புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_m10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10 
44 Posts - 43%
heezulia
ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_m10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10 
43 Posts - 42%
mohamed nizamudeen
ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_m10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10 
4 Posts - 4%
prajai
ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_m10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10 
4 Posts - 4%
Jenila
ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_m10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_m10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_m10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_m10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10 
1 Post - 1%
kargan86
ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_m10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10 
1 Post - 1%
jairam
ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_m10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_m10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_m10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_m10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10 
8 Posts - 5%
prajai
ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_m10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_m10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10 
4 Posts - 3%
Rutu
ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_m10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_m10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_m10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10 
2 Posts - 1%
viyasan
ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_m10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_m10ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 07, 2011 5:43 pm

ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! E_1298971002

ஒரு மரத்தை, "பரிசோதனை சாலை' என கூற முடியுமா? ஆனால், இப்படியொரு மரம் இருக்கத்தான் செய்கிறது. எங்கே? லக்னோ விலிருந்து, 35 கி.மீ., தொலைவிலுள்ள கலிமுல்லா கான் நர்சரி தோப்பில். அங்கு, 14 ஏக்கரில் பெரிய தோப்பு உள்ளது. அதில், ஒரு மாமரம் உள்ளது. அதைத்தான், "பரிசோதனை சாலை' என அழைக் கின்றனர். இந்த மரம், வருடா வருடம் தன்னை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்கிறது.

இந்த குறிப்பிட்ட மாமரத்துக்கு, இப்போது, 75 வயது. ஆனால், 10 வயது மரம் மாதிரி அத்தனை இளமையாக காட்சியளிக்கிறது. இந்த மரத்தில், ஆராய்ச்சியின் மூலம், 315 வகையான மாம்பழங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உருவாக்கியவர் கலிமுல்லா கான்.

மலிகாபாத் என அழைக் கப்படும் இந்த பகுதிக்கு, இயற்கையின் கருணை அதிகம். மாம்பழ சீசனில் இங்கிருந்து தினமும், 150 லாரி லோடு மாம்பழம், விற்பனைக்குச் செல்கிறது. ஆனால், கலிமுல்லா கானின், 14 ஏக்கர் மாம் பழங்களும், 15 நாட் களில் விற்றுத் தீர்ந்து விடும்.

இந்த தொழி லில், 17 வயது பைய னாக, 1957ல் நுழைந்தவர் கலிமுல்லாகான். ஏழாம் வகுப்பில் தோல்வி அடைந் ததும், படிப்புக்கு, "குட்- பை' சொல்லி விட்டு, 150 வருட குடும்பத் தொழி லான மாம்பழ சாகுபடியை ஏற்றார்.

அப்போதே தன்னுடைய மரத்தில், ஏழு வகையான மாம்பழங்களை உருவாக்கி, அசத்தினார். ஆனால், இயற்கை சதி செய்தது. கடும் மழையும், வெள்ளமும் ஏற் பட்டு, அந்த பகுதியே நாசமானது. இதனால், கலங்கிப் போய் ஓடி விடாமல், புதிதாக கடன் வாங்கி, வெள்ளம் பாதிக்காத இடத்தில் புதியதாக நிலம் வாங்கி, மாமரங்களை நட்டார். அங்கு தான், இன்று வரை அவருடைய தோப்பு இருக்கிறது.

மாம்பழம் மூலம் பணம் சேர்ந்ததும், 1987ல் புது முயற்சிகளில் ஈடுபடத் துவங்கினார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில், தன்னுடைய மாமரம் ஒன்றில், 50க்கும் அதிகமான வகைகளை உருவாக்கினார்.

நான்காவது வருடம், நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு, அதன் எண்ணிக்கை, ஒரே மரத்தில், 250 என உயர்ந்தது; இந்தியாவே வியந்தது.

அதன் மூலம் வருடா வருடம், அந்த மரத்தில் பழங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே வருகிறார். இதில், என்ன சிறப்பு என்றால், ஒரே கிளையில் மூன்று வகையான மாம் பழங்கள் தொங்கி, பார்ப்போரை அசத்தும். அத்தனை வகை மாம் பழங்களையும், தனித்தனியாக கண்டுபிடித்து, அதன் பெயரை சரியாக கூறி விடுவது இவரின் தனிச்சிறப்பு.

ரசாயன மருந்துகள், பூச்சி மருந்துகள் கலப்பு உரங்களை, தன் மரங்களில் பயன்படுத்துவதில்லை. மாறாக வேப்ப எண்ணையை பயன்படுத்துகிறார். "ரசாயன உரங்களை வைப்பது, சொந்த குழந்தையை கொல் வதற்கு சமம்; அதை, ஒரு போதும் நான் செய்ய மாட்டேன்.

"துபாயும், அபுதாபி யும் என்னை, தங்கள் நாட்டிற்கு வந்து, மாம் பழம் பயிரிட இருகரம் கூப்பி அழைக்கின்றன. எனக்கு பணம் பெரிதல்ல; அதனால், அங்கெல்லாம் செல்ல மாட்டேன். அதே சமயம், ஒரு வருத்தம் உள்ளது. எனக்கு தெரிந்தவற்றை என்னுடைய வாரிசுக்கு சொல்லிக் கொடுத்துள்ளேன். ஆனாலும், எனக்கு பிறகு, என்னுடைய ஆராய்ச்சியும், புதைக்கப்பட்டு விடுமோ என பயமாக இருக்கிறது...' என்கிறார் கலிமுல்லா கான்.

***

* மாம்பழத்திற்கான இவருடைய தனிப்பட்ட உழைப்பையும், சேவையையும் பாராட்டி, 2008ல் இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது.

* சில ஆண்டுகளுக்கு முன், அபூர்வமான சுவை கொண்ட ஒரு மாம்பழத்தை உருவாக்கி, அதற்கு சச்சின் (டெண்டுல்கர்) என பெயரிட்டார்.

*இவருடைய தோப்பில், மூன்று ஆயிரம் கொய்யா மரங்கள் உள்ளன. அவற்றிலும், புதுமை களை செய்து, வித்தியாசமான ரகங்களை உருவாக்குகிறார். அந்த வகையில், தற்போது, படு சுவையான ஒரு கொய்யாவை உருவாக்கியுள்ளார். இதற்கு, ஆப்பிள் போன்ற கவர்ச்சி உள்ள தால், "ஐஸ்வர்யா ராய்' என பெயரிட்டுள்ளார்.

* இந்தியாவின் பிரபல நகரங்களில் மாம்பழ கண்காட்சி நடக்கும் போது, இவருக்கு சிறப்பு அழைப்பு வந்துவிடும்.

* இந்த, 315 வகையான வித்தியாசமான மாம்பழங்களை ஒரே மரத்தில், வருடத்தில், 15 நாட்கள் மட்டுமே காண முடியும். மற்றொரு மரத்தில், 150க்கும் அதிகமான வகை மாம்பழங் களை உருவாக்கியுள்ளார்.

இவற்றில் அல்போன்சா, லங்ராஸ், ஹிம்சாகர், பங்கனபள்ளி, நீலம், மல்கோவா என அனைத்து வகைகளும் அடக்கம்.

- ராஜி ராதா



ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Mon Mar 07, 2011 5:57 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 07, 2011 9:17 pm

வியத்தகு மனிதர்... மகிழ்ச்சி மகிழ்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Mon Mar 07, 2011 9:35 pm

ரொம்ப வியப்பா இருக்கே

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 07, 2011 9:37 pm

//நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு, அதன் எண்ணிக்கை, ஒரே மரத்தில், 250 என உயர்ந்தது; இந்தியாவே வியந்தது.//
ஆச்சரியமா இருக்கு.. பயம்



ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Aஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Aஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Tஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Hஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Iஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Rஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Aஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! Empty
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Tue Mar 08, 2011 7:54 am

ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! 677196 ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! 677196 ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! 677196



அகீல் ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்! 154550
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 08, 2011 11:47 am

ஒரே மனித உடம்பில் எத்தனை வகை மாற்றங்கள் அதுபோல் இதுவும் இருக்கலாம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
r.sakthiveltamil
r.sakthiveltamil
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 18/02/2011
http://rr_sakthi_tamil@yahoo.com

Postr.sakthiveltamil Thu Mar 10, 2011 6:21 pm

ஒரு மரத்தை, "பரிசோதனை சாலை' என கூற முடியுமா? ஆனால், இப்படியொரு மரம் இருக்கத்தான் செய்கிறது. எங்கே? லக்னோ விலிருந்து, 35 கி.மீ., தொலைவிலுள்ள கலிமுல்லா கான் நர்சரி தோப்பில். அங்கு, 14 ஏக்கரில் பெரிய தோப்பு உள்ளது. அதில், ஒரு மாமரம் உள்ளது. அதைத்தான், "பரிசோதனை சாலை' என அழைக் கின்றனர். இந்த மரம், வருடா வருடம் தன்னை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்கிறது.
இந்த குறிப்பிட்ட மாமரத்துக்கு, இப்போது, 75 வயது. ஆனால், 10 வயது மரம் மாதிரி அத்தனை இளமையாக காட்சியளிக்கிறது. இந்த மரத்தில், ஆராய்ச்சியின் மூலம், 315 வகையான மாம்பழங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உருவாக்கியவர் கலிமுல்லா கான்.
மலிகாபாத் என அழைக் கப்படும் இந்த பகுதிக்கு, இயற்கையின் கருணை அதிகம். மாம்பழ சீசனில் இங்கிருந்து தினமும், 150 லாரி லோடு மாம்பழம், விற்பனைக்குச் செல்கிறது. ஆனால், கலிமுல்லா கானின், 14 ஏக்கர் மாம் பழங்களும், 15 நாட் களில் விற்றுத் தீர்ந்து விடும்.
இந்த தொழி லில், 17 வயது பைய னாக, 1957ல் நுழைந்தவர் கலிமுல்லாகான். ஏழாம் வகுப்பில் தோல்வி அடைந் ததும், படிப்புக்கு, "குட்- பை' சொல்லி விட்டு, 150 வருட குடும்பத் தொழி லான மாம்பழ சாகுபடியை ஏற்றார்.
அப்போதே தன்னுடைய மரத்தில், ஏழு வகையான மாம்பழங்களை உருவாக்கி, அசத்தினார். ஆனால், இயற்கை சதி செய்தது. கடும் மழையும், வெள்ளமும் ஏற் பட்டு, அந்த பகுதியே நாசமானது. இதனால், கலங்கிப் போய் ஓடி விடாமல், புதிதாக கடன் வாங்கி, வெள்ளம் பாதிக்காத இடத்தில் புதியதாக நிலம் வாங்கி, மாமரங்களை நட்டார். அங்கு தான், இன்று வரை அவருடைய தோப்பு இருக்கிறது.
மாம்பழம் மூலம் பணம் சேர்ந்ததும், 1987ல் புது முயற்சிகளில் ஈடுபடத் துவங்கினார்.
அடுத்த மூன்று ஆண்டுகளில், தன்னுடைய மாமரம் ஒன்றில், 50க்கும் அதிகமான வகைகளை உருவாக்கினார்.
நான்காவது வருடம், நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு, அதன் எண்ணிக்கை, ஒரே மரத்தில், 250 என உயர்ந்தது; இந்தியாவே வியந்தது.
அதன் மூலம் வருடா வருடம், அந்த மரத்தில் பழங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே வருகிறார். இதில், என்ன சிறப்பு என்றால், ஒரே கிளையில் மூன்று வகையான மாம் பழங்கள் தொங்கி, பார்ப்போரை அசத்தும். அத்தனை வகை மாம் பழங்களையும், தனித்தனியாக கண்டுபிடித்து, அதன் பெயரை சரியாக கூறி விடுவது இவரின் தனிச்சிறப்பு.
ரசாயன மருந்துகள், பூச்சி மருந்துகள் கலப்பு உரங்களை, தன் மரங்களில் பயன்படுத்துவதில்லை. மாறாக வேப்ப எண்ணையை பயன்படுத்துகிறார். "ரசாயன உரங்களை வைப்பது, சொந்த குழந்தையை கொல் வதற்கு சமம்; அதை, ஒரு போதும் நான் செய்ய மாட்டேன்.
"துபாயும், அபுதாபி யும் என்னை, தங்கள் நாட்டிற்கு வந்து, மாம் பழம் பயிரிட இருகரம் கூப்பி அழைக்கின்றன. எனக்கு பணம் பெரிதல்ல; அதனால், அங்கெல்லாம் செல்ல மாட்டேன். அதே சமயம், ஒரு வருத்தம் உள்ளது. எனக்கு தெரிந்தவற்றை என்னுடைய வாரிசுக்கு சொல்லிக் கொடுத்துள்ளேன். ஆனாலும், எனக்கு பிறகு, என்னுடைய ஆராய்ச்சியும், புதைக்கப்பட்டு விடுமோ என பயமாக இருக்கிறது...' என்கிறார் கலிமுல்லா கான்.
***

* மாம்பழத்திற்கான இவருடைய தனிப்பட்ட உழைப்பையும், சேவையையும் பாராட்டி, 2008ல் இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது.
* சில ஆண்டுகளுக்கு முன், அபூர்வமான சுவை கொண்ட ஒரு மாம்பழத்தை உருவாக்கி, அதற்கு சச்சின் (டெண்டுல்கர்) என பெயரிட்டார்.
*இவருடைய தோப்பில், மூன்று ஆயிரம் கொய்யா மரங்கள் உள்ளன. அவற்றிலும், புதுமை களை செய்து, வித்தியாசமான ரகங்களை உருவாக்குகிறார். அந்த வகையில், தற்போது, படு சுவையான ஒரு கொய்யாவை உருவாக்கியுள்ளார். இதற்கு, ஆப்பிள் போன்ற கவர்ச்சி உள்ள தால், "ஐஸ்வர்யா ராய்' என பெயரிட்டுள்ளார்.
* இந்தியாவின் பிரபல நகரங்களில் மாம்பழ கண்காட்சி நடக்கும் போது, இவருக்கு சிறப்பு அழைப்பு வந்துவிடும்.
* இந்த, 315 வகையான வித்தியாசமான மாம்பழங்களை ஒரே மரத்தில், வருடத்தில், 15 நாட்கள் மட்டுமே காண முடியும். மற்றொரு மரத்தில், 150க்கும் அதிகமான வகை மாம்பழங் களை உருவாக்கியுள்ளார்.
இவற்றில் அல்போன்சா, லங்ராஸ், ஹிம்சாகர், பங்கனபள்ளி, நீலம், மல்கோவா என அனைத்து வகைகளும் அடக்கம். **

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக