புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Poll_c10 
11 Posts - 4%
prajai
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Poll_c10 
3 Posts - 1%
jairam
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்.....


   
   

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Jan 27, 2011 2:21 pm

First topic message reminder :

ஒரு தேசிய இனம் அடிமைப்பட்டிருக்கிறதா அல்லது ஆளும் இறையாண்மை பெற்றிருக்கிறதா என்பதை அதன் தாய்மொழி பெற்றிருக்கும் தகுதியை வைத்து அறிந்து கொள்ளலாம்.

அனைத்து நிலையிலும் அலுவல் மொழியாக அவ்வினத்தின் மொழி இருந்தால் அந்தத் தேசிய இனம் தன்னைத் தானே ஆண்டு கொள்கிறது என்று பொருள். அயல்மொழிதான் முதன்மை அலுவல் மொழியாக இருக்கும், அந்த அயல்மொழியின் தலைமைக்குக் கீழ்பட்டு சொந்த மொழி சிற்சில இடங்களில் பணிவாகத் தலைகாட்டும் என்றால் அந்த இனம் அடிமைப்பட்டிருக்கிறது என்று பொருள்.

இந்தியாவெங்கும் இந்தி கோலோச்சுகிறது. அது கொல்லைப்புற வழியாகக் கோலோச்சவில்லை. இறையாண்மையுள்ள ஓர் அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் படி அது ஆட்சி புரிகிறது. தமிழ்? அந்த அரசமைப்புச் சட்டத்தின் கொல்லைப்புறத்தில் – பின்னிணைப்பு என்ற பெயரில் எட்டாவது அட்டவணையில் மொட்டையாக “மொழிகள்” என்ற தலைப்பின் கீழ் அகரவரிசைப்படி 16ஆவது இடத்தில் செருகப்பட்டுள்ளது.

அரசமைப்பு விதி 343(1)இன் படி அனைத்து இந்தியாவுக்கும் இந்தி ஆட்சி மொழி. தற்காலிகமாக ஆங்கிலம் கூடுதல் ஆட்சி மொழியாக இருக்கும்.[343(3)

இந்திய அரசு நிறுவனங்களில் ஆங்கிலம் பயன்படுத்துவதை எந்த அளவு முடியுமோ அந்த அளவு குறைக்க வேண்டும் என்கிறது அந்தச் சட்டம். [344-2(3)] இதன் பொருள் இந்தியை எந்த அளவு கூடுதலாகத் திணிக்க முடியுமோ அந்த அளவு திணிக்க வேண்டும் என்பதாகும்.

எட்டாவது அட்டவணையில் உள்ள மாநில அலுவல் மொழிகளை உயர்நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாகப் பயன்படுத்த வழி கூரும் விதி 348(2). அதிலேயும் இந்திக்குத்தான் தனிச்சிறப்புரிமை. அந்த விதி இவ்வாறு கூறுகிறது:

“348(2) மேலே உள்ள உட்பிரிவு (a)யின் கிளை(1)இல் யாது கூறப்பட்டிருந்தாலும் ஒரு மாநிலத்தின் ஆளுநர், குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலுடன் இந்தி அல்லது ஏதாவதொரு மாநில அலுவல் மொழியை அம்மொழி பேசும் மாநிலத்தில் அமைந்துள்ள உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்த அதிகாரம் வழங்கலாம்.
ஆனால் உயர்நீதிமன்றத் தீர்ப்புகள், ஆணைகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்”.


இவ்விதியைப் புரிந்து கொள்ள இவ்வாறு விளக்கலாம்.

குடியரசுத் தலைவரின் முன் அனுமதி பெற்று, தமிழக ஆளுநர், தமிழக உயர்நீதிமன்றத்தில் இந்தி மொழியை அல்லது தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்கலாம்.

இந்த விதியின்படி, தமிழக உயர்நீதிமன்றத்தில் இந்தியை வழக்காடு மொழியாக அனுமதிக்குமாறு தமிழக அரசு கோரியிருந்தால் உடனடியாக அனுமதி வழக்கியிருக்கும் இந்திய அரசு. தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்கக் கேட்டதால்தான் இந்திய அரசு மறுத்துவிட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டம் பல்வேறு சூழ்ச்சிகளையும் மறைமுகச் சதிகளையும் உள்ளடக்கியிருக்கிறது. விதி 348(2ஐ மேம்போக்காகப் பார்த்தால், அது மாநில மொழிகளை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்கிட வாய்ப்பளித்திருப்பது போல் தோன்றும். ஆனால் அவ்விதியிலும் இந்திக்குத்தான் முன்னுரிமை. இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியும் ஒரு மாநில மொழிதான். இந்தி அல்லது மாநில மொழி என்று போட வேண்டிய தேவையே இல்லை.

மாநில மொழிக்கு வாய்ப்பளிப்பது போல் காட்டிவிட்டு, இந்தியை இந்தி பேசாத மாநிலத்திலும் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக ஆக்கிட உறுதி அளிப்பதே 348(2) விதியின் உள்நோக்கம்.

அதனால்தான் பீகார், உத்திரபிரதேசம், மத்தியப் பிரதேசம், இராயத்தான் மாநிலங்களில் இதே 348(2) விதியைப் பயன்படுத்தி உயர்நீதிமன்ற மொழியாக இந்தியைச் செயல்படுத்திவிட்டது இந்திய அரசு.

இந்த விதியைப் பயன்படுத்தி தமிழக அரசு 2006ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழி ஆக்கிடக்கோரி இந்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்பியது. ஓராண்டுக்குப் பின் அம்மனுவை இந்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. குடியரசுத் தலைவராக அப்போதிருந்த முனைவர் அப்துல் கலாம் பார்வைக்கே அந்த விண்ணப்பத்தை அனுப்பாமல் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

குடியரசுத் தலைவர் அம்மனுவைத் திருப்பி அனுப்பிவிட்டதாக இந்திய அரசு அதிகாரிகள் அறிவித்தனர். அச்செய்தியை ஏடுகளில் பார்த்த அப்துல்கலாம் தம் பார்வைக்கே அம்மனு வரவில்லை என்று தம் செயலாளர் மூலம் அறிக்கை கொடுத்தார்.

மீண்டும் தமிழக அரசு விண்ணப்பம் போட்டுள்ளது. “மேற்கு வங்காளத்தில் வங்க மொழியை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகக் கேட்டார்கள். அக்கோரிக்கையை ஏற்கவில்லை. எனவே தமிழகத்தின் கோரிக்கையையும் ஏற்க முடியாது” என்று இந்திய அரசு கூறுயுள்ளது.

வங்க மொழியை ஏன் ஏற்கவில்லை? அதற்கான அரசமைப்புச் சட்டக் காரணம் என்ன? மேற்கு வங்கத்தைக் காரணம் காட்டி தமிழகத்திற்கு மறுப்பதற்கு அரசமைப்பில் ஏதாவது விதி இருக்கிறதா? இல்லை; இந்திய ஆளும் வர்க்கத்தின் சூதுதான் இருக்கிறது; ஆதிக்க இனத்திமிர்தான் இருக்கிறது.

இதே 348(2) விதியைப் பயன்படுத்தித்தானே மேற்சொன்ன நான்கு மாநிலங்களில் உயர்நீதிமன்ற வழக்காடு மொழி என்ற தகுதியை இந்திக்கு வழங்கியிருக்கிறார்கள்.

உயர்நிதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்கக் கோரி மதுரையில் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் ஆறு வழக்கறிஞ்சர்கள் 9.6.2010 முதல் சாகும் வரை பட்டினிப் போராட்டம் தொடங்கினர். அக்கோரிக்கையை ஆதரித்து சென்னையிலும் ஏழு வழக்கறிஞர்கள் காலவரம்பற்ற உண்ணாப் போராட்டம் தொடங்கினர். இரு இடங்களிலும் வழக்கறிஞர்கள் தளைப்படுத்தப்பட்டனர். சிறையிலும் உண்ணாப் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர். 21.06.2010 முதல் தமிழில் வழக்காட வாய்மொழி வாக்குறுதி அளித்தார் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு.இக்பால்.

ஆனால் இந்திய அரசு அசையவில்லை. தமிழக முதல்வர் வெற்று வேண்டுகோளோடு தம் கடமையை முடித்துக் கொண்டார். தமிழக அரசு அனுப்பிய விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்று தோண்டி துருவி செய்திகள் வெளியிட்டன ஏடுகள்.

உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட அனுமதி கோரிய தமிழக அரசின் விண்ணப்பம் முதலில் அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, கே.யி.பாலகிருட்டிணன்(தற்போது கையூட்டு மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக விசாரணையில் இருப்பவர்) கருத்துரைக்கு அனுப்பப்பட்டது. அவர், மாநில மொழியில்(தமிழில்) வழக்காட அனுமதிக்கக் கூடாது. எல்லா மாநிலமும் அதே போல் உரிமை கேட்கும். அப்படிச் செய்தால் அது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தாகும். இந்தியா முழுவதும் நீதித்துறை ஒரே சீராக இருப்பதைப் பாதிக்கும் என்று கூறினார்.

பிறகு, சட்ட அமைச்சகத்திலிருந்து உள்துறை அமைச்சகத்தின் ஆய்வுக்கு அனுப்பியுள்ளார்கள்.

தலைமை நீதிபதியின் கருத்தைக் கேட்க வேண்டிய தேவையே இல்லை. அதே போல் உள்துறை அமைச்சகத்திற்கும் விதி 348(2)க்கும் என்ன தொடர்பிருக்கிறது? ஒன்றுமில்லை.

காலம் கடத்தி, கைவிரிப்பதற்காக ஏகாதிபத்திய மனங்கொண்ட ஆட்சியாளர்கள் ‘அடிமைகளின் மொழியான தமிழுக்கு அரியணையா’ என்ற எண்ணத்தில் சூழ்ச்சி செய்கிறார்கள். சுற்றி அடிக்கிறார்கள்.

இதே ஏகாதிபத்திய அரசு இந்தியில் அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரம் படைத்த மொழியாக்கத்தை வெளியிட 1988இல் விதி 394A என்ற சட்டதிருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. இவ்விதியின் படி இன்றைக்கே உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் இந்தியில் தீர்ப்பு எழுதினால் அதைச் செல்லாது என்று கூற முடியாது.

தமிழினம் தில்லிக்கு காலணியாக அடிமைப்பட்டிருக்கிறது என்பதற்கான சான்றுகள்தாம் மேற்சொன்னவை அனைத்தும்.

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கடும் மொழியாக, தீர்ப்பெழுதும் மொழியாகக் கொண்டு வரத் தொடர்ந்து போராடுவோம். அதே வேளை இந்திய ஏகாதிபத்தியத்தின் காலணியத் தளைகளிலிருந்து தமிழ்த் தேசம் விடுபடுவதற்கான போராட்டத்தை விரைவு படுத்துவோம்!


nan.thiru இந்த பதிவை விரும்பியுள்ளார்


கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Sat Feb 19, 2011 12:53 pm

நிசாந்தன் wrote:ராம் அவர்களே நான் முன்னமே கூறினேன். எதுவும் தெரியாமல் பேசக்கூடாது. இரயில் கவிழ்ப்பிற்கு பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கேட்டவர்கள் மாவோயிட்டுகள். அவர்கள் வைத்த குறி வேறு நடந்தது வேறு என்பதனால் மக்களிடம் மன்னிப்பு கேட்டனர். மேலும் இந்திய இராணுவம் அங்கு செய்யும் அட்டூழியங்கள் ஏதாவது தெரியுமா உங்களுக்கு? ஜால்ரா தட்டுவதை முதலில் நிறுத்துங்கள். மாவோயிட்டுகள் எதுக்காக போராடுகிறார்கள் என்று தெரியுமா உங்களுக்கு? அங்கு உள்ள பெருநிறுவனங்கள் அங்கு என்ன செய்கின்றன என்று தெரியுமா உங்களுக்கு? தெரிந்துவிட்டு வந்து பேசுங்கள். அரைகுறை செய்திகளை தெரிந்துகொண்டு வந்து பேசாதீர்கள்.

நீங்கள் மாவோயிஸ்டுகளின் அதிகார பூர்வ செய்தியாளராக இருக்கலாம் .ஆனால் எனக்கு ஏதும் தெரியாது என கூறாதீர்கள் .

எத்தனை ரயில் கவிழ்பிற்கு மாவோக்கள் வருத்தம் தெரிவித்தார்கள்

3 நாட்களாகஒரு கலக்டெரை கடத்தி வைத்து இருக்கிறார்கள் .அது எதற்கு

70 எல்லை பாதுகாப்பு படையினரை மொத்தமாக கொன்றானாரே அது எதற்கு .அதில் இருந்த 3 தமிழ் நாட்டை சேர்ந்த குடும்பத்திற்கு இப்ப யார் பதில் சொல்வது

மாவோக்களை அடக்க அந்த அந்த பகுதி மக்களே மக்கள் பாதிக்காப்பு படை என ஆயுதம் ஏந்தி இருக்கிறார்களே இதற்கு என்ன பதில் சொல்வீர்கள்

அவர்கள் கட்டுபாடில் உள்ள இடங்களில் பணம் தரும் நிருவங்களை விட்டுவிட்டு பணம் தராத நிருவங்களை மட்டுமே கூறி வைக்கின்றனவே என் .எல்லாம் பணம் பாஸ் பணம்

சும்மா அதாவது சொல்லாதீங்க
நீங்க சொல்லுறதா கேக்கவும் கடாய் பிடிக்கவும்
தமிழ் நாட்டை சேர்ந்தவனும் சரி ,இந்தியாவை சேர்ந்தவனும் சரி முட்டாள்கள் இல்லை
இந்தியாவும் சரி ,தமிழ் நாடும் சரி எப்பவும் இப்படிதான் இருக்கும்

இந்தியா சின்னா பிணமாக என் இப்படி மெனக்கெடுக்கிறீர்கள் ?

உலகின் மிக பெரிய ஜனநாயக நாட்டை அவ்வளவு சீக்கிரம் அழித்து விட முடியாது .

வந்தே மாதரம் .ஜெய் ஹிந்த்

ராம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 19, 2011 1:08 pm

ராம் நீங்க இவங்களுக்கு பதில் சொல்லணும்னு நினைச்சா சொல்லிட்டே இருக்கணும்.வந்தேறிகள் எல்லாம் துண்டாட நினைக்க என் தேசம் ஒண்ணும் மைதா மாவினால் செய்த கேக் அல்ல.யார் என்ன சொன்னாலும்,எப்படி பேசினாலும் இந்தியா எனும் மாபெரும் தேசத்தை எவனாலும் ஒண்ணும் செய்துவிட முடியாது.



ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Uஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Dஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Aஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Yஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Aஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Sஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Uஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Dஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Hஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 A
avatar
Guest
Guest

PostGuest Sat Feb 19, 2011 1:17 pm

ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Images?q=tbn:ANd9GcS6EQWTICCS3Ix3WZ7bh4n2PqpPjN1a1JLBoMRObMpJtJPnMgPJkNjk_d0

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Feb 19, 2011 1:33 pm

ராம் அண்ணா மிக சரியான கேள்விகள் முதலில் நான் இந்தியன் இந்த மொழி வெறியர்களால்தான் பெரும்பாலான பிரச்சினை இந்தியன் என்ற உணர்வு இருந்திருப்பின் ஈழ தமிழர்களின் விஷயத்தில் தமிழகம் முதல்கொண்டு இமயம் வரை ஒரே குரலில் நமக்கு தேவயான தமிழ் ஈழத்தை வலியுறுத்த முடியும் கன்னடன் தமிழன் என்ற மொழி பிரச்சினை தான் விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறது நீர் பிரச்சினயாக இவர்கள் ஒரு போதும் திருந்த மாட்டார்கள் இந்தியாவை எவனும் பிரிக்க முடியாது

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Feb 19, 2011 2:22 pm

கண்ட்டிப்பாக மதன் அவர்களே. மாவோயிட்டுகளைப் பற்றிய பதிவும் வடகிழக்கு மாநிலங்களில் இந்தியா என்ன செய்கிறது என்று இவர்களுக்கு விளங்க வைக்க ஒரு பதிவு கண்டிப்பாக பதிவேன்.

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Feb 19, 2011 2:30 pm

ராம் அவர்களே, மக்கள் பாதுகாப்புப் படை என்ற சொல்லே தவறு. அது சால்வா ஜுடும் என்ற படை. அது மக்கள் உருவாக்கினது அல்ல. மேற்குவங்க மாநிலம் உருவாக்கியது. அந்த படையும் மக்களுக்கு எதிராக இந்திய இராணுவத்திற்கு வால் பிடிக்கும் படை. மக்கள் அனைவரும் மாவோயிட்டுகளின் பின்னால்.
எதிரி எல்லைக்குள் வரும்போது கொல்வது இயல்பே. இதுதான் உலகம் முழுக்க நடக்கிறது. 2 தமிழ்நாட்டுக்காரர்கள் இறந்தார்கள். உண்மைதான். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும். நான் முன்னமே கூறியதை திரும்ப கூறுகிறேன். மாவோயிட்டுகளைப் பற்றி எதுவும் தெரியாமல் என்னிடம் விவாதம் செய்யாதீர்கள். தெரிந்துவிட்டு வந்து பேசுங்கள். இதுதான் உங்களின் தெளிவற்ற விவாதங்களுக்கு என்னுடைய கடைசி பதில். மேலும் அவர்களைப் பற்றி தெரிந்துகொண்ட பின்பு எனிடம் கேட்டும் கேள்விகளுக்கு பதில் தருகிறேன். மேலும் சுதா அவர்களே, உங்களுக்கு இதுவே எனது பதில்

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat Feb 19, 2011 5:02 pm

இந்தியாவை யாரும் துண்டாட வேண்டியதில்லை அது தானாகவே துண்டுதுண்டுகளாக உடையும் ,நான் யாரும் நோக்கவேண்டும் என்பதற்காக சொல்லவில்லை .ஏனென்றால் பாருங்கள் பாரதப்பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் ஒரு தொலைத்தொடர்பு ஊழலுக்கு எவ்வளவு காலதாமதமாக ,ஒரு நாடாளுமன்ற காலத்தையே முடக்கும் அளவுக்கு இழுபட்டு இப்போ தான் மனமின்றி அனைத்துக்கட்சி குழு விசாரணைக்கு தயார் என்கிறார் ?ஒரு நல்லமனிதன் தன்மேதுள்ள களங்கத்தை உடனேயே போக்கவேண்டுமல்லவா ?இங்கே ஈகரையில் இந்தியனாட்டுக்கு உயிரையே கொடுக்கக்கூடிய ???அனால் ஒருவன் வீதியில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஒருவனை கண்டும் காணாதது போல செல்லும் ??
இந்தியாவை பற்றி ஒருவன் இப்படி எழுதுகிறான?என பதறித்துடித்து வந்தேறுகுடிகள் என தன இனத்தையே (
தன தாயையே விபச்சாரிபட்டம் கட்டி )காவுகொடுக்க தயாராக இருக்கும் இந்த சகோதரர்களே இருக்கும் போது இந்திய உடையாது ...
அது தமிழனது தேவையும் அல்ல .ஏனென்றால் சோழன் கடாரம் வென்றும் கூட அங்கே புலிக்கொடி நாட்டினானே தவிர அங்குள்ளவர்களது வாழ்வை கருவருத்தவனல்ல என் மூத்தோன்...
என் இனியவர்களே நீங்கள் சுவாசிக்கும் அந்த தேசத்தில் தானே ஜனாதிபதியை கைதுசெயச்சொல்லிஉத்தரவு பிறப்பித்த லஞ்சம் வாங்கிய தேசபக்த நிதிபதி உள்ளார் ?இன்று கூட வடமாநிலங்களில் சுமார் அறுபதாயிரம் கோடி ஊழல் நடைபெற்றதாக கதை வந்துள்ளதே ?ஒஎஉ ஐந்துவருடங்களில் எமக்குதேரிந்த ஊழலே இவ்வளவு என்றால் ,,,?தூங்கிக்கொண்டிருக்கும் ஊழல்கள் எப்படி இருக்கும் ??
நீங்கள் இங்கே ஒவ்வொருவரும் நல்ல நிலையில் இருக்கிறீர்கள் உங்கள் தேசத்தை சுவாசிக்கிறீர்கள் அது நல்லதும் கூட ?உங்களில் எத்தனை பேர் எனக்கு சொல்ல வேண்டாம் இங்கே பதிவிடவும் வேண்டாம் சரியான வருமானக்கனக்கு காட்டி வரி கட்டியுள்ளீர்கள் ?உங்களது மனத்சாட்சிக்கு தெரியும்.உங்களது பிரதமர் ஏன் சீனாவிடம் ஒரு இரண்டு கோடி லஞ்சம் வாங்கி இந்தியாவை விறகமாட்டார் என நம்பிக்கை ?அதுக்கும் அவர்கள் கதை சொல்வார்கள் சீனாவுடன் இணைந்ததால் உலகின் முதல் வல்லரசு என்று
அப்போதும் கைதட்டும் கூட்டமாகத்தான் நாமிருப்போம்
இளைஞர்கள் தான் எதிர்காலம் எதிர்காலம் என்கிறார்கள் என்பத்தொன்பது வயசிலும் இளைஞர்களுக்கு வழிவிட மனசில்லை .இது தமிழ் நாட்டில் நடக்குது ?இதற்கே எம்மால் தீர்வு காணமுடியல மொழிதெரியாதகலாச்சாரங்கள் வேறுபட்ட வடமாநிலத்தவனின் பிரச்சனை எப்படி எமக்கு தெரியும் ?
அரசும் அதன் ஊடகமும் சொல்வது தானே வேதம்
ஒவ்வொரு அமைச்சனும் ஒரு தொலைகாட்சி வைத்திருக்கிறான் அவன் சொல்வது தானே சத்தியம் ?நாங்களாக ஏதாவது தேடவும் மாட்டோம் அப்படி தேடி உண்மையை சொன்னால் (அண்மையில் வடமாநில வைத்தியர் ஒருவர் மாவோ என சொல்லி கடுளிய சிறைத்தண்டனை வழங்கியது)கைது சிறையடைப்பு இன்னும் ஏதேதோ....,,,
முதலில் நீங்கள் உங்கள் பெற்றோருக்கு பிள்ளை உங்கள் மொழிக்கு சொந்தக்காரன் உங்கள் இனத்துக்கு அடிமை ,அதன் பின்பு தான் தேசம் .


இங்கே எத்தனைபேர் கீழ் தட்டு மக்களுடன் வாழ்ந்திருக்கிறேர்கள் அவர்களுடன் அவர்களது துன்பங்களை பகிர்ந்திருக்கிறீர்கள் அங்கே போய் பாருங்கள் ஒரு விவசாயியை சந்தித்து அவருடன் கலந்து பாருங்கள் நீங்கள் எங்கே மிதந்துகொண்டிருக்கிறீர்கள்?என்பது தெளிவாகும்
உங்கள் வீட்டில் LCD டி‌வி பழைய மாடல் எல்‌இ‌டி வந்து அதற்கு அட்வான்சும் கட்டியிருபீர்கள்
அங்கே உழைக்க உறுதியிருந்தும் அவர்களின் உழைப்பு சுரண்டப்பட்டுக்கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்களோ ?(இலவசங்கள் கொடுத்து)


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 19, 2011 11:01 pm

எட்டுப் பக்க விவாதங்கள்.
சில இடத்தில் நெருப்புப் பொறி . மனித நேயத்தை மறந்து தங்கள் தங்கள் விமரிசனதிர்க்கு ஏதுவாக விளக்கங்கள்.
பதிவிட்ட தலைப்பு என்ன? அதைப் பற்றி பேசியது எவ்வளவு?
எவ்வளவு பேருக்கு இது தெரியும் என்று தெரியவில்லை. ஹிந்தி தேசிய மொழியாக்கப்பட்டதற்கு உதவியது யார்? பார்லிமென்டில் வோட்டுக்கு விட்ட சமயத்தில் வோட்டுப் போடாமல் இயற்கை உபாதை எனக் கூறி தமிழ் நாட்டு பிரதிநிதி நடிகர் ராஜேந்திரன் காணாமல் போக , சமமாக வந்த ஓட்டுகளுடன் சேர்ந்து தனது வோட்டையும் (விதி முறைப் படி ஆளும் கட்சி சார்பாக )சபாநாயகர் போட்டு ஹிந்தி தேசிய மொழி அந்தஸ்து பெற்றது. ஹிந்தி தேசியமொழி ஆனதற்கு யார் காரணம்?
விவாதம் என்ன ? ஆளும் மொழி ஹிந்தி- அடிமை மொழி தமிழ்.
விவாதத்தை நிறுத்த வேண்டிய தருணம் என நினைக்கிறேன்.
ரமணீயன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Feb 20, 2011 12:03 am

நிசாந்தன் wrote:ராம் அவர்களே, மக்கள் பாதுகாப்புப் படை என்ற சொல்லே தவறு. அது சால்வா ஜுடும் என்ற படை. அது மக்கள் உருவாக்கினது அல்ல. மேற்குவங்க மாநிலம் உருவாக்கியது. அந்த படையும் மக்களுக்கு எதிராக இந்திய இராணுவத்திற்கு வால் பிடிக்கும் படை. மக்கள் அனைவரும் மாவோயிட்டுகளின் பின்னால்.
எதிரி எல்லைக்குள் வரும்போது கொல்வது இயல்பே. இதுதான் உலகம் முழுக்க நடக்கிறது. 2 தமிழ்நாட்டுக்காரர்கள் இறந்தார்கள். உண்மைதான். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும். நான் முன்னமே கூறியதை திரும்ப கூறுகிறேன். மாவோயிட்டுகளைப் பற்றி எதுவும் தெரியாமல் என்னிடம் விவாதம் செய்யாதீர்கள். தெரிந்துவிட்டு வந்து பேசுங்கள். இதுதான் உங்களின் தெளிவற்ற விவாதங்களுக்கு என்னுடைய கடைசி பதில். மேலும் அவர்களைப் பற்றி தெரிந்துகொண்ட பின்பு எனிடம் கேட்டும் கேள்விகளுக்கு பதில் தருகிறேன். மேலும் சுதா அவர்களே, உங்களுக்கு இதுவே எனது பதில்

அன்புள்ள நிசாந்தன்,
எந்த விஷயத்தைச் சொல்வதாக இருந்தாலும் எழுத்துக்கு, எதிராளிக்கு, அவர்களின் வயதுக்கு எல்லாம் மரியாதை கொடுத்துப் பேசுவது தமிழர்களின் தமிழ் மொழிப்பற்று கொண்டவர்களின் பண்பாக இருக்க வேண்டும். தன்னிடம் விஷயம் ஒன்றும் இல்லாதவர்கள்தான் மற்றவர்களை விஷயம் ஒன்றும் தெரியாதவர்களாக நினைத்துப் பேசுவார்கள். பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவருக்கு அழகு. அந்த இரண்டும் உஙகள் எழுத்தில் சிறிதளவும் காணப்படவில்லை. நாம் என்னதான் அறிந்தவர்க்ளாக இருந்தாலும் மற்றவர்களின் கருத்தை மதிக்க வேண்டும். மதிக்கா விட்டாலும் பரவாயில்லை. எதிர்க்க வேண்டாம். எதிர்த்தாலும் பரவாயில்லை. அதிலும் ஒரு நாகரிகம் இருக்க வேண்டும். //உங்களுக்குத் தெரியுமா? தொலைக்காட்சியை மட்டும் பார்த்துவிட்டு வந்து என்னிடம் பேசாதீர்க்ள், அருந்ததி ராயைப் படித்து இருக்கிறீர்களா? // என்றெல்லாம் நாகரிகமற்ற வினாக்கள் உங்கள் பகுத்தறிவின்மையைக் காட்டுகின்றன. தலைமை நடத்துநரின் (கலை சார்) பதிவைப் பார்த்த பின்னும் தங்களின் பதிவுகளில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.
//எதுவும் தெரியாமல் என்னிடம் விவாதம் செய்யாதீர்கள். தெரிந்துவிட்டு வந்து பேசுங்கள். இதுதான்
உங்களின் தெளிவற்ற விவாதங்களுக்கு என்னுடைய கடைசி பதில். மேலும் அவர்களைப்
பற்றி தெரிந்துகொண்ட பின்பு எனிடம் கேட்டும் கேள்விகளுக்கு பதில்
தருகிறேன். மேலும் சுதா அவர்களே, உங்களுக்கு இதுவே எனது பதில்
//
ஒரு வழிநடத்துநரைப் பார்த்து இவ்வாறு கூறுவது இதுவெ கடைசி முறையாக இருக்கட்டும் என்று தாங்கள் எச்சரிக்கப்படுகின்றீர்கள். எழுத்து நாகரிகத்தைக் கடைபிடித்து இனி பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.



ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Aஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Aஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Tஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Hஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Iஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Rஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Aஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 Empty
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Sun Feb 20, 2011 1:24 am

விவாதம் இயல்பை கடந்து வேறு கோணத்தில் செல்வதாக உணர்கிறேன்.. இத்துடன் இனி இந்த பதிவை நிறுத்திக்கொள்வதே நல்லதென நினைக்கிறேன். அன்பாகவும் நட்பாகவும் நாம் நல்லுறவை தொடருவோம்.. தயவுசெய்து இனி இந்த பதிவிற்கு யாரும் தங்கள் விவாதங்களை வைக்க வேண்டாம், அது எல்லையற்ற வார்த்தை போருக்கு கொண்டு செல்லும் என்பதை அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. புதிதாய் இணைந்தவர்களுக்கும் இணயப்போகிறவர்களும் இந்த பதிவினால் இந்த அன்பான ஈகரையை வெறுக்கக் கூடும். நல்லுறவுக்கு தயவுசெய்து ஒத்துழையுங்கள்.. ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 440806 ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 440806 ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 8 440806

Sponsored content

PostSponsored content



Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக