்பிப்பது என்று நினைக்கும்போது, அதுவே மிகுந்த தாமதமாகிறது.
* அவர்களுடைய இழப்பிற்காக நான் துக்கப்படுகிறேன்.. ஆனால் மிக அதிகமாக நான் காலம் இழந்ததற்கே துக்கப்படுகிறேன். எவரும் தங்கள் பணப்பையைக் காத்துக்கொள்ள முடியும் ஆனால், இழந்துபோன காலத்தை ஒருவரும் மீண்டும் சொந்தமாக்கிக்கொள்ள முடியாது.
* மூன்று நாளைக்குப் பின் ஒரு பெண், ஒரு விருந்தினர், மழை மூவரும் களைப்படையச் செய்கின்றனர்.
* கண்ணீரால் கடினமான வைரத்தையும் உருக்கலாம்.
* எங்கே சுதந்திரம் வீழ்கிறதோ அங்கே ஒருவரும் தைரியமாகப் பேச மாட்டார்கள்.
* மரியாதைகளும் ஒரு சுமையே.
* சிங்கப் படையை ஒரு கலைமான் ஏற்று நடத்துவதைவிட கலைமான்களின் படையை சிங்கம் தலைமையேற்று நடத்திச் செல்வது மிகப் பயங்கரமானதாக இருக்கும்.
* இன்று எனக்கு; நாளை உனக்கு.
* இரவும் தனிமையும் முழுக்க சாத்தான்களுடையன.
* நமக்கு மேலே உள்ள விஷயங்களும், நமக்குக் கீழேயுள்ள விடியல்களும் நமக்கு ஒன்றும் இல்லை.
* அதிகமாகத் தெரிந்துகொண்டிருப்பதைவிட குறைவாகத் தெரிந்துகொண்டிருப்பவர் இழப்பது மிகவும் சிறிதளவே.
* நிதானமாக ஆத்திரப்படு.
* பூமாலையில் உராய்ந்தால் பூ ஆதாரம்.
* ஆபத்து இல்லாமல் ஆபத்தை கடக்க முடியாது.
* செங்குத்தான மலைகள் முன்னாலே, ஓநாய்கள் பின்னாலே.
* ஆலாபனை இனிய பண்ணிசைப் பாடலின் நாற்றங்கால்.
* அறிவாளிகளால் உணர்வுகள் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்படுகின்றன. ஆனால், முட்டாள்களால் பரிமாறப்படுகின்றன.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 3:13 pm

# வீரம் குறைந்த நெஞ்சம் ஒருபோதும் அழகிய மங்கையைச் சொந்தமாக்கிக் கொள்ளாது.
# அழகிய முகமும் நல்ல அதிர்ஷ்டமும் ஒரே வழியில் பயணம் போகாது.
# அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது.
# மனிதன் இடத்தை அழகுபடுத்துகிறான். இடமல்ல மனிதனை அழகுபடுத்துவது.
# உன்னுடைய அரிவாள் தீட்டப்பட்டால் உன் வேலை தாமதமாகாது.
# அதிர்ஷ்டம் நிலையில்லா மனத்தினள். அவளால் கொடுக்கப்பட்டதை திரும்பவும் வேகமாக்க் கேட்கிறாள்.
# உண்மை வெறுப்பை வளர்க்கிறது. செல்வச் செழிப்பு செருக்கை வளர்க்கிறது. பாதுகாப்பு அபாயத்தை வளர்க்கிறது.
# ஒரு மனிதனை மிகவும் அதிகமாக அதிர்ஷ்டம் சீராட்டும்போது அது அவனை முட்டாளாக்குகிறது.
# அதிர்ஷ்டம் ஒரு கண்ணாடி. அது ஒளிவீசும் தருணத்தில் உடைந்துபோகிறது.
# யார் மற்றவர்களை அச்சுறுத்துகிறாரோ, அவரே மிகவும் அச்சத்திலிருக்கிறார்.
# பயன்படுத்து, பழுது படுத்தாதே.
# சமாதானத்தின் சிங்கமாக இருப்பவர்கள் அடிக்கடி போரில் மான்.
# பூனைகள் மிகவும் நேசிக்கின்றன. ஆனால், கால்களை நனைக்க விரும்பவில்லை.
# வியர்வை இல்லாமல் இனிமை இல்லை.
# நாக்கை மடக்கிக் கொள்கிற முட்டாளும் அறிவாளிதான்.
# நீரூற்றுகள் கூடத் தாகமாக இருப்பதாக முறையிட்டுக் கொள்கின்றன.
# ஆசைப்படுவது முடியாது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 3:14 pm

மியான்மர்

* துறவிகள் மெலிந்தால் அழகு
விலங்குள் கொழுத்தால் அழகு
மனிதர்கள் படித்தால் அழகு
பெண்கள் மணந்தால் அழகு
* உன் ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தையையும் நம்பியிருந்தால் உனக்கு இரு கண்களும் இல்லை.
* நாய்களின் பிரார்த்தனைகள் எல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், வானம் எலும்பு மழை பொழியும்.
* பள்ளிவாசல் எவ்வளவு பெரியதாகவும் இருக்கட்டும். இமாம் அவர்க்குத் தெரிந்ததைத்தான் போதனை செய்வார்.
* பேசுகிறவனைவிடக் கேட்பவனுக்கு அதிகப் புத்தி வேண்டும்.
* மனிதன் கல்லைவிடக் கடினமானவன். ரோஜா மலரைவிட மென்மையானவன்.
* தவறான பாதையில் நீ எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் சரி, திரும்பி வா.
* மகிழ்ச்சியைக் காண்பதற்கு ஒருவன் களைக்கும்வரை நடக்க வேண்டும்.
* மூன்று பொருட்கள் இந்த மண்ணில் விலை மதிப்பற்றதாக்க் கணக்கிடப்படுகின்றன. அவை - அறிவுடைமை, தானியம், நட்புடைமை.
* உதய சூரியனின் வெயிலில் காய்வதும், கடும் பிணத்தின் புகையை சுவாசிப்பதும், வயதான மனைவியைப் பராமரிப்பதும், தயிர் உணவை இரவில் உண்பதும் எப்போதும் வாழ்வைச் சிதைக்கும்.
* ஒரு மரத்தினுடைய நிழலில் தங்குபவன் அதனுடைய கிளைகளை உடைப்பது சரியல்ல.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 3:15 pm

நைஜீரியா

* ஆயிரம் தடைவை அளவு எடு. ஒரு தடவை வெட்டு.
* இதயம்தான் ஒருவனை நரகத்திற்கு அல்லது சொர்க்கத்திற்குக் கொண்டு செல்கிறது.
* உண்மையிலேயே அழகு வலிமை வாய்ந்தது.
* உழைப்புத்தான் ஒரு மனிதனை மற்றொரு மனிதனைவிட முந்தச் செய்கிறது.
* உயிர்கள் பல பிறவிகளை எடுப்பதற்குக் காரணம் அவை செய்த வினைகளின் பயனை அனுபவிப்பதற்கே ஆகும்.
* உன் வாயிலிருந்து வரும் வார்த்தைகளை உன் காதுகள் கேட்கட்டும்.
* உழைப்பு மதத்தில் பாதி.
* ஏழைகளுக்குக் கொடுப்பவன் கடவுளுக்குக்கடன் கொடுக்கிறான்.
* ஏழை தன் வயிற்றுக்கு உணவைத் தேடுகிறான். செல்வனோ தன் உணவிற்கு வயிற்றைத் தேடுகிறான்.
* ஒரு கண் எவ்வளவு பெரியதாக இருந்தபோதிலும் இரு கண்களே மேலானவை.
* கரடிக்கு ஒன்பது பாட்டுக்கள் தெரியும். எல்லாம் பேரிக்காய் பற்றி அல்லது தேனைப்பற்றி.
* குறைந்த ஆசை இன்ப வாழ்க்கை.
* சூரியன் நுழையாத இடத்தில் வைத்தியன் நுழைவான்.
* சாவின் அருகில் சென்றவனுக்கு உயிரின் மதிப்பு தெரியும்.
* தாங்க முடியாத அளவிற்கு நமக்கு ஒருபோதும் துன்பங்கள் ஏற்படுவதில்லை.
* கடன் ஏழைக்குப் பிறக்கும் முதல் குழந்தை.
* பச்சை இலைகளே எரிந்தால் காய்ந்த இலைகள் எம்மாத்திரம்?
* பெண் குழந்தையை அடித்து வளர்க்காதவன் பின்னால் தனது மார்பிலே அடித்துக்கொள்ள நேரிடும்.
* மலிவாக விற்பவன் கடனக்கு விற்கமாட்டான். கடனுக்கு விற்கிறவன் மலிவாக விற்கமாட்டான்.
* மிகவும் உயரமான மரத்திற்குக்கூட அடியில் கோடரி காத்துக் கொண்டிருக்கிறது.
* ஊழல் உயர் வட்டாரங்களில் ஆரம்பமாகிறது.
* நல்ல சுகத்தோடு இருப்பவனுக்குத் தினமும் திருமணம்.
* நாற்பது பெண்களில் ஒருபெண்ணின் சொற்களைக் கவனிப்பது நல்லது.
* வாழ்க்கை என்பது வாழும் கலையில் ஒருபரீட்சை. ஆனால் அதன் முடிவுகளை அறிவதற்குள் நம் வாழ்க்கை முடிந்து விடுகிறது.
* விழுகிறவனுக்கு நண்பர்கள் இல்லை. தடுக்கி விழுந்து பார்.
* வியபாரம் வாழ்நாள் முழுவதற்கும் ஒரு சொத்து.
* மெழுகுவர்த்தி தனக்கு வெளிச்சம் தருவதில்லை.
* நீதிபதியிடமிருந்தும் வைத்தியனிடமிருந்தும் கடவுள் என்னைக் காப்பாற்றுவாராக!

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 3:15 pm

ஹிப்ரூ


* சிறந்த போதகர் - இதயம், சிறந்த ஆசிரியர் - காலம், சிறந்த நூல் - உலகம், சிறந்த நண்பர் - கடவுள்.
* துன்மார்கத்தவர்களின் மகிழ்ச்சியும், நன்மார்க்கத்தவர்களின் மனத்துயரும் அறிவுக்கு எட்டாதவைகளாக உள்ளன.
* பஞ்சம் ஏழாண்டுகள் நீடித்திருக்கிறது. ஆனால், அது வேலை செய்பவருடைய கதவு வழியாக்க் கடந்து செல்கிறது.
* அறிவுள்ள மனிதனின் அறிவுரையைக் கேட்பதாக இருந்தால் அவருடைய அறிவில் பாதி நீ பெற்றிருக்க வேண்டும்.
* நல்லதும், தீயதும் அறிந்தவர் ‘அறிஞர்’ என்று அழைக்கப்படுபவர் அல்லர். ஆனால், இரண்டு தீயவைகளில் குறைவான தீயதை அறியக்கூடிவரே அறிஞர்.
* அறிவு தலைக்கு கிரீடம். அடக்கம் காலுக்குச்செருப்பு.
* ஏழைகளுக்குத் திறக்காத கதவு வைத்தியனுக்குத் திறக்கும்.
* சத்தியம் கடவுளுடைய முத்திரை.
* இவ்வுலகில் கடமை என்ற பாதையே மறு உலகில் சொர்க்கத்தின் பாதை.
* மனிதனுடைய எல்லா நோய்களுக்கும் மூல காரணம் இரத்தம்.
* ஆசை கண்ணைக் குருடாக்குகிறது. காதைச் செவிடாக்குகிறது.
* கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழையல்லன். அதிகம் விரும்புகிறவன்தான் ஏழை.
* சொற்களை எடை போட வேண்டும் எண்ணக்கூடாது.
* கடலைப் பிரித்தால் சிற்றோடைகளாகிவிடும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 4:32 pm

ஸ்பெயின்


* மரியாதையின் மலிவான பொருள் வேறில்லை.
* இறந்தவர்கள் இருப்பவர்களின் கண்களைத் திற்க்கிறார்கள்.
* இறைவன் ஏழையை நேசிக்கலாம். ஆனால், அழுக்கடைந்தவனை அல்ல.
* நண்பன் கேட்கும்போது ‘நாளை’ என்ற சொல் இல்லை.
* அகந்தை அல்லது பலவீனத்தால் ‘இல்லை’ என்று சொல்லாதே!
* வழக்கறிஞரின் பிரியம் சிறிதளவு செல்வம்
மருத்துவரின் பிரியம் சிறிதளவு உடல்நலம்
சன்னியாசியின் பிரியம் சிறிதளவு மரியாதை

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 4:33 pm

சயாம்


* வானத்தை நோக்கி ஒருவன் துப்பினால் அது அவன் முகத்திலேயே விழும்.
* தெளிவானதொரு குறிகோளை நோக்கி முயற்சி செய்.
* தாமரை இலை நீர்போல் பெண் மணம் நிலையற்றது.
* சமயத்தில் சொன்ன சொல் வெள்ளித் தட்டில் தங்க ஆப்பிள் மாதிரி.
* ஆசிரியர்களை அவர்கள்முன்னிலையில் புகழ்ந்து பேசு. கீழ் அதிகாரகளை அவர்களுடைய வேலையைச்செய்து முடித்தபிறகு புகழந்து பேசு. நண்பர்களை அவர்கள் இல்லாதபோது புகழ்ந்து பேசு.

போஸ்னியா


* இரு பொருட்கள் உலகை ஆளுகின்றன. அவை ரட்சிப்பும், சிட்சிப்பும்.

யுக்ரேனியா


* கூன்னின் முதுகு கல்லறையில்தான் நிமிர்த்தப்படும்.
* குழந்தையைத் தூக்கி வைத்துக்கொள்ளும்போது கை நோகிறது. அதைக் கீழே விட்டால் மனம் நோகிறது.

வேல்ஸ்


* நீ ஒரு பாம்பைக் கொல்வதனால் அதனுடை வாயைக்கூட அழித்துவிடு.
* எது அடிக்கடி பார்க்கப்படவில்லையோ அது ஒதுக்கப்பட்டது.

பின்லாந்து


* முள்ளின் மேலே பிறந்தவன் முள்ளின் மேலேயே சாவைத் தேர்ந்தெடுப்பான்.
* நல்ல மணியின் ஓசை தூரத்திலும் கேட்கும். கெட்ட மணியின் ஓசை அதைவிட அதிக தூரத்தில் கேட்கும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 4:34 pm

டச்சு


* துளை அளவிற்கு ஆணியும் துயர் அடைகிறது.
* கப்பல் முழுவதையும் இழப்பதைவிட நங்கூரத்தை இழப்பது மேல்.
* இரவும் இருளும் எண்ணங்களின் அன்னையர்.
* நீண்ட நேரமாக உண்பது, சுருக்கமாக வழிபாடு செய்வதை போலவே மிகவும் விரும்பப்படுகிறது.
* உண்மை கடவுளின் முத்திரை.
* சேதம் ஏதும இல்லாமல் எல்லா ஆதாயங்களுடன் உண்மை தோற்றமளிக்கிறது.
* எண்ணெய் ஆரம்பத்தில் சிறந்தது. தேன் முடிவில் சிறந்தது. மது நடுவில் சிறந்தது.
* வாலின் அறிவுரையை ஏற்றுக்கொண்டால் தலை தன் தலையை இழக்கிறது.
* தங்கத்தில் நட்டத்தைவிட தவிட்டில் வரும் ஆதாயம் மேல்.
* தூப கலசத்திலிருந்து வரும் புகையும் வாசனையும் பிரிக்க இயலாதவை.
* பொருளாசையே உலக அமைதியைக் கெடுக்கிறது.
* சமாதான காலத்தில் போர் சிப்பாய்கள் வெயில் காலத்தில் தீப்போல.
* மிகப்பெரும் அதிர்ஷ்டம் ஒரு நல்ல கணவன். அதற்கடுத்து நன்றியுள்ள வேலைக்காரன்.

பிலிப்பைன்ஸ்


* ஆத்மாவின் நோய்களே பாவங்கள்.
* அழுக்குப் பிடித்த கைகளை உடையவளை நம்பி நூல் சிக்கலை அவிழ்க்க கொடுக்காதே!

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 4:35 pm

மூலம்: www.tamildesam.org


Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக