புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குருபெயர்ச்சி பலன்கள் - Page 2 Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் - Page 2 Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் - Page 2 Poll_c10 
38 Posts - 63%
ayyasamy ram
குருபெயர்ச்சி பலன்கள் - Page 2 Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் - Page 2 Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் - Page 2 Poll_c10 
13 Posts - 22%
Baarushree
குருபெயர்ச்சி பலன்கள் - Page 2 Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் - Page 2 Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
குருபெயர்ச்சி பலன்கள் - Page 2 Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் - Page 2 Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
குருபெயர்ச்சி பலன்கள் - Page 2 Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் - Page 2 Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
சிவா
குருபெயர்ச்சி பலன்கள் - Page 2 Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் - Page 2 Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் - Page 2 Poll_c10 
1 Post - 2%
viyasan
குருபெயர்ச்சி பலன்கள் - Page 2 Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் - Page 2 Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Rutu
குருபெயர்ச்சி பலன்கள் - Page 2 Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் - Page 2 Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குருபெயர்ச்சி பலன்கள் - Page 2 Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் - Page 2 Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் - Page 2 Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
குருபெயர்ச்சி பலன்கள் - Page 2 Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் - Page 2 Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் - Page 2 Poll_c10 
1 Post - 8%
Rutu
குருபெயர்ச்சி பலன்கள் - Page 2 Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் - Page 2 Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் - Page 2 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருபெயர்ச்சி பலன்கள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 03, 2008 11:50 pm

First topic message reminder :

குருபெயர்ச்சி பலன்( டிசம்பர் , 2008 முதல் டிசம்பர் , 2009 வரை

( குரு பகவான் 2008 டிசம்பர் 6 காலை 6மணிக்கு, தனுசுராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ந்து 2009 டிசம்பர் 8 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார் )

1. மேஷம்

2. ரிஷபம்

3. மிதுனம்

4. கடகம்

5. சிம்மம்

6. கன்னி

7. துலாம்

8. விருச்சிகம்

9. தனுசு

10. மகரம்

11. கும்பம்

12. மீனம்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 04, 2008 12:23 am

பெண்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் பணியை சரிவர நிறைவேற்றுவர். நிர்வாகத்தின் பாராட்டும் சலுகையும் கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் அன்பையும் சுமாரான பணவரவையும் பெற்று சந்தோஷ வாழ்க்கை நடத்துவர். தாய்வழி சீர்முறை எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் ஆர்டர் பெற்று தொழில் வளர்ச்சி காண்பர். புதிய கிளை துவங்கும் திட்டம் நிறைவேறும். கூட்டுத்தொழில் புரிய வரும் அழைப்புகளை புறக்கணிப்பது நல்லது.


மாணவர்கள்: கம்ப்யூட்டர், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், சட்டம், தகவல் தொழில்நுட்பம், கேட்டரிங், ஏரோநாட்டிக்கல், விவசாயம், மாடலிங், சினிமா படிப்புகள், ஜர்னலிசம், பிரின்டிங் டெக்னாலஜி, லேப் டெக்னீஷியன், நிர்வாகம், மோட்டார் மெக்கானிசம் சார்ந்த மாணவர்களின் படிப்பு பின்தங்க வாய்ப்புண்டு. மற்றவர்களும் தகுந்த கவனத்துடன் படிப்பதால் மட்டுமே தரதேர்ச்சியை பெற முடியும். படிப்புக்கான பணவசதி சீராக கிடைக்கும்.


அரசியல்வாதிகள்: ஒவ்வொரு செயலையும் நிதானத்துடன் நிறைவேற்ற வேண்டும். எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி உட்கட்சி பூசலாலும் இடைஞ்சல் ஏற்படும். நியாயம் உங்கள் பக்கம் இருக்கும் வகையில் சிரமம் தவிர்க்கலாம். ஆதரவாளர்கள் உங்கள் மீது அதிருப்தி கொள்ளும் நிலை இருக்கிறது. புத்திரர்கள் உங்களின் அரசியல் பணி சிறப்புபெற உறுதுணையாக செயல்படுவர்.


விவசாயிகள்: பயிர்வளர்ப்பில் இருக்கும் நடைமுறைகளை கவனமுடன் பின்பற்றுவதால் மட்டுமே மகசூல் அதிகரிக்கும். கால்நடை அபிவிருத்தியும், அதன் மூலமாக கூடுதல் பணவரவும் கிடைக்கும். நிலம் தொடர்பான பிரச்னை வந்து விலகும்.


நீங்கள் செய்ய வேண்டியது: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வெள்ளியம்பல நடராஜரை வழிபடுவதன் மூலம் இக்கட்டான நிலை வரும் போது தப்பி விடலாம். கீழ்க்கண்ட பாடலை 11 முறை பாராயணம் செய்யவும்.


குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்


பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்


இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்


மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 04, 2008 12:24 am

(90/100) + நினைத்துப் பாராத பணம், - ஒன்றுமே இல்லைங்க




குரு பகவான் வரும் டிசம்பர் 6 காலை 6மணிக்கு, தனுசுராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ந்து 2009 டிசம்பர் 8 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.




உத்திரம் - 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2




கலைரசனை மிகுந்த கன்னி ராசி அன்பர்களே!




உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் மகரராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு சிரம பலன்களை அனுபவித்திருப்பீர்கள். இப்போதைய குருபெயர்ச்சி உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். மகரத்தில் உள்ள குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வையால் ராசிக்கு 9, 11ம் இடங்களையம், ராசியையும் பார்க்கிறார். குரு அமர்ந்த இடமும், பார்வை பெற்ற இடங்களும் உங்களுக்கு நிறைந்த நற்பலனைத் தரும் வகையில் உள்ளது. மனதில் உற்சாகத்துடன் செயல்புரிவீர்கள். பெரும்பாலான செயல்பாடுகளில் முழு வெற்றி கிடைக்கும். நடை, உடை, பேச்சில் தோரணை ஏற்படும். நினைத்து பார்த்திராத வகையில் பணவரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் நடந்துகொள்வர். சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் சுபமங்கல நிகழ்வுகளை முன்னின்று நடத்தும் வாய்ப்பு நிறைவேறும். வீடு, வாகனம் சார்ந்த வகையில் தேவையான வளர்ச்சி மாற்றம் செய்து மகிழ்வீர்கள். தாயின் அன்பும், ஆசியும் கிடைக்கும்.




புத்திரர், பெற்றோரின் எண்ணங்களை புரிந்து அதற்கேற்ப நடந்து கொள்வர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் திட்டமிட்டபடி கைகூடும். குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக துணை நிற்கும். புத்திரப்பேறு விரும்புபவர்களுக்கு குருவருளால் நற்பலன் உண்டு. உடல்நலம் பலம் பெற்று திகழும். கடந்த வருடங்களில் ஏற்பட்ட பணக்கடனை பெருமளவில் சரிசெய்வீர்கள். வழக்கு விவகாரத்தில் அனுகூல வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் நிறைவேற்ற வேண்டிய சுபநிகழ்ச்சியை தாராள பணச்செலவில் மகிழ்வுடன் நடத்துவீர்கள்.




கணவன் மனைவி ஒருவர் நலனில் ஒருவர் அக்கறையுடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சி தழைக்கச்செய்வர். உங்களின் சமூக அந்தஸ்து உயர நண்பர்கள், புதிய திட்டத்துடன் அணுகுவர். இதனால் மிகுந்த நன்மை ஏற்படும். ஆபத்து எதுவும் அணுகாது. அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்கால தேவைக்கு பணசேமிப்பும் உருவாகும். சுற்றுலா மேற்கொள்வீர்கள். புதியவர்களின் நல் அன்பை பெறுவீர்கள்.




தொழிலதிபர்கள்: டெக்ஸ்டைல்ஸ், கம்ப்யூட்டர், மருந்து, வீட்டு அலங்கார பொருட்கள், காகிதம், மரத்தொழில், மலைத்தோட்டப் பயிர், தோல், பிளாஸ்டிக், பிளக்ஸ், மின்சாதனங்கள் தயாரிக்கும் தொழிலதிபர்கள் உற்சாகமாக செயல்புரிந்து தொழிலில் வளர்ச்சி காண்பர். தாராள பணவரவு கிடைக்கும். கல்வி நிறுவனம், தொழிற்பயிற்சி பள்ளி, எண்ணெய் ஆலை, அச்சக அதிபர்கள் இவர்களையும் விட அதிக லாபம் சம்பாதிப்பர். நிறுவனங்களில் விரிவாக்கப்பணிகள் செய்ய வாய்ப்புண்டு. புதிய தொழில் துவங்க வெகுகாலம் திட்டமிட்ட வாய்ப்பு இனிதே நிறைவேறும். அனைத்து தொழிலதிபர்களுக்கும் இந்த குருபெயர்ச்சி ஆதாய நற்பலனையே தரும்.




வியாபாரிகள்: ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், ஜவுளி, நகை, மின்சார சாதனங்கள், கட்டுமானப் பொருட்கள், பர்னிச்சர், காய்கறி, மலர், விவசாய இடுபொருட்கள், ஸ்டேஷனரி, பேக்கரி சாமான்கள், விளையாட்டு சாதனங்கள், மருந்து, அழகு சாதன பொருட்கள், வாசனை திரவியங்கள் வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் விற்பனையால் ஆதாய பணவரவை பெறுவர். மற்ற வியாபாரிகளுக்கும் ஓரளவு ஏற்றமான சூழ்நிலையே. வியாபாரத்தில் புத்திரரின் பங்கு பெருமளவில் துணை நிற்கும். அபிவிருத்தி முயற்சிகள் வெற்றி பெறும். சிலருக்கு புதிய கிளை துவங்கவும், சொந்த கட்டடம் கட்டவும் அனுகூல பலன் உண்டு.




பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தமது சுயதிறமைகளை வெளிப்படுத்தி பணியில் சிறப்பிடம் பெறுவர். நிர்வாகத்தின் அன்பிற்கு உட்படுவீர்கள். கவுரவமும் சலுகையும் கிடைக்கும். பள்ளி, கல்லூரி, அச்சகம், ஓட்டல், டிபார்ட்மென்டல் ஸ்டோர், உணவுப் பொருட்கள் தயாரிப்பு, சாய தொழிற்சாலை, ரெடிமேட் ஆடை உற்பத்தி, மார்க்கெட்டிங், பர்னிச்சர், கலை அழகுப் பொருட்கள் உற்பத்தி, மின்சாதனங்கள் பழுதுநீக்குதல், கட்டுமான பணிகள் உட்பட பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்கள் தங்கள் திறமைமிகு பணியினால் கூடுதல் வேலைவாய்ப்பும் அதிக சம்பளமும் கிடைக்கப்பெறுவர். சக பணியாளர்களுடன் சுமூக நட்புறவு இருக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 04, 2008 12:26 am

பெண்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு உரிய பொறுப்பை உணர்ந்து சிறப்புடன் செயல்படுவர். பணி இலக்கு எளிதில் பூர்த்தியாகும். பணவரவை நகையாகவும் சேமிப்பாகவும் மாற்றுவீர்கள். குடும்ப பெண்கள் உற்சாக மனதுடன் செயல்புரிந்து குடும்பத்தை வளமை பெறும் நிலைக்கு கொண்டுவருவர். புத்திரப்பேறு விரும்புபவர்களுக்கு குருவருளால் நற்பலன் கிடைக்கும். தொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணியை நிறைவேற்றுவர். ஆதாய பணவரவு கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு கணவரின் உதவி பெரிதும் துணை நிற்கும்.




மாணவர்கள்: சட்டம், இலக்கியம், ஓவியம், சிற்பக்கலை, கம்ப்யூட்டர், வங்கியியல், தணிக்கையியல், கேட்டரிங், மாடலிங், அனிமேஷன், ஆசிரியர் பயிற்சி, ஜர்னலிசம், சிவில் இன்ஜினியரிங், விவசாயம், ஏரோநாட்டிக்கல், மரைன், டிரைவிங், மருத்துவம், சினிமா பயிற்சிகள், ரசாயனம், பவுதிக மாணவர்கள் கவனமாகப் படித்து தரத்தேர்ச்சி பெறுவர். மற்ற துறையினருக்கும் படிப்பில் பாதகமில்லை.




அரசியல்வாதிகள்: உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். புதிய ஆதரவாளர்கள் வந்து சேர்வர். உங்களின் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகிப்போவர். அரசு அதிகாரிகளிடம் இதமாக நடந்து கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். புத்திரர்களை அரசியலில் புகுத்த சரியான நேரம்.




விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான அனைத்து அம்சங்களும் அனுகூலமாகவே கிடைக்கும். மகசூல் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பில் சுமாரான அளவில் பணவரவு கிடைக்கும். சிலருக்கு புதிய நிலம் வாங்குவதற்கான யோகபலன் குருவருளால் உண்டு.




நீங்கள் செய்ய வேண்டியது: தஞ்சாவூரில் உள்ள குபேரபுரீஸ்வரர் (தஞ்சபுரீஸ்வரர்) கோயிலுக்கு சென்று வணங்கினால், பணவரவு மேலும் அதிகரிக்கும். வீட்டில் ஏதாவது ஒரு வெள்ளியன்று குபேர பூஜை நடத்தவும்.




கீழ்க்கண்ட பாடலை 11 முறை பாராயணம் செய்யவும்.




மாசில் வீணையும் மாலை மதியமும்




வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்




மூசு வண்டறை பொய்கையும் போன்றதே




ஈசன் எந்தன் இணையடி நீழலே!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 04, 2008 12:27 am

(40/100), + சகோதரர்களால் உதவி, - கடுமையான செலவு


குரு பகவான் வரும் டிசம்பர் 6 காலை 6மணிக்கு, தனுசுராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ந்து 2009 டிசம்பர் 8 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.


சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3


நியாயத்தை கண்ணெனப் போற்றும் துலாம் ராசி அன்பர்களே!


உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் மகரராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார். குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வையால் ராசிக்கு 8, 10, 12 ஆகிய இடங்களை பார்க்கிறார். குருவின் அமர்வு தரும் பலன்களைவிட அவரின் பார்வை பெறும் இடங்களில் இருந்துதான் பலனை பெற இருக்கிறீர்கள். பணத்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தேவைகளைப் பூர்த்தி செய்ய கூடுதல் நேரம் உழைக்க வேண்டி வரும். தாயாரும், இளைய சகோதரர்களும் பணம் கேட்டு நச்சரிப்பதால், அவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். வீடு, வாகன வகையில் இருக்கும் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள இயலாது. புத்திரர்களின் படிப்பு பின்தங்க வாய்ப்புண்டு. பூர்வ சொத்தில் வருமானம் பெறுபவர்கள் அதை ஏதேனும் ஒரு வழியில் இழக்க நேரிடும். உங்கள் நேரடிப் பார்வையில் இருந்தால் இதில் இருந்து தப்பலாம்.


குலதெய்வ வழிபாடு நிகழ்த்துவதால் நன்மை தரும் பலன்களை பெறலாம். உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படலாம். குடும்பத் தேவையை நிறைவேற்ற கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும். வாங்கிய கடனைத் திருப்பித் தரக்கூட சிரமப்பட வேண்டியிருக்கும். கணவன், மனைவி ஒற்றுமையில் பாதிப்பு ஏற்படும். நண்பர்களிடமும் இதே நிலை தான். அவர்களுக்குள் ஏற்படும் சண்டையில் கருத்துச் சொல்ல முற்பட்டு, நீங்கள் கெட்ட பெயர் வாங்கக்கூடும். கவனமாக இருக்கவும். உங்களை களங்கப்படுத்தவோ அல்லது துன்பப்படுத்தவோ சிலர் நினைப்பர். பொறுமையுடன் இருந்து அவர்களைச் சமாளியுங்கள். மொத்தத்தில் உணர்ச்சிவசப்படும் தன்மை கூடலாம் என்பதால், உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்வது நன்மை தரும். கிடைக்காத பொருளுக்காக ஏங்கும் மனோபாவம் உண்டாகும். எதிரிகளின் தொல்லை நீங்கிவிடும். கஷ்ட காலத்தில் மூத்த சகோதரர்கள் உதவி செய்ய முன்வருவர். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் இனிதாக அமையும். ஆனால், செலவு மிக அதிகமாக இருக்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். சிலருக்கு சொந்தமாக தொழில் துவங்கும் அனுகூல நிலையும் உள்ளது.


தொழிலதிபர்கள்: தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சி காண இயலும். ஆனால், எவ்வளவு லாபம் வந்தாலும் அது பராமரிப்பு, தொழிலாளர் பிரச்னை உள்ளிட்ட வகைகளில் வரவுக்கு மீறி செலவாகி விடும். மூத்த தொழிலதிபர்களில் நம்பகமானவர்களின் வழிகாட்டுதலை ஏற்று செயல்படுவதால் சிரமங்களை தவிர்க்கலாம். இரும்பு, தோல், காகிதம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், மினரல் வாட்டர், பால்பொருட்கள், கட்டுமான பொருட்கள், மரத்தொழில், பிளாஸ்டிக், பீங்கான் தொழில் சார்ந்தவர்கள் ஓரளவு வளர்ச்சி ஏற்பட்டாலும் நினைத்த அளவுக்கு லாபம் எதிர்பார்ப்பதற்கு இல்லை. லாட்ஜ், டிராவல் ஏஜன்சி நடத்துபவர்களுக்கும் சுமாரான நிலையே. அனுபவமுள்ள தொழிலாளர்கள் சிலர் பணியில் இருந்து விலகிச் செல்வதால் புதியவர்களைக் கொண்டு தொழில் நடத்த சிரமப்பட வேண்டியிருக்கும்.


வியாபாரிகள்: நகை, ஜவுளி, மோட்டார் உதிரிபாகங்கள், சோப்பு, அழகு சாதனப் பொருட்கள், பால்பொருட்கள், உணவு பண்டங்கள், குளிர்பானம், மினரல் வாட்டர், இறைச்சி, கடல் சார் பொருட்கள், மருந்து, செல்போன், கம்ப்யூட்டர், பாத்திரம், வீட்டு அலங்கார பொருட்கள், பர்னிச்சர் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபத்திற்கு வழியில்லை. மற்றவர்களுக்கு ஓரளவு திருப்தி தரும் அளவுக்கு வியாபாரம் இருக்கும். செலவினங்கள் அதிகரிக்கும்.


பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியில் முன்னேற்றம் காண்பர். பணிகளில் இடையூறு ஏதும் வராது. ஆனால், சலுகைகள் கிடைப்பதற்கில்லை. சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்ற நிலையே இந்த ராசி பணியாளர்களுக்கு பணவரவு விஷயத்தில் இருக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். விரும்பாத இடத்துக்கு மாற்றம் வரக்கூடும். எலக்ட்ரிக்கல், இயந்திரம் சார்ந்த பணிகளில் உள்ளவர்களுக்கு மட்டும் ஓரளவு சலுகை கிடைக்கும். சக பணியாளர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். கவனம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 04, 2008 12:28 am

பெண்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் உற்சாகத்துடன் செயல்பட்டாலும், சலுகைகளை எதிர்பார்க்க இயலாது. குடும்பப் பெண்களுக்கு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்படும். வீட்டுச்செலவுக்கு திண்டாட வேண்டியிருக்கும். மாங்கல்ய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் கணவரின் உடல்நலம், ஆரோக்கியம் பலம் பெறும். உங்கள் ராசியில் இந்தக் காலத்தில் பெண் குழந்தைகள் பிறந்தால், எதிர்காலத்தில் அவர்களது மாங்கல்ய பலமே வலுவாக இருக்குமாம். சுயதொழில் புரியும் பெண்களுக்கும் ஓரளவே லாபம் எதிர்பார்க்க முடியும்.


மாணவர்கள்: தகவல் தொழில்நுட்பம், சட்டம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், விவசாயம், ஆடிட்டிங், கேட்டரிங், ஏரோநாட்டிக்கல், மரைன், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, வானவியல், வேதசாஸ்திரம், நிதி மேலாண்மை, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மார்க்கெட்டிங், மாடலிங், சினிமாட்டோகிராபி, இசை, நடனம் உட்பட பல்வேறு துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்கள் ஆசிரியர்களின் கனிவான அன்பை பெற்று தரத் தேர்ச்சி பெறுவர். பள்ளி, கல்லூரிகளில் இருந்து இடையில் விலகியவர்கள் மீண்டும் படிப்பு தொடர வாய்ப்பிருக்கிறது.


அரசியல்வாதிகள்: சமூகப்பணியில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். உரிய வரவேற்பு நிறைவாக கிடைக்கும். உங்களின் திட்டங்கள் வெற்றி பெறுவதற்கு ஆலோசனை சொல்லும் திறன் படைத்த ஆதரவாளர்களை பெறுவீர்கள். எதிரிகள் பலமிழந்து போவர். புத்திரர்களை அரசியலில் ஈடுபடுத்தி கெட்ட பெயர் வாங்க நேரிடும். கவனம். அரசு அதிகாரிகளிடம் வைக்கும் கோரிக்கைகள் நிறைவேற தாமதமாகும்.


விவசாயிகள்: மகசூல் அதிகமாக கிடைத்தாலும் உரிய விலை கிடைக்காததால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. கால்நடை பராமரிப்பு செலவும் அதிகமாகும். புதிய நிலம் வாங்கும் விஷயத்தில் மோசடி செய்யப்படுவதற்கு வாய்ப்புண்டு.


நீங்கள் செய்ய வேண்டியது: மன்னார்குடி ராஜகோபால சுவாமியை வணங்கி வந்தால் வளம்தரும் வாழ்வு பெறுவீர்கள். கீழ்க்கண்ட பாடலை 11 முறை பாராயணம் செய்யவும்


அருமறை முதல்வனை ஆழி மாயனை


கருமுகில் வண்ணனை கமலக்கண்ணனை


திருமகள் தலைவனை தேவதேவனை


இருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 04, 2008 12:30 am

(40/100) + புத்திரர்களால் பெருமை, - கடன் வாங்கும் நிலை


குரு பகவான் வரும் டிசம்பர் 6 காலை 6மணிக்கு, தனுசுராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ந்து 2009 டிசம்பர் 8 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.


விசாகம் 4, அனுஷம், கேட்டை


முடியாது என்ற வார்த்தையே பிடிக்காத விருச்சிகராசி அன்பர்களே!



உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் மகரராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார். குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வையால் ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களை பார்க்கிறார். குரு அமர்ந்த இடம் கொஞ்சம் அனுகூலக் குறைவானதுதான். இருப்பினும், அவர் பார்க்கும் இடங்கள் ஓரளவு நன்மை தருவதாக அமைந்துள்ளன. ஆனால், பேச்சில் கடுமை கூடும் என்பதால் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். பணவரவு பற்றாக்குறையாகவே இருக்கும். குடும்பத்தின் வளர்ச்சிக்காக தகுதிக்கு மீறிய கடன் வாங்கும் நிலை ஏற்படும். சகோதரர்கள் சொல்லும் ஆலோசனைகள் சில உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால், அவை ஆசிரியர் ஒரு மாணவனுக்கு சொல்லும் கண்டிப்பான அறிவுரை போன்றது என்பதை உணர்ந்து செயல்பட்டால் நன்மை கிடைக்கும்.


வீடு, வாகன வகையில் மாற்றம் செய்வதில் செலவு அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். புத்திரர்களின் எதிர்கால வளர்ச்சி குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்களின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏதுமில்லை. குலதெய்வ வழிபாடு நிறைவேறி பரிபூரண நல்லருளை பெறுவீர்கள். உடல்நிலை நன்றாக இருக்கும். முக்கிய செயல்களை நிறைவேற்றும்போது பின்விளைவுகளை உணர்ந்து செயல்படுத்துவதால் நலம் பெறலாம். வழக்கு விவகாரங்கள் அவ்வளவு சாதகமான சூழ்நிலையத் தராது.


கணவன், மனைவி ஒற்றுமை பலப்படும் அளவுக்கு குருவின் பார்வை பலமாக உள்ளது. நற்குணம் நிறைந்த புதிய நண்பர்கள் அறிமுகமாகி இக்கட்டான நிலைகளில் உதவுவர். வாகனங்களில் செல்லும் போது மிகுந்த கவனம் வேண்டும். சிறு விபத்துகளுக்கு வாய்ப்புண்டு. ஆபத்தான இடங்களுக்குச் செல்வது, ஆபத்தான சாகசச் செயல்களில் ஈடுபடுவது, பிறருக்காக ஜாமீன் கொடுப்பது, பணப்பிரச்னையில் பொறுப்பேற்பது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். பயணங்களின் போது பொருட்கள் திருட்டு போகலாம். கவனம்.


தொழிலதிபர்கள்: இன்றிருக்கும் நிலையை அப்படியே தொடர்ந்தாலே போதும். புதிய மாற்றங்கள் செய்தால் செலவு மிகக்கடுமையாகி விடும். டெக்ஸ்டைல்ஸ், இரும்பு, தோல், பட்டாசு, தீப்பெட்டி, அடுப்பு, மர அறுவை, மெழுகுவர்த்தி, மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்வோர், ஒப்பந்ததாரர்கள் ஆகியோருக்கு இக்கட்டான நேரமாக இருக்கிறது. பிற தொழில் செய்பவர்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். நிர்வாகத்தில் தேவையான சீர்திருத்தங்களை செய்வதன் மூலம் லாபத்தின் அளவை உயர்த்திக் கொள்ளலாம்.



வியாபாரிகள்: ஜவுளி, மளிகை, தானியங்கள், மின்சார உபகரணங்கள், இறைச்சி, காய்கறி, பழம், உணவு பண்டங்கள், பேக்கரி பொருட்கள், பெயின்ட், காகிதம், பால்பொருட்கள், குளிர்பானம், பூ வியாபாரிகள் தங்கள் கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கடுமையாகச் செய்ய வேண்டும். ஏதேனும் காரணத்தால் பொருள் இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு. பாத்திரம், பிற உலோகப் பொருட்கள், பிளாஸ்டிக், கண்ணாடி, பீங்கான் பொருட்கள் வியாபாரம் செய்பவர்களுக்கு விற்பனை குறைவு ஏற்பட்டாலும் கட்டுப்படியாகும் லாபம் கிடைக்கும். நகை உள்ளிட்ட மற்ற வியாபாரிகளுக்கு கடந்த ஆண்டின் நிலை தொடரும்.



பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு அலட்சிய உணர்வு தலைதூக்கும். இதனால் பணியில் குளறுபடி உண்டாகி அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். சலுகைகள் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாக இருக்கும். சிலருக்கு வேலையிழப்பு, பணஇழப்பு போன்ற தண்டனை பெறும் சூழ்நிலை ஏற்படும். குறிப்பாக, சாயத்தொழில், அக்கவுன்ட், உணவு பண்டங்கள் தயாரிப்பு, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் பணிபுரிபவர்களுக்கு மிகமிக சோதனையான கால கட்டம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 04, 2008 12:31 am

பெண்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு கவனக்குறைவு காரணமாக பணியில் இடைஞ்சல் ஏற்படும். கூடுதல் பணிச்சுமைக்கும் உள்ளாவார்கள். சிலர் பணியிட மாற்றம், சஸ்பெண்ட் போன்ற மனக்கஷ்டம் தரும் பலன்களை சந்திப்பர். குடும்ப பெண்கள் கணவரின் கூடுதல் அன்பை பெறுவர். சமையலறையில் பாதுகாப்பு நடைமுறைகளை கவனமுடன் பின்பற்ற வேண்டும். நகை உட்பட விலைமதிப்புள்ள பொருட்களை தவறவிடும் கிரகநிலை உள்ளது. கவனம் தேவை. சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனமிட்டால், அது திரும்பக் கிடைப்பது சிரமமே. அளவான மூலதனமும், கடுமையான உழைப்பும், கண்காணிப்பும் இருந்தால் தான் இப்போது இருக்கும் தொழிலைக் காத்துக் கொள்ள முடியும். சக தொழில் அதிபர்களுடன் ஆலோசனை கேட்கலாமே தவிர, அவர்களுக்கு பணம் கொடுப்பது, பணப்பொறுப்பு ஏற்பது ஆகியவை சிக்கலை ஏற்படுத்தி விடும்.


மாணவர்கள்: தகவல் தொழில் நுட்பம், சட்டம், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், ஏரோநாட்டிக்கல், மரைன், ஓவியம், வணிகவியல், ஆடிட்டிங், சினிமாத்துறை படிப்பு மாணவர்கள் கவனக்குறைவால் படிப்பில் பின்தங்க நேரிடும். இதனால் கூடுதல் பணச்செலவும் மன உளைச்சலும் ஏற்படும். பெற்றோர் உங்களுக்கு ஆறுதல் சொல்லி உங்களின் படிப்பு சிறக்க ஊக்கம் தருவர். நீங்கள் மிக கவனமாக படிப்பே பிரதானமெனக் கருதினால் குரு பகவானுடன் பிற கிரகங்களும் உங்களுடன் ஒத்துழைத்து தேர்ச்சி பெறச் செய்வர். கவனம்.


அரசியல்வாதிகள்: பொதுவாழ்க்கையில் நல்லது செய்ய முயற்சித்தாலும் அச்செயலை எதிர்க்க புதிய எதிரிகள் உருவாவர். ஆனால், உங்கள் ஆதரவாளர்கள் நன்றியுடன் செயல்பட்டு கடுமையான நேரங்களில் கை கொடுப்பர். அரசு அதிகாரிகளிடம் வைத்த கோரிக்கைகள் தொடர் பாக அவர்களைக் கண்டித்தால் வழக்கு போன்ற கஷ்டம் தரும் பலன்களை அனுபவிக்க நேரிடும்.புத்திரர்களை அரசியலில் ஈடுபடுத்தலாம்.


விவசாயிகள்: பயிர் வளர்க்க அதிக செலவை சந்திக்க நேரிடும். விளைபொருட்களை கண்ட விலைக்கு விற்க வேண்டிய நிர்ப்பந்தமான சூழல் ஏற்படும். கால்நடைகளுக்கு முறையான மருத்துவம் செய்யாவிட்டால் அவற்றை இழக்க நேரிடும்.


நீங்கள் செய்ய வேண்டியது: உங்களுக்கு ஏற்படும் சோதனைகளை குரு பகவான் வழிபட்ட திருச்செந்தூர் முருகப்பெருமானால் தான் நீக்க முடியும். அங்கு சென்று வாருங்கள்.


கீழ்க்கண்ட பாடலை தினமும் 11 முறை பாராயணம் செய்யவும்.


வந்த வினையும் வருகின்ற வல்வினையும்


கந்தனென்று சொல்லக் கலங்கிடுமே!


செந்தில்நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு


மேவ வராதே வினை.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 04, 2008 12:32 am

(90/100) + வீடு வாங்கலாம், - உறவினர்களால் பிரச்னை


குரு பகவான் வரும் டிசம்பர் 6 காலை 6மணிக்கு, தனுசுராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ந்து 2009 டிசம்பர் 8 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.


மூலம், பூராடம், உத்திராடம் 1


சுறுசுறுப்புடன் செயல்புரியும் தன்மையுள்ள தனுசு ராசி அன்பர்களே!


உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் மகர ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார். உங்கள் வாழ்வை வளமாக்க வாராது வந்த மழைபோல இந்த குருபெயர்ச்சி அமைந்துள்ளது. குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வையால் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங்களை பார்க்கிறார். தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் குரு அமர்ந்துள்ளதால் பேச்சில் கனிவு பிறக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பணவரவு அதிகம் பெற புதிய வழிகள் தோன்றும்.


இளைய சகோதரர்கள் மற்றும் தந்தை வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும். அவர்கள் பணம் கேட்டு நச்சரிக்கலாம். சமூகத்தில் அந்தஸ்து தரும் பதவி, பொறுப்பை பெறுவீர்கள். வீடு, வாகன வகையில் மகிழ்ச்சி தரும் நற்பலன் உண்டு. வெகுநாள் திட்டமிட்ட புதிய வீடு, புதிய வாகனம் வாங்கும் ஆசை நிறைவேறும். புத்திரர்கள் படிப்பில் சிறந்து தரத்தேர்ச்சி பெறுவர். படித்து முடித்த புத்திரர்களுக்கு கவுரவமான வேலை கிடைக்கும். குலதெய்வ வழிபாடை செயல்படுத்தி மகிழ்வீர்கள். பூர்வ சொத்தில் வளர்ச்சியும் வருமானமும் அதிகரிக்கும். எதிரிகள் அச்சப்படும் வகையிலான புதிய சூழ்நிலை ஏற்படும்.


வழக்கு விவகாரத்தில் அனுகூல தீர்வு கிடைக்கும். கடன்கள் தீர்ந்து விடும். உடல்நிலை மிக நன்றாக இருக்கும். கணவன், மனைவி உறவு ஒற்றுமையுடன் விளங்கும். நண்பர்களுடனான நிலையும் இப்படியே. துன்ப நிகழ்வுகள் அணுகாத, பாதிக்காத நன்னிலையை குருவின் பார்வை உருவாக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நல்லபடியாக நடந்தேறும். வெளியூர் பயணம் மகிழ்ச்சியையும் பணவரவையும் பெற்றுத்தரும்.


தொழிலதிபர்கள்: தொழில்சார்ந்த வகையில் முன் எப்போதும் இல்லாத அளவில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். புதிய திட்டங்களை செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். ஆதாய பணவரவை சேமிப்பாக மாற்றுவீர்கள். இரும்பு, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ், காகிதம், கம்ப்யூட்டர், மொபைல், விளையாட்டு சாதனம், அழகு சாதனம், தோல் பொருட்கள், பர்னிச்சர், வீட்டு அலங்கார பொருட்கள் உற்பத்தி செய்வோர் அதிக உற்பத்தியாலும் விற்பனையாலும் மகிழ்வர். போட்டி பெருமளவு குறையும். உங்கள் நிறுவன தயாரிப்புகளுக்கு மார்க்கெட்டில் சிறந்த வரவேற்பு கிடைக்கும். கல்வி நிறுவனம், நிதி நிறுவனம், அச்சகம், ரியல் எஸ்டேட், டிராவல்ஸ், நட்சத்திர ஓட்டல் ஆகிய தொழில் செய்பவர்களும், மற்ற தொழில்களில் உள்ளவர்களும் கூட தொழில்வளம் சிறந்து அபிவிருத்தி பணிகளையும் திறம்பட நிறைவேற்ற கிரக நல்லருள் உள்ளது.


வியாபாரிகள்: நகை, ஜவுளி, கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல், வீட்டு உபயோக சாதனங்கள், மின்சார பொருட்கள், அலங்கார பொருள், ஓட்டல், பேக்கரி, பர்னிச்சர், பிளாஸ்டிக் பொருட்கள், காய்கறி, ஸ்டேஷனரி, மளிகை, மருந்து, எண்ணெய், வாசனை திரவியம், பெயின்ட், விவசாய இடுபொருட்கள் விற்பனை செய்பவர்கள் அபரிமிதமான தொழில் வளர்ச்சியும், ஆதாய பணவரவும் பெறுவர். வியாபார அபிவிருத்தி பணி சிறப்பாக நிறைவேறும். சரக்கு வாகனம் விரும்பியபடி வாங்குவீர்கள். புதிய கிளை துவங்கும் திட்டம் நிறைவேறும். தொழிலில் கூட்டுசேர முயற்சிப்பவர்களை கண்டிப்பாக ஒதுக்கிவிடுங்கள்.


பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தனக்கென தரப்பட்ட பணியை எளிதாக நிறைவேற்றுவர். கூடுதல் சம்பளம், பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். மற்ற துறைகளை விட, கம்ப்யூட்டர் சார்ந்த பணியாளர்கள் இந்த குருபெயர்ச்சி கால கட்டத்தில் மிக அதிக வருமானம் பெறுவர். அலுவலகத்தில் சிலருக்கு இருந்த இக்கட்டான நிலையின் பிடியில் இருந்து விடுபட குருவருள் கிடைக்கும். சக ஊழியர்கள் நல்லபடியாக ஒத்துழைப்பு தருவார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 04, 2008 12:33 am

பெண்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு பணி இலக்கை எளிதில் நிறைவேற்றுவர். சக பணியாளர்களும் உங்களின் உதவியை நாடிப்பெறுவர். பதவி உயர்வு, விரும்பிய இட மாற்றம் எளிதில் கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் அன்பையும், நிறைவான பணவசதியும் பெற்று குடும்பத்தை மகிழ்ச்சி பாதையில் நடத்துவர். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. மாங்கல்ய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் கணவரின் உடல் ஆரோக்கியம் பலம் பெறும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் தொழிலை அபிவிருத்தி செய்வர். வியாபாரம் சிறந்து லாபம் அதிகரிக்கும்.


மாணவர்கள்: வணிகவியல், அக்கவுன் டன்சி, நிதிநிர்வாகம், ஏரோநாட்டிக்கல், கேட்டரிங், கம்ப்யூட்டர், சட்டம், சிவில் இன்ஜினியரிங், விவசாயம், ஆசிரியர் பயிற்சி, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மரைன், வேதசாஸ்திரம், ஓவியப் பயிற்சி பெறும் மாணவர்கள் தரத்தேர்ச்சி பெறுவர். மற்ற துறையினர் இவர்களையும் விட நன்றாகப் படிப்பர். படிப்புக்கான பணவசதி சீராக கிடைக்கும். படிப்பை நிறைவு செய்யும் நிலையில் உள்ள மாணவர்களுக்கு வேலை கிடைக்கும். சக மாணவர்களிடம் நட்புறவு வளரும்.


அரசியல்வாதிகள்: சமூகப்பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். ஆதரவாளர்கள் அதிகரிப்பர். உங்களுக்கு கிடைக்கும் வெற்றியைக் கண்டு எதிரிகளும் ஒரு கணம் திகைத்து நிற்பர். கடந்த காலங்களில் நீங்கள் வைத்த மக்களுக்கான கோரிக்கையை அரசு அதிகாரிகள் தாமாக முன்வந்து நிறைவேற்றி உங்கள் பணிக்கு கூடுதல் பெருமை சேர்ப்பர். புத்திரர்களை அரசியலில் ஈடுபடுத்தினால் கெட்ட பெயர் ஏற்பட வாய்ப்புண்டு. கவனம். அரசியல் தவிர தொழில், வியாபாரம் நடத்துபவர் திறமை மிகுந்த பணியாளர்களின் உதவியால் தொழில் வளர்ச்சியும் தாராள பணவரவும் கிடைக்கப்பெறுவர். புதிய பதவி கிடைக்கும்.


விவசாயிகள்: புதிய உழவுக்கருவிகள் வாங்குவீர்கள். கடன் வசதி எளிதாகக் கிடைக்கும். மகசூல் அதிகரிப்பும், பணவரவில் திருப்தியும் உண்டு. கால்நடை வளர்ப்பினாலும் கூடுதல் பணம் கிடைக்கும். நிலம் தொடர்பான பிரச்னைகள் தீர்ந்து போகும்.


நீங்கள் செய்ய வேண்டியது: நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபடுவதால் வெற்றிகள் பலவும் பெறுவீர்கள்.கீழ்க்கண்ட பாடலை 11 முறை பாராயணம் செய்யவும்


அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே


ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்று ஆறாக


ஆருயிர் காக்க ஏகி


அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு


அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்று வைத்தான்


அவன் நம்மை அளித்துக்காப்பான்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 04, 2008 12:39 am

(55/100) + பணத்துக்கு கஷ்டமில்லை, - மற்ற எல்லாமே கஷ்டம் தான்


குரு பகவான் வரும் டிசம்பர் 6 காலை 6மணிக்கு, தனுசுராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 2009 டிசம்பர் 8 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.


உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2


உழைப்பே உயர்ந்தது என்ற கொள்கையுடைய மகரராசி அன்பர்களே!


உங்கள் ராசியில் ஜென்ம குருவாக வந்து குருபகவான் அமர்ந்துள்ளார். மகரத்தில் இடம்பெற்றுள்ள குருபகவான் தனது 5, 7, 9 ஆகிய பார்வையால் ராசிக்கு 5, 7, 9 ஆகிய இடங்களை பார்க்கிறார். ராசியில் குரு உள்ளதால் மனதில் மாறுபட்ட சிந்தனைகள் தோன்றும். அவற்றை அப்படியே செயல்படுத்தி விடாமல், பரிசீலனை செய்து நிறைவேற்றுவதால் நல்ல பலன்களைப் பெறலாம். பணவரவில் சரளமான நிலை இருக்கும். செயல்பாடுகளில் மந்தநிலை தோன்றி விலகும். இளைய சகோதரர்கள் உங்களுக்கு சொல்லும் ஆலோசனை பயனுடையதாக இருக்கும். மணமாகாத சகோதரிகளுக்கு திருமணம் நடக்கும். வீடு, வாகன வகையில் தகுதிக்கு மீறிய அபிவிருத்தி பணிகள் எதுவும் செய்தால் தேவையற்ற சிக்கலில் மாட்ட நேரிடும். தாயின் உடல்நலம் பாதிக்கப்படலாம் என்பதால் மருத்துவச் செலவு கூடும். ஆனால், தந்தையின் உடல்நிலை, பணநிலை நன்றாக இருக்கும். பூர்வ புண்ணிய பலன்கள் உங்களுக்கு உறுதுணையாக நின்று வாழ்வை வழிநடத்தும். புத்திரர்கள் தகுதி, திறமையை வளர்த்து படிப்பில் முன்னேற்றம் பெறுவர். வேலைவாய்ப்புக்கு முயற்சி செய்பவர்களுக்கு தகுதியான பணி கிடைக்கும். சொத்து மூலமாக வருமானம் பெறுபவர்கள் திருப்திகர பணவரவு பெறுவர். எதிரிகளிடமும், எதிர்மறை கருத்து உள்ளவர்களிடமும் எந்த சூழ்நிலையிலும் வாக்குவாதம் வராத அளவிற்கு நடந்துகொள்ளவும். உடல்நலம் பாதிக்கலாம் என்பதால் கூடுதல் கவனம் அவசியம். விலைமதிப்புள்ள பொருள்களை இரவல் வாங்குவதும், கொடுப்பதும் கூடாது. கணவன், மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். உறவினர்கள் ஆதரவு மனப்பான்மையுடன் தேவையான உதவி புரிவர். நண்பர்கள் கருத்து ஒற்றுமையுடன் நடந்து கொள்வர். கடினமான பணிகளில் ஈடுபடும்பொழுது முன்யோசனையும், தற்காப்பு நடவடிக்கையும் முக்கிய தேவையாகும்.


இந்த குரு பெயர்ச்சி காலத்தில், நீங்கள் கடன் வாங்குவதை அவசியம் தவிர்க்க வேண்டும். இது பல சிக்கல்களை உருவாக்கும். மூத்த சகோதரர்கள் திறமையுடன் செயல்பட்டு சமூகத்தில் புதிய அந்தஸ்து பெறுவர். வெளியூர் பயணம் இனிய அனுபவத்தையும், பணவரவை அதிகம் பெறுவதற்கான வாய்ப்பையும் உருவாக்கித்தரும்.


தொழிலதிபர்கள்: தொழில் சார்ந்த வகையில் குறைந்த ஆதாயமே கிடைக்கும். கம்ப்யூட்டர், மின்னணு சாதனங்கள், மின்சார உபகரணங்கள், ஜவுளி, சமையல் சாதனங்கள், கட்டுமானப் பொருட்கள், தோல், பிளாஸ்டிக், அழகு சாதனம், மோட்டார் வாகனம், உணவு தானியங்கள், மலைத்தோட்ட பயிர்கள் உற்பத்தி செய்பவர்கள், கல்வி நிறுவனம், தொழிற்பயிற்சி பள்ளி, மருத்துவமனை, நிதிநிறுவனம் நடத்துபவர்கள் உற்சாகமாக செயல்படுவர். மற்ற தொழிலதிபர்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். உங்களது நிர்வாகத் திறமைக்கும், பொருளின் தரத்திற்கும் உரிய வரவேற்பும் பாராட்டும் கிடைக்கும். புதிய கிளை துவங்கும் முயற்சி நிறைவேறும்.


வியாபாரிகள்: நகை, ஜவுளி, ஆட்டோமொபைல், வீட்டு உபயோக சாதனங்கள், மின்சார உபகரணங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், விளையாட்டு பொருட்கள், வாசனை திரவியங்கள், நவீன பர்னிச்சர், காய்கறி, பழம், பேக்கரி, லாலா பொருட்கள், விவசாய இடுபொருட்கள், ஸ்டேஷனரி, மளிகை சாமான், ரப்பர், தோல் பொருட்கள், மின்னணு சாதனங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் எந்தப் பொருள் வியாபாரம் செய்தாலும் அளப்பரிய வகையில் வளர்ச்சி காண்பர். லாபம் அதிகரிக்கும். கடந்த காலங்களில் ஏற்பட்ட பணக்கடனை ஓரளவு சரிசெய்வீர்கள். சிலருக்கு புதிய தொழிலில் கூட்டுசேரும் வாய்ப்பு உருவாகி நிறைவேறும்.


பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பொதுநல சிந்தனையுடன் பணியை சிறப்புடையதாக மாற்றுவர். பணியிடங்களில் உயர்ந்த அந்தஸ்து ஏற்படும். விரும்பிய இடமாற்றம், அதிக வருமானம் போன்றவற்றை எளிதில் பெறுவீர்கள். ஆடை வடிவமைப்பு, உணவு பண்டம் தயாரிப்பு, கலைப்பொருள் வடிவமைப்பு, அலுவலக நிர்வாகம், பர்னிச்சர் உற்பத்தி, சுற்றுலா நிறுவனம், வியாபார ஸ்தலங்கள் போன்றவற்றில் பணிபுரிபவர்கள் கனிவுடன் பேசி வாடிக்கையாளர்களிடமும் நிர்வாகத்திடமும் நற்பெயர் பெறுவர். இதனால் எதிர்கால வாழ்வில் நம்பிக்கையும், ஒளி மிகுந்த தன்மையும் ஏற்படும்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக