புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_m10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_m10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10 
46 Posts - 40%
prajai
கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_m10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_m10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10 
4 Posts - 3%
Jenila
கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_m10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10 
2 Posts - 2%
kargan86
கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_m10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10 
1 Post - 1%
jairam
கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_m10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_m10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_m10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_m10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_m10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_m10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_m10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10 
8 Posts - 5%
prajai
கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_m10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10 
6 Posts - 4%
Jenila
கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_m10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_m10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_m10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_m10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_m10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10 
1 Post - 1%
viyasan
கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_m10கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்!


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jan 26, 2011 6:33 pm

முருகனருள்-200 நிறைந்த நல்வேளையில், நல்லவர் பாடும் நல்ல பாடல் ஒன்றை இன்னிக்கி கேட்போமா?
இவருடைய பாடலில் நிறைவு உண்டு! ஆனால் இவருடைய வாழ்வில்?
- முருகா, என் கண்ணே...ஏன் இவளை இப்படிச் செய்து விட்டாய்?
இவள்??? பலரும் அறிந்த பெயர் கே.பி.சுந்தராம்பாள் என்னும் KBS!இன்று சினிமாவில் ஒரு சில நகைச்சுவை நடிகர்கள், அம்மையாரின் குரலை, "ஞானப் பழத்தைப் பிழிந்து" என்றெல்லாம் கேலி பேசினாலும், ஆதவனை அற்பத்தனம் கேலி பேசி மாளுமா?
சுந்தராம்பாளின் குரலுக்கு விலை கொடுத்து, இவர்கள் கட்டுப்படி ஆவார்களா?
1935-இல், இளம் வயதில், இவர் பெற்ற ஊதியம் ஒரு லட்ச ரூபாய்!
அப்போ, தங்கம் - ஒரு சவரன் 13 ரூபாய்! = கிட்டத்தட்ட 7700 சவரன்! புன்னகை

KBS வெறுமனே பக்திப் பாடகர் மட்டும் தானா? விடுதலைப் போராட்ட வீரர் அல்லவா!
தமிழிசை இயக்கத்துக்கு குரல் கொடுக்க, பலரும் தயங்கிய நேரத்தில், எம்.எஸ். சுப்புலட்சுமியும், கே.பி. சுந்தராம்பாளும் அல்லவா முதன் முதலில் ஓடி வந்தார்கள்!

சுந்தராம்பாள் வாழ்வை இன்று லேசாக எட்டிப் பார்ப்போம் வாருங்கள், முருகனருள்-200 வழியாக!
அப்படியே கலைஞர் கருணாநிதியின் பேச்சுக்கு உடன்பட மறுத்த கதையும், பார்க்கலாம்......கடைசியாக புன்னகைகருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! 220px-K.B.SundarambalKodumudi. Balambal-இன் மகள் Sundarambal (KBS)
MS Subbulakshmi போலவே, இவருக்கும் அம்மாவின் இனிஷியல் மட்டுமே!

சிறு வயதிலேயே நாடக மேடைக்கு வந்தாகி விட்டது! நாடகம் என்றாலும், அது இசையுடன் கலந்தது தானே! ஆங்கிலத்தில் Musical-ன்னா மட்டும் நமக்கு Classics-ன்னு மரியாதை வரும்! புன்னகை
ஆண் வேடம் (ராஜ பார்ட்), பெண் வேடம் (ஸ்தீரி பார்ட்) என்று கலவையாக நடித்துப் புகழ் பெறத் துவங்கி விட்டார் சுந்தராம்பாள்! அரிச்சந்திரா, பவளக்கொடி, ஸ்ரீ வள்ளி என்று நாடகப் புகழ்...விதியோ இலங்கைக்கு வா வா என்றது!கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Sg%2Bkittappaஎஸ்.ஜி. கிட்டப்பா - பெரும் புகழ் பெற்ற இன்னொரு மேடை நாடகக் கலைஞர்; இசை அறிஞர்! = Sencottah Gangadhara Iyer Kittappa = SG கிட்டப்பா!
பெற்றோர் வைத்த பெயர் இராமகிருஷ்ண ஐயர்! ஆனால் செல்லமாக கிட்டன், கிட்டன் என்றே அழைக்க, அதுவே கிட்டப்பா ஆனது! கேரள-தமிழக எல்லை அல்லவா!

கிட்டப்பாவின் நாடகத்துக்கு, முன்னணி கர்நாடக இசைக் கலைஞர்களே முன் வரிசையில் வந்து கேட்பார்கள்! நாடகம் பார்க்க அல்ல! அவர் குரலைக் கேட்க! அப்படி ஒரு குரல் வளம்! இவரையும் இலங்கைக்கு நாடகம் போட அழைத்தனர்!

"இலங்கை முழுக்க இப்போ சுந்தராம்பாளின் கொடி பறக்கிறது! அங்கே போய் சிக்கிக் கொள்ள வேண்டாம்" என்று ஒரு சிலர் கிட்டப்பாவை எச்சரித்தனர்!
"கிட்டப்பாவிற்கு எதிரே உன்னால் நிற்க முடியுமா?" என்று வேறு சிலரோ, சுந்தராம்பாளை பயமுறுத்தினர்! இப்படி சுந்தராம்பாள்-கிட்டப்பா சந்திப்பே மோதலில் தான்! புன்னகை

ஒரே மேடையில் இருவருமே கலக்கினர்! வள்ளித் திருமணம், இலங்கை முழுக்க ஒரே பேச்சு!
மோதல் நட்பாய் மலர, அதே நாடகத்தைத் தமிழ்நாடு வந்தும் பலமுறை அரங்கேற்றம்! அவரவர் பாடலுக்கு, அவரவர் விசிறிகள்! இசைத்தட்டு விற்பனை!

ஆனால்...ஆனால்...ஆனால்,
இதயத்தின் எங்கோ ஒரு மூலையில்...
காதல்...காதல்....காதல்!

கலையுலகில் மட்டுமின்றி....வாழ்க்கையிலும் இணைந்து வாழ முடியுமா?
ஆனால் கிட்டப்பாவோ ஏற்கனவே திருமணம் ஆனவர்!
திருநெல்வேலி விசுவநாத ஐயரின் மகள் கிட்டம்மாளை முன்பே மணந்து இருந்தார்! ஆனால் இலங்கையில் விளையாடியது விதி!

முறையெல்லாம் பார்த்துக் கொண்டு இந்தக் காதல் மலரவில்லையே!
மோதல் நட்பாய் மாறி, அதுவே காதல் ஆகிப் போனது யார் குற்றமோ?
உள்ளத்தில் ஊறி விட்ட காதலை, இப்போ எதைக் கொண்டு அழிப்பது?
அதன் கதி, அதோ கதி! முருகா...அதோ கதி! = கதியாய் விதியாய் வருவாய் குகனே!

கிட்டப்பா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது சுந்தராம்பாளுக்குத் தெரியும்!
என்ன செய்ய? இன்றைய சினிமா போல் பணம் கொடுத்து, சொத்து கொடுத்து, குடும்பத்தைத் துரத்தி விடலாமா? புன்னகை சுந்தராம்பாளுக்கு இல்லாத பணமா? புகழா? அந்தஸ்தா?

சுந்தராம்பாள் ஒரு பேதை! அதிகம் உரிமை எடுத்துக் கொள்ளத் தெரியவில்லை!
இயல்பிலேயே முருக பக்தி! விட்டுக் கொடுக்கும் போக்கு! ஆனாலும் எதற்கும் தளராத மனக்கோட்டை மட்டும் மலைக்கோட்டையாக இருக்கு!

காதலே வென்றது! "உன்னை இறுதிவரை காப்பாற்றுவேன்" என்று கிட்டப்பா வாக்கு அளித்தார்!

பின்னாளில், சுந்தராம்பாள் இது பற்றித் தானே வாய் திறந்து சொன்னது: "அம்மி மிதித்தோ அருந்ததி பார்த்தோ எங்கள் திருமணம் நடக்கவில்லை! அது பதிவுத் திருமணமும் அல்ல! அது ஈசனருளால் நடந்த திருமணம்! ஜன்மாந்திரத் தொடர்பு என்பார்களே அவ்வாறு நடந்த திருமணம்!"
கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! K.B.Sundarambalமுருகனாக சுந்தராம்பாள், (ராஜபார்ட்). நாடக மேடையில்!

பிறகு, பல நாடகங்கள், பல நாடுகள் என்று இந்த வெற்றிக் கூட்டணி சென்று வந்தது! நாடக மேடைக்கு வெளியே தான் கணவனும் மனைவியும்!
மேடை ஏறிவிட்டால் கடுமையாக மோதிக் கொள்வார்கள்! தொழில் ரீதியான கேலியும் கிண்டலும் தூள் பறக்கும்! புன்னகை)

விதி தன் பிடியை இன்னும் இறுக்கியதோ என்னவோ, வந்தது வினை, கண்ணன் வடிவில்! = பாலாழி பாய்ந்த பாதகனோ? சோகம்
கிருஷ்ண லீலா என்னும் நாடகம்! என்னமோ தெரியலை, அதைப் பார்க்கப் போக வேண்டாம் என கிட்டப்பா கூறினார்!

ஆனால் முருகனைப் போலவே கண்ணன் மேலும் அன்பு கொண்டிருந்த சுந்தராம்பாள், அந்த நாடகத்தைக் காணச் செல்ல....
அல்ப விஷயத்துக்காக கோபித்துக் கொண்டு, விட்டுவிட்டு பாதியிலேயே சென்று விட்டார் கிட்டப்பா! பத்திரிகைகள் கண்ணும் காதும் மூக்கும் ஒட்டி ஒட்டி எழுதின!

கருத்து வேற்றுமை! இடைவெளி அதிகமாயிற்று!
= "உன்னை இறுதிவரை காப்பாற்றுவேன்" என்ற சத்தியம்??? சோகம்

பிறகு, சுந்தராம்பாள் அவருக்கு எத்தனையோ கடிதங்கள் எழுதினார்! ஒவ்வொன்றிலும்......காதலும், கோபமும், தாபமும், இயலாமையும், மாறா அன்பும், இன்னும் என்னென்னமோ...கடிதத்தின் முடிப்பு மட்டும்...தங்கள் அன்பையே ஆபரணமாகக் கொண்ட அடியாள், சுந்தராம்பாள்!

கிட்டப்பா, தேசிய இயக்கத்தில் சேர்ந்து கதர் உடுத்த, அதையே சுந்தராம்பாளும் பற்றிக் கொண்டார்! பல தேசபக்தி நாடகங்களில் நடித்தார் சுந்தராம்பாள்!
வெளியில் அதிகம் காட்டிக் கொள்ள வில்லையென்றாலும், சதா சர்வ காலமும், மனத்தால் அவரையே தாங்கி வாழ்ந்தாள் இந்த முருக பக்தை!

கிட்டப்பா வாழ்விலும் விதி விளையாடியது!
27 வயதிலேயே கடுமையான வயிற்றுவலி! குடல் வெந்து ஈரல் சுருங்கி.....1933-இல் அகால மரணம் எய்தினார்! சோகம்
சேதி கேட்டுத் துடித்த அந்த முருக பக்தை, என்னென்ன எண்ணி இருப்பாளோ? எப்டியெல்லாம் கசிந்து இருப்பாளோ? முருகா - இது உனக்குத் தகுமா?

அன்று பூண்டாள் துறவுக் கோலம்!
25 வயது தான்! காதல்-கணவருடன் அதிகம் வாழவில்லை தான்! ஆனாலும் உடம்பில் வெள்ளாடை! நெற்றியில் வெண்ணீறு! கழுத்தில் துளசி மாலை!! - கண்ணா, பாவீ, தகுமா? சோகம்கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Kbs-1பால், இனிப்பு என்று எந்தப் போகப் பொருளும் உண்பதில்லை!
மேடையில் ஆண்களுடன் ஜோடியாய் நடிப்பதில்லை! மேடையிலும் தனிமை! வாழ்விலும் தனிமை!
சுந்தரம் சுந்தரம் என்றே அழைப்பார் போலும் அம்மையாரை! அந்தச் சுந்தர நினைவுகளே வாழ்வாகிப் போனது சுந்தராம்பாளுக்கு!

இப்படி ஒடிந்து கிடந்தவரை இழுக்க, நந்தனார் சரித்திரம் என்னும் சினிமா வந்தது!
அம்மையாரை நந்தனாராக நடிக்க வைக்க, தயாரிப்பாளர் ஆசான்தாஸ் தவமாய்த் தவம் இருந்தார்! காங்கிரஸ் தலைவர் தீரர் சத்தியமூர்த்தி வேறு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்.............ஊகூம்!கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Kbs%2Bin%2Bnandanar%2Bcharithramநந்தனாராக கே.பி.சுந்தராம்பாள்! அந்தணராக மகராஜபுரம்

அவரிடம் சாக்கு போக்கு சொல்லி, தன் ஊதியம் ரொம்ப அதிகம்...ரூபாய் ஒரு லட்சம் என்று பேச்சுக்குச் சொல்ல,
ஆகா...அதற்கும் கட்டுப்பட்டார் தயாரிப்பாளர்! அம்மையாரின் மனமே இளகிப் போனது!
யாருக்கும் ஜோடியாய் நடிக்க மாட்டேன் என்ற பல நிபந்தனைகளோடு, நந்தனாராக ஆண் வேடம் கட்டி நடிக்க ஒப்புக் கொண்டார்!

பின்பு, வரிசையாகப் படங்கள்!
மணிமேகலை, ஒளவையார், பூம்புகார், திருவிளையாடல், கந்தன் கருணை, துணைவன், காரைக்கால் அம்மையார், கடைசியாக திருமலைத் தெய்வம்!
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை?-ன்னு மனக் கவலையோடவே பாடிய அந்தப் பேதை உள்ளம்.....புற்று நோயால் 1980-இல் அணைந்து போனது!

முருக நீழலில்.....சுந்தராம்பாள்.....நீங்காது நிறைந்தேலோர் எம்பாவாய்!கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Nsk-karunanidhiதலைப்பு பற்றி ஒன்னுமே சொல்லலையே-ன்னு நீங்கள் கேட்பது புரிகிறது! புன்னகை
கலைஞர் கருணாநிதி திரைக்கதை-வசனம் எழுதிய படம் பூம்புகார்!
கண்ணகியின் கதை! வாழ்க்கை என்னும் ஓடம்-ன்னு சுந்தராம்பாள் பாடுவதைப் பார்த்து இருப்பீங்களே! யாரிடமாவது சிடி இருந்தால், பாடலைத் தயவு செய்து Youtube-இல் Upload செய்யுங்களேன்!

இந்தப் படத்தில், கவுந்தி அடிகளாக நடிக்க, கே.பி சுந்தராம்பாள் தான் சரியானவர் என்பது கலைஞரின் எண்ணம்! கண்ணகி-கோவலனுக்கு வழித்துணையாக வரும் சமணப் பெண் துறவி = கவுந்தி அடிகள்!

இளங்கோவடிகளின் கதையையே, தனக்கு ஏற்றவாறு, அங்கொன்றும் இங்கொன்றுமாய் மாற்றிக் கொண்ட கலைஞர், சுந்தராம்பாளை நடிக்க வைக்க மட்டும் பெரும்பாடு பட்டார்! புன்னகை

என்ன தான் அப்போதைய முன்னணி வசனகர்த்தா, கலைஞர் வசனத்தில் நடிப்பதே பெரிய பெருமை என்று பேசப்பட்டாலும், அதெல்லாம் யாருக்கு? யாசிப்பவன் இருந்தால் தானே, கொடுப்பவனுக்குப் பெருமை! இங்கே சுந்தராம்பாள் தான் யாசிக்கும் நிலைமையிலேயே இல்லையே!
பழுத்த முருக பக்தை! "சமணத் துறவியாக எப்படி நடிப்பேன்? மேலும் தான் பாடுவதோ விடுதலை இயக்க மேடை...எப்படி பகுத்தறிவுப் பாசறையில்...அதுவும் கருணாநிதியின் வசனத்தில்?"கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்! Kavunthi%2Badigalஇப்படியெல்லாம் சுந்தராம்பாள் கருத,
கலைஞரோ, கட்சிக்காக அல்ல, பகுத்தறிவுக்காக அல்ல ...தமிழுக்காக என்று சொல்ல....அம்மையாரும் தமிழுக்காகவே ஒப்புக் கொண்டார்! ஆனால், பல நிபந்தனைகளோடு!
சுந்தராம்பாளைப் பிற்பாடு சரி செய்து கொள்ளலாம் என்பது கலைஞரின் கணக்கு! ஆனால் வந்தது வேறு வினை - கருணாநிதிக்கு?

காதல்-கணவர் மறைந்த பின், நெற்றியில் பூசிக் கொள்ளும் திருநீற்றை, மேக்-அப்புக்காகக் கூட அழிக்க மாட்டேன் என்று அம்மையார் உறுதியாக நிற்க...
கருணாநிதியோ, "அம்மா, கவுந்தியடிகள் என்பவர் சமணர், இது பாத்திரத்துக்கு ஒட்டாதே" என்று கெஞ்ச......

கற்பனை செய்து பாருங்கள்....கலைஞர் மு கருணாநிதி அவர்கள் கெஞ்சுவதை...வெற்றிகரமான வசனகர்த்தா, ஒரு சீனில் வந்து போகும் பெண்மணியிடம்...இத்தனை விண்ணப்பம்! புன்னகை

பின்னர், செட்டில் வேறு ஒருவர் கொடுத்த யோசனையின் பேரில்...
பட்டையாக விபூதி போட்டுக் கொள்ளாமல்.......
திருநீற்றையே மெல்லீசா, ஒத்தையாக....நாமம் போல் போட்டுக் கொண்டு....
அப்படியே நடித்தும் பாடியும் கொடுத்தார் சுந்தராம்பாள்! இன்றும் சினிமாவில் கவுந்தி அடிகளைப் பார்த்தால், ஒற்றை நாமம் தரித்தது போலவே இருக்கும்!

இதோடு முடியவில்லை கலைஞரின் கணக்குகள்....
அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது,
நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது?- என்று சிலப்பதிகாரத்தில் கூடப் "பகுத்தறிவு"ப் பாணியில் கேலியாக எழுத...
இறைவனைக் கேலி செய்யும் வரியைப் பாட மாட்டேன் என்று மறுத்து விட்டார் சுந்தராம்பாள்!

இறைவனை, "இல்லை" என்று மறுதலிக்கவே மாட்டேன் என்று அம்மையார் சொல்லிவிட...
வேறு வழியில்லாமல் கலைஞரும் - நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது! என்று பாட்டையே மாற்றிக் கொடுத்தார்புன்னகை)
இது தான், கலைஞரையே மடக்கிய கேபி சுந்தராம்பாள் நினைவலைகள்!

அவர் தாம் மாசில்லாக் காதலோடு, முருகன் திருவடியில், சுந்தராம்பாள் என்றும் அமைதி கொள்ளட்டும்! தமிழ் இசையோடு நிலைத்து நிற்கட்டும்!!

இதோ, சுந்தராம்பாள் பாடும் மிக அழகான பாடல் ஒன்னு! கேட்டுக் கொண்டே பாட்டை வாசியுங்கள்!
முருகனருள் = பாடல்கள் வலைப்பூ! கட்டுரை வலைப்பூ அல்ல! புன்னகை

படம்: கந்தன் கருணை
வரிகள்: ஒளவையார் (இது இலக்கிய நூல்களில் இல்லை! ஒளவை தனிப் பாடல் திரட்டு)
குரல்: கே.பி.சுந்தராம்பாள்
இசை: கே.வி.மகாதேவன்

ஒளவையே, உலகில் அரியது என்ன?

அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது!
மானிடராயினும்....கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது!
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையும்...ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது!
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்...தானமும் தவமும் தான் செய்தல் அறிது!
தானமும் தவமும் தான் செய்தலாயினும்...வானவர் நாடு வழி திறந்திடுமே!

கொடியது என்ன?

கொடியது கேட்கின் வரிவடி வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது; இளமையில் வறுமை
அதனினும் கொடிது; ஆற்றொணாக் கொடு நோய்
அதனினும் கொடிது; அன்பு இல்லாப் பெண்டிர்
அதனினும் கொடிது; அவர் கையால் இன்புற உண்பது தானே!

பெரியது என்ன?

பெரியது கேட்கின் நெறிதமிழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரியமாலோ அலைகடல் துயின்றோன்

அலைகடலோ குறுமுனி அங்கையில் அடக்கம்
குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறையவர் பாகத்து ஒடுக்கம்
இறைவனோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டர் தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே.....!

ஒளவையே, இனியது என்ன? = எங்கள் இனியது கேட்கின்!

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள்ளாரைக் கனவினும் நனவினும் காண்பது தானே.

அரியது கொடியது பெரியது இனியது - அனைத்துக்கும் முறையோடு விடை பகன்ற ஒளவையே....புதியது என்ன?
(இனி வரும் வரிகள்: கண்ணதாசன்)

என்றும் புதியது
பாடல் - என்றும் புதியது
பொருள் நிறைந்த - பாடல் என்றும் புதியது
முருகா உனைப் பாடும் - பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்
அமுதம் என்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது...

முருகன் என்ற - பெயரில் வந்த - அழகே என்றும் புதியது
முறுவல் காட்டும் - குமரன் கொண்ட - இளமை என்றும் புதியது

உனைப்பெற்ற அன்னையர்க்கு உனது லீலை புதியது
உனது தந்தை இறைவனுக்கோ வேலும் மயிலும் புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது
சேர்ந்தவர்க்கு வழங்கும் கந்தன் கருணை புதியது
அறிவில் அரியது...அருளில் பெரியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது

முதலில் முடிவு அது
முடிவில் முதல் அது
மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது!

நாளும்.......மாசில்லாக் காதலையும், முருகத் தமிழையும், தமிழ் இசையையும் போற்றிய சுந்தராம்பாள் திருவடிகளே சரணம்!

நன்றி முருகனருள் வலைப்பூ

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக