புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_m10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_m10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_m10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_m10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_m10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10 
1 Post - 1%
Kavithas
கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_m10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10 
1 Post - 1%
bala_t
கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_m10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10 
1 Post - 1%
prajai
கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_m10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_m10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10 
290 Posts - 42%
heezulia
கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_m10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_m10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_m10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_m10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_m10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_m10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10 
6 Posts - 1%
prajai
கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_m10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_m10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10 
4 Posts - 1%
manikavi
கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_m10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஜூராகோ கோயில்கள்


   
   

Page 12 of 12 Previous  1, 2, 3 ... 10, 11, 12

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 21, 2009 9:31 pm

First topic message reminder :

கஜூராகோ மத்யபிரதேசத்தில் சத்ரபூர் மாவட்டத்தில் உள்ளது. கஜுராஹே என்ற பேரானது ஈச்சமரத்து ஓலையில் இருந்து பெறப்பட்டது. காஜூர் என்று அது இந்த பகுதியின் ஹிந்தியில் அழைக்கப்படுகிறது. இப்பகுதியே ஈச்சங்காடாக இருந்திருக்கிறது. இப்போதும் இப்பகுதியில் ஈச்சமரங்களை அதிகமாகக் காணலாம்.

கஜுராஹோ ஒருகாலத்தில் சந்தேலா மன்னர்களின் தலைநகரமாக இருந்திருக்கிறது. அவர்கள் கிபி பத்தாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை ஆண்டிருக்கிறார்கள். கிபி 950 முதல் நூற்றைம்பது வருடக்கால இடைவெளியில் இங்குள்ள கோயில்கள் கட்டபப்ட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. சந்தேலர்களின் தலைநகரம் மஹோபாவுக்கு பின்னர் மாற்றப்பட்டாலும் இந்த நகரம் ஒரு புனிதத்தலமாகவே நீடித்தது. முகலாய ஆட்சிக்காலத்திற்கு முன்னரே இந்நகரம் கைவிடப்பட்டு காடுக்குள் மறைந்துவிட்டது. ஆகவே வட இந்தியாவில் உள்ள பேராலயங்கள் அனைத்தையும் முகலாயர்கள் அழித்தபோது இந்த ஆலயத்தொகை அவர்களால் அழிக்கபப்டாமல் எஞ்சியது. பின்னர் பிரிட்டிஷார் காலத்தில்தான் இந்த ஆலயங்கள் கண்டடையப்பட்டன. அவர்கள் இதை ஒரு மாபெரும் கலைச்சின்னமாக எண்ணி உரிய முறையில் பேணினார்கள். பிரிட்டிஷ் கலாகட்டத்திலேயே விரிவான அகழ்வாராய்ச்சிகளும் பாதுகாப்புப்பணிகளும் இந்த ஆலயங்களில் நிகழ்த்தப்பட்டுள்ளன.

இந்நகரின் எல்லைக்குள் கிட்டத்தட்ட 80 கோயில்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவற்றில் 22 கோயில்கள்தான் இப்போது ஓரளவாவது நல்லநிலையில் உள்ளன. பல கோயில்களின் அடித்தளங்கள் அகழ்ந்து எடுக்கபப்ட்டுள்ளன. இவை 21 சதுர மைல் பரப்பளவில் பல இடங்களிலாக சிதறிப்பரந்திருக்கின்றன. எல்லா கோயில்களும் செங்கல் நிறமுள்ள சிவப்புக்கல்லால் செய்யப்பட்டவை. இது மணல்பாறை ஆதலினால் மிகநுட்பமாக செதுக்க ஏற்றது. இதனால் இக்கோயில்களில் சிற்பங்கள் இல்லாத இடமே இல்லை. பல கோயில்களை இதழ் விரித்த மலர்கள் என்றே சொல்லி விடலாம். மலரின் அல்லிவட்டம் புல்லி வட்டம் போன்றவற்றில் உள்ள நெருக்கமான சிக்கலான பின்னல்களும் அடுக்குகளும் இக்கோயில் முழுக்க நிறைந்துள்ளன. அதேசமயம் இங்குள்ள தூண்கள் சாதாரணமான அறுபட்டை வடிவங்கள் மட்டுமே. காகதீய சாளுக்கிய பாணி கோயில்களில் தூண்கள் ஒவ்வொன்றும் சிற்பங்கள் மண்டிய கலைக்கூடங்களாக இருப்பதுடன் ஒப்பிட்டால் இது வியப்பூட்டுகிறது.

வட இந்தியாவில் உள்ள நாகர பாணி கோபுர அமைப்புக்கும் அடுக்குவடிவிலான கற்கட்டுமான முறைக்கும் மிகச்சிறந்த உதாரணங்களாக கஜுராஹோ கோயில்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. பெரும்பாலான புகழ்பெற்ற ஆலயங்கள் அழிக்கபப்ட்டுவிட்ட நிலையில் கஜுராஹோ எஞ்சியது ஒரு நல்லூழ்தான். பஞ்சாயதனம் [ஐந்து ஆயதனங்கள்] என்ற கட்டிட அமைப்பு கொண்டவை இவை. அதாவது ஒரு மையக்கருவறையும் அதன் இருபக்கங்களும் இரண்டு வீதம் நான்கு துணைக்கருவறைகளும் கொண்ட அமைப்பு இது. இங்குள்ள பழைமையான சில கோயில்கள் சமண ஆலயங்கள். மும்மூர்த்திகளுக்கும் ஜகதாம்பாள் போன்ற தேவியருக்கும் கோயில்கள் உள்ளன.

இங்குள்ள கோபுரவடிவை நாம் தென்நாட்டுக் கோயில்களில் வேறு ஒரு வடிவில் காணலாம். ஆனால் நம்முடைய கோபுரங்கள் ஒரே கூம்பு வடிவம் கொண்டவை. இவை பல கோபுரங்கள் இணைந்து ஒரு கொத்து போல தோற்றம் அளிப்பவை. கோபுரவடிவுக்குள் மேலும் கோபுரங்கள். இவை சிகரங்கள் என்று சொல்லபப்டுகின்றன ஒன்றன்மீது ஒன்றாக தட்டுகளாக அடுக்கபப்ட்டு மேலே குறுகிச் சென்று கலசத்தில் முடியும் அமைப்பு கொண்டவை. அதேசமயம் கூம்பு போன்ற அமைப்பு இல்லாமல் விளிம்பு வளைவாக இருக்கும். நட்டுவைத்த மக்காச்சோளக் கதிர்களைப்போன்று இருப்பதாக தோன்றுகிறது இ ங்குள்ள ஆகப்பெரிய ஆலயமான காந்தரிய மகாதேவர் கோயில் கோபுரத்தில் 84 சிகரங்கள் உள்ளன. 116 அடி உயரம் உள்ளது இந்த கோபுரம்.

தென்னாட்டில் ஹொய்ச்சள, விஜயநகர பாணி கோயில்களிலும் கோபுரங்கள் சிறு தட்டுகளாக மேலேறி சுருங்கிச்செல்லும் அமைப்பு உண்டு. இங்குள்ள கோபுரங்கள் அனைத்துமே கருவறைக்கு மேலேதான் உள்ளன. கற்களை அடுக்கிக் கட்டப்படுபவை நம்முடைய கோயில்கள். ஆகவே அவை பிரம்மிடு போன்று கூம்பிச்செல்பவை. கஜுராகோ ஆலயக்கோபுரங்கள் செங்குத்தாக எழுந்து செல்கிறது. சிற்பக்கற்கள் ஒன்றுடன் ஒன்று மாட்டப்பட்டு திருகப்பட்டுள்ளன என்று சொல்கிறார்கள்.

கஜுராஹோ கோபுரங்களின் அமைப்பு இமயமலைச் சிகரங்களை ஒத்தது என்று சொல்லபப்டுகிறது. இந்த விஷயத்தைப்பற்றி கலைவிமரிசகர்கள் எழுதியிருக்கிறார்கள். ஒரு பகுதியின் கட்டிடக்கலையில் அப்பகுதியின் மலைகளின் பாறைகளின் அமைப்பு அழகியல் ரீதியான பாதிப்பைச் செலுத்துகிறது. ற்றோப்பிய ஊசிக்கோபுரங்கள் பனியிருகும் அந்நாட்டு மலைமுடிகள். அரேபிய கும்மட்டங்கள் காற்று அரித்த மணல்பாறைகளின் வளைமுகடுகள். அப்படிப்பார்த்தால் செங்குத்தாக ஓங்கி எழுந்த நம்முடைய ராயகோபுரங்கள் தென்னகத்து கரும்பாறைகளின் மானுடநகல்கள்.

கஜுராகோ கோயில்களைச் சுற்றியிருந்த பாலைவனச்சாயல்கொண்ட புதர்க்காடுகளை அழித்து அவற்றைசுற்றி நந்தவனம் அமைக்கும் பணி பிரிட்டிஷ்காலத்திலேயே செய்யபப்ட்டுவிட்டது. காந்தரிய மகாதேவர் ஆலயம் உள்பட முக்கியமான கோயில்கள் அனைத்தும் ஒரே வளாகத்துக்குள் உள்ளன . வளாகத்துக்கு வெளியே உள்ள கோயில்கள் சிற்ப அடிபப்டையில் முக்கியமானவை அல்ல.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81958
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 28, 2015 7:09 pm

கஜூராகோ கோயில்கள் - Page 12 103459460
-

ஜெயமோகன் அவர்களின் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி
(பகிர்தலுக்காக)
-
பலரும் எண்ணிவருவது போல கோயில்களின் சன்னிதிகளில்
பாலியல் சிற்பங்கள் ஏதும் கிடையாது.
-
பெரும்பாலும் புறச்சுற்றுச்சுவர்களிலும் அடிஸ்தானத்தின்
கற்களிலும்தான் புடைப்புச் சிற்பங்களாக பாலியல் சிற்பங்கள்
உள்ளன.
-
இன்னொன்று இந்தவகையான பாலியல் சிற்பகளிலில்
தேவர்களோ கந்தர்வர்களோ இல்லை. அன்றாட வாழ்க்கைச்
சித்தரிப்பின் பகுதிகளாகவே இவை உள்ளன.
-
அவற்றில் சித்தரிக்கபப்ட்டிருப்பவர்கள் பெரும்பாலும் தாசிகள்.
அவர்கள் அணிந்துள்ள நகைகளில் தாசிகளுக்கான தாலிகள்
இருப்பதிலிருந்து கலைவிமரிசகர்கள் இதை ஊகித்திருக்கிறார்கள்.
-
மேலும் இப்பெண்கள் ஒப்பனைசெய்துகொள்வது பாணர்களும்
நட்டுவர்களும் கூட ஆட ஆடல்கலைகளில் ஈடுபடுவது
போன்ற சிற்பங்கள் ஏராளமாக உள்ளன. பெரும்பாலான
தாசிகளுடன் தோழிகளும் காணப்படுகிறார்கள்.

நீராடுதல் உடைகளை மாற்றுதல் உடைகளைச் சரிசெய்தல்
போன்ற நிலைகளில் நளினமான அசைவுகளின் உறை
நிலையில் அவர்கள் நின்றிருக்கிறார்கள்.

செல்வமும் சமூக மதிப்பும் மத அங்கீகாரமும் கொண்ட
பரத்தை வாழ்க்கையின் சித்திரங்கள்தான் அவை என்பதே
ஊகிக்கக்கூடியதாக உள்ளது.

இங்குள்ள காமச்சித்தரிப்புகளை வாத்ஸ்யயனரின் காம
சூத்ரத்துடன் இணைத்து புரிந்துகொள்ள முயல்வது மேலை
நாட்டவரின் முறையாக உள்ளது.
ஆரம்பகால ஆய்வாளர்கள் பலர் அப்படி எழுதியுள்ளனர்.

ஆனால் இங்குள்ள காமச்சித்தரிப்புகள் அலங்காரத்தன்மையுடன்
மிகைப்படுத்தப்பட்டவை. உண்மையில் பல தோற்றங்கள்
வரைதளத்தை நிரப்பும் நோக்கத்துடன் உருவாக்கப்ப்ட்டவை.
அதீத நெளிவுகள் கைகால் பின்னல்கள் போன்றவை
இதனாலேயே உருவாகின்றன.

இத்தகைய காமச்சித்தரிப்புகளுக்கு என்ன காரணம் இருக்க
முடியும்? ப
லவகையான விளக்கங்கள் உள்ளன. வழிகாட்டிகள் பொதுவாக
‘காம குரோதங்களை வெளியே விட்டுவிட்டு உள்ளே செல்ல
வேண்டும்’ என்பதை காட்டுவதற்காக இவை
செதுக்கப்பட்டுள்ளன என்பார்கள். அது ஒரு பௌராணிக
விளக்கம் மட்டுமே. வரலாற்று ரீதியாகப் பார்த்தால்
இரண்டு விளக்கங்களைக் கொடுக்கலாம்.

ஒன்று அது அக்கால வாழ்க்கையின் பிரிக்கமுடியாத ஒரு கூறு.
அக்காலகட்ட வாழ்க்கை என்பது கொண்டாட்டத்தால் ஆனது.
ராமப்பாகோயில் மண்டபமே இதற்கு இன்னொரு உதாரணம்.
கலையும் கேளிக்கையுமாக பெரும் களியாட்டம் அந்த
மண்டபத்தில் செதுக்கப்பட்டுள்ளது.

இன்னொரு விளக்கம் இந்தச் சிற்பங்களுக்கு தாந்த்ரீக
வழிபாட்டு முறைமைகளுடன் நேரடியான உறவு உண்டு
என்பது. கஜுராஹோவில் தாந்த்ரீகம் வலுவாக இருந்திருப்பதை
இங்குள்ள பல்வேறு தாந்த்ரீக அடையாளங்கள் [யந்திரங்கள்]
மூலம் நாம் அறியலாம். தாந்த்ரீக வழிபாட்டுக்கு கோயிலின்
பெரும் கட்டமைப்புக்குள் ஓர் இடம் அளிப்பதற்காகவே
இச்சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கலாம். அவை புறச்சுவர்களில்
அமைந்திருப்பதும் முக்கியமானது.
-
----------------------------

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 31, 2015 11:19 pm

அற்புதமான கட்டுரை மற்றும் படங்கள் சிவா புன்னகை................பகிர்வுக்கு ரொம்ப நன்றி................இன்னும் சில பக்கங்கள் பார்க்கணும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 01, 2015 3:09 pm

ராஜா wrote:முதலில் ஈகரை தமிழ்களஞ்சியத்தில் புதைந்து கிடக்கும் இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க பதிவுகளை திரும்ப வெளிக்கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் புதையல் போல மதிப்பு அதிகமென்றாலும் யாருக்கும் பயனில்லாமல் அமைதியாக எதோ ஒரு பக்கத்தில் உறங்கிக்கொண்டு தான் இருக்கும் இது போன்ற பதிவுகள். புன்னகை


மிக்க நன்றி தல புன்னகை



ஆமாம் தல!



கஜூராகோ கோயில்கள் - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 01, 2015 5:27 pm

இது மாதிரி எல்லாம் இப்ப கணினியில மட்டும் தான் கட்ட முடியும்......

அடா டா டா என்ன அழகு ஆச்சர்யம்.




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 12 of 12 Previous  1, 2, 3 ... 10, 11, 12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக