புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by Barushree Today at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
Barushree | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
Page 38 of 43 •
Page 38 of 43 • 1 ... 20 ... 37, 38, 39 ... 43
- கார்த்திநடராஜன்இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
First topic message reminder :
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT
யாதும் ஊரே யாவரும் கேளிர்
பொன்னியின் செல்வன் ட்ராப்... அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது!
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் துவங்கியதாக முதன்முதலில் அறிவித்தது தட்ஸ்தமிழ் இணையதளம். அதன் பிறகு அந்தப் படம் தொடர்பாக மணிரத்னம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் அறிவித்து வந்தோம். இந்தப் படத்துக்காக மைசூர் லலிதமகாலை அவர் பார்வையிட்டது வரை தொடர்ச்சியாக செய்திகளைத் தந்திருந்தோம்.
ஆனால் சில பல காரணங்களால் பொன்னியின் செல்வன் கைவிடப்படும் சூழல் எழுந்தது. அது குறித்த செய்தியையும் முதன்முதலில் நமது தட்ஸ்தமிழ்தான் வெளியிட்டது என்பது நினைவிருக்கலாம்.
இதோ, நாம் சொன்ன செய்தியை மணிரத்னமே உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆம்... பொன்னியின் செல்வன் முயற்சி கைவிடப்பட்டது என அவர் கூறியுள்ளார். இந்தப் படத்துக்காக அட்வான்ஸ் தரப்பட்டு, கால்ஷீட் பெறப்பட்ட விஜய் உள்ளிட்ட அத்தனை நடிகர் நடிகைகளுக்கும் படம் கைவிடப்பட்டது என்ற தகவலை மணிரத்னமே அனுப்பியுள்ளார்.
பொன்னியின் செல்வன் என்ற பிரமாண்ட நாவலைப் படமாக்குவதில் உள்ள நடைமுறை சிரமங்கள், அதற்காகும் பெரும் நிதியை தர நிறுவனங்கள் முன்வராத நிலை மற்றும் இந்தப் படத்துக்கான வியாபாரம் குறித்த நிச்சயமற்ற நிலை.. போன்றவை காரணமாகவே மணிரத்னம் இந்த முடிவுக்கு வந்ததாகக் கூறுகிறார்கள். மேலும் படத்தைத் தயாரிக்கவிருந்த பிரபல சேனலுக்கும் படத்தின் நாயகன் விஜய்க்கும் ஒத்துப் போகாததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.
பொன்னியின் செல்வன் முயற்சியை கைவிட்டாலும், அடுத்து ஒரு பெரிய நட்சத்திரத்தை வைத்து தளபதி ரேஞ்சுக்கு பக்கா ஆக்ஷன் படம் தரும் திட்டமும் உள்ளதாம் மணிரத்னத்துக்கு. இந்த முயற்சியாவது கை கூடட்டும்!
தட்ஸ் தமிழ்
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் துவங்கியதாக முதன்முதலில் அறிவித்தது தட்ஸ்தமிழ் இணையதளம். அதன் பிறகு அந்தப் படம் தொடர்பாக மணிரத்னம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் அறிவித்து வந்தோம். இந்தப் படத்துக்காக மைசூர் லலிதமகாலை அவர் பார்வையிட்டது வரை தொடர்ச்சியாக செய்திகளைத் தந்திருந்தோம்.
ஆனால் சில பல காரணங்களால் பொன்னியின் செல்வன் கைவிடப்படும் சூழல் எழுந்தது. அது குறித்த செய்தியையும் முதன்முதலில் நமது தட்ஸ்தமிழ்தான் வெளியிட்டது என்பது நினைவிருக்கலாம்.
இதோ, நாம் சொன்ன செய்தியை மணிரத்னமே உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆம்... பொன்னியின் செல்வன் முயற்சி கைவிடப்பட்டது என அவர் கூறியுள்ளார். இந்தப் படத்துக்காக அட்வான்ஸ் தரப்பட்டு, கால்ஷீட் பெறப்பட்ட விஜய் உள்ளிட்ட அத்தனை நடிகர் நடிகைகளுக்கும் படம் கைவிடப்பட்டது என்ற தகவலை மணிரத்னமே அனுப்பியுள்ளார்.
பொன்னியின் செல்வன் என்ற பிரமாண்ட நாவலைப் படமாக்குவதில் உள்ள நடைமுறை சிரமங்கள், அதற்காகும் பெரும் நிதியை தர நிறுவனங்கள் முன்வராத நிலை மற்றும் இந்தப் படத்துக்கான வியாபாரம் குறித்த நிச்சயமற்ற நிலை.. போன்றவை காரணமாகவே மணிரத்னம் இந்த முடிவுக்கு வந்ததாகக் கூறுகிறார்கள். மேலும் படத்தைத் தயாரிக்கவிருந்த பிரபல சேனலுக்கும் படத்தின் நாயகன் விஜய்க்கும் ஒத்துப் போகாததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.
பொன்னியின் செல்வன் முயற்சியை கைவிட்டாலும், அடுத்து ஒரு பெரிய நட்சத்திரத்தை வைத்து தளபதி ரேஞ்சுக்கு பக்கா ஆக்ஷன் படம் தரும் திட்டமும் உள்ளதாம் மணிரத்னத்துக்கு. இந்த முயற்சியாவது கை கூடட்டும்!
தட்ஸ் தமிழ்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
இலியானா மீது தடை கோரி 3 தயாரிப்பாளர்கள் புகார்... சிக்கலில் விஜய் படம்!!
எக்கச்சக்கமான அட்வான்ஸ் வாங்கிக் கொண்ட பிறகும், படத்துக்கு தேதி தராமல் இழுத்தடித்த நடிகை இலியானாவுக்கு தெலுங்கு மற்றும் தமிழில் தொழில் ரீதியான தடையை விதிக்க வேண்டும் என்று பிரபல தயாரிப்பாளர் மோகன் நடராஜன் புகார் கொடுத்துள்ளார்.
மோகன் நடராஜன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'விக்ரமனின் தெய்வ திருமகள்' படத்தில் நாயகியாக நடிக்க ரூ 35 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து இலியானாவை ஒப்பந்தம் செய்திருந்தாராம். ஆனால் இந்தப் படத்துக்குக் கொடுத்த அதே தேதிகளை, ஷங்கர் இயக்கும் 3 இடியட்ஸ் தமிழ் ரீமேக் நண்பனுக்குக் கொடுத்து சொதப்பினாராம் இலியானா.
இதனால் கடுப்பான மோகன் நடராஜன், சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், "பேசிய சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகும், இலியானா கால்ஷீட் தராமல் இழுத்தடித்தார். எனக்குக் கொடுத்த கால்ஷீட்டை நண்பன் படத்துக்கு கொடுத்துள்ளார். இதனால் எனக்கு ஏகப்பட்ட நஷ்டம். வாங்கிய அட்வான்ஸையும் திருப்பித் தரவில்லை. போன் செய்தால், அதை எடுக்கக் கூட மறுக்கிறார். எனவே இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்க தடை விதிக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தெலுங்கிலும் பிரச்சினை...
இதற்கிடையே, இலியானா நாயகியாக நடித்த தெலுங்குப் படங்கள் 'சக்தி' மற்றும் 'நேனு நா ராக்ஷஸி' ஆகியவற்றின் விளம்பரம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க மறுத்துவிட்டாராம் இலியானா. இதில் சக்தி படம் சில வாரங்களுக்கு முன் வெளியாகி படுதோல்வியைத் தழுவியது. இந்தப் படத்தின் ஹீரோ ஜூனியர் என்டிஆருக்கும் இலியானாவுக்கும் படப்பிடிப்பின்போதே கடும் தகராறு ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள். மேலும் படம் ரிலீசானதும், சக்தி ஒரு மோசமான படம் என்று வேறு இலியானா கமெண்ட் அடித்தாராம். இதனால் படத்தின் தயாரிப்பாளர் வைஜெயந்தி மூவீஸ் சார்பிலும் இலியானா மீது தெலுங்கு பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தரப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு இலியானா வாங்கிய சம்பளம் ரூ 1.40 கோடி!
நிதினுடன் இவர் நடித்த 'ரெச்சிபோ' என்ற தெலுங்குப் படத்தின் தயாரிப்பாளருடனும் இலியானா தகராறு செய்ய, அவரும் இப்போது தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டுள்ளார்.
எனவே இலியானாவுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. ஆனால் இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல், நண்பன் படத்தில் விஜய்யுடன் நடித்துக் கொண்டுள்ளார் இலியானா! தயாரிப்பாளர் சங்கம் தடைபோட்டால், முதல் பாதிப்பு விஜய்யின் நண்பன் படத்துக்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது!
தட்ஸ் தமிழ்
எக்கச்சக்கமான அட்வான்ஸ் வாங்கிக் கொண்ட பிறகும், படத்துக்கு தேதி தராமல் இழுத்தடித்த நடிகை இலியானாவுக்கு தெலுங்கு மற்றும் தமிழில் தொழில் ரீதியான தடையை விதிக்க வேண்டும் என்று பிரபல தயாரிப்பாளர் மோகன் நடராஜன் புகார் கொடுத்துள்ளார்.
மோகன் நடராஜன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'விக்ரமனின் தெய்வ திருமகள்' படத்தில் நாயகியாக நடிக்க ரூ 35 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து இலியானாவை ஒப்பந்தம் செய்திருந்தாராம். ஆனால் இந்தப் படத்துக்குக் கொடுத்த அதே தேதிகளை, ஷங்கர் இயக்கும் 3 இடியட்ஸ் தமிழ் ரீமேக் நண்பனுக்குக் கொடுத்து சொதப்பினாராம் இலியானா.
இதனால் கடுப்பான மோகன் நடராஜன், சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், "பேசிய சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகும், இலியானா கால்ஷீட் தராமல் இழுத்தடித்தார். எனக்குக் கொடுத்த கால்ஷீட்டை நண்பன் படத்துக்கு கொடுத்துள்ளார். இதனால் எனக்கு ஏகப்பட்ட நஷ்டம். வாங்கிய அட்வான்ஸையும் திருப்பித் தரவில்லை. போன் செய்தால், அதை எடுக்கக் கூட மறுக்கிறார். எனவே இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்க தடை விதிக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தெலுங்கிலும் பிரச்சினை...
இதற்கிடையே, இலியானா நாயகியாக நடித்த தெலுங்குப் படங்கள் 'சக்தி' மற்றும் 'நேனு நா ராக்ஷஸி' ஆகியவற்றின் விளம்பரம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க மறுத்துவிட்டாராம் இலியானா. இதில் சக்தி படம் சில வாரங்களுக்கு முன் வெளியாகி படுதோல்வியைத் தழுவியது. இந்தப் படத்தின் ஹீரோ ஜூனியர் என்டிஆருக்கும் இலியானாவுக்கும் படப்பிடிப்பின்போதே கடும் தகராறு ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள். மேலும் படம் ரிலீசானதும், சக்தி ஒரு மோசமான படம் என்று வேறு இலியானா கமெண்ட் அடித்தாராம். இதனால் படத்தின் தயாரிப்பாளர் வைஜெயந்தி மூவீஸ் சார்பிலும் இலியானா மீது தெலுங்கு பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தரப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு இலியானா வாங்கிய சம்பளம் ரூ 1.40 கோடி!
நிதினுடன் இவர் நடித்த 'ரெச்சிபோ' என்ற தெலுங்குப் படத்தின் தயாரிப்பாளருடனும் இலியானா தகராறு செய்ய, அவரும் இப்போது தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டுள்ளார்.
எனவே இலியானாவுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. ஆனால் இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல், நண்பன் படத்தில் விஜய்யுடன் நடித்துக் கொண்டுள்ளார் இலியானா! தயாரிப்பாளர் சங்கம் தடைபோட்டால், முதல் பாதிப்பு விஜய்யின் நண்பன் படத்துக்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது!
தட்ஸ் தமிழ்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
மருத்துவர்கள் அனுமதியுடன் கோயிலுக்குச் சென்று வந்த ரஜினி!
நடிகர் ரஜினிகாந்த், ஓய்வெடுக்கவும் நவீன சிகிச்சை மேற்கொள்ளவும் அமெரிக்கா செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து பிரபல அரசியல் விமர்சகர் ராஜகோபாலன் தனது ட்விட்டரில், "விரைவில் நடிகர் ரஜினிகாந்த் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வார் என தெரிகிறது. இதற்கான முன் அனுமதி கடிதம் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது பயணத்துக்கான விசா விண்ணப்பமும் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லியின் உதவியுடன் அவர் அமெரிக்கா செல்லவிருக்கிறார்", என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக இசபெல்லா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ரஜினி, இன்னும் ஓரிரு தினங்களில் வீடு திரும்பவிருக்கிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராணா படத்தில் முழு வீச்சில் ஈடுபடும் முன் சுத்தமான சூழலில் பூரண ஓய்வு அவசியம் என்பதால் அவர் அமெரிக்கா செல்வதாகக் கூறப்படுகிறது.
தட்ஸ் தமிழ்
நடிகர் ரஜினிகாந்த், ஓய்வெடுக்கவும் நவீன சிகிச்சை மேற்கொள்ளவும் அமெரிக்கா செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து பிரபல அரசியல் விமர்சகர் ராஜகோபாலன் தனது ட்விட்டரில், "விரைவில் நடிகர் ரஜினிகாந்த் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வார் என தெரிகிறது. இதற்கான முன் அனுமதி கடிதம் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது பயணத்துக்கான விசா விண்ணப்பமும் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லியின் உதவியுடன் அவர் அமெரிக்கா செல்லவிருக்கிறார்", என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக இசபெல்லா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ரஜினி, இன்னும் ஓரிரு தினங்களில் வீடு திரும்பவிருக்கிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராணா படத்தில் முழு வீச்சில் ஈடுபடும் முன் சுத்தமான சூழலில் பூரண ஓய்வு அவசியம் என்பதால் அவர் அமெரிக்கா செல்வதாகக் கூறப்படுகிறது.
தட்ஸ் தமிழ்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
ஓய்வுக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி?
நடிகர் ரஜினிகாந்த், ஓய்வெடுக்கவும் நவீன சிகிச்சை மேற்கொள்ளவும் அமெரிக்கா செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து பிரபல அரசியல் விமர்சகர் ராஜகோபாலன் தனது ட்விட்டரில், "விரைவில் நடிகர் ரஜினிகாந்த் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வார் என தெரிகிறது. இதற்கான முன் அனுமதி கடிதம் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது பயணத்துக்கான விசா விண்ணப்பமும் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லியின் உதவியுடன் அவர் அமெரிக்கா செல்லவிருக்கிறார்", என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக இசபெல்லா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ரஜினி, இன்னும் ஓரிரு தினங்களில் வீடு திரும்பவிருக்கிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராணா படத்தில் முழு வீச்சில் ஈடுபடும் முன் சுத்தமான சூழலில் பூரண ஓய்வு அவசியம் என்பதால் அவர் அமெரிக்கா செல்வதாகக் கூறப்படுகிறது.
தட்ஸ் தமிழ்
நடிகர் ரஜினிகாந்த், ஓய்வெடுக்கவும் நவீன சிகிச்சை மேற்கொள்ளவும் அமெரிக்கா செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து பிரபல அரசியல் விமர்சகர் ராஜகோபாலன் தனது ட்விட்டரில், "விரைவில் நடிகர் ரஜினிகாந்த் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வார் என தெரிகிறது. இதற்கான முன் அனுமதி கடிதம் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது பயணத்துக்கான விசா விண்ணப்பமும் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லியின் உதவியுடன் அவர் அமெரிக்கா செல்லவிருக்கிறார்", என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக இசபெல்லா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ரஜினி, இன்னும் ஓரிரு தினங்களில் வீடு திரும்பவிருக்கிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராணா படத்தில் முழு வீச்சில் ஈடுபடும் முன் சுத்தமான சூழலில் பூரண ஓய்வு அவசியம் என்பதால் அவர் அமெரிக்கா செல்வதாகக் கூறப்படுகிறது.
தட்ஸ் தமிழ்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
குத்தாட்டம் போட தீபிகாவா, கத்ரீனாவா? குழப்பத்தில் ஆமிர் கான்
மும்பை: இம்ரான் கானை வைத்து தான் எடுக்கும் டெல்லி பெல்லி படத்தில் குத்துப்பாட்டுக்கு தீபிகாவை எடுக்கலாமா அல்லது கத்ரீனாவை கேட்கலாமா என்று ஆமிர் கான் யோசித்துக் கொண்டிருக்கிறார்.
பாலிவுட்டில் தற்போது குத்துப் பாட்டு இல்லாமல் படங்கள் வருவதில்லை. முன்பெல்லாம் குத்துப் பாட்டுக்கு ஆட தனியாக கவர்ச்சி நடிகைகள் இருந்தனர். தற்போது கதாநாயகிகளே நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு குத்தாட்டம் போடுகின்றனர். அதனால் கவர்ச்சி நடிகைகளுக்கு வேலையில்லாமல் போய்விட்டது.
தீஸ் மார் கான் படத்தில் கத்ரீனாவும், தம் மாரோ தம்மில் படுகவர்ச்சியாக தீபிகாவும் ஆடியுள்ளனர். இந்நிலையில் குத்துப்பாட்டின் முக்கியத்துவத்தை அறிந்த ஆமிர் தான் தயாரிக்கும் டெல்லி பெல்லி படத்தில் ஒரு குத்துப்பாடல் வைக்கவுள்ளார். இதில் ஆட தீபிகா, கத்ரீனா கைப் மற்றும் மல்லிகா ஷெராவத் பெயர்கள் அடிபடுகிறது.
எங்கு பார்த்தாலும் ரன்பிர் கபூரின் முன்னாள் காதலிகளான தீபிகாவுக்கும், கத்ரீனாவுக்கும் தான் போட்டியாக இருக்கிறது. பார்க்கலாம் ஆமிர் யாரைத் தான் தேர்வு செய்கிறார் என்று.
தட்ஸ் தமிழ்
மும்பை: இம்ரான் கானை வைத்து தான் எடுக்கும் டெல்லி பெல்லி படத்தில் குத்துப்பாட்டுக்கு தீபிகாவை எடுக்கலாமா அல்லது கத்ரீனாவை கேட்கலாமா என்று ஆமிர் கான் யோசித்துக் கொண்டிருக்கிறார்.
பாலிவுட்டில் தற்போது குத்துப் பாட்டு இல்லாமல் படங்கள் வருவதில்லை. முன்பெல்லாம் குத்துப் பாட்டுக்கு ஆட தனியாக கவர்ச்சி நடிகைகள் இருந்தனர். தற்போது கதாநாயகிகளே நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு குத்தாட்டம் போடுகின்றனர். அதனால் கவர்ச்சி நடிகைகளுக்கு வேலையில்லாமல் போய்விட்டது.
தீஸ் மார் கான் படத்தில் கத்ரீனாவும், தம் மாரோ தம்மில் படுகவர்ச்சியாக தீபிகாவும் ஆடியுள்ளனர். இந்நிலையில் குத்துப்பாட்டின் முக்கியத்துவத்தை அறிந்த ஆமிர் தான் தயாரிக்கும் டெல்லி பெல்லி படத்தில் ஒரு குத்துப்பாடல் வைக்கவுள்ளார். இதில் ஆட தீபிகா, கத்ரீனா கைப் மற்றும் மல்லிகா ஷெராவத் பெயர்கள் அடிபடுகிறது.
எங்கு பார்த்தாலும் ரன்பிர் கபூரின் முன்னாள் காதலிகளான தீபிகாவுக்கும், கத்ரீனாவுக்கும் தான் போட்டியாக இருக்கிறது. பார்க்கலாம் ஆமிர் யாரைத் தான் தேர்வு செய்கிறார் என்று.
தட்ஸ் தமிழ்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
எஸ்வி சேகர் மகன் திருமண நிச்சயதார்த்தம்... ஜி கே வாசன் வாழ்த்து!!
முன்னாள் எம்எல்ஏவும் நடிகருமான எஸ்வி சேகர் மகன் அஸ்வின் சேகர் - ஸ்ருதி திருமண நிச்சயதார்த்தம் ஞாயிற்றுக் கிழமை சென்னையில் நடந்தது.
மணமகள் ஸ்ருதி ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப் பாளையத்தைச் சேர்ந்த வெங்கட்ராமனின் மகள்.
சென்னை ஜிஆர்டி நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த நிச்சயதார்த்ததுக்கு மத்திய அமைச்சர் ஜிகே வாசன், ஈவிகேஎஸ் இளங்கோவன், ஜெகத்ரட்சகன், சோ, பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு, சுந்தர் சி உள்ளிட்டோர் நேரில் வந்து வாழ்த்துக் கூறினர். இருப்பினும் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வரவில்லை. மயிலாப்பூர் தொகுதியில் சீட் தருவதாக கூறி எஸ்.வி.சேகரை கடும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியவர் தங்கபாலு என்பது நினைவிருக்கலாம்.
வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி சென்னையில் மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடக்கிறது.
அஸ்வின் சேகர் வேகம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்போது நினைவில் நின்றவள் உள்பட 2 படங்களில் நடித்து வருகிறார்.
தட்ஸ் தமிழ்
முன்னாள் எம்எல்ஏவும் நடிகருமான எஸ்வி சேகர் மகன் அஸ்வின் சேகர் - ஸ்ருதி திருமண நிச்சயதார்த்தம் ஞாயிற்றுக் கிழமை சென்னையில் நடந்தது.
மணமகள் ஸ்ருதி ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப் பாளையத்தைச் சேர்ந்த வெங்கட்ராமனின் மகள்.
சென்னை ஜிஆர்டி நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த நிச்சயதார்த்ததுக்கு மத்திய அமைச்சர் ஜிகே வாசன், ஈவிகேஎஸ் இளங்கோவன், ஜெகத்ரட்சகன், சோ, பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு, சுந்தர் சி உள்ளிட்டோர் நேரில் வந்து வாழ்த்துக் கூறினர். இருப்பினும் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வரவில்லை. மயிலாப்பூர் தொகுதியில் சீட் தருவதாக கூறி எஸ்.வி.சேகரை கடும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியவர் தங்கபாலு என்பது நினைவிருக்கலாம்.
வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி சென்னையில் மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடக்கிறது.
அஸ்வின் சேகர் வேகம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்போது நினைவில் நின்றவள் உள்பட 2 படங்களில் நடித்து வருகிறார்.
தட்ஸ் தமிழ்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
நடிகர் அருண் விஜய்க்கு ஆண் குழந்தை
சென்னை: பிரபல நடிகர் அருண் விஜய் - ஆர்த்தி தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது.
அருண் விஜய் - ஆர்த்தி தம்பதிக்கு ஏற்கனவே 2 வயதில் பூர்வா என்ற மகள் இருக்கிறாள். இரண்டாவது முறையாக கருவுற்ற ஆர்த்திக்கு நேற்று பிற்பகல் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருக்கிறார்கள்.
'தடையற தாக்க' என்ற படத்தில் நடித்து வரும் நடிகர் அருண் விஜய்க்கு குழந்தை பிறந்த தகவல் தெரிவிக்கப்பட்டதும், படப்பிடிப்பை நிறுத்திவிட்டு விரைந்து வந்தார். மனைவியையும், குழந்தையையும் பார்த்து மகிழ்ந்த அவர், மருத்துவமனை ஊழியர்கள், நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழந்தார்.
தட்ஸ் தமிழ்
சென்னை: பிரபல நடிகர் அருண் விஜய் - ஆர்த்தி தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது.
அருண் விஜய் - ஆர்த்தி தம்பதிக்கு ஏற்கனவே 2 வயதில் பூர்வா என்ற மகள் இருக்கிறாள். இரண்டாவது முறையாக கருவுற்ற ஆர்த்திக்கு நேற்று பிற்பகல் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருக்கிறார்கள்.
'தடையற தாக்க' என்ற படத்தில் நடித்து வரும் நடிகர் அருண் விஜய்க்கு குழந்தை பிறந்த தகவல் தெரிவிக்கப்பட்டதும், படப்பிடிப்பை நிறுத்திவிட்டு விரைந்து வந்தார். மனைவியையும், குழந்தையையும் பார்த்து மகிழ்ந்த அவர், மருத்துவமனை ஊழியர்கள், நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழந்தார்.
தட்ஸ் தமிழ்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
ஆழியாறு அணையை மாசுபடுத்தும் பிரபுதேவா குழு: பொதுமக்கள் அதிருப்தி
ஆனைமலை: ஆழியாறு அணையில் பிரபுதேவா படக்குழுவினர் ரசாயனத்தைக் கலந்து நீரை மாசுப்படுத்தவதாக அதிகாரிகளும், பொது மக்களும் குற்றம்சாட்டுகின்றனர்.
பிரபுதேவா இயக்கும் படம்
விஷால், சமீரா ரெட்டி நடிக்கும் படத்தினை பிரபுதேவா இயக்கி வருகிறார். ஆனைமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் படபிடிப்பு நடக்கிறது. இப்படத்தின் பாடல் காட்சி, ஆழியாறு அணை ஜீரோ பாயிண்ட்டில் நேற்று நடந்தது. இதற்காக அணைக்குள் செட் போட்டுள்ளனர்.
கொட்டப்பட்ட ரசாயனம்
முதலில் அணை நீரில் ரசாயனம் ஊற்றப்பட்டு தண்ணீர் பச்சை நிறமாக மாற்றப்பட்டது. பிறகு அந்த நீரில் ஆடு, மாடு, மீன், கொக்கு உருவங்கள் வரையப்பட்ட அட்டைகள் நடப்பட்டன. அணைக்குள் சவுக்கு கட்டைகளை நட்டு, மணல் மூட்டைகள் போடப்பட்டு மேடாக்கப்பட்டு அதன்பின்னரே படப்பிடிப்பு துவங்கியது.
பயணிகளுக்கு அனுமதி இல்லை
அணையின் மேல் பகுதியில் 20-க்கும் அதிகமான வாகனங்களை வரிசையாக நிறுத்தி, சுற்றுலாப் பயணிகள் யாரையும் அணையைப் பார்க்க அனுமதிக்காததால் அவர்கள் எரிச்சல் அடைந்தனர். ரசாயனத்தை அணைக்குள் கொட்டி தண்ணீரின் நிறத்தை மாற்றுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், தண்ணீரை குடிநீராகப் பயன்படுத்துவோரும், வன விலங்குகளும் பாதிக்கும் அபாயமும் உள்ளது.
அனுமதியை மீறும் படக்குழுவினர்கள்
'அணைக்கும், அணையில் உள்ள நீருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் படமெடுக்க வேண்டும்' என்ற நிபந்தனைகளுக்குப் பிறகே அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் அனுமதி கிடைத்ததும் படக்குழுவினர் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டுவிடுகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பிற்கென சென்னை தலைமையிடத்தில் அனுமதி பெற்றுள்ளனர். இரண்டு நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது.
படக்குழுவினர் சென்னையில் அனுமதி பெற்று வந்துவிடுவதால், இங்குள்ள அதிகாரிகளால் எந்த கட்டுப்பாடும் விதிக்க முடிவதில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர்.
தட்ஸ் தமிழ்
ஆனைமலை: ஆழியாறு அணையில் பிரபுதேவா படக்குழுவினர் ரசாயனத்தைக் கலந்து நீரை மாசுப்படுத்தவதாக அதிகாரிகளும், பொது மக்களும் குற்றம்சாட்டுகின்றனர்.
பிரபுதேவா இயக்கும் படம்
விஷால், சமீரா ரெட்டி நடிக்கும் படத்தினை பிரபுதேவா இயக்கி வருகிறார். ஆனைமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் படபிடிப்பு நடக்கிறது. இப்படத்தின் பாடல் காட்சி, ஆழியாறு அணை ஜீரோ பாயிண்ட்டில் நேற்று நடந்தது. இதற்காக அணைக்குள் செட் போட்டுள்ளனர்.
கொட்டப்பட்ட ரசாயனம்
முதலில் அணை நீரில் ரசாயனம் ஊற்றப்பட்டு தண்ணீர் பச்சை நிறமாக மாற்றப்பட்டது. பிறகு அந்த நீரில் ஆடு, மாடு, மீன், கொக்கு உருவங்கள் வரையப்பட்ட அட்டைகள் நடப்பட்டன. அணைக்குள் சவுக்கு கட்டைகளை நட்டு, மணல் மூட்டைகள் போடப்பட்டு மேடாக்கப்பட்டு அதன்பின்னரே படப்பிடிப்பு துவங்கியது.
பயணிகளுக்கு அனுமதி இல்லை
அணையின் மேல் பகுதியில் 20-க்கும் அதிகமான வாகனங்களை வரிசையாக நிறுத்தி, சுற்றுலாப் பயணிகள் யாரையும் அணையைப் பார்க்க அனுமதிக்காததால் அவர்கள் எரிச்சல் அடைந்தனர். ரசாயனத்தை அணைக்குள் கொட்டி தண்ணீரின் நிறத்தை மாற்றுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், தண்ணீரை குடிநீராகப் பயன்படுத்துவோரும், வன விலங்குகளும் பாதிக்கும் அபாயமும் உள்ளது.
அனுமதியை மீறும் படக்குழுவினர்கள்
'அணைக்கும், அணையில் உள்ள நீருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் படமெடுக்க வேண்டும்' என்ற நிபந்தனைகளுக்குப் பிறகே அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் அனுமதி கிடைத்ததும் படக்குழுவினர் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டுவிடுகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பிற்கென சென்னை தலைமையிடத்தில் அனுமதி பெற்றுள்ளனர். இரண்டு நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது.
படக்குழுவினர் சென்னையில் அனுமதி பெற்று வந்துவிடுவதால், இங்குள்ள அதிகாரிகளால் எந்த கட்டுப்பாடும் விதிக்க முடிவதில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர்.
தட்ஸ் தமிழ்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- Sponsored content
Page 38 of 43 • 1 ... 20 ... 37, 38, 39 ... 43
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 38 of 43
|
|