புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகுடபதி - அமரர் கல்கி - Page 3 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 3 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
மகுடபதி - அமரர் கல்கி - Page 3 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 3 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
13 Posts - 25%
prajai
மகுடபதி - அமரர் கல்கி - Page 3 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 3 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
மகுடபதி - அமரர் கல்கி - Page 3 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 3 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மகுடபதி - அமரர் கல்கி - Page 3 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 3 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
2 Posts - 4%
Rutu
மகுடபதி - அமரர் கல்கி - Page 3 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 3 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
1 Post - 2%
சிவா
மகுடபதி - அமரர் கல்கி - Page 3 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 3 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
1 Post - 2%
viyasan
மகுடபதி - அமரர் கல்கி - Page 3 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 3 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகுடபதி - அமரர் கல்கி - Page 3 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 3 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
10 Posts - 83%
Rutu
மகுடபதி - அமரர் கல்கி - Page 3 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 3 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
மகுடபதி - அமரர் கல்கி - Page 3 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 3 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகுடபதி - அமரர் கல்கி


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:24 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]
மகுடபதி - அமரர் கல்கி




முதல் அத்தியாயம் - திறந்த வீடு

அன்று சாயங்காலம், சூரியன் வழக்கம் போலத்தான் மேற்கு மலைத் தொடருக்குப் பின்னால் அஸ்தமித்தான். ஆனால், அப்போது சூழ்ந்து வந்த இருள், வழக்கமான இருளாகத் தோன்றவில்லை. காவியங்களில் கவிகள் வர்ணிக்கும் இருளைப் போல், கோயமுத்தூர் நகரவாசிகளின் மனத்தில் பீதியையும் கவலையையும் அதிகமாக்கிக் கொண்டு, அந்த இருள், நகரின் வீதிகளிலும் சந்து பொந்துகளிலும் புகுந்து பரவி வந்தது. வழக்கம்போல் அன்று தெரு வீதிகளில் முனிசிபாலிடி விளக்குகள் சரியான காலத்தில் ஏற்றப்படாதபடியால் சாதாரண அந்தி இருட்டானது, நள்ளிரவின் கானாந்தகாரத்தை விடப் பயங்கரமாகத் தோன்றியது.

கோயமுத்தூர் நகரம் அன்று அந்தி வேளையில் அளித்த சோககரமான காட்சியைப் போல் அதற்கு முன்னால் அளித்தது கிடையாது; பின்னாலும் அளித்தது கிடையாது. நகரின் பிரதான வீதிகளில் விளக்கேற்றும் நேரத்தில் சாதாரணமாய்க் காணப்படும் 'ஜே ஜே' என்ற ஜனக்கூட்டமும், வண்டிகளின் போக்குவரத்தும் கலகலப்பும் அன்று காணப்படவில்லை. கடைத் தெருக்கள் பாழடைந்து காணப்பட்டன.

வீதிகளில் வீடுகளெல்லாம் சாத்திக் கிடந்தன. ஜன்னல் கதவுகளும் மூடப்பட்டிருந்தன. மேல் மாடிகளிலிருந்து எட்டிப் பார்ப்பவர் கூட இல்லை.

பெரிய வீதிகளில் ஜன நடமாட்டமே கிடையாது. சின்னத் தெருக்களிலும் சந்துகளிலும் அங்கே இங்கே அபூர்வமாக இரண்டொருவர் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களும், முன்னாலும் பின்னாலும் பீதியுடன் பார்த்துக் கொண்டு நடந்தார்கள். அவர்களுடைய முகங்களைப் பார்த்தால், பேயடித்தவர்களின் முகங்களாகக் காணப்பட்டன. தெருக்களில் நிற்க மனமில்லாதவர்களைப் போல் அவர்கள் அவசர அவசரமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்.

கோயமுத்தூருக்கு என்ன நேர்ந்தது? நேற்றுவரை அவ்வளவு கலகலப்பாகவும், திருமகள் விலாசத்துடனும் விளங்கிய நகரம் இன்று பாழடைந்து கிடப்பானேன்? திருமகள் தமக்கையின் ஆதிக்கம் இன்று அந்நகரில் எவ்விதம் ஏற்பட்டது?

இதன் காரணத்தை அறிய வேண்டுமானால், நமது கதை ஆரம்பமாகும் காலத்தை - வருஷம் மாதம் தேதியைக் கூட கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

வருஷம், 1931; மாதம், ஜனவரி; தேதி, 6; வாசகர்களுக்கு ஏதாவது ஞாபகம் வருகிறதா?

1930 டிசம்பர் கடைசியில் மகாத்மா காந்தி லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டிலிருந்து வெறுங்கையுடன் திரும்பிப் பம்பாய்க்கு வந்து சேர்ந்தார். அவரை வரவேற்பதற்கு அப்போது இந்தியாவிலிருந்து வில்லிங்டன் சர்க்கார் தக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்! அவர் பம்பாய் வந்து இறங்குவதற்கு நாலு நாளைக்கு முன்பு காந்தி-இர்வின் ஒப்பந்தம் காற்றில் விடப்பட்டது. பண்டித ஜவஹர்லால் நேரு கைது செய்யப்பட்டார்.

மகாத்மா பம்பாய் வந்திறங்கியதும், வைஸ்ராய் வில்லிங்டனுக்குத் தந்தி அடித்தார். பதில் திருப்திகரமாயில்லை. எனவே, காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடி, மறுபடியும் சத்தியாக்கிரக இயக்கத்தைத் தொடங்குவதென்று, தீர்மானித்தது. உடனே மகாத்மாவும் காரியக் கமிட்டி அங்கத்தினரும் கைது செய்யப்பட்டார்கள்.

அதன்மேல், நாடெங்கும் இரண்டாவது சத்தியாக்கிரக இயக்கம் ஆரம்பமானது போலவே, கோயமுத்தூர் நகரிலும் ஆரம்பித்தது.

ஆனால், 1929-ல் இயக்கத்தை வளரவிட்டதுபோல் இந்தத் தடவை வளரவிடக்கூடாதென்றும், முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்றும், வில்லிங்டன் சர்க்காரின் தாக்கீது நாடெங்குமுள்ள அதிகார வர்க்கத்தாருக்கு வந்திருந்தது. ஆகவே, ஒவ்வொரு ஜில்லாவிலும், இயக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடும் பொருட்டு, ஜில்லா அதிகாரிகள் வேண்டிய குண்டாந்தடி முதலிய ஆயுதங்களுடன் தயாராயிருந்தார்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:39 am

"வேண்டாம்; ஸ்டேஷன் இங்கிருந்து கிட்டத்தில் தான் இருக்கிறது. நான் போய்விடுகிறேன். உங்கள் வண்டியில் நான் வந்ததாகவே தெரியவேண்டாம். பையன் அங்கே காத்துக் கொண்டிருந்தால் வம்பு. நீங்களும் அவசரமாய்க் காரியத்தைப் பார்க்க வேண்டும். இங்கே இருக்கிற சமுக்காளம், லாந்தர், பெட்டி, சாமான் ஒன்றும் இருக்கக்கூடாது. போய்விட வேண்டும்."

"அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். இங்கே ஒரு பிசகும் இருக்காது. நீ மட்டும் உன் காரியத்தைச் சரியாய்ப் பார்க்கவேண்டும்.

இந்தப் பேச்சு நடந்து பதினைந்து நிமிஷத்துக்குப் பிறகு ஸப்-இன்ஸ்பெக்டர் சங்கடஹரிராவ் நாயுடு போலீஸ் ஸ்டேஷனை அடைந்தார்; அங்கே இருந்த ஸ்டேஷன் ஆபீசர், கான்ஸ்டேபிள்கள் முதலியவர்களிடம், இன்று கலாட்டா நடந்திருக்கிறபடியால், ஏதாவது ஒரு வேளை 'அர்ஜெண்ட் கால்' வரலாம் என்று ஸ்டேஷனுக்கு வந்ததாகச் சொன்னார். பிறகு, அவர்களுடன் அன்றைய சம்பவங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு, மகுடபதியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அவன் தனியாய் வந்தால் என்ன செய்வது, யாருடனாவது வந்தால் என்ன செய்வது என்பதைப் பற்றி அவர் மனம் யோசனை செய்து கொண்டிருந்தது.

நாயுடு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாகியிருக்கும். பையன் பயந்து எங்கேயோ போய் ஒளிந்து கொண்டு விட்டான். இனிமேல் வரமாட்டான் என்று அவர் எண்ணத் தொடங்கிய சமயத்தில், டாக்டர் புஜங்கராவும் மகுடபதியும் வந்து சேர்ந்தார்கள். ஆகவே, ஸப்-இன்ஸ்பெக்டர், தாம் ஆலோசித்து வைத்திருந்த இரண்டாவது முறையைக் கையாண்டு, அவர்களுடன் அனுமந்தராயன் தெருவுக்குச் சென்றார். மகுடபதி அடைந்த ஏமாற்றத்தைத்தான் சென்ற அத்தியாயத்தில் நாம் பார்த்தோம்.

"என்ன தம்பி! 'ஜோக்' பண்ணுகிறாயா?" என்று ஸ்ப-இன்ஸ்பெக்டர் ஏளனமாய்க் கேட்டதும், மகுடபதி அவமானத்தினால் மனம் குன்றினான்.

டாக்டர் புஜங்கராவ் ஸப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்து "நாயுடுகாரு! என் பேரில் பிசகு. இந்தப் பையன் சொன்னதைக் கேட்டு உங்களுக்குத் தொந்தரவு கொடுத்துவிட்டேன். மன்னிக்கவேண்டும்" என்றார்.

"பரவாயில்லை, டாக்டர்! உங்கள் பேரில் மிஸ்டேக் இல்லை. இந்தப் பையன் ஏதோ 'ட்ரிக்' பண்ணுகிறான் என்று அப்போதே எனக்கு 'டவுட்' இருந்தது. நீங்கள் கூட வந்ததனால் தான் கிளம்பி வந்தேன். கதர் கட்டியிருப்பதைப் பார்த்து நீங்கள் 'டிஸீவ்' ஆகிவிட்டீர்கள்" என்றார்.

மகுடபதி டாக்டரை நோக்கி, "இல்லை டாக்டர்! நான் உங்களை ஏமாற்றவில்லை. சத்தியமாய்ச் சொல்கிறேன். கடவுள்மேல் ஆணையாய்ச் சொல்கிறேன். நான் உங்களிடம் சொன்னதெல்லாம் உண்மை. இந்த அறையில், நீங்கள் இப்போது நின்று கொண்டிருக்கும் இதே இடத்தில் இரண்டு மணி நேரத்துக்கு முன்னால் பெரியண்ணன் கிடந்தான். அவன் மார்பில் கத்தி பாய்ந்திருந்தது. அவன் குத்தப்பட்டு வீழ்ந்ததை இந்தக் கண்களாலே பார்த்தேன்..." என்று ஆத்திரத்துடன் கூறிவந்த போது நாயுடுகாரு குறிக்கிட்டார்.

"சரிதான், நாயனா, சரிதான்! எல்லாரும் காதாலே பார்ப்பார்கள். நீ மட்டுந்தான் கண்ணாலே பார்த்தே! ஒரு வேளை 'ட்ரீம்'லே பார்த்தாயோ, என்னமோ? இல்லாவிட்டால், டிலிரியம் ட்ரீமன்ஸோ? எப்படியிருந்தாலும் ஸ்டேஷனுக்கு வந்து ஸ்டேட்மெண்ட் எழுதி வைத்து விட்டுப் போ!" என்று சொல்லிவிட்டு புஜங்கராவைப் பார்த்து, "வாருங்கள் டாக்டர், போகலாம். மணி ஒன்று அடிக்கப் போகிறது. நல்ல 'வொயிட் கூஸ் கேஸ்' இன்று ராத்திரி" என்றார். சங்கடஹரிராவ் நாயுடுவுக்கு உற்சாகம் வந்தால், ஒரே மணிப்பிரவாள நடையில் இங்கிலீஷும் தமிழும் கலந்து பேசுவார் என்பது பிரசித்தமான விஷயம்.

டாக்டர் முன்னால் போகவும், மற்றவர்கள் எல்லாம் அவரைத் தொடர்ந்து போய்க் காரில் ஏறிக்கொண்டார்கள். மோட்டார் போலீஸ் ஸ்டேஷனை அடைந்ததும் டாக்டரைத் தவிர பாக்கி எல்லாரும் இறங்கினார்கள்.

"குட் நைட், டாக்டர்!" என்றார் நாயுடு.

"குட் நைட் நாயுடுகாரு!" என்று சொல்லிவிட்டு டாக்டர் வண்டியை விட்டார்.

"டாக்டர்! நான் சொன்னது அவ்வளவும் சத்தியம். ஏதோ பெரிய மர்மம் நடந்திருக்கிறது. அப்புறம் வந்து சாவகாசமாய்ச் சொல்கிறேன்..." என்று மகுடபதி இரைந்து கத்திக் கொண்டே இருக்கையில் வண்டி போய்விட்டது.

ஸப்-இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனுக்குள் நுழைந்ததும், "அடே! முந்நூற்றறுபத்தைந்து! பையனை உள்ளே தள்ளு! கையிலே காப்பை மாட்டு!" என்றார்.

இந்த மாதிரி ஏதாவது நடக்கும் என்று எதிர்பார்த்த மகுடபதி, "என்னத்திற்காக, ஸார்! என் பேரில் என்ன கேஸ்?" என்று கேட்டான்.

"என்ன கேஸா? எத்தனையோ இருக்கிறது! போலீஸாரிடம் பொய் ஸ்டேட்மெண்ட் கொடுத்த கேஸ்; பூட்டியிருந்த வீட்டுக்குள் பின்புறமாக நுழைந்த கேஸ்; கள்ளுக்கடைக்குத் தீ வைத்த கேஸ்; சட்டத்தை மீறி மறியல் செய்வதற்கு வந்த கேஸ்; இவ்வளவுந்தான்" என்றார் ஸப்-இன்ஸ்பெக்டர்.

அடுத்த நிமிஷம் இரண்டு போலீஸ் சேவகர்கள் மகுடபதியின் கையில் விலங்கை மாட்டி, அவனை லாக் அப்பிற்குள் தள்ளி அடைந்தார்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:40 am

பதினோராம் அத்தியாயம் - மலைச் சிறை

மகுடபதியைப் போலீஸ் 'லாக்-அப்பிற்குள் தள்ளி அடைத்தபோது இரவு சுமார் இரண்டு மணி இருக்கும். கிட்டத்தட்ட அதே சமயத்தில், கோயமுத்தூர் நகரின் எல்லையைத் தாண்டி மேட்டுப்பாளையம் போகும் ரஸ்தாவில் ஒரு மோட்டார் வண்டி போய்க் கொண்டிருந்தது. அந்த வண்டியில் பின் ஸீட்டில் தங்கசாமிக் கவுண்டரும் செந்திருவும் இருந்தார்கள். டிரைவருடைய ஆசனத்தில் கார்க்கோடக் கவுண்டர் உட்கார்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டு போனார்.

செந்திருவுக்கு முன்னமே சுயப் பிரக்ஞை உண்டாகிவிட்டது. ஆனாலும், இன்னும் அவள் உள்ளத்தின் பிரமை நீங்கவில்லை. மகுடபதி சோபாவின் காலில் கட்டுண்டு கிடப்பதும், கார்க்கோடக் கவுண்டர் கத்தியை ஓங்குவதும், பெரியண்ணன் குறுக்கே பாய்வதும், கத்தி அவன் மார்பில் பதிவதும், பெரியண்ணன் கீழே விழுவதுமான காட்சிகள் திரும்பத் திரும்ப அவள் மனக்கண் முன் வந்து கொண்டிருந்தன. வேறு விஷயங்களில் அவள் மனது செல்ல மறுத்தது. கத்திக்குத்து, அரிவாள் வெட்டு முதலியவைகளைக் குறித்துப் பேசுவதை அவள் சர்வ சாதாரணமாய்க் கேட்டிருக்கிறாள். ஆனால் இம்மாதிரிச் சம்பவம் எதையும் அவள் இதுவரைக்கும் பார்த்தது கிடையாது. ஆகையால்தான் அந்தப் பயங்கரக் காட்சி அவள் மனதில் அவ்வளவு ஆழமாய்ப் பதிந்துவிட்டது. கார்க்கோடக் கவுண்டர் கத்தியை ஓங்குவது நினைவில் வரும்போது, அவள் கண்களை இறுக்கி மூடிக் கொள்வாள். உடம்பு வெடவெடவென்று நடுங்கும். பெரியண்ணன் மார்பில் குத்திய கத்தி, உண்மையில் தன்னுடைய மார்பில் பாய்ந்து விட்டதாக அவளுக்குச் சில சமயம் தோன்றும். கத்தி பாய்ந்த இடத்தில் வலிப்பது போலவும் இருக்கும்.

காரில் வேகமாய் சென்றபோது, இரவு நேரத்தின் குளிர்ந்த காற்று விர்ரென்று அவளுடைய முகத்தில் அடிக்கத் தொடங்கியது. இதனால் சிறிது சிறிதாக அவளுக்கு சிந்திக்கும் சக்தி ஏற்பட்டது. தான் காரில் போவதும், தன் பக்கத்தில் தங்கசாமிக் கவுண்டர் உட்கார்ந்திருப்பதும் மெதுவாக மனதில் வந்தன. கார் எங்கே போகிறது என்ற கேள்வி எழுந்தது. சுற்றுமுற்றும் சாலையைப் பார்த்தாள். இருட்டாயிருந்தாலும், அது மேட்டுப்பாளையம் போகிற சாலையென்று ஒருவாறு தெரிந்தது. தன்னைச் சிங்கமேட்டுக்குத்தான் கொண்டு போகிறார்கள் என்று எண்ணிக் கொண்டாள்.

அப்புறம் கொஞ்சங் கொஞ்சமாக அன்று காலையிலிருந்து நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. அவையெல்லாம் உண்மையாக நடந்தவைதானா என்று அடிக்கடி சந்தேகம் உண்டாயிற்று. அந்த வீட்டில், தான் மூர்ச்சையடைந்து விழுந்த பிறகு என்ன நடந்திருக்கும்? பெரியண்ணன் செத்துப் போனவன் தானா? ஒருவேளை பிழைத்திருப்பானா? ஐயோ! பாவிகள் அந்த அழகிய வாலிபரையும்...

இச்சமயத்தில் ஏதோ மங்கிய கனவில் கேட்டது போல், பின்வரும் பேச்சுவார்த்தைகள் அவள் நினைவுக்கு வந்தன.

"பையனை என்ன செய்திருக்கிறீர்கள்?"

"செய்கிறது என்ன? சோபாவின் காலோடுதான் கட்டியிருக்கிறதே? பத்திரமாயிருக்கிறான். பையனை ஒரு மாதத்திற்குள் தூக்கு மேடைக்கு அனுப்பாமற் போனால் நான் கள்ளிப்பட்டி சென்னிமுத்துக் கவுண்டன் மகன் அல்ல..."

"பையன் நடந்ததையெல்லாம் சொல்லிவிட்டால்?"

"நாம் சொல்வதை நம்புவார்களா, அவன் சொல்வதை நம்புவார்களா?"

"இந்தப் பெண் சாட்சி சொன்னால்?..."

"சீ! பைத்தியமே? இவளுக்குக் கூடப் பயப்படுகிறாயா? இனிமேல் இவளை யார் வெளியில் விடப் போகிறார்கள்? நம்மை மீறிச் சாட்சி சொல்லி விடுவாளா?"

"போலீஸ் உளவு விசாரித்தால்..."

"போலீஸ், போலீஸ் என்று அடித்துக் கொள்ளாதே, போலீஸெல்லாம் என் கைக்குள் என்று தெரியாதா? நீ பேசாமலிரு. நான் எல்லாம் பார்த்துக் கொள்கிறேன்."

இவ்விதம் தன் சித்தப்பாவின் குரலும் கள்ளிப்பட்டிக் கவுண்டருடைய குரலும் பேசிக் கொண்டது அவளுக்கு இலேசாக நினைவு வந்தது. அவர்கள் எங்கே இவ்விதம் பேசினார்கள்? தான் எங்கே இருந்து அந்தப் பேச்சைக் கேட்டது? செந்திரு கண்களை இறுக்கி மூடிக் கொண்டு யோசனை செய்தாள். அனுமந்தராயன் தெரு வீட்டிலிருந்து தன்னை வேறொரு வீட்டில் கொண்டு போய்ப் போட்டதும், அங்கே ஒரு கட்டிலில் தான் கொஞ்ச நேரம் கிடந்ததும் - பூர்வ ஜன்மத்து ஞாபகம் போல் நினைவுக்கு வந்தன. அந்த வீட்டில், தான் கட்டிலில் படுத்துக் கிடந்த போதுதான், தனக்கு உணர்வு வந்துவிட்டது என்பதை அறியாமல் அவர்கள் அவ்விதம் பேசிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.

அந்தச் சம்பாஷணையை - துண்டு துண்டாகவும் - விட்டு விட்டும் நினைவு வந்த அந்தச் சம்பாஷணையை - செந்திரு அடிக்கடி சிந்தனை செய்தாள். அதனுடைய கருத்து இன்னதென்பதை அவள் அறிந்து கொள்ள கொஞ்ச நேரம் பிடித்தது. விஷயம் இன்னதென்று தெரிந்த போது அவளுக்கு உண்டான பயத்துக்கும், ஆத்திரத்துக்கும் அளவே இல்லை.

பெரியண்ணனைக் கொன்றதாக அந்தக் காந்திக் குல்லாக்காரர்மேல் கொலைக் குற்றம் சாட்டப் போகிறார்கள்! அந்தக் குற்றத்துக்காக அவரைத் தூக்கில் போடப் போகிறார்கள்! - ஆகா, எப்பேர்ப்பட்ட பாதகம்! என்ன பயங்கரமான அக்கிரமம்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:40 am

இதை நினைக்க நினைக்க, செந்திருவின் அறிவு விரைவாகத் தெளிந்து வந்தது. அந்த அக்கிரமத்தைத் தவிர்க்கக் கூடியவள் தான் ஒருத்திதான் என்பதை அவள் உணர்ந்தாள். பெரியண்ணன் இன்னொருவர் கையினால் குத்துப்பட்டதை அவள் கண்ணால் பார்த்திருக்கிறாள். கோர்ட்டில் அவள் போய்ச் சொன்னால், நிச்சயமாக அந்தக் காந்தி மனுஷருக்குத் தண்டனை விதிக்க மாட்டார்கள். இதை எப்படியாவது தான் நிறைவேற்ற வேண்டும் என்று அவள் பல்லைக் கடித்துக் கொண்டு தீர்மானித்தாள். அதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தன. பெரியண்ணன் தன் பேரில் அன்பு வைத்த காரணத்தினால் குத்திக் கொல்லப்பட்டான்; அவனுக்காகப் பழிக்குப் பழி வாங்க வேண்டும். அந்த வாலிபர் தன்னால் இந்தப் பெரிய அபாயத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு எறும்பைக் கூடக் கொல்லத் தயங்கக்கூடிய அந்த காந்தி மனுஷர், தன்னால் இப்போது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறார். அவரை எப்படியாவது விடுவிக்க வேண்டும். கார்க்கோடக் கவுண்டரை தான் மணந்து கொள்வதென்பது - அதுவும் அன்று இராத்திரிக்குப் பிறகு - ஒரு நாளும் இயலாத காரியம். அந்தப் பாவி - கொலைகாரன் இன்னும் இந்த உலகத்தில் இருந்தால் என்னென்ன துர்க்கிருத்தியங்கள் செய்வானோ! அந்த அழகிய வாலிபரையல்லவா இவன் தூக்குமேடையில் பார்ப்பதாகச் சொன்னான்? அதற்குப் பதிலாக இவனைத் தூக்கு மேடைக்கு அனுப்புவது தன்னுடைய காரியம்.

கார்க்கோடக் கவுண்டரைக் கல்யாணம் செய்து கொள்ளும்படி, கடைசியில் நிர்ப்பந்தம் ஏற்பட்டால், தன் காதில் இருந்த வைரத் தோட்டை உடைத்துப் பொடி பண்ணிச் சாப்பிட்டு உயிரை விட்டுவிடுவதென்று ஏற்கெனவே செந்திரு தீர்மானித்திருந்தாள். இப்போது அந்த எண்ணத்தை அவள் கைவிட்டாள். தன் உயிரை எப்படியாவது கெட்டியாகக் காப்பாற்றிக் கொள்வது அவசியம்; அப்போதுதான் பெரியண்ணனுடைய அநியாயக் கொலைக்குப் பழி வாங்க முடியும்; அந்த வாலிபரின் உயிரையும் காப்பாற்ற முடியும்.

இப்படி அவள் எண்ணிக் கொண்டிருக்கும்போது, சாலையின் ஒரு புறத்தில் சிங்கமேட்டு ஓடையும், வீடும் தெரிந்தன. வெண்ணிலாவில் ஓடை நீர் வெள்ளிமயமாய்ப் பிரகாசித்தது. அந்த ஓடைக்கரையில், முதன் முதலில் மகுடபதியைத் தான் சந்தித்ததை நினைத்தபோது, அவளுக்கு மயிர்க்கூச்செறிந்தது. மூன்று வருஷமாகத் தன்னைச் சிறை வைத்திருந்த வீட்டுக்கே மறுபடி போகிறோம் என்ற எண்ணம் அவளை என்னமோ செய்தது. முதல் நாள் காலையில் அங்கிருந்து ஒருவரும் அறியாமல் கிழவனுடன் கிளம்பியபோது எவ்வளவு பிசகாய்ப் போயிற்று? தான் நினைத்ததென்ன? மறுபடியும், அன்று இராத்திரியே அந்த ஜெயிலுக்குத் திரும்பி வருவோமென்று...

ஆனால், இதென்ன? வண்டி சிங்கமேட்டுக் குறுக்குப்பாதையில் திரும்பாமல் நேரே போகிறதே? டிரைவர் ஒரு வேளை தெரியாமல் விட்டுக் கொண்டு போகிறனோ? சித்தப்பாவைக் கேட்கலாமென்று செந்திரு வாய் எடுத்தாள். அதே சமயத்தில், தங்கசாமிக் கவுண்டர் "அண்ணே! நன்றாக யோசனை செய்துவிட்டீர்களா? நேரே போக வேண்டியதுதானே?" என்றார்.

"தம்பி! நீ என்னத்திற்கு வீணாகக் கவலைப்படுகிறாய்? யோசனை செய்கிற விஷயத்தையெல்லாம் என்னிடம் விட்டுவிடு" என்ற கார்க்கோடக் கவுண்டரின் குரலைக் கேட்டதும், செந்திரு தேள் கொட்டியவளைப் போல் துடித்தாள். வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தது கள்ளிப்பட்டிக் கவுண்டர்தான் என்பதை இதுவரைக்கும் அவள் கவனிக்கவில்லை. அந்தக் கொலைகார மனுஷருடன் ஒரே வண்டியில் போகிறோம் என்னும் எண்ணம் அவளுக்கு எவ்வளவோ துன்பத்தை உண்டாக்கிற்று. ஓடும் வண்டியிலிருந்து கீழே குதித்து விடலாமா என்று ஒரு கணம் எண்ணினாள். தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்னும் பழைய உறுதியை எண்ணிப் பல்லைக் கடித்துக் கொண்டாள். கள்ளிப்பட்டிக் கவுண்டரும் கூட இருப்பதால், ஜாக்கிரதையாய் நடந்து கொள்ள வேண்டுமென்றும் தீர்மானித்துக் கொண்டாள்.

மோட்டார் வண்டி மேட்டுப்பாளையத்தைத் தாண்டி மேலே சென்றது. நீலகிரி மலையின் அடிவாரத்தை அடைந்தது. மலைப்பாதையில் ஏறிப்போகத் தொடங்கியது.

அப்போது செந்திரு, "ஓகோ! கூனூர் பங்களாவில் நம்மை விடப்போகிறார்கள்" என்று நினைத்தாள். இதனால் ஒரு குதூகலம் உண்டாயிற்று. அவளுடைய தகப்பனார் இருந்த காலத்தில் அவர்கள் கோடைக்குக் கூனூருக்கு வருவது உண்டு. கூனூரில் அவர்களுக்குச் சொந்த பங்களா இருந்தது. பங்களாவுக்குப் பக்கத்தில் தபாலாபீஸ் உண்டு என்பது அவளுக்கு நினைவு வந்தது. பங்களாவில் இருந்த வேலைக்காரன் கூட அவளுடைய மனக்கண் முன் வந்தான். பங்கஜத்துக்கும் அவளுடைய தகப்பனாருக்கும் எம்மாதிரி கடிதம் எழுதுவது, வேலைக்காரனைச் சரிப்படுத்தி எப்படித் தபாலாபீஸில் போடச் சொல்லுவது என்றெல்லாம் யோசனை செய்யத் தொடங்கினாள். இந்த யோசனையிலேயே கண்ணயர்ந்துவிட்டாள்.

தூக்கத்தில் என்னவெல்லாமோ பயங்கரமான கனவுகள் கண்டு பதறிச் செந்திரு கண் விழித்த போது, பலபலவென்று பொழுது விடிந்திருப்பதையும், வண்டி மலையின் மேலே ஒரு மேட்டு பங்களாவின் வாசலில் நிற்பதையும் கண்டாள். அது அவர்களுடைய கூனூர் பங்களா இல்லை. சுற்றிலும் வெகு தூரத்துக்கு மனித வாசஸ்தலமே காணப்படவில்லை. நாலாபுறமும் செங்குத்தாக வளர்ந்த யுகலிப்டஸ் மரங்கள் தான் காணப்பட்டன.

தங்கசாமி கவுண்டர் கீழே இறங்கிச் செந்திருவைப் பார்த்து, "இறங்கு கீழே!" என்றார். செந்திரு இறங்கினாள்.

"போ, உள்ளே!" என்று உத்தரவு பிறந்தது.

செந்திருவுக்கு அந்தச் சூனியமான பங்களாவில் புகுவதற்கு தைரியம் வரவில்லை. குளிரினாலும் பீதியினாலும் நடுங்கிக் கொண்டே, "சித்தப்பா! என்னை எங்கே அழைத்து வந்திருக்கிறாய்? நான் இந்த வீட்டிற்குள் போகமாட்டேன். சிங்கமேட்டுக்கு என்னை அழைத்துக் கொண்டு போ! இல்லாவிட்டால்..."

"தங்கசாமி! அந்தத் தறிதலையைப் பேசவிட்டுவிட்டுப் பேசாமல் நிற்கிறாயே? இழுத்துக் கொண்டு போய் உள்ளே விடு!" என்று கள்ளிப்பட்டியார் கர்ச்சித்தார்.

தங்கசாமிக் கவுண்டர் செந்திருவின் கையைப் பற்றிய போது அவள் திமிறினாள். அப்போது கள்ளிப்பட்டிக் கவுண்டர் அங்கு வந்து, தன் இரும்புக் கைகளினால் செந்திருவைப் பற்றினார். கரகரவென்று இழுத்துக் கொண்டு போய், பங்களாவுக்குள் புகுந்து ஒரு அறையில் அவளைத் தள்ளி வெளியே கதவை இழுத்துச் சாத்திக் கதவில் நாதாங்கியை மாட்டினார். கீழே விழுந்த செந்திரு பரபரப்புடன் எழுந்து வந்து, கதவைப் படீர் படீர் என்று அடித்தாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:42 am

பன்னிரண்டாம் அத்தியாயம் - மறைந்த கடிதம்

மாஜி ஸப்-ஜட்ஜ் அய்யாசாமி முதலியார் ஐம்பத்தைந்து பிராயம் வரையில் பொருட்செல்வம் தேடிய பிறகு இப்போது அருட்செல்வம் ஈட்டுவதில் முனைந்திருந்தார். சைவத்தொண்டர் மகாநாடுகளிலும், மற்றும் சிவனடியார் திருக்கூட்டங்களிலும் அவரைத் தவறாமல் முன்னணியில் பார்ப்பது சாத்தியமாயிருந்தது. "வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்னும் விந்தை மனிதர்" கூட்டத்தை அவர் சேர்ந்தவர் அல்ல. சைவத் திருக்கூட்டங்களுக்கு அவர் தமது இல்லக் கிழத்தியையும் குழந்தைகளையும் அழைத்துப் போவதுண்டு.

பேரூரில் நடந்த சைவத்தொண்டர் மகாநாட்டுக்கு அவர் தமது குடும்பத்துடன் சென்று, ஞானியார் சுவாமிகளின் அமுதமொழிகளையும், இன்னும் பல சைவத்திருவாளர்களின் அரிய சொற்பொழிவுகளையும் செவிகளால் பருகிவிட்டுக் கோயமுத்தூருக்குத் திரும்பி வந்துசேர்ந்தார்.

கோயமுத்தூரில் அய்யாசாமி முதலியாரின் பங்களா அமைதியான சுகவாசத்துக்கென்றே அமைந்ததென்று சொல்லலாம். தென்னிந்தியாவில் பல இடங்களிலும் உத்தியோகம் பார்த்த அய்யாசாமி முதலியார், மயிலாப்பூரில் அவருக்குச் சொந்த வீடு இருந்தும், கோயமுத்தூரின் சீதோஷ்ண ஸ்திதியை முன்னிட்டு, அந்நகரைத் தமது வாசத்துக்குத் தேர்ந்தெடுத்தார். அப்படிப்பட்டவர், நல்ல பங்களாவாகத் தேர்ந்தெடுத்ததில் வியப்பில்லை அல்லவா?

அந்த விஸ்தாரமான அழகிய பங்களாவில் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தனி அறை இருந்தது. அவற்றில், பங்களாவின் முகப்பு அறைகள் இரண்டில் ஒன்று பங்கஜத்தினுடையது. அய்யாசாமி முதலியாரின் அறைக்கு அடுத்தபடியாகப் பங்கஜத்தின் அறையில்தான் புத்தகங்கள் அதிகமாயிருக்கும். ஐந்தாவது பாரத்தில் பங்கஜத்தின் படிப்பை முதலியார் நிறுத்திவிட்டார். அதற்குப் பிறகு அவளுடைய அறிவை விசாலிக்கச் செய்யும் பொறுப்பைத் தாமே ஏற்றுக் கொண்டிருந்தார்.

ஒரு பக்கத்தில் முதலியார் பங்கஜத்துக்குச் சைவ சமய அறிவையும், தமிழ் இலக்கியத்தின் சுவையையும் ஊட்டிக் கொண்டிருக்கையில், மற்றொரு பக்கம், அச்செல்வி சர்க்குலேடிங் லைப்ரெரியிலிருந்து நாவல்கள் வாசித்துத் தள்ளிக் கொண்டிருந்தாள். இதுவரையில் சுமார் முந்நூறு நாவல்கள் வாசித்திருந்தபடியால் தானே ஒரு நாவல் எழுதவும் ஆரம்பித்திருந்தாள். அதில் முக்கால் பங்கு எழுதி, கதாநாயகனையும் கதாநாயகியையும் மிகவும் ரசமான ஒரு கட்டத்தில் கொண்டு விட்டிருந்தாளாதலால், பேரூரில் அவள் செவிகள் ஒரு பக்கம் சைவச் சொற்பொழிவுகளைக் கேட்டுக் கொண்டே இருக்கையில் இன்னொரு பக்கம் அவளுடைய மனம் வீட்டில் விட்டு வந்த நாவல் கையெழுத்துப் பிரதிக்குத் திரும்பத் திரும்பப் போய்க் கொண்டிருந்தது ரசமான விஷயமாகும்.

எனவே, அன்று காலையில் பேரூரிலிருந்து திரும்பி பங்களாவுக்கு வந்து சேர்ந்ததும், பங்கஜம் அவசர அவசரமாகத் தன்னுடைய அறையைத் திறப்பதற்குப் போனாள். பங்களாவில், தோட்ட வேலை, மேஜை நாற்காலிகளைத் துடைக்கும் வேலை எல்லாவற்றிற்கும் மருதக் கவுண்டர் என்று ஒருவன் இருந்தான். அவன் கையில் மேஜை துடைக்கும் துணியுடன் பங்கஜத்தின் பின்னோடு வந்து "சாவியை இங்கே கொடு, அம்மா! நான் திறக்கிறேன்" என்றான்.

"எல்லாம் நானே திறந்து கொள்கிறேன்" என்று பங்கஜம் பூட்டைத் திறந்தாள். வழக்கம் போல சுலபமாய்த் திறக்காமல், சாவி சுழல்வதற்குக் கஷ்டப்பட்டது.

"இது என்ன, யாராவது பூட்டை மறுசாவி போட்டுத் திறந்தார்களா?" என்று கேட்டுக் கொண்டே, பங்கஜம் அழுத்தித் திறந்தாள். பூட்டும் திறந்து கொண்டது.

மருதன், "அதென்ன அம்மா, அப்படிச் சொல்றே? இங்கே எவன் மறுசாவி போட்டுத் திறக்கிறவன்?" என்று கேட்டுக் கொண்டே பங்கஜத்தின் பின்னோடு அறைக்குள் நுழைந்து மேஜை நாற்காலிகளையும் புத்தகங்களையும் மளமளவென்று தட்டத் தொடங்கினான்.

"ஒரே தூசாயிருக்கிறதே? தட்டின அப்புறம் வந்தா நல்லாயிருக்குமே?" என்றான் மருதன். அப்போது அவனுடைய கண்கள் அறையின் நாலாபக்கமும் சுழன்று சுழன்று பார்த்தன.

பங்கஜம் அவன் சொன்னதையும் கவனிக்காமல் தூசையும் பொருட்படுத்தாமல், தன்னுடைய நாவல் கையெழுத்துப் பிரதியை ஆவலாகப் புரட்டிப் பார்க்கத் தொடங்கினாள்.

மருதன், சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே வந்தவன், வாசல் ஜன்னலண்டை திடீரென்று குனிந்து எதையோ எடுத்தான்.

அது பங்கஜத்துக்குத் தெரிந்துவிட்டது. அவன் எடுத்தது வெள்ளையாய் ஏதொ ஒரு கடுதாசி மாதிரி இருந்தது.

"அது என்ன மருதா, இங்கே கொண்டு வா!" என்றாள்.

"ஒன்றுமில்லை, அம்மா, குப்பை கடுதாசி" என்று சொல்லிக் கொண்டே மருதக் கவுண்டன் கடுதாசியைக் கையில் கசக்கினான்.

"கொண்டு வா என்றால் கொண்டு வா!" என்று பங்கஜம் வீடு இடியும் படி கத்தினாள். அவள் கண்களின் தீப்பொறி பொறிந்தது.

முன்னொரு தடவை பங்கஜம் கதை எழுதியிருந்த காகிதம் ஒன்று பறந்து போய்த் தரையில் விழுந்தது. அதை வீடு கூட்டுகிறவள் குப்பைத் தொட்டியில் கொண்டு போய்ப் போட்டுவிட்டாள். அதுமுதல் எந்தக் காகிதமானாலும் அதை வேலைக்காரர்கள் தொட்டால், பங்கஜத்துக்குப் பிரமாதமான கோபம் வந்துவிடும்.

மருதன் "ஏன் அம்மா கோவிச்சுக்கிறே? இந்தா!" என்று கொடுத்தான்.

பங்கஜம், அதை வாங்கிப் பிரித்துப் படித்தாள். படிக்கும் போதே அவளுடைய முகத்தில் எல்லையற்ற ஆச்சரியத்தின் அறிகுறி உண்டாயிற்று.

"முட்டாள்! இதைப் போய்க் கசக்கி எறியப் பார்த்தாயே?" என்று சொல்லிக்கொண்டே அவள் மருதன் இருந்த இடத்தை நிமிர்ந்து பார்த்தாள். அங்கே அவனைக் காணவில்லை. பங்கஜம் கடிதம் படிக்கும்போதே அவன் நழுவி விட்டான்.

"மருதா! மருதா!" என்று கூப்பிட்டுவிட்டு, மறுபடியும் ஒரு தடவை கடிதத்தைப் படித்தாள். உடனே அந்த அறையிலிருந்து வெளிக்கிளம்பி, தகப்பனாரின் அறையை நோக்கிச் சென்றாள். வழியில் தாழ்வாரத்தில் மருதன் எதிர்ப்பட்டான்.

"இந்தக் காகிதம் எப்படியடா வந்தது? யார் என் அறையில் போட்டார்கள்?" என்று கோபமாக அவனைக் கேட்டாள்.

"எனக்குத் தெரியாது. அம்மா! நான் போட்டிருந்தால் அதை எடுத்துக் கசக்குவேனா? எந்த நாய் போட்டதோ?" என்றான்.

பங்கஜம் விரைந்து அப்பாவின் அறைக்குள் சென்றாள். அங்கே அப்பாவைக் காணவில்லை.

"மருதா! அப்பா எங்கே?" என்று கத்தினாள்.

"ஸ்நானம் செய்யறாங்க!" என்றான் மருதன்

இதற்குள், சமையர் கட்டிலிருந்து, "பங்கஜம்! காப்பி சாப்பிட்டுப் போ!" என்று தாயாரின் குரல் கேட்டது.

பங்கஜம் கடிதத்தை முதலியாரின் மேஜை மேலிருந்த பெரிய புராணத்துக்குள் வெளியில் கொஞ்சம் தெரியும்படி நீட்டி வைத்துவிட்டு, சமையலறைக்குச் சென்றாள். அந்தக் கடிதத்தைப் பற்றித் தாயாரிடம் சொல்ல அவள் விரும்பவில்லை.

சற்று நேரத்துக்கெல்லாம், பங்கஜம் காப்பி சாப்பிட்டுவிட்டு முதலியாரின் அறைக்கு வந்தபோது அங்கே அவர் இருந்தார். பங்கஜம் பெரிய புராணத்தைப் புரட்டினாள்; மறுபடியும் புரட்டினாள்; மறுபடியும் புரட்டினாள்.

தகப்பனாரைப் பார்த்து, "அப்பா! இந்தப் புத்தகத்துக்குள் ஒரு கடிதம் வைத்தேனே, எடுத்தீர்களா?" என்றாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:43 am

"நான் எடுக்கவில்லையே? என்ன கடிதம்?"

"இது என்ன அதிசயமா யிருக்கே!" என்று சொல்லிக் கொண்டே பங்கஜம் மேஜை மேலிருந்த திருமந்திரம், திருவாசகம், திருக்குறள், கலித்தொகை, கம்பராமாயணம் முதலிய புத்தகங்களையும் புரட்டத் தொடங்கினாள். ஒன்றிலும் அகப்படவில்லை.

"இதென்ன மாயமாயிருக்கே? அதற்குள் எப்படிப் போயிருக்கும்?" என்றாள் பங்கஜம்.

"நீ எழுதுகிற நாவலில் யாராவது துப்பறிகிறவன் வருகிறானோ இல்லையோ? அவனை அழைத்துக் கொண்டு வந்து கண்டுபிடிக்கச் சொல்லு. என்ன கடிதம், என்ன விஷயம் என்று எனக்குத் தெரியப்படுத்துவது உசிதமாயிருந்தால், அவ்விதமே செய். இல்லாவிட்டால் உன்னுடைய அறைக்குப் போய் நாவலின் அடுத்த அத்தியாயத்தை எழுது!" என்று முதலியார் தமாஷ் செய்தார்.

"நாலாவது, ஒன்றாவது, அப்பா! நாவலில் நடப்பதையெல்லாம் காட்டிலும் அதிசயமான சம்பவம் நடந்திருக்கிறது. செந்திருவை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதோ, இல்லையோ?"

"ஞாபகம் இல்லாமல் என்ன? அதுகிட்டேயிருந்து கடிதம் வரவில்லை என்று தான் நீ உருகிக்கொண்டிருந்தாயே! கடிதம் அதனிடமிருந்து வந்ததுதானா?"

"ஆமாம், அப்பா! ஆனால், கடிதத்தில் எழுதியிருந்த விஷயம் ரொம்ப ஆச்சரியம்."

"ரொம்ப ரொம்ப ரொம்ப ஆச்சரியமா?"

"விளையாட்டுக்குச் சொல்லவில்லை, அப்பா! இரண்டு மூன்று தடவை நான் வாசித்தேன்; அதனால் அப்படியே ஞாபகம் இருக்கிறது. அதில் எழுதியிருந்தபடியே உங்களுக்கு எழுதிக் காட்டி விடுகிறேன்" என்று கூறி மளமளவென்று காகிதமும் பேனாமும் எடுத்துப் பின்வருமாறு எழுதினாள்:

"என் உயிரினுமினிய அருமைத் தோழி பங்கஜத்துக்குச் செந்திரு அன்புடன் எழுதிக் கொண்டது. இரண்டு மாதத்துக்கு முன்பு நீ போட்ட கடிதம் கிடைத்தது. அதற்கு நான் பதில் போடாததற்கு காரணம் நான் ஜெயிலிலே இருந்தது தான். மூன்று வருஷமாய் நான் ஜெயிலிலேதான் இருந்து வருகிறேன். எனக்கு ஒரு பெரிய ஆபத்து வருவதற்கு இருக்கிறது. அதனால் இன்று காலையில் ஜெயிலிலிருந்து தப்பித்துக் கொண்டு ஓடி வந்துவிட்டேன். இந்தக் கடிதம் கொண்டு வருகிற பாட்டனுக்கு என்னிடம் ரொம்பவும் அபிமானம். அது மற்ற விவரம் எல்லாம் சொல்லும். நீ உடனே புறப்பட்டு வந்து என்னை அழைத்துப் போகவும். உன்னிடமும் மாமாவிடமும் யோசனை கேட்க வேண்டியிருக்கிறது. உங்களைத் தவிர எனக்கு வேறு கதி கிடையாது. உங்கள் வீடு தெரியாதபடியால் பாட்டனை அனுப்பியிருக்கிறேன். ஊரில் கலாட்டாவாக யிருப்பதால், உடனே நீயாவது மாமாவாவது வந்து என்னை அழைத்துப் போகவும். ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு யுகமாக உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இப்படிக்கு,
உன் அன்புள்ள தோழி,
செந்திரு"

மேற்கண்டவாறு பங்கஜம் எழுதி, முதலியாரிடம் கொடுத்தாள். முதலியார் அதைப் படித்துவிட்டு, "இது என்ன வேடிக்கை, குழந்தை! நீ எழுதும் நாவலில் யாராவது கதாநாயகி இப்படிக் கடிதம் எழுதுகிறாளா" என்று கேட்டார்.

பங்கஜம் சிறிது ஆத்திரத்துடன், "இல்லவே இல்லை அப்பா! சத்தியமாய்ச் சொல்கிறேன். நிஜமாகவே வந்த கடிதந்தான்" என்றாள்.

"அதைச் செந்திருதான் எழுதினாள் என்று உனக்கு எப்படித் தெரியும்?"

"என் தோழியின் கையெழுத்து எனக்குத் தெரியாதா, அப்பா?"

முதலியார் சிறிது சிந்தனையில் ஆழ்ந்தார். "மேலே விலாசம், தேதி போட்டிருந்ததா?" என்று கேட்டார்.

"கோயமுத்தூர் என்று போட்டிருந்தது. தேதி போட்டிருந்ததாக ஞாபகம் இல்லை."

"கடிதம் எங்கேதான் போயிருக்கும்? ஆனால் உன்னிடம் அது எப்படிக் கிடைத்தது? அதைச் சொல்லவில்லையே?" என்றார் முதலியார்.

பங்கஜம் விவரமாகச் சொன்னாள்.

"மருதா! மருதா!" என்று முதலியார் கூப்பிட்டார். மருதன் வரவில்லை. மருதன் வீட்டிலேயே இல்லையென்று தெரிந்தது.

அப்போது மருதன், அந்தப் பங்களா இருந்த சாலை முனைக்கு அப்பால் ஒதுங்கி நின்ற மோட்டார் வண்டியின் டிரைவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தான். டிரைவர் அதை வாங்கிக் கொண்டு அவனிடம் ரூபாய் ஐம்பது நோட்டாகக் கொடுத்தான்.

"இந்த ஐம்பது ரூபாய் என்னத்துக்கு ஆச்சு? எனக்கு வேலை போய்விடும் போலிருக்கு" என்றான் மருதன்.

"வேலை போனால் நேரே கள்ளிப்பட்டிக் கவுண்டர் வீட்டுக்கு வந்துவிடு. வேலை கொடுப்பாரு!" என்றான் டிரைவர்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:44 am

பதின்மூன்றாம் அத்தியாயம் - மகுடபதி எங்கே?

காணாமற்போன கடிதம் வீடெங்கும் தேடிப்பார்த்தும் அது அகப்படவில்லை. மார்க்கெட்டுக்குப் போய்விட்டு வந்ததாகச் சொன்ன மருதக் கவுண்டனைக் கடிதத்தைப் பற்றிக் கேட்டதற்கு அவன், "நான் கண்டதே இல்லை" என்று சத்தியம் செய்துவிட்டான்.

அய்யாசாமி முதலியார் அத்துடன் அந்தச் சனியனை மறந்து விட்டு, சைவ சித்தாந்தப் பத்திரிகைக்குத் தாம் எழுதி வந்த பதினோராந் திருமுறை ஆராய்ச்சியில் இறங்கியிருப்பார். அதற்குப் பங்கஜம் இடங்கொடுக்க வில்லை. அவள் நாவல் எழுதுவதைக் கூட விட்டுவிட்டாள். ஏற்கெனவே செந்திருவின் பேரில் அவளுக்கிருந்த வாஞ்சையோடு, இப்போது அவளைப் பற்றிய மர்மத்தை அறியும் ஆவலும் சேர்ந்து கொண்டது. அப்பாவை நச்சுப்பண்ணத் தொடங்கினாள்.

"கேளுங்கள், அப்பா! நாங்கள் ஸெகண்ட் பாரத்திலே வாசித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் என்னைக் காட்டிலும் செந்திரு அதிகமாக ஐந்து மார்க் வாங்கி விட்டாள். அதற்காக அவள் அழுஅழு என்று அழுதாள். மறுநாள் வேண்டுமென்று கணக்கைத் தப்பாகப் போட்டுக் குறைச்சலா மார்க் வாங்கினாள். அவள் வீட்டில் ஏதாவது பணியாரம் பண்ணினால் நான் வந்து சாப்பிட்டாலொழிய அவள் சாப்பிடமாட்டாள். நான் புதுத்துணி உடுத்தாமற் போனால் அவளும் உடுத்த மாட்டாள். கோயிலுக்குப் போய் சுவாமி கும்பிடும்போது, எனக்காகத்தான் முதலில் பிரார்த்தனை செய்வாள். இப்படியெல்லாம் பிராண சிநேகிதியாய் இருந்தவளுக்கு இப்போது ஒரு கஷ்டம் வந்திருக்கும்போது, அதைத் தெரிந்து கொண்டு ஏதாவது பரிகாரம் செய்யாமல் நான் எதற்காக உயிரோடிருப்பது?" என்று இப்படியெல்லாம் தொண தொண வென்று பேசி முதலியாரின் பிராணனை வாங்கினாள். செல்லப் பெண்ணாகிய பங்கஜத்தின் மனம் உண்மையாகவே கவலையில் ஆழ்ந்திருக்கிறது என்பதை முதலியார் கண்டபோது, ஏதாவது செய்துதானாக வேண்டுமென்று தீர்மானித்தார். இன்னது செய்வது என்பதுதான் தெரியவில்லை. எனவே, அவருடைய நண்பரான போலீஸ் டிபுடி சூபரிண்டெண்டெண்ட் ராவ்பகதூர் சங்கநாதம் பிள்ளையிடம் யோசனை கேட்பதென்று தீர்மானித்தார்.

ராவ்பகதூர் சங்கநாதம் பிள்ளை போலீஸ் இலாகாவிலும் பொதுஜனங்களிடமும் ரொம்பப் பெயர் வாங்கினவர். இலாகவில் அவரைத் திரிசங்குப்பிள்ளை என்று சொல்வதுண்டு. ஜனங்கள் சாதாரணமாக லஞ்சநாதம் என்று அவரை அழைப்பார்கள்.

அவருக்கு ராவ்பகதூர் பட்டம் எப்படி வந்ததென்றால், கொல்லிமலைப் பக்கத்தில் ஒரு பிரசித்திபெற்ற கொள்ளைக்காரனைப் பிடிக்கப்போய் உயிருடன் திரும்பி வந்த வீரத்துக்காகத்தான். அதாவது, அவருடன் போன போலீஸ் ஹெட்கான்ஸ்டபிள் ஒருவன், கொள்ளைக்காரனுடன் நேருக்கு நேர் நின்று துப்பாக்கியால் சுட்டபோது, கொள்ளைக்காரன் காயம்பட்டுவிழ, ஹெட்காஸ்டபிள் சுடப்பட்டு இறந்தான். அவன் மனைவிக்கு மாதம் ஒன்பது ரூபாய் பென்ஷன் கிடைத்தது. சங்கநாதம்பிளை சற்று தூரத்தில் மரத்தின் மறைவில் நின்று தப்பித்துக் கொண்டு திரும்பியபடியால், கொள்ளைக்காரனைப் பிடித்ததற்காக பிரமோஷனும் ராவ் பகதூர் பட்டமும் கிடைத்தன!

அவருக்குத் திரிசங்குப்பிள்ளை என்று ஏன் பெயர் வந்ததென்றால், இவர் ஏககாலத்தில் இகத்தையும் பரத்தையும் தேடிக்கொள்ள முயன்றதனால்தான்.

சங்கநாதம்பிள்ளை, சைவத்தொண்டர் மகாநாடுகளில் சொற்பொழிவு நிகழ்ந்த ஆரம்பித்தாரானால், சபையில் சிறிது நேரத்துக்கெல்லாம் சாதாரணமாக சபைத்தலைவரையும் மகாநாட்டுக் காரியதரிசியையுந் தவிர யாரும் இருக்கமாட்டார்கள். வேடிக்கையாகச் சொல்வதுண்டு: "காங்கிரஸ் கூட்டங்களைக் கலைப்பதற்குச் சங்கநாதம் பிள்ளையை அனுப்பினால் போதும்; குண்டாந்தடிக்குப் பயப்படாத ஜனங்கள் கூட அவருடைய சொற்பொழிவுக்குப் பயந்து ஓடிப்போவார்கள் என்று."

அப்படிப்பட்ட சங்கநாதம்பிள்ளையின் பிரசங்கத்தைக் கடைசி வரையில் இருந்து ஆர்வத்துடன் கேட்டுப் பாராட்டுகிறவர் நமது அய்யாசாமி முதலியார். அவர் போகிறவரையில் பங்கஜமும் சபையிலிருந்து எழுந்து போக முடியாதாகையால், ஸ்திரீகள் பகுதியில் அவளும் சிவனே யென்று தன்னுடைய நாவலின் அடுத்த அத்தியாயத்தைப் பற்றிச் சிந்தனை செய்துகொண்டு உட்கார்ந்திருப்பாள்.

இப்படியாக, அப்பா, பெண் இருவருக்கும் நன்றிக் கடன் பட்டவரான ராவ்பகதூர் சங்கநாதம் பிள்ளை, அவர்களுடைய வீட்டுக்கு வந்து சேர்ந்தார். முதலில், அவர்கள் செந்திருவைப் பற்றியும், மர்மமாக மறைந்த கடிதத்தைப் பற்றியும் சொன்னதையெல்லாம் அவர் காதில் சரியாக வாங்கிக் கொள்ளவில்லை. பேரூரில் தாம் நிகழ்த்திய சொற்பொழிவைக் குறித்து அவர்களுடைய அபிப்பிராயத்தை அறிவதிலேயே ஆவலாயிருந்தார். "பாருங்கள், மாமா, நான் எழுதுகிற நாவலிலே போலீஸ் இலாகாவே கொஞ்சமும் உபயோகமில்லை என்று எழுதி வெளுத்து வாங்கி விடுகிறேன்" என்று பங்கஜம் சொன்னதனால்கூடப் பலன் ஏற்படவில்லை. "நான் வாங்குகிற பெயரெல்லாம் வாங்கியாச்சு, அம்மா! இன்னும் இரண்டு வருஷம் இருக்கிறது பென்ஷன் வாங்க, இனிமேல் எனக்கு என்ன?" என்றார்.

கடைசியில் பங்கஜம், "மாமா! நீங்கள் மட்டும் செந்திருவை எனக்குக் கண்டுபிடித்துக் கொடுக்காமல் போனீர்களோ, இனிமேல் உங்களுடைய பிரசங்கத்தைக் கேட்கவே வரவேட்டேன்" என்று சொன்னதுந்தான், ராவ்பகதூருக்கு 'ஓகோ? விஷயம் 'ஸீரியஸ்' போலிருக்கிறது என்ற உணர்ச்சி வந்தது. பிறகு, பங்கஜத்தை எல்லா விவரமும் சொல்லச் செய்து கவனமாகக் கேட்ட பிறகு, "சிங்கமேட்டுக் கவுண்டர் காரியங்கள் அவ்வளவு சரியாயில்லை யென்று எனக்குக் கூடக் கேள்வி; விசாரிக்க வேண்டிய விஷயந்தான்" என்று ஒப்புக்கொண்டார்.

இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே, மருதக் கவுண்டர் உள்ளே வந்து "டாக்டர் புஜங்கராவ்" என்று அச்சடித்த சீட்டைக் கொடுத்தான்.

"இது யார் டாக்டர் புஜங்கராவ்? எனக்குத் தெரியாதே?" என்றார் அய்யாசாமி முதலியார்.

"டாக்டர் புஜங்கராவ், ரொம்ப நல்ல மனுஷர். காரியமில்லாமல் வந்திருக்கமாட்டார்" என்றார் ராவ்பகதூர்.

டாக்டர் புஜங்கராவ் உள்ளே வந்ததும், சங்கநாதம் பிள்ளையைப் பார்த்துத் திடுக்கிட்டார்.

அப்போது பிள்ளை "என்ன, டாக்டர்? ஏது இவ்வளவு சாவகாசம்? சத்தியாக்கிரகமெல்லாம் ஒரு மாதிரி தீர்ந்து போய் விட்டதாக்கும்?" என்றார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:44 am

"சத்தியாக்கிரகம் ஒரு மாதிரி தீர்ந்துபோனது போலத்தான். ஆனால் எனக்கு இன்னும் பல நாளைக்கு ஜோலி வைத்திருக்கிறீர்கள். மண்டை உடைந்தவனும், முழங்கால் சில்லுப் பேர்ந்தவனும், எலும்பு ஒடிந்தவனுமாகப் பதினைந்து பேருக்குச் சிகிச்சை செய்து வருகிறேன்" என்றார் டாக்டர்.

டாக்டர் புஜங்கராவ் பின்னர் அய்யாசாமி முதலியாரிடம் தனியாகக் கொஞ்சம் பேசவேண்டுமென்று தெரிவிக்க, இருவரும் எழுந்து அடுத்த அறைக்குப் போனார்கள். ஐந்து நிமிஷத்துக்கெல்லாம் அவர்கள் திரும்பி வந்தார்கள். "பிள்ளைவாள்! என்ன ஆச்சரியத்தைச் சொல்ல? நாம் பேசிக் கொண்டிருந்த விஷயமாகத்தான் டாக்டரும் வந்திருக்கிறார்" என்றார் முதலியார்.

பிறகு, டாக்டர் புஜங்கராவ், அன்றிரவு மகுடபதி தன்னிடம் வந்தது முதல் நடந்தது எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னார். அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது, நடுவில் சங்கநாதம் பிள்ளை விரலால் சமிக்ஞை செய்துவிட்டு எழுந்து வெளியில் போய், எச்சில் துப்பிவிட்டுத் திரும்பி வந்தார். கதவுக்குப் பக்கத்தில் மருதக் கவுண்டன் நின்று உற்றுக் கேட்டுக் கொண்டிருந்ததைக் கடைக்கண்ணால் கவனித்துவிட்டுத்தான் திரும்பினார். உள்ளே வந்ததும் ஒரு சீட்டில், இங்கிலீஷில் "இந்தக் கடிதம் கொண்டு வருகிறவனைப் பிடித்து நான் வரும் வரையில் லாக்-அப்பில் வைத்திருக்கவும்" என்று எழுதி கவரில் போட்டு மூடினார். "முதலியார்வாள்! உங்கள் வேலைக்காரனை இதைக் கொண்டு போய்ப் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்துவிட்டு வரச் சொல்லுங்கள்" என்றார்.

அவ்விதமே முதலியார் மருதக் கவுண்டனை அழைத்துக் கடிதத்தைக் கொடுத்தனுப்பினார்.

பின்னர், டாக்டர் புஜங்கராவ் பாக்கிக் கதையையும் சொன்னார். அன்றிரவு சம்பவங்களைத் தாம் மறந்து விட்டுத் தம் காரியத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததாகவும், ஆனால் ஸப்-ஜெயிலிலிருந்து தன்னை வந்து பார்க்க வேணுமென்று அடிக்கடி மகுடபதி சொல்லி அனுப்பியதாகவும், அதன்மேல் போய்ப் பார்த்ததாகவும், அப்போது மகுடபதி, "டாக்டர்! அன்று இரவு நான் சொன்னதில் உங்களுக்கு நம்பிக்கை பிறக்காவிட்டால், தயவுசெய்து மாஜி ஸப்-ஜட்ஜ் அய்யாசாமி முதலியார் வீட்டுக்குப் போய்ச் செந்திருவின் கடிதம் வந்ததா என்று விசாரியுங்கள்" என்று வற்புறுத்திச் சொன்னதாகவும், அதன்மேல் முதலியாரைத் தேடி வந்ததாகவும் கூறினார்.

கடிதம் வந்தது உண்மை என்றும், அது காணாமல் போன விந்தையைப் பற்றியும் முதலியார் டாக்டருக்குச் சொன்னார். எல்லோரும் சேர்ந்து ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான் என்று ஏகமனதாகத் தீர்மானித்தார்கள். மகுடபதியைத் தாமே நேரில் பார்த்துவிட்டு அவனை விடுதலை செய்ய முயற்சிப்பதாகச் சங்கநாதம் பிள்ளை வாக்களித்துவிட்டுப் போனார்.

அன்று அஸ்தமித்த பிறகு ஸப்-இன்ஸ்பெக்டர் சங்கடஹரிராவ் நாயுடு எதிர்பாராத விதமாக டாக்டர் புஜங்கராவிடம் வந்தார்.

"என்ன பிரதர்! பெரிய எழவாப் போச்சு! இந்த மாதிரி டிபார்ட்மெண்டிலே வேலை பார்க்கிறதை விட நானும் உங்களைப்போல ஏன் மெடிகல் காலேஜிலே சேரவில்லை என்று 'ரிபெண்ட்' பண்ணவேண்டியதாயிருக்கு" என்றார்.

"என்ன, நாயுடுகாரு? என்ன வந்துவிட்டது இப்போது?" என்று டாக்டர் கேட்டார்.

"அதை ஏன் கேட்கிறீர்கள்? அன்றைக்கு ராத்திரி வந்து கில்லாடித்தனம் பண்ணினானல்லவா? மகுடபதி என்ற பையன்? அவனாலே மெத்தத் தொந்தரவு, பிரதர்! ஒரு வேளை உங்களைப் பார்க்க வந்திருப்பானோ என்று பார்க்க வந்தேன்."

"இது என்ன கூத்து? அவன் தான் ஸப்-ஜெயிலில் இருந்தானே? நான் கூட முந்தாநாள் பார்த்தேனே?"

"ஆமாம், டாக்டர்! நேற்றுக் காலை வரையில் இருந்தான். நேற்று மத்தியானந்தான் ஜில்லா மாஜிஸ்ட்ரேட் கூப்பிட்டு, 'ஜாமீன் கேஸ் ஒன்றும் போடவேண்டாம். இந்தத் தடவை ஜெயிலுக்கே யாரையும் அனுப்பக்கூடாது. ஆகவே எல்லாரையும் துரத்தி விடுங்கள்' என்றார். இந்தப் பையனையும் வெளியில் அனுப்பி விட்டேன். இப்போது என்னடாவென்றால்..."

டாக்டர் புஜங்கராவ் மிக்க அதிசயத்துடன், "ஆமாம், இப்போது ஏன் அவனைத் தேடுகிறீர்கள்?" என்று கேட்டார்.

"திடீரென்று நம்ம டிபுடி துரைவாளுக்கு ஏதோ தோன்றிவிட்டது. 'அந்த மகுடபதியை எங்கிருந்தாலும் கொண்டு வா!' என்கிறார். நான் எங்கே போய்த் தேடுறது. பிரதர்! இன்னொன்று கேளுங்கள். யாரோ ஒரு மருதக் கவுண்டன் என்பவனிடம் 'இவனைப் பிடித்து லாக்-அப்பில் போடு' என்று கடிதம் கொடுத்து அனுப்பினாராம். அவன் எப்படியோ விஷயம் தெரிந்து கொண்டு இன்னொருத்தனிடம் கடிதத்தை அனுப்பி விட்டுக் கம்பி நீட்டி விட்டான். லாக்-அப்பில் இருந்த ஆள் வேறே ஆளாயிருக்கவே, துரைக்கு என் பேரில் கோபம். நான் என்ன செய்யட்டும், பிரதர்! இப்படியெல்லாம் அல்லாடுகிறதைவிடப் போலீஸ் உத்தியோகத்தை விட்டுவிடலாமென்று தோன்றுகிறது, பிரதர்! உங்களுடைய ஒபீனியன் என்ன?" என்றார் சங்கடஹரிராவ் நாயுடு.

இந்தக் கேள்வி டாக்டர் புஜங்கராவின் காதில் விழவேயில்லை. மகுடபதி எங்கே போயிருப்பான் என்று அவருடைய மனம் சிந்தனையில் ஆழ்ந்தது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:46 am

பதினான்காம் அத்தியாயம் - சித்தப் பிரமை

செந்திருவைக் காண வேண்டுமென்று பங்கஜம் துடிதுடித்தான்.

அவளுடைய ஆவலுக்கு இப்போது புதிய ஒரு காரணம் சேர்ந்து கொண்டது. அந்தக் காரணம் மகுடபதி தான்!

அந்த நிமிஷத்தில் பங்கஜம் செந்திருவைப் பார்த்திருந்தால், அவளுடைய கஷ்டங்களைப் பற்றியெல்லாம் ஒரு வார்த்தைகூடக் கேட்டிருக்கமாட்டாள். "அடி-பொல்லாத திருடி! உனக்குக் கதை பிடிக்காது. காதல் பிடிக்காது. கல்யாணம் பிடிக்காது என்று சொல்லிக் கொண்டிருந்தாயே? கன்னிப் பெண்ணாகவே இருந்து, பள்ளிக்கூட மிஸ்ட்ரஸ் வேலைக்குப் போவதாகச் சொன்னாயே? கடைசியில், இப்படிச் செய்தாய், பார்த்தாயா? சாதுவைப் போல் இருப்பவர்களை நம்பவே கூடாது; பொல்லாத கள்ளி!" என்று அவள் கன்னத்தை இடித்திருப்பாள். இன்னும் அவளுடைய கழுத்தைக் கட்டிக் கொண்டு, "அடிபெண்ணே! செந்திரு! அவன் எப்படியடி இருப்பான்? முதன் முதலில் நீங்கள் எங்கே பார்த்துக் கொண்டீர்கள்? யார் முதலில் பேசியது? நீயா? அவனா? நீ என்ன சொன்னாய்? அவன் என்ன பதில் சொன்னான்? எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் உன் தலையில் மூன்று குட்டுக் குட்டுவேன்!" என்று உண்மையாகவே தலையில் குட்டிக் காட்டியிருப்பாள்.

இப்படியாகச் செந்திருவிடம் பேசவேண்டும், கேட்க வேண்டும் என்றெல்லாம் பங்கஜத்துக்கு ஆவல் பொங்கிற்று. மேலே நாவல் எழுதுவதற்குக்கூட அவளுக்கு ஓடவில்லை. நாவலாவது, மண்ணாங்கட்டியாவது? தன்னுடைய சிநேகிதி, இணைபிரியாத பள்ளிக்கூடத் தோழி - கதை, காதல் என்று பேசினால், பிடிக்காமல் முகத்தைச் சிணுக்கியவள் - அவள் அல்லவா இப்போது பெரிய கதாநாயகி ஆகிவிட்டாள்? செந்திருவுக்கு ஒரு காதலன் - அவளுக்காக அவன் தன் உயிரைக்கூடத் தியாகம் செய்யத் தயாராயிருக்கிறான்! என்ன அதிசயம்? செந்திருவை மட்டுமில்லை - மகுடபதியைப் பார்க்க வேண்டுமென்று கூடப் பங்கஜம் ரொம்பவும் ஆவல் கொண்டாள். அவன் எப்படி இருப்பான்? சிறு பிள்ளையாய், லட்சணமாய் இருப்பானா? மீசையும் கீசையுமாய்ப் பயங்கரமா யிருப்பானா? கிராப்புத் தலையா? குடுமியா? உச்சிக் குடுமியா? காந்திக் கட்சியைச் சேர்ந்தவன் என்றால், ஒருவேளை தாடி கூட வளர்த்துக் கொண்டிருப்பானோ? சீச்சீ! ஒரு நாளும் இராது. செந்திருவைப் போன்ற அழகியின் காதலுக்கு உகந்தவனாகத்தான் அவன் இருப்பான். எல்லாம் கொஞ்ச நேரத்தில் தெரிந்து போகிறது. அப்பாவும் போலீஸ் மாமாவுந்தான் செந்திருவைக் கையோடு கூட்டிக் கொண்டு வந்து விடுவதாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்களே? ஆனால் ஏன் இன்னும் அவர்கள் வரவில்லை?

இவ்விதமெல்லாம் பங்கஜம் இரவு பத்து மணி சுமாருக்குத் தன்னுடைய அறையில் தனிமையாக உட்கார்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தாள். வீட்டில் மற்ற எல்லாரும் இரவுச் சாப்பாடு முடிந்து படுத்துக் கொண்டு விட்டார்கள். பங்கஜம் மட்டும், நாவல் எழுதப் போவதாகச் சொல்லிவிட்டுத் தன்னுடைய அறைக்கு வந்தாள். அவள் மேஜையின் மேல் மூடியிட்ட விளக்கும், விரித்த காகிதமும், பேனாவும் இருந்தன. ஆனால், காகிதத்தின் தலைப்பில்.

நாற்பத்தேழாம் அத்தியாயம்

மாய மனிதன்

என்று போட்டிருந்ததைத் தவிர, அதன் கீழே ஒரு வரிகூட எழுதப்படவில்லை.

கடிகாரத்தின் மணி பத்து டாண், டாண் என்று அடித்த போது, வாசலில் வண்டிச் சத்தம் கேட்டது. பங்கஜம் அவசரமாக விரைந்து வாசற் பக்கம் சென்றாள். சாலையில் நின்ற மோட்டாரிலிருந்து அவளுடைய தகப்பனார் இறங்கி வருவதைக் கண்டாள். வேறு ஒருவரும் வண்டியிலிருந்து இறங்கவில்லை. காரிலிருந்தபடியே போலீஸ் மாமா "குட் நைட்" என்றார். வண்டி போய் விட்டது.

அய்யாசாமி முதலியார் பங்களா வாசலுக்கு வந்ததும், பங்கஜம் அவர் கையைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு, "என்ன சேதி, அப்பா! செந்திருவைப் பார்த்தீர்களா? எங்கே பார்த்தீர்கள்? எப்படி இருக்கிறாள்? சௌக்கியமா யிருக்கிறாளா? ஏன் அவளை அழைத்து வரவில்லை? அவர்கள் விடமாட்டேன் என்று சொல்லிவிட்டார்களா? என்ன பேசாமல் இருக்கிறீர்களே? ஒன்றும் சொல்லவே மாட்டேன் என்கிறீர்களே?" என்று சரமாரியாய் கேள்விகளைப் பொழிந்தாள்.

"நீ இடங் கொடுத்தால்தானே அம்மா, நான் பேசலாம்? எல்லாம் சாவகாசமாய்ச் சொல்கிறேன். உன்னுடைய அறைக்குப் போகலாம் வா!" என்றார் அய்யாசாமி முதலியார்.

"இதை மாத்திரம் சொல்லி விடுங்கள். அப்புறம் அனுஷ்டானம் செய்து சாப்பிட்டுவிட்டு எல்லாம் விவரமாய்ச் சொல்லலாம். செந்திருவைப் பார்த்தீர்களா?" என்று பங்கஜம் பரபரப்புடன் கேட்டாள்.

"சௌக்கியந்தான் - ஒரு மாதிரியாக. அனுஷ்டானம் சாப்பாடு எல்லாம் ஆகிவிட்டன. அம்மாவை எழுப்ப வேண்டாம். உன் அறைக்குப் போகலாம், வா! எல்லாம் விவரமாய்ச் சொல்கிறேன்" என்றார் முதலியார்.

இருவரும் பங்கஜத்தின் அறைக்குப் போனார்கள். முதலியார் ஈஸிசேரில் சாய்ந்து கொண்டார். அவர் அருகில் ஒரு சின்ன நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு பங்கஜம் உட்காந்தாள்.

"என்ன, அப்பா, ஒரு மாதிரியா 'சௌக்கியம்' என்கிறீர்களோ? ரொம்பக் கவலையாயிருக்கிறதே!" என்றாள்.

"நாம் கவலைப்பட்டு அவளுக்கு ஒன்றும் செய்வதற்கில்லை, அம்மா! எல்லாம் தலையில் எழுதின எழுத்துப்படிதானே நடக்கும்! பாவம், மருதாசலக் கவுண்டர் எவ்வளவோ உத்தமமான மனுஷர், அவர் குடும்பம் ஏன் இப்படி துரதிஷ்டமாகப் போக வேண்டும்!"

"என்ன, அப்பா, அவளுக்கு? சொல்ல மாட்டேன் என்கிறீர்களே? அந்தக் கடுதாசி அவள் எங்கிருந்து எழுதினாளாம்?"



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:47 am

"அந்தக் கடுதாசைப் பற்றி நாம் காபரா அடைந்ததெல்லாம் வீண்..."

"அப்படியா?"

"ஆமாம், இன்று காலையில் நாங்கள் இங்கிருந்து கிளம்பியதிலிருந்து நடந்ததை எல்லாம் சொல்லி விடுகிறேன், கேள். நானும், ராவ்பகதூரும் நேரே சிங்கமேட்டுக்குப் போனோம். செந்திருவின் சித்தப்பா ஊரில்தான் இருந்தார். அவரோடு கள்ளிப்பட்டிக் கார்க்கோடக் கவுண்டரும் இருந்தார். கள்ளிப்பட்டிக் கவுண்டர் ரொம்பப் பொல்லாதவர் என்று எல்லோரும் செல்வதுண்டு. ஆனால், ஒரு பொல்லாத்தனத்தையும் நாங்கள் காணவில்லை. பேரூருக்குக்கூட வந்திருந்து என்னுடைய உபந்நியாசத்தை அவர் கேட்டாராம்."

"செந்திரு இப்போது சிங்கமேட்டிலேதான் இருக்கிறாளா, அப்பா? நானாவது போய்ப் பார்க்கலாமா?"

"இதற்குள் அவசரப்படுகிறாயே? எங்களை ரொம்பவும் மரியாதையுடன் வரவேற்று உபசாரம் செய்தார்கள். செந்திருவின் விஷயத்தை எப்படிக் கேட்பது என்று நாங்கள் தயங்கிக் கொண்டிருக்கையில், கள்ளிப்பட்டிக் கவுண்டரே அந்தப் பேச்சை எடுத்து விட்டார். 'நீங்கள் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். இந்தக் கடிதம் விஷயமாகத் தான் வந்திருக்கிறீர்கள்!' என்று ஒரு கடிதத்தை எடுத்துப் போட்டார். அது செந்திருவின் கடிதந்தான். குழந்தை! உன்னுடைய ஞாபக சக்தி சில விஷயங்களில் அபாரமாயிருக்கிறது. கிட்டத்தட்ட நீ எழுதிக் காட்டினபடியே இருந்தது" என்று சொல்லி, முதலியார் பங்கஜத்தைப் பெருமையுடன் பார்த்தார்.

"இருக்கட்டும், அப்பா! செந்திருவைப் பார்த்தீர்களா, இல்லையா?"

"அதுதானே, சொல்லப் போகிறேன்? கேட்டுக் கொண்டே வா. கள்ளிப்பட்டிக் கவுண்டர் பிறகு என்ன சொன்னார் தெரியுமா? எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. 'இந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறது ஒரு மாதிரி உண்மை தான். அந்தப் பெண்ணை ஜெயிலில்தான் வைத்திருக்கிறது. நீங்கள் விடுதலை செய்து கொண்டு போவதாயிருந்தால் ரொம்ப சந்தோஷம். நாங்கள் குறுகே நிற்கவில்லை. அதனால் ஏதாவது விபரீதம், உயிர்ச்சேதம் நேர்ந்தால் மட்டும் எங்களைப் பொறுப்பாக்காதீர்கள்! அந்தப் பெண்ணை விடுதலை செய்துகொண்டு போக நீங்கள் இரண்டு பேர் போதாது என்று எனக்குத் தோன்றுகிறது. இன்னும் ஏழெட்டுப் பலசாலிகளான மனிதர்களாவது வேண்டும். அப்புறம் உங்கள் இஷ்டம்' என்று கள்ளிப்பட்டிக் கவுண்டர் சொன்னார். அவர் சொன்னதின் அர்த்தம் எங்களுக்குத் தெரிந்ததும், ரொம்பவும் துக்கம் உண்டாயிற்று."

பங்கஜம் வியப்புடனும் பயத்துடனும் "என்ன, அப்பா அவர் சொன்னதின் அர்த்தம்? எனக்குப் புரியவில்லையே?" என்றாள்.

"நீ வீணாக வருத்தப்படாதே, பங்கஜம்! விதிக்கு யார் என்ன செய்யலாம்? உன் சிநேகிதிக்குச் சித்தப் பிரமை; அதுவும் ரொம்பக் கடுமையான பிரமை!..."

"இல்லவே இல்லை; இருக்கவே இருக்காது" என்று கத்தினாள் பங்கஜம்.

"இல்லாமலிருந்தால் நல்லதுதான்; ஆனால், இருக்கிறதை இல்லையென்று எப்படிச் சொல்லமுடியும்?"

"அவர்கள் சொன்னதுதானே? நீங்கள் நேரில் பார்க்கவில்லையே?"

"இப்படிக் கேட்பாய் என்று எனக்குத் தெரியும். ஆகையினால்தான், கள்ளிப்பட்டிக் கவுண்டர் 'நேரில் காட்டிவிடுகிறேன்' என்று சொன்னபோது நான் சரி என்றேன். ராவ்பகதூர் பிள்ளைக்குக் கூட அவ்வளவு இஷ்டமில்லை. 'இவர்கள் சொல்கிறது போதாதா? நாம் திரும்பிவிடலாம்' என்றார், நான் தான் போய்ப் பார்த்து விடலாம் என்று வற்புறுத்தினேன். மருதாசலக் கவுண்டருக்கும் எனக்கும் இருந்த சிநேகிதத்தைச் சொல்லி, அந்தப் பெண்ணை கண்ணாலேயாவது பார்த்துவிட்டு வரலாம் என்றேன். பார்க்காமல் போனால், நீ என்னை இலேசில் விடமாட்டாய் என்றும் சொல்லி வைத்தேன். மத்தியானம் சாப்பிட்ட பிறகு எல்லோருமாகக் கிளம்பினோம்..."

"எங்கே கிளம்பினீர்கள்? அப்படியானால், செந்திரு சிங்கமேட்டில் இல்லையா?"

"பத்து நாளைக்கு முன்பு வரையில் சிங்கமேட்டில் தான் இருந்தாளாம். ஒரு நாளைக்குத் திடீரென்று கிளம்பி ஒருவருக்கும் தெரியாமல் கோயமுத்தூருக்கு ஓடி வந்திருக்கிறாள். ஓடி வந்த இடத்தில் உனக்குக் கடிதம் எழுதியிருக்கிறாள். அந்தச் சமயம் மட்டும் நாம் ஊரில் இருந்திருந்தால் இவ்வளவு தடபுடல் ஏற்பட்டிராது..."

"என்ன, அப்பா, சொல்கிறீர்கள்? சித்தப் பிரமையோடேயா இந்த ஊருக்கு வந்தாள்?"

"ஆமாம், குழந்தை, ஆமாம்! அந்தச் சமயம் அவ்வளவு அதிகம் இல்லையாம். வீட்டில் சாதாரணமாய் நடமாட விட்டிருந்தார்களாம். ஒருவரும் கவனிக்காத சமயம் பார்த்து வீட்டை விட்டுக் கிளம்பி விட்டாளாம். பெரியண்ணன் என்கிற அவர்களுடைய வீட்டு வேலைக்காரன் அவளைத் தேடிக் கொண்டு கிளம்பி வந்து, ரயில்வே ஸ்டேஷனில் அவள் ரயில் ஏறுகிற சமயத்தில் கண்டுபிடித்தானாம். இரண்டு பேருமாக இந்த ஊருக்கு வந்தார்களாம். இங்கே சிங்கமேட்டுக் கவுண்டர் வீட்டிற்கு மெதுவாகத் தாஜா பண்ணி அவளை அழைத்துக் கொண்டு போனானாம் அந்தப் பெரியண்ணன். வீட்டின் கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு, அந்த வீட்டிலேயே அவள் இராத்திரி இருக்க வேண்டுமென்று சொன்னதுந்தான், கத்தியை எடுத்து அவனைக் குத்திவிட்டாளாம்...!"



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:48 am

பதினைந்தாம் அத்தியாயம் - மனித நிழல்

செந்திரு பெரியண்ணனைக் குத்தினாள் என்று அய்யாசாமி முதலியார் சொன்னதும், பங்கஜம் நெருப்பை மிதித்தவள் போல் துள்ளி எழுந்து, "ஐயையோ! என்ன அப்பா சொல்லுகிறீர்கள்?" என்றாள்.

"ஆமாம், அம்மா! நடந்ததைத்தான் சொல்கிறேன்."

"செந்திருவா கத்தியை எடுத்து ஒருவனைக் குத்தினாள்? சொல்கிறவர்கள் சொன்னால் கேட்பவர்களுக்கு மதி எங்கே போச்சு என்பார்களே?..."

அய்யாசாமி முதலியார் புன்னகையுடன், "எங்கள் மதி எங்கேயும் போகவில்லை. சரியாகத்தான் இருக்கிறது. உன் தோழியின் மதிக்குத்தான் கேடு வந்துவிட்டது. எல்லாம் துரதிர்ஷ்டந்தான்" என்றார்.

"என்னதான் சித்தப் பிரமை என்றாலும், கத்தியால் குத்தத் தோன்றுமா அப்பா! அதிலும் செந்திரு, பாவம், ஒரு எறும்பு ஈயைக்கூட ஒன்றும் செய்யமாட்டாளே? ஜட்கா வண்டிக்காரன் குதிரையை அடித்தால், அதைப் பொறுக்காமல் கண்ணைப் பொத்திக் கொள்வாளே? அவள் கத்தியை எடுத்து ஒருவனைக் குத்தினாள் என்றால், எப்படி நம்புகிறது, அப்பா?"

"நம்புவது கஷ்டந்தான், குழந்தை! யார் இல்லை என்றார்கள்? உன் சிநேகிதிக்கு இப்படி வரவேண்டாந்தான். ஒரு வேளை அவள் அப்பா உயிரோடிருந்து, மயிலாப்பூரில் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டு சந்தோஷமாக யிருந்திருந்தால், இப்படியெல்லாம் வந்திராது. தலையில் எழுதிய எழுத்தை யாராலாவது அழித்து விடமுடியுமா? - ஆனால், உனக்கு ஒன்று சொல்கிறேன். பங்கஜம்! குத்து வெட்டு எல்லாம் நமக்குத்தான் பயங்கரமே தவிர, இந்த ஜில்லாவில் ரொம்ப சகஜம். நமது சென்னை ராஜதானியிலே வருகிற கொலைக் கேஸுகளிலே பாதி கோயமுத்தூர் ஜில்லாவில் தான். இந்தக் கொங்கு நாட்டின் காற்றிலேயே ஏதோ கேடு இருக்க வேண்டும். உன் சிநேகிதியைத்தான் எடுத்துக் கொள்ளேன். அவள் இப்படி மாறிப்போவாளென்று யார் கண்டார்கள்? அப்பா! என்ன பயங்கரமான கூச்சல்! 'குத்து' 'வெட்டு' 'கொலை' 'இரத்தம்' 'பலி' என்றெல்லாம் அவள் போட்ட பயங்கரமான கூச்சலைக் கேட்டிருந்தால், நீ நடுங்கிப் போயிருப்பாய்" என்றார் முதலியார்.

"ஐயோ! அப்படியா? நீங்களே பார்த்தீர்களா அப்பா?"

"அதுதான் சொன்னேனே. நீ இப்படிக் கேட்பாயென்று தெரிந்துதான் நேரே போய்ப் பார்த்துவிட்டு வந்து விடுவோம் என்று ராவ்பகதூரிடம் சொன்னேன். எல்லோருமாக மத்தியானம் கிளம்பினோம்."

"எங்கே கிளம்பினீர்கள்? அப்படியானால் செந்திரு இப்போது சிங்கமேட்டில் இல்லையா?" என்று பங்கஜம் கேட்டாள்.

"நீலகிரியில் கூனூருக்கு மேலே கொஞ்ச தூரத்தில் தேவகிரி எஸ்டேட் இருக்கிறது. அது கள்ளிப்பட்டிக் கவுண்டர் எஸ்டேட். அங்கே கவுண்டருடைய பங்களாவில்தான் இப்போது செந்திரு இருக்கிறாள். குளிர்ச்சியான இடத்தில் இருந்தால் சித்தப்பிரமைக்கு அனுகூலம் என்று டாக்டர் சொன்னதின் மேல் அங்கே அழைத்துப் போய் வைத்திருக்கிறார்களாம். இன்றைக்கு மத்தியானம் இரண்டு கவுண்டர்களும் போய்ப் பார்த்துவிட்டு வர எண்ணியிருந்தார்களாம். ஆகவே, எல்லாருமாகக் கள்ளிப்பட்டிக் கவுண்டர் காரிலேயே கிளம்பினோம்; ஹட்ஸன் கார் மலையிலே என்ன ஜோராக ஏறிற்று தெரியுமா?..."

"காரில் போன பெருமை இருக்கட்டும், அப்பா! செந்திருவின் கதியை நினைத்தால் எனக்கு என்னமோ செய்கிறது. ரொம்ப வேதனையாயிருக்கிறது. அவளை நீங்கள் பார்த்தீர்களா? உங்களை அவள் அடையாளம் கண்டு கொள்ளவில்லையா?" என்றாள் பங்கஜம்.

"அடையாளமாவது, கண்டு கொள்ளவாவது! கார் பங்களாவின் மேட்டில் ஏறும்போதே பயங்கரமான கூச்சல் சத்தம் கேட்டது. பங்களா வாசலில் கார் நின்றதும் 'யாரடா தடிப்பசங்கள் காரிலே வந்து இறங்குகிறது?' என்று ஒரு கோரமான குரல் கேட்டது. உன் தோழியின் குரல் எவ்வளவு கோரமாய்ப் போய் விட்டது தெரியுமா? பிறகு, கொண்டுவா, 'நரபலி' 'கழுத்தை முறித்து, இரத்தத்தைக் குடிக்கிறேன்!' 'குத்து; வெட்டு!' என்று கூச்சல் கிளம்பிற்று. அதையெல்லாம், விவரமாக உனக்குச் சொல்லக்கூடாது. சொன்னால் ராத்திரியில் உளறியடித்துக் கொள்வாய். கார்க்கோடக் கவுண்டர் எங்களைப் பார்த்து, 'என்ன சொல்கிறீர்கள்? அழைத்துக் கொண்டு போகிறீர்களா?' என்று கேட்டார்.

நாங்கள் என்னத்தைச் சொல்கிறது? ராவ்பகதூரும் நானும் ஒருவரையொருவர் பார்த்து அசட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டோ ம். பங்களா வாசலிலிருந்தபடி காரிலிருந்து கீழே இறங்காமலேயே நாங்கள் திரும்பிப் போகத் தயாராயிருந்தோம். ஆனால், கார்க்கோடக் கவுண்டர் விடவில்லை. உள்ளே வந்து பார்க்கவேண்டும் என்றார். பங்களாவுக்குள் போனோம். பாவம், அங்கே ஒரு அறையில் செந்திருவைப் பூட்டி வைத்திருக்கிறது. புத்தி கொஞ்சம் தெளியும் போது வெளியே விடுகிறார்களாம். நாங்கள் போனபோது பைத்தியம் ரொம்பக் கடுமை. ஜன்னலண்டையில் கவுண்டர் எங்களை அழைத்துப் போனபோது அங்கிருந்த சமையற்காரி வந்து குறுக்கிட்டு, 'அந்தப் பெண் துணையை எல்லாம் கிழித்துப் போட்டுவிட்டு உட்கார்ந்திருக்கிறது' என்றாள். அந்தக் கண்றாவியை என்னால் பார்க்கமுடியாது என்று சொல்லிவிட்டேன். ராவ்பகதூரின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு, கவுண்டர் ஜன்னலண்டை போனார். உள்ளேயிருந்து ஒரு தண்ணீர்க் குவளை ஜன்னல் கம்பிகளின் மேல் வந்து படீரென்று விழுந்தது. ராவ்பகதூர் ஒரேயடியாக மிரண்டுவிட்டார். அப்புறம் என்னத்தைச் சொல்கிறது? பேசாமல் திரும்பி வந்தோம்" என்று கதையை ஒரு விதமாக முடித்தார், அய்யாசாமி முதலியார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக