புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமலர் செய்திகள்... Poll_c10தினமலர் செய்திகள்... Poll_m10தினமலர் செய்திகள்... Poll_c10 
74 Posts - 47%
heezulia
தினமலர் செய்திகள்... Poll_c10தினமலர் செய்திகள்... Poll_m10தினமலர் செய்திகள்... Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
தினமலர் செய்திகள்... Poll_c10தினமலர் செய்திகள்... Poll_m10தினமலர் செய்திகள்... Poll_c10 
5 Posts - 3%
prajai
தினமலர் செய்திகள்... Poll_c10தினமலர் செய்திகள்... Poll_m10தினமலர் செய்திகள்... Poll_c10 
4 Posts - 3%
Jenila
தினமலர் செய்திகள்... Poll_c10தினமலர் செய்திகள்... Poll_m10தினமலர் செய்திகள்... Poll_c10 
2 Posts - 1%
jairam
தினமலர் செய்திகள்... Poll_c10தினமலர் செய்திகள்... Poll_m10தினமலர் செய்திகள்... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தினமலர் செய்திகள்... Poll_c10தினமலர் செய்திகள்... Poll_m10தினமலர் செய்திகள்... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தினமலர் செய்திகள்... Poll_c10தினமலர் செய்திகள்... Poll_m10தினமலர் செய்திகள்... Poll_c10 
1 Post - 1%
M. Priya
தினமலர் செய்திகள்... Poll_c10தினமலர் செய்திகள்... Poll_m10தினமலர் செய்திகள்... Poll_c10 
1 Post - 1%
kargan86
தினமலர் செய்திகள்... Poll_c10தினமலர் செய்திகள்... Poll_m10தினமலர் செய்திகள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினமலர் செய்திகள்... Poll_c10தினமலர் செய்திகள்... Poll_m10தினமலர் செய்திகள்... Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
தினமலர் செய்திகள்... Poll_c10தினமலர் செய்திகள்... Poll_m10தினமலர் செய்திகள்... Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
தினமலர் செய்திகள்... Poll_c10தினமலர் செய்திகள்... Poll_m10தினமலர் செய்திகள்... Poll_c10 
9 Posts - 4%
prajai
தினமலர் செய்திகள்... Poll_c10தினமலர் செய்திகள்... Poll_m10தினமலர் செய்திகள்... Poll_c10 
6 Posts - 3%
Jenila
தினமலர் செய்திகள்... Poll_c10தினமலர் செய்திகள்... Poll_m10தினமலர் செய்திகள்... Poll_c10 
4 Posts - 2%
Rutu
தினமலர் செய்திகள்... Poll_c10தினமலர் செய்திகள்... Poll_m10தினமலர் செய்திகள்... Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தினமலர் செய்திகள்... Poll_c10தினமலர் செய்திகள்... Poll_m10தினமலர் செய்திகள்... Poll_c10 
2 Posts - 1%
jairam
தினமலர் செய்திகள்... Poll_c10தினமலர் செய்திகள்... Poll_m10தினமலர் செய்திகள்... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தினமலர் செய்திகள்... Poll_c10தினமலர் செய்திகள்... Poll_m10தினமலர் செய்திகள்... Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தினமலர் செய்திகள்... Poll_c10தினமலர் செய்திகள்... Poll_m10தினமலர் செய்திகள்... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமலர் செய்திகள்...


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 10:35 am

சோனியாவை சந்திக்கிறார் ரங்கசாமி

புதுச்சேரி : காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து என்.ஆர்., காங்கிரசிற்கு ஆதரவு கோருவதற்காக டில்லி சென்றுள்ளார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. 4 எம்.எல்.ஏ.,க்களின் எதிர்ப்பால் புதுச்சேரியில் ரங்கசாமி அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. மேலிடம் கூறினால் ஆதரவு அளிப்பதாக எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்ததால் ஆதரவு கோருவதற்காக ரங்கசாமி டில்லி சென்றுள்ளார். புதுச்சேரியிலிருந்து சென்னை வந்த ரங்கசாமி, விமானம் மூலம் டில்லி சென்றார்.




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தினமலர் செய்திகள்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 10:37 am

டில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

புதுடில்லி : லோக்சபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதற்காக அனைத்துக்கட்சிகளின் ஒருமித்த கருத்தைப் பெறுவதற்காக இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. பார்லிமெண்ட்டில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இத்தகவலை லோக்சபா சபாநாயகர் மீராகுமார் தெரிவித்துள்ளார்.




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தினமலர் செய்திகள்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 10:38 am

விபத்தில்லா மாவட்டமாக்க மாவட்ட கலெக்டர் உத்தரவு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற, உரிய முயற்சி மேற்கொள்ள வேண்டும் என, சாலைப்பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் குமரகுருபரன் உத்தரவிட்டார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சாலைப் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் சாலை விபத்தை தடுக்கும் நடவடிக்கை, நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதை தடுப்பது குறித்து ஆராயப்பட்டது. மேலும், நாமக்கல் நகரில் உள்ள முக்கிய சந்திப்புகளில் சோலார் விளக்குகள் அமைப்பது. சாலை நடுவில் எச்சரிக்கை விளக்கு பொருத்துதல், விளம்பரபோர்டுகளால் ஏற்படும் இடையூறுகளை தவிர்த்தல், சாலைகளில் ஒளிரும் அறிவிப்பலகை பெரிதாக தெரியும் வகையில் அமைத்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தவிர, சாலைப்பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள அனைத்து அலுவலர்களும் துறையின் மூலம் மேற்கொள்ளவேண்டிய பணிகளை உடனுக்குடன் நிறைவேற்றி, நாமக்கல் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற முயற்சி மேற்கொள்ள வேண்டும் என, கலெக்டர் குமரகுருபரன் உத்தரவிட்டார். மாவட்ட போலீஸ் எஸ்.பி., பிரவேஷ்குமார், கூடுதல் எஸ்.பி., சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சீத்தாலட்சுமி, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் குழந்தைவேலு ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தினமலர் செய்திகள்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 10:39 am

கேம்பஸ் இன்டர்வியூ 18 பேர் பணிக்கு தேர்வு

நாமக்கல்: தோளூர்பட்டி கொங்குநாடு இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில், 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சவுத் இந்தியா சர்ஜிக்கல் நிறுவனத்தினர் நடத்திய கேம்பஸ் இன்டர்வியூவில், மொத்தம் 80 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், 18 மாணவர்கள் தேர்வு பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கொங்குநாடு கல்வி அறக்கட்டளைத் தலைவர் பெரியசாமி, பொருளாளர் தென்னரசு ஆகியோர் பணி நியமன உத்தரவை வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர். தேர்வு பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் லூயிஸ் டிசோசா, ஒருங்கிணைப்பாளர் குமரவேல், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரி செல்வக்குமார் கேம்பஸ் இன்டர்வியூக்கான ஏற்பாடுகளை செய்தார்.




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தினமலர் செய்திகள்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 10:40 am

பார்லிமென்டின் மழைக்கால தொடர் ஆக., 1ல் ஆரம்பம் பெண்கள் மசோதா குறித்து இன்று ஆலோசனை

புதுடில்லி:பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர், வரும் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்கி, செப்டம்பர் 8ம் தேதி வரை நடக்கிறது. பார்லிமென்ட் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதற்கிடையே, மகளிர் மசோதா விவகாரத்தில், அரசியல் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், அதுகுறித்து விவாதிக்க, இன்று, அனைத்து கட்சிக் கூட்டத்தை, லோக்சபா சபாநாயகர் மீரா குமார் கூட்டியுள்ளார்.பார்லிமென்ட் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, பார்லிமென்ட் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பவன் குமார் பன்சால் கூறியதாவது:பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரை, வரும் ஆகஸ்ட் 1ம் தேதி கூட்டுவது என, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத் தொடர், செப்டம்பர் 8ம் தேதி வரை நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பார்லிமென்ட் கூட்டத் தொடரை கூட்டும்படி, ஜனாதிபதி பிரதிபாவுக்கு, மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்யவுள்ளது.

மழைக்கால கூட்டத் தொடரை, தாமதமாக கூட்டுவதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். கடந்த காலங்களில், ஆகஸ்ட்டில் மழைக்கால கூட்டத் தொடர், கூட்டப்பட்டுள்ளது. இதை முன் உதாரணமாக வைத்து தான், தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத் தொடரில், மகளிர் மசோதா நிறைவேற்றப்படுமா என, கேட்கப்படுகிறது. இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. ராஜ்யசபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, இதற்கு அரசு தரப்பில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதோ, அதே அளவு முக்கியத்துவம் தற்போதும் அளிக்கப்படும். லோக்பால் மசோதா, இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என, ஏற்கனவே உறுதி அளித்துள்ளோம்.இவ்வாறு பவன் குமார் பன்சால் கூறினார்.
அனைத்து கட்சி கூட்டம்: லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில், பெண்களுக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா, கடந்தாண்டு மார்ச்சில், ராஜ்யசபாவில், பெரும் அமளிக்கு பின் நிறைவேற்றப்பட்டது.ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சி எம்.பி.,க்கள், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரண்டு நாட்கள் நடந்த கடும் அமளிக்கு பின், ஒருவழியாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. லோக்சபாவில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு, அந்த கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன."மகளிர் மசோதாவில், பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு, உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும். இந்த நடவடிக்கையை மேற்கொள்ளாமல், தற்போது உள்ள நிலையிலேயே, மசோதாவை நிறைவேற்றினால், அதை கடுமையாக எதிர்ப்போம்' என, அந்த கட்சிகள் கூறி வருகின்றன.இதனால், வரும் ஆகஸ்ட்டில் கூடவுள்ள, மழைக்கால கூட்டத் தொடரின் போது, இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் அரசு தரப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே, இந்த விவகாரத்தில், அரசியல் கட்சிகளிடையே, ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக, இன்று, அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட, லோக்சபா சபாநாயகர் மீரா குமார் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், அவர் கடிதம் எழுதியுள்ளார்.இக்கூட்டத்தில், ஒருமித்த கருத்து எட்டப்பட்டால், மகளிர் மசோதா எந்த வித சிரமும் இல்லாமல், லோக்சபாவில் நிறைவேற வாய்ப்புள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தாமதம் ஏன்? பா.ஜ., கேள்வி""பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் தாமதமாக கூட்டப்பட்டுள்ளது. இதைப் பார்க்கும்போது, மத்திய அரசுக்கு பார்லிமென்டில் பெரும்பான்மை உள்ளதா என்ற கேள்வி எழுகிறது,'' என, பா.ஜ., கூறியுள்ளது.பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் கூறியதாவது:
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர், ஜூலையில் கூட்டப்படுவது தான் வழக்கம். ஜூலை 18ம் தேதி நடத்துவதாக இருந்த கூட்டத்தொடர், இம்முறை, மிகவும் தாமதமாக கூட்டப்பட்டுள்ளது.இதைப் பார்க்கும்போது, மத்திய அரசுக்கு, பார்லிமென்டில் பெரும்பான்மை உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.,க்களே, தெலுங்கானா விவகாரத்தில், கட்சி மேலிடத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.அதேபோல், காங்கிரசின் கூட்டணி கட்சிகளும் அதிருப்தியில் உள்ளன. இதன்காரணமாக, பார்லிமென்ட் கூட்டத் தொடரை எதிர்கொள்ள, அரசு பயப்படுகிறது. ஊழல் பிரச்னைகளாலும், மத்திய அரசுக்கு நெருக்கடி எழுந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், பார்லிமென்ட் கூட்டத் தொடர் கூட்டப்பட்டால், பிரச்னை ஏற்படுமோ என, மத்திய அரசு தயங்குகிறது.இவ்வாறு ஷாநவாஸ் உசேன் கூறினார்.




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தினமலர் செய்திகள்... 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 22, 2011 10:42 am

உண்மையின் உரைகல் !!!!

பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 10:43 am

உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு

சேலம்:""பா.ம.க.,வில் இருந்து நீக்கப்பட்ட இரண்டு முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், வரும் 26ல், சேலம் மேச்சேரியில் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் பா.ம.க.,வில் அதிருப்தியில் உள்ள, முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். கூட்ட முடிவில், போட்டி பா.ம.க., குறித்தமுக்கிய அறிவிப்பு வெளியிடப்படும்,'' என, முன்னாள் எம்.எல்.ஏ., காமராஜ் தெரிவித்தார்.பா.ம.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ., காமராஜ், சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:நான், 1986ம் ஆண்டு முதல் வன்னியர் சங்கத்திலும், 1989ல் பா.ம.க., துவக்கப்பட்டதிலிருந்து, இன்று வரை பா.ம.க.,வில் தான் இருக்கிறேன். பல்வேறு பொறுப்புகளை வகித்து, கட்சிக்கு உண்மையான விசுவாசியாக இருந்து கட்சியை வளர்த்தேன்.கடந்த லோக்சபா தேர்தலில் ஏழு தொகுதியில் தோல்வி அடைந்தது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மூன்று தொகுதியில் மட்டும் வெற்றி; பிற தொகுதிகள் அனைத்திலும் தோல்வியை சந்தித்தது.
இந்த அளவு தோல்விக்கு காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து சரிசெய்யாமல், தலைமை, கட்சிக்காரர்களையும், முன்னோடிகளையும் மதிக்காமல், ஒதுக்குவது சரியான அணுகுமுறையில்லை. தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறும் போது, "கருணாநிதி அருணாக்கயிற்றையும் கழற்றி விடுவார்' என்று தெரிவிப்பதும், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகும் போது, "ஜெயலலிதாவுடன் உறவு வைப்பது, தாயுடன் உடல் உறவு கொள்வதற்கு சமம்' என்று தெரிவிப்பதை, வன்னிய மக்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. அன்புமணியின் வருகைக்கு பின்னரே, பா.ம.க., தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. பாட்டாளி மக்களுக்காக துவக்கப்பட்ட கட்சி, தற்போது மிகப்பெரிய பணக்கார கட்சியாக மாறி, தற்போது கோடீஸ்வரர்கள் மட்டும் இருக்கும் இடமாக உள்ளது. பா.ம.க.,வுக்கு இனிமேல் வன்னியர்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்பது தான் உண்மை.மேட்டூர், பென்னாகரம் தொகுதியில், 10 ஆண்டாக எம்.எல்.ஏ.,வாக இருந்த மணி, அதிக நாள் சென்னையிலேயே இருந்தார். தொகுதி பக்கம் வருவதும் இல்லை, குறை கேட்பது இல்லை. கட்சி உறுப்பினர்களின் சுக, துக்க நிகழ்ச்சிகளை கூட தவிர்த்து வந்துள்ளார்.
என்னிடம் எவ்வித விளக்கமும் கேட்கவில்லை. நேரடி விசாரணையும் இல்லை. நோட்டீஸ் கூட அனுப்பவில்லை. ஜனநாயகமே இல்லாத கட்சியில் இருந்ததை எண்ணி வருந்துகிறேன்.மணி தோல்விக்கு நான் தான் காரணம் என, சொல்லி என்னை நீக்கியதை தொகுதியில் உள்ள பா.ம.க.,வினர் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
இவ்வளவு காலம் கட்சியில் இருந்து, வக்கீலாக பணியாற்றி ஆரம்ப காலகட்டத்தில் பல நாள் சிறைக்கு சென்று, பல வழக்குகளில் இலவசமாக பெயில் வாங்கித் தந்த எனக்கே இந்த நிலை என்றால், கடைக்கோடி தொண்டனுக்கு என்ன நிலை ஏற்படும் என்பதை வன்னியர்கள், பா.ம.க., தொண்டர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
தொடர்ந்து வன்னிய சமுதாய மக்களுக்காகவும், ஏழை எளிய மக்களுக்காகவும் என் பணி தொடரும். வரும் 26ல், மாவட்ட அளவிலும், தொகுதியில் உள்ள கட்சியினர், மாநில அதிருப்தியாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டம், மேச்சேரியில் நடக்கிறது.இந்தக் கூட்டத்தில் பா.ம.க.,வில் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து உள்ளனர். இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு, போட்டி பா.ம.க., உருவாக்குவது குறித்து அறிவிப்பை வெளியிட உள்ளோம்.இவ்வாறு காமராஜ் கூறினார்.பா.ம.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ., காவேரி கூறியதாவது:பா.ம.க.,வில் இருந்து என்னையும், தாரமங்கலம் காமராஜையும் நீக்கியது குறித்து தொண்டர்களுடன், ஆலோசனை நடத்துவதற்காக மேச்சேரியில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.இந்தக் கூட்டத்தில், தமிழகம் முழுவதிலும் இருந்து, தலைவர் மணியை நீக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துபவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.அந்த முடிவு, போட்டி பா.ம.க.,வாகவோ, வன்னியர் இயக்கமாகவோ இருக்கலாம்.
இவ்வாறு காவேரி கூறினார்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தினமலர் செய்திகள்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 10:50 am

திருச்சியில் இயங்கிய முதல்வரின் தனிப்பிரிவுஉடனடி நடவடிக்கையால் குவிந்த மனுக்கள்

திருச்சி:முதல்வர் ஜெயலலிதா, மூன்று நாட்களாக திருச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால், முதல்வரின் தனிப்பிரிவு அலுவலர்களும் திருச்சியில் குவிந்து மனுக்களை பெற்றுக் கொண்டு, உடனடி நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 19ம் தேதி திருச்சிக்கு வந்தார். முதல்வராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக, தன் சொந்த தொகுதியான ஸ்ரீரங்கம் மேலசித்திரை வீதியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்றார்.மொத்தம், 190 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 430 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, 25 பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். அதைத் தொடர்ந்து மீதமிருந்த பயனாளிகளுக்கு, அதிகாரிகள் வழங்கினர்.
தொடர்ந்து, 20, 21 ஆகிய இரண்டு நாள் மாலை வேளையில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

சங்கம் ஓட்டலில் மூன்று நாள் தங்கியிருந்த அவர், "முதல்வரின் தனிப்பிரிவு'க்கு வந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
"முதல்வரின் தனிப்பிரிவு' அலுவலகத்திலிருந்து எந்த மனுக்கள் பரிந்துரை செய்யப்பட்டாலும் அந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது விசாரித்து தனிப்பிரிவு அலுவலகத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.கடந்த ஆட்சியிலும் முதல்வரின் தனிப்பிரிவு இயங்கியது. பெரும்பாலும், மனுக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படுவதோடு சரி; பெரிய அளவில், "ஆக்ஷன்' இருந்ததில்லை.ஜெயலலிதா முதல்வரான பின், "முதல்வரின் தனிப்பிரிவு' அதிகாரிகள் சுறுசுறுப்படைந்தனர். முதல்வர் ஜெயலலிதா, திருச்சியில் மூன்று நாள் முகாமிட்டதால், "முதல்வர் தனிப்பிரிவு' அதிகாரிகள் குழுவினரும் இங்கு வந்தனர். அவர் செல்லும் இடங்கள் மற்றும் தங்கியிருந்த சங்கம் ஓட்டல் வாசலில் முகாமிட்டனர்.மனுக்கள் கொடுக்க வரும் மக்கள் பற்றிய முழு விவரங்களை கேட்டறிந்து, விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உரிய துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர். அதேபோல், மனுக்கள் மீது அதிகாரிகளும் துரிதமாக நடவடிக்கை எடுத்து, மனுதாரர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கினர்.முதல்வரின் உடனடி நடவடிக்கையால் மகிழ்ச்சியடைந்த திருச்சி மாவட்ட மக்கள், சங்கம் ஓட்டல் முன், அதிகளவில் குவிந்தனர். திருச்சி மாவட்டம் மட்டுமின்றி, சுற்றுப்புற மாவட்ட மக்களும், திருச்சியில் குவிந்தனர்.பல்வேறு மனுக்கள் குவிந்தாலும், சளைக்காமல் அதைப் பெற்ற, "முதல்வரின் தனிப்பிரிவு' அதிகாரிகள், உரிய முறையில் விசாரித்து நடவடிக்கைக்கு பரிந்துரைத்தனர். முதல்வர் வருகையால், கடந்த 20ம் தேதி, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் முகாமில் கூட, மனுக்கள் வழங்குபவர் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தினமலர் செய்திகள்... 47
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Jun 22, 2011 11:11 am

நான் இன்னைக்கு பேப்பர் வாங்கலீங்கோ....



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 11:23 am

அப்ப இந்தா படிங்க சுதாந்தா... புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தினமலர் செய்திகள்... 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக