புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Poll_c10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Poll_m10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Poll_c10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Poll_m10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Poll_c10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Poll_m10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Poll_c10 
3 Posts - 6%
prajai
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Poll_c10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Poll_m10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Poll_c10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Poll_m10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Poll_c10 
2 Posts - 4%
viyasan
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Poll_c10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Poll_m10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Poll_c10 
1 Post - 2%
Rutu
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Poll_c10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Poll_m10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Poll_c10 
1 Post - 2%
சிவா
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Poll_c10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Poll_m10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Poll_c10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Poll_m10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Poll_c10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Poll_m10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Poll_c10 
2 Posts - 15%
Rutu
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Poll_c10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Poll_m10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்


   
   

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:29 am

First topic message reminder :

மொழி பெயர்ப்பாளரின் நன்றியுரை

திரு. கர்மயோகி அவர்களின் SPIRITUALITY & PROSPERITY PART – I என்ற ஆங்கில படைப்பை தமிழாக்கம் செய்து வெளியிடுவதற்கு எனக்கு அனுமதி அளித்ததிற்கு என்னுடைய நன்றியறிதலை முதலில் அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இம்மொழிப்பெயர்ப்பை புத்தகமாக வெளியிடுவதற்கு வெளியிட முன்வந்த கடலூர் தியான மையத்திற்கும், இம்மொழி பெயர்ப்பை ஆங்கில மூலத்திற்கு ஏற்றபடி திருத்தம் செய்து கொடுத்த திரு. N.அசோகன் அவர்களுக்கும், தமிழாக்கத்தின் தரத்தை மேம்படுத்திக் கொள்ள உதவும் வகையில் தன்னுடைய தமிழாக்கப் பிரதிகளை படிப்பதற்கு எனக்கு வழங்கிய ராணிப்பேட்டை தியான மைய பொறுப்பாளர் திரு. S. லஷ்மிநாராயணன் அவர்களுக்கும் மற்றும் பல வகையில் உதவிய சக அன்னை அன்பர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

என்னால் முடிந்தளவிற்கு இம்மொழி பெயர்ப்பினை எனக்குத் தெரிந்தளவிற்கு செய்துள்ளேன். அதையும் மீறி மூலத்தின் கருத்துச் சிறப்பு சில இடங்களில் சரியாக வெளிப்படவில்லை என்று வாசகர்களுக்கு மனதில் பட்டால் பொறுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

பகவான் ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ஸ்ரீ அன்னை அவர்களுக்கு இப்படி எழுத்து மூலமாக, இச்சிறு சேவையை செய்ய முடிந்ததிற்கு என் நன்றியறிதலை அவர்கள் பொற்பாதங்களில் சமர்ப்பணம் செய்கின்றேன்.

M. மணிவேல்




ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:38 am

20. ஆன்மாவும் சத்தியமும்

ஆன்மாவுக்கு அடிப்படையில் 12 அம்சங்கள் உள்ளன. அவற்றில் சத்தியம் என்பது ஒன்று. மற்ற அம்சங்கள் ஐக்கியம், நன்மை, ஞானம், தெய்வீக அன்பு மற்றும் இதரவைகளாகும். இதில் ஏதாவது ஒரு அம்சம், நம் வாழ்வில் ஆன்மாவுக்கும் மற்றும் அதனுடைய சக்தியைப் பெறுவதற்கும் வழிகோலுகிறது. இதில் சத்தியம் அதிக சக்தி வாய்ந்தது. வேலை நிறுத்தம், சச்சரவுக்குரிய சூழல் போன்றவைகளில் சாதாரணமாக மனித சுபாவம், மற்றவருடைய பலவீனத்தைத் தனக்கு முழுமையாக சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. இப்படி செய்வது நம் வலிமைக்கு உண்டான பலனைத்தருகிறது. சிறு தொழிலதிபர் ஒருவரால் எப்படி, ஆன்மாவை அழைத்து, வேலை நிறுத்தத் தலைவர்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது? அந்த தலைவர்கள் முதலாளியைப் போல் தாங்களும் ஆன்மாவை அழைக்கும் முறையைப் பின்பற்றி இருந்திருக்கும் பட்சத்தில், முதலாளியின் போக்கும் அவர்களுக்கு சாதகமான முறையில் மாற்றமடைந்திருக்கும்.

ஒரு தொழிற்சாலையில் 50 பேர்கள் வேலை செய்து கொண்டிருந்த பிரிவை நீக்கிவிட்டார்கள். அந்தப் பிரிவில் வேலை செய்து கொண்டிருந்த அத்தனை பேரும் ஒருவரைத் தவிர கம்பெனியின் உண்மையான நிலையை உணர்ந்து ஏற்றுக் கொண்டார்கள். ஒருவர் மட்டும் தன் உள்ளே இருக்கும் ஆன்மாவின் உதவியை நாடினார். அவர் ஒரு தொழில் நுட்ப வல்லுனராக இருந்ததால், அவரைமட்டும் எடுத்துக் கொண்டு, புதியதாக ஏற்படுத்திய பிரிவின் தலைமைப் பதவிக்கு அமர்த்திக் கொண்டார்கள். உள்ளே இருக்கும் ஆன்மா உண்மையானது. அதனுடைய சக்திகள் தடுக்க முடியாதது. மனித சுபாவம் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் தன்மையுடையது. போர்க்களத்தில் நிராயுதபாணியாக நின்ற இராவணனை அன்று, வீடு திரும்பிப் போய் மறுநாள் வரும்படி கூறிய இராமனுடைய செயல் தற்காலிக ஆதாயத்தை பயன்படுத்தாத ஆன்மீக தாராளத்தைக் காட்டுகிறது. அது ஆன்மாவின் சக்தியை வெளிப்படுத்தி சூழ்நிலையை மனநிலை ரீதியாக மாற்றுகிறது.

ஆன்மா விரைந்து செயல்படும் அறிகுறிகள் இவை :

நாம் பிறருடைய கண்ணோட்டத்தில் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதில்,
நாம் பிறரால் புண்பட்ட பொழுதும் எதிர் செயல் இன்றி செயல்படும் பொழுது,
நம்முடைய சொந்த நலனைவிட பெரிய லட்சியத்தை கருதும் பொழுது,
நாம் மனத்தின் உள்ளே சென்று அமைதி, அல்லது மௌனம் அல்லது சாந்தியை விழையும் பொழுது,
அறிவீனமான ஒருவர் நமக்குத் தீங்கு இழைத்த பொழுதும் அவர் மீது கருணை காட்டுவது,
நம்முடைய சொந்த நலனுக்காக ஒரு வார்த்தை பொய் சொல்ல மறுப்பது,
தன்னுடைய கட்சியின் ஆதாயத்தைவிட, நம் ஸ்தாபனத்தின் உயர்ந்த நன்மையைக் கருதி ஸ்தாபனத்தின் பக்கம் நிற்பது,
நாம் மனித நிலைப்பாட்டிலிருந்து விலகி உயர்ந்த ஜீவியமடங்கிய இறை இலட்சியத்தை ஆதரிக்கும் நேரங்களில் ஆன்மா விரைந்து செயல்படுவது கண்கூடு.

ஆன்மாவின் 12 அம்சங்கள். (1) அனந்தம், (2) நித்தியத்துவம், (3) மௌனம், (4) சாந்தி, (5) ஐக்கியம், (6) சத்தியம், (7) ஞானம், (8) சக்தி, (9) தெய்வீக அன்பு (10) அழகு, (11) சந்தோஷம், (12) தூய்மை. இதில் ஏதாவது ஒன்றின் மீது ஓரளவு உயர்ந்த நம்பிக்கை வைத்து, நாம் ஆன்மாவை அழைப்பது, கடவுளுக்கு விடுக்கும் அழைப்பாகும்.

வாழ்வில் அளவு கடந்து இலஞ்சம் பரவியிருந்தாலும் ஆன்மா மீது நம்பிக்கை வைப்பவருக்கு நாலுபேர் போல் நடக்கும் அவசியத்தை ஆன்மா ஒருபோதும் தராது.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:38 am

21. எரி நட்சத்திரம்

எரி நட்சத்திரம் என்று நாம் சொல்வது சில சமயம் வானில் தோன்றி சில வினாடிகளில் மறைந்து விடும். ஐரோப்பாவில் எரி நட்சத்திரம் விழுவது நல்ல சகுனம் என்ற ஒரு நம்பிக்கை நிலவி வருகிறது. எரி நட்சத்திரத்தைப் பார்க்கும் ஒருவர், அது மறைவதற்குள் மனத்தில் ஒரு விருப்பத்தைக் கொண்டு வந்து தெளிவாக உணர்ந்தால், அந்த விருப்பம் ஒரு வருட காலத்திற்குள் நிறைவேறும் என்று, ஒரு பரவலான நம்பிக்கை உண்டு. ஒருவர் தம் மனத்தில் உள்ள கருத்தை அந்த சில வினாடிகளில் தெளிவாக நினைவில் கொண்டுவர வேண்டுமெனில், அந்த விருப்பமானது ஜீவியத்தில் எப்பொழுதும் நினைவில் இருக்க வேண்டும். அப்படி அந்த நினைவு ஜீவியத்தில் இருப்பதால், அது உரிய நேரத்தில் தெளிவாகத் தோன்றி அவ்விருப்பம் நிறைவேறியது என்று, நாம் பொதுவாக அறிந்துள்ளோம். இந்த அனுபவ அறிவும் அதற்குப் பின்னால் உள்ள ஆன்மீக உண்மையும் வாழ்வின் பிரச்சனையை தீர்க்கும் ஒரு வழி என்று, உணர்ந்து அந்த முறையை ஆன்மாவை அழைப்பதில் ஈடுபடுத்தினால், வாழ்வின் பிரச்சனைகள் நிச்சயமாகத் தீர்க்கப்படும். எந்த ஒரு பிரச்சனையையும் தீர்த்துக் கொள்வதில் ஒருவர் முயற்சி செய்யும் பொழுது, அப்பிரச்சனையை ஜீவியத்தின் மேல்நிலைக்கு கொண்டுவர முயற்சிக்கலாம். ஆன்மாவை மணிக்கு ஒரு முறை அதே குறிப்பிட்ட நேரத்தில் நினைவு கூர்ந்தால், பிரச்சனை விலகும். அப்படி செய்வதற்கு அந்த நினைவு எந்த நேரமும் மனதில் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

ஒரு காசநோயாளி வசதி படைத்தவராக இருந்தார். என்றாலும், அவர் உத்தியோகம் வகித்து வந்தார். அவர் நோய் வாய்ப்பட்டிருந்ததால் திருமணம் ஆகாமல் இருந்தார். அவருடைய வியாதியின் கொடுமை, மாதம் ஒருமுறை வாந்தி எடுக்கும் நிலைக்குக் கொண்டு போயிற்று. நீடித்த சிகிச்சை பெற்ற காரணத்தினால், மாதம் ஒருமுறை வாந்தி எடுப்பது குறைந்து, அந்த மோசமான நிலையின் கால இடைவெளி அதிகரித்தது. நோய் குணமாவதற்கு வழிபாடு ஸ்தலத்தில் தஞ்சம் அடைந்தார். அதில் அவருக்கு ஓரளவுக்கு பரிகாரம் கிடைத்தாலும், நோய் பூரணமாக குணமடையவில்லை. அவரால் அதிகபட்சம் 30 அல்லது 50 கெஜ தூரம் தான் நடக்க முடிந்தது. அவருக்கு, ஓடுபவர்கள் அரிய காட்சியாக தெரிந்தார்கள்.

நோய் நிரந்தர குணம் அடைய அவருடைய ஆன்மாவை அழைப்பதில் தான் தீர்வு உள்ளது என்று, அவருக்கு ஒருவர் யோசனை கூறினார். ஆன்மாவை அழைக்கும் முறையை சொல்பவரைக் காண ஒரு மைல் தூரத்திற்கு, ரிக்ஷாவில் ஏறிச்சென்று பார்த்தார். அந்த புதிய முறையைப் பற்றி அவர் கேட்டுக்கொண்டிருந்த பொழுது, அவருக்கு புதிய தெம்பு வந்ததை உணர்ந்தார். நோயாளி, ஆன்மாவை அழைத்து பிரச்சினையை மணிக்கு ஒரு முறை நினைவிற்குக் கொண்டு வந்து உள் இருக்கும் ஆன்மாவை அழைக்கும் முறையை ஏற்றுக் கொண்டார். அவர் அறையிலிருந்து வெளியில் வந்ததும், தன்னால் நடக்க முடியும் என்ற உணர்வு பெற்றார். ரிக்ஷாவை நோக்கி நடக்கலானார். இந்த புதிய முறையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாகவே, ரிக்ஷாவைப் பின் தொடர்ந்து, ஒரு மைலுக்கும் அதிக தூரத்திலுள்ள, அவருடைய இருப்பிடத்திற்கு நடந்தே திரும்பிச் சென்றார்.

அவர் சரியாக ஒவ்வொரு மணி நேர இடைவெளியில், ஆன்மாவை 24 மணி நேரமும் தவறாமல் அழைத்த பிறகு, இந்த ஒரு அபூர்வ அருஞ்செயலினால் உடனடியாக ஏற்பட்ட முன்னேற்றத்தைப் பற்றி, தெரிவிப்பதற்காக, மறுநாள் அவ்வளவு தூரமும் நடந்தே சென்றார். மதக் கோட்பாடு மரபுப்படி, இயல்பாக படிந்துள்ள சுபாவம் மாற்ற முடியாதது என்று சொல்லப்படுகிறது. ஒரு மரபு, யோகப் பயிற்சியின் மூலம் 35 வருடங்களில் சுபாவத்தை மாற்ற முடியும் என்று கூறுகிறது. பிரெஞ்ச்சு பெண் ஓவியக் கலைஞர் ஒருவர், தன்னுடைய ஓவிய அறையிலிருந்து வெளியில் வரும் பொழுது எரி நட்சத்திரத்தைப் பார்த்தார். பார்த்த மாத்திரத்தில் தன் சுபாவம் முழுவதும் மாற வேண்டுமென்ற தன் மனதிலுள்ள கருத்தை, அந்த சில வினாடிகளில் தெளிவாகக் கொண்டு வந்து நினைத்தார். அப்படியே ஒரு வருடத்தில் அவருடைய சுபாவம் மாறிவிட்டது.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:39 am


22. பேச்சு இழந்தபின் இழந்ததை நம்பிக்கை உயிர்ப்பித்தது


உடல்நலக் கோளாறினால் பேசும் உறுப்பு பாதிக்கப்படும்பொழுது பேச்சு வருவதில்லை. உடற்கோளாறினால் புலன்கள் பாதிக்கப்பட்டு பேச்சு இழப்பு ஏற்படும்பொழுது மருத்துவ சிகிச்சை பலனளிக்கும். மனநிலை பாதிப்பால் ஏற்படும் பேச்சு இழப்புக்கு உடல் மருத்துவ சிகிச்சை பலனளிக்காது. அது மேலும் கடினமாக்குகிறது. இதற்கு மனோதத்துவ முறையில் சிகிச்சை அளித்தால்தான் குணமடைய முடியும். ஆன்மாவை அழைக்கும் பொழுது உடலாகிய ஜீவனின் எந்தப் பகுதியிலும் விழிப்பு இருந்தால் ஆன்மா செயல்படுகிறது.

19 வயது சிறுவன் பேச்சு இழந்துவிட்டான். அவன் எப்பொழுதும் அதிகமாக பேசாதவனாக இருந்ததால் வீட்டில் உள்ளவர்கள், அந்த சிறுவன் பேச்சு இழந்ததை சில நாட்கள் கவனிக்கவில்லை. அவனுக்கு பேச்சு திரும்பிவிடும் என்ற நம்பிக்கையில் அவனை மருத்துவமனையில் சேர்த்தார்கள். பையனின் குடும்பத்தினர் இந்த நோய்க்கு சிகிச்சை கிடையாது என்று, பிறகு மெல்ல தெரிந்து கொண்டார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால், கடவுளுக்கு பிரார்த்தனை செய்வதுதான். வீட்டிலுள்ள பெரும்பாலோரும் பிரார்த்தனை செய்தார்கள். பையனுடைய நிலையில் எந்த மாற்றமும் இல்லை. பிரார்த்தனையிலிருந்து, உள்ளேயும் மனதில் அமைதியும் கிடைக்கவில்லை.

சிறுவனுடைய சகோதரர் பஸ்சில் பிரயாணம் செய்த பொழுது தனக்கு பழக்கமான ஒருவரைச் சந்தித்தார். அவரிடமிருந்து ஆன்மாவை அழைப்பது பற்றிய செய்தியை கேள்விப்பட்டார். பையன் பேசமுடியாவிட்டாலும் காது கேட்க முடிந்ததால், அவர் தான் கேள்விப்பட்ட விஷயத்தை பையனிடம் தெரிவித்தார். பையனுடைய சகோதரரும் கூட ஆன்மாவை அழைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இது ஒரு புதுமாதிரியான முயற்சியாக இருந்ததால் யாராலும் இதை சரியான முறையில் பின்பற்ற முடியவில்லை. முதல்நாள் பலரும் தெளிவற்ற முறையில் முயற்சித்தப் பிறகு, பத்து நாட்கள் அனுபவித்த துன்பத்திற்குப் பிறகு, சிறுவன் ஒருவார்த்தை பேசினான்.

இது அவர்களுக்கு பெருமளவில் உற்சாகமாக இருந்தது. ஒவ்வொருவரும் தங்களுடைய முயற்சிகளை அதிகப் படுத்தினார்கள். அது முழு திருப்தி அளிக்காவிட்டாலும், செய்யக்கூடிய சாத்தியமான முயற்சிகளையெல்லாம் மேற்கொண்டார்கள். ஆன்மாவை அழைப்பது ஆன்மீகமுறை. அதற்கு மரபு பலவிதமான ஆன்மீக வழிமுறைகளைக் கொண்டுள்ளது. இதில் முக்கியமாக புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், ஆன்மா இருக்கிறது என்பதையும், அதற்கு சக்தி உள்ளது என்றும் அதை செயல்பட வைக்க ஆன்மாவை மன உறுதியுடன் அழைக்க வேண்டுமென்றும் புரிந்து கொள்ள வேண்டும். அறிவு தன்னுடைய இயலாமையை உணர்ந்து அமைதியடையும் பொழுது ஆன்மா செயல்படத் தூண்டப்படுகிறது. அது சில வினாடிகள் மேலே வெளிப்படுகிறது. ஒரு பிரச்சனையை தீர்த்துக் கொள்ள இது போதுமானது. யோக வாழ்க்கைக்கு, ஆன்மா எப்பொழுதும் மேல் மனத்தில் இருக்க வேண்டியது அவசியமாகுகிறது. வீட்டில் உள்ள அனைவரும் விடா முயற்சியுடன் படிப்படியான முறையில் கடின முயற்சிகளை மேற்கொண்ட பிறகு, மறுநாள் பையனுக்கு முழுபேச்சும் திரும்பிற்று.

நம்பிக்கை என்பது ஆன்மாவின் அறிவாக வர்ணிக்கப்படுகிறது. மனிதனின் அறிவிற்கு போதிய ஞானமில்லை என்றாலும், ஆன்மாவிற்கு அந்த ஞானமுண்டு என்று நம்மறிவிற்கு தெரியும் பொழுது வேலை கூடிவரும் என்று புரிந்து கொள்கிறது. ஆன்மாவின் ஞானம் நம்மறிவிற்கும் வந்தால் நம்மறிவே மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறுகிறது. பூரண யோகத்தில் நம்முடைய உணர்விலிருந்து பிறக்கும் சக்தி "பிராணன்" என்று அறியப்படுகிறது. ஒருவருடைய உணர்வு ஆன்மீக அறிவை பெறும் பொழுது, அவர் வாழ்வில் தோல்விகளைக் காணாத வெற்றிகளை உடையவராகவும், அதிர்ஷ்டக்காரராகவும் இருக்கிறார்.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:39 am

23. மௌன சக்தி

பாகம் - I

. அமெரிக்கன் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் துணைத்தலைவருக்கு (Vice President of the American Management Association) தன்னுடைய ஆறாம் வயதில் புத்தகம் எழுத வேண்டுமென்ற எழுந்த பேரார்வம் அவரது 55வது வயதில் பூர்த்தியாயிற்று. புத்தகம் எழுதுவதற்கு ஏராளமான விபரங்கள் தேவைப்பட்டதால் சியர்ஸ் அண்டு கம்பெனிக்கு நேரில் சென்றார். அந்த கம்பெனியில் எல்லா நிலையில் உள்ளவர்களிடமும் தலைவரிலிருந்து ஆரம்பித்து கடைசி சிப்பந்திவரை ஒரு 12 பேரை நேரில் விசாரணை செய்ய வேண்டுமென்பது இவரது திட்டம். எழுத்தாளர்களின் அத்தகைய முயற்சிகள் கம்பெனிக்கு எரிச்சல் ஊட்டுவதாகும். ஏன் கம்பெனி தமக்கு நேரில் விசாரிக்க அனுமதி வழங்க வேண்டுமென்பதற்கான அனேக கருத்துக்களைத் தயார் செய்து கொண்டார். ஆசிரியர், தம் புத்தகத்தைப் பற்றியும், அதனால் இந்தக் கம்பெனிக்கு என்ன பலன் இருக்கும் என்றும் விளக்க எண்ணினார். அவர் வைத்திருந்த விளக்கங்களுள்,

(1) சியர்ஸ் கம்பெனி சுடர்விட்டு பிரகாசிக்கும் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது என்று புத்தகத்தில் அறிமுகப்படுத்தி எழுதப்படும், (2) அவருடைய ஆராய்ச்சி அந்த நிறுவனத்தின் ஆற்றலை தெரியப்படுத்தும் வகையில் அமையும், (3) நிர்வாகம் அதனுடைய வேலையின் திறனை எப்படி அதிகப்படுத்துவது என்று தெரிந்து கொள்ளும் வகையில் அவர் புத்தகம் உதவும் என்பது, (4) கம்பெனியின் நிர்வாக இயக்குனர்கள் கம்பெனியின் வளர்ச்சிக்கு புதிய கருத்துக்கள் தெரிந்து கொள்வதற்கும், மற்றும் இதர ஆறு கருத்துக்களைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பாகும் என்பது. ஆசிரியர் ஒவ்வொரு கருத்துக்கும் தகுந்த காரணங்களுடன் திட்டவட்டமான விளக்கங்களுடன் விவாதிப்பதற்கு, தம்முள் பொதிந்து கிடக்கும் கருத்துக்களை மனதில் பதிய வைத்துக் கொண்டார்.

ஆசிரியர், கம்பெனியின் மக்கள் தொடர்பு அதிகாரியை (PRO) நேரில் போய் பார்த்த பொழுது, அவர் அமைதியுடன் காணப்பட்டார். ஆசிரியருக்கும் அக்கம்பெனியின் 30,000 கோடி டாலர் வியாபாரத்தை நினைத்து பார்த்த பொழுது உற்சாகம் குறைந்தது. தன்னைப் போன்று எண்ணற்ற நபர்களை (PRO) சந்தித்திருப்பார் என்றெண்ணினார். அந்த அதிகாரி இவருடைய கருத்தைக் கேட்க மறுத்தாலும் அதிலும் நியாயம் இருப்பதாக ஆசிரியர் கருதினார். மக்கள் தொடர்பு அதிகாரியின் (PRO) சலனமற்ற முகத்தோற்றத்திலிருந்து எந்த அனுகூலமான நம்பிக்கையும் தோன்றவில்லை. ஆசிரியர் முற்றிலும் நம்பிக்கையிழந்த நிலையில் இருந்தார்.

மௌனத்தின் சக்தி பெரியது என்ற கருத்து நினைவுக்கு வந்ததும், மனம் மௌனத்தில் ஆழ்ந்தது. நம் மனதில் எழும் எண்ணம் நம்முடையது அல்ல. எண்ணங்கள் உலகில் உலவுகின்றன. அவை ஒருவர் மனதில் புகுந்து வெளிப்படுகின்றன என்ற உண்மையினை ஆசிரியர் தெரிந்து கொண்டிருந்தார். ஒருவர் தம் மனதில் தோன்றிய எண்ணத்தை வெளியிட மறுத்தால் அந்த எண்ணம் மற்றொருவர் மூலம் வெளிப்படுகிறது. ஆசிரியருக்கு எந்தவிதமான சிரமமும் இன்றி மௌனம் குடி கொண்டது. அங்கிருந்த சூழ்நிலை அவருக்கு சாதகமாக இல்லாமல் இருந்ததால் அவர் ஏற்கனவே மௌனமாகிவிட்டிருந்தார். மக்கள் தொடர்பு அதிகாரியின் (PRO) முன்னிலையில் அவர் இருந்த இரண்டு நிமிடங்களும் பொறுத்துக் கொள்ள முடியாததாக இருந்தது. இருந்த போதிலும் அவருடைய அரை நூற்றாண்டு குறிக்கோள் நிறைவு பெறும் தருவாயில் இருந்ததால், அவர் எப்படி கோழைத்தனமாக தன் இலட்சியத்திருந்து பின்வாங்க முடியும்? எப்படி இருந்த போதிலும் அவர் மனத்திலிருந்த அனைத்துமே மௌனத்தில் நிலை பெற்றுவிட்டது.

ஆசிரியர் தன்னுடைய மனத்திலிருந்த அரிய கருத்துக்களை விளக்கிச் சொல்வதற்கு, அந்த அதிகாரியை சம்மதிக்க வைக்க தைரியமிழந்தவராக இருந்தார். அதற்கு பதிலாக ஆன்மீகத் தத்துவமான மௌனத்தின் சக்தியை தொடர்ந்து நாடுவதற்கு அவர் மனம் உறுதி பூண்டது. கடைசி நிலைமைக்கு தள்ளப்பட்ட மனிதர்களுக்குக் கூட அவர்கள் மனதில் உள்ளதை நிறைவேற்றித் தருவது மௌன சக்தி. இங்கே இந்தத் தத்துவம் என்னவென்றால் மனம் மௌனமாகிவிட்டாலோ அல்லது மனத்தை மௌனத்திற்குள் செலுத்தினாலோ ஆன்மா விழித்துக் கொள்கிறது. கேட்காமல் இருப்பது ஓர் உயர்ந்த மனத்திண்மையைக் காட்டுவதால் அப்படிப்பட்டவருக்கு வாழ்வு வேண்டியதை அபரிமிதமாக வழங்குகிறது. ஒரு மனிதன் உணர்வுபூர்வமாக தன்மனத்தில் தோன்றிய எண்ணத்தை வெளியிட மறுத்தால், அந்த எண்ணம் வேறொருவர் மூலம் அவருடைய நலனுக்காக அவருக்கு சந்தோஷம் தரும் வகையில் வெளிப்படுகிறது. ஆசிரியர் மௌன சக்தியைப் பற்றிய பல உதாரணங்களை தெரிந்து வைத்துக் கொண்டிருந்தார். மௌன சக்தியை பழக்கத்தில் கொண்டு வருபவருக்கு, அது நன்மைகள் தருகிறது என்பதை ஆசிரியர் தன் சொந்த அனுபவத்தில் கடைப்பிடித்து வெற்றிகண்டார்.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:40 am

24. மௌன சக்தி

பாகம் - II

அமெரிக்கன் மேனேஜ்மெண்ட் நிர்வாக இயக்குனர், சியர்ஸ் மக்கள் தொடர்பு அதிகாரி (PRO) முன்பாக உட்கார்ந்திருந்த பொழுது மௌன சக்தியின் வலிமையை அறிந்து கொள்வதில் முன் அனுபவங்கள் பெற்றிருந்தார். ஒருமுறை தன்னுடைய செயல் முறைகளை விளக்கும் நிகழ்ச்சிக்கு, ஒரு சிறந்த பேச்சாளரை அமர்த்திக் கொள்ள விரும்பினார். அந்த பேச்சாளர் தன்னுடைய ஸ்தாபனத்தில் புகழ் பெற்றவராக இருந்த பொழுதும், உள்ளூருக்குரிய சில காரணங்களால் மதிப்பு இழந்தவராக இருந்தார். எனவே, கடும் எதிர்ப்புக்கு ஆளாகி இருந்த அவரை பேச அழைக்க இயலாது என்பதை உணர்ந்தார். அவரது பெயரை மற்றொருவரால் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் முன்மொழியப்பட்டு அது ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது அவர் நினைவில் தெளிவாகத் தோன்றிற்று. எனினும் சியர்ஸ் ஒரு சாதாரண சந்தர்ப்பமாக இல்லை. அங்கு மௌன சக்தியை கொண்டு வருவதற்கு அவசியம் இல்லாமல் இருந்தது. அவர் மனத்திற்குள் எல்லாம் மௌனமாக இருந்தது.

அவர், மக்கள் தொடர்பு அதிகாரி (PRO) பேசுவதற்கு பெருமுயற்சி எடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார். அவருடைய கவனமெல்லாம், அதிகாரி என்ன பேசப்போகிறார் என்பதில் இருந்தது. அதிகாரி (PRO) பேசும் பொழுது "கண்டிப்பாக இந்த நேர்முக விசாரணைகளுக்குப் பிறகு (interviews) ‘சியர்ஸ் பிரகாசமான முன்னோடி’ என்று எழுதப்படும்” என்று பேசியதை கேட்டதும், வைஸ் பிரசிடெண்ட்டு ஆச்சரியத்தால் ஒரு வினாடி அப்படியே ஸ்தம்பித்து சிலையாகி விட்டார். அவர் பேசிய வார்த்தைகள் யாவும், அவரால் பல மணி நேரங்களில் ஆராய்ச்சி செய்யப்பட்டவைகளாகும். பிறகு அவர், மௌனத்திலிருந்து வெளிப்பட்ட, மௌன சக்தி செயல்பட்டது என்று எண்ணினார். இப்பொழுது அவர் மனதில் ஏதோ ஒரு உணர்வு தூண்டிற்று. சியர்ஸ் பற்றி எப்படி விமரிசையாக எழுதப்படும் என்பதை விளக்குவதைக் காட்டிலும் மற்றொரு கருத்தைத் தெளிவாக எடுத்துக் கூற விருப்பங்கொண்டார். அப்பொழுது அங்கு மௌனம் இல்லை. எல்லாமே உற்சாகமுடையதாக இருந்தது. இப்பொழுது மௌன சக்தியை நினைவில் நிறுத்துவதே கடினமாக இருந்தது. அப்பொழுது அதிகாரி (PRO) "உங்களுடைய ஆராய்ச்சி எங்களது வலிமையைப் பற்றி தெளிவுப்படுத்துகிறது" என்று பேசியதை ஆசிரியர் கேட்டார். இது நம்ப முடியாததாக இருந்தாலும் கேட்பதற்கு இனிமையாக இருந்தது. உள்ளே அவரது கருத்து முந்திக் கொள்ளும் போராட்டமும் மேலிட்டது. தம் கருத்துகளைப் புறக்கணித்ததும் மௌன சக்தியின் வலிமை கூடிற்று. அந்த அதிகாரி (PRO) ஆசிரியரின் எல்லாக் கருத்துக்களையும் உண்மையுடன் ஏற்று தொகுத்துக் கூறியதுடன், அவர் கோரியபடி நேர்முக விசாரணை (interview) தொடங்க அத்தனை பேர்களிடமும் விபரங்கள் கேட்டறிந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி முடித்தார். வைஸ் பிரசிடெண்ட்டு அவருடைய புத்தகத்தை "தி வைட்டல் டிஃபரன்ஸ்'' (THE VITAL DIFFERENCE) என்ற புத்தகத்தை வெளியிட்டார். அது அவருக்குக் கிடைத்த வெற்றி. அந்த புத்தகம் பிரெஞ்ச், ஜபானீஸ், டேனிஷ், ஸ்பேனிஷ், மற்றும் ஜெர்மன், மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:40 am

25. மௌன சக்தி

பாகம் – III

மௌன சக்தி, பற்பல வழிகளில் அனைத்து நேரத்திலும் செயல்படுகிறது.

நாம் அதைத் தெரிந்தே பழக்கத்தில் கொண்டு வரும் பொழுது.
நம் எண்ணங்களை வெளியிடுவதை சூழ்நிலைகள் தடுக்கும் பொழுது.
மற்றவர் பேசும் பொழுது அவர் பேசி முடிக்கும் வரை பொறுமையுடன் காத்திருக்கும் பொழுது, நாம் தெரிவிக்க விரும்பிய கருத்துக்களை, மௌன சக்தி அவர் வாயால் வெளிப்படுத்துவதைக் காண்கிறோம்.

மரியாதை நிமித்தமாகவோ அல்லது நாகரீகமாகவோ, நாம் பெரும்பாலும் பேசுவதிலிருந்து விலகி நிற்கும் பொழுது, பின்னர் மௌன சக்தியின் வெளிப்பாட்டைக் காண்கிறோம்.

நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதைக் கௌரவம் பார்ப்பதால் கேட்டுப் பெறக்கூடாது என்று தீர்மானிக்கின்றோம். அங்கு நாம் பேச வேண்டுமென்று நினைப்பதை மற்றவர் அவராகவே முன் வந்து பேச முற்படுகிறார்.

குறைந்தபட்சமாக ஒரு சிறு தொழிலதிபர் இந்த முறையை திறமையுடன் பின்பற்றியதன் விளைவாக, தன்னுடைய கம்பெனியை இந்தியாவில் பல மாநிலங்களிலும், தன் வாழ்நாளிலேயே விரிவுபடுத்தி வெற்றி கண்டார்.

ஒரு சமஸ்கிருத கவிஞர் ஸ்ரீ ரமண மகரிஷியின் சீடர். அவர் உமா சஹஸ்ரம் பற்றி ஆயிரம் கவிதைகள் எழுத விருப்பம் கொண்டார். குருவின் ஆசிர்வாதத்துடன் அவர்முன் உட்கார்ந்து எழுதினார். எழுதி முடிந்ததும் இவ்வளவு நேரமும் மௌனமாக உட்கார்ந்த மகரிஷி, சீடரிடம் "நான் சொன்னவற்றையெல்லாம் எழுதிவிட்டாயா?" என்று கேட்டார். குருவின் மௌன சக்தி சீடரின் எண்ணத்தில் கவிதையை உருவாக்கியது.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:41 am

26. முடியாதது முடியும்

பாகம் - I

முடியாதது என்பது மனிதர்களுக்கு முடியாதவையாகவே இருக்கிறது. இதில் விதிவிலக்கானவர்களுக்கு முடியாதது முடியும். யார் ஒருவர் ஆன்மாவை உண்மையாக நாடிச் செல்கிறாரோ, அவர் அபூர்வமாக விதிவிலக்கானவராக கருதப்படுகிறார். ஒரு ஏழ்மை கடைநிலை ஊழியர் ஓய்வு பெற்றபின், ஒரு வருடம் கழித்து உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிராண வாயு மூலம் அவர் உயிரை நீட்டித்து வைத்திருந்தார்கள். அவருக்கு இது மூன்றாவது முறையாக வந்த இருதய நோயானதால், அவர் பிழைத்துவிடுவார் என்று கருதுவதற்கு முடியவில்லை. அவருக்கும் தான் பிழைக்கமாட்டோம் என்ற எண்ணம்தான் இருந்தது. ஒருவருக்கு சந்தர்ப்ப சூழ்நிலை கை கொடுக்காத நிலையில், முடியாது என்ற நிலை இருந்தாலும், மற்றொருவருக்கு ஒருவரின் உதவியால் சாதகமான சூழ்நிலையில் முடியாததும் முடியும் என்பது சாத்தியமாகிறது.

கிராமத்து ஏர் கலப்பையினால் நிலத்தை 6" அங்குலம் ஆழத்திற்கு மேல் உழ முடியாது. ஆனால் டிராக்டரால் முடியும். ஒரு சக்தி மிகுந்த டிராக்டரினால் மூன்று அடி ஆழத்துக்கு மேல் உழ முடியும். கருவி மாறும் பொழுது, பலனும் மாறுகிறது. கை கால்களாலும் உடலாலும் உழைக்கும் மனிதனுக்கு சட்டத்தைப் பற்றியோ அல்லது மருந்து பற்றியோ புரிந்து கொள்ள இயலாது. ஆனால் கல்வி அறிவு பெற்ற மனிதன் புரிந்து கொள்வான். அறிவு உடலுழைப்பை விட உயர்ந்தது. உடலால் உழைப்பவனால் முடியாதது, அறிவால் உழைப்பவனுக்கு முடியும். மற்ற எல்லாவற்றையும் விட மேலான அதிக சக்தி வாய்ந்த ஆன்மாவினால், மனத்தால் ஆன மனிதனால் முடியாதது முடியும்.

நம்முள் ஒவ்வொருவரிடமும் ஆன்மா உள்ளது. நமது மரபு நமக்கு கடவுள் வழிபாட்டைத்தவிர, அன்றாட வாழ்வில் ஆன்மாமீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கற்பிக்கவில்லை. கடவுள் வழிபாடு அபூர்வமாக சில ஆபத்தான கட்டத்தில் ஆன்மாவைத் தொடும். உள்ளே இருக்கும் ஆன்மாவை நம்புவதானது, அதுவே ஆன்மாவை அழைப்பதற்கு முதற்படி. மனம் ஆன்மாவின் பக்கம் திரும்பும் பொழுது, ஒருவர் அபரிமிதமான சக்தியையும், அகவெழுச்சியின் உற்சாகத்தையும் உணர முடியும். அன்றாட நடவடிக்கைகளில் ஆன்மாவின் அசாதாரணமான சக்தியை காண்பது நமக்கு சாத்தியமாகும்.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:41 am

27. முடியாதது முடியும்

பாகம் - II

45 வயதிலும் என்றுமே வேலை கிடைக்காதவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். அல்லது ஒரு பெண்ணுக்கு 38 வயது ஆகியும் திருமணம் ஆகாமல் நின்றுபோய் விட்டிருக்கலாம். 60 மாணவர்கள் பயிலும் ஒரு வகுப்பில் எப்பொழுதும் 40வது ரேங்க் மாணவராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் போல் மாணவர்கள் இன்றும் இருக்கிறார்கள். நல்ல உத்தியோகம், தம் அந்தஸ்துக்கு ஏற்ற சம்மந்தம் அல்லது முதல் ரேங்க் கிடைப்பது போன்றவை நடக்காத ஒன்றாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் முடியாதது முடியும் என்று தீர்மானித்து அந்த எண்ணத்தை ஆழ்மனத்தில் கொண்டு வந்து ஆன்மாவை அழைக்க முயற்சி செய்யலாம். அது வெற்றி பெறுமா பெறாதா என்ற கேள்விக்கு இடமில்லை. ஆனால் அத்தகைய ஆராய்ச்சியை இரண்டாவது முறையாக சோதித்துப் பார்க்கக்கூடாது. கிருஷ்ண பரமாத்மா, தான் உண்மையில் கடவுள் அவதாரமா என்று சோதிக்க விரும்பி ஒரு மலையை அசைத்து நகர்த்தினார். முதல் சோதனையில் வெற்றி கண்டபோது ஒருவர் அந்தத் திறனை வேறு எந்தவிதமான சோதனை செய்யாமல் நிரந்தர சக்தியாகப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

முன் அத்தியாயத்தில் கூறப்பட்ட கடைநிலை ஊழியர் உயிர் பிழைத்தெழுந்தார். அவருடைய வீடு கட்டிக் கொள்ள வேண்டுமென்ற நீண்டகால ஆசையைப் பூர்த்தி செய்து கொண்டார். அதன்பிறகு 25 வருடங்கள் உயிரோடு இருந்தார். ஆன்மாவில் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு இதுபோன்ற உதாரணம் தேவை இல்லை. ஆன்மாவை அழைப்பதற்கு எந்த ஒரு உதாரணமும் ஆன்மாவை அழைக்கத் தூண்டும் வகையில் இருக்க வேண்டும். ஆன்மாவை செயல்படுத்த அதை எப்படி அழைப்பது?


ஆன்மாவில் பூரண நம்பிக்கை வைப்பதுதான் முக்கியமான முதல் தகுதி.
நாம் நம் மனம் போன வழியில் வழக்கமாக செயல்பட்டு வரும் பழக்கங்கள் மீது நம்பிக்கை வைக்கக்கூடாது.
ஆன்மாவின் மேல் நாம் தற்போது இடையறாத நினைவை தீவிரப்படுத்த வேண்டும்.
பலனைப்பற்றி நினைக்காமலும் எதிர்பார்ப்புகளை அதிகமாக வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதாலும் ஆன்மாவை அழைக்கும் தகுதியைப் பெறலாம்.


பழமையும், புதுமையும் கலந்து போயிருக்கும் இக்காலத்தில் இரண்டிலும் எதை எந்த அளவில் ஏற்றுக் கொண்டால் நமக்கு நல்லது என்பதில், இப்படியும் அப்படியுமாக பலபேர் பலமுடிவு எடுக்கிறார்கள். இதில் பழமையை விலக்கிவிட்டு புதுமையை ஏற்றுக் கொள்ள வேண்டும். புதுமையை ஏற்றுக் கொண்டு புதிய முறையை தீவிரமாக கடைப்பிடிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஆன்மாவை அழைப்பது என்ற புதுமையான முறையை ஏற்றுக் கொள்ளும் பொழுது, இதுவரையில் நம்மிடம் இருந்து வந்த எரிச்சலும் கவலையும் நீங்கி உள்ளே ஆன்மாவில் அமைதி ஏற்பட்டு உற்சாகமும் மகிழ்ச்சியும் பொங்கும். அது ஆன்மீக மலர்ச்சியாகவும், ஆன்மீக சந்தோஷமாகவும் மலரும். அது, நம்முடைய அழைப்பின் குரலை ஆன்மா ஏற்றுக் கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்துவதற்கான அறிகுறி. அது உன் வாழ்வின் தன்மையை மாற்றும். மனதில் அமைதி ஏற்படும்பொழுது இதுகாறும் வெளிப்புறச் சூழலில் ஊறிப்போய் உள்ள உயர்வு மனப்பான்மை, மற்றும் தாழ்ந்த பண்புகள் போன்ற சுபாவங்கள் மாறி, மனதிற்கு இதமானதும் இனிமையானதுமான நல்லனவைகளை மட்டும் நாடும் சுபாவமாக மாறும். புறநிகழ்ச்சிகள் உள்ளுணர்வை பிரதிபலிப்பதால் அகவுணர்ச்சியின் மாற்றமே புறநிகழ்ச்சிகளின் மாற்றம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் அதை புரிந்து கொண்டு பாராட்ட வேண்டுமேயன்றி அதையே முடிவு என்று ஏற்றுக் கொள்ளலாகாது. ஏனென்றால் அப்படி ஏற்கும் பொழுது அந்நிலையிலேயே அவர் தங்கி விடுவார். அப்படிப்பட்ட மாறுபட்ட நடத்தையை வசதிபடைத்த அண்டை மனிதரிடமும் அல்லது அகந்தையான மேலதிகாரியிடமும் காணலாம்.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:42 am

28. முடியாதது முடியும்

பாகம் - III

கல்வித்துறையில் குமாஸ்தாவாக இருந்த ஒருவருக்கு ஒரு அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டு, மேலதிகாரிகளின் சிறப்பு கவனிப்பைப் பெற்றார். ஒருசமயம் தற்செயலாய் தன்னுடைய சக ஊழிய நண்பர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டு அவரை சந்தித்த பொழுது, அந்த நண்பர் மன அமைதிக்கு ஆன்மாவின் உதவியை நாடுகிறார் என்றும், அவர் வழக்கத்திற்கு மாறாக ஏதோ ஒரு அபூர்வமான செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் என்பதை அறிந்து கொண்டார். அவருடைய நண்பர் ஆன்மாவை அழைப்பதில் உண்மையான ஆர்வத்துடன் செயல்படுகிறார் என்று அறிந்து, தானும் அந்த புனிதமான நம்பிக்கையில் பங்கு கொண்டு அந்த முறையை ஆர்வத்துடன் பின்பற்றலானார். அம்முறையை பின்பற்றியதும் அவர் ஆழ்மனத்தில் ஆன்மா மலர்ந்ததைக் கண்டார். அடுத்த நாள் ஆபிசில், தான் இதுவரையில் கண்டிராத அளவில் எதிர்பாராத அன்பான வரவேற்பினைப் பெற்றார். அவரை அனைவரும், தொடர்ந்து அன்பாக உபசரித்தார்கள். அவருடைய மேலதிகாரி, ஆபிசில் ஏதோ புதுமை நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிந்து, அவரை அழைத்து வரும்படி சொல்லி அனுப்பினார். ஓய்வு பெறும் தருவாயில் இருந்த அந்த அதிகாரி எப்பொழுதும் கவலை தோய்ந்தவராக, அதிகம் பேசாதவராக இருப்பார். ஆனால் அன்று அவர் முகப்பொலிவுடன் தன் சக அதிகாரிகள் நடந்து கொண்டது போன்று, கனிவாகப் பேசி உபசரித்தார். குமாஸ்தாவுக்கோ சொர்க்கமே மேலிருந்து கீழே இறங்கி வந்ததைப் போன்று தோன்றிற்று. ஒரு வாரத்திற்குள் அவரை ஒவ்வொருவரும் தெய்வீக தன்மையுடையவர் என்று அழைக்கலாயினர். அந்த அன்பருக்கு, தம் நிலையை விட ஓர்நிலை அதிக மரியாதை வந்தது. அதே கட்டிடத்தில் இயங்கி வந்த, அந்தத் துறையின் நிர்வாகப் பகுதியின் தலைமை அதிகாரியிடமிருந்து அந்த குமாஸ்தாவை அனுப்பி வைக்குமாறு செய்தி வந்தது. அவருக்கு அங்கேயும் அதே மாதிரியான உயரிய வரவேற்பு காத்திருந்தது. அந்தத் தலைமை அதிகாரி, "உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சற்று வந்து இங்கே எங்களுடன் கொஞ்ச நேரம் இருந்து விட்டுப் போங்கள்", என்று சொன்னார். இதைக் கேட்ட குமாஸ்தாவுக்கு, இந்த வார்த்தைகள் உயர் அதிகாரியின் வாயிலிருந்து வந்தவையா என்று நம்ப முடியவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒருவர் மனநிலையை தடுமாறாமல் வைத்திருப்பது கடினம். வருவது எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அதுவே இறுதியானது என்று எண்ணாமல் இருக்க வேண்டும். முடிவில் ஆன்மா அற்புதமாக வெளிப்பட்டு செயல்படும். 40வது ரேங்க்கில் இருந்த மாணவனால் முதலாமிடத்திற்கும் வர முடியும். அப்படி ஒரு மாணவன் முதலிடத்திற்கு வந்தான்.

உள்ளே நம்மனம் உறுதியில்லாத நிலையில் இருந்தால், நாம் ஆன்மீகத்தில் இன்னமும் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. எப்போது நமக்கு மனத்தின் உள்ளே பலனை அடைய வேண்டுமென்ற உந்துதல் இல்லையோ, அப்போது நாம் குறிக்கோளை அடைந்து விட்டோம் என்றாகும். நாம் எவ்வளவு காலம் நம் மனதை ஆன்மாவில் நிலைப்படுத்தி ஆன்மாவை அழைப்பதிலேயே நம் கவனத்தை செலுத்துகிறோமோ, அப்பொழுது மனத்தில் அலைபாயும் எண்ணங்கள் எழ வாய்ப்பில்லை. ஒருங்கிணைந்த நமது சக்தி முழுவதும் ஆன்மாவிலேயே இருக்கும்.

ஒருவர் ரூ.500/- சம்பளம் வேலை நீடித்து இருக்காது என்ற அவலநிலையில் இருந்த பொழுது, இன்னும் ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளுக்குள் ரூ.1200/- சம்பளம் வேலை கிடைக்கும் என்று தன் உள் உணர்வில் கண்டார். ஒன்றரை ஆண்டுகள் முடிந்த பொழுது அவர் அமெரிக்காவில் மாதம் 4000 டாலர் சம்பளத்தில் வேலையில் இருந்தார்.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:42 am

29. முடியாதது முடியும்

பாகம் - IV

இந்தியா, ரிஷிகள் வாழ்ந்த பூமி. அவர்களுடைய ஜோதி நம் உடலில் உள்ளது என்று ஸ்ரீ அன்னை கூறுகிறார். ரிஷிகள் தங்கள் தவத்தால் பெற்ற ஒளியை, தூய்மையும் உண்மையும், நமது வாழ்வின் மேல்மட்டத்திற்கு தவத்தின் மூலம் கொண்டுவரும். அந்த ஒளி நம்முடைய லௌகீக வாழ்க்கைக்கோ அல்லது உத்தியோக வாழ்க்கைக்கோ நேரடியான பலனைக் கொண்டு வரும் என்பதல்ல. உண்மையை ஏற்றுக் கொண்டவரின் வாழ்வில், அந்த ஒளி நிச்சயமாக சாதகமான பலனைத்தரவல்லது. அந்த ஆன்மா என்பது, நமது தினசரி வாழ்விலோ பிரகிருதி என்ற இயற்கையிலோ எழும் சக்தி என்று இங்கு விவரிக்கப்படுகிறது.


இந்த ஆன்மா வாழ்வை புறக்கணிப்பது அல்ல. மாறாக, வாழ்வில் ஆன்மா செயல்பட விரும்புகிறது.
கோயில் வழிபாடோ, மத சடங்கு அல்லது பூஜையை வீட்டில் நடத்துவதாலோ, அல்லது வேறு எந்த முறையினாலோ, ஆன்மாவை அழைக்கவல்லது அல்ல.
ஆன்மா வெளிப்படும்பொழுது "முடியாதது முடியும்” என்ற சொற்கள் ஒவ்வொருவருடைய உதட்டிலும் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும்.
ஆன்மீகம் இந்தியாவின் பாரம்பரியத்தில் உள்ளது. என்னைப் பொறுத்தவரை இப்பாரம்பரியத்தில்தான் இந்நாட்டு மக்களின் ஐஸ்வர்யம் அடங்கியுள்ளது. இந்நாட்டு மக்களின் உடம்பில் இருளிற்கு பதிலாக ரிஷிகளின் ஒளி தங்கியுள்ளது.


உங்கள் வாழ்க்கையில் கடந்த கால நிகழ்ச்சிகளை ஆராய்ந்து பார்த்தால் ஏதாவது ஒரு இடத்தில் அத்தகைய தகுதியைக் காண்பீர்கள். இப்பொழுது அந்த புது விவேகம் உங்கள் மனதில் வெகுவாக நிலைத்து நிற்பதைக் காண்பீர்கள். நமது வாழ்வின் பலனைப் பார்க்கும் போது, அந்தப் பலன் எப்படி வந்தது என்றோ அல்லது அந்த நிகழ்சினையைப் பற்றியோ மறந்துவிடுகிறோம்.

ஆன்மாவை அழைத்து நாம் வாழ்வில் நிகழ்த்தும் அற்புதங்கள் தானாகவும் நடைபெறுவது உண்டு. அப்படிப்பட்ட சம்பவங்கள் பின்னணியில் நடந்திருக்கும் பொழுது சாதாரணமாக பேச்சுவாக்கில் சில சமயங்களில் சிலர் இப்படி கூறுவதுண்டு. "எப்படியோ ஏதோ ஒன்று நடந்து ஐ.ஏ.எஸ். கிடைத்தது. இல்லாவிடில் எங்கோ ஒரு மூலையில் ஒன்றுமில்லாதவனாக இருந்திருப்பேன்'' என்று சொல்வதை கேட்கிறோம். அதிர்ஷ்டம் ஒருவரை அடைவதும், துரதிர்ஷ்டம் ஒருவரிடமிருந்து விலகுவதும் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளாகும். உன்னுடைய வாழ்விலும் அப்படிப்பட்ட முக்கிய சம்பவம் இடம்பெற்ற இடம் உண்டு. ஆனால் அதை நாம் சந்தோஷமாக மறந்து விடுகிறோம்.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக