புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கங்கை இல்லாத காசி
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
- பாஸ்டன் பாலாஜி
காதல் என்கிற வார்த்தையைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? ரொம்பப் பேர் அந்த வார்த்தையை கேட்கறதே பாவங்கிறது போல முகத்தை வைச்சுப்பாங்க. ஆனா, ரகசியமா செக்ஸ் ஜோக்கை ரசிக்கிறதும், மனசாலே சோரம் போகிறதும்... அது ஒருத்தருக்கும் தெரியாதில்லையா? நான் சொல்லும் காதல் அது இல்லே!
அட, காதலைப் பத்திப் பேசறானே! இள ரத்தம்னு கணக்குப் போட்டா உங்க கணக்கு தப்பு. முதுமையில் இளமைம்பாங்களே? அந்த நாற்பது வயசைக் கடந்தாச்சு. இந்த வயசிலே காதலாங்கறீங்களா? காதலுக்கு வயசு ஏது சார்? பழுத்த பழம்தானே ருசிக்கும்!
சரி, கலியாணமாகாமலே காலத்தைக் கழிச்சவன் போல இருக்கு. போனாப் போகட்டும்னு நினைச்சா, அங்கேயும் தப்பு பண்றீங்க. எனக்கு இருபதிலேயே கலியாணமாகி என் மகளுக்கு இந்த வருஷம் தலை தீபாவளி. அடுத்த பையன் ப்ளஸ்-2 படிக்கிறான். அடுத்தது நாலாம் வகுப்பு.
அட, சண்டாளா... இன்னுமென்னடா காதல்னு திட்டறீங்களா? அவசரப்படாதீங்க... நீங்க நினைக்கிற மாதிரி இல்லே என் காதல்; தெய்வீகக் காதல்! மண்ணாங்கட்டிங்கறீங்களா? பொறுங்க சார்!
எத்தனை ஆழ்வார்கள் இறைவன் மேலே காதலாகி கசிந்துருகி இருக்காங்க? பெம்மான் அவனுக்கே பிச்சியான கதை எத்தனை, எத்தனை?
இங்கிலீஷ்லே லவ்லி சைல்டுன்னா சந்தோஷப்படறீங்க... 'காதலிக்கிற குழந்தை'ன்னா 'அர்த்தம்' பண்ணிக்கிறோம்!
காதல்னதும் ஏன் சார் படுக்கை அறை வரை போறீங்க?
அம்பிகாபதி - அமராவதி மாதிரி உயிரை விட்டாதான் காதலா? நளன் - தமயந்தி மாதிரி கலியாணம் பண்ணிக்கிறதுதான் காதலா?
ரொம்பக் குழப்பறேனா? சரி, முதல்லேயிருந்து சொல்றேன். நான் அவளை எங்கே எப்படி சந்திச்சேன்; எப்படிப் பழகினோம்; எல்லாம் கேட்டுட்டு ஒரு முடிவுக்கு வாங்க!
என் பேரு செல்வம். நான் ஏதோ ஒரு ஆபீஸிலே, ஒரு நடுத்தர வர்க்கத்துக் குடும்பம் நடத்தறதுக்கு தேவையான சம்பளம் வாங்கிண்டு இருக்கேன். அது இந்தக் கதைக்கு அவ்வளவு முக்கியமில்லே! அப்பப்போ பத்திரிகைகளுக்குக் கதை எழுதி அனுப்புவேன். முக்கால்வாசி திரும்பி வந்துடும்; இல்லே அந்தர் தியானமாயிடும். குறிஞ்சி மலர் மாதிரி ஒண்ணு ரெண்டு அச்சுக்கும் போயிடும்! அவ்வளவுதான். காலரை இழுத்து விட்டுண்டு ட்ரிம்மா ஷேவ் பண்ணி, லோஷன், பவுடர் எல்லாம் போட்டுண்டு கையிலே கதை வந்த புஸ்கத்தோட கிளம்பிடுவேன்.
எவனாவது 'என்ன சார், எங்க இப்படீ'ன்னு ஆரம்பிக்க வேண்டியதுதான்! உடனே கதையைக் காட்டி பெருமை அடிச்சுக்க வேண்டியது. அவன் 'எப்படி சார், நீங்க ஆபீஸ் வேலையையும் செய்துண்டு, இந்த மாதிரி உபரி வருமானத்துக்கும் வழி பண்ணிண்டு! அசாத்திய சாமர்த்தியம்; அசுர சாதகம்'ன்னு எல்லாம் ஆச்சரியப்பட வைத்துவிட்டு, அது ஒரு தனிக்கதை. இப்போ ஆரம்பிச்ச கதைக்கே வரேன்.
ஒரு தடவை ஒரு பிரபலப் பத்திரிகையிலே என் கதை வந்துவிட்டது. ஒரு வேளை ஆசிரியர் ஊருக்குப் போய், அந்த இடத்திலே உட்கார்ந்து கொண்டிருந்த 'அரைகுறை' ஏதாவது செலக்ட் பண்ணி இருக்க வேண்டும்.
அதை எடுத்துக் கொண்டு வழக்கம் போல் என் சினேகிதன் பஸ்கரை சந்திக்கப் போயிருந்தேன். அவன் யுஷுவல் டைப். ஏதோ எனக்கு கற்பனை காட்டாற்று வெள்ளமாகப் பெருகி ஓடுகிறதா, என்னை மதிச்சிருந்த ஒரே ஆள். வாங்குகிற இடத்திலேதானே விற்க முடியும். எனக்குத்தான் கால் தரையிலேயேப் படலியே! கதையை அச்சிலே பார்த்ததும் வானத்திலே பறக்கிறதாய் நினைத்துக் கொண்டு; நல்ல வேளையாய் ஆக்ஸிடெண்ட் ஆகாமல், நண்பன் வீடு வந்து சேர்ந்தேன்.
பாரதியார் வீடு மாதிரி அவனுது. அதாவது ஏகப்பட்ட குடித்தனம். அந்த சமயம் பக்கத்துப் போர்ஷனில் யாரோ ஒரு பெண் வயசுக்கு வந்ததை அலங்காரம் செய்து உட்காரவைத்து பாடி விளம்பரம் செய்தார்கள்.
எது எப்படியோ! இனிமையான சங்கீதம். சொல்ல மறந்து விட்டேனே... நான் கொஞ்சம் கீதப்பிரியன். வந்த வேலை மறந்து விட்டது. என் கை தாளம் போடவில்லை. தலை அசையவில்லை. மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகமாக அந்த காரை பெயர்ந்த செங்கல் சுவற்றில் சாய்ந்தது சாய்ந்தபடி இருந்தேன்.
"முந்திப் பிறவிகளில் உன்னை நான் முறையினில் மணந்தேன்... எந்தன் உயிரல்லவோ - கண்மனி!" நிஜமாகவே இந்த வரிகளுக்கு இத்தனை அர்த்தமா? இதென்ன குழைவு? இப்படிக்கூட பாட்டால் உருக முடியுமா? யார் யாரோ இதைப்பாடி நான் கேட்டிருக்கிறேன். ஏன், நானே பாடி இருக்கிறேன். இப்படி ஒரு பாவத்தை உணர்ந்ததில்லை.
முந்தையப்ப் பிறவிகளில் மணந்த காதலி எதிரே வந்து நின்றிருந்தால் வேலவன் கூட இப்படிக் கொஞ்சி இருக்கமாட்டார்!
ஷ்ரேயா கோசலின் குரல் இனிமை; ஸ்னேஹாவின் குரல் வசீகரம்; ஹரிணியின் கம்பீரம்; எம்.எஸ்ஸின் மதுரம்; எல்லாம் கலந்து இது என்ன குரல்? அட, குரல் கிடக்கட்டும்! இதென்ன உணர்ச்சி மயக்கமான சொற் பிராவகம்...
கனவு கண்டு விழிக்கும் வரை நானும் சொப்பன உலகிலேயே இருந்தேன்.
"பாட்டு நல்லா இருந்தது இல்லே?" நண்பனின் குரல் என்னை உசுப்பியது.
"மடையன்... நல்லா இருந்தோமே! நளன் சமையல், ஊட்டியில் பட்டு மெத்தையில் அழகியோடு வாசம், குற்றால அருவியில் பணக்கார மமதையோடு நிற்கிறது; இப்படி எதையுமே ஈடு சொல்ல முடியாத இதைப் போய்... சரி, சரி. நீ ஒரு சராசரி! பாடினவங்களை நான் பார்க்க முடியுமா? ஒரு வார்த்தையாவது பாராட்டத்தான்", அவள் போய் விடப் போகிறாளே என்ற அவசரம்.
- பாஸ்டன் பாலாஜி
காதல் என்கிற வார்த்தையைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? ரொம்பப் பேர் அந்த வார்த்தையை கேட்கறதே பாவங்கிறது போல முகத்தை வைச்சுப்பாங்க. ஆனா, ரகசியமா செக்ஸ் ஜோக்கை ரசிக்கிறதும், மனசாலே சோரம் போகிறதும்... அது ஒருத்தருக்கும் தெரியாதில்லையா? நான் சொல்லும் காதல் அது இல்லே!
அட, காதலைப் பத்திப் பேசறானே! இள ரத்தம்னு கணக்குப் போட்டா உங்க கணக்கு தப்பு. முதுமையில் இளமைம்பாங்களே? அந்த நாற்பது வயசைக் கடந்தாச்சு. இந்த வயசிலே காதலாங்கறீங்களா? காதலுக்கு வயசு ஏது சார்? பழுத்த பழம்தானே ருசிக்கும்!
சரி, கலியாணமாகாமலே காலத்தைக் கழிச்சவன் போல இருக்கு. போனாப் போகட்டும்னு நினைச்சா, அங்கேயும் தப்பு பண்றீங்க. எனக்கு இருபதிலேயே கலியாணமாகி என் மகளுக்கு இந்த வருஷம் தலை தீபாவளி. அடுத்த பையன் ப்ளஸ்-2 படிக்கிறான். அடுத்தது நாலாம் வகுப்பு.
அட, சண்டாளா... இன்னுமென்னடா காதல்னு திட்டறீங்களா? அவசரப்படாதீங்க... நீங்க நினைக்கிற மாதிரி இல்லே என் காதல்; தெய்வீகக் காதல்! மண்ணாங்கட்டிங்கறீங்களா? பொறுங்க சார்!
எத்தனை ஆழ்வார்கள் இறைவன் மேலே காதலாகி கசிந்துருகி இருக்காங்க? பெம்மான் அவனுக்கே பிச்சியான கதை எத்தனை, எத்தனை?
இங்கிலீஷ்லே லவ்லி சைல்டுன்னா சந்தோஷப்படறீங்க... 'காதலிக்கிற குழந்தை'ன்னா 'அர்த்தம்' பண்ணிக்கிறோம்!
காதல்னதும் ஏன் சார் படுக்கை அறை வரை போறீங்க?
அம்பிகாபதி - அமராவதி மாதிரி உயிரை விட்டாதான் காதலா? நளன் - தமயந்தி மாதிரி கலியாணம் பண்ணிக்கிறதுதான் காதலா?
ரொம்பக் குழப்பறேனா? சரி, முதல்லேயிருந்து சொல்றேன். நான் அவளை எங்கே எப்படி சந்திச்சேன்; எப்படிப் பழகினோம்; எல்லாம் கேட்டுட்டு ஒரு முடிவுக்கு வாங்க!
என் பேரு செல்வம். நான் ஏதோ ஒரு ஆபீஸிலே, ஒரு நடுத்தர வர்க்கத்துக் குடும்பம் நடத்தறதுக்கு தேவையான சம்பளம் வாங்கிண்டு இருக்கேன். அது இந்தக் கதைக்கு அவ்வளவு முக்கியமில்லே! அப்பப்போ பத்திரிகைகளுக்குக் கதை எழுதி அனுப்புவேன். முக்கால்வாசி திரும்பி வந்துடும்; இல்லே அந்தர் தியானமாயிடும். குறிஞ்சி மலர் மாதிரி ஒண்ணு ரெண்டு அச்சுக்கும் போயிடும்! அவ்வளவுதான். காலரை இழுத்து விட்டுண்டு ட்ரிம்மா ஷேவ் பண்ணி, லோஷன், பவுடர் எல்லாம் போட்டுண்டு கையிலே கதை வந்த புஸ்கத்தோட கிளம்பிடுவேன்.
எவனாவது 'என்ன சார், எங்க இப்படீ'ன்னு ஆரம்பிக்க வேண்டியதுதான்! உடனே கதையைக் காட்டி பெருமை அடிச்சுக்க வேண்டியது. அவன் 'எப்படி சார், நீங்க ஆபீஸ் வேலையையும் செய்துண்டு, இந்த மாதிரி உபரி வருமானத்துக்கும் வழி பண்ணிண்டு! அசாத்திய சாமர்த்தியம்; அசுர சாதகம்'ன்னு எல்லாம் ஆச்சரியப்பட வைத்துவிட்டு, அது ஒரு தனிக்கதை. இப்போ ஆரம்பிச்ச கதைக்கே வரேன்.
ஒரு தடவை ஒரு பிரபலப் பத்திரிகையிலே என் கதை வந்துவிட்டது. ஒரு வேளை ஆசிரியர் ஊருக்குப் போய், அந்த இடத்திலே உட்கார்ந்து கொண்டிருந்த 'அரைகுறை' ஏதாவது செலக்ட் பண்ணி இருக்க வேண்டும்.
அதை எடுத்துக் கொண்டு வழக்கம் போல் என் சினேகிதன் பஸ்கரை சந்திக்கப் போயிருந்தேன். அவன் யுஷுவல் டைப். ஏதோ எனக்கு கற்பனை காட்டாற்று வெள்ளமாகப் பெருகி ஓடுகிறதா, என்னை மதிச்சிருந்த ஒரே ஆள். வாங்குகிற இடத்திலேதானே விற்க முடியும். எனக்குத்தான் கால் தரையிலேயேப் படலியே! கதையை அச்சிலே பார்த்ததும் வானத்திலே பறக்கிறதாய் நினைத்துக் கொண்டு; நல்ல வேளையாய் ஆக்ஸிடெண்ட் ஆகாமல், நண்பன் வீடு வந்து சேர்ந்தேன்.
பாரதியார் வீடு மாதிரி அவனுது. அதாவது ஏகப்பட்ட குடித்தனம். அந்த சமயம் பக்கத்துப் போர்ஷனில் யாரோ ஒரு பெண் வயசுக்கு வந்ததை அலங்காரம் செய்து உட்காரவைத்து பாடி விளம்பரம் செய்தார்கள்.
எது எப்படியோ! இனிமையான சங்கீதம். சொல்ல மறந்து விட்டேனே... நான் கொஞ்சம் கீதப்பிரியன். வந்த வேலை மறந்து விட்டது. என் கை தாளம் போடவில்லை. தலை அசையவில்லை. மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகமாக அந்த காரை பெயர்ந்த செங்கல் சுவற்றில் சாய்ந்தது சாய்ந்தபடி இருந்தேன்.
"முந்திப் பிறவிகளில் உன்னை நான் முறையினில் மணந்தேன்... எந்தன் உயிரல்லவோ - கண்மனி!" நிஜமாகவே இந்த வரிகளுக்கு இத்தனை அர்த்தமா? இதென்ன குழைவு? இப்படிக்கூட பாட்டால் உருக முடியுமா? யார் யாரோ இதைப்பாடி நான் கேட்டிருக்கிறேன். ஏன், நானே பாடி இருக்கிறேன். இப்படி ஒரு பாவத்தை உணர்ந்ததில்லை.
முந்தையப்ப் பிறவிகளில் மணந்த காதலி எதிரே வந்து நின்றிருந்தால் வேலவன் கூட இப்படிக் கொஞ்சி இருக்கமாட்டார்!
ஷ்ரேயா கோசலின் குரல் இனிமை; ஸ்னேஹாவின் குரல் வசீகரம்; ஹரிணியின் கம்பீரம்; எம்.எஸ்ஸின் மதுரம்; எல்லாம் கலந்து இது என்ன குரல்? அட, குரல் கிடக்கட்டும்! இதென்ன உணர்ச்சி மயக்கமான சொற் பிராவகம்...
கனவு கண்டு விழிக்கும் வரை நானும் சொப்பன உலகிலேயே இருந்தேன்.
"பாட்டு நல்லா இருந்தது இல்லே?" நண்பனின் குரல் என்னை உசுப்பியது.
"மடையன்... நல்லா இருந்தோமே! நளன் சமையல், ஊட்டியில் பட்டு மெத்தையில் அழகியோடு வாசம், குற்றால அருவியில் பணக்கார மமதையோடு நிற்கிறது; இப்படி எதையுமே ஈடு சொல்ல முடியாத இதைப் போய்... சரி, சரி. நீ ஒரு சராசரி! பாடினவங்களை நான் பார்க்க முடியுமா? ஒரு வார்த்தையாவது பாராட்டத்தான்", அவள் போய் விடப் போகிறாளே என்ற அவசரம்.
நிமிர்ந்து பார்த்தேன். கனமான மஞ்சள் கயிறு என் கடமையை, அவள் உரிமையை நினைவுபடுத்தியது.
"கோபம் வரும்னு தெரிஞ்சுதானே கேட்கப் போறே? ஏன் முழுங்கறே? கேட்டுடு"
"யாரோ ஒருத்தி புத்து நோய் வந்து ஆஸ்பத்திரியிலே கிடக்கறாளாம்... ராவாப் பகலா நீங்க அங்கேயே இருக்கறதா..."
"யார் சொன்னது?" என்னை அறியாமல் குரல் உயர்ந்தது.
"அவ யாரு?"
"உங்க அத்தை பையன், மாமா பிள்ளை, பெரியப்பா மச்சினன்னு எத்தனை பேரு வராங்க? எத்தனை வீடுகளுக்கு நீ போறே? நான் என்னிக்காவது இப்பிடி உன்னைக் கேள்வி கேட்டிருக்கேனா? நிஜந்தானான்னு ஆராய்ஞ்சிருக்கேனா? முதல்லே புருஷனை நம்பு. அவ என் சினேகிதி. பால்ய சினேகிதி. அவ்வளவுதான்... இதுக்கு மேலே தூண்டித் துளைச்சே பேசாம காவியைக் கட்டிகிட்டு இமாசலம் போயிடுவேன். சே, என்ன பொம்பளைங்கப்பா..."
நான் செருப்பை மாட்டிக் கொண்டிருந்தேன். அவள் விசும்பிக் கொண்டிருந்தாள். அவள் என் காதலி என்று சொல்வதில் எனக்கு பயமில்லை. ஆனால், என் ப்ருந்தாவின் பெயர் கெட்டு விடக் கூடாதே!
"மோகத்தைக் கொன்று விடு...
அல்லாலென்றன் மூச்சை நிறுத்தி விடு"
மேடையில் ப்ருந்தா பாடிக் கொண்டிருந்தாள். பாடுகிறாளா? அல்லது தன் எண்ணத்தை வெளியிடுகிறாளா என்று நினைத்தேன். அல்லது எனக்குத்தான் அப்படித் தோன்றுகிறதா? கண்கள் மயங்க ரசித்துக் கொண்டிருந்தேன்.
"ஹாய், நீ செல்வம்தானே..." திடுக்கிட்டுப் பார்த்தால் வைதேகி! அப்புறம் பாட்டில் எப்படி கவனம் செலுத்துகிறது?
"அட வைதேகி... என்ன பெரிய மாமி மாதிரி ஆகிவிட்டாய். எங்கே இப்படி?"
பக்கத்து சீட் காலியாக இருந்தது. அங்கேயே உட்கார்ந்து விட்டாள். இந்த வைதேகியோடு எல்லாவித தொடர்பும் உண்டு. அதெல்லாம் கல்யாணம் ஆவதற்கு முன்.
"சாவகாசமாய் ஒரு நாள் வீட்டுக்கு வாயேன்! இதுதான் என் அட்ரஸ்... உன்கிட்ட விபரமாய் பேசணும்". விசிட்டிங் கார்டை வாங்கிக் கொண்டேன். நான் எப்போதுமே முன் வரிசையில் உட்கார மாட்டேன். நாலைந்து வரிசை தள்ளிதான் உட்காருவேன். கச்சேரி முடிந்தது. ப்ருந்தா வந்தாள்.
வைதேகியும் நானும் சம வயசு. ஒரு வேளை சின்னவளோ? நீ, வா, போ என்றுதான் பேசிக் கொள்வோம்.
"பிருந்தா, இது என் பால்ய சினேகிதி. வைதேகி... ப்ருந்தா என் ஃபேமிலி பிரெண்ட்" அறிமுகம் செய்து வைத்தேன்.
இரண்டு பேரும் வணக்கம் சொல்லிக் கொண்டார்கள். குசலம் விசாரித்தார்கள்.
"நீங்க வேணா பேசிட்டிருங்களேன். ரொம்ப நாளைக்கப்புறம் பார்க்கிறீங்க... நான் ஆட்டோ பார்த்துண்டு போறேன்." ப்ருந்தா கிளம்பினாள்.
ஊஹும்... நிலைமை சரியில்லை. இந்த மாதிரி ப்ருந்தா பேசினால் 'மூட் அவுட்' என்று அர்த்தம். கொஞ்சம் கிளறினால் குதறி எறிந்து விடுவாள்.
வைதேகி சரியான அட்டை. அந்த நாளில் நான் காய்ந்த மாடு. பெண்ணில்லாத ஊரிலே கிழவியும் ஒரு மோகினி என்று ரசித்த காலம்! இப்போ... சரீர சுகத்தை விட பார்வை சுகம், ஆத்மீக ராகமே பெரிதென்று நினைக்கிற பதம்!
"அவங்கதான் போய்க்கறாங்களே! அவர் கூட ஊரிலே இல்லே... வாங்களேன்." வைதேகியின் விகல்பமில்லாத ஆனால் விவகாரமான அழைப்பு.
"இல்லே வைதேகி... ப்ருந்தாவைத் தனியா விட முடியாது. அவ புருஷனுக்கு பதில் சொல்லி ஆகணும்! பெண்களைக் கடத்திட்டுப் போற காலம். திருட்டு பயம். அதான் அட்ரஸ் கொடுத்திருக்கியே." மெள்ள கழற்றிக் கொண்டேன்.
மேலே விழுந்து பிடுங்கினால் ஆண்களுக்கு ரசிக்காது என்று ஏன் வைதேகி புரிந்து கொள்ளவில்லை? ஒருவேளை நான்தான் அப்படியோ?
வைதேகியைப் பற்றி முன்பே ப்ருந்தாவிடம் சொல்லி இருந்தேன். வழியில் ப்ருந்தா எதுவும் பேசவில்லை. வீட்டுக்குப் போனதும் சம்பிரதாயப் பேச்சுக்களுடன் விடை பெற்றேன்.
அடுத்த முறை சந்திக்கும்போது கேட்டேன்.
"தேவியாருக்கு என்ன பராமுகம்?"
"நீங்கள் கோகுல கண்ணன். கோபியருக்குப் பஞ்சமா?"
இவள் கோபத்தை நினைத்து எனக்கு சிரிப்பு வந்தது. "சக்களத்திப் போராட்டமோ?"
என்னை எரித்து விடுவதைப் போல் பார்த்தாள்.
"ஆமாம்... என் மனைவியைப் பற்றி ஏன் ஒரு நாள் கூட கோபிப்பதில்லை?"
"அவள் உரிமைப்படி வந்தவள். எனக்கும் முன்பே! அதைத் தடுப்பது எனக்கு நியாயம் இல்லை."
"இவளும் எனக்கு முன்னே வந்தவள்தான்".
"அவளும் நானும் ஒன்றா?" அடேயப்பா கோபத்தில் கூட என் ப்ருந்தா எத்தனை சிம்ரனாய் இருந்தாள்!
வாசுகி அம்மையார் நிறைய ஊடல் செய்திருக்க வேண்டும். வள்ளுவர் கொடுத்து வைத்தவர். என்னமாய் ரசித்து எழுதி இருக்கிறார்.
"சரி, சரி... கண்ணகி அவதாரம் எடுக்காதே! நீ மட்டும் புருஷனோடு வாழ்க்கை நடத்தலாமாக்கும்?" வேண்டுமென்றேதான் சீண்டினேன்.
"நான் சகித்துக் கொள்ளவில்லை!" பாவம், கண்களில் நீர் அரும்பி விழுந்து விடுவேன் என பயமுறுத்தியது.
"நான்... நான் உங்களை சந்தித்த பிறகு... செக்ஸை மறந்து விட்டேன்! குழந்தைகள் மீது பழி போட்டு... நான் துரோகம் செய்வதாய்..." மேலே பேச முடியாதபடி குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்து விட்டனர். உப்பு சப்பற்ற பேச்சுகள். விளையாட்டு வேதனையில் முடிந்தது.
"கோபம் வரும்னு தெரிஞ்சுதானே கேட்கப் போறே? ஏன் முழுங்கறே? கேட்டுடு"
"யாரோ ஒருத்தி புத்து நோய் வந்து ஆஸ்பத்திரியிலே கிடக்கறாளாம்... ராவாப் பகலா நீங்க அங்கேயே இருக்கறதா..."
"யார் சொன்னது?" என்னை அறியாமல் குரல் உயர்ந்தது.
"அவ யாரு?"
"உங்க அத்தை பையன், மாமா பிள்ளை, பெரியப்பா மச்சினன்னு எத்தனை பேரு வராங்க? எத்தனை வீடுகளுக்கு நீ போறே? நான் என்னிக்காவது இப்பிடி உன்னைக் கேள்வி கேட்டிருக்கேனா? நிஜந்தானான்னு ஆராய்ஞ்சிருக்கேனா? முதல்லே புருஷனை நம்பு. அவ என் சினேகிதி. பால்ய சினேகிதி. அவ்வளவுதான்... இதுக்கு மேலே தூண்டித் துளைச்சே பேசாம காவியைக் கட்டிகிட்டு இமாசலம் போயிடுவேன். சே, என்ன பொம்பளைங்கப்பா..."
நான் செருப்பை மாட்டிக் கொண்டிருந்தேன். அவள் விசும்பிக் கொண்டிருந்தாள். அவள் என் காதலி என்று சொல்வதில் எனக்கு பயமில்லை. ஆனால், என் ப்ருந்தாவின் பெயர் கெட்டு விடக் கூடாதே!
"மோகத்தைக் கொன்று விடு...
அல்லாலென்றன் மூச்சை நிறுத்தி விடு"
மேடையில் ப்ருந்தா பாடிக் கொண்டிருந்தாள். பாடுகிறாளா? அல்லது தன் எண்ணத்தை வெளியிடுகிறாளா என்று நினைத்தேன். அல்லது எனக்குத்தான் அப்படித் தோன்றுகிறதா? கண்கள் மயங்க ரசித்துக் கொண்டிருந்தேன்.
"ஹாய், நீ செல்வம்தானே..." திடுக்கிட்டுப் பார்த்தால் வைதேகி! அப்புறம் பாட்டில் எப்படி கவனம் செலுத்துகிறது?
"அட வைதேகி... என்ன பெரிய மாமி மாதிரி ஆகிவிட்டாய். எங்கே இப்படி?"
பக்கத்து சீட் காலியாக இருந்தது. அங்கேயே உட்கார்ந்து விட்டாள். இந்த வைதேகியோடு எல்லாவித தொடர்பும் உண்டு. அதெல்லாம் கல்யாணம் ஆவதற்கு முன்.
"சாவகாசமாய் ஒரு நாள் வீட்டுக்கு வாயேன்! இதுதான் என் அட்ரஸ்... உன்கிட்ட விபரமாய் பேசணும்". விசிட்டிங் கார்டை வாங்கிக் கொண்டேன். நான் எப்போதுமே முன் வரிசையில் உட்கார மாட்டேன். நாலைந்து வரிசை தள்ளிதான் உட்காருவேன். கச்சேரி முடிந்தது. ப்ருந்தா வந்தாள்.
வைதேகியும் நானும் சம வயசு. ஒரு வேளை சின்னவளோ? நீ, வா, போ என்றுதான் பேசிக் கொள்வோம்.
"பிருந்தா, இது என் பால்ய சினேகிதி. வைதேகி... ப்ருந்தா என் ஃபேமிலி பிரெண்ட்" அறிமுகம் செய்து வைத்தேன்.
இரண்டு பேரும் வணக்கம் சொல்லிக் கொண்டார்கள். குசலம் விசாரித்தார்கள்.
"நீங்க வேணா பேசிட்டிருங்களேன். ரொம்ப நாளைக்கப்புறம் பார்க்கிறீங்க... நான் ஆட்டோ பார்த்துண்டு போறேன்." ப்ருந்தா கிளம்பினாள்.
ஊஹும்... நிலைமை சரியில்லை. இந்த மாதிரி ப்ருந்தா பேசினால் 'மூட் அவுட்' என்று அர்த்தம். கொஞ்சம் கிளறினால் குதறி எறிந்து விடுவாள்.
வைதேகி சரியான அட்டை. அந்த நாளில் நான் காய்ந்த மாடு. பெண்ணில்லாத ஊரிலே கிழவியும் ஒரு மோகினி என்று ரசித்த காலம்! இப்போ... சரீர சுகத்தை விட பார்வை சுகம், ஆத்மீக ராகமே பெரிதென்று நினைக்கிற பதம்!
"அவங்கதான் போய்க்கறாங்களே! அவர் கூட ஊரிலே இல்லே... வாங்களேன்." வைதேகியின் விகல்பமில்லாத ஆனால் விவகாரமான அழைப்பு.
"இல்லே வைதேகி... ப்ருந்தாவைத் தனியா விட முடியாது. அவ புருஷனுக்கு பதில் சொல்லி ஆகணும்! பெண்களைக் கடத்திட்டுப் போற காலம். திருட்டு பயம். அதான் அட்ரஸ் கொடுத்திருக்கியே." மெள்ள கழற்றிக் கொண்டேன்.
மேலே விழுந்து பிடுங்கினால் ஆண்களுக்கு ரசிக்காது என்று ஏன் வைதேகி புரிந்து கொள்ளவில்லை? ஒருவேளை நான்தான் அப்படியோ?
வைதேகியைப் பற்றி முன்பே ப்ருந்தாவிடம் சொல்லி இருந்தேன். வழியில் ப்ருந்தா எதுவும் பேசவில்லை. வீட்டுக்குப் போனதும் சம்பிரதாயப் பேச்சுக்களுடன் விடை பெற்றேன்.
அடுத்த முறை சந்திக்கும்போது கேட்டேன்.
"தேவியாருக்கு என்ன பராமுகம்?"
"நீங்கள் கோகுல கண்ணன். கோபியருக்குப் பஞ்சமா?"
இவள் கோபத்தை நினைத்து எனக்கு சிரிப்பு வந்தது. "சக்களத்திப் போராட்டமோ?"
என்னை எரித்து விடுவதைப் போல் பார்த்தாள்.
"ஆமாம்... என் மனைவியைப் பற்றி ஏன் ஒரு நாள் கூட கோபிப்பதில்லை?"
"அவள் உரிமைப்படி வந்தவள். எனக்கும் முன்பே! அதைத் தடுப்பது எனக்கு நியாயம் இல்லை."
"இவளும் எனக்கு முன்னே வந்தவள்தான்".
"அவளும் நானும் ஒன்றா?" அடேயப்பா கோபத்தில் கூட என் ப்ருந்தா எத்தனை சிம்ரனாய் இருந்தாள்!
வாசுகி அம்மையார் நிறைய ஊடல் செய்திருக்க வேண்டும். வள்ளுவர் கொடுத்து வைத்தவர். என்னமாய் ரசித்து எழுதி இருக்கிறார்.
"சரி, சரி... கண்ணகி அவதாரம் எடுக்காதே! நீ மட்டும் புருஷனோடு வாழ்க்கை நடத்தலாமாக்கும்?" வேண்டுமென்றேதான் சீண்டினேன்.
"நான் சகித்துக் கொள்ளவில்லை!" பாவம், கண்களில் நீர் அரும்பி விழுந்து விடுவேன் என பயமுறுத்தியது.
"நான்... நான் உங்களை சந்தித்த பிறகு... செக்ஸை மறந்து விட்டேன்! குழந்தைகள் மீது பழி போட்டு... நான் துரோகம் செய்வதாய்..." மேலே பேச முடியாதபடி குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்து விட்டனர். உப்பு சப்பற்ற பேச்சுகள். விளையாட்டு வேதனையில் முடிந்தது.
வைதேகி நான் வேலை செய்த ஆபீஸுக்கு அடிக்கடி வருவாள், தன் அண்ணனைப் பார்க்க. அப்படி ஏற்பட்ட தொடர்பு. வலிய கிடைப்பதை பசிப்பவன் விடுவானா? நானோ ஏகாதசி. அவளோ சமைத்த உணவு. அப்புறம்?
வைதேகியை ஒரு நாள் மறுபடி கடை வீதியில் சந்திக்க நேர்ந்தது.
"செல்வம், ஏன் வரவில்லை? என்னை மறந்தே விட்டாயா?" என்று துளைத்து எடுத்து விட்டாள். விசிட்டிங் கார்டை வேண்டுமென்றே பிருந்தா கிழித்துப் போட்டதை சொன்னால் சும்மா விடுவாளா? தொலைந்து விட்டதாகக் கூறினேன்.
அவளுக்கு மொத்தம் ஆறு குழந்தைகளாம். அதிலே இரண்டு ரெட்டையாம்.
"செல்வம்... உன்னிடம் நான் வாழ்ந்தது கொஞ்ச காலம். அதிலே ஏற்பட்ட மகிழ்ச்சியை நான் மறுபடி அனுபவிக்க வேண்டும். ஏன், வெட்கத்தை விட்டு சொல்கிறேன்! உன் குழந்தையை நான் சுமக்க வேண்டும்.
நான் வேர்த்து விறுவிறுத்துப் போனேன்! இன்னும் இவள் மாறவே இல்லையே. இது ஆபத்து. இவள் புருஷன் சி.எஃப்..ஓ.... ஃப்ளாட் பானல் டிவி, புது வீடு, புது பென்ஸ் காரு என்று வசதியாக வைத்திருக்கிறானாம். என்ன கொள்ளை! திமிர் பிடித்து அலைகிறாள். அவள் கணவன் இங்கு வந்து ஒரு மாதம்தான் ஆகிறதாம். சினிமா, டிசம்பர் கச்சேரி, ஓவியக் கண்காட்சி என்று அலைகிறாள் பொழுது போகாமல். இவள் கண்ணில் நான் ஏன் பட்டேன்?
"உங்கள் வைதேகியைப் பார்த்தேன். 'உன் மயக்கத்தில்தான் செல்வம் என்னிடமிருந்து ஒதுங்குகிறாரா?' என்று கோணி ஊசியால் கோழிக்குஞ்சை குத்துகிறாப் போல கேட்டாள்! என்ன யோசனை? வந்த இடத்திலும் வைதேகி ஞாபகமா?"
ப்ருந்தாவுக்கும் வைதேகிக்கும் நடுவில் சில காலம் நான் மத்தளமாய் இருந்தேன். அவளால் ஏற்பட்ட தலைவலிகளைப் புரிந்து கொண்டு நிவாரணம் அளித்தவள் என் ப்ருந்தாதான்!
"என்ன இது குழந்தை மாதிரி... இன்னிக்கு அவர் இல்லே. பசங்களை அழைச்சிண்டு எக்ஸிபிஷன் போயிருக்கார். எனக்குப் பிறந்த நாள்னு சொல்லி உங்க வைதேகியை அழைச்சிண்டு வாங்கோ".
ப்ருந்தாவுக்குப் பொடி வைக்காமல் பேசவே தெரியாது. அவளுடைய ஸ்பெஷாலிடியே அதுதானே. வியாதியும் அவள்தான். மருந்தும் அவள்தான்!
"நீங்கள் மூச்சு விடக் கூடாது. நான் பார்த்துக் கொள்கிறேன்" என்ற நிபந்தனையைக் கேட்டதும் எனக்கே சிறிது அச்சமாகத்தான் இருந்தது 'என்ன செய்யப் போகிறாளோ' என்று.
வைதேகி வந்தாள்.
"ஒரு ஸ்வீட், ஒரு காரம் தருவித்தும் காபி தயாரித்தும் இருந்தாள் ப்ருந்தா.
எதையோ எதிர்பார்த்து உதறிக் கொண்டிருந்தேன்.
மெதுவாகப் பேச்சுத் தொடங்கியது. சங்க இலக்கியங்களுக்கு இழுத்தாள் ப்ருந்தா. பேச்சு சூடு பிடித்து விட்டது. ராதை, அகலிகை ஒருத்தரை விடவில்லை. வைதேகி என்னை அடிக்கடி முறைத்தாள். நடுவிலே புகுந்து பேச்சை திசை மாற்றினால் "உனக்குப் போய் பரிந்து கொண்டு வந்தேனே" எனபது போல் ப்ருந்தா முறைத்தாள்.
"நீங்கள் அன்றைக்கு 'செல்வத்துக்கு உன் மேல் மயக்கம்! என்னை ஒதுக்குகிறார்' என்று குற்றம் சாட்டினீர்கள். அதற்கு இன்றைக்கு பதில் சொல்கிறேன். உணர்வுகளை எல்லாம் வார்த்தைகளால் வடித்து விட முடியாது. ஆத்ம பரிவர்த்தனை தனி! அப்படியே அவர் என்னிடம் மயங்கினாலும் சதை வெறிக்கு நான் ஆட்பட்டவளல்ல..."
எதில் போய் முடியுமோ என்று நான் பயந்து கொண்டிருந்தபடியே வைதேகி விருட்டென்று எழுந்தாள்.
"அப்பொழுது நான் வெறி பிடித்தலைகிறேன் என்கிறாயா? நான் 'பளிச்'சென்று சொல்கிறேன். நீ ஆத்ம பாஷை என்று முலாம் பூசிகிறாய். நளாயினி உத்தமிதான். பத்தினியாயிருந்தவள் அடுத்த பிறவியிலாவது பதி சுகம் அனுபவிக்க ஐந்து முறை மந்திரத்தை ஓதி பாஞ்சாலியாகப் பிறந்து ஐந்து விதமான ஆடவர்களை அடைந்தாள். அவள் மறுபிறவியிலும் நளாயினியகவே இருந்திருக்கலாமே? செக்ஸ் யாருக்கும் அலர்ஜி இல்லே.... என்னைப் போல் அவசரக் குடுக்கைகள் வெளிப்படையாய் காட்டிக் கொண்டு முழிக்கிறோம்! செல்வம்... உனக்குப் பிடிக்கலேன்னா நேரிடையா சொல்லி இருக்கலாம்! இவள் உனக்கு வக்கீலா? பேஷ்... நல்ல ஏற்பாடு!"
புறப்பட்டவளைத் தடுத்தாள் ப்ருந்தா.
"நில்... நீ என்னிடம் கேட்டதற்கு நான் பதில் சொன்னேன். அவரை ஏன் இழுக்கிறாய்? செக்ஸ் அலர்ஜி இல்லாவிட்டாலும் அளவுக்கு மீறினால்.... சர்க்கரை ருசிக்கிறது என்று சாப்பிட்டால் நீரழிவு வருகிறது. அரிசிச் சோறே அதிகமானால் கொழுப்பு உண்டாகிறது".
"தாங்க்யூ" வைதேகி போய் விட்டாள்.
"என்ன ப்ருந்தா?" மனத் தாங்கலாக இருந்தது. பாவம், வைதேகி.
"இது ஆபரேஷன் கேஸ்... முதலில் கஷ்டமாக இருந்தாலும் பலன் நல்லதாக இருக்கும். அடாடா... காதலி முகம் வாடினால் தாங்கவில்லையாக்கும்! அப்புறம் பிடிக்காதது போல் நடிப்பானேன்...?"
அப்பப்பா, ப்ருந்தா பொல்லாதவள். அப்படி ப்ருந்தாவை மறுபடி எப்போது பார்ப்பேன்? இரவுகளில் என் மனைவியை அணைத்திருக்கும் போது அவளில் ப்ருந்தாவை நான் பார்க்கிறேன். மனைவியாகத் தோற்றம் மாறுபடும்போது உதறி விடுகிறேன்.
"என்ன மனிதரோ?" அவள் அலுத்துக் கொள்வாள்.
அதையே ப்ருந்தா என்னிடம் சொன்னபோது எனக்கு வியப்பக இருந்தது! உறவுகளுக்கு இப்படி ஒரு பாலமா? ஒரே சமயங்களில் ஒரே மாதிரி கம்பியில்லா இணைப்பு அலைவரிசையா?
இனி ப்ருந்தாவின் நினைவுகள்தான் எனக்குத் துணையோ?
வைதேகியை ஒரு நாள் மறுபடி கடை வீதியில் சந்திக்க நேர்ந்தது.
"செல்வம், ஏன் வரவில்லை? என்னை மறந்தே விட்டாயா?" என்று துளைத்து எடுத்து விட்டாள். விசிட்டிங் கார்டை வேண்டுமென்றே பிருந்தா கிழித்துப் போட்டதை சொன்னால் சும்மா விடுவாளா? தொலைந்து விட்டதாகக் கூறினேன்.
அவளுக்கு மொத்தம் ஆறு குழந்தைகளாம். அதிலே இரண்டு ரெட்டையாம்.
"செல்வம்... உன்னிடம் நான் வாழ்ந்தது கொஞ்ச காலம். அதிலே ஏற்பட்ட மகிழ்ச்சியை நான் மறுபடி அனுபவிக்க வேண்டும். ஏன், வெட்கத்தை விட்டு சொல்கிறேன்! உன் குழந்தையை நான் சுமக்க வேண்டும்.
நான் வேர்த்து விறுவிறுத்துப் போனேன்! இன்னும் இவள் மாறவே இல்லையே. இது ஆபத்து. இவள் புருஷன் சி.எஃப்..ஓ.... ஃப்ளாட் பானல் டிவி, புது வீடு, புது பென்ஸ் காரு என்று வசதியாக வைத்திருக்கிறானாம். என்ன கொள்ளை! திமிர் பிடித்து அலைகிறாள். அவள் கணவன் இங்கு வந்து ஒரு மாதம்தான் ஆகிறதாம். சினிமா, டிசம்பர் கச்சேரி, ஓவியக் கண்காட்சி என்று அலைகிறாள் பொழுது போகாமல். இவள் கண்ணில் நான் ஏன் பட்டேன்?
"உங்கள் வைதேகியைப் பார்த்தேன். 'உன் மயக்கத்தில்தான் செல்வம் என்னிடமிருந்து ஒதுங்குகிறாரா?' என்று கோணி ஊசியால் கோழிக்குஞ்சை குத்துகிறாப் போல கேட்டாள்! என்ன யோசனை? வந்த இடத்திலும் வைதேகி ஞாபகமா?"
ப்ருந்தாவுக்கும் வைதேகிக்கும் நடுவில் சில காலம் நான் மத்தளமாய் இருந்தேன். அவளால் ஏற்பட்ட தலைவலிகளைப் புரிந்து கொண்டு நிவாரணம் அளித்தவள் என் ப்ருந்தாதான்!
"என்ன இது குழந்தை மாதிரி... இன்னிக்கு அவர் இல்லே. பசங்களை அழைச்சிண்டு எக்ஸிபிஷன் போயிருக்கார். எனக்குப் பிறந்த நாள்னு சொல்லி உங்க வைதேகியை அழைச்சிண்டு வாங்கோ".
ப்ருந்தாவுக்குப் பொடி வைக்காமல் பேசவே தெரியாது. அவளுடைய ஸ்பெஷாலிடியே அதுதானே. வியாதியும் அவள்தான். மருந்தும் அவள்தான்!
"நீங்கள் மூச்சு விடக் கூடாது. நான் பார்த்துக் கொள்கிறேன்" என்ற நிபந்தனையைக் கேட்டதும் எனக்கே சிறிது அச்சமாகத்தான் இருந்தது 'என்ன செய்யப் போகிறாளோ' என்று.
வைதேகி வந்தாள்.
"ஒரு ஸ்வீட், ஒரு காரம் தருவித்தும் காபி தயாரித்தும் இருந்தாள் ப்ருந்தா.
எதையோ எதிர்பார்த்து உதறிக் கொண்டிருந்தேன்.
மெதுவாகப் பேச்சுத் தொடங்கியது. சங்க இலக்கியங்களுக்கு இழுத்தாள் ப்ருந்தா. பேச்சு சூடு பிடித்து விட்டது. ராதை, அகலிகை ஒருத்தரை விடவில்லை. வைதேகி என்னை அடிக்கடி முறைத்தாள். நடுவிலே புகுந்து பேச்சை திசை மாற்றினால் "உனக்குப் போய் பரிந்து கொண்டு வந்தேனே" எனபது போல் ப்ருந்தா முறைத்தாள்.
"நீங்கள் அன்றைக்கு 'செல்வத்துக்கு உன் மேல் மயக்கம்! என்னை ஒதுக்குகிறார்' என்று குற்றம் சாட்டினீர்கள். அதற்கு இன்றைக்கு பதில் சொல்கிறேன். உணர்வுகளை எல்லாம் வார்த்தைகளால் வடித்து விட முடியாது. ஆத்ம பரிவர்த்தனை தனி! அப்படியே அவர் என்னிடம் மயங்கினாலும் சதை வெறிக்கு நான் ஆட்பட்டவளல்ல..."
எதில் போய் முடியுமோ என்று நான் பயந்து கொண்டிருந்தபடியே வைதேகி விருட்டென்று எழுந்தாள்.
"அப்பொழுது நான் வெறி பிடித்தலைகிறேன் என்கிறாயா? நான் 'பளிச்'சென்று சொல்கிறேன். நீ ஆத்ம பாஷை என்று முலாம் பூசிகிறாய். நளாயினி உத்தமிதான். பத்தினியாயிருந்தவள் அடுத்த பிறவியிலாவது பதி சுகம் அனுபவிக்க ஐந்து முறை மந்திரத்தை ஓதி பாஞ்சாலியாகப் பிறந்து ஐந்து விதமான ஆடவர்களை அடைந்தாள். அவள் மறுபிறவியிலும் நளாயினியகவே இருந்திருக்கலாமே? செக்ஸ் யாருக்கும் அலர்ஜி இல்லே.... என்னைப் போல் அவசரக் குடுக்கைகள் வெளிப்படையாய் காட்டிக் கொண்டு முழிக்கிறோம்! செல்வம்... உனக்குப் பிடிக்கலேன்னா நேரிடையா சொல்லி இருக்கலாம்! இவள் உனக்கு வக்கீலா? பேஷ்... நல்ல ஏற்பாடு!"
புறப்பட்டவளைத் தடுத்தாள் ப்ருந்தா.
"நில்... நீ என்னிடம் கேட்டதற்கு நான் பதில் சொன்னேன். அவரை ஏன் இழுக்கிறாய்? செக்ஸ் அலர்ஜி இல்லாவிட்டாலும் அளவுக்கு மீறினால்.... சர்க்கரை ருசிக்கிறது என்று சாப்பிட்டால் நீரழிவு வருகிறது. அரிசிச் சோறே அதிகமானால் கொழுப்பு உண்டாகிறது".
"தாங்க்யூ" வைதேகி போய் விட்டாள்.
"என்ன ப்ருந்தா?" மனத் தாங்கலாக இருந்தது. பாவம், வைதேகி.
"இது ஆபரேஷன் கேஸ்... முதலில் கஷ்டமாக இருந்தாலும் பலன் நல்லதாக இருக்கும். அடாடா... காதலி முகம் வாடினால் தாங்கவில்லையாக்கும்! அப்புறம் பிடிக்காதது போல் நடிப்பானேன்...?"
அப்பப்பா, ப்ருந்தா பொல்லாதவள். அப்படி ப்ருந்தாவை மறுபடி எப்போது பார்ப்பேன்? இரவுகளில் என் மனைவியை அணைத்திருக்கும் போது அவளில் ப்ருந்தாவை நான் பார்க்கிறேன். மனைவியாகத் தோற்றம் மாறுபடும்போது உதறி விடுகிறேன்.
"என்ன மனிதரோ?" அவள் அலுத்துக் கொள்வாள்.
அதையே ப்ருந்தா என்னிடம் சொன்னபோது எனக்கு வியப்பக இருந்தது! உறவுகளுக்கு இப்படி ஒரு பாலமா? ஒரே சமயங்களில் ஒரே மாதிரி கம்பியில்லா இணைப்பு அலைவரிசையா?
இனி ப்ருந்தாவின் நினைவுகள்தான் எனக்குத் துணையோ?
ஆபரேஷனுக்கு நாள் குறித்தாயிற்று. என்னில் இருந்து ஏதோ ஒன்று என்னை விட்டு விலகுகிறது போல் ஒரு உணர்ச்சி! எது? தெரிந்தால் அல்லவா நிறுத்தி வைக்க... முடியுமா?
முகத்திலெல்லாம் குண்டு குண்டாய் கொப்பளங்கள். சிலது வெடிக்க, சிலது கருக... இதற்கொரு முடிவே கிடையாதா?
கதவு ஒருக்களித்திருந்தது. ப்ருந்தாவின் கணவன் உட்கார்ந்திருந்தான். திரும்பி விடலாமா என்று நினைத்த போது ப்ருந்தா பார்த்துவிட்டாள்.
"வாருங்கள் செல்வம், நீங்கள் ஏன் தயங்க வேண்டும்?"
அவன் பார்வையில் குரூரமிருந்தது. என்ன கஷ்ட காலம். கால்கள் பின்ணடைய உள்ளே போனேன்.
"நீங்க பேசிட்டிருக்கீங்க... நான் வேணா விசிட்டிங் ஹால்லே வெயிட் பண்றேனே".
"ஏன், நான் உங்களுக்கு இடைஞ்சலா இருக்கேனா? நான் வேணா வெளியே போயிடறேன்". அவன் எழுந்து கொண்டான்.
"என்ன இது?" நான் பதற.
"கரெக்ட்... செல்வம். அவரை விடுங்க. நான் உங்ககிட்டே தனியாப் பேச வேண்டியது இருக்கு. ஆபரேஷனுக்கு அப்புறம் நான் பிழைப்பேங்கற நம்பிக்கை எனக்கு இல்லே. பிழைக்கக் கூடாதுன்னு ஈசுவரனை வேண்டிக்கறேன். அதனாலே மனசிலே இருக்கிறதை எல்லாம் கொட்டிடணும். நிறையப் பேசணும்னு ஆசையா இருக்கு. அதுக்குப் பொறுமையா கேட்கறவங்க வேணும். மனசிலேயே இருந்து செத்துட்டேன்னா நெஞ்சு வேகாது". ப்ருந்தா ஏகமாக குலைந்து போயிருந்தாள்.
"எத்தனை நாளாடீ காத்திட்டிருந்தே?" அடப்பாவீ.... இப்படி எத்தனை குடியைடா கெடுத்திருக்கே?" இருவர் மேலேயும் பாய்ந்தான் அவன். அட, அவன் பெயரைச் சொல்லவே இல்லை இல்லே... கோபாலன்.
நான் கூட சில நாள் கேலி செய்ததுண்டு. பெயர் கண பொருத்தமென்று.
"நிறுத்துங்க... அந்தரங்கமான வேளைகள்லே கூட 'உன்னை விட அவ அழகா இருக்கா, நான் அவளோட போனேன், இவளோடப் போனேன்னு' பேசற உங்களை விட அவர் மேலானவர். நேத்திக்கு 'நீ சீக்கிரம் செத்துத் தொலைச்சா நான் வேற கல்யாணம் பண்ணிப்பேன்'னு கொத்தினேளே! போய் புதுப் பொண்டாட்டிக்கு படுக்கை வாங்குங்கோ... ராணாவைக் கல்யாணம் பண்ணிண்ட மீரா, கண்ணன் மேலே நெஞ்சத்தைப் பறி கொடுத்தா. அது சரீரத் தேவையா? அது ஒரு ஆத்ம திருப்தி. அது சதை வெறியர்களுக்குத் தெரியாது."
"ப்ருந்தா பேசாம இரு" நான் தடுத்துப் பார்த்தேன். கோபாலன் அடிக்க வந்தார். அவரை மடக்கித் தள்ளினேன். வேகத்தில் கோபாலன் முன்னிலை மறந்து எங்கள் ஒருமை வந்துவிட்டது. ப்ருந்தாவின் வெறி தணியட்டும் என்று நான் வெளியேற சென்ற போது,
"செல்வம், இப்போ போனீங்க... மறுபடி உணர்வோடு என்னை நீங்க பார்க்க முடியாது". ப்ருந்தாவுக்கு மூச்சு திணறியது.
"செல்வத்தோட எனக்கு எந்த சரீரத் தொடர்பும் கிடையாது. இதை நீங்க நம்பணுங்கறதுக்காக சொல்லலை. ஆத்மா யாருக்கும் சொந்தமில்லை. நம்ம உணர்வுகளுக்கு, அன்புகளுக்கு, சின்னச் சின்ன ஆசைகளுக்கு எங்கே எதிரொலி கிடைக்கிறதோ அங்கே ஈடுபட்டுடறது. ராதா, மாதவன் காலத்திலே பிருந்தாவனத்திலே யிருந்து ஏற்படுகிற தொடர் விஷயம்".
"ஆபரேஷனுக்கு முன்னாலே நீ இப்படி பேசிட்டே இருக்கக் கூடாது, ப்ருந்தா..." நான் தடுத்தேன்.
"முன்னாலே பேசக்கூடாது... பின்னாலே பேச முடியாது". அவள் சிரித்தாள்.
"நான் இவர்கிட்டே பேசணும்".
ப்ருந்தா ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் எனப் புரியாமல் என்னை முறைத்தபடி கோபாலன் வெளியேறினான்.
"செல்வம், முதல்லே கதவை சாத்திட்டு வாங்க... தாள் போட வேண்டாம். கொஞ்ச நேரத்திலே ஆயா வருவா. ஏன் செல்வம்... என்ன பயம்? இப்படி உட்காருங்க". கட்டிலை தட்டிக் காட்டினாள்.
"நான் உங்களை கற்பழிச்சுட மாட்டேன்".
"ஏன் ப்ருந்தா... எப்படியெல்லாமோ பேசறே? நான் போய் டாக்டரைக் கூட்டிண்டு வரட்டுமா?"
"வியாதி முத்திட்டதோன்னு பயப்படறீங்க! மரை லூஸாயிடுத்து... யோசிக்கிற சக்தியை இழந்தாச்சு... போதுமா! போங்க... எல்லாரும் போங்கோ... நன் தனி. அனாதை. எனக்கு யாருமே இல்லை!" விசித்து விசித்து அழுதாள்.
"ஏம்மா... ஏம்மா ப்ருந்தா இப்படி உன்னை வருத்திக்கறே? நான் இருக்கற வரை நீ தனி இல்லை. அனாதைங்கற வார்த்தைய என் காது கேட்க நீ சொல்லக் கூடாதும்மா. நீ பாடுவியே... 'உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில்' என்று... என் மனசுலே நிஜமாவே உதிரம் கொட்டுதம்மா!"
"என் உருவம் கோரமானதாலே என்னைப் பார்க்கப் பிடிக்கலே இல்லே? நேத்து ராத்திரி பூரா காய்ச்சல். திடீர் திடீர்னு காய்ச்சல் வருதே... அப்போ இவர் கேட்கறார்... 'ஏன் ப்ருந்தா செல்வத்தோட இருக்கும்போது இவ்வளவு சூடு இருக்குமா'ன்னு. எனக்கு எப்படி இருந்திருக்கும்? ஏன் இப்படிப் பேசறேன்னு புரிஞ்சதா?"
ப்ருந்தாவின் விழிகளைத் துடைத்தேன். சண்டாளன்... சூட்டுக் கோலால் கன்னா பின்னாவென்று நோயுற்றுக் கிடக்கும் மானையா குத்துவது.
"எல்லாம் எனக்குத் தெரியும் ப்ருந்தா. நித்தியச் சாவுக்கு விவஸ்தை கிடையாது. விடு... உருவத்தை வைத்துக் காதல் என்றால், அது காதலே இல்லை; காம விகாரம். நீ சொன்ன மீரா குழந்தையில் இருந்தே கண்ணனை நேசித்தாள். நான் உன் குரலை. அதன் பிறகு உன் அன்பை நேசித்தேன். மழை காணாப் பயிராயிருந்த நீ அதைப் பிடித்துக் கொண்டாய்... இதற்கு யார் வேண்டுமானாலும் எந்தப் பெயரும் சூட்டிக் கொள்ளட்டும். வேண்டாததற்கெல்லாம் மன உளைச்சல் படுவதை விடு".
"உங்ககிட்டே நிறையப் பேசணும். அதுக்கு தடை சொல்லாதீங்க... எல்லாத்தையும் உங்ககிட்டே கொட்டப் போறேன்! பைத்தியம்னு நீங்க கேலி செய்தாலும் சரி..."
முகத்திலெல்லாம் குண்டு குண்டாய் கொப்பளங்கள். சிலது வெடிக்க, சிலது கருக... இதற்கொரு முடிவே கிடையாதா?
கதவு ஒருக்களித்திருந்தது. ப்ருந்தாவின் கணவன் உட்கார்ந்திருந்தான். திரும்பி விடலாமா என்று நினைத்த போது ப்ருந்தா பார்த்துவிட்டாள்.
"வாருங்கள் செல்வம், நீங்கள் ஏன் தயங்க வேண்டும்?"
அவன் பார்வையில் குரூரமிருந்தது. என்ன கஷ்ட காலம். கால்கள் பின்ணடைய உள்ளே போனேன்.
"நீங்க பேசிட்டிருக்கீங்க... நான் வேணா விசிட்டிங் ஹால்லே வெயிட் பண்றேனே".
"ஏன், நான் உங்களுக்கு இடைஞ்சலா இருக்கேனா? நான் வேணா வெளியே போயிடறேன்". அவன் எழுந்து கொண்டான்.
"என்ன இது?" நான் பதற.
"கரெக்ட்... செல்வம். அவரை விடுங்க. நான் உங்ககிட்டே தனியாப் பேச வேண்டியது இருக்கு. ஆபரேஷனுக்கு அப்புறம் நான் பிழைப்பேங்கற நம்பிக்கை எனக்கு இல்லே. பிழைக்கக் கூடாதுன்னு ஈசுவரனை வேண்டிக்கறேன். அதனாலே மனசிலே இருக்கிறதை எல்லாம் கொட்டிடணும். நிறையப் பேசணும்னு ஆசையா இருக்கு. அதுக்குப் பொறுமையா கேட்கறவங்க வேணும். மனசிலேயே இருந்து செத்துட்டேன்னா நெஞ்சு வேகாது". ப்ருந்தா ஏகமாக குலைந்து போயிருந்தாள்.
"எத்தனை நாளாடீ காத்திட்டிருந்தே?" அடப்பாவீ.... இப்படி எத்தனை குடியைடா கெடுத்திருக்கே?" இருவர் மேலேயும் பாய்ந்தான் அவன். அட, அவன் பெயரைச் சொல்லவே இல்லை இல்லே... கோபாலன்.
நான் கூட சில நாள் கேலி செய்ததுண்டு. பெயர் கண பொருத்தமென்று.
"நிறுத்துங்க... அந்தரங்கமான வேளைகள்லே கூட 'உன்னை விட அவ அழகா இருக்கா, நான் அவளோட போனேன், இவளோடப் போனேன்னு' பேசற உங்களை விட அவர் மேலானவர். நேத்திக்கு 'நீ சீக்கிரம் செத்துத் தொலைச்சா நான் வேற கல்யாணம் பண்ணிப்பேன்'னு கொத்தினேளே! போய் புதுப் பொண்டாட்டிக்கு படுக்கை வாங்குங்கோ... ராணாவைக் கல்யாணம் பண்ணிண்ட மீரா, கண்ணன் மேலே நெஞ்சத்தைப் பறி கொடுத்தா. அது சரீரத் தேவையா? அது ஒரு ஆத்ம திருப்தி. அது சதை வெறியர்களுக்குத் தெரியாது."
"ப்ருந்தா பேசாம இரு" நான் தடுத்துப் பார்த்தேன். கோபாலன் அடிக்க வந்தார். அவரை மடக்கித் தள்ளினேன். வேகத்தில் கோபாலன் முன்னிலை மறந்து எங்கள் ஒருமை வந்துவிட்டது. ப்ருந்தாவின் வெறி தணியட்டும் என்று நான் வெளியேற சென்ற போது,
"செல்வம், இப்போ போனீங்க... மறுபடி உணர்வோடு என்னை நீங்க பார்க்க முடியாது". ப்ருந்தாவுக்கு மூச்சு திணறியது.
"செல்வத்தோட எனக்கு எந்த சரீரத் தொடர்பும் கிடையாது. இதை நீங்க நம்பணுங்கறதுக்காக சொல்லலை. ஆத்மா யாருக்கும் சொந்தமில்லை. நம்ம உணர்வுகளுக்கு, அன்புகளுக்கு, சின்னச் சின்ன ஆசைகளுக்கு எங்கே எதிரொலி கிடைக்கிறதோ அங்கே ஈடுபட்டுடறது. ராதா, மாதவன் காலத்திலே பிருந்தாவனத்திலே யிருந்து ஏற்படுகிற தொடர் விஷயம்".
"ஆபரேஷனுக்கு முன்னாலே நீ இப்படி பேசிட்டே இருக்கக் கூடாது, ப்ருந்தா..." நான் தடுத்தேன்.
"முன்னாலே பேசக்கூடாது... பின்னாலே பேச முடியாது". அவள் சிரித்தாள்.
"நான் இவர்கிட்டே பேசணும்".
ப்ருந்தா ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் எனப் புரியாமல் என்னை முறைத்தபடி கோபாலன் வெளியேறினான்.
"செல்வம், முதல்லே கதவை சாத்திட்டு வாங்க... தாள் போட வேண்டாம். கொஞ்ச நேரத்திலே ஆயா வருவா. ஏன் செல்வம்... என்ன பயம்? இப்படி உட்காருங்க". கட்டிலை தட்டிக் காட்டினாள்.
"நான் உங்களை கற்பழிச்சுட மாட்டேன்".
"ஏன் ப்ருந்தா... எப்படியெல்லாமோ பேசறே? நான் போய் டாக்டரைக் கூட்டிண்டு வரட்டுமா?"
"வியாதி முத்திட்டதோன்னு பயப்படறீங்க! மரை லூஸாயிடுத்து... யோசிக்கிற சக்தியை இழந்தாச்சு... போதுமா! போங்க... எல்லாரும் போங்கோ... நன் தனி. அனாதை. எனக்கு யாருமே இல்லை!" விசித்து விசித்து அழுதாள்.
"ஏம்மா... ஏம்மா ப்ருந்தா இப்படி உன்னை வருத்திக்கறே? நான் இருக்கற வரை நீ தனி இல்லை. அனாதைங்கற வார்த்தைய என் காது கேட்க நீ சொல்லக் கூடாதும்மா. நீ பாடுவியே... 'உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில்' என்று... என் மனசுலே நிஜமாவே உதிரம் கொட்டுதம்மா!"
"என் உருவம் கோரமானதாலே என்னைப் பார்க்கப் பிடிக்கலே இல்லே? நேத்து ராத்திரி பூரா காய்ச்சல். திடீர் திடீர்னு காய்ச்சல் வருதே... அப்போ இவர் கேட்கறார்... 'ஏன் ப்ருந்தா செல்வத்தோட இருக்கும்போது இவ்வளவு சூடு இருக்குமா'ன்னு. எனக்கு எப்படி இருந்திருக்கும்? ஏன் இப்படிப் பேசறேன்னு புரிஞ்சதா?"
ப்ருந்தாவின் விழிகளைத் துடைத்தேன். சண்டாளன்... சூட்டுக் கோலால் கன்னா பின்னாவென்று நோயுற்றுக் கிடக்கும் மானையா குத்துவது.
"எல்லாம் எனக்குத் தெரியும் ப்ருந்தா. நித்தியச் சாவுக்கு விவஸ்தை கிடையாது. விடு... உருவத்தை வைத்துக் காதல் என்றால், அது காதலே இல்லை; காம விகாரம். நீ சொன்ன மீரா குழந்தையில் இருந்தே கண்ணனை நேசித்தாள். நான் உன் குரலை. அதன் பிறகு உன் அன்பை நேசித்தேன். மழை காணாப் பயிராயிருந்த நீ அதைப் பிடித்துக் கொண்டாய்... இதற்கு யார் வேண்டுமானாலும் எந்தப் பெயரும் சூட்டிக் கொள்ளட்டும். வேண்டாததற்கெல்லாம் மன உளைச்சல் படுவதை விடு".
"உங்ககிட்டே நிறையப் பேசணும். அதுக்கு தடை சொல்லாதீங்க... எல்லாத்தையும் உங்ககிட்டே கொட்டப் போறேன்! பைத்தியம்னு நீங்க கேலி செய்தாலும் சரி..."
குடிக்கத் தண்ணீர் வேண்டுமென்று சைகை காட்டினாள். ஹார்லிக்ஸ் கரைத்து வந்து கொடுத்தேன்.
"செல்வம்... நன் இப்போ எவ்வளவு ரிசர்வ்டா இருக்கேன்! நான் கல்யாணம் ஆகிறதுக்கு முன்னே ரிசர்வ்ட் டைப்பே இல்லை"
பேச்சை நிறுத்த வேண்டுமே! தொண்டை வறண்டு விடப் போகிறது. டாக்டர் பார்த்தால் கோபிப்பார். நிறுத்த வழி? நோயுற்ற உடம்பில் 'சுள் சுள்'ளென்று கோபம் வருகிறது. மென்மையாய் அந்தப் பஞ்சு மனம் நோகாமல் எப்படி முடியும்? மறுபடி ஆரம்பித்து விட்டாள்.
"உட்காருங்கள் செல்வம்... நன் ரொம்ப கலாட்டாப் பண்ணுவேன். எங்க கும்பல்லே எனக்கு கிளியோபாட்ரான்னு பட்டம். ரொம்ப வாய் துடுக்கு. அப்பா இல்லாத பொண்ணுன்னு அம்மா செல்லம். பதினெட்டாம் பெருக்கு, கோலாட்டம்னு எங்க குழு திமிலோகப்படும்.
'அதோ அவன் குண்டா இருக்கான். அவன் பக்கத்திலே போற ஈர்க்குச்சியை எடுத்து, அதோப் போற சோளத் தட்டை பக்கத்திலே வெச்சா சரிசமமா இருக்காது?' இப்படி யெல்லாம் ஜோடிகளை மானசீகமா பிரிச்சு, சேர்க்கறதிலே ஒரு ஆனந்தம்! அந்தப் பாவம்தான் எனக்கு ஜோடி சரியா அமையலியோ?"
"என்னம்மா... என்னம்மா இதெல்லாம்?" விக்கலெடுத்தது. தண்ணீர் கொடுத்தேன்.
"ஒரு தடவை ஊரிலேயிருந்து தூரத்து சொந்தம் வந்திருந்தாங்க. அதிலே ஒருத்தன் கொஞ்சம் வழிசல். ரொம்ப ஹிம்சையா யிருந்தது. இராத்திரி நான் படுக்கற இடம் வரை வந்து காலைச் சுரண்ட ஆரம்பிச்சான். ஒரு கிஸ்ஸாவது வேணுமாம்! 'ஐயோ அம்மா, தேளு, தேளு'ன்னு கத்தி... எல்லாரும் ஓடி வந்து... பாவம் திணறிப் போயிட்டான். அப்போ அவன் மூஞ்சி போனதைப் பார்க்கணுமே"! மலர்ந்த முகத்தில் வலி வந்தது தெரிந்தது.
நர்ஸ் வந்து ஊசி போட்டு விட்டுப் போனாள்.
"ஸிஸ்டர்... நீங்க பேசிட்டீங்களே இவரா, அவரான்னு தெரியலேன்னு... இவர்தான்"
"சாரி" ஸிஸ்டர் ஓடியே போய் விட்டாள்.
"என்ன விஷயம்?" எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
"நேத்து ஒரு வேடிக்கை செல்வம்... 'ஏம்மா செகப்ப ஓராளு வராரு! அவரும் கட்டிலாண்டை போயி ரொம்ப நேரம் பேசுராரு... அந்த கறத்தாளு வந்தாலும் கதவு மூடிக் கெடக்கு... அந்தம்மா புருசன் யாரு?" இப்படி ஆயா கேட்கிறா".
'இன்னா எளவோ ஆயா? பொது வார்டிலே சேர்த்தவன் புருஷன். கறத்தாளு ஸ்பெஷல் வார்டிலே சேர்த்தாரு! வைப்பாட்டனாயிருக்கும்' நர்ஸ் சொல்லிட்டு இடி இடின்னு சிரிச்சா... இந்த நர்ஸ் புதுசு. 'அவரை நான் பார்க்கணுமே'ன்னா... அதுதான் அறிமுகப் படலம் செய்து வைத்தேன்".
இடையில் ஆயா வந்து தன் வேலையை செய்து விட்டு ஒரு மாதிரி பார்த்துக் கொண்டு போனாள்.
"நான் எங்கே நிறுத்தினேன்... ஆ, மறுநாள் அவன் என்னைப் பழி வாங்கற மூடில் இருந்தான். எல்லாரும் தூங்கப் போனப்புறம் நான் நைசா எழுந்து எங்க மாமாவோட மாமியார், பாட்டியை என் ரூமிலே படுக்கச் சொன்னேன். அவங்க தூங்கற வரை முழிச்சிட்டிருந்தவ... தூங்கின பிறகு எழுந்து நைசா தாழ்வார இருட்டிலே போய் ஒண்டிக்கிட்டேன். நான் போட்ட கணக்கு தப்பலே!"
ப்ருந்தா எதையோ நினைத்துக் கொண்டு கொஞ்சம் சிரித்தாள். வெள்ளமே நிறுத்திக் கொள்ளட்டும் என்று அவளை விட்டு விட்டேன்.
"நல்ல தூக்கம். ரொம்ப நாழி முழிச்சிண்டிருந்தது அந்தக் கரடுமுரடு தரையிலே கூட அசத்திட்டது. பாட்டி 'கடன்காரா, இழவெடுத்தவனே... உன் முழியே சரியில்லை! தூணுக்குப் புடவை கட்டி இருந்தாக் கூட துளைச்சுப் பார்க்கற சென்மம்'னு கூப்பாடு போட்டுட்டிருந்தாள். பின்னே பாட்டியைக் கட்டிப் பிடிச்சா சும்மா விடுவாளா? ஏற்கனவே பாட்டிக்கு தான் பேரழகிங்கற எண்ணம்... மறுநாள் காலையில் அந்த கும்பல் இடத்தை காலி செய்து விட்டது. இப்போ அவனுக்கு ஆறு பெண்கள். பிள்ளையே இல்லே... ஃபங்க்ஷன்கள்லே பார்த்தா 'ஹி, ஹி'ம்பான்"!
ப்ருந்தாவுக்கு நிறைய வியர்த்தது.
"ஏன் ப்ருந்தா... காலன் வீட்டுக் கதவை தட்டித்தான் ஆகணுமா? இப்போ இந்தக் கதையெல்லாம் அவசியம் சொல்லித்தான் ஆகணுமா?"
"என் பேச்சு உங்களுக்கு போரடிக்க ஆரம்பிச்சாச்சா?"
இப்படியெல்லாம் கேட்டால் என்ன பதில் சொல்வது?
"உன் உடம்புக்காகத்தான்! அப்புறம் என்ன நடந்தது?" அசௌகரியமான மௌனத்தைக் கலைக்க விரும்பினேன். வெய்யிலில் உலர்த்திய வற்றலாக சுருங்கிய முகம் எண்ணெயில் பொரிந்த வற்றலாக பூரித்தது. மறுபடி தொடர்ந்தாள்.
"ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி. அதை கேட்டீங்க... நீங்க ரொம்ப ரசிப்பீங்க... எங்க குழுவிலே ஒருத்திக்கு கல்யாணம். பணக்காரின்னு அவளுக்கு கர்வம். மாப்பிள்ளையும் ரொம்ப அழகு... பணம்! கொஞ்சம் கலாட்டா பண்ணனுங்கறது எங்க குழுவிலே சிலரோட ஆசை.
சாந்தி முகூர்த்தத்துக்கு அலங்காரம் பண்ண ஆன செலவிலேயே என் கல்யாணத்தை நடித்தி முடித்திருப்பார்கள். கப்பல் மாதிரி அமைப்பு. வெல்வெட் மெத்தை, தலையணை... நாங்கள்லாம் போய் பார்த்தேம். எங்களுக்கெல்லாம் சரியான வரவேற்புமில்லே!
"செல்வம்... நன் இப்போ எவ்வளவு ரிசர்வ்டா இருக்கேன்! நான் கல்யாணம் ஆகிறதுக்கு முன்னே ரிசர்வ்ட் டைப்பே இல்லை"
பேச்சை நிறுத்த வேண்டுமே! தொண்டை வறண்டு விடப் போகிறது. டாக்டர் பார்த்தால் கோபிப்பார். நிறுத்த வழி? நோயுற்ற உடம்பில் 'சுள் சுள்'ளென்று கோபம் வருகிறது. மென்மையாய் அந்தப் பஞ்சு மனம் நோகாமல் எப்படி முடியும்? மறுபடி ஆரம்பித்து விட்டாள்.
"உட்காருங்கள் செல்வம்... நன் ரொம்ப கலாட்டாப் பண்ணுவேன். எங்க கும்பல்லே எனக்கு கிளியோபாட்ரான்னு பட்டம். ரொம்ப வாய் துடுக்கு. அப்பா இல்லாத பொண்ணுன்னு அம்மா செல்லம். பதினெட்டாம் பெருக்கு, கோலாட்டம்னு எங்க குழு திமிலோகப்படும்.
'அதோ அவன் குண்டா இருக்கான். அவன் பக்கத்திலே போற ஈர்க்குச்சியை எடுத்து, அதோப் போற சோளத் தட்டை பக்கத்திலே வெச்சா சரிசமமா இருக்காது?' இப்படி யெல்லாம் ஜோடிகளை மானசீகமா பிரிச்சு, சேர்க்கறதிலே ஒரு ஆனந்தம்! அந்தப் பாவம்தான் எனக்கு ஜோடி சரியா அமையலியோ?"
"என்னம்மா... என்னம்மா இதெல்லாம்?" விக்கலெடுத்தது. தண்ணீர் கொடுத்தேன்.
"ஒரு தடவை ஊரிலேயிருந்து தூரத்து சொந்தம் வந்திருந்தாங்க. அதிலே ஒருத்தன் கொஞ்சம் வழிசல். ரொம்ப ஹிம்சையா யிருந்தது. இராத்திரி நான் படுக்கற இடம் வரை வந்து காலைச் சுரண்ட ஆரம்பிச்சான். ஒரு கிஸ்ஸாவது வேணுமாம்! 'ஐயோ அம்மா, தேளு, தேளு'ன்னு கத்தி... எல்லாரும் ஓடி வந்து... பாவம் திணறிப் போயிட்டான். அப்போ அவன் மூஞ்சி போனதைப் பார்க்கணுமே"! மலர்ந்த முகத்தில் வலி வந்தது தெரிந்தது.
நர்ஸ் வந்து ஊசி போட்டு விட்டுப் போனாள்.
"ஸிஸ்டர்... நீங்க பேசிட்டீங்களே இவரா, அவரான்னு தெரியலேன்னு... இவர்தான்"
"சாரி" ஸிஸ்டர் ஓடியே போய் விட்டாள்.
"என்ன விஷயம்?" எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
"நேத்து ஒரு வேடிக்கை செல்வம்... 'ஏம்மா செகப்ப ஓராளு வராரு! அவரும் கட்டிலாண்டை போயி ரொம்ப நேரம் பேசுராரு... அந்த கறத்தாளு வந்தாலும் கதவு மூடிக் கெடக்கு... அந்தம்மா புருசன் யாரு?" இப்படி ஆயா கேட்கிறா".
'இன்னா எளவோ ஆயா? பொது வார்டிலே சேர்த்தவன் புருஷன். கறத்தாளு ஸ்பெஷல் வார்டிலே சேர்த்தாரு! வைப்பாட்டனாயிருக்கும்' நர்ஸ் சொல்லிட்டு இடி இடின்னு சிரிச்சா... இந்த நர்ஸ் புதுசு. 'அவரை நான் பார்க்கணுமே'ன்னா... அதுதான் அறிமுகப் படலம் செய்து வைத்தேன்".
இடையில் ஆயா வந்து தன் வேலையை செய்து விட்டு ஒரு மாதிரி பார்த்துக் கொண்டு போனாள்.
"நான் எங்கே நிறுத்தினேன்... ஆ, மறுநாள் அவன் என்னைப் பழி வாங்கற மூடில் இருந்தான். எல்லாரும் தூங்கப் போனப்புறம் நான் நைசா எழுந்து எங்க மாமாவோட மாமியார், பாட்டியை என் ரூமிலே படுக்கச் சொன்னேன். அவங்க தூங்கற வரை முழிச்சிட்டிருந்தவ... தூங்கின பிறகு எழுந்து நைசா தாழ்வார இருட்டிலே போய் ஒண்டிக்கிட்டேன். நான் போட்ட கணக்கு தப்பலே!"
ப்ருந்தா எதையோ நினைத்துக் கொண்டு கொஞ்சம் சிரித்தாள். வெள்ளமே நிறுத்திக் கொள்ளட்டும் என்று அவளை விட்டு விட்டேன்.
"நல்ல தூக்கம். ரொம்ப நாழி முழிச்சிண்டிருந்தது அந்தக் கரடுமுரடு தரையிலே கூட அசத்திட்டது. பாட்டி 'கடன்காரா, இழவெடுத்தவனே... உன் முழியே சரியில்லை! தூணுக்குப் புடவை கட்டி இருந்தாக் கூட துளைச்சுப் பார்க்கற சென்மம்'னு கூப்பாடு போட்டுட்டிருந்தாள். பின்னே பாட்டியைக் கட்டிப் பிடிச்சா சும்மா விடுவாளா? ஏற்கனவே பாட்டிக்கு தான் பேரழகிங்கற எண்ணம்... மறுநாள் காலையில் அந்த கும்பல் இடத்தை காலி செய்து விட்டது. இப்போ அவனுக்கு ஆறு பெண்கள். பிள்ளையே இல்லே... ஃபங்க்ஷன்கள்லே பார்த்தா 'ஹி, ஹி'ம்பான்"!
ப்ருந்தாவுக்கு நிறைய வியர்த்தது.
"ஏன் ப்ருந்தா... காலன் வீட்டுக் கதவை தட்டித்தான் ஆகணுமா? இப்போ இந்தக் கதையெல்லாம் அவசியம் சொல்லித்தான் ஆகணுமா?"
"என் பேச்சு உங்களுக்கு போரடிக்க ஆரம்பிச்சாச்சா?"
இப்படியெல்லாம் கேட்டால் என்ன பதில் சொல்வது?
"உன் உடம்புக்காகத்தான்! அப்புறம் என்ன நடந்தது?" அசௌகரியமான மௌனத்தைக் கலைக்க விரும்பினேன். வெய்யிலில் உலர்த்திய வற்றலாக சுருங்கிய முகம் எண்ணெயில் பொரிந்த வற்றலாக பூரித்தது. மறுபடி தொடர்ந்தாள்.
"ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி. அதை கேட்டீங்க... நீங்க ரொம்ப ரசிப்பீங்க... எங்க குழுவிலே ஒருத்திக்கு கல்யாணம். பணக்காரின்னு அவளுக்கு கர்வம். மாப்பிள்ளையும் ரொம்ப அழகு... பணம்! கொஞ்சம் கலாட்டா பண்ணனுங்கறது எங்க குழுவிலே சிலரோட ஆசை.
சாந்தி முகூர்த்தத்துக்கு அலங்காரம் பண்ண ஆன செலவிலேயே என் கல்யாணத்தை நடித்தி முடித்திருப்பார்கள். கப்பல் மாதிரி அமைப்பு. வெல்வெட் மெத்தை, தலையணை... நாங்கள்லாம் போய் பார்த்தேம். எங்களுக்கெல்லாம் சரியான வரவேற்புமில்லே!
'கொல்லன் பட்டறைக்கு ஈக்கு என்ன வேலை'ன்னு ஒரு அம்மா முணுமுணுத்தாங்க. ஏக எரிச்சல்லே இருந்தோமா? நிறைய ஊவா முள்- தெரியலே... புது பூந்தொடப்பத்திலே இருக்குமே... பூவோடு கலந்து போட்டுட்டு வந்துட்டோ ம்!"
"அடப்பாவிகளா?" அந்தத் தம்பதிகளை நினைத்த போது பாவமாக இருந்தது. பூனை போல் இருக்கும் என் ப்ருந்தாவுக்கா இத்தனை குறும்பு? ஆச்சரியமாக இருந்தது.
மறுநாள் அவளைச் சூழ்ந்து கொண்டு "முதல் இரவு குத்தல் யாருக்கு ஜாஸ்தி உனக்கா, அவருக்கான்னு கேட்டோ ம்".
"என்ன சொன்னாள்?"
"ரொம்ப ஆவலோ? போர்வையை விரிச்சு கீழே படுத்துட்டாங்களாம்!"
இரண்டு பேருமே சிரித்தோம்.
"செல்வம்... நன் போட்ட ஒவ்வொரு ஊவா முள்ளும் விசுவரூபம் எடுத்து அவர் வாயிலிருந்து வருகிறது. வினை விதைத்தவள் அதன் அறுவடைக்கு பயந்தால் ஆகுமா? பிளான் போட்டுக் கொடுத்து செயலாக்கறது நான்தானே? இப்படி மனசைத் தேத்திண்டிருக்கிற சமயத்திலேதான் உங்களை சந்திச்சேன்.
அந்த நாளிலே எங்க பாட்டி காசிக்குப் போகணும்னு புலம்பிண்டிருப்பா. வயசான காலத்துலே அது ஒரு லட்சியம்; எல்லைக் கோடு. அங்கே முழுக்குப் போட கங்கை இல்லாட்டா... காசிக்கு ஏது பெருமை? கங்கை ஓடாட்டா எத்தனை பேர் போவா? சிவனும், சக்தியும் எல்லா இடத்துலேயும்தான் இருக்கா! காசிக்குப் போய்தான் தரிசனம் செய்யணுமா? இல்லே, அம்பாளும் ஸ்வாமியும் இருக்கிற இடத்திலே எல்லாம் கூட்டம் கட்டி ஏறுகிறதா?
என்கிட்டே திறமை இருந்திருக்கலாம். அதை வாய்ப்பு என்கிற மேடையிலே ஏத்தி பிரகாசிக்க வைத்தது பகீரதன் கங்கையைக் கொண்டு வந்த மாதிரின்னு..."
பேச முடியாமல் இருமல் வந்து விட்டது. "ப்ருந்தா, நீ அனாவசியமா கவலைப்படறே..."
"எனக்கு ஒரே ஒரு ஆசை செல்வம். அதை மட்டும் சொல்லிட்டு ஒரேடியா வாயை மூடிண்டுடறேன். பொதுவா இனி பிறவி வேண்டாம்னு கேட்கறவாதான் அதிகம். சிலர் ஈரேழு பிறவிக்கும் காதலராக இணைவோம் என்று வேண்டிப்பா! எனக்கு கண்டிப்பா அடுத்த ஒரெ ஒரு பிறவி வேணும். உங்களுக்காக காத்திண்டிருப்பேன். உங்க கடமையெல்லாம் முடிஞ்சு, ஆயுசு முடிஞ்சு வாங்க... நீங்க மறுபடி பிறந்தப்புறம்தான் நான் ஜனிக்கணும். உங்களையே கணவரா அடையணும். அம்மி மிதிச்சோ, மோதிரம் மாட்டிண்டோ ... நடக்குமா செல்வம்/ நடக்கணும். எனக்குனு ஆண்டவன்கிட்டே கேட்ட வரம் இது ஒண்ணுதான்.
அட, என்ன இது... எனக்கு தைரியம் சொல்லிட்டு நீங்க கோழையா! சே... நான் ரொம்ப குழப்பறேன் இல்லே. கண்ணைத் துடைங்க. மனசும், உடம்பும் உங்களுக்கே சொந்தமாகணும்னு நான் ஆசைப்பட்டதை வெளியே சொன்னது..."
டாக்டர் உள்ளே நுழைந்தார்.
"ப்ருந்தா... செல்வம் சார், ரொம்ப நேரமா பேசிட்டிருக்கீங்க போல இருக்கே! நாளை ஆபரேஷன் செய்யப் போற பேஷண்டுக்கு அது நல்லதில்லே... உங்க ஒத்துழைப்பு இருந்தாத்தான்..."
"எஸ் டாக்டர்" நான் வெளியே வந்து விட்டேன்.
ஆபரேஷன் முடிந்த ப்ருந்தா இரண்டு நாள் கழித்து ஒரு முறை கண்ணைத் திறந்து பார்த்தாள். இரவு நேரங்களில் ஏதோ புலம்பினதாக சொன்னார்கள். மயக்க நிலையில் இரண்டு வாரம் இருந்தாள். 'செல்வம், 'செல்வம்' என்று குழறினாள். அப்புறம் எல்லாம் முடிந்துவிட்டது.
எனக்காக அவள் அங்கு காத்திருப்பாள். இங்கு என் கடமை முடிய அந்திமக் காலத்தை எதிர்பார்த்து நான் காத்திருக்கிறேன். அவள் பகிர்ந்த விஷயங்களை நினைக்கிறேன்.
'அடேய், நீ பாலைவனத்தில் பயணம் செய்யப் போகிறாய்' என்பதை நினைவூட்டி உணவும் நீருமாக நிரப்பி விட்டாள். அவைகள்தான் இந்த ஒட்டகத்தை நடத்திச் செல்கின்றன.
(கங்கை முடிந்தது)
"அடப்பாவிகளா?" அந்தத் தம்பதிகளை நினைத்த போது பாவமாக இருந்தது. பூனை போல் இருக்கும் என் ப்ருந்தாவுக்கா இத்தனை குறும்பு? ஆச்சரியமாக இருந்தது.
மறுநாள் அவளைச் சூழ்ந்து கொண்டு "முதல் இரவு குத்தல் யாருக்கு ஜாஸ்தி உனக்கா, அவருக்கான்னு கேட்டோ ம்".
"என்ன சொன்னாள்?"
"ரொம்ப ஆவலோ? போர்வையை விரிச்சு கீழே படுத்துட்டாங்களாம்!"
இரண்டு பேருமே சிரித்தோம்.
"செல்வம்... நன் போட்ட ஒவ்வொரு ஊவா முள்ளும் விசுவரூபம் எடுத்து அவர் வாயிலிருந்து வருகிறது. வினை விதைத்தவள் அதன் அறுவடைக்கு பயந்தால் ஆகுமா? பிளான் போட்டுக் கொடுத்து செயலாக்கறது நான்தானே? இப்படி மனசைத் தேத்திண்டிருக்கிற சமயத்திலேதான் உங்களை சந்திச்சேன்.
அந்த நாளிலே எங்க பாட்டி காசிக்குப் போகணும்னு புலம்பிண்டிருப்பா. வயசான காலத்துலே அது ஒரு லட்சியம்; எல்லைக் கோடு. அங்கே முழுக்குப் போட கங்கை இல்லாட்டா... காசிக்கு ஏது பெருமை? கங்கை ஓடாட்டா எத்தனை பேர் போவா? சிவனும், சக்தியும் எல்லா இடத்துலேயும்தான் இருக்கா! காசிக்குப் போய்தான் தரிசனம் செய்யணுமா? இல்லே, அம்பாளும் ஸ்வாமியும் இருக்கிற இடத்திலே எல்லாம் கூட்டம் கட்டி ஏறுகிறதா?
என்கிட்டே திறமை இருந்திருக்கலாம். அதை வாய்ப்பு என்கிற மேடையிலே ஏத்தி பிரகாசிக்க வைத்தது பகீரதன் கங்கையைக் கொண்டு வந்த மாதிரின்னு..."
பேச முடியாமல் இருமல் வந்து விட்டது. "ப்ருந்தா, நீ அனாவசியமா கவலைப்படறே..."
"எனக்கு ஒரே ஒரு ஆசை செல்வம். அதை மட்டும் சொல்லிட்டு ஒரேடியா வாயை மூடிண்டுடறேன். பொதுவா இனி பிறவி வேண்டாம்னு கேட்கறவாதான் அதிகம். சிலர் ஈரேழு பிறவிக்கும் காதலராக இணைவோம் என்று வேண்டிப்பா! எனக்கு கண்டிப்பா அடுத்த ஒரெ ஒரு பிறவி வேணும். உங்களுக்காக காத்திண்டிருப்பேன். உங்க கடமையெல்லாம் முடிஞ்சு, ஆயுசு முடிஞ்சு வாங்க... நீங்க மறுபடி பிறந்தப்புறம்தான் நான் ஜனிக்கணும். உங்களையே கணவரா அடையணும். அம்மி மிதிச்சோ, மோதிரம் மாட்டிண்டோ ... நடக்குமா செல்வம்/ நடக்கணும். எனக்குனு ஆண்டவன்கிட்டே கேட்ட வரம் இது ஒண்ணுதான்.
அட, என்ன இது... எனக்கு தைரியம் சொல்லிட்டு நீங்க கோழையா! சே... நான் ரொம்ப குழப்பறேன் இல்லே. கண்ணைத் துடைங்க. மனசும், உடம்பும் உங்களுக்கே சொந்தமாகணும்னு நான் ஆசைப்பட்டதை வெளியே சொன்னது..."
டாக்டர் உள்ளே நுழைந்தார்.
"ப்ருந்தா... செல்வம் சார், ரொம்ப நேரமா பேசிட்டிருக்கீங்க போல இருக்கே! நாளை ஆபரேஷன் செய்யப் போற பேஷண்டுக்கு அது நல்லதில்லே... உங்க ஒத்துழைப்பு இருந்தாத்தான்..."
"எஸ் டாக்டர்" நான் வெளியே வந்து விட்டேன்.
ஆபரேஷன் முடிந்த ப்ருந்தா இரண்டு நாள் கழித்து ஒரு முறை கண்ணைத் திறந்து பார்த்தாள். இரவு நேரங்களில் ஏதோ புலம்பினதாக சொன்னார்கள். மயக்க நிலையில் இரண்டு வாரம் இருந்தாள். 'செல்வம், 'செல்வம்' என்று குழறினாள். அப்புறம் எல்லாம் முடிந்துவிட்டது.
எனக்காக அவள் அங்கு காத்திருப்பாள். இங்கு என் கடமை முடிய அந்திமக் காலத்தை எதிர்பார்த்து நான் காத்திருக்கிறேன். அவள் பகிர்ந்த விஷயங்களை நினைக்கிறேன்.
'அடேய், நீ பாலைவனத்தில் பயணம் செய்யப் போகிறாய்' என்பதை நினைவூட்டி உணவும் நீருமாக நிரப்பி விட்டாள். அவைகள்தான் இந்த ஒட்டகத்தை நடத்திச் செல்கின்றன.
(கங்கை முடிந்தது)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- shiviபுதியவர்
- பதிவுகள் : 30
இணைந்தது : 03/02/2019
கதை அருமை. நடை அழகு.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|