புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:57 am

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாக்டர் எம்.ஜி.ஆர் - Page 3 Poll_c10டாக்டர் எம்.ஜி.ஆர் - Page 3 Poll_m10டாக்டர் எம்.ஜி.ஆர் - Page 3 Poll_c10 
17 Posts - 94%
Geethmuru
டாக்டர் எம்.ஜி.ஆர் - Page 3 Poll_c10டாக்டர் எம்.ஜி.ஆர் - Page 3 Poll_m10டாக்டர் எம்.ஜி.ஆர் - Page 3 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாக்டர் எம்.ஜி.ஆர் - Page 3 Poll_c10டாக்டர் எம்.ஜி.ஆர் - Page 3 Poll_m10டாக்டர் எம்.ஜி.ஆர் - Page 3 Poll_c10 
144 Posts - 57%
heezulia
டாக்டர் எம்.ஜி.ஆர் - Page 3 Poll_c10டாக்டர் எம்.ஜி.ஆர் - Page 3 Poll_m10டாக்டர் எம்.ஜி.ஆர் - Page 3 Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
டாக்டர் எம்.ஜி.ஆர் - Page 3 Poll_c10டாக்டர் எம்.ஜி.ஆர் - Page 3 Poll_m10டாக்டர் எம்.ஜி.ஆர் - Page 3 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
டாக்டர் எம்.ஜி.ஆர் - Page 3 Poll_c10டாக்டர் எம்.ஜி.ஆர் - Page 3 Poll_m10டாக்டர் எம்.ஜி.ஆர் - Page 3 Poll_c10 
9 Posts - 4%
prajai
டாக்டர் எம்.ஜி.ஆர் - Page 3 Poll_c10டாக்டர் எம்.ஜி.ஆர் - Page 3 Poll_m10டாக்டர் எம்.ஜி.ஆர் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
டாக்டர் எம்.ஜி.ஆர் - Page 3 Poll_c10டாக்டர் எம்.ஜி.ஆர் - Page 3 Poll_m10டாக்டர் எம்.ஜி.ஆர் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
டாக்டர் எம்.ஜி.ஆர் - Page 3 Poll_c10டாக்டர் எம்.ஜி.ஆர் - Page 3 Poll_m10டாக்டர் எம்.ஜி.ஆர் - Page 3 Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
டாக்டர் எம்.ஜி.ஆர் - Page 3 Poll_c10டாக்டர் எம்.ஜி.ஆர் - Page 3 Poll_m10டாக்டர் எம்.ஜி.ஆர் - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டர் எம்.ஜி.ஆர்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:19 pm

First topic message reminder :

டாக்டர் எம்.ஜி.ஆர் - Page 3 Rajaji10


தோற்றம் -17-1-1917
மறைவு -24-12-1987



Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 1:24 am

ஒர் அமைச்சரவையின் மீது ஒரே நேரத்தில் இரு ஊழல் புகார்ப்பட்டியல்கள் கொடுக்கப்பட்டது, இந்திய அரசியல் வரலாற்றிலேயே அதுதான் முதல் தடவை ஆகும் எனக் கூறப்பட்டது.

அன்றைய தினம் தலைநகரத்துப் பத்திரிகையாளர்களையும் சந்தித்தார், புரட்சித்தலைவர். சர்வதேசத் தலைவர்களையே கேள்விக் கணைகளால் துளைத்தெடுக்கும் பத்திரிகையாளர்கள் புரட்சித்தலைவரை மட்டும் விட்டுவிடுவார்களா?

எம்.ஜி.ஆரிடமும் பத்திரகையாளர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். எல்லாக் கேள்விகளுக்கும் புரட்சித் தலைவர் தயக்கமின்றி நிதானமாயும் ஆணித்தரமாயும் பதிலளித்தார்.

அப்பொழுது ஒரு நிருபர், ”தி.மு.க. அமைச்சரவையை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டீர்களா?” என்று கேட்டார்.

அதற்குப் புரட்சித் தலைவர், ”நாங்கள் அப்படிக் கோரவில்லை. ஆனால், நாங்கள் கொடுத்த ஊழல் புகார்களை விசாரிக்க மத்திய அரசு ஒரு விசாரணைக் கமிஷனை நியமித்தால், தி.மு.க. அமைச்சரவை உடனடியாகத் தானாகவே பதவி விலகுவதுதான் நியாயம். நாகரிகமுள்ள எந்த அரசாங்கமும் அப்படித்தான் செய்யும்!” என்று மிகவும் சாதுரியமாகப் பதிலளித்தார்.

எம்.ஜி.ஆரின் அறிவுக்கூர்மையும், அரசியல் சாதுரியத்தையும் டெல்லிப் பத்திரிகையாளர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள்.

எம்.ஜி.ஆர் அளித்த பட்டியிலிலுள்ள ஊழல்கள் ஒவ்வொன்றுக்கும் கைமாறிய தொகைகள், சம்ப்ந்தப்பட்ட நபர்கள் முதலிய அனைத்தும் ஆதாரப் பூரவமாய்க் குறிப்பிடப்பட்டிருந்தன.

ஊழல் பட்டியலைப் படித்துப் பார்த்த ஜனாதிபதி வி.வி.கிரி அவர்கள் வியப்பும் திகைப்பும் அடைந்தார்.

அந்தப் புகார்ப் பட்டியலை முழுமையாக ஆராய்ந்து, அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியும் அளித்தார்.

இவ்வாறு புரட்சித் தலைவரின் டெல்லிப் பயணம் வெற்றிகரமாய் முடிந்தது.

இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியும், இந்திரா காங்கிரசும் புரட்சித் தலைவரின் இந்த ஊழல் ஒழிப்புப் போராட்டத்தை உற்சாகமாக ஆதரித்தன; துணை நின்றன.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 1:25 am

அண்ணாயிஸம்

1973 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சோவியத் யூனியனுக்குப் போய்விட்டுத் திரும்பிய புரட்சித்தலைவர், ரஷ்யாப் புரட்சிக்கு வித்திட்ட கம்யூனிசக் கொள்கையைப் பற்றி மிகவும் தீவிரமாய்ச் சிந்தித்தார்.

அண்ணாவின் பெயரால் தாம் இயக்கம் தொடங்கியிருப்பது போலக் கட்சியின் கொள்கைக்கும் ஒரு பெயர் சூட்டவேண்டும்; அதிலும் அண்ணாவின் நாமம் பொதிந்திருக்கவேண்டும் என்று புரட்சித் தலைவர் எண்ணினார். இரவும் பகலும் அதைப்பற்றிச் சிந்தித்து ஒரு பெயரை உருவாக்கினார்.

அதுதான் ‘அண்ணாயிஸம்’!

தம் கட்சிக் கொள்கைக்கு இரத்தின சுருக்கமான அண்ணாயிஸம் என்னும் பெயரைச் சூட்டிய புரட்சித் தலைவர், அதை நாட்டு மக்களுக்கு அறிவிக்க விரும்பினார்.

1973 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதியன்று, இரவு, எம்.ஜி.ஆர், யு.என்.ஐ மற்றும் பி.டி.ஐ. என்னும் இரண்டு செய்தி நிறுவனங்களோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் ”ஒரு நிருபரை அனுப்பிவையுங்கள்” என்று கூறினார். அப்பொழுது இரவு 8 மணிக்கு மேல் இருக்கும். என்றாலும் புரட்சித் தலைவரின் அழைப்பை ஏற்று செய்தி நிறுவனங்களும் த்ததமது நிருபர்களை அனுப்பிவைத்தன.

நிருபர்கள் வந்ததும் புரட்சித் தலைவர், ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை ‘அண்ணாயிஸம்’ ஆகும். இதை நாட்டு மக்களுக்குத் தெரிவியுங்கள்’ என்றார்.

திடீரென்று தொலைபேசியில் அழைத்து, ஒரு வரியில் செய்தி சொல்கிறாரே என்று, அந்த நிருபர்கள் இருவரும் திகைத்தார்கள்.

அவர்கள் திகைப்பைக் கண்ட புரட்சித் தலைவர், ”ஏன் திகைக்கிறீர்கள்? காந்தியிசம், கம்யூனிசம், மாவோயிசம், மார்க்ஸிசம் என்றெல்லாம் கொள்கைகள் இல்லையா? அவற்றைப் போன்றதுதான் அண்ணாயிஸமும்!” என்றார். புரட்சித் தலைவர்.

மறுநாள் எல்லாப் பத்திரிகைகளிலும் அந்தச் செய்தி இடம் பெற்றது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 1:25 am

உடனே பத்திரிகையாளர்கள் பலர் புரட்சித் தலைவரின் தியாகராயநகர் அலுவலகத்துக்குப் படையெடுத்துச் சென்றனர்.

”அண்ணா தி.மு.க வின் கொள்கை அண்ணாயிஸம் என்று கூறியிருக்கிறீர்களே, அண்ணாயிஸம் என்றால் என்ன? என்று கேட்டனர்.

அதற்கு புரட்சித் தலைவர் அளித்த பதிலும் சுருக்கமானதுதான்.

”காந்தியிஸம், கம்யூனிஸம், கேப்பிட்டலிஸம் எனப்படும் முதாலாளித்துவம் ஆகிய மூன்று கொள்கைத் த்த்துவங்களிலும் உள்ள நல்ல அம்சங்களையெல்லாம் திரட்டினால் என்ன கிட்டுமோ அதுதான் அண்ணாயிஸம்!” என்றார் புரட்சித் தலைவர்.

எம்.ஜி.ஆரின் அண்ணாயிஸ விளக்கத்தைச் சிலர் பாராட்டினார்கள்; சிலர் புரியவில்லை என்றனர்; சிலர் குறை கூறினர். ஆனால், தமிழ்நாட்டு மக்களோ, எம்.ஜி.ஆரின் அண்ணாயிஸத்தின் அடிப்படை என்று தங்களுக்குத் தாங்களே ஒரு விளக்கத்தை கூறிக்கொண்டு அதை ஏற்றுக்கொண்டனர்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 1:26 am

சிலை வைத்துச் சிறப்பித்தார்.!

அதே 1973 ஆம் ஆண்டில் புரட்சித் தலைவர் இன்னும் இரு முக்கியமான காரியங்களைச் செய்தார். திராவிட இயக்கச் சிற்பிகளான அறிஞர் அண்ணாவுக்கும், தந்தை பெரியாருக்கும் அண்ணா சாலையில் கால காலத்திற்கும் நிலைத்து நிற்கும் வண்ணம் இரு சிலைகளைச் செய்தமைத்தார்.

முதலில் பேரறிஞர் அண்ணாவுக்கு, அண்ணாசாலையும் வாலாஜா சாலையும் சந்திக்கும், அரசினர் தோட்ட சந்திப்பு முனையில், ஒரு விரலைக் காட்டி நிற்கும் ஆளுயர அண்ணா சிலையை நிறுவினார். அந்தச் சிலையைப் புரட்சித் தலைவர் தம் சொந்தச் செலவிலேயே நிறுவினார். கலவி மேதை டாக்டர் ஏ.இராமசாமி முதலியாரைக் கொண்டு அந்த அண்ணாவின் சிலையைத் திறந்து வைக்கச் செய்தார்.

பெரியாருக்குச் சிலை


அதே 1973 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதியன்று அதே அண்ணா சாலையில், இந்து நாளேடு அலுவலகத்திற்கு எதிரில் உள்ள சாலைச் சந்திப்பில், தந்தை பெரியாருக்கும் பிரும்மாண்டமான சிலை ஒன்றை நிறுவித் திறந்து வைத்தார். இதற்கான அனுமதியைத் தந்தை பெரியாரிடமே பெற்றார், புரட்சித் தலைவர்!

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 1:26 am

முதலமைச்சர்

1977 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் தமிழக சட்ட மன்றத்திற்குத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பல மாறுதல்கள் நிகழ்ந்தன. அரசியல் கட்சிகள் புதிய அணிகளை அமைத்தன.

ஜனதாக் கட்சி தி.மு.க. உறவைத் துண்டித்துக் கொண்டு தனியாகப்போட்டியிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தி.மு.கவை உதறிவிட்டுத் தனித்துப் போட்டியிட்டது.

அ.இ.தி.மு.க. கூட்டணியிலும் பிளவு ஏற்பட்டது. இந்திரா காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் சட்டமன்றத்தில் அதிகமான இடங்களைத் தங்களுக்குக் கோரின. புரட்சித் தலைவர் அதற்குச் சம்மதிக்கவில்லை. அதனால், இந்திரா காங்கிரசும் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியும் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகித் தங்களுக்குள் தனிக் கூட்டணி ஒன்றை அமைத்துக் கொண்டு போட்டியிட்டன.

அ.இ.தி.மு.க. சில சிறிய கட்சிகளைத் தன்னோடு சேர்த்துக்கொண்டு போட்டியிட்டது.

தி.மு.க. இரண்டாவது முறையாகப் பிளவுப்பட்டுக் களத்தில் நின்றது.

இந்திரா காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஓரளவுக்கு அனுதாபம் இருப்பினும் அது ஆட்சியைப் பற்றும் என்னும் நம்பிக்கை அந்தக் கட்சிக்காரர்களுக்கே இல்லை. ஜனதாக் கட்சிக்குத் தமிழ்நாட்டில் போதுமான அளவில் செல்வாக்கும் இருக்கவில்லை. எனவே, எஞ்சியிருந்த புரட்சித் தலைவரின் அ.இ.தி.மு.க.வின் மீது தான் மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர்.

தேர்தல்கள் நடந்தது. அனைவரும் எதிர்பார்த்தது போல, அ.இ.அ.தி.மு.க. கூட்டணி தான் பெரும் வெற்றியைப் பெற்றது. புரட்சித் தலைவரின் அ.இ.அ.தி.மு.க.வுக்கு 127 தொகுதிகள் கிட்டின. அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 17 இடங்கள் கிட்டின.

தி.மு.க. 48 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தகுதியைப் பெற்றது. இந்திரா காங்கிரஸ் 27 தொகுதிகளிலும், ஜனதாக்கட்சி 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

புரட்சித் தலைவர் அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளநர் பிரபுதாஸ் பட்வாரி புரட்சித் தலைவரை ஆட்சிப் பொறுப்பேற்க அழைத்தார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 1:27 am

மக்கள் முன் மற்றொரு பதிவிப்பிரமாணம்!

1977 - ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று தான் புரட்சித் தலைவர் பிரபுதாஸ் பட்வாரியின் முன்னிலையில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அது அரசியல் சட்ட ரீதியாகவும் சம்பிரதாயப்படியும் ஏற்றுக் கொண்ட பதவி ஏற்பு விழா!

ஆனால், அது முடிந்ததும் புரட்சித் தலைவர் அண்ணா சாலையில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு அருகில் உள்ள மேடைக்கு வந்தார். அண்ணா சாலையே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. தமிழகமே தலைநகருக்கு வந்து விட்டது போல அண்ணா சாலையில் கண்ணுக்கெட்டாத தூரம் வரை பல இலட்சம் மக்கள் திரண்டிருந்தனர்.

பத்து இலட்சம் என்று ஒரு பத்திரிகையும் 20 இலட்சம் என்று இன்னொரு பத்திரிகையும் எழுதும் அளவுக்கு மக்கள் கூட்டம்கூடி ஆர்ப்பரித்தது. அப்போது மந்தகாசப் புன்னகையோடு மேடை ஏறி, மக்களின் வாழ்த்துக்களைக் கையசைத்து ஏற்றுக்கொண்டார். அந்தச் சரித்திர நாயகன். அந்த மக்கள் கடலுக்கு முன்னால் மீண்டும் ஒரு முறை பதவிப் பிரமாணம் செய்தார். பின்னர் உரையாற்றினார்.

”அங்கே ராஜாஜி மண்டபத்தில் நாங்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டது அரசாங்கச் சடங்குதான். நமது இதய தெய்வம் அறிஞர் அண்ணா அவர்களின் பெயரால் ஆணையிட்டு உங்களுக்கு முன்னால் பதிவியேற்பதைத்தான் நாங்கள் பெருமையாக்க் கருதுகிறோம்.

இங்கே நடப்பது உங்கள் கட்டளையை எதிர்பார்த்து நடக்கும் விழாவாகும். உங்கள் முன்னால் அமைச்சர்கள் சார்பாகவும், அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம் சார்பாகவும், தமிழக மக்களுக்கும், பல நாடுகளில், பல மாநிலங்களில் வாழும் தமிழ் மக்களுக்கும் நமது கொள்கையை ஏற்றுக் கொள்கிற அனைத்து மாநிலங்களிலும் வாழ்கின்ற மக்களுக்கும் ஒரு செய்தியை இங்கே கூற விரும்புகின்றேன்.

மக்களின் எண்ணங்களையும், மக்களின் விருப்பங்களைச் சட்டமாக்கவும், மக்களின் தேவைகளை நிறைவேற்றவும் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றம் இருக்கிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 1:27 am

இதனை எங்கள் மனத்தில் இருத்தி, இலஞ்சமற்ற, ஊழலற்ற நீதிமன்றங்களில் தலையீடு அற்ற ஆட்சியை நடத்துவோம் என்று கூறிக்கொள்கிறேன்.

உழைப்பவரே உயர்ந்தவர் என்னும் கொள்கைக்கு ஏற்ப ஆட்சி நடத்துவோம்.

இந்த உயர்ந்த இலட்சியத்தை எங்கள் உயிரைக் கொடுதேனும், எங்கள் உடல், பொருள், ஆவி, அனைத்தையும் இழந்தாலும், யார் தடுத்தாலும் அதை எதிர்த்து நிறைவேற்றுவோம் என்று அண்ணாவின் மேல் ஆணையிட்டுக் கூறுகிறேன்!” என்று தலைவர் உறுதியிட்டுக் கூறினார் புரட்சித் தலைவர்.

அப்பொழுதும் அதற்குப்பபின்னரும் அங்கே ஏற்பட்ட மக்கள் எழுச்சியையும் வாழ்த்து முழக்கங்களையும் எழுத்தில் வடிக்க எவராலும் இயலாது!

அந்த விழாவை முடித்துக்கொண்டு பத்திரிகையாளர்களைச் ச்ந்தித்தார், புரட்சித்தலைவர். அவர்களிடமும் அதே கருத்தையே வலியுறுத்தினார்.

இவ்வாறு கட்சி தொடங்கி நான்கு ஆண்டுகள் 8 மாதங்கள் 13 நாட்களில், அதாவது சுமார் 1,716 நாள்களில் ஆட்சியைப்பிடித்த அற்புத சாதனையைச் சாதித்த சரித்திர நாயகனானார். புரட்சித் தலைவர்! என்றாலும், வெற்றி அவரை மேலும் பணிவுள்ளவராக மாற்றியதே தவிர, வேறு சிலரைப் போல மாற்றாரை மனம் புண்படப் பேசும் ஆணவக்காரராக மாற்றி விடவில்லை.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 1:28 am


மறுபிறவி


1984 ஆம் ஆண்டு அக்டோபரில் திடீரென்று புரட்சித் தலைவரின் உடல் நிலையில் ஒரு பெரிய பாதிப்பு ஏற்பட்டது. அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீபாவளிக்கு முதல்நாள் புரட்சித் தலைவரின் நோய் மிகவும் முற்றி கவலைக்கிடமான நிலை தோன்றியது. அந்தத் தீபாவளியே இருண்ட தீபாவளி ஆயிற்று.

புரட்சித் தலைவரின் உடல்நிலை மோசமானதும் டாக்டர்கள் அமெரிக்காவிலிருந்தும், ஜப்பானிலிருந்தும் விரைந்து வந்து அவருக்குச் சிகிச்சை செய்ய அவரை அமெரிக்காவுக்கு கொண்டு செல்லவேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது. செய்தியறிந்த பிரதமர் இந்திராகாந்தி சென்னைக்கு விரைந்து வந்தார்; புரட்சித் தலைவரைச் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். புரட்சித் தலைவர் கலங்கிய கண்களோடு தம் நன்றியை மொனமாய்த் தெரிவித்தார்.

”உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ சோதனைகளைச் சந்தித்து வெற்றி பெற்றிருக்கிறீர்கள். இந்தச் சோதனையிலும் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள் என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை!” என்று ஆறுதல் கூறி விட்டு, விடைபெற்றுக்கொண்டார்.

புரட்சித் தலைவர் அமெரிக்காவுக்குச் செல்வதற்குத் தேவையான விசேஷ விமானம் உட்பட சகல வசதிகளையும் செய்துகொடுக்க உத்தரவிட்டார், இந்திரா காந்தி.

புரட்சித்தலைவர் அமெரிக்காவுக்குச் சென்று புரூக்களின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நாட்டு மக்கள் அனைவரும் அவருக்காகப்பிரார்த்தனை செய்தனர். அந்தப் பிரார்த்தனையும், புரட்சித்தலைவரின் மன உறுதியும் அவரைக் காலனிடமிருந்து காப்பாற்றியது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 1:28 am

இறப்பு

1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி சீக்கிய காவலர்களால் பிரதமர் இந்திராகாந்தி சுடப்பட்டு மரணமடைந்தார். அந்தச் செய்தியை புரட்சித் தலைவர் அமெரிக்காவில் இரு மாதங்களுக்குப் பின்னர்தான் தெரிவித்தார்கள். அது புரட்சித் தலைவரின் உள்ளத்தில் ஆறாத புண்ணாக நிலைத்துவிட்டது. அதற்குப் பின்னர் பிரதமராகப் பதவியேற்ற ராஜூவ் காந்தியைத் தம் சொந்தத் தம்பியாகவே கருதிப் பழகிக் கொண்டிருந்தார் புரட்சித்தலைவர். அவரும் அப்படியே பழகினார்.

1987 ஆம் ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதியன்று சென்னையில் நடந்த நேருஜியின் சிலை திறப்பு விழாவில் பிரதமர் ராஜூவ்காந்தியும் புரட்சித் தலைவரும் கலந்துகொண்டனர்.. அதுதான் அவர் கலந்துகொண்ட கடைசிப் பொது நிகழ்ச்சி!

1987 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதியன்று காலையிலிருந்தே புரட்சித் தலைவரின் உடல்நிலையில் சில விபரீதமான மாறுதல்கள் தோன்றின. மருத்துவர்கள் விரைந்து வந்து செய்த சிகிச்சையெல்லாம் பலன்றறுவிட்டன.

டிசம்பர் 24 ஆம் தேதியன்று அதிகாலையில் அந்தச் சரித்திர நாயகரின் வரலாறு முடிந்தது!

அந்த சாதனை மன்னனுக்கும் சாவு வரக்கூடும் என்பதைத் தமிழகம் நம்ப மறுத்தது.!

அது உண்மைதான் என்று தெரிந்தபோது ஆறாத சோகத்திலும் அதிர்ச்சிலும் மூழ்கியது! வாழ்க்கை முழுக்க சாதனைக்கு மேல் சாதனையாகப் படைத்த அந்த வரலாற்று நாயகர் தம் சாவிலும் ஒரு சாதனையைப் படைத்தார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலம் ராஜாஜி மண்டபத்திலிருந்து அண்ணா சாலை, கதீட்ரல் சாலை வழியாகச் சென்றபோது பல இலட்சம் மக்கள் அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

”அவர் நின்றால் பொதுக்கூட்டம், நடந்தால் ஊர்வலம்” என்று பத்திரிகைகள் எழுதுவதுண்டு. அந்த வரலாற்று நாயகன் உண்மையாகவே அன்று இறுதியாக ‘ஊர்வலம’ புறப்பட்டபோது, கடல் அலையே திரண்டு வந்ததுபோல மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததில் வியப்பேது!

ஒரு வரலாறு முடிந்தது!

ஒரு சகாப்தமும் நிறைவுற்றது!

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 1:29 am

அவர் எழுதிய உயில்!

1986 ஆம் ஆண்டு ஆகஸ்டில் புரட்சித்தலைவர் எழுதிய இறுதி உயிலில் அ.இ.அ.தி.மு.க.வுக்குச் சத்யா ஸ்டுடியோ மற்றும் தலைமைக்கழக்க கட்டடம் முதலிய சொத்துக்களை எழுதி வைத்தார். தம் காலத்திற்குப் பிறகு கட்சி உடையாமல் இருக்கவேண்டும் என்று விரும்பிய அவர், அந்தச் சொத்துகளின் வருமானத்தைப் பெறக் கட்சி பிளவுபடக்கூடாது என்ற நிபந்தனையையும் விதித்தார்.

1987 ஆம் ஜூலை மாத்த்தில் புரட்சித் தலைவர் மீண்டும் உடல் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்குச் சென்றார்; ஒரு மாத காலச் சிகிச்சைக்குப் பின்னர் தாயகம் திரும்பினார்.

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக