புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நொய்யல் பெயர் வைப்போமா? -  நொய்யல் வரலாறு Poll_c10நொய்யல் பெயர் வைப்போமா? -  நொய்யல் வரலாறு Poll_m10நொய்யல் பெயர் வைப்போமா? -  நொய்யல் வரலாறு Poll_c10 
49 Posts - 60%
heezulia
நொய்யல் பெயர் வைப்போமா? -  நொய்யல் வரலாறு Poll_c10நொய்யல் பெயர் வைப்போமா? -  நொய்யல் வரலாறு Poll_m10நொய்யல் பெயர் வைப்போமா? -  நொய்யல் வரலாறு Poll_c10 
29 Posts - 36%
mohamed nizamudeen
நொய்யல் பெயர் வைப்போமா? -  நொய்யல் வரலாறு Poll_c10நொய்யல் பெயர் வைப்போமா? -  நொய்யல் வரலாறு Poll_m10நொய்யல் பெயர் வைப்போமா? -  நொய்யல் வரலாறு Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நொய்யல் பெயர் வைப்போமா? -  நொய்யல் வரலாறு Poll_c10நொய்யல் பெயர் வைப்போமா? -  நொய்யல் வரலாறு Poll_m10நொய்யல் பெயர் வைப்போமா? -  நொய்யல் வரலாறு Poll_c10 
91 Posts - 61%
heezulia
நொய்யல் பெயர் வைப்போமா? -  நொய்யல் வரலாறு Poll_c10நொய்யல் பெயர் வைப்போமா? -  நொய்யல் வரலாறு Poll_m10நொய்யல் பெயர் வைப்போமா? -  நொய்யல் வரலாறு Poll_c10 
50 Posts - 34%
mohamed nizamudeen
நொய்யல் பெயர் வைப்போமா? -  நொய்யல் வரலாறு Poll_c10நொய்யல் பெயர் வைப்போமா? -  நொய்யல் வரலாறு Poll_m10நொய்யல் பெயர் வைப்போமா? -  நொய்யல் வரலாறு Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நொய்யல் பெயர் வைப்போமா? -  நொய்யல் வரலாறு Poll_c10நொய்யல் பெயர் வைப்போமா? -  நொய்யல் வரலாறு Poll_m10நொய்யல் பெயர் வைப்போமா? -  நொய்யல் வரலாறு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நொய்யல் பெயர் வைப்போமா? - நொய்யல் வரலாறு


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 24, 2011 5:19 pm

தமிழகத்தில் ஆறுகளின் பெயர்களை குழந்தைகளுக்கு வைப்பது வாடிக்கை.காவிரி, பவானி, அமராவதி, பரணி என நதிகளின் பெயர்கள் வைக்கப்படுகிறது. ஆனால் நொய்யல் என யாருக்குமே பெயர் வைப்பதில்லை. இதனால்தான் நொய்யலின் பெருமை வெளியே தெரியாமல் இருந்தது. நொய்யல் என்பது அழகிய தமிழ் பெயர் மட்டுமல்ல. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளாக மக்களை காப்பாற்றி வந்த ஒரு ஜீவநதியின் பெயர். இனியாவது நம் மக்கள் குழந்தைகளுக்கு நொய்யல் என பெயர் வைப்பார்களா?







புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 24, 2011 5:20 pm

நொய்யல் வரலாறு


கோவையில் நொய்யல் ஆறு என நாம் குறிப்பிட்டால் இப்போது இருக்கும் மக்களுக்கு அது சிறுவாணி அணை நீர் என நினைக்கின்றனர். பலரும் நொய்யல் என்றால் தண்ணீரே வராத ஒரு ஆறு என நினைக்கின்றனர்.

ஆனால் உண்மை அதுவல்ல. எத்தனையோ தடைகளை கடந்து கோவையை நோக்கி வரும் நொய்யலுக்கும் ஒரு பின்னணி உண்டு. நொய்யல் ஆறு எங்கிருந்து எப்படி உருவாகிறது என தெரிந்துகொண்டால் அதை நாம் போற்றத் துவங்கி விடுவோம்.

மேற்கு தொடர்ச்சி மலையில் கோவைக்கு மேலே சரியாக 2 ஆயிரம் அடி உயரத்தில் பெய்யும்போது அது பல்வேறு சிறு ஓடைகளாக உருப்பெறுகிறது. இப்படி 7 ஓடைகள் ஒன்று சேர்ந்து அது குஞ்சரான் முடி என பெயர் பெற்று மலைகளில் இருந்து பெரும் ஆறாக பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதுதான் நீங்கள் சிறுவாணி அடிவாரத்தில் காணும் கோவை குற்றாலம் இதை பெரியாறு என்றும் அழைக்கிறார்கள்.

மற்றொரு புரத்தில் ஏறத்தாழ வெள்ளிங்கிரி மலையிலும். அதை ஒட்டிய பகுதிகளிலும் பெய்யும் மழை, 5 ஓடைகளாக ஒன்று சேர்ந்து மத்திமர கண்டி ஓடை என பெயர் பெற்று ஏற்கனவே ஓடிவரும் பெரியாறுடன் செம்மேடு அருகே ஒன்று சேர்கிறது.

இந்த பெரியாறு மட்டும் நொய்யல் என அழைக்கப்படுவதில்லை.

இத்துடன் தூத்துமலை ஓடை, கொடுவாய்புடி ஓடை பெரியாறு ஓடை ஆகியவை ஒன்று சேர்ந்து சின்னாறு என அழைக்கப்படுகிறது. இந்த சின்னாறு சாடி வயல் வழியாக நாம் ஏற்கனவே கூறிய பெரியாறுடன் சோலை படுகையில் ஒன்று சேர்கிறது. அவ்வளவு தானா நொய்யல் என கேட்க வேண்டாம்.

பெரியாறு சின்னாறு சேர்ந்த உடன் இவற்றுடன் மேற்கு தொடர்ச்சி மலையில் 20 ஓடைகளை ஒன்று சேர்த்துவரும் தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி என்ற ஆறும் தொம்பிலிபாளையத்தில் ஒன்று சேர்கிறது. இந்த தொள்ளாயிரம் மூர்த்தி கண்டிதான் நீங்கள் சினிமாவில் பார்த்த வைதேகி நீர்வீழ்ச்சி.

தொம்பிலிபாளையத்தில் ஏறக்குறைய எல்லா ஆறுகளும் ஒன்று சேர்ந்த பின்னர்தான் அங்கு நொய்யல் என பெயர் பெறுகிறது.

பின்னர் பேரூர், கோவை நகர், சூலூர், திருப்பூர், கொடுமணல், காங்கயம் வழியாக கரூர் மாவட்டம் சென்று நொய்யல் என்ற கிராமத்தில் காவிரியுடன் நமது ஜீவ நதி கலக்கிறது.

நொய்யலின் சராசரி நீளம் 160 முதல் 170 கிலோ மீட்டர். இந்த ஆற்றின் சராசரி அகலம் 30 அடி. நொய்யலில் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பு அணைகள் 32. நொய்யல் ஆற்று நீரை நம்பி தற்போது உள்ள குளங்களின் எண்ணிக்கை 19.

நொய்யல் ஆற்றில் ஆண்டு முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதில்லை. ஆனால் ஏறத்தாழ ஆலந்துறை வரை ஆண்டுக்கு 10 மாதங்கள் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீரையும் மழை காலத்தில் கிடைக்கும் பெரும் வெள்ளத்தையும் நாம் முறைாக பயன்படுத்தினால் இன்னும் 20 ஆண்டுகளுக்கு கோவை மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சமே வராது.

நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவரும்போது அதை தடுப்பணையில் தடுத்து அங்கிருந்து சிறிய வாய்கால்கள் மூலம் குளங்களுக்கு நீரை கொண்டுசெல்லும் முறை நொய்யலில் பயன்படுத்தப்படுகிறது. நொய்யலில் பெரும் வெள்ளம் செல்லும்போது பலரும் இந்த நீரை அப்படியே குளங்களுக்கு திருப்பினால் என்ன என கேள்வி கேட்கின்றனர். இது மிகவும் அபாயகரமானது. காரணம் நொய்யல் ஆற்றில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அதன் வேகம் மாறுபட்டுக்கொண்டே இருக்கும். இந்த நீரை குளங்களுக்கு திருப்பினால் ஒரு சில மணி நேரங்களில் குளம நிரம்பிவிடும். பின்னர் இந்த நீரை தடுக்க இயலாமல் குளமே காணாமல் போய்விடும். எனவே தான் நொய்யல் ஆற்று நீரை தடுத்து வாய்க்கால்கள் மூலம் குளங்கள் நிரப்பப்படுகிறது. கிளை வாய்க்கால்கள் மூலம் குளங்களை நிரப்பும் முறை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் காலத்திலும் பின்னர் மதுரையில் பாண்டிய மன்னர்கள் காலத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நொய்யல் என கூடுதுறையில் பெயர் பெற்றதும் இந்த ஆறு கோவையை நோக்கி ஓடி வருகிறது. நொய்யலில் குறுக்கே எந்த தடுப்பு இருந்தாலும் அதை தகர்த்துக் கொண்டு ஓடி வருவதற்கு காரணம் உள்ளது.

கூடுதுறையில் இருந்து ஒவ்வொரு 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கும் ஒரு மீட்டர் தாழ்வாக நொய்யல் அமைந்துள்ளது. எனவே 30 கிலோ மீட்டர் தூரமுள்ள கோவைக்கு நொய்யல் வரும்போது அதன் நிலை 15 மீட்டர் கீழே இறங்கியுள்ளது.

இது கோவை வரை மட்டுமல்ல. காவிரி ஆற்றுடன் கலக்கும் வரை இதே போல இயற்கையாகவே நொய்யலில் அமைந்துள்ளது. இதன் காரணமாகத்தான் நொய்யல் ஆக்ரோஷமாக பாய்ந்து வருகிறது.




kovai




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 24, 2011 6:03 pm

தாமு அண்ணா நொய்யலின் வரலாறு அருமை ஆனால் தற்பொழுது நொய்யல் ஆற்றின் நிலை வேறு சாயக் கழிவுகளின் சங்கமம் தான் நொய்யல்
இதற்கு காரணமாக இருப்பது திருப்பூர் சாய கழிகள் நொய்யல் ஆற்றில் கலப்பது தான்
ஒரத்துபாளையம் அணை இக்கழிவு நீரால் பாதிக்கப்பட்டு பயனற்று விட்டது



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 24, 2011 6:12 pm

ரா.ரமேஷ்குமார் wrote:தாமு அண்ணா நொய்யலின் வரலாறு அருமை ஆனால் தற்பொழுது நொய்யல் ஆற்றின் நிலை வேறு சாயக் கழிவுகளின் சங்கமம் தான் நொய்யல்
இதற்கு காரணமாக இருப்பது திருப்பூர் சாய கழிகள் நொய்யல் ஆற்றில் கலப்பது தான்
ஒரத்துபாளையம் அணை இக்கழிவு நீரால் பாதிக்கப்பட்டு பயனற்று விட்டது

நன்றி ரமேஷ் சிரி

சோகம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 24, 2011 6:13 pm

நீர் விவசாயத்திற்கு மற்றும் தொழில்துறைக்கும் மிகவும் அவசியம் ஆனால் சில காலமாக பருவ மழை பொய்ப்பதாலும் ஆறுகள் அண்டை மாநிலங்களால் அணையிடப்படுவதாலும் ஆறுகள் வறண்டு இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதையும் காண்கிறோம். . இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்று விட்டோ அல்லது பயிரிடப்படாமல் வெறுமையாகவோ அல்லது மழை நீர் இருக்கும் காலம் வரை பயிரிட்டு விட்டுவிடவேண்டியுள்ளது.
பாலாறு நதிக்கு நேர்ந்தது இது தான். மேலும் பாலாறு தோல் பதனிடும் தொழிற்ச்சாலை கழிவால் மாசடைந்துள்ளது. இதனால் 20,000 ஹெக்டேர் நிலங்கள் வேலூர் மாவட்டத்தில் வீணாகியுள்ளது. வாலாஜா தாலுக்காவில் தோல் பதனிடும் தொழிற்ச்சாலை கழிவு ஓடி பாலாறில் கலக்கும் சில கிராமங்களில் விவசாயம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதைப்போன்றே நொய்யல் ஆற்றில் திருப்பூர் பிண்ணலாடை நிறுவனங்களால் வெளியேற்றப்படும் கழிவு பல்லாயிரம் ஹெக்டேர் நிலங்கள் மற்றும் ஒரத்துபாளையம் அணைக்கட்டை மாசுப்படுத்தியுள்ளது. இந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர் உப்பாகி பயனற்றுப்போனது. அதனால் தொழிற்ச்சாலைக்கு வேண்டிய நீர் பிறயிடங்களிலிருந்து டேங்கர் லாரிகளில் கொண்டுவரப்படுகிறது.
திருப்பெரும்பதூரில் சிப்காட் 642 எக்டெர் நிலம் கையகப்படுத்தும் நேரத்தில் விவசாயிகள் பயப்படும் விக்ஷயம் என்னவேன்றால் இந்த நிலத்தில் ஏரிகள், குளங்கள், மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகள் சேர்ந்து இருந்தால் அது விவசாயத்தை மற்றும் கால்நடை வளர்ப்பை பெரிதும் பாதிக்கும். இதைப்போன்ற நிலை ஒரகடம் மற்றும் மாம்பாக்கத்தில் 1996ல் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க நிலம் கையகப்படுத்தியபோது நேர்ந்ததாக தெரிவிக்கின்றனர். அங்கே நிலங்கள் கையகப்படுத்தும்போது நீர்நிலைகள் மூடப்பட்டதால் விவசாயம் செய்யப்படாமல் இருந்த நிலங்கள் விளைச்சல் அற்ற நிலங்கள் என்று கூறப்பட்டு தொழில் வளர்ச்சிக்காக கையகப்படுத்தப்பட்டது.. இந்த நிலையே திருப்பெரும்பதூரில் நேரலாம் என்று விவசாயிகள் பயப்படுகிறார்கள்.
தண்ணிரை சுத்திகரிப்பு செய்து விற்பனை செய்யும் நிறுவனங்களும் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சும் காரணத்தால் நிலத்தடி நீர் உப்பாகி போக காரணமாகும். நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படும் போது அது சுண்ணாம்பு கற்கள் வழியாக நுழைந்து உப்பாகி போகிறது.. இதனால் குடி நீருக்காக நாம் ரிவெர்ஸ் ஆஸ்மாஸிஸ் இயந்திரத்தையோ அல்லது தண்ணிரை சுத்திகரிப்பு செய்து விற்பனை செய்யும் நிறுவனங்களிடம் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
தகவல் துறை நிறுவனங்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வளர வளர விவசாயம் சென்னை மற்றும் புறநகர் பகுதியியை விட்டு விலகிவிட்டது.. விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறின. வளரும் சென்னைக்கு தண்ணீர் மற்ற மாவட்டங்களில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது, இதனால் அங்கே விவசாயம் கைவிடப்படுகிறது.

நன்றி விவசாயத் தகவல் ஊடகம்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 24, 2011 6:15 pm

அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 24, 2011 7:47 pm

ஒரு நதி எப்படி ஆகக்கூடாது என்பதற்கு உதாரணமாக ஓடிக்கொண்டிருக்கிறது நொய்யல் ஆறு. சாய ஆலை ரசாயனக் கழிவு எவ்வளவு பாதித்துள்ளது என்பதற்குச் சான்றாகி உள்ளது, சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணை. சங்க இலக்கியங்களில் "காஞ்சிமாநதி' என்று சிறப்பு பெற்ற நொய்யல் ஆறு, கோவை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்கள் வழியே 174 கிலோ மீட்டர் பயணம் செய்து, கரூர் அருகே காவிரியில் கலக்கிறது. வற்றாத நதியாக ஓடிய நொய்யல், காலப்போக்கில் பருவமழையை நம்பி வாழ்ந்தது. இன்றோ, திருப்பூர் பகுதியில் செயல்படும் சாயப் பட்டறைகளின் சுத்திகரிக்கப்படாத, ரசாயனக் கழிவுகளைச் சுமக்கும் சாக்கடையாக மாறிவிட்டது

தினமலர் 13-06-2009



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 25, 2011 1:26 am

நொய்யலின் நிலை பரிதாபமாக இருக்கிறதே!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 25, 2011 7:42 am

மகா பிரபு wrote:நொய்யலின் நிலை பரிதாபமாக இருக்கிறதே!


சியர்ஸ் என்ன கொடுமை சார் இது




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக