புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_c10 
47 Posts - 50%
heezulia
வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_c10 
38 Posts - 40%
T.N.Balasubramanian
வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_c10 
1 Post - 1%
Guna.D
வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_c10 
240 Posts - 49%
ayyasamy ram
வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_c10 
12 Posts - 2%
prajai
வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_c10 
9 Posts - 2%
Jenila
வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_c10 
4 Posts - 1%
jairam
வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_c10வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_m10வசூலுக்குக் கூடவா? - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசூலுக்குக் கூடவா?


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Apr 18, 2011 10:19 pm

First topic message reminder :


யாரும் விரும்பி அழைக்காமலே எல்லோர் வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும்
அடிக்கடி வந்துவிடுகிறார் அமைச்சர் ஆற்காடு வீராசாமி. விரும்புவது
விரும்பாதது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், அவரது வருகையை எரிச்சலோடும்
அருவருப்போடும்தான் எல்லோரும் எதிர்கொள்கிறார்கள். அவர் உள்ளே வந்தால்
வீடுகளில் உள்ளவர்கள் வெளியே மரத்தடிக்கு வந்து விடுகிறார்கள். ஏறத்தாழ
புழுக்கத்தின் குறியீடாகவே மாறிப் போய்விட்டார். ஆனால் இவற்றில்
எதனையும் அவர் பொருட் படுத்துவதாகவோ, இல்லை கவலைப் படுவதாகவோ
தெரியவில்லை.

இவ்வளவு எதிர்ப்பலை வீசுகிறது. இது குறித்து அக்கறையே இல்லையா என்றால்
“அடப் போங்கப்பா, எனக்கு சீட்டே இல்லை. நீங்க என்னமோ கரண்ட் இல்லாதத
பெரிசாப் பேச வந்துட்டீங்க” என்றும் அவர் சொல்லக் கூடும். அவரது கட்சி தோற்கிற
பட்சத்தில் அதற்கான காரணங்களுள் ஸ்பெக்ட்ராமிற்குப் பிறகு
இவராகத்தானிருப்பார். இதை இவர் மறுக்க மாட்டார் என்பதை விட அவரே ஒரு முறை
ஒருக்கால் தனது கட்சி தோற்றுப் போனால் அதற்குத் தானும் தனது துறையும்தான்
காரணமென்று பேசியிருக்கிறார். அந்தப் பெருமையில் பெரும் பகுதியை ராஜா
அள்ளிக் கொண்டு போய்விட்டார் என்பது வேறு விஷயம்.

அன்று காலையும் யாரும் அழைக்காமலே எங்கள் ஊருக்கு வந்துவிட்டார். அந்த
நேரம் பார்த்து கிஷோர் அவனது துணிகளைத் தேய்த்துக்
கொண்டிருந்தான். ஏகத்துக்கும் கடுப்பானப் பிள்ளை திட்டித்
தீர்த்துவிட்டான்.

இனி சுத்தி வளைத்துப் பேசுவதில் பயனில்லை. என்னைப் பொருத்தவரை ஆற்க்காடு
வீராசாமி வேறு மின் தடை வேறு என்று கொள்வதற்கு வாய்ப்பே இல்லை. இதை
ஆற்காடு வீராசாமி அவர்களே மறுக்க மாட்டார்.

வழக்கமாக எரிச்சலையும் கோபத்தையும் அறுவறுப்பையுமே ஏற்படுத்தும் அவரது
வருகை அன்று ஒரு நல்ல விளைவியும் தந்தது.

“இவனுங்க உறுப்படவே மாட்டானுங்க. எப்ப உடுவானுங்க எப்ப
நிறுத்துவானுங்கன்னே தெரியல,” என்று கொதிக்கத் தொடங்கியவன் “ஆனா ஆயிரம்,
ஆயிரத்தி ஐனூறுன்னு பில்ல மட்டும் தீட்டிப் புடறானுங்க” என்று சத்தமாய்த்
தொடரவே விக்டோரியாவிற்குப் பொறித் தட்டி விட்டது.

"ஏண்டா தம்பி, இன்னிக்கு கடைசி நாளுடா. கொஞ்சம் கோவிச்சுக்காமப் போயி
கரண்டு பில்ல கட்டிட்டு வந்துடுடா”

ஆஹா! ஆர்காடு வீராசாமி (மின் தடை) மட்டும் வராது போயிருந்தால் இன்று
கடைசி நாள் என்பது மறந்து போயிருக்கும். உடனே கட்டயப் புடுங்கிட்டுப்
போயிருப்பாங்க. அந்த வகையில எங்க வீட்டுக் கட்டயக் காப்பாத்துனது ஆற்காடு
வீராசாமி (மின் தடை) தான்.

“ போம்மா, இன்னைக்கு மேச் இருக்கு. அப்பாவ கட்டச் சொல்லு.”

“ அப்பாவுக்கு பள்ளிக்கூடம்டா. பில்லு கட்டுறதுக்காக லீவு போட சொல்றதாடா?”

“எதுக்கும்மா லீவு?. அதான் பள்ளிக்கூடத்துக்குப் போறாங்கள்ள. இப்பத்தான்
எந்த வகுப்பும் இல்லையே. இடையில போயி கட்டச் சொல்லும்மா.”

“ ஏண்டா, கிறுக்காடா நீ?. பெரம்பலூரு பில்ல சமயபுரத்துல எப்படிடா கட்ட
முடியும், கட்டையில போறவனே?”

“அதெல்லாம் நாம வாங்குறப்பதான் சரியா அந்தந்த ஊருக்கு அலஞ்சு வாங்கனும்.
கட்டுறதுன்னா தமிழ் நாட்டுல எங்க வேனாலும் கட்டலாம். வசூல்
மன்னனுங்கம்மா,” என்று சொல்லிக்கொண்டே போய்விட்டான்.

அப்புறமென்ன? கட்டணம் கட்ட வேண்டிய பொறுப்பு நம் தலையில். சரி என்று,
மறக்காமல் நம்பரைக் குறித்தெடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

இவ்வளவு ஆன் லைன் வசதி வந்த பிறகும் எந்தக் காவல் நிலையத்தில்
வேண்டுமானாலும் புகாரைப் பதியலாம் என்றாகவில்லை. நாட்டில் எந்த ஊரில்
வேண்டுமானாலும் உரிய ஆவணங்களைக் காட்டி ஏதேனும் சான்றிதிழ்களை வாங்கலாம்
என்ற நிலை வரவில்லை. ஆனால் அரசுக்கு கட்டவேண்டிய பணத்தை மட்டும் தமிழ்
நாட்டில் எங்கு வேண்டுமானாலும் கட்டலாம்.

ஏறத்தாழ எல்லா வகுப்புகளுக்கும் தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளியில்
அவ்வளவாய் வேலையுமில்லை.எனவே சுந்தரமூர்த்தியை அழைத்துக் கொண்டு மின்சார
வாரிய அலுவலகத்திற்கு சென்றேன். ஒரே கூட்டம். வரிசை இருக்கிற நிலையைப்
பார்த்தால் மூன்று மணிக்கும் மேலாகும் போல இருந்தது. என்ன செய்வது என்று
குழம்பிக் கிடந்தபோது “ ஏறுங்க சார், பேசாமப் போய் போஸ்ட் ஆபீஸ்ல
கட்டிட்டுப் போயிடலாம்.” என்கிறார் சுந்தரமூர்த்தி.

தமிழ் நாட்டில் உள்ள எல்லா மின்சார அலுவலகங்களிலும் கட்டணம் கட்டலாம்
என்பதே அன்றுவரை எனக்குத் தெரியாத நிலையில் இது நம்பவே முடியாத
ஆச்சரியத்திற்குரிய செய்தியாயிருந்தது. அது குறித்துக் அவரிடமே கேட்டேன்.

“ கட்டலாம் சார். சேவைக் கட்டணமாக ஐந்து ரூபாய் மட்டும் சேர்த்துக் கட்ட
வேண்டும்.” அவ்வளவுதான் என்பதுமாதிரியாகப் பேசினார். அப்படியே அதிர்ந்து
போனேன். மாநில அரசின் கஜானாவை நிரப்புவதற்காக மத்திய அரசு
அலுவலகங்களில் வசூலா?, என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போதே தபால்
நிலையம் வந்து சேர்ந்திருந்தோம். இங்கும் ஒரே கூட்டம். அவரது மனைவி
பக்கத்து தபால் நிலையத்தில் அதிகாரியாக வேலை பார்ப்பதால் இங்குள்ள
அலுவலர் பணத்தையும் எண்ணையும் பெற்றுக் கொண்டு கூட்டம் குறைகிறபோது
ரசீதினைப் போட்டு வைப்பதாக சொன்னார். சரி என்று நன்றி சொல்லித்
திரும்பினோம்.

மின்சாரக் கட்டணத்தை தபால்அலுவலகத்தில் கட்ட வேண்டிய நிலை ஏன் வந்தது?

இதற்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும். ஆள் பற்றாக் குறை. எனில் , தபால்
நிலையங்களில் போதுமான அளவு ஆள் இருக்கிறார்களா?

அவர்கள் பணியோடு கூடுதலாக, மாநில அரசுக்கான வேலையை மத்திய அரசு ஊழியர்கள்
பார்க்கிறார்களே, குறைந்த பட்சம் கூடுதலாக வசூலிக்கப் படுகிற சேவைக்
கட்டணத்திலிருந்து ஏதேனும் அவர்களுக்கு வழங்கப் படுகிறதா?

விசாரித்த வகையில் அப்படி எதுவுமில்லை.

எல்லா ஊர்களிலும்தான் புதுப் படத்திற்கு டிக்கெட் வாங்க அலைவது போல்
கட்டணத்தைக் கட்டுவதற்கு இத்தனைக் கூட்டம் அலைமோதுகிறதே!

சேவைக்குத்தான் ஆள் எடுக்க மாட்டீர்கள். வசூலுக்குக் கூடவா?



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

வசூலுக்குக் கூடவா? - Page 4 38691590

இரா.எட்வின்

வசூலுக்குக் கூடவா? - Page 4 9892-41

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue Apr 19, 2011 12:28 am

balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:இந்த காலத்து பிள்ளைக கிட்ட பேசி ஜெயிக்க முடியாது சாமியோவ் நான் நாளை பார்க்கிறேனப்பா...... ஒத்துக்கிறேன் கோல்டை விட ப்ளாட்டினம் தான் காஸ்ட்லின்னு அக்காக்கு வாங்கி தாப்பா பாலா.... நான் இப்ப சமைக்க போறேன் நாளை பார்ப்போம் எல்லோருக்கும் நல்லிரவு நற்கனவு....

டப்பு கொஞ்சம் கொறையுது அதை என் அக்கவுண்டுல போட்டிங்கனா கண்டிப்பா வாங்கிதறேப்ன்

ஆமா, என்ன கேட்டீங்க?



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

வசூலுக்குக் கூடவா? - Page 4 38691590

இரா.எட்வின்

வசூலுக்குக் கூடவா? - Page 4 9892-41

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக