புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத்து கவிதை - பாரதத் தாய் வேண்டுமெனில் மன்னிக்கட்டும், - Page 2 Poll_c10ஈழத்து கவிதை - பாரதத் தாய் வேண்டுமெனில் மன்னிக்கட்டும், - Page 2 Poll_m10ஈழத்து கவிதை - பாரதத் தாய் வேண்டுமெனில் மன்னிக்கட்டும், - Page 2 Poll_c10 
64 Posts - 50%
heezulia
ஈழத்து கவிதை - பாரதத் தாய் வேண்டுமெனில் மன்னிக்கட்டும், - Page 2 Poll_c10ஈழத்து கவிதை - பாரதத் தாய் வேண்டுமெனில் மன்னிக்கட்டும், - Page 2 Poll_m10ஈழத்து கவிதை - பாரதத் தாய் வேண்டுமெனில் மன்னிக்கட்டும், - Page 2 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ஈழத்து கவிதை - பாரதத் தாய் வேண்டுமெனில் மன்னிக்கட்டும், - Page 2 Poll_c10ஈழத்து கவிதை - பாரதத் தாய் வேண்டுமெனில் மன்னிக்கட்டும், - Page 2 Poll_m10ஈழத்து கவிதை - பாரதத் தாய் வேண்டுமெனில் மன்னிக்கட்டும், - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஈழத்து கவிதை - பாரதத் தாய் வேண்டுமெனில் மன்னிக்கட்டும், - Page 2 Poll_c10ஈழத்து கவிதை - பாரதத் தாய் வேண்டுமெனில் மன்னிக்கட்டும், - Page 2 Poll_m10ஈழத்து கவிதை - பாரதத் தாய் வேண்டுமெனில் மன்னிக்கட்டும், - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஈழத்து கவிதை - பாரதத் தாய் வேண்டுமெனில் மன்னிக்கட்டும், - Page 2 Poll_c10ஈழத்து கவிதை - பாரதத் தாய் வேண்டுமெனில் மன்னிக்கட்டும், - Page 2 Poll_m10ஈழத்து கவிதை - பாரதத் தாய் வேண்டுமெனில் மன்னிக்கட்டும், - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஈழத்து கவிதை - பாரதத் தாய் வேண்டுமெனில் மன்னிக்கட்டும், - Page 2 Poll_c10ஈழத்து கவிதை - பாரதத் தாய் வேண்டுமெனில் மன்னிக்கட்டும், - Page 2 Poll_m10ஈழத்து கவிதை - பாரதத் தாய் வேண்டுமெனில் மன்னிக்கட்டும், - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஈழத்து கவிதை - பாரதத் தாய் வேண்டுமெனில் மன்னிக்கட்டும், - Page 2 Poll_c10ஈழத்து கவிதை - பாரதத் தாய் வேண்டுமெனில் மன்னிக்கட்டும், - Page 2 Poll_m10ஈழத்து கவிதை - பாரதத் தாய் வேண்டுமெனில் மன்னிக்கட்டும், - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத்து கவிதை - பாரதத் தாய் வேண்டுமெனில் மன்னிக்கட்டும், - Page 2 Poll_c10ஈழத்து கவிதை - பாரதத் தாய் வேண்டுமெனில் மன்னிக்கட்டும், - Page 2 Poll_m10ஈழத்து கவிதை - பாரதத் தாய் வேண்டுமெனில் மன்னிக்கட்டும், - Page 2 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்து கவிதை - பாரதத் தாய் வேண்டுமெனில் மன்னிக்கட்டும்,


   
   

Page 2 of 2 Previous  1, 2

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Sep 07, 2009 3:31 am

First topic message reminder :

நம் சகோதரி நந்திதா போன்றோரின்..

விடியலின் காத்திருப்பிற்கு இக்கவிதை சமர்ப்பணம்!

பாரதத் தாய் வேண்டுமெனில் மன்னிக்கட்டும்,


எரிகின்ற நெருப்பிற்கு - இனி
ஈழமென்று பெயர் வைப்போம்;

விழுகின்ற பிணத்திற்கு - இனி
தமிழனென்று பச்சை குத்துவோம்;

வெடிக்கின்ற குண்டுகளையெல்லாம் - இனி
தமிழ் ரத்தத்தில் அடையாளம் காண்போம்;

காமவெறி பிடித்தால் தமிழென்று சொல்லி
குழந்தைகளை கற்பழிக்கிறார்களாம் -
குறிப்பெடுத்துக் கவிதையாக்கி புத்தகத்தில் அச்சிடுவோம்;

எங்கோ தன் இனம் அழியும் சேதி கெட்டு
கருகுகிறார்கள் முத்துக் குமாரர்கள் - பைத்தியக்
காரர்களெனப் பட்டம் தருவோம்;

கர்பத்தில் சிசுவை கொன்றாலோ, அக்காத்
தங்கைகளை கொன்று - உருப்பருத்தாலோ,
மாணவச் செல்வங்களை குவித்து தீக்கிரையாக்கினாலோ,
தின்ன உணவின்றி இறந்தவர்களின் - மரணவாடை
மூக்கை துளைத்தாலோ -

'ஐயோ அது எங்கள் நாடல்ல' யென
தைரியமாய் ஒதுங்கிக் கொள்வோம்;

பத்திரிகைகளோ பன்னாட்டுச் செய்தி நிறுவனமோ
வந்து 'அழிகின்ற தேசமெனக் கேட்டால் -
'அதோ - அது - இலங்கை' யென வெட்கமின்றி கைகாட்டுவோம்;

சிங்களனுக்கு ஒருவேளை கோபம் - வரும்
மீண்டும் அடிப்பான்; அடிக்கட்டும் ஈழத்தை

நாம் தான் இந்தியராயிற்றே; நின்று
வேடிக்கை பாப்போம், வேண்டுமெனில் -

இறந்தவர்களுக்கெல்லாம் ஒருநிமிட
அஞ்சலி செலுத்திவிடுவோம், நாளை -

பாரதத் தாய் ஒருவேளை நம்மை மன்னித்துவிடலாம்;
இந்திய அரசு இனி வரும் 'தேர்தலை முன்னிட்டு -
ஈழத்திற்கு இந்தியா ஆதரவென கட்டளை பிறப்பிக்கலாம்;

அதுவரை, இறந்திருக்கும் ஆயிரமாயிரம் தமிழர்களின்
உயிர்களுக்கு - என்ன நீதி கிடைத்துவிடும்?

முல்வேளிகளுக்குப் பின்னே -
அனாதையாய் நின்றிருக்கும் குழந்தைகளுக்கு
யாரினி அம்மாப்பா ஆவார்கள்?

கைமுடமும் கால்முடமுமாய் சாவையாவது
கெஞ்சிக் கேட்டு அழுதுக் கொண்டிருக்கும்
தமிழர்களுக்கு நம் எத்தனை பேரால் 'என்ன' ஆதரவை தந்திடமுடியும்?

கண்ணீர் எழுதுகோலில் கசிந்து பயனில்லை
இதயங்களில் கசியட்டும்!!
-----------------------------------------
வித்யாசாகர்


avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Sep 07, 2009 9:03 am

வண்க்கம்
ஆம் இது மாதிரிக் கவிதைகள் தான் இப்போது வேண்டும். மூட்டை தூக்கக் கூட லாயக்கில்லாதவர்கள் எல்லாம் மந்திரிகளாக வலம் வரும்போது மந்திரியாக இருந்த பொழுது தன் ரொட்டிக்காக மூட்டை தூக்கும் தொழில் புரிந்தான் சே குவரா. அந்த சே குவாரா உங்கள் பேனா முனையின் வழியே பிறப்பெடுக்க வேண்டும்
வளர்க நும் பணி வாழ்த்துக்கள். உங்களுகெல்லாம் பிடிக்காவிட்டாலும் கூட ஒன்று உணர்த்துவேன். தமிழ் படிக்கும் காலை என் மனம் இல்லற வாழ்க்கையில் பிடிப்பற்றுப்போய் விட்டது. ஈழத்தில் மனிதர்கள் செத்த்க் கொண்டிருக்கும் போது இந்தியா ஒத்துப் பாடிக் கொண்டிருந்தது. வெளி உலகுக்குத் தெரியாத இனப் படுகொலை ஆரம்பித்து பல வருடங்கள் ஆகி விட்டன். எனக்குத் தமிழ் கொடுத்த ஆசிரியர் உணர்ச்சிகரமாய் போதிக்க வல்லவர்.முது நிலைப் பண்டிதர் அவர். கலிங்கத்துப் பரணி படிக்கும் போது காளி கூளிக்காகக் கூறியதாக ஒருபாடல் வரும்
பொருதடக்கை வாளெங்கே மணிமார்பெங்கே
போர் முகத்தில் எவர் வரினும் புறம் கொடாத
பருவயிரத் தோளெங்கே எங்கே என்று
பயிரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின்"
இந்தப் பாட்டை அவர் நடத்திக் கொண்டிருந்த காலை உடனே எழுந்து ஐயா! எம் மக்கள் இதே பாடலைத் தான் பாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லி விட்டேன்.நட்டந்து முடிந்த கதை வேண்டாம் நடக்கின்ற கொடுமை பற்றிக் கூறுங்கள் என்றேன். அன்றைய வகுப்பு அன்றோடு முடிந்தது. அடுத்த நாள் செம்புலப் பெயல் நீர் போல்வார் எழுதிய யாயும் யாயும் யாராகியரோ என்ற பாடலைத் தொடர்ந்தார். நேற்றைய பாடலின் தாக்கம் மனம் விட்டு அகலாத நிலையில் இருந்தேன். செம்மண் நிலத்தில் பெய்த மழை நீரைப் பற்றி இலக்கிய வளத்துடன் நடத்திக் கொண்டிருந்தார். என் மனம் ஈழத்தில் இருந்தது. காதல் பாட்டில் மனம் செல்லவில்லை, எழுந்து ஐயா இந்தப் பாடலில் வேறு ஒரு பொருளைக் காண்கிறேன்.
தலைவியும் தலைவனும் செம்புலப் பெயல் நீர் போல தாம் உள்ளம் கலந்தாலும் வேகம் கொண்டு ஓடும் அந்நீர்ப் பெருக்கு ஓரிடத்தில் தேங்க வேண்டி வரும்,தலைவியும் தலைவனும் இல்லறம் தொடங்குவது போல. அங்கு காதலின் வேகம் தணியும். (WARRANTY PERIOD)முடிந்தவுடன் நீர் தெளிந்து விடும் அப்பொழுது செம்மண்ணும் நீரும் தனித் தனியாகப் பிரிந்து விடும். தண்ணீர் மேலெழுந்து விடும். உடன் போக்குத் துறையில் ஏற்பட்ட களங்கம் தானே தொல்காப்பியனை (பொய்யும் வழுவும் புகுந்த காலை ஐயர் யாத்த கரணம் என்ப) என்ற சூத்திரத்தை எழுத வைத்தது என்றேன். வகுப்பு மரண அமைதி காத்தது. அன்றிலிருந்து காதல் எனக்குக் கசந்தது. இல்வாழ்க்கை ஆசை அன்றே இறந்து பட்டது, ஏதாவது நம் மக்களுக்குச் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் எழுந்தது. செய்து கொண்டு வருகிறேன். இப்பொழுது இளவல் வித்யாசாகர் வந்து விட்டார் உதவிக்கு . நன்றி பல. சிரம் தாழ்த்தி கரம் கூப்பி உங்கள் கவிதைகளை வர்வேற்கிறேன். வாழ்த்துகிறேன்
அன்புடன்
நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Sep 07, 2009 9:39 am

வணக்கம்
சிறு தவறு நேர்ந்து விட்டது
காளி கூளிக்காக என்பதை காளி கூளியிடம் என்றும் நட்டந்து என்பதை நடந்து என்றும் திருத்திப் படித்துக் கொள்ள வேண்டுகிறேன். அதிக நேரம் இரவில் கண் விழித்து எழுதுவதால் கண் பார்வைக் கோளாறு ஏற்படுகிறது, மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 08, 2009 4:30 am

வணக்கம்மா,

நிறைய எழுதுறிங்க, நிறைய படிக்கிறீங்க போல,

எங்களுக்காக சற்று உடம்பையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

பார்வையில் தடுமாற்றம் வருவாதாகவும், கழுத்தில் புண் என்றும் கூறினீர்கள், எங்களுக்கு வலிக்கிறது.

எனக்காக கூற வந்தா களிகத்துபரணி இன்று சக்கை போடு போட்டுள்ளது..

தங்கத்தை நெருப்பில் போட்டாலும் மின்னுமென, உங்களை பற்றி நம் ஈகரை குடும்பம் நன்றாக தெரிந்து வைத்துள்ளது..

கடவுள் உங்களுக்குத் துணை இருக்கட்டும்!

_ அன்பு சகோதரன்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Sep 08, 2009 10:24 am

வண்க்கம்
அன்புக்கு நன்றி. எனக்குக் கழுத்தில் புண் இல்லை. ஒரு சிறு தவறு செய்துவிட்டேன். படிப்பிலும் எழுத்திலும் அதிக நேரம் (சுமார் 18 மணி நேரம்) செலவழிப்பதால் நேர்ந்துவிட்ட தவறு அது. என் மூளையில் ஏற்பட்ட தவற்றினைச் சுட்டுமுகத்தான் கழுத்துக்குமேல் புண் என்று எழுதி இருந்தேன். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று முழங்கியவர்கள் சம்பாதித்த சொத்துக்களைச் சொந்தத்துக்கு எழுதி வைத்ததைத் தவிர தமிழர்க்கு என்று என்ன செய்தார்கள் என்ற கேளவி என் இதயத்தைப்பிளக்கிறது. அன்பு இளவல் வித்யாசாகர் போன்றவர்கள் நாட்டு நிலைமையை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதத்தில் தன் பேனாவை இயக்க வேண்டும். காரணம் நீங்கள் எல்லோரும் சொல்லேர் உழவர்கள். காதலைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் ஏராளமான கவிதைகள் இருக்கின்றன. அவைகளில் கவனம் செலுத்தும் நேரத்தைக் குறைத்து முதுகெலும்பு உடைந்து முள் வேலிக்குள் அடைந்து கிடக்கும் எம்மவர்கள் பற்றி ஆயிரம் ஆயிரம் வரிகள் புறப்படட்டும். துப்பாக்கிக் குண்டு ஒரு மார்பைத்தான் துளைக்கும். பேனாவிலிருந்து கசியும் ஒவ்வொரு எழுத்தும் ஆயிரம் ஆயிரம் இளைஞர்களை வீறு கொண்டு எழச் செய்யும், அது தான் இப்போதைய தேவை.

தீக்குளித்து மாள்வதில் எனக்கு உடன்பாடில்லலை,ஆயினும் அவர்கள் தியாகம் பெரிது. உயிர் ஒப்பற்றது. அந்த உயிர் என்ற சொல்லைப் பிரித்துப் பார்த்தால் உய்+ இர் என்றுபிரியும். உய் என்பதற்கு வாழ்வின் உயர் நிலை அடை என்றும் இர் என்ற வேர்ச்சொல்லுக்கு பரவுதல் என்றும் பொருள். திரிந்து பிச்சை எடுத்தலுக்கு இரத்தல் என்ற சொல்லாகவும், உடலில் சிறைப் பட்டுக் கிடந்த சீவன் வெளிப்பட்டுப் பரந்து விரிதலை இறத்தல் என்ற சொல்லாகவும் விரிவு பெறும். இறகு சிறகு என்ற சொற்களும் இவ்வாறே பிறந்தன. உயிர் இருக்கும் வரை எளியோருக்கு உதவ வேண்டும் என்பதே என் கருத்து.

தீக்குளித்து உயிர் துறப்பவர்களுக்கு ஒரு நாள் ஒப்பாரி வைத்து மறந்து விடும் இவ்வுலகு. நன்றாகச் சொன்னார் திருமூலர்.

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை மாற்றிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே.

நமக்காக எரியிடை புகுந்த எம் இளைஞர்களைக் குறித்துப்பாடுங்கள். நெருப்பிடை உயிரோடு பொசுங்கிக் கொண்டிருகும் எம்மவர்கள் படும் இன்னல்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவாருங்கள்.

புலம் பெயர்ந்து வாழும் தமிழ்ப் புதல்வர்களைக் குறித்துத் தான் கணியன் பூங்குன்றன் பாடினார் என்றே எண்ணுகிறேன். வந்தாரை வாழ்விக்கும் தமிழினமே, நீ ஒரு நாள் சொந்த மண்ணை விட்டுத் துரத்தப் படுவாய். அன்று உனக்கு யாதும் ஊராகும்,அங்குள்ள அனைவரும் உனக்கு உறவினர்கள் என்று வாழ் என்று அன்றே கூறினார். நன்றும் தீதும் பிறர் தர வாரா என்று பாடியது நீ யாரைத்தொப்புள் கொடி உறவுகள் என்று நினைக்கிறாயோ அவர்கள் அற்ற குளத்து அறு நீர்ப் பறவைகளானது மட்டுமின்றி துன்பம் வந்துற்ற போது துரோகம் செய்ததையும் குறித்துத் தான் என்பது காலம் நமக்கு உணர்த்திய பாடம்

நம்மிடம் நிதிக்குவை இல்லை. வாய்ச் சொல்லாவது அருள வேண்டாமா.
அன்புடன்
நந்திதா

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 09, 2009 6:35 pm

ஒரு தேசத்தை விட்டு வரும் வலி தன் தாயை பிரிவதான சோக வலி.

திரும்பி வருகையில் தேசமே தன் பெயரை மாற்றி சொல்லிக் கொள்ளுமோ என்று பயப்படும் அளவிற்கு தமிழர்களை தொலைத்து எஞ்சியுள்ளவர்களையும் முட்கம்பிகளுக்குப் பின்னே அடைத்துள்ளதென்பது, அடையாள படுத்தப்பட முடியாத கதறல் தான் சகோதரி..

கவலையை நம்பிக்கையில் துறப்போம்; ரத்தம் கொடுத்த பூமியில் இரத்தம் உறைந்தால் காய்ந்து விடுகிறது தான் ஆனால், ஈழத்தமிழரின் இரத்தம் மட்டும் மீண்டும் மீண்டும் பிறக்குமேயன்றி இறந்த கணக்கிலாகாதென்றே நம்புவோம்..


ஒன்று சொன்னால் நம்புவீர்களா நம் விடியலின் தூரம் நமக்கு வெகு தூரத்திலில்லை, இருந்தும் வருத்தம் தான், காரணம் -

விடியல் கையில் வந்தமர்கையில் நம்மோடு சேர்ந்து சிரிக்க நம் அண்ணனோ தம்பியோ, அக்காவோ தங்கயோ, அம்மாவோ அப்பவோ, மகனோ மனைவியோ, அல்லது ஒரு நல்ல நண்பனோ.. தன் கண்ணீரில் மட்டும் சொட்டிக் கொண்டிருக்கலாம்..,

பின்பும் விடியலின் வாசத்தில் அவர்களின் ஆத்மா சாந்தியடயுமென நம்புவோமாக..


avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Sep 09, 2009 7:54 pm

வணக்கம்
இல்லை அந்த ஆத்மாக்கள் சாந்தி அடையக்கூடாது. அதே வேகத்துடன் மீண்டும் வந்து பிறக்க வேண்டும். பிறக்கும் தமிழீழத்தைப் பேணிக் காக்க அந்தப் புண்பட்ட ஆத்மாக்களால் தான் முடியும்
இராமாயணத்தில் ஒரு காட்சி
வாலி வதம் முடிந்து விட்டது. சுக்ரீவன் தன்னிருப்பிடம் சேர்ந்து விட்டான். அனுமனோ ராமனுடனே தங்க அனுமதிக்க வேண்டுகிறான்

பொய்த்தல் இல் உள்ளத்து அன்பு பொழிகின்ற புணர்ச்சியானும்
இத்தலை இருந்து நாயேன் ஏயின எனக்குத் தக்க
கைத் தொழில் செய்வென் என்று கழல் இணை வணங்கும் காலை
மெய்த் தலை நின்ற வீரன் இவ்வுரை விளம்பி விட்டான்

ராமன் அனுமனைக்கிட்கிந்தைக்குச் செல்லுமாறு பணித்தல்

நிரம்பினான் ஒருவன் காத்த நிறை அரசு இறுதி நின்ற
வரம்பு இலாததனை மற்று ஓர் தலை மகன் வலிதின் கொண்டால்
அரும்புவ நலனும் தீங்கும் ஆகலின் ஐய! நின்போல்
பெரும் பொறை அறிவினோரால் நிலையினைப் பெறுவது அம்மா!

ஆன்றவர்க்கு உரியது ஆய அரசினை நிறுவி அப்பால்
ஏன்று எனக்கு உரியது ஆய கருமமும் இயற்றற்கு ஒத்த
சான்றவர் நின்னின் இல்லை! ஆதலால் தருமம் தானே
போன்ற நீ யானே வேண்ட அத் தலை போதி என்றான்

போராடிப் பெற்ற ச்தந்திரத்தைப் பேணிக்காக்க போராட்ட குணமுள்ளவர்களால் தான் முடியும். இந்தியா சத்தியாக்கிரகத்தால்தான் சுதந்திரம் பெற்றது என்ற பொய்ச் சரித்திரப் புனைவு தான் இன்று இந்தியா சந்திக்கும் கொடுமை எல்லாம். இல்லாவிட்டால் ஒரு படிப்பறிவில்லாத இத்தாலியப் பெண்ணா இந்தியாவை ஆளவது?

அவர்கள் காலடியில் கிடக்கும் தமிழர் தலைவர்களை கட்டபொம்மன் வீரமங்கை வேலு நாச்சியார் முதலிய வீரர்களின் ஆன்மா எப்படி மன்னிக்கும். அவர்கள் முன் அன்று கடவுள் வந்து உனக்குப் போராட ஆயுதம் வேண்டுமா அல்லது மோட்சமடைந்து அமைதி பெறுகிறாயா என்று கேட்டிருந்தால் என்ன பதில் சொல்லி இருப்பார்கள்.
என்னுடைய அன்பான இளவலே சற்று சிந்தித்த்ப் பாருங்கள்
அன்புடன்
நந்திதா

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 09, 2009 8:27 pm

நான் இளவல், தாங்கள் சகோதரி இல்லையா?
நான் நல்ல குழந்தை அன்பான மனைவியென மகிழ்வாக வாழும் குடும்பத்திற்க்கிடையே என் தமிழர்க்காய் அழுபவன், சமாதானத்திற்குப் பின் சாந்தி போதுமென்று நின்று விடுகிறேன்.

தாங்கள் கொதிக்கும் விடுதலை உணர்வுகளுக்கிடையே மட்டும் வாழ்வதின்றி, சாந்திக்குப் பின்னும் சாந்தி நிலவ சிந்திக்கிறீர்கள். காலம் கடந்து கிடைக்கும் வலியான நீதி, வலிமையானதாகவே கிடைக்கட்டும்!

தாங்களே சரி!!

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக