புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 Poll_c10 
64 Posts - 50%
heezulia
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய சிந்தனை - பைபிள்


   
   

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 04, 2011 12:05 am

First topic message reminder :

நண்பர்களே

இன்றைய சிந்தனை என்னும் தலைப்பில் தினமும் பைபிளில் இருந்து வாசகம் ஒன்று இடலாம் என்று எண்ணுகிறேன் உங்கள் கருத்துக்கள் சொல்லுங்களேன்


உதாரணமாக 03/செப்டம்பர் 2011

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1:
21-23


சகோதரர் சகோதரிகளே, முன்பு நீங்கள் இறைவனோடு உறவற்றவர்களாய்
இருந்தீர்கள்; அவரைப் பகைக்கும் உள்ளம் உடையோராய்த் தீச்செயல்கள் புரிந்து
வந்தீர்கள். இப்பொழுது, நீங்கள் தூயோராகவும் மாசற்றோராகவும் குறைச் சொல்லுக்கு
ஆளாகாதோராகவும் தம்முன் விளங்குமாறு ஊனுடல் எடுத்த தம் மகனது சாவின் வழியாகக்
கடவுள் உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். நீங்கள் நற்செய்தியைக் கேட்டுப்
பெற்றுக்கொண்ட எதிர்நோக்கை இழந்துவிடாமல் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு அதில்
உறுதியாக நிலைத்திருங்கள்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 Ila

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 09, 2011 11:49 am

மத்தேயு 11:16-19

திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் வெள்ளி


16 "இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து மறு அணியினரைக் கூப்பிட்டு," நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை.

17 நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீ;ங்கள் மாரடித்துப் புலம்பவில்லை" என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள்.

18 எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ "அவன் பேய்பிடித்தவன்" என்கிறார்கள்.

19 மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, "இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்" என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று."

சிறு பிள்ளைகள் விளையாடுவது இயேசுவின் வாயில் ஓர் உவமையாக உருவெடுக்கிறது. குழல் ஊதினால் கூத்தாட வேண்டும்; ஒப்பாரி வைத்தால் மாரடித்துப் புலம்ப வேண்டும். இதுதான் விளையாட்டு ஒழுங்கு. ஆனால் ஒரு தரப்பினர் குழல் ஊதும்போது மறு தரப்பினர் கூத்து ஆடாவிட்டால் அங்கே இருதரப்பினருக்கிடையே புரிதல் இல்லை என்பதே பொருள். திருமுழுக்கு யோவான் பாலைநிலத்தில் தோன்றி, ஒட்டக மயிராடை அணிந்து, காட்டுத்தேனும் வெட்டுக்கிளியும் உண்டவராக வந்தார் (மத் 3:1-4). அவருக்குப் பேய்பிடித்துவிட்டது என்று கூறி அவரை ஏற்க மறுத்தார்கள். இயேசுவோ விருந்துகளில் கலந்துகொண்டு மக்களோடு உணவருந்தியவராக வந்தார். அவரைப் பார்த்து, ''பெருந்தீனிக்காரன், குடிகாரன்'' என்றெல்லாம் குறை கூறி ஏற்க மறுத்தார்கள் (மத் 11:19). இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொண்ட மக்களைக் கண்டு இயேசுவுக்கு ஆத்திரம் வருகிறது. அம்மக்கள் காலத்தின் அறிகுறிகளைக் கண்டு உணர்ந்து, கடவுள் அவர்களுக்கு அறிவித்த செய்தியைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களே என இயேசு வருத்தம் கொள்கிறார்.

-- இன்றும் கூட இந்நிலை மாறவில்லை என்றுதான் கூற வேண்டும். இயேசு உலகுக்கு அறிவித்த செய்தி என்னவென்பதை அறிந்துகொள்ள மறுக்கின்றவர்கள் இருக்கின்றார்கள். அதற்கு அவர்கள் காட்டுகின்ற காரணங்கள் பல. இயேசு அறிவித்த செய்தி வேறு சமயங்களிலும் இருக்கிறதே என்பது ஒரு காரணமாகக் காட்டப்படுகிறது. இயேசுவின் போதனைப்படி கிறிஸ்தவர்கள் நடக்கிறார்களா என்றொரு கேள்வியைக் கேட்போர் இருக்கின்றார்கள். இந்நிலையில் இயேசுவை நாம் இருபத்தோராம் நூற்றாண்டு மன நிலைக்கு ஏற்ப அறிவிப்பது எப்படி என்பது ஒரு பெரும் சவாலாகவே உள்ளது. பிற சமயங்களில் தலைசிறந்த போதனைகள் உண்டு என்பதை நாம் மறுக்கமுடியாது. அதுபோலவே, உலகில் உள்ள எல்லாக் கிறிஸ்தவர்களும் இயேசுவின் போதனைப்படி நடக்கிறார்கள் எனவும் கூற இயலாது. ஆனால் இக்காரணங்களைக் காட்டி இயேசு பற்றி அறிய மறுப்பது சரியல்ல. உலகில் வாழ்ந்த மாபெரும் மனிதருள் ஒருவர் இயேசு. அவர் அறிவித்த செய்தியைக் கேட்டு, அதன்படி தங்கள் வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்ட பல்லாயிரம் மக்கள் வரலாற்றில் வாழ்ந்திருக்கின்றார்கள். எனவே, இயேசு அறிவிக்கின்ற செய்தி என்னவென்று அறிகின்ற பொறுப்பு எல்லாருக்குமே உண்டு. அதே நேரத்தில் பல கிறிஸ்தவர்கள் இயேசுவின் போதனையைக் கடைப்பிடிக்கவில்லை என்பதைக் காரணமாகக் காட்டி அப்போதனையை ஒதுக்கிவைப்பதும் முறையல்ல. திறந்த உள்ளத்தோடு இயேசுவை அணுகிச் சென்று, அவர் அறிவிக்கின்ற செய்தியைக் கேட்க தங்கள் இதயத்தைத் திறக்கின்ற மனிதர்கள் ஏமாற்றம் அடைய மாட்டார்கள். இயேசுவின் ஒளி அவர்களது உள்ளத்தில் நிலவும் இருளை அகற்றி அவர்களது வாழ்வை ஒளிமயமானதாக மாற்றும் என்பது உறுதி




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 11, 2011 1:14 pm

யோவான் 1:6-8,19-28

திருவருகை காலம்-மூன்றாம் வாரம், ஞாயிறு




நற்செய்தி வாசகம்

+ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 6-8, 19-28

கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார். அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக் குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல. மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர். எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, நீ யார்? என்று கேட்டபோது அவர்,நான் மெசியா அல்ல என்று அறிவித்தார். இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார். அப்போது, அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா? என்று அவர்கள் கேட்க, அவர், நானல்ல என்றார். நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா? என்று கேட்டபோதும், அவர்;இல்லை என்று மறுமொழி கூறினார். அவர்கள் அவரிடம்,நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாகவேண்டும். எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே என்றார். பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள்;; அவரிடம்; நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரே அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்? என்று கேட்டார்கள். யோவான் அவர்களிடம், நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார். அவர் எனக்குப்பின் வருபவர். அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை என்றார். இவையாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.


யோர்தான் ஆற்றருகே யோவான் நின்றுகொண்டிருக்கிறார். அவருடைய குரல் கணீரென ஒலிக்கிறது. மக்கள் மனம் மாறி, கடவுளிடம் திரும்பாவிட்டால் அவர்களுக்கு அழிவு வந்தே தீரும் என அச்சுறுத்தும் மொழியில் பறைசாற்றுகிறார் யோவான். மக்கள் கடவுளோடு நல்லுறவு கொண்டாட வேண்டும் என்றால் அவர்கள் தம் பாவ வாழ்க்கையைத் துறந்துவிட்டு நன்னெறியில் வழிநடக்க வேண்டும். இதற்கு அடையாளமாகத்தான் திருமுழுக்கு அமைகின்றது. யோவான் வழங்கிய திருமுழுக்கு யூத மரபில் முற்றிலும் புதிது என்று சொல்ல முடியாது. எஸ்ஸேன் என்னும் துறவியர் குழுவில் திருமுழுக்கு வழக்கம் இருந்தது. மேலும், நீரைப் பயன்படுத்தித் தூய்மைப்படுத்தும் சடங்குகளும் யூதரிடையே நிலவின. ஆயினும், யோவான் அறிவித்த திருமுழுக்கில் சில தனித்தன்மைகள் உள்ளன. மக்கள் தங்கள் பாவ வாழ்க்கையைத் துறக்கவேண்டும் எனவும் மனம் மாறிக் கடவுளிடம் செல்லவேண்டும் என்றும் கேட்ட யோவான் தம்மைவிடவும் பெரியவர் ஒருவர் வருகிறார் எனவும் அறிவித்தார். ''நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்'' என்று யோவான் இயேசுவைப் பற்றிக் கூறுகிறார்.

-- இயேசுவைப் பலர் பார்த்திருக்க வேண்டும்.ஆனால் அவர்கள் இயேசுவை உண்மையிலேயே அறியவில்லை. திருமுழுக்குப் பெற்ற பிறகுதான் இயேசு தம் பொதுப் பணியைத் தொடங்கினார் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எவ்வாறாயினும், இன்று நம் நடுவே இயேசு இருக்கிறார் என நாம் நம்புகிறோம். ஆனால் அவரை நாம் உண்மையிலேயே அறிந்துகொண்டுள்ளோமா என்னும் கேள்வியை எழுப்புவது பொருத்தமே. விவிலியத்தில் ''அறிதல்'' என்னும் சொல்லுக்கு ஆழ்ந்த பொருள் உண்டு. ஏதோ மேல்மட்டமாக ஒரு காரியத்தைத் தெரிந்துகொள்வது உண்மையான ''அறிவு'' அல்ல. அன்றாட வாழ்க்கையில் நாம் புரகின்ற செயல்கள் மேலோட்டமான நிலையில் நின்றுவிடுகின்றன. ஆனால் இயேசுவை ''அறிதல்'' என்பது அவருடைய உண்மையான இயல்பை ஆழப் புரிந்துகொண்டு, அவரை நம் உள்ளத்தில் வரவேற்பதைக் குறிக்கும். இந்த அறிவு வெறும் புலனளவிலோ சிந்தனையளவிலோ நின்றுவிடாது. மாறாக, புலனும் சிந்தையும் காட்டுகின்ற இயேசுவை நம் இதயத்தில் ஏற்று, அவரின் வரவால் நம் வாழ்க்கை முற்றிலுமாகத் திருப்பம் பெறச் செய்வதே இயேசு பற்றிய உண்மையான ''அறிவு''. ஆக, நாம் அறியாத ஒருவர் நம்மிடையே இருக்கிறார் என்றால் அவரை அறிந்துகொள்ள நாம் என்ன செய்கிறோம்?




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Dec 11, 2011 2:47 pm

இளமாறன் wrote:யோவான் 1:6-8,19-28

திருவருகை காலம்-மூன்றாம் வாரம், ஞாயிறு




நற்செய்தி வாசகம்

+ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 6-8, 19-28

கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார். அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக் குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல. மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர். எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, நீ யார்? என்று கேட்டபோது அவர்,நான் மெசியா அல்ல என்று அறிவித்தார். இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார். அப்போது, அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா? என்று அவர்கள் கேட்க, அவர், நானல்ல என்றார். நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா? என்று கேட்டபோதும், அவர்;இல்லை என்று மறுமொழி கூறினார். அவர்கள் அவரிடம்,நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாகவேண்டும். எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே என்றார். பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள்;; அவரிடம்; நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரே அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்? என்று கேட்டார்கள். யோவான் அவர்களிடம், நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார். அவர் எனக்குப்பின் வருபவர். அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை என்றார். இவையாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.


யோர்தான் ஆற்றருகே யோவான் நின்றுகொண்டிருக்கிறார். அவருடைய குரல் கணீரென ஒலிக்கிறது. மக்கள் மனம் மாறி, கடவுளிடம் திரும்பாவிட்டால் அவர்களுக்கு அழிவு வந்தே தீரும் என அச்சுறுத்தும் மொழியில் பறைசாற்றுகிறார் யோவான். மக்கள் கடவுளோடு நல்லுறவு கொண்டாட வேண்டும் என்றால் அவர்கள் தம் பாவ வாழ்க்கையைத் துறந்துவிட்டு நன்னெறியில் வழிநடக்க வேண்டும். இதற்கு அடையாளமாகத்தான் திருமுழுக்கு அமைகின்றது. யோவான் வழங்கிய திருமுழுக்கு யூத மரபில் முற்றிலும் புதிது என்று சொல்ல முடியாது. எஸ்ஸேன் என்னும் துறவியர் குழுவில் திருமுழுக்கு வழக்கம் இருந்தது. மேலும், நீரைப் பயன்படுத்தித் தூய்மைப்படுத்தும் சடங்குகளும் யூதரிடையே நிலவின. ஆயினும், யோவான் அறிவித்த திருமுழுக்கில் சில தனித்தன்மைகள் உள்ளன. மக்கள் தங்கள் பாவ வாழ்க்கையைத் துறக்கவேண்டும் எனவும் மனம் மாறிக் கடவுளிடம் செல்லவேண்டும் என்றும் கேட்ட யோவான் தம்மைவிடவும் பெரியவர் ஒருவர் வருகிறார் எனவும் அறிவித்தார். ''நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்'' என்று யோவான் இயேசுவைப் பற்றிக் கூறுகிறார்.

-- இயேசுவைப் பலர் பார்த்திருக்க வேண்டும்.ஆனால் அவர்கள் இயேசுவை உண்மையிலேயே அறியவில்லை. திருமுழுக்குப் பெற்ற பிறகுதான் இயேசு தம் பொதுப் பணியைத் தொடங்கினார் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எவ்வாறாயினும், இன்று நம் நடுவே இயேசு இருக்கிறார் என நாம் நம்புகிறோம். ஆனால் அவரை நாம் உண்மையிலேயே அறிந்துகொண்டுள்ளோமா என்னும் கேள்வியை எழுப்புவது பொருத்தமே. விவிலியத்தில் ''அறிதல்'' என்னும் சொல்லுக்கு ஆழ்ந்த பொருள் உண்டு. ஏதோ மேல்மட்டமாக ஒரு காரியத்தைத் தெரிந்துகொள்வது உண்மையான ''அறிவு'' அல்ல. அன்றாட வாழ்க்கையில் நாம் புரகின்ற செயல்கள் மேலோட்டமான நிலையில் நின்றுவிடுகின்றன. ஆனால் இயேசுவை ''அறிதல்'' என்பது அவருடைய உண்மையான இயல்பை ஆழப் புரிந்துகொண்டு, அவரை நம் உள்ளத்தில் வரவேற்பதைக் குறிக்கும். இந்த அறிவு வெறும் புலனளவிலோ சிந்தனையளவிலோ நின்றுவிடாது. மாறாக, புலனும் சிந்தையும் காட்டுகின்ற இயேசுவை நம் இதயத்தில் ஏற்று, அவரின் வரவால் நம் வாழ்க்கை முற்றிலுமாகத் திருப்பம் பெறச் செய்வதே இயேசு பற்றிய உண்மையான ''அறிவு''. ஆக, நாம் அறியாத ஒருவர் நம்மிடையே இருக்கிறார் என்றால் அவரை அறிந்துகொள்ள நாம் என்ன செய்கிறோம்?

நாம் அனைவரும் அறிய வேண்டிய ஒருவா் . அறிவினால் அல்ல. அவா்மேல் கொண்டிரக்கும் நம்பிக்கை விசுவாசத்தினால்



இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 154550இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 154550இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 154550இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 154550இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Dec 14, 2011 12:04 pm

லூக்கா 7:18-23

திருவருகை காலம்-மூன்றாம் வாரம், புதன்



18 யோவானுடைய சீடர் இவற்றையெல்லாம் அவருக்கு அறிவித்தனர். யோவான் தம் சீடருள் இருவரை வரவழைத்து,

19 "வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர் பார்க்க வேண்டுமா?" எனக் கேட்க ஆண்டவரிடம் அனுப்பினார்.

20 அவர்கள் அவரிடம் வந்து, ";வர இருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?" எனக் கேட்கத் திருமுழுக்கு யோவான் எங்களை உம்மிடம் அனுப்பினார்" என்று சொன்னார்கள்.

21 அந்நேரத்தில் பிணிகளையும் நோய்களையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த பலரை இயேசு குணமாக்கினார்; பார்வையற்ற பலருக்குப் பார்வை அருளினார்.

22 அதற்கு அவர் மறுமொழியாக, "நீங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்; பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது.

23 என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறு பெற்றோர்" என்றார்.

திருமுழுக்கு யோவானும் இயேசுவும் உறவினர்கள். அவர்கள் இருவருமே மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். ஆயினும் அவர்கள் கடவுளாட்சியின் வருகையை அறிவித்த பாணி வேறுபட்டது. மக்கள் மனம் மாறாவிட்டால் கடவுளின் தண்டனைக்கு உள்ளாவர் என்று கடுமையான சொற்களைப் பயன்படுத்தினார் யோவான். இயேசுவோ கடவுளாட்சி என்பது கடவுளின் இரக்கமும் அன்பும் வெளிப்படுகின்ற தருணம் என போதித்தார். இயேசு கடவுளின் அன்பை எவ்வாறு வெளிப்படுத்தினார்? மக்களுக்கு நலம் கொணர்ந்து கடவுள் அவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளார் என்பதை இயேசு காண்பித்தார். எனவேதான் அவர் ''பிணிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த பலரைக் குணமாக்கினார்'' (லூக் 7:21). இவ்வாறு இயேசு மக்களுக்கு நலமளித்ததை யோவானின் சீடர்கள் பார்க்கிறார்கள். இயேசுவின் சொற்களைக் கேட்கிறார்கள். இவ்வாறு நேரடியான அனுபவம் பெற்றதால் அவர்கள் தங்கள் குருவாகிய யோவானிடம் சென்று தங்கள் அனுபவத்தை அவரோடு பகிர்ந்துகொள்வார்கள். யோவானும் இயேசு எத்தகைய மெசியா என்பதை அறிந்துகொள்வார். இயேசுவைத் ''தயக்கமின்றி ஏற்றுக்கொள்வார்'' (லூக் 7:23).

-- இயேசுவை நாம் அறிய வேண்டும் என்றால் அவர் நமக்கு அறிவிக்கின்ற செய்திக்கு நாம் கவனத்தோடு செவிமடுக்க வேண்டும். அவர் புரிகின்ற செயல்களை நம் கண்கள் திறந்து பார்க்க வேண்டும். அதாவது, இயேசுவை அணுகிச் சென்று அவரை நேரடி அனுபவத்தால் அறிகின்றவர்களே அவருடைய உண்மையான பண்பைத் தெரிந்துகொள்ள முடியும். இத்தகைய நேரடி அனுபவம் நமக்கு இல்லையென்றால் இயேசு பற்றிய அறிவு வெறும் ஏட்டுச் சுரக்காயாகவே இருந்துவிடும். அதனால் நமக்கும் பிறருக்கும் பயனில்லாது போய்விடும். இயேசு கடவுளின் அன்பை மக்களோடு பகிர்ந்துகொள்வதற்குத் தெரிந்துகொண்ட வழி அவர்களுடைய பிணிகளைப் போக்கி அவர்களைத் தீய ஆவிகளின் பிடியிலிருந்து விடுவித்ததுதான். இன்றைய உலகிலும் பலவகையான பிணிகளால் அவதியுறுகின்ற மனிதர்கள் இருக்கின்றார்கள். தன்னலம், பேராசை, அதிகார வேட்கை போன்ற ''தீய ஆவிகள்'' நம்மைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்கின்றன. இத்தகைய பிணிகளிலிருந்தும் ''தீய ஆவிகளிடமிருந்தும்'' நாம் விடுதலை பெற வேண்டும் என்றால் இயேசுவை அணுகிச் செல்ல வேண்டும்; நம் வாழ்வில் ஆழ்ந்த மாற்றம் கொணர்கின்ற அவரது வல்லமையைப் பணிவோடு நாம் ஏற்றிட வேண்டும்.





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 18, 2011 2:20 pm

லூக்கா 1:26-38

திருவருகை காலம்-நான்காம் வாரம், ஞாயிறு



26 ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.

27 அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.

28 வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்றார்.

29 இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

30 வானதூதர் அவரைப் பார்த்து, "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்.

31 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.

32 அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.

33 அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார்.

34 அதற்கு மரியா வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!" என்றார்.

35 வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.

36 உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம்.

37 ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார்.

38 பின்னர் மரியா, "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 23, 2011 11:55 am

லூக்கா 1:57-66

திருவருகை காலம்-நான்காம் வாரம், டிசம்பர் 23





57 எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.

58 ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர்.

59 எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்;; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள்.

60 ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, "வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்" என்றார்.

61 அவர்கள் அவரிடம், "உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே" என்று சொல்லி,

62 "குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?" என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள்.

63 அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, "இக்குழந்தையின் பெயர் யோவான்" என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர்.

64 அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.

65 சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது.

66 கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, "இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?" என்று சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது.

திருச்சபை வழக்கில் புனிதர்கள் நினைவாகத் திருவிழாக்கள் கொண்டாடுகிறோம். பொதுவாக இயேசு பிறந்த நாள் தவிர வேறு யாருக்கும் பிறந்த நாள் விழாக் கொண்டாடுவதில்லை; கிறிஸ்துவுக்காக இரத்தம் சிந்தி உயிர் துறந்த புனிதர்களின் இறந்த நாளே அவர்களுடைய ''விண்ணகப்'' பிறந்த நாளாகக் கொண்டாடப்படும். ஆனால் அன்னை மரியாவும் திருமுழுக்கு யோவானும் இதற்கு விதிவிலக்கு. அவர்கள் இருவருக்குமே பிறந்த நாள் கொண்டாட்டம் திருச்சபையில் உண்டு. மரியா பிறந்த நாள் செப்டம்பர் 8ஆம் நாளும், திருமுழுக்கு யோவான் பிறந்த நாள் ஜூன் 24ஆம் நாளும் கொண்டாடப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் மரியாவின் பிறப்பிலும் யோவானின் பிறப்பிலும் கடவுளின் வல்லமை தனிப்பட்ட முறையில் வெளிப்பட்டதுதான். பிள்ளைகளுக்குப் பெயரிடும்போது அவர்களுடைய முன்னோரின் பெயரைத் தேர்ந்தெடுக்கும் பழக்கம் நிலவியது. முதுவயதில் பிறந்த குழந்தை ஆதலால் செக்கரியா என்று தந்தையின் பெயரையே குழந்தைக்கும் சூட்டலாம் என எல்லாரும் எண்ணிய வேளையில் அதன் தாய் மட்டும் ''குழந்தைக்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்'' (லூக் 1:60) எனக் கூறுகிறார். வானதூதரும் அவ்வாறே ''யோவான்'' என்னும் பெயரைக் குழந்தைக்குச் சூட்ட வேண்டும் எனக் கேட்டிருந்தார் (லூக் 1:13). ஆனால், வானதூதர் அறிவித்த செய்தியை நம்ப மறுத்ததால் ''பேச்சற்றவராய்'' இருந்த செக்கரியா எழுது பலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, ''இக்குழந்தையின் பெயர் யோவான்'' என எழுதுகிறார் (லூக் 1:63). இவ்வாறு, வானதூதர் வழியாக அறிவிக்கப்பட்டு, எலிசபெத்தால் ஏற்கப்பட்ட பெயரை செக்கரியாவும் ஏற்ற பிறகுதான் ''செக்கரியாவின் வாய்திறந்து நா கட்டவிழ்ந்தது'' (லூக் 1:64).
-- இழந்த பேச்சுத் திறனை மீண்டும் பெற்ற செக்கரியா மகிழ்ச்சியால் அக்களித்திருப்பார். அந்த மகிழ்ச்சி அவருடைய நாவில் ''கடவுளின் புகழாக'' உருவெடுக்கிறது: ''அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்'' (லூக் 1:64). கடவுள் நமக்கு வழங்கும் செய்தியை ஏற்க நாம் தயக்கம் காட்டுகின்ற நேரங்கள் உண்டு. அப்பொழுது நம் இதயத்தில் கடவுளுக்கு இடமளிக்க நாம் மறுக்கின்றோம். நம் இதயக் குரல் அடங்கிவிடுகிறது. ஒருவிதத்தில் நாம் செக்கரியாவைப் போல ''பேச்சற்றவர்களாக'' மாறிவிடுகின்றோம். மீண்டும் நம் உள்ளம் திறந்து கடவுளை நாம் அங்கே வரவேற்கும்போது நம் இதயம் மகிழ்ச்சிப் பாடல் இசைக்கத் தொடங்குகிறது; நாம் கடவுளின் புகழைப் பாடுகின்றோம். ''யோவான்'' என்னும் பெயர் ''கடவுள் இரக்கம் காட்டினார்'' என்னும் பொருளைத் தரும். எனவேதான் அப்பெயரை ''அருளப்பன்'' எனத் தமிழாக்கம் செய்தனர். கடவுளின் அருளும் இரக்கமும் நம்மில் துலங்கி மிளிர வேண்டும் என்றால் நம் இதயத்தைத் திறந்து கடவுளுக்கு அங்கே நாம் உறைவிடம் அளித்திட வேண்டும். அப்போது நம் வாழ்வு முழுவதும் இறைபுகழாக ஊற்றெடுத்து வழிந்தோட நாமும் செழுமை பெறுவோம்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 Ila
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 23, 2011 1:22 pm

கிருஸ்துமஸ் பண்டிகை காலத்தில் இந்த பைபிளின் வாசகங்கள் மனதுக்கு நிம்மதியை அளித்தது. நன்றி பகிர்வுக்கு.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 29, 2011 12:21 pm

டிசம்பர் 29 லூக்கா 2:22-35

கிறிஸ்து பிறப்பு விழாவிற்குப் பின்



22 மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்.

23 ஏனெனில், "ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்" என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது.

24 அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு ஒருசோடி மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.

25 அப்போது எருசலேமில் சிமியோன் என்பவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்.

26 ";ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை" என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.

27 அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது.

28 சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,

29 "ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.

30 ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு,

31 நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.

32 இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவெ உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை" என்றார்.

33 குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர்.

34 சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, "இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்.

35 இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" என்றார்.




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 01, 2012 1:59 pm

ஜனவரி 01 லூக்கா 2:16-21



15 வானதூதர் அவர்களைவிட்டு விண்ணகம் சென்றபின்பு, இடையர்கள் ஒருவரையொருவர்நோக்கி, "வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கின்ற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்;" என்று சொல்லிக்கொண்டு,

16 விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும்; கண்டார்கள்.

17 பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள்.

18 அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர்.

19 ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

20 இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.

21 குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.


மனிதனின் அடிப்படை தேவைகளுள் முதலிடம் பெருவது உணவு. தனி மனிதனுக்கு உணவு இல்லையேல் இந்த உலகை அழித்திடுவேன் என்கிறார் கவிஞர். வாழ்வின் ஆதாரம் உணவு. நீரின்றி அமையாது உலகு. பசி வந்திட பற்றும்(பத்தும்) பறந்துவிடும். பண்பாடு, ஒழுக்கம்,பக்தி எல்லாம் ஒதுங்கிவிடும். பாவமும் ஒழுக்கச் சீர்கேடும் ஒவ்வொன்றாய் எட்டிப்பார்க்கும்.

ஆண்டின் முதல் நாளில் 'வாருங்கள், பெத்லகேமுக்குப் போவோம்' என்னும் அழைப்போடு நம் திருச்சபை தாய்மை உணர்வோடு கூட்டிச் செல்கிறது. ஏன் பெத்லகேமுக்கு அழைக்கிறது. அங்குதான் மனிதர் அனைவருக்கும் தேவையான உணவு உள்ளது. ஆம். பெத்லகேம் என்றால் 'அப்பத்தின் வீடு' என்று பொருள்.

அந்த ஊருக்குப் பெயர் அது என்பதால் மட்டுமல்ல. "வாழ்வு தரும் உணவு நானே." (யோவா 6 :35) "நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது".(யோவா4'14) என்ற இயேசுவே உணவாக தீவனத்தொட்டியில் கிடத்தப்பட்டிருப்பதை காண்பதற்கும்.

"எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்" என்று காலம் காலமாக உலகம் முடியும்வரை ஆன்ம உணவாக தரும் இறைவன் இயேசு அந்த பெத்லகேமில் தீவனத்தொட்டியில் கிடத்தப்பட்டிருப்பதைக் காண அழைப்பு கொடுக்கப்படுகிறது.

இந்த அழைப்பை ஏற்றுப் பெத்லகேமுக்குச் சென்றால் உங்கள் வாழ்வில் எதுவும் குறையிருக்காது. ஆன்மீக தேவை, உடலின் தேவைகள் அனைத்தும் நிறைவு செய்யப்படும். புத்தாண்டின் புனிதமான தொடக்கம். வாழ்த்துக்கள். ஆசீர்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 07, 2012 2:23 pm

யோவான் 2:1-11



1 மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்.

2 இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர்.

3 திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்றார்.

4 இயேசு அவரிடம், "அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே" என்றார்.

5 இயேசுவின் தாய் பணியாளரிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்றார்.

6 யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும்.

7 இயேசு அவர்களிடம், "இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்" என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள்.

8 பின்பு அவர், "இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்" என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.

9 பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு,

10 "எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?" என்று கேட்டார்.

11 இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.


கானாவூர் திருமணவிழா பற்றிய செய்தியைப் பலமுறை வாசித்து, சிந்தித்திருக்கிறோம். இன்று "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்னும் வாக்கியத்தை நமது சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம். திராட்சை இரசம் என்பது மகிழ்ச்சியின் அடையாளம், விருந்தின் அடையாளம், உறவின் அடையாளம். திராட்சை இரசம் தீர்வது என்பது அவமானத்தின் அடையாளமாக, உறவுச் சிக்கலின் அடையாளமாக இருக்கிறது. எனவேதான், அச்சிக்கலைத் தீர்க்க தம் மகனை அணுகினார் அன்னை மரியா.

நமது வாழ்வில், பணியில், குடும்பத்தில் "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டதா?" என்று அவ்வப்போது நம்மைக் கண்காணித்துக்கொள்வது நல்லது. பல பணிகளில் பரபரப்பாக இருக்கும் பலரும், தங்களது நெருங்கிய உறவுகள் ஆழம் குறைந்துவருவதைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். பணம் சேகரிப்பதிலே கவனம் செலுத்தும் இல்லத் தலைவன் மனைவி, பிள்ளைகளின் பாசம் குறைந்துவருவதைக் கவனிப்பதில்லை. பணியிலே நிறைவின்றி, மகிழ்ச்சியின்றி வேலைசெய்வது "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்பதைக் காட்டுகிறது.

இன்றைய நாளில் நமது வாழ்வை, பணியை, உறவுகளைக் கொஞ்சம் அலசிப்பார்ப்போம். "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்று கண்டால், மனங் கலங்காமல், அன்னை மரியாவை நாடுவோம். அவர் நமக்காகப் பரிந்துபேசி, நமது வாழ்விலும் புதிய திராட்சை இரசம் என்னும் இனிமையை ஆண்டவர் இயேசுவிடமிருந்து பெற்றுத் தருவார்.

மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். அன்னை மரியாவின் பரிந்துரையால், எங்கள் வாழ்விலும் அற்புதங்கள் நிகழ்த்தி, திராட்சை இரசம் என்னும் மகிழ்ச்சி பொங்கி வழியச்செய்தருளும். அம்மா, மரியே, தாயே, எங்களுக்காக உம் திருமகனிடம் பரிந்துபேசுவீராக, ஆமென்.




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 10 Ila
Sponsored content

PostSponsored content



Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக