புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவனை சந்தேகப்படலாமா? Poll_c10கணவனை சந்தேகப்படலாமா? Poll_m10கணவனை சந்தேகப்படலாமா? Poll_c10 
42 Posts - 63%
heezulia
கணவனை சந்தேகப்படலாமா? Poll_c10கணவனை சந்தேகப்படலாமா? Poll_m10கணவனை சந்தேகப்படலாமா? Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
கணவனை சந்தேகப்படலாமா? Poll_c10கணவனை சந்தேகப்படலாமா? Poll_m10கணவனை சந்தேகப்படலாமா? Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கணவனை சந்தேகப்படலாமா? Poll_c10கணவனை சந்தேகப்படலாமா? Poll_m10கணவனை சந்தேகப்படலாமா? Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவனை சந்தேகப்படலாமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 26, 2011 10:51 am

"ஏன் இவ்ளோ லேட்? எங்கே போயிட்டு வர்றீங்க...'' - புது மனைவி அனிதாவின் அதிகாரமான குரல் அசோக்கை முதன் முறையாக அதிரச் செய்தது.

"வரும் வழியில் பெட்ரோல் இல்லாமல் டூவீலர் நின்றுவிட்டது. அதான் லேட்டாகி விட்டது''.

"இந்த உப்பு சப்பு இல்லாத காரணம் எல்லாம் வேண்டாம். உண்மையில் எங்கே போயிட்டு வர்றீங்க''.

"ஏன் அனிதா இப்படியெல்லாம் கேட்குற? உன் கிட்ட நான் ஏன் பொய் சொல்லணும்?''

"அதைத்தான் நானும் உங்க கிட்ட கேக்குறேன்?''

"நம்பு அனிதா. உன் மேல சத்தியமா ஆபீசில் இருந்து நேரா வீட்டுக்குத்தான் வர்றேன்...''

அசோக் எவ்வளவோ சொல்லியும் அனிதா அவனை புரிந்து கொண்டபாடில்லை. அவன் கூறியதையும் நம்பவில்லை.

ஏன் அவர்களுக்குள் ஆரம்பத்திலேயே இந்த முட்டல், மோதல்?

அசோக்கிற்கும், அனிதாவிற்கும் 3 மாதத்திற்கு முன்புதான் திருமணம் ஆனது. சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார்கள். அசோக்கிற்கு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை. அனிதா பட்டதாரி பெண். வேலைக்கு செல்வது பற்றி இன்னும் அவள் முடிவெடுக்கவில்லை.

தன் மீதான சந்தேகம் அனிதாவிற்கு வலுத்ததால் அவளை பெண் சைக்காலஜிஸ்ட் ஒருவரிடம் அழைத்துச் செல்ல முடிவெடுத்தான் அசோக். இதை அப்படியே அவளிடம் சொன்னால், அவளது சந்தேகம் இன்னமும் அதிகமாகும் என்று எண்ணியவன், நேராக தான் மட்டும் அந்த பெண் சைக்காலஜிஸ்ட் வீட்டிற்குச் சென்றான்.

தனது நிலைமையை முழுமையாக கூறியவன், ஒரு உறவினர் என்கிற பார்வையில் தனது மனைவிக்கு அறிவுரைகள் கூறுமாறு கேட்டுக்கொண்டான். அதற்கு பெண் சைக்காலஜிஸ்ட்டும் ஒத்துக்கொண்டார்.

அனிதாவிடம், விருந்தினர் ஒருவர் தங்களை விருந்துக்கு அழைத்திருப்பதாக பொய் சொல்லி, அவளை சைக்காலஜிஸ்ட் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அந்த சைக்காலஜிஸ்ட்டும் உறவினர் போலவே அனிதாவிடம் பேசினார். அவர் சில கேள்விகளைக் கேட்டபோது, அனிதா தனது மனதிற்குள் பூட்டி வைத்திருந்த பல விஷயங்களை கொட்டத் தொடங்கினாள்.

எந்தவொரு ஆணுக்கும் அழகான மனைவி இருந்தாலும், அடுத்த பெண் மீதான மோகப் பார்வை மட்டும் குறையாது என்று சக தோழியர் கூறியதை அப்படியே மனதில் ஆழமாக பதிந்து வைத்திருந்தாள் அனிதா. நாம் எவ்வளவுதான் தைரியமாக - அதிகாரமாக பேசினாலும், கடைசியில் கணவனிடம் பணிந்து தான் போக வேண்டும் என்றும் கூறி, அறிவுரை என்கிற பெயரில் அவளை மனக்குழப்பத்திற்கு ஆளாக்கி உள்ளனர், அந்த தோழியர்.திருமணமாகி தனிக்குடித்தனம் வந்த நிலையில் பக்கத்து வீட்டுப் பெண்கள் அனிதாவிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர்.

`காலம் கெட்டுக் கிடக்குதும்மா. உன் புருஷனை நீதான் பாத்துக்கணும். புருஷன் தொடர்ந்து வீட்டுக்கு தாமதமா வந்தா, வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் பிடித்துவிட்டார் என்று அர்த்தம். இந்த விஷயத்தில் நீ ஏமாந்து விடாதே' என்று அவர்கள் கூறியது அனிதாவை மேலும் குழப்பமாக்கி விட்டது.

இதை உறுதி செய்வது போல், புது மனைவி மீதான ஆசை, மோகத்தால் தினமும் அலுவலகம் முடிந்ததும் வேகமாக வந்த அசோக், அதன் பிறகு மனைவி சலித்துப் போனதாலோ என்னவோ தாமதமாக வரத் தொடங்கினான். இதுவே அனிதாவின் சந்தேகத்தை பூதாகரமாக கிளப்பி விட்டு விட்டது.

ஒரு உறவினராக சைக்காலஜிஸ்ட் தந்த பல்வேறு அறிவுரைகளுக்குப் பிறகு அசோக்கை முழுமையாக புரிந்து கொண்டாள் அனிதா. இந்த விஷயத்தில் அசோக்கிற்கும் மனைவியிடம் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று சில உண்மைகள் சொல்லப்பட்டன. அதன்பிறகே அவர்களது வாழ்க்கையில் வசந்தம் மலர்ந்தது.

ராமையாவும் மனைவியின் சந்தேகப் பிடியில் சிக்கி மீண்டவர் தான். தான் தவறே செய்யாத நிலையில், தன் மீது சந்தேகப்படும் மனைவியை மேலும் உசுப்பேற்ற வேண்டும் என்பதற்காக காலையில் 8 மணிக்கு வேலைக்கு சென்றவர் இரவு 10 மணிக்குத்தான் வீடு திரும்பினார். மனைவி என்னதான் சந்தேகத்தோடு கத்தினாலும், அதை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு வந்தார்.

ஒருநாள் இரவு 10 மணிக்கு மேலாக வீடு திரும்பிய ராமையாவுக்கு அன்போடு உணவை பரிமாறிய அவரது மனைவி, "ஆமாங்க... உங்களுக்கு ஒரு செய்தி தெரியுமா? நம்ம தெருவுல பேய் நடமாடுதாம். நேற்று கூட ஒருவரை பேய் பிடித்துவிட்டதாம்'' என்று சும்மா ஒரு பொய்யை கொளுத்திப் போட்டாள்.

`பேயா... உன்னையே நான் சமாளிக்கும்போது, எந்த பேயும் என்னை ஒன்றும் செய்து விடாது' என்று மனதிற்குள் நினைத்து சிரித்துக் கொண்டவர், "அப்படியா?'' என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டதோடு அமைதியாகிவிட்டார்.

மறுநாள் வழக்கம்போல் இரவு 10 மணிக்குப் பிறகு வீட்டுக்கு வந்தார் ராமையா. அன்று வழக்கத்திற்கு மாறாக வீட்டின் முன்புறம் இருந்த பெரிய கேட்டை பெரிய பூட்டு போட்டு பூட்டிவிட்டார் அவரது மனைவி. எவ்வளவோ கத்திப் பார்த்தும் அவரது மனைவி வெளியே வரவேயில்லை. செல்போனை தொடர்பு கொண்டும் பயனில்லை.

நேரம் வேகமாக நகர்ந்தது. நேரம் என்னாச்சு என்று கைக்கடிகாரத்தைப் பார்த்தபோது அது சரியாக நள்ளிரவு 12 மணியை தொட்டுக் கொண்டிருந்தது. அந்தநேரத்தில் சில தெருநாய்கள் வேகமாக குரைக்க, முந்தைய நாள் மனைவி சொன்ன பேய் ஞாபகம் வந்தது.

பேய் இல்லை என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்ட ராமையா, திடீரென்று நள்ளிரவு 12 மணிக்கு ஆள் நடமாட்டமே இல்லாத நடுத்தெருவில் நின்றதால் சற்று நடுங்கித்தான் போனார். நீண்ட நேரம் நின்றதால் கால் வலிக்க... அருகில் இருந்த மின் கம்பத்தின் அடியில் அமர்ந்தார். ஒரு நிமிடம் தான் ஓடியிருக்கும். வழக்கமாக பகலில் `கட்' ஆகும் மின்சாரம் அப்போது திடீரென்று `கட்' ஆனது.

பயத்தில் வேகமாக எழுந்த ராமையாவின் சட்டையை யாரோ பிடித்து இழுப்பது போல் இருந்தது. பேய்தான் இழுக்கிறது என்று நினைத்து, அலறியபடியே தனது வீட்டு கேட்டின் முன்பு போய் விழுந்தார். அவரது கை, கால்கள் வேகமாக நடுங்க ஆரம்பித்தன.

தலை நிமிர்ந்து, வீட்டின் கேட்டைப் பார்த்தார். அது லேசாக ஆட ஆரம்பித்து, பின் பலமாக நடுங்கியது. உண்மையிலேயே பேய் வந்துவிட்டது என்ற அதிர்ச்சியில் மயக்கமாகிப் போனார் ராமையா.

மறுநாள் காலையில் வெகுநேரத்திற்குப் பிறகே கண் விழித்தார். வீட்டுக்குள் அவர் படுத்திருக்க, அருகில் அவரது மனைவியும், மகளும் சோகத்தோடு நின்று கொண்டிருந்தனர்.

ராமையா கண் விழித்ததைப் பார்த்த அவரது மனைவி, "நேற்று இரவு மின் கம்பத்தில் என்ன செய்தீர்கள்? உங்கள் சட்டையின் பாதிப் பகுதி அதில் இருந்த கம்பியில் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. நீங்களோ கேட் வாசலில் மயங்கி கிடக்கிறீர்கள். பேய் வந்ததாக நான் சும்மாதான் சொன்னேன். ஆனால், நீங்களோ பேய் அறைந்தது போல் கிடந்தீர்களே...'' என்று சொன்னபோதுதான், `அப்போ என்னை இருந்தது பேய் இல்லையா?' என்று தன்னைத்தானே நொந்து கொண்டார் ராமையா. நடந்த சம்பவத்திற்குப் பிறகு இரவு 7 மணிக்கு எல்லாம் வீட்டுக்கு வர ஆரம்பித்துவிட்டார் அவர்.

கணவன் மீது சந்தேகம் வந்தால், இந்த பேய் பிரச்சினை மட்டுமல்ல, பல பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டி வரும். தம்பதியர் இருவருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டு விடும். தற்கொலை முடிவு கூட எடுக்க நேரலாம்.

அலுவலகத்திலும், அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வரும் வழியிலும் எவ்வளவோ நெருக்கடிகளை ஒரு ஆண் சந்திக்க நேரலாம். வெளியில் தான் சந்திக்கும் எல்லாப் பிரச்சினைகளையும் ஒரு ஆண் வீட்டில் கொட்டினால், அங்கே நிம்மதி போய் விடும்.

மொத்தத்தில் மனைவி தன்னிடம் அன்பு மழை பொழிந்தால் எந்த கணவனும் தொடர்ந்து தாமதமாக வீட்டிற்கு வர மாட்டான். நல்ல கணவனாகத்தான் இருப்பான். இதில் விதிவிலக்காக இருப்பவர்களும் உண்டு. மனைவி உயிருக்கு உயிராகவே வைத்திருந்தாலும் இப்படிப்பட்டவர்கள் இரவில் கொஞ்சமாச்சும் ஊர் சுற்றிவிட்டுத்தான் வீட்டுக்குள் காலெடுத்து வைப்பார்கள்.

இப்படிப்பட்டவர்களை என்ன செய்யலாம்? இதுபற்றி முடிவெடுக்க வேண்டியவர்கள், அவர்களது மனைவிமார்களே!

தினதந்தி



கணவனை சந்தேகப்படலாமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 26, 2011 11:27 am

///மொத்தத்தில் மனைவி தன்னிடம் அன்பு மழை பொழிந்தால் எந்த கணவனும் தொடர்ந்து தாமதமாக வீட்டிற்கு வர மாட்டான். நல்ல கணவனாகத்தான் இருப்பான்/////


சூப்பருங்க நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக