ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by யினியவன் Today at 2:27 pm

» குருகுலத்தில் பெண்ணுடன் தனிமையில்... 32 வயது துறவி கைது!
by கே. பாலா Today at 2:27 pm

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 2:26 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 2:26 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by கே. பாலா Today at 2:18 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by ஜேன் செல்வகுமார் Today at 2:16 pm

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by ஜேன் செல்வகுமார் Today at 1:58 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜேன் செல்வகுமார் Today at 1:50 pm

» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm

» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm

» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm

» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm

» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm

» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am

» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

காம நோய்க்குக் கண்கண்ட மருந்து...

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

காம நோய்க்குக் கண்கண்ட மருந்து...

Post by Aathira on Sun Dec 12, 2010 10:23 am

காமநோய்க்குக் கண்கண்ட மருந்து...



இன்று வலைத்தளத்தில் கண்ட ஒரு செய்தி. இல்லை.இல்லை.. பரவலாகப் பல வலைத்தளங்களில் பல்வேறு தலைப்பின் கீழ் உலா வந்து கொண்டிருக்கின்ற செய்தி இது. உங்கள் பார்வைக்காக.

சுவிட்சர்லாந்தின் ஜூரிஜ்பல்கலைக் கழகத்தின் டாக்டர் வீட்டிசன் 51 இணையர்களிடம் நடத்திய ஆய்வின் முடிவு இது. வாரத்தில் ஒரு சில முறைகளாவது தம் துணையைக் கட்டி அணைப்பது, முத்தமிடுவது, உடலுறவு கொள்வது ஆகிய இவற்றால் மன அழுத்தம் குறைகிறது என்கிறது இவ்வாய்வு.



ஒருவர்ஒருவரை அன்பாக நடத்தும் தம்பதிகளுக்கு மன
அழுத்ததிற்குக் காரணமான கார்டிசல் என்ற ஹார்மோன் குறைவாகச் சுரக்கின்றது என்று கண்டறியப் பட்டுள்ளது.

இதைத்தான் நம் நவரச நாயகன் அன்றே படம்போட்டுக் கூறிவிட்டாரே என்று சிந்திப்பது புரிகிறது.

அப்படி என்ன புதிய செய்தியை இவர்கள் கண்டறிந்து விட்டனர்.இதெல்லாம் எங்கள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் ரொம்பப்பழசு என்று ஜீரிஜ் பல்கலைக் கழகத்திற்குக் கேட்கின்ற அளவில் கத்த வேண்டும் போல இருக்கிறது. என்றோ தமிழன் கண்டறிந்தவையெல்லாம் இன்று ஆய்வின் முடிவு என்று கூறி எக்காளமிட்டு வரும் இது போன்ற பல்கலைக் கழகங்களுக்கு யார் செப்புவது?

கட்டிப் பிடித்து அகற்ற அப்படி என்ன மனநோய் தம்பதிகளுக்குவருகிறது? அதற்கு என்ன காரணம்? ஒருவரை ஒருவர் விட்டு அகன்று சென்று கொண்டிருப்பதே இந்தமனநோய்க்குக் காரணம் என்கிறது அன்று முதல் இன்று வரை தோன்றி வளர்ந்துள்ள அறத்துடன் மருத்துவமும் பேசும் எங்கள் தமிழ் இலக்கியம்.

சங்க காலத்தில் நிலங்களைக் குறிஞ்சி, முல்லை,மருதம், நெய்தல், பாலை என்று ஐவகையாகப் பிரித்து இருந்தனர். இவை ஒவ்வொன்றிற்கும் முதல்பொருள் என்று நிலத்தையும் காலத்தையும் குறிப்பிட்டு இருந்தனர். அதைல் குறிஞ்சி மலைப்பகுதியையும், முல்லைக் காட்டுப் பகுதியையும், மருதம் வயல் பகுதியையும், நெய்தல் கடல் பகுதியையும், பாலை வறண்ட பாலை நிலத்தையும் குறிக்கும்.

இந்த ஐவகை நிலங்களுக்கு உரிப்பொருள் என்று ஒவ்வொன்றைச்சுட்டி இருந்தனர். உரிப்பொருள் என்பது அந்தந்த நிலத்து மக்களின் வாழ்வியல். குறிஞ்சிக்குகுளிர் பாங்கான மலைப்பகுதியாதலால் அங்கு தலைவனும் தலைவியும் கூடுவர். எனவே புணர்தல் என்றும், முல்லையில் கூடிக்களித்த அவர்கள் திருமணம்புரிந்து நிலையாக குடிபுகுந்து இல்லறம் நடத்துவர்.
ஆதலால் இருத்தல் என்றும், மருதம் அப்படி நிலையாக அன்புடன் இல்லறம் நடத்துகையில் கூடல் சிறக்க ஏதுவான ஊடல் நிகழும். எனவே ஊடல் என்றும், நெய்தல் நிலத்தில் பிழைப்பு கருதி மீன் பிடிக்கவோ, முத்து எடுக்கவோகடலில் சென்ற தலைவன் வருகைக்காக கவலைப் பட்டுக் கொண்டிருப்பாள் தலைவி. அதனால் இரங்கல் என்றும், பாலை நிலம் வறண்ட பூமி. அங்கு பிழைக்க வழியின்றி பொருள் ஈட்டுவதற்காகத் தலைவியை விட்டுத் தலைவன் பிரிந்து செல்வான். அதனால் அங்கு பிரிதல் என்றும் உரிப்பொருளை ஆக்கி இருந்தனர்.

பாலைத் திணையில் அமைந்த பாடல்கள்பெரும்பாலும் மனநோயாளியாக மாறிய தலைவி கூற்றுப் பாடல்களாக அமைந்திருப்பதைக் காணலாகிறது.மனவியல் வல்லுநராகத் திகழ்ந்த தமிழ்ர்கள் நோய், நோக்குக் காரணம், அதைத் தீர்க்கும் மருந்து என்னென்ன என்பதை இலக்கியம் படைத்துள்ளனர்.

சங்க இலக்கியத்தில் பசலை நோய் என்று ஒரு நோய் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும். பசலை என்பது உணவு,உறக்கம் செல்லாது காதலனையே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஏற்படும் நோய். ஏன்நமக்கே கூட சரியான உணவும், போதிய உறக்கமும் இல்லாவிட்டால் நாளடைவில் விழி குழிவெய்தி,மேனி இளைத்து, கருத்துப் போவது இயற்கை. இந்தக் கரிய நிறத்தையே பசலை என்றனர் சங்கத்தமிழர்.நம் மேனி கருத்து இளைப்பதற்கும் காதலரின் மேனி கருப்புக்கும் என்ன வேறுபாடு என்றால்அவர்களது ஆற்றா நோய். அதாவது காதலனைத் தவிர வேறு மருந்தால் குணப்படுத்த முடியாத நோய்.மற்றது உண்டு, உறங்கிக் குணப்படுத்திக் கொள்ளக்கூடிய நோய். இது காதலித்து, பிரிவுத்துயரைஅனுபவத்தவருக்கு நன்கு புரியும். இதற்கு நீர் இறைக்காத கேணியின் நீரின் மீது படர்ந்துஇருக்கும் பாசியைப் போன்று என்று விளக்குகிறது ஒரு சங்கப் பாடல்.

“ஊருண் கேணி யுண்குறைத் தொக்க
பாசி யற்றே பசலை காதலர்
தொடு வழித் தொடு வழி நீங்கி
விடுவுழி விழுவுழி பரத்த லானே

சரி காதல் என்பது நோயா? என்று புருவங்களைஉயர்த்துவது புரிகிறது. ஆம் நோய்தான். நோயும் மருந்து இரண்டும் ஆவது காதல். அதனால்தான்திருவள்ளுவரும்

நன்கு தேய்த்து வைத்த வெள்ளி, பித்தளைப்பாத்திரங்களின் மீது நாளடைவில் பசுமை ஏறுவது போல தங்கம் போல ஒளிவிடும் மங்கையின் நிறம்மங்கி ஒளி குன்றக் காரணம் காதல் நோய்.இதைத் திருவள்ளுவர் பத்துப் பாக்களில் கூறியுள்ளார். சான்றுக்கு, “காம நோயையும் பசலை நிறத்தையும் கைமாறாக எனக்களித்து, என் அழகையும் நாணத்தையும் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார் என்று தலைவி கூறுவது. குறள் இதோ,

“சாயலும் நாணும அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து“

மற்றொன்று, “ அதோ பார் என் காதலர் பிரிந்துசெல்கின்றார். இதோ பார் என் மேனியில் பசலை நிறம் வந்து படர்கின்றது“ என்று தலைவி பசலைநோய் வந்து கொண்டிருப்பதை படம் பிடிப்பாள். குறள் பின்வருவது.

“உவக்காண்எம் காதலர்செல்வார் இவக்காணென்
மேனி பசப்பூர் வது“

மற்றொன்று வேண்டுமென்றாலும் இருக்கின்றது. இது இன்னும் சுவையானது. விளக்கு மறைவினைப் பார்த்துக்கவியக் காத்திருக்கிற இருளைப் போல, தலைவனுடைய தழுவதலின் சோர்வைப் பார்த்து என் உடலைத்தழுவ, பசலைக் காத்திருக்கிறது என்று தலைவி வருந்துவது. இந்தக் குறளையும் பார்க்க.
“விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு

அதுமட்டுமா? புள்ளிக்கிடந்த (தழுவிக் கிடந்த)தலைவி சற்று அகன்ற போது பசலை நிறம் அள்ளிக்கொண்டது போல வந்து பரவிவிட்டதே என்றெல்லாம் தலைவியைப் புலம்பவைத்ததென்றால் அது நோய்தானே? இது நாகரிகமாகக் காதலை அதிகம் வெளிக்காட்ட விரும்பாத தலைவியின் புலம்பல். இன்னும் சங்கப்பெண்டீர் பலரின் இந்நோய்க்கான புலம்பலை பாருங்கள். என் உயிர்மிகச்சிறிது காமமோ பெரிது என்று ஒருத்தி “ உயிர்த்தவ சிறிது; காமமோ பெரிது” , “அது கொள் தோழி காம நோயே என்று ஒருத்தி, நோய் தந்தனனே தோழிஎன்று ஒருத்தி, வெண்ணெய் உணங்கல் போல பரந்தன்றுஇந்நோய்என்று ஒருத்தி அதாவதுவெண்ணெய் உருகினால் வழிந்து பரவுவது போல உடல் முழுவதும் பசலையைப் பரவச் செய்ததாம்,

“சொல்லரு கொடுநோய்க் காமக் கனலெரி என்று பெருங்கதைக் கூறும் காமநோய்க்குக் காரணி காதலன்றோ? உள்ள நோய், வசா நோய்’ ‘இன்னா வெந்நோய்’, ’ஆனனா நோய், ஈடும்மை நோய்’, ‘துஞ்சா நோய், என்றெல்லாம் கடுமையாயகச் சுட்டப்படுகிற இந்நோய்க் கண்ட மகளிர் சங்ககாலத்தில் அதிகமாகவே காணப்பட்டுள்ளனர். இவையெல்லாம் நாகரிகமாகக் காதலை அதிகம் வெளிக்காட்ட விரும்பாத தலைவியின் புலம்பல்கள்.

ஒரு சங்கத்தலைவி கிட்டத்தட்ட ஹிஸ்டீரியாபோலவே அலறிக்கொண்டு, தலையில் முட்டிக்கொண்டு, மார்பில் அடித்துக் கொண்டு, ஐயோ! எந்நோயைஅறியாது உலகோர் எல்லாம் நிம்மதியாகத் தூங்குகின்றனரே என்று புலம்பிக்கொண்டு, காட்டு வழிகளிலெல்லாம் அலைந்து திரிகிறாள் என்றால் இந்நோயின் கொடுமையை இதைவிட தத்துரூபமாகக்காட்ட முடியுமா என்று வியக்கத்தான் வேண்டியுள்ளது.

“முட்டுவேன் கொல் தாக்குவேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆசுஒல்லெனக் கடவுவேன் கொல்
அலமரல் அசைவளி அலைப்பவென்
உயவு நோயறியாது துஞ்சும்உளர்க்கே

மெல்ல மெல்ல உயிரைப் போக்கும் மன நோய்இக்காம நோய். இந்நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டது எக்காலத்தில்? நோயைக் கூறுவதுடன்தம் கடன் முடிந்து விட்டது என்று எண்ணுபவன் அல்லன் தமிழன். அந்நோய்க்கு மருந்தும் கூறி விடும் நோய்தீர்க்கும் மருத்துவன் அவன்.
இந்நோய்க்கு பிற மருந்தில்லை அவனைத் தவிர என்பதை,
மருந்துபிறி தில்லையவர்மணந்த மார்பே என்று கூறியுள்ளது அன்றே தமிழ் மருத்துவ ஆய்வு அன்றே. இதை இன்றுதான்நிருபித்து உள்ளது ஜூரிஜ் பலகலைக்கழகம்.

உடலில் தோன்றும் வெவ்வேறு நோய்களுக்குவெவ்வேறு மருந்துகள் இருக்க காதல் நோய்க்கு மட்டும் மருந்து காதலனே என்கிறது தமிழ்இலக்கியம். இதோ,

“பிணிக்கு மருந்து பிறமன்அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து

இதைவிடச் சான்று தேவையா? தமிழன் மருத்துவத்தில் கைதேர்ந்தவன் என்பதை அறிய. அம்மருத்துவமும் எவ்வாறு இருக்க வேண்டுமாம்..

பிரிந்தோர் புணர்க்கும்பண்பின்
மருந்தும் உண்டோ

பிரிந்தவர் கூடிப் புணர்வதை விட சிறந்த மருந்து வேறுஉண்டா என்கிறது இச்சங்கப்பாடல். இதனினும் மேலாய் அப்புணர்ச்சியும் எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவ மருத்துவன் கூறுவதைப் பார்க்கலாமா?

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடைபோழப் படாஅ முயக்கு


காற்றுக்குகூடஇடம் கொடாது முயங்க வேண்டும் என்று தெய்வப்புலவர் அன்றே கூறியுள்ளதும் இதனால்தான். (வளி - காற்று, முயக்கு - அணைப்பு).

இன்னும் கூறப்போனால் சங்கத்தமிழன் காதலுக்குமுக்கியத்துவம் கொடுத்தது நலமான ஒரு சமுதாயத்தைக் காணவே என்று நாம் உறக்கக் கூறிக் கொள்ளலாம் பெருமையுடன்.. எம் ஆதித்தமிழன் சிறந்த மன நல மருத்துவனே..

இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் ஹிஸ்டீரியா என்று கூறி மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று பணப்பையைக் கரைப்பதை விடுத்து காதல் புரிந்தவரின் மனப்பையை அன்பால் நிறையுங்கள், நம் முன்னோர் கூறியுள்ளதைப் போல... நீங்களும் மகிழலாம்... துணையும் நலம் பெறலாம்.




நன்றி குமுதம் ஹெல்த்.

ஆதிரா.


Last edited by Aathira on Thu Dec 16, 2010 12:57 am; edited 2 times in total

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: காம நோய்க்குக் கண்கண்ட மருந்து...

Post by ரபீக் on Sun Dec 12, 2010 10:26 am

சிறப்பான தகவலுக்கு நன்றி அக்கா

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: காம நோய்க்குக் கண்கண்ட மருந்து...

Post by சிவா on Sun Dec 12, 2010 10:35 am

கட்டிப் பிடிப்பதில் இவ்வளவு மருத்துவம் உள்ளதா? அதையும் அன்றே நம் முன்னோர்கள் எழுதி வைத்துச் சென்றது வியப்பளிக்கிறது.

(இனிமேல் யாருடனும் கைகுலுக்குவதில்லை, கட்டிப்பிடி வைத்தியம்தான்)




பதிவுகள்: 790152 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81936 | புதிய உறுப்பினர்: vdevaraj

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: காம நோய்க்குக் கண்கண்ட மருந்து...

Post by Aathira on Sun Dec 12, 2010 10:40 am

சிவா wrote:கட்டிப் பிடிப்பதில் இவ்வளவு மருத்துவம் உள்ளதா? அதையும் அன்றே நம் முன்னோர்கள் எழுதி வைத்துச் சென்றது வியப்பளிக்கிறது.

(இனிமேல் யாருடனும் கைகுலுக்குவதில்லை, கட்டிப்பிடி வைத்தியம்தான்)


பார்த்து கட்டையடி வாங்காமல் இருந்தால் சரி.. எல்லாத்துக்கு இடம், பொருள், ஏவல்.. எல்லாம் இருக்கு....சாமீ....
சரி சரி அடி வாங்கிக் கொண்டு வந்தால் நான் பார்த்துக் கொள்ளுகிறேன்.. எங்கெங்கு அடி விழுந்திருக்கு என்று..

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: காம நோய்க்குக் கண்கண்ட மருந்து...

Post by Thanjaavooraan on Sun Dec 12, 2010 10:42 am

அருமையான கட்டுரை. பகிர்வுக்கு நன்றிகள்

Thanjaavooraan
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 820
வசிப்பிடம்: DUBAI
சேர்ந்தது: 16/09/2010
மதிப்பீடு: 18

Back to top Go down

Re: காம நோய்க்குக் கண்கண்ட மருந்து...

Post by உதயசுதா on Sun Dec 12, 2010 10:44 am

Aathira wrote:
சிவா wrote:கட்டிப் பிடிப்பதில் இவ்வளவு மருத்துவம் உள்ளதா? அதையும் அன்றே நம் முன்னோர்கள் எழுதி வைத்துச் சென்றது வியப்பளிக்கிறது.

(இனிமேல் யாருடனும் கைகுலுக்குவதில்லை, கட்டிப்பிடி வைத்தியம்தான்)


பார்த்து கட்டையடி வாங்காமல் இருந்தால் சரி.. எல்லாத்துக்கு இடம், பொருள், ஏவல்.. எல்லாம் இருக்கு....சாமீ....
சரி சரி அடி வாங்கிக் கொண்டு வந்தால் நான் பார்த்துக் கொள்ளுகிறேன்.. எங்கெங்கு அடி விழுந்திருக்கு என்று..

அடி வாங்குனதுக்கப்புரம் நீங்க என்ன பார்க்குறது,எங்க எல்லாம் வீங்கி இருக்குன்னா?

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 926

Back to top Go down

Re: காம நோய்க்குக் கண்கண்ட மருந்து...

Post by Aathira on Sun Dec 12, 2010 10:52 am

உதயசுதா wrote:
Aathira wrote:
சிவா wrote:கட்டிப் பிடிப்பதில் இவ்வளவு மருத்துவம் உள்ளதா? அதையும் அன்றே நம் முன்னோர்கள் எழுதி வைத்துச் சென்றது வியப்பளிக்கிறது.

(இனிமேல் யாருடனும் கைகுலுக்குவதில்லை, கட்டிப்பிடி வைத்தியம்தான்)


பார்த்து கட்டையடி வாங்காமல் இருந்தால் சரி.. எல்லாத்துக்கு இடம், பொருள், ஏவல்.. எல்லாம் இருக்கு....சாமீ....
சரி சரி அடி வாங்கிக் கொண்டு வந்தால் நான் பார்த்துக் கொள்ளுகிறேன்.. எங்கெங்கு அடி விழுந்திருக்கு என்று..

அடி வாங்குனதுக்கப்புரம் நீங்க என்ன பார்க்குறது,எங்க எல்லாம் வீங்கி இருக்குன்னா?


அக்காக்கள் நாம பாக்காமல் வேறு யாரு பாப்பாங்க சுதா.. நம்ம தம்பி இல்லையா..
ரொம்ப நல்லவரு வேற்...

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: காம நோய்க்குக் கண்கண்ட மருந்து...

Post by உதயசுதா on Sun Dec 12, 2010 10:55 am

Aathira wrote:
உதயசுதா wrote:
Aathira wrote:
சிவா wrote:கட்டிப் பிடிப்பதில் இவ்வளவு மருத்துவம் உள்ளதா? அதையும் அன்றே நம் முன்னோர்கள் எழுதி வைத்துச் சென்றது வியப்பளிக்கிறது.

(இனிமேல் யாருடனும் கைகுலுக்குவதில்லை, கட்டிப்பிடி வைத்தியம்தான்)


பார்த்து கட்டையடி வாங்காமல் இருந்தால் சரி.. எல்லாத்துக்கு இடம், பொருள், ஏவல்.. எல்லாம் இருக்கு....சாமீ....
சரி சரி அடி வாங்கிக் கொண்டு வந்தால் நான் பார்த்துக் கொள்ளுகிறேன்.. எங்கெங்கு அடி விழுந்திருக்கு என்று..

அடி வாங்குனதுக்கப்புரம் நீங்க என்ன பார்க்குறது,எங்க எல்லாம் வீங்கி இருக்குன்னா?


அக்காக்கள் நாம பாக்காமல் வேறு யாரு பாப்பாங்க சுதா.. நம்ம தம்பி இல்லையா..
ரொம்ப நல்லவரு வேற்...

சிவாவுக்கு நீங்க வேணுமின்னா அக்காவா இருங்க.அதுல எதுக்கு என்னையும் கூட்டு சேர்க்கரிங்க? நான் சிவாவுக்கு அக்கா இல்லை அக்கா இல்லை
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 926

Back to top Go down

Re: காம நோய்க்குக் கண்கண்ட மருந்து...

Post by சிவா on Sun Dec 12, 2010 10:58 am

Aathira wrote:
உதயசுதா wrote:
அடி வாங்குனதுக்கப்புரம் நீங்க என்ன பார்க்குறது,எங்க எல்லாம் வீங்கி இருக்குன்னா?


அக்காக்கள் நாம பாக்காமல் வேறு யாரு பாப்பாங்க சுதா.. நம்ம தம்பி இல்லையா..
ரொம்ப நல்லவரு வேற்...


இப்படி பாசக்கார அக்காக்கள் கிடைத்தை எண்ணி மகிழ்ச்சியில் மனம் துள்ளுகிறது!




பதிவுகள்: 790152 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81936 | புதிய உறுப்பினர்: vdevaraj

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: காம நோய்க்குக் கண்கண்ட மருந்து...

Post by Aathira on Sun Dec 12, 2010 11:02 am

உதயசுதா wrote:
Aathira wrote:
உதயசுதா wrote:
Aathira wrote:
சிவா wrote:கட்டிப் பிடிப்பதில் இவ்வளவு மருத்துவம் உள்ளதா? அதையும் அன்றே நம் முன்னோர்கள் எழுதி வைத்துச் சென்றது வியப்பளிக்கிறது.

(இனிமேல் யாருடனும் கைகுலுக்குவதில்லை, கட்டிப்பிடி வைத்தியம்தான்)


பார்த்து கட்டையடி வாங்காமல் இருந்தால் சரி.. எல்லாத்துக்கு இடம், பொருள், ஏவல்.. எல்லாம் இருக்கு....சாமீ....
சரி சரி அடி வாங்கிக் கொண்டு வந்தால் நான் பார்த்துக் கொள்ளுகிறேன்.. எங்கெங்கு அடி விழுந்திருக்கு என்று..

அடி வாங்குனதுக்கப்புரம் நீங்க என்ன பார்க்குறது,எங்க எல்லாம் வீங்கி இருக்குன்னா?


அக்காக்கள் நாம பாக்காமல் வேறு யாரு பாப்பாங்க சுதா.. நம்ம தம்பி இல்லையா..
ரொம்ப நல்லவரு வேற்...

சிவாவுக்கு நீங்க வேணுமின்னா அக்காவா இருங்க.அதுல எதுக்கு என்னையும் கூட்டு சேர்க்கரிங்க? நான் சிவாவுக்கு அக்கா இல்லை அக்கா இல்லை

ஏன் சுதா இப்படி தலை தெரிக்க ஓடறீங்க? சிவாவுக்கு அக்காவா இருக்கறது அவ்வளவு கஷ்டமா?

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: காம நோய்க்குக் கண்கண்ட மருந்து...

Post by Tamilzhan on Sun Dec 12, 2010 11:05 am

சிவா wrote:கட்டிப் பிடிப்பதில் இவ்வளவு மருத்துவம் உள்ளதா? அதையும் அன்றே நம் முன்னோர்கள் எழுதி வைத்துச் சென்றது வியப்பளிக்கிறது.

(இனிமேல் யாருடனும் கைகுலுக்குவதில்லை, கட்டிப்பிடி வைத்தியம்தான்)


எங்ககிட்ட இந்த மாதிரி வேலை எல்லாம் வச்சுக்காதிங்க...

Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 7966
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 192

Back to top Go down

Re: காம நோய்க்குக் கண்கண்ட மருந்து...

Post by சிவா on Sun Dec 12, 2010 11:08 am

Tamilzhan wrote:
சிவா wrote:கட்டிப் பிடிப்பதில் இவ்வளவு மருத்துவம் உள்ளதா? அதையும் அன்றே நம் முன்னோர்கள் எழுதி வைத்துச் சென்றது வியப்பளிக்கிறது.

(இனிமேல் யாருடனும் கைகுலுக்குவதில்லை, கட்டிப்பிடி வைத்தியம்தான்)


எங்ககிட்ட இந்த மாதிரி வேலை எல்லாம் வச்சுக்காதிங்க...


அய்யோ.. அய்யோ.. அய்யோ..




பதிவுகள்: 790152 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81936 | புதிய உறுப்பினர்: vdevaraj

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: காம நோய்க்குக் கண்கண்ட மருந்து...

Post by Aathira on Sun Dec 12, 2010 11:19 am

Tamilzhan wrote:
சிவா wrote:கட்டிப் பிடிப்பதில் இவ்வளவு மருத்துவம் உள்ளதா? அதையும் அன்றே நம் முன்னோர்கள் எழுதி வைத்துச் சென்றது வியப்பளிக்கிறது.

(இனிமேல் யாருடனும் கைகுலுக்குவதில்லை, கட்டிப்பிடி வைத்தியம்தான்)


எங்ககிட்ட இந்த மாதிரி வேலை எல்லாம் வச்சுக்காதிங்க...


Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: காம நோய்க்குக் கண்கண்ட மருந்து...

Post by ராஜா on Sun Dec 12, 2010 11:22 am

நானும் ரெடி ........

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15324
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1004

http://www.eegarai.net

Back to top Go down

Re: காம நோய்க்குக் கண்கண்ட மருந்து...

Post by Aathira on Sun Dec 12, 2010 11:24 am

ராஜா wrote:நானும் ரெடி ........

உருட்டுக் கட்டையும் ரெடி..

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum