புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
1 Post - 3%
Guna.D
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
17 Posts - 4%
prajai
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
4 Posts - 1%
jairam
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்தாளர் ஜெயலலிதா!!


   
   

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 08, 2011 5:07 pm

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஜெயலலிதா என்றொரு எழுத்தாளர் இருந்தார்.
அவர் எண்பதுகளில் கல்கியிலும் குமுதத்திலும் இரண்டு முழுநீள நாவல்களை
எழுதியவர். சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியுள்ளாரா என்பது தெரியவில்லை.
எழுத்தாளர் ஜெயலலிதா!! Jayjay


திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று தமிழகம் அறிந்த நடிகையாக வாழ்ந்த
நாட்களில் எழுதியவை அந்த இரண்டு நாவல்களும். பின்னாளில் அவர்
புரட்சிதலைவியாகி தமிழக முதல்வர் ஆனதெல்லாம் வரலாறு. அவர் எழுத்தாளராக
இருந்தார் என்பதுதான் ஆச்சர்யமான செய்தி. எழுத்தாளராகவே இருந்திருக்கலாம்!



ஜெ எழுதிய இந்நாவல் குறித்து கேள்விப்பட்டிருந்தாலும் அது புத்தக
வடிவத்தில் இதுவரை பதிப்பிக்கப்படவேயில்லை. பழைய புத்தக கடைகளில் தேடியும்
கிடைக்காத அந்த நாவல்களில் ஒன்று நண்பர் கிங்விஷ்வாவிடமிருந்தது (காமிக்ஸ்
புகழ் கிங்விஸ்வா).


கல்கி இதழில் 80ஆம் ஆண்டு எழுதிய உறவின் கைதிகள் என்னும் அந்த தொடர்கதையை
யாரோ புண்ணியவான் பைண்ட் பண்ணி வைந்திருந்திருக்கிறார். அதை எங்கோ பழைய
புத்தகங்கள் விற்கும் கடையில் தேடிப்பிடித்து அதிக விலை கொடுத்து
வாங்கிவைத்திருந்தார் விஸ்வா.

நமக்கு தெரிந்த ஜெயலலிதா சிறுவயது முதலே கல்வியில் சிறந்து விளங்கியவர்,
எதற்கும் அஞ்சாதவர்,கொஞ்சம் முரட்டுத்தனமான அதே சமயம் வீரமான பெண் என்பதாக
இருக்க.. நாவலை வாசிக்க தொடங்கியதுமே நமக்கு அதிர்ச்சிக்கு மேல்
அதிர்ச்சிதான்! நமக்குத்தெரிந்த முரட்டு முதல்வர் அல்ல இதை எழுதியது! மனது
முழுக்க காதலும் அன்பும் நிறைந்த ஒரு இளம்பெண்ணின் மனநிலையில்
எழுதப்பட்டிருந்தது. காதலின் ஏக்கமும் தவிப்பும் காதலனுடனான அந்த நொடிகளின்
உக்கிரமும் நாவலெங்கும் நிறைந்திருந்தது.



பெண்களை துச்சமென மதிக்கும் நடிகன், கல்லூரி மாணவி ஒருத்தியிடம் காதலில்
விழுகிறான். அவளும் அவனை காதலிக்கிறாள்.. கர்ப்பமாகிறாள்.. பிறகுதான்
இருவரும் தந்தை-மகள் என்பது தெரியவரை அதிர்ச்சியூட்டும் கிளைமாக்ஸ்!
எண்பதுகளின் ஜெயகாந்தன் கதைகளினுடைய பாதிப்பில் எழுதப்பட்ட கதையாகவே இது
இருக்கிறது. அப்படியே இருந்தாலும் இப்படி ஒரு அப்பா-மகள் உறவினை
கேள்விக்குள்ளாக்குகிற கதையை எழுத முனையவே நிறையவே தைரியம் வேண்டும். அது
ஜெவிடம் நிறையவே இருந்திருக்கிறது.


முதல் அத்தியாயத்தில் நடிகனின் அறிமுக காட்சியில் தொடங்கி
இறுதிஅத்தியாயத்தில் அவனுடைய மரணம் வரை ஒரே மூச்சில் படித்துவிட முடியும்.
அவ்வளவு வேகமான எழுத்து நடை. படிக்கும் போது ஒருவேளை இதை அசோகமித்திரன்
எழுதியிருப்பாரோ என்கிற ஐயமும் எழாமல் இல்லை. பல இடங்களில் கரைந்த நிழல்கள்
சாயல்!

ஒரு அத்தியாயத்தில் நடிகன் மாணவியிடம் தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டு வர..
அவள் அழைக்க.. அந்த அத்தியாயம் முழுக்க இருவருக்குமான தொலைபேசி உரையாடல்
மட்டும்தான். உரையாடல் என்றால் வசனங்கள் இல்லாமல் இருவருக்குமான மௌனமே
நிறைந்திருப்பது அருமை. எழுத்தில் மௌனத்தை கொண்டுவருவது மிகவும் கடினம்
என்பார்கள். அதே போல காதலின் தவிப்பையும் ஏக்கத்தினையும் கூட நன்றாகவே
எழுதியிருக்கிறார்.



இந்நாவல் அவருடைய வாழ்க்கையின் அடிப்படையில் எழுதப்பட்டத்தாக சிலர்
கூறினாலும் அப்படி எதையும் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு அழகான
புனைவாகவே இது இருக்கிறது.



தொடர்கதை வடிவத்தில் எழுதப்பட்டிருந்தாலும் சுஜாதாவின் தொடர்கதைகளைப் போல
ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் தேவையில்லாத டுவிஸ்ட்டோ அதிர்ச்சியோ
இல்லாமல் மென்மையாக தொடர்ந்திருப்பது பிடித்திருந்தது. வாய்ப்புகிடைத்தால்
அனைவருமே படிக்க வேண்டிய நாவல் இது. அம்மாவின் புகழ்பாடும் அதிமுகவினர் இதை
புத்தகமாக கொண்டுவர முயற்சி செய்யலாம். கலைஞர் மட்டும்தான் எழுதுவாரா எங்க
தலைவியும் இலக்கியம் படைச்சிருக்காங்க பாருங்க என மார்தட்டிக்கொள்ள
உதவும். ஜெ குமுதத்தில் எழுதிய இன்னொரு நாவலை தேடிக்கொண்டிருக்கிறேன்.
உங்களிடமிருந்தால் கொடுத்து உதவலாம்.



அதிஷா




kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 08, 2011 5:11 pm

ஜெயலலிதா ஒரு எழுத்தாளரா.ஜெயலலிதாவைப் பற்றி அறியதந்தமைக்கு நன்றி எழுத்தாளர் ஜெயலலிதா!! 224747944 எழுத்தாளர் ஜெயலலிதா!! 677196 எழுத்தாளர் ஜெயலலிதா!! 678642

பகிர்விற்கு நன்றி ரெவ்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எழுத்தாளர் ஜெயலலிதா!! Image010ycm
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Thu Sep 08, 2011 5:12 pm

மிகவும் ஸ்வாரஸ்யமாக உள்ளது, நம் முதல்வருக்குள் ஒரு எழுத்தாளரா? அந்த புத்தகத்தை இப்போதே படிக்க வேண்டும் போல் உள்ளது.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 08, 2011 5:14 pm

எனக்கும் படிக்க வேண்டும் என்ற ஆவால்தான் உள்ளது




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 08, 2011 5:19 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 08, 2011 5:26 pm

அனைத்து திறமைகளை கொண்ட பெண்மணி அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 08, 2011 5:31 pm

அப்படியே இருந்தாலும் இப்படி ஒரு அப்பா-மகள் உறவினை
கேள்விக்குள்ளாக்குகிற கதையை எழுத முனையவே நிறையவே தைரியம் வேண்டும். அது
ஜெவிடம் நிறையவே இருந்திருக்கிறது.

கலைஞரும் இதுபோன்ற ஒரு கதை எழுதியிருக்கிறார். ( ஒரு கூடுதல் தகவல்)

இது எனக்கு தெரியாத புதிய செய்தி. தகவலுக்கு நன்றி !

இன்னொரு கூடுதல் செய்தி. சாகித்திய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்கள் துணிந்தவன் என்கிற ஒரு புனைகதையை எழுதியிருப்பார். அது எம்‌ஜி‌ஆர், ஜெயா இவர்கள் காலத்திற்க்கு முன்னரே எழுதியது. ஆனால் இன்று அதை படித்தல் அவர்கள் இருவரையும் வைத்து எழுதியிருப்பதாகவே தோன்றும். முடிந்தால் படித்து பாருங்கள்.


நன்றி.
ayyamperumal
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyamperumal



எழுத்தாளர் ஜெயலலிதா!! Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Sep 08, 2011 6:00 pm

திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று தமிழகம் அறிந்த நடிகையாக வாழ்ந்த
நாட்களில் எழுதியவை அந்த இரண்டு நாவல்களும்.
பத்திரிக்கைகள் பிரபலமாக விளங்கும் நடிகர் , நடிகைகள் மற்றும் சாமியார்களை, கொண்டு நாவல்கள் வெளியிடும். ஆனால் உண்மையில் அவர் பெயரில் வேறு யாராவது பிரபலமில்லாத எழுதாளர்களே எழுதுவார்கள் இவர்களை (ghost writer) என்று சொல்வார்கள் .

ஜெயலலிதா பெயரில் யாரோ ஒரு (ghost writer) நவால்தான் அது என்று நினைக்கிறேன் .

அதை"ஜெ" எழுதியிருந்தால் ஏதாவது ஒரு வகுப்புக்கு முன்பே துணைப்பாடம் ஆக ஆக்கியிருப்பார்கள் .

அவரே அது வேண்டாம் என்றுதானே விட்டுவிட்டார்


note:A ghostwriter is a professional writer who is paid to write books, articles, stories, reports, or other texts that are officially credited to another person. Celebrities, executives, and political leaders (Wikipedia)



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 08, 2011 6:20 pm

கே. பாலா wrote:
note:A ghostwriter is a professional writer who is paid to write books, articles, stories, reports, or other texts that are officially credited to another person. Celebrities, executives, and political leaders (Wikipedia)

உண்மை தான் பாலா ஸார்,

இசைஞானி இளையராஜா அவர்கள் கூட தன் வாழ்க்கை வரலாறை, வைரமுத்துவை வைத்து எழுதி வெளியிட்டார். அதில் நல்ல ரசனை இருந்ததால், படிப்பவர்களுக்கு சந்தேகம் வந்தது. அவர் இசைஞானி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இவ்வளவு சிறப்பாய் கவிதை எழுத மாட்டார் என்றார்கள். பின் வைரமுத்துவும் நான் தான் அவர் வாழ்க்கையை கவிதையாக்கி எழுதுனேன் என்று பேட்டி கொடுத்துவிட்டார். இந்த சம்பவம் தான் இளைய ராஜாவிற்கும். வைரமுத்துவிற்கும் இடையே பிளவை ஏற்படுத்தியதாக அறிந்தேன். ( வைரமுத்து வரை புத்தகம் )

( ஆனால் இளைய ராஜா இன்று நன்றாய் பாடல் எழுதுகிறார். வெண்பாக்கள் எல்லாம் எழுதிகிறார் )



எழுத்தாளர் ஜெயலலிதா!! Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 09, 2011 9:12 am

கே. பாலா wrote:
திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று தமிழகம் அறிந்த நடிகையாக வாழ்ந்த
நாட்களில் எழுதியவை அந்த இரண்டு நாவல்களும்.
பத்திரிக்கைகள் பிரபலமாக விளங்கும் நடிகர் , நடிகைகள் மற்றும் சாமியார்களை, கொண்டு நாவல்கள் வெளியிடும். ஆனால் உண்மையில் அவர் பெயரில் வேறு யாராவது பிரபலமில்லாத எழுதாளர்களே எழுதுவார்கள் இவர்களை (ghost writer) என்று சொல்வார்கள் .

ஜெயலலிதா பெயரில் யாரோ ஒரு (ghost writer) நவால்தான் அது என்று நினைக்கிறேன் .

அதை"ஜெ" எழுதியிருந்தால் ஏதாவது ஒரு வகுப்புக்கு முன்பே துணைப்பாடம் ஆக ஆக்கியிருப்பார்கள் .

அவரே அது வேண்டாம் என்றுதானே விட்டுவிட்டார்


note:A ghostwriter is a professional writer who is paid to write books, articles, stories, reports, or other texts that are officially credited to another person. Celebrities, executives, and political leaders (Wikipedia)
அநியாயம்



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக