ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள்

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள்

Post by சிவா on Wed Dec 17, 2008 3:19 pm

First topic message reminder :

இலக்கியம்

இலக்கியம், வாழ்க்கையில் மனிதர்கள் கண்ட ஆழ்ந்த அனுபவங் களையும், உண்மைகளையும் கலைநயத்துடன் வெளியிடுகிறது. இலக்கியத்தால், பிறருடைய வாழ்க்கை, செயல், அறிவு, நினைவு, உணர்ச்சி, உள்ளக்கிடக்கை, குறிக்கோள் என்பவற்றை அறிந்து கொள்ளவும், கற்றுக் கொள்ளவும் முடியும்.

வாழ்வும் இலக்கியமும்

இலக்கியம் எனப் படைக்கப்படுவன அனைத்தும் இலக்கியமாகி விடுவதில்லை. இலக்கியம் என்பது, மனித வாழ்வோடு இணைந்து, ஆழ்ந்து–அகன்று, என்றும் நிலைபெறுவதுமான மனிதப்பண்புடன் தொடர்புடையது; மனிதனால் விரும்பக் கூடியது; மனித வாழ்க்கையோடு தொடர்புடையது; என்றும் நிலைத்திருக்கக் கூடியது; கற்போர் மனத்தில் இன்பத்தை ஊட்டுகின்றனவாக அமைவது.

இலக்கிய வகை

தனிமனிதன் வாழ்வு, அனுபவம் என்பவற்றைக் கூறும் இலக்கியம் ஒருவகை. மற்றொன்று, புறவுலக வாழ்வின் ஈடுபாட்டினால் ஏற்பட்ட அனுபவத்தின் வாழ்வு, தாழ்வு, நன்மை, தீமை, குற்றம், நீதி ஆகியவற்றுக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பை அனுபவத்தால் கூறுவது. அனுபவம் என்பது தனிமனிதன் ஒருவனுக்கு மட்டும் உரிமையானதாகா தாகையால் மனித சமுதாயம் முழுமைக்கும் பொதுமையாகி விடுகிறது. அத்தகைய வகைக்குரியவை இலக்கிய வகைகளாகின்றன.

இலக்கியக் கலை

கலை என்பது ஒருவகை ஆற்றல்; குறிப்பிட்ட ஒருவழியை மேற்கொண்டு, முன்னரே கலைஞன் மனத்தில் தோன்றிய ஒரு பயனைப் பிறர் அறியச் செய்யும் ஆற்றலே ஆகும் அது என்கிறார், ஆபர் கிராம்பி என்ற திறனாய்வாளர். மிகப் பழங்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள், தங்கள் கருத்துகளில் தோன்றிய சிறந்த உண்மைப் பொருள்களைக் கலைகளின் மூலமே வெளியிட்டனர். அவர்கள் வாழ்க்கையில் பெற்றிருந்த அனுபவத்தை அற ிவிக்கும் கருவியாகத் திகழ்வன அவர்கள் ஆக்கிய கலைகள் என்று, இலக்கியக் கலைக்குரிய அடிப்படைகள் கண்டறியப் படுகின்றன. அத்தகைய அடிப்படைகளைக் கொண்டு திகழும் கலைகளில் மருத்துவமும் ஒன்று. ‘ஆய கலைகள் அறுபத்து நான்கு’ என்று கூறப்படுபவற்றுள் மருத்துவமும் அடங்கும்.

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down


Re: தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள்

Post by சிவா on Wed Dec 17, 2008 4:10 pm

கைத்தடியும் நாயும்

கொடிய நோய்க்கு எஃகு பற்பம் சிறந்தது. அதனைச் செய்து உண்டு வந்தால், நோயினால் வருகின்ற மரணம் தடுக்கப்படும் என்று, மருந்து செய்முறை கூறப்படுகிறது. மருந்து செய்வதற்குமுன், முன்னுரை போல கூறப்படும் கருத்தாக, இடைக்காடர் பாடல் அமைகிறது.

கோனாட்டுக் குட்டி தாயாரம் நாட்டுக் குள்ளே
கூடாவிட்டால் பாலைக் கூட்டக் கூடாதே
வானாட்டை வெள்ளாடு செம்மறி ஆட்டின்
மாற்கமறி நல்ல கம்பளி யாடே அளி
தேனாட்ட நீர்காட்டி மேலான மந்தை
சின்னக் குடிசையில் சிக்க வைப்பாயே
நானாட்ட வேணுமோ நீயாட்ட ஒணாதோ
நாமக்கோன் கைத்தடி நாயும் போகாதே.''98

கோனார்களின் உடமையான ஆட்டுக்குட்டி, அதன் தாயான ஆடுகளோடு சேராவிட்டால் பாலைக் கறக்க முடியாது! என்பதால் அவற்றோடு சேர்த்து, பால் அருந்தச் செய்க. தேவர்கள் நிறத்தைப் போல செம்மையான நிறத்தை உடைய வெள்ளாடு, கருத்த ஆடு ஆகிய வற்றுக்கு நீர் போன்றவற்றை அளிப்பாயாக! அவ்வாறு செய்த பின்பு, அவற்றைச் சின்ன குடிசைகளில் அடைத்துவை! இவற்றைச் செய்ய நான் வேண்டுமோ? நீ செய்யக் கூடாதோ? முறையாக ஆடு மேய்க்கத் தெரிந்த நமக்குக் கைத்தடியும், ஆடுகளை விரட்டிப் பிடிக்க நாயும் தேவையில்லையே! என்னும் பொருளை வெளிப்படையாகத் தருவதாக இருக்கிறது. இதனுள் மறைந்த வேறு ஒரு பொருள் மருந்தின் முறைகளை உரைப்பதாக இருக்கிறது.

எஃகு, பால் என்னும் கள் சேராவிட்டால் பற்பமாக ஆகாது! செம்மையான நிறத்தை உடைய செந்தூரமும், கறுமை நிறமுடைய மாத்திரையும், தேன், நீர் என்னும் அனுபானங்களைக் கொண்டு உண்ணவேண்டும். (செந்தூரம் தேனிலும், மாத்திரை நீரிலும்) அந்த வகைகளைச் சின்னக் குடிசையாகிய குப்பிகளில் அடைத்து வைக்க வேண்டும். இந்த மருந்துகளைச் செய்ய பெரியோர்களான நாங்கள் வேண்டுமா? முறைகளைக் கூறினால் நீங்களே செய்து கொள்ளக் கூடாதா? அம்மருந்தின் அருமைகளை அறிந்து செய்தீர்களேயானால், உயிரைப் பறித்துச் செல்ல கையில் தண்டத்தையும், நாயைப் போல இழுத்துச் செல்ல பாசக்கயிற்றையும் கொண்டு வருகின்ற எமனுக்கு வேலை யில்லை! என்னும் பொருள், உள்ளுரையாக அமைந்திருக்கிறது. சங்க இலக்கியத்துக்கு இணையாகத் தமிழ் மருத்துவப் பாடல்களில் பொருள் புதைந்து இருப்பது காணப்படுகிறது.

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள்

Post by சிவா on Wed Dec 17, 2008 4:11 pm

பெண்ணின் உள்ளாடை

பெண்ணுக்கு உள்ளாடையாகப் பட்டோ–பருத்தியோ ஆடையாகக் கூறாமல், பித்தன், கருங்குரங்கு, காட்டானை, மலைப் பிரட்டன், பச்சோந்தி, கோட்டான், தேவாங்கு எனும் இவை கூறப்படுகின்றன. இவை, எப்படி ஆடையாக அமையும் என்பது, உள்ளுள் உறையும் பெருளாக இருக்கிறது.

கண்ணாடிப் பித்தன் கருங்குரங்கு காட்டானை
மண்ணாளும் வேந்தர் மலைபிரட்டன்விண்ணாடி
குழியாபச் சோந்தி கோட்டானும் தேவாங்கு
விழியாளின் உள்ளாடை யாம்''99
(இச்செய்யுள் வெண்பாவுக்குரிய தளையுடன் அமையவில்லை)

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள்

Post by சிவா on Wed Dec 17, 2008 4:12 pm

சிவனைச்சுட்டு கடையில் விற்றுவிடு

சிவனைச் சுட்டுக் கடையில் கொண்டு விற்றுக் காசாக மாற்றிக் கொண்டு உல்லாசமாக இருங்கள்! என்று எளிமையாக உரைப்பது போல் கடுமையான பொருளை உரைக்கப்படுகிறது. என்றாலும், பொருள் காணும் நுட்பத்தில் கடினம் தெரிகிறது.

ஆயக் கல்லை அள்ளி
அதிலே கொஞ்சம் உள்ளி
இயத்தைக் கொஞ்சம் கிள்ளி
வைத்து உருக்க வள்ளி
பொன்னாங் கண்ணி பொடுதலே
தம்பி கூனன் தலையிலே
சிவனை வைத்துச் சுடுங்கடி
கடையில் கொண்டு வில்லுங்கடி.''100
ஆயம் என்பது ஆயரைக் குறிக்கும். ஆயர்இடையர் கிருஷ்ணன் திருமால் அரிஅரிதாரம் என்றாகும். ஆயக்கல் அரிதாரம்; உள்ளி வெள்ளைப் பூண்டு; இயம்இரும்பு; வள்ளிவெள்ளி; தம்பிகூனன் அயப்பொடி; சிவன்இரசம் ஆகிய இவற்றைக் கொண்டு உருக்கினால், இரும்பு பொன்னாகும். அதனைக் கடையில் விற்றுவிடலாம் என்று கூறுகிறது.

சந்திரன் தேவி சதாசிவன் பெண்டாட்டி
அந்த முராரி அகத்துள் மனைவியும்
கெந்தகத் தோடே கிளறி வெதுப்பினால்
சந்திரரானை (சுடர்) குருவா மே''101
சந்திரன் தேவிபூ நீர்; சதாசிவன் பெண்டாட்டிகடல் உப்பு; அந்த முராரிஅரிதாரம்; அகத்துள் மனைவிகல்லுப்பு ஆகியவற்றுடன் கந்தகத்தைச் சேர்ந்து உருக்கினால் குரு மருந்தாகும் என்பது பொருளாகும்.

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள்

Post by சிவா on Wed Dec 17, 2008 4:13 pm

வசை

ஒருவனைத் திட்ட வேண்டுமென்று எண்ணிவிட்டால் எப்படி வேண்டுமானாலும் திட்டலாமோ? அப்படித்தான் தெரிகிறது. என்றாலும், உள்ளுக்குள் ஒரு பொருள் இருக்க வேண்டுமே! அது என்ன?

ஆண்டிப் பையா சங்கா ஆரயா கட்டினார் லிங்கா
குருக்க ளென்ற தாயோழி கும்பிட்டுக் கட்டினான் பேயாண்டி.''102
பிரம்ம தண்டிக்குக் குருக்கு என்றொரு பெயருண்டு. இது, லிங்கத்தைக் கட்டும் என்பதையே மேற்கண்ட பாடல் உரைக்கிறது.

சித்திராங்கி

சீரோடும் சிறப்போடும் திருமணம் செய்து வாழச் சென்ற பெண்ணை வாழவைக்காமல், செண்டால் அடித்து, ஆத்தாள் வீட்டுக்கே அனுப்பிட்டானே, மச்சான். அவ்வாறு ஓடிப்போன சித்திராங்கியைப் பற்றிக் கூறுகிறது.

பூப்பூ பூப்பூ புளியம்பூ பொன்னான கொண்டைக்குத் தாழம்பூ
அத்தை வீட்டு முக்கண் பூச்சி அந்திக்குச் சந்திக்குப் பால் காய்ச்சி
சுண்டச் சுண்ட யிறக்கி வைத்தேன் சூரியப் பன்தன் கோயிலிலே
எட்டுக் கடாவும் வெட்டிவைத்தேன் ஏழு பெண்ணுக்குத் தாலிகட்டி
மச்சான் என்ற வக்கா ளையோழி மல்லிகைச் செண்டா லடித்தானாம்
சுழன்று சுழுந்து விழுந்தாளாம் சொக்க மஞ்சள் குளித்தாளாம்
அன்று குளித்த தன்னோடே ஆத்தாள் வீட்டுக்குப் போனாளாம்
ஆத்தாள் வீட்டுச் சித்திராங்கி அமர்ந்து வாடி கோணங்கி.''103

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள்

Post by சிவா on Wed Dec 17, 2008 4:14 pm

குறிப்பு மொழியின் அடிப்படைகள்

மருத்துவ நூல்களில் காணப்படுகின்ற குறிப்பு மொழி, குழுக் குறி, மறைமொழி ஆகிய அனைத்தும் பொருள்களின் பெயர், குணம், வண்ணம், இதிகாசங்களில் அமையும் பாத்திரங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைகின்றன. இலக்கியங்களில் வழங்கிவரும் பழமையான சொற்களும் இடம் பெருகின்றன.

பெயர் அடிப்படை

சிவகாமி என்னும் புராணப் பெயருக்கு கௌரி என்னும் ஒரு பெயர் இருப்பதால், சிவகாமி என்று கௌரி பாடணம் குறிப்பிடப்படுகிறது. சுக்கிரன் என்னும் கோளின் பெயர் வெள்ளி என்று குறிப்பிடப்படுவதால், சுக்கிரன் என்று வெள்ளி என்னும் உலோகத்துக்குப் பெயரிடுவர். நட்சத்திரம் என்று குறிப்பிடும் பொதுப் பெயரில் பூரம் சுட்டுப் பெயராக இருப்பதால் பூரம் என்னும் பாடாணத்தை நட்சத்திரம் என்பர். தனுசு என்னும் பெயர் வில் என்றும், சிலை என்றும் பொருள் படுவதால், தனுசு மனோசிலையைக் குறிக்கும். சுக்கிலம் என்னும் பெயர் விந்தைக் குறிக்கும். பூமிக்கு விந்து இரசம் ஆனதால், சுக்கிலம் என்னும் பெயரால் இரசம் குறிக்கிறது. மால்திருமால்; தேவிதாரம் = மால்தேவி அரிதாரம் என்பர். அரி, திருமாலைக் குறிக்கும்.

குணத்தின் அடிப்படை

சுக்கு மிளகு திப்பிலி ஆகிய மூன்றும் மருந்துப் பொருள்கள். மருந்துக்கு நஞ்சு என்று பெயர். நஞ்சை விஷம் என்று வடமொழி கூறும். மூன்று மருந்து என்பது, திரிகடுகம் என்றாகி, திரிவிடம் என்று குறிக்கப்படுகிறது. முனி என்றால் முனிவர் என்றும் முனிவர் என்றால் அகத்தியர் என்றும் பொருள் கொண்டு முனி அகத்தி என்பர். காமம் கொண்டிருப்பவர்கள் நேரத்துக்கு நேரம் தனது குணத்தை மாற்றிக் கொள்வதாகக் கொண்டு, காமரூபி என்று பச்சோந்தி குறிப்பிடப்படும். சீரகம், உணவு செரிமானத்துக்கும் பசியைத் தூண்டும் குணமும் கொண்டிருப்பதால் போசன குடோரி என்றனர்.

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள்

Post by சிவா on Wed Dec 17, 2008 4:15 pm

வண்ணத்தின் அடிப்படை

சிவந்த நிறத்திலுள்ள மலர்களைச் சிவந்த மலர் என்னும் பொதுப்பெயரால் குறிப்பதைப் போல, செம்பருத்தியும், தாமிரமும் சிவந்த வண்ணத்தில் தோன்றுவதனால், சிவந்த மலர் என்று கூறப்படும். நரித்தோல் போன்ற வண்ணத்தில் இருக்கும் நாவற்பட்டை நரித்தோல் எனப்படும். மாயாபுரி தோன்றி மறையும். வண்ணத்தால் பித்தளை, தேய்த்து வைத்தவுடன் மாறிவிடும் என்பதால் பித்தளை மாயாபுரி ஆயிற்று.

பண்பின் அடிப்படை

கற்றாழை, என்றும் இளமையாக, பசுமையாக இருப்பதால், குமரி என்று குறிப்பிடப்பட்டது. திப்பிலிக்குக் காமத்தைத் தூண்டும் பண்பிருப்பதனால் காமமென்றே பெயராயிற்று. தேவ மகளிர் போல இனத்தால் என்றும் அழியாமல் இருப்பதனால், வாழை, அரமகள் எனப்பட்டது. காக்கைக்கு நரையும் திரையும் வருவதில்லை என்பதால் நரைதிரையில்லான் என்று காக்கை குறிப்பிடப்பட்டது.

எண்ணுப் பெயர் அடிப்படை

அபின் என்னும் பொருளைக் குறிக்க அ+பின் எனப் பிரித்து, அஎட்டு என்னும் எண்ணைக் குறிப்பதால் எட்டுக்குப் பின் என்று அபின் குறிப்பிடப்படுகிறது. திசை, திக்கு என்பது எட்டு கொண்டது என்பதால் எட்டு எண்ணும் எண், திக்கு எனக் கூறுவர். காது இரண்டு என்பதால், இரண்டு எண்ணும் எண், செவி என்று கூறப்படும்.

வினை அடிப்படை

வேர்க்குரு உடம்புக்கு வந்தால், அல்லது வராமல் இருக்க வெட்டிவேர் பயன்படுத்தப்படும். அதனால், வேர்க்குரு என்பது குருவேர் என்று வெட்டிவேரின் பெயராயிற்று. பன்றிக்குக் கோரைக்கிழங்கு விருப்பமான உணவு. கோரைக் கிழங்கைத் தோண்டித் தின்னும் என்பதால், பன்றி மீட்டான் என்று பெயராயிற்று. எனவே, சித்த மருத்துவ நூல்களில் காணப்படும் குறிப்பு மொழிகள், பல அடிப்படையைக் கொண்ட பெயர்ச் சொற்களாக அமைக்கப் பட்டிருக்கின்றன என்பது அறியத்தக்கது.

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள்

Post by சிவா on Wed Dec 17, 2008 4:22 pm

மூலம்: [You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Nov 23, 2011 8:07 am

மிகவும் அருமையாக உள்ளது சிவா அவர்களே... மகிழ்ச்சி இதைச் சேகரிப்பதர்க்காக எவ்வளவு சிரமப்பட்டிருப்பீர்கள் என்பதை உணர முடிகிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2939
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 899

http://sundararajthayalan.com/

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum