புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாஜி மந்திரிகள் 13 பேருக்கு சிக்கல் Poll_c10மாஜி மந்திரிகள் 13 பேருக்கு சிக்கல் Poll_m10மாஜி மந்திரிகள் 13 பேருக்கு சிக்கல் Poll_c10 
42 Posts - 63%
heezulia
மாஜி மந்திரிகள் 13 பேருக்கு சிக்கல் Poll_c10மாஜி மந்திரிகள் 13 பேருக்கு சிக்கல் Poll_m10மாஜி மந்திரிகள் 13 பேருக்கு சிக்கல் Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
மாஜி மந்திரிகள் 13 பேருக்கு சிக்கல் Poll_c10மாஜி மந்திரிகள் 13 பேருக்கு சிக்கல் Poll_m10மாஜி மந்திரிகள் 13 பேருக்கு சிக்கல் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
மாஜி மந்திரிகள் 13 பேருக்கு சிக்கல் Poll_c10மாஜி மந்திரிகள் 13 பேருக்கு சிக்கல் Poll_m10மாஜி மந்திரிகள் 13 பேருக்கு சிக்கல் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாஜி மந்திரிகள் 13 பேருக்கு சிக்கல்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 30, 2011 8:11 am

உயர்நீதிமன்றக் கண்காணிப்பில் ஊழல் வழக்குகள்!


தி.மு.க. மந்திரிகள் '2006-ல் என்ன சொத்து மதிப்பைத் தேர்தல் கமிஷனிடம் காட்டினார்கள்? 2011-ல் என்ன காட்டினார்கள்? அவர்களின் பினாமிகள், குடும்பத்தினர், நண்பர்கள்... எவ்வளவு சொத்து சேர்த்தனர்? எந்தெந்த வகைகளில் அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார்கள்? என்பதைப்பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்வதில் முதல்வர் ஆர்வமாக இருக்கிறார்!’ என்ற தகவல் அதிகாரிகள் மத்தியில் பரவியது. அதைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களாக, சென்னை தலைமைச் செயலகம் உட்பட வெளியூரில் உள்ள அரசுத் துறைகளில், ஊழல் தொடர்​பான தகவல் சேகரிப்புப் படலம்தான் முழு வீச்சில் நடக்கிறது!

ஊழல் புகார்கள் குவிகின்றன!

உதாரணத்துக்கு ஒன்று - தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில், கோடிக்கணக்கில் மின் திருட்டு செய்யும் இரண்டு முக்கியப் புள்ளிகள், தி.மு.க. ஆட்சி வந்ததும் தங்கள் கம்பெனியைத் திறப்பார்கள். அ.தி.மு.க. ஆட்சி வந்தால், அப்படியே மூடிவிடுவார்களாம். இவர்கள் ஒவ்வொருவரின் சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடிகளைத் தாண்டுமாம். எல்லாமே திருட்டு மின்சாரம் மூலம் வந்த பணம். எந்தெந்த வகையில் இந்த மின் திருட்டு நடந்தது, அதிகாரிகள் யார் யார் உடந்தை என்று, விரிவான தகவல்​களுடன் வந்த கடிதம் ஒன்று, மின் வாரிய விஜிலென்ஸ் கூடுதல் டி.ஜி.பி-யான ராதாகிருஷ்ணன் மேஜையில் இருப்பதாக தலைமைச் செயலக அதிகாரிகள் மத்தியில் பேசப்படுகிறது!



முதல் போணி யார்?

'உள்துறை, மின் துறை, உணவு, விவசாயம், வருவாய், வீட்டு வசதி, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம், தொழில் துறை, கல்வி, சுகாதாரம், பொதுப்பணி, நெடுஞ்சாலை, போக்குவரத்து என 13 துறைகளில் ஊழல் நடந்து உள்ளதா?’ என்று ஆதாரங்களைச் சேகரிக்கும் பொறுப்பை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் பிரிவிடம் ஒப்படைத்து இருக்கிறார் முதல்வர்.

முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனித்த ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் போன்ற துறைகளின் செயல்பாடுகளைப் பற்றி, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் பிரிவை முடுக்கிவிட்டு, தகவல் சேகரிக்கச் சொல்லி இருக்கிறாராம்.

இதே போல், டெண்டர், கான்ட்ராக்ட்கள், அலைக்​கழிப்பு, டார்ச்சர் போன்றவற்றை சந்தித்த தனியார் நிறுவனங்களைத் தேடிப் பிடித்து, முந்தைய ஆட்சியில் நடந்த ஊழல்களைப்பற்றி புகாராகக் கேட்டு வாங்கும் வேலையை, தனியார் கம்பெனி முதலாளிகள் சிண்டிகேட் ஒன்று கனகச்சிதமாகச் செய்து வருகிறதாம். 'பல்வேறு சேனல்களில் கிடைக்கும் ஆதாரங்களை வைத்து, பொது நல வழக்கு போட்டு நீதிமன்றம் மூலமே டைரக்ஷன் வாங்கி, சி.பி.சி.ஐ.டி. பிரிவில் வழக்குப் பதிவு செய்து ஊழல் விசாரணை துரிதப்படுத்தலாமா?’ என்கிற கோணத்திலும் சட்ட ஆலோசனைகள் சொல்லப்படுகின்றன.

ஸ்பெக்ட்ரம் வழக்கை உச்ச நீதிமன்றம் கண்காணிப்​பதைப்​போல, 'தி.மு.க. மந்திரிகளின் ஊழல் புகார்களை சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும்’ என்ற ரீதியில் சமூக ஆர்வலர்கள் யாராவது நீதிமன்றப் படி ஏறவும் வாய்ப்புகள் உண்டு.

தகவல் சேகரிப்பு சேனல்கள் எவை?

13 துறைகளை நிர்வகித்த மந்திரிகள், அந்தத் துறைகளின் உயர் அதிகாரிகள் என இரண்டு தரப்பினரின் பி.ஏ-க்கள், அலுவலக உதவியாளர்கள், டிரைவர்​கள், வீட்டு வேலையாட்கள் யார் யார் என்ற பட்டியலை, ரகசியமாகச் சேகரித்துவிட்டனர். கடந்த தி.மு.க. ஆட்சியில் மந்திரிகளுக்கு நிர்வாகத்தில் உதவ அரசு நியமித்த பி.ஏ-க்கள் ஓரிருவர். ஆனால், வசூல் வேட்டை, பேரம் பேசுவது, அதிகார மிரட்டல் போன்ற 'நம்பர் 2’ விவகாரங்களை கவனிப்பதற்கு என்றே பொலிட்டிக்கல் பி.ஏ-க்கள் என்கிற பெயரில் பலர் இருந்திருக்கார்கள். 15 பி.ஏ-க்களை வைத்துக்கொண்ட அமைச்சர்களும் உண்டாம். மந்திரியை நன்றாகக் குளிர்வித்து தனது பைக்குள் வைத்துக்கொண்ட பொலிடிக்கல் பி.ஏ-வுக்கு மற்ற அனைவரும் அடிமைகள். இந்த வகையில், தினப்படி அலுவலக வேலைகளை மூச்சுத் திணறச் செய்ததோடு, மற்றவர்களின் அவமானங்கள், அவதூறுகளைச் சந்தித்து நொந்துபோன அரசு தரப்பு பி.ஏ-க்கள் சிலர், 'ஏ டு இசட்’ விஷயங்களை வெளியில் சொல்​லத் தயாராகிவிட்டார்கள். இந்த ரீதியிலும் தகவல் சேகரிப்பு நடக்கிறது.

லஞ்ச ஒழிப்புத் துறையின் புதிய கேப்டன் யார்?

சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையின் கமிஷனர் பதவியில் சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான பாலகிருஷ்ணன் இருக்கிறார். அவர் மேற்பார்வையில், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் செயல்படுவார். இந்தப் பதவியில் ஐ.பி.எஸ். அதிகாரி நியமிக்கப்படுவது வழக்கம். இப்போது அந்த இயக்குநர் பதவி காலியாக இருக்கிறது. ஆரம்பத்தில் ஷியாம் சுந்தரை நியமித்துவிட்டு, திடீரென அவரை வேறு பிரிவுக்கு மாற்றிவிட்டார்கள். இதே பிரிவில், எஸ்.ஐ.யூ. என்று அழைக்கப்படும் சிறப்பு விசாரணைக் குழு செயல்படுகிறது. அரசியல் தலைவர்களின் ஊழல்களை மட்டுமே இந்தக் குழு விசாரிக்கும். பெங்களூருவில் நடக்கும் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கண்ணப்பன், நத்தம் விசுவநாதன் போன்ற சிலர் மீதான வழக்குகளை இந்தக் குழுதான் கவனித்து வருகிறது. தி.மு.க. ஆட்சியில் இந்தக் குழுவின் தலைவராக இருந்தவர், கூடுதல் டி.ஜி.பி-யான துக்கையாண்டி. அ.தி.மு.க. ஆட்சி வந்ததும், அவரைத் தூக்கிவிட்டு, அந்த இடத்தில் ஐ.ஜி-யான குணசீலன், எஸ்.பி. அந்தஸ்தில் வெங்கடேஸ்வரன் இருவரையும் நியமித்து இருக்கிறார்கள். இருவரும் தங்களுக்குத் தரப்பட உள்ள அசைன்மென்ட்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். லஞ்ச ஒழிப்பு இயக்குநர் பதவியில் முதலில் யாரையாவது நியமித்தால்தான், இவர்களது அதிரடி வேலைகள் துவங்கும்!

சி.பி.சி.ஐ.டி-யிலும் மாற்றம்?

கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. பிரிவின் தலைமை அலுவலகம் இன்னமும் சுறுசுறுப்பு அடையவில்லை. தற்போது இங்கு கூடுதல் டி.ஜி.பி-யாக இருக்கும் அர்ச்சனா ராமசுந்தரம், எந்த நேரத்திலும் மாற்றப்படலாம் என்கிற சூழ்நிலை நிலவுவதால், புதியவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது இந்தப் பிரிவு. தி.மு.க. ஆட்சியில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டிய அப்போதைய பொதுப் பணித் துறை செயலாளர் ராமசுந்தரத்தின் மனைவி இவர். தமிழகக் காவல் துறையில் நேர்மையானவர் என்று பெயரெடுத்தவர். ஆனால், அவரது கணவரோ... தலைமைச் செயலகக் கட்டட வேலை முடிந்ததும், அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தனியார் நிறுவனம் ஒன்றில் சேர்ந்துவிட்டார். முதல்வர் ஜெயலலிதாவின் முழு கவனமும், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் விழுங்கிய இந்தக் கட்டட ஊழல்களைக் கண்டுபிடிப்பதில் தீவிரமாகவே இருக்கிறது. சில சந்தேகங்களின் அடிப்படையில் ஏதாவது விசாரணை வரும்பட்சத்தில், ராமசுந்தரத்திடமும் விளக்கம் கேட்கப்​படலாம். அந்த நேரத்தில், சி.பி.சி.ஐ.டி-யின் தலைமைப் பதவியில் அர்ச்சனா இருந்தால், தர்மசங்கடம் ஏற்படும். அதைத் தவிர்க்கவே, முன்கூட்டியே அர்ச்சனா வேறு பதவிக்கு மாற்றப்படலாம்!

- ஜூ.வி. கிரைம் டீம்



ஜீ.விகடன் 01-ஜூன் -2011




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 30, 2011 8:46 am

தகவலுக்கு நன்றி தாமு.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 30, 2011 8:55 am

புன்னகை நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 30, 2011 10:28 am

ஐயோ பாவம்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மாஜி மந்திரிகள் 13 பேருக்கு சிக்கல் 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 30, 2011 10:30 am

போக்குவரத்து துறையில் சீக்கிரம் நடவடிக்கை எடுங்கப்பா !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக