புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு Poll_c10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு Poll_m10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு Poll_c10 
83 Posts - 55%
heezulia
காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு Poll_c10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு Poll_m10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு Poll_c10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு Poll_m10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு Poll_c10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு Poll_m10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு Poll_c10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு Poll_m10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு Poll_c10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு Poll_m10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு Poll_c10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு Poll_m10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு Poll_c10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு Poll_m10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு Poll_c10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு Poll_m10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு Poll_c10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு Poll_m10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்றின் ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு


   
   

Page 1 of 2 1, 2  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Sep 21, 2009 11:13 pm

உதவிக்கு ஒரு விரலாவது கொடு
(கருணையின் பேரின்பம்)



நாட்டின் மொத்த ஒரு சதவிகிதத்தில், சில இந்துக் குடி மக்களும் வாழும் ஒரு சிறிய அரபு தேசம் ஏமன்!
பதினேழு சதவிகித குடிமக்கள் நாளொன்றிற்கு 1.25-க்கு குறைந்த அமெரிக்க டாலரை மட்டுமே தனிநபர் வருமானமாக கொண்ட ஏழ்மை தேசம்.

தற்கிடையே, 6500 வீடுகள் நூறு மசூதிகளை கொண்ட ஏமனின் தலைநகர் "சன'அ" நோக்கி இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் தரை இறங்கவிருக்கும் மாலனின் விமானத்தில் முதல் வகுப்பு இருக்கையில் ஒன்று வெறுமனே இருக்க, அவர் தூக்கத்தை கெடுக்க 'இதோ வந்தமர்கிறாள் ஒரு தேவதை!

ரு பளபளக்கும் கருப்பங்கியை முகத்திலிருந்து கால் வரை அணிந்து ஏதோ ஒரு தேசத்தின் ராஜகுமாரியை போல ஒரு கம்பீர தோற்றம் கொண்டிருந்தாள் அவள்.

யாருக்கும் தலை வணங்குபவளல்ல நானென்பது போல் 'நிமிர்ந்த மார்பும் நாசி துளைக்கும் அவளுடைய மனமும் மாலனை சற்று விலகி தூரமாக உட்கார வைத்தது.

வள் திரும்பி மாலனை பார்க்கிறாள், எடுத்து வீசிய வாளினை போல் ஆண்களை வெட்டி வீழ்த்தும் காந்த பார்வை அவளுக்கு. மாறனும் சற்று திரும்பி அவளை பார்க்கிறார். மூடிய அவளுடம்பின் அத்தனை அழகையும் அவளுடைய கண்களிரட்டும் பளிச்சென காட்டியது.

சற்றும் எதிர் பாராத குரலில் அவள் -

"ஹாய்..." என்கிறாள்.

"வணக்கம்" என்றார் மாறன்.

"மன்னியுங்கள். விமானத்தில் பலமுறை வாழ்வின் மிகமுக்கியமானவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது, எனவே விமான பயணத்தில் நான் உறங்குவதில்லை."

"அப்படியா. நல்லதம்மா.."

"அங்கு அருகில் இருப்பவர் நன்றாக உறங்குகிறார், அதனால் இங்கு வந்தேன். உங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லையே?"

"இல்லை.. இல்லை.."

"நீங்கள் இந்தியர் தானே"

"நிச்சயமாக"

"பிறரை மதித்து வணங்கும் குணம் மிக உயர்வானது, எனக்கு இந்தியரை மிக பிடிக்கும்"

"நல்லதம்மா.."

"நான் அம்மா அல்ல, என் பெயர் மெஹல். பெயர் சொல்லியே அழைக்கலாம்"

"என்னது.. மெஹல்?!!"

"ஆம்! மெஹல் மோனஹ்"

"மிக அழகான பெயர். அரேபியர் எப்போதும் தன் பெயரை மிக நீளமாய் வைத்துக் கொள்வார்களே?"

"உண்மை தான், எங்களின் பரம்பரை பெயர் அதாவது முப்பாட்டனார் பெயர், தகப்பனார் பெயர் எல்லாம் சேந்து வரும். என் முழு பெயர் 'மொஹம்மத் இத்தநென் அப்தல்லா மெஹல் மோனஹ்"

அவள் தன் முழு பெயரையும் நீட்டி முழக்கி இழுத்து சொல்லி முடிக்க மாலன் சிரித்தே விட்டார்.

"பார்த்தீர்களா? சிரிக்கிறீர்களே"

"மன்னிக்கவும். மெஹல் என்பதே அழகான பெயர். நான் அப்படியே அழைக்கலாம் இல்லையா?"

"தாராளமாக. சரி, உங்கள் பெயரென்ன?"

"என் பெயர் மாலன். மாலன் தாண்டவராயன்."

"தாண்டா....??? மலன்...???"

"இல்லை இல்லை.., மீண்டும் சிரித்தார் மாலன். என் பெயரையே மாற்றி விடுவீர்கள் போலிருக்கே! வெறும் மாலன் என்று அழையுங்கள் போதும்"

அவள் மாலனின் ரசிக்கத் தூண்டும் அழகிய முகத்தையே பார்கிறாள்.

"ஏன்..மெஹல்?"

"ஒன்றுமில்லை, உங்களின் சிரிப்பு வசீகரமானது மாலன்"

"நிஜமாகவா?"

"ஆம். அதுசரி, நீங்கள் ஜோர்டானிலிருந்து வருகிறீர்களே; அங்கே என்ன, வேலை செய்கிறீர்களா?"

மாலன் ஜோர்டான் சென்றதற்கும், ஏமன் வருவதற்குமான அத்தனை காரணங்களையும் விரிவாக சொல்லி முடிக்கிறார். விமானம் சற்றேறக்குறைய தரை இறங்கும் நிலையில் உள்ளது.

"மாலன் இத்தனை சொல்கிறீர்கள் ஆனால் உங்களை பார்த்தால் என்னால் நம்பவே முடிய வில்லை"

"அத்தனை தகுதியற்றவன் போல் தெரிகிறேனா நான்?"

"அப்படியில்லை மாலன், மிக சாதாரண தோற்றமென்றும் உங்களை சொல்லிவிட முடியாது தான், ஆனால் பிரச்சாரம் செய்யும் அளவுக்கு ஒரு வயோதிகம் தெரியவில்லையே?"

"உண்மையை போதிப்பதற்கு உணர்தலே அவசியம் மெஹல், வயோதிகமல்ல"

"எனக்கு ஆச்சர்யம் வருகிறது மாலன், இத்தனை சின்ன வயதில் உங்களால் எப்படி இந்தளவிற்கு; தெரியவில்ல.."

அவள் முழுதாக வந்ததை பாதியாகவே நிறுத்தினாள்.

"ரு மனிதன் அழும்போது தான் அழுவதாய் ஒரு பதற்றம் வருமாயின்; எங்கோ ஒரு வீடு பற்றி எரிகையில் தன் வீடு எரிவதாய் ஒரு அவஸ்த்தை ஏற்படுமாயின்; மரம் செடி கொடிகள் அசைகையில் அந்த அசைவின் காரணமென்ன என உற்றுப் பார்த்து அவைகளின் மொழியறிய முயற்சித்திருபாய் எனில்; தண்ணீரில் விழுந்த ஒரு எறும்பை கூட காப்பாற்றி தரையில் விட பாடுபட்டிருப்பாயானால்; கடவுளை இந்துக்களின் கோவிலிலும், இஸ்லாமிய மசூதியிலும், கிருஸ்த்துவ தேவாலையத்திலும் வணங்க முடியுமானால்; மனிதரை கடவுள் வாழும் கோவிலென கண்டு மதித்திருப்பாயானால்....., இவைகளை பற்றிப் பேச வயது ஒரு பொருட்டில்லை மெஹல்."

"மிக அருமை மாலன், ஆனால் எனக்கு இத்தனை நீள பதிலுக்கு அவசியமில்லை. நான் உங்களின் முதல் வரியிலேயே நீங்கள் சொல்ல வருவதை புரிந்துக் கொண்டேன்"

"வாய்ப்பு கிடைக்கும் போது சொல்லவேண்டியதை சற்று விரிவாகவே சொல்லி விடுவது என் பழக்கம், காரணம், நீயா நானா என்று ஜெயிப்பதற்கல்ல என் பேச்சு. நம் உரையாடலை இங்கு வேறு யாரும் கூட கேட்கலாமில்லையா, அப்படி ஒருவர் கேட்டால் கூட போதும் அவருக்கென நாளெல்லாம் பேசுவேன். காரணம் நம்மால் ஒருவரை உருவாக்க முடிந்தால் கூட போதும் அந்த ஒருவரால் நாளை நூறு ஆயிரமாகவும் ஆயிரம் கோடியாகவும் மாறலாம்"

"நீங்கள் பேசினால் நிச்சயமாக மாறும் மாலன், சரி.. ஜோர்டான் எப்படி இருந்தது"

"அருமை. அழகான தேசம்"

"ரசித்தீர்களா?"

"மிக ரசித்தேன்"

"எங்கள் தேசம் அழகான தேசம். அப்படி பாதுகாத்திருக்கிறோம் நாங்கள்."

"அப்படியா!!!? உண்மையாகவா!!?" ஒரு ஏளனமான தொனியில் மாலன் கேட்டுவிட..

"ஏன் இப்படியொரு விகல்பமான சிரிப்பு மாலன்?"

"எத்தனை தவறுகளை கண்டேன் தெரியுமா உங்க நாட்டில்?"

"தவறா?!! என்ன பெரிய தரை அப்படி கண்டுவிட்டீர்கள்?"

"சரி, தாரில்லை.. குறை என்று வைத்துக் கொள்ளுங்கள்"

"இருக்கட்டும் இருக்கட்டும்.. என்ன குறை கண்டீர் எங்கள் தேசத்தில்?"

"ஏனித்தனை கோபம் மெஹல்? உங்களுக்கு பிடிக்கவில்லையெனில் அதை பேசுவானேன். வேறு ஏதேனும் பேசுவோம், நீங்கள் சொல்லுங்கள் ஜோர்டானில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்?"

"பேச்சை மாற்றுவது எனக்கு பிடிக்காது மாலன், சொல்லுங்கள் என்ன குறை கண்டீர்கள் எங்கள் தேசத்தில்?"

"என் தேசத்தில் கண்ட அதே குறை"

"என்ன?"

"இந்தியாவிற்கு வந்திருக்கிறீர்களா?"

"பலமுறை வந்திருக்கிறேன், உங்கள் கிராம மக்கள் வரை சென்று பார்த்திருக்கிறேன்"

"சபாஷ், அங்கு என்ன கண்டீர்கள்?''

"விண்முட்டும் கட்டிடமும்; அருகே, ஒருவேளை சோற்றினை தேடி அலையும் ஓலை கொட்டகை வாசிகளையும் என்றால் ஒப்புக் கொள்வீர்களா மாலன்?''

"அது தான்.., அதுதான் குறை மெஹல். உலகம் நிறைந்த குறை அது தான்.
ஒரு ஊரில் நூறு வீடிருக்கும், அதில் குறைந்தது பத்து வீடுகளாவது ஐம்பது குடும்பத்திற்குரிய வசதிகளை தனித் தனியே கொண்டிருக்கும்; இன்னுமொரு இருபது வீடுகள் பத்து வீடுகளுக்குரிய சொத்துகளையாவது தனித் தனியே வைத்திருக்கும்; இன்னுமொரு முப்பது வீடுகள் நமக்கு போதுமான வசதிகள் தான் வந்து விட்டதே, இனி எவன் எக்கேடு கெட்டாலென்ன என மறந்து விட்டிருக்கும்; மீதமுள்ள நாற்பது வீடுகளின் கதி????????

பசி.. பட்டினி.. கொலை.. கொள்ளை.., உடுத்த ஒரு ஆடை கிடையாது.., உறங்க ஒரு இடம் கிடையாது.., பிள்ளைகளையாவது வேலைக்கு அனுப்பி, தெருவில் திரிந்து.. திரிந்து.. திரிந்து.. அன்றாடங்காய்ச்சிகளாய் அலைவது ஒரு நாட்டின் குறை இல்லையா மெஹல் மொனஹ்?"

"அந்த குறையை போக்க நீங்களென்ன செய்தீர்கள்?"

"நானென்ன செய்திட முடியும் அத்தனை பேருக்கும். அந்த பத்து வீட்டு பணக்காரனோ; இரண்டாவதான இருபது வீட்டு பணக்காரனோ தன் சொத்தில் அரை பாதியை கொடுத்து உதவினால் கூட போதும், ஏழ்மையை என்ன விலை என்று கேட்குமென் தேசம். செய்வார்களா அந்த ஜமீன்தார்கள்? செய்ய மாட்டார்கள். அது தான் நான் எங்குமே காணும் குறை மெஹல்."

"என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவே இல்லையே மாலன்"

"என்ன பதிலை எதிர் பார்கிறீர்கள்?"

"நீங்கள் என்ன செய்தீர்கள் அந்த குறையை போக்க? ஒரு அணுவை அசைத்து வைக்கும் அளவிற்காவது உங்களால் முடிந்ததை நீங்கள் செய்ய முயன்றீர்களா?"

"நானென்ன செய்துவிட முடியும் மெஹல், நானொன்றும் அந்த முதளிரண்டாம் வர்கமில்லையே"

"மூன்றாம் வர்கமென்பது போதாதா? நினைத்தால் எல்லாம் முடியும் மாலன்."

அதற்கு மேல் விமானத்திற்கே பொறுக்கவில்லை. விமானம் தரை இறங்கியது.. இருவரும் சற்று களைந்து மனதிற்குள் ஆயிரம் கேள்விகளையும் பதில்களையும் சுமந்தவர்களாய் பிரிந்து சென்று அவரவர் பெட்டி பொருள்களை எடுத்துக் கொண்டு ஏமனின் விமான நிலையத்திலிருந்து வெளியே வருகிறார்கள்.

"நல்லது மாலன், நிறைய பேசினோம். ஆயினும் ஒரு முடிவிற்கு வர, நேரம் தான் போதவில்லை -சந்திப்போம். ஏதேனும் தவறெனில் மன்னியுங்கள். ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாய் சொல்கிறேன் மாலன், நினைத்தால் எதுவும் முடியும். இதுபோன்ற காரியங்களில் நாம் அதிக நாட்டம் கொள்வதில்லை. நமக்கென்ன பிறர் காரியம் தானே என சென்று விடுகிறோம். என்னால் அப்படி முடியவில்லை மாலன், எனக்கு வலிக்கிறது"

"எனக்கும் வலிக்கிறதென்று பதில் சொல்லி என்னாகும் மெஹல், சந்திப்போம். மன்னிக்க ஒன்றுமில்லை, சிந்திக்க தான் நிறைய இருக்கிறது"

"ஆம் மாலன் சிந்திப்பது மட்டுமல்ல, எப்படி நடைமுறைக்கு கொண்டு வரலாமென்பதற்காகவும், இந்த நம் சமூகத்திற்காய் நம்மை போன்றவர்கள் ஏதேனும் முயற்சி செய்தேயாக வேண்டுமென்பதற்காகவும் மாலன்"

"நினைத்தால் எல்லாம் முடியும் தான், ஆனால் இது மொத்த சமூகத்தின் குற்றம் மெஹல், நான் தனித்து என்ன செய்திட முடியும்? யோசிக்கிறேன்"

"முடியும். முடியும் மாலன். உங்களுக்காக காத்திருக்கிறார்கள். அதோ அவ்விடம் செல்லுங்கள், ஏமனின் வரவேற்பிடம் அது தான். இது என் விலாசம். எத்தனை நாளிங்கு தங்குவதாக உத்தேசம்?"

"ஐந்து நாட்கள் வரை இருப்பேன் மெஹல்"

"நேரம் கிடைத்தால் என்னை மீண்டும் சந்திக்க முடியுமா?"

"நாளைக்கும் மற்ற நாளும் ஓய்வு தான், மூன்றாம் நாளிலிருந்தே கூட்டம் தொடங்க திட்டம் என்றார்கள்"

"அப்படியானால் கண்டிப்பாக என்னை வந்து சந்திக்க முயற்சி செய்யுங்கள் மாலன். உங்களுக்கொரு அதிசியம் காத்துக் கிடக்கிறது. நான் ஏன் சொன்னேன், என்ன செய்திருக்கிறேன், நான் யாராக இருக்கும் மொத்தமும் விரைவில் அறிவீர்கள்.. விடைபெறுகிறேன் மாலன்.."

அவள் மிக மிடுக்காய் பேசி விட்டு அதோ போகிறாள் அவளுக்கென ஒரு ராஜ கூட்டம் வந்து அவளை சூழ்ந்துக் கொள்கிறது...
------------------------------------------------------------------------------------------------------------
ரகசியம் நாளை தெரியும்; காற்று இன்னும் தொடர்ந்து வீசும்...


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 21, 2009 11:43 pm

மிக அருமையாக உள்ளது அடுத்த பகுதியை எதிர்பார்த்துக்காத்து இருக்கிறேன் மகிழ்ச்சி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 21, 2009 11:46 pm

பெருமைக்கும் மதிப்புக்கும் உரியவரான வித்யாசாகர் அவர்களே ::: உங்கள் காற்றின் ஓசை பாகம் இரண்டு படித்தேன் ,முடிவில்லாம ரகஷியம் தொடரும் நாளை என்று நம் ஆவலை இன்னும் அதிகமாக்கி விட்டீர்கள் ..
இங்கு சொல்லப் பட்டு இருப்பது இருவரினது உரையாடல் , அவர்கள் பேசிக் கொண்டதில் இருந்து நம்மால் முடியாதது எதுவுமே இல்லை என்பதே கருத்து ,நாம என்ன பண்ண முடியும் என்று இராது ,நம்மால் முடியாதது எதுவுமே இல்லை ,முதல் முயற்சி எடுக்கணும் ,அதில் தோற்றால் பறவை இல்லை ,ஆனா முயற்சியே எடுக்காம நம்மால் என்ன முடியும் என்று இருக்க கூடாது ..

ஒரு மனிதன் அழும்போது தான் அழுவதாய் ஒரு பதற்றம் வருமாயின்; எங்கோ ஒரு வீடு பற்றி எரிகையில் தன் வீடு எரிவதாய் ஒரு அவஸ்த்தை ஏற்படுமாயின்; மரம் செடி கொடிகள் அசைகையில் அந்த அசைவின் காரணமென்ன என உற்றுப் பார்த்து அவைகளின் மொழியறிய முயற்சித்திருபாய் எனில்; தண்ணீரில் விழுந்த ஒரு எறும்பை கூட காப்பாற்றி தரையில் விட பாடுபட்டிருப்பாயானால்; கடவுளை இந்துக்களின் கோவிலிலும், இஸ்லாமிய மசூதியிலும், கிருஸ்த்துவ தேவாலையத்திலும் வணங்க முடியுமானால்; மனிதரை கடவுள் வாழும் கோவிலென கண்டு மதித்திருப்பாயானால்....., இவைகளை பற்றிப் பேச வயது ஒரு பொருட்டில்லை மெஹல்."

நாம் பல விஷயங்களை பேச வயசு ஒரு தடையா ..இல்லவே இல்லை என்பதை இங்கு மிக அழகா வித்யாசாகர் சொல்லி இருப்பது அவருக்கே உரிய சிறப்பு ..
மிக அருமை பாராட்டுக்கள் வித்யாசாகர் .. என்ன ஒன்று என்ன ரகஷியம் என்று சொல்லாம நம்ம தூக்கதை கெடுத்து விட்டீர்களே.. இருந்தாலும் இதில் சுவாரசியம் உள்ளது ,நாளை உங்கள் ர்கஷியத்துடநேயே ஈகரை ஆரம்பமாக வாழ்த்தும்

அன்பு மீனு



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Sep 21, 2009 11:56 pm

ன்றி... மீனு ரூபன், அது தான் மிக முக்கியமான விசையம், இங்கு சற்று இருவரையும் ஒன்று சேர்த்திருக்கிறோம் அவ்வளவே..இன்னும் நிறைய நிறைய இருக்கிறது.., உங்களின் ஆர்வத்திற்கும் வரவேற்பிற்குமிணங்க என் தூக்கங்களெல்லாம் நல்ல ஆக்கங்களாய் தரப் படும். கடவுள் அருளால் இன் நாவலை மிக தரமான ஒரு நாவலாக முடிக்க வேண்டுமென்பது குறிக்கோள்!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 21, 2009 11:57 pm

உங்கள் குறிக்கோள் இனிதே நிறைவேற வாழ்த்தும் ரூபன் அண்ட் மீனு



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 21, 2009 11:59 pm

வாழ்த்துக்கள் அண்ணா எழுதுங்கள் உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 22, 2009 12:11 am

ரூபன் மீனு குடும்ப படத்துல முகில் படம் நம்ம படம் இருக்கு பாருங்க.. சந்திப்போம்.. அனைவருக்குமென் அன்பு இரவு வணக்கம்! காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு 68516

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 22, 2009 1:22 pm

பெருமைக்கும் மதிப்புக்கும் உரிய வித்யா உங்கள் காற்றின் ஓசை பாகம் இரண்டு படித்தேன் நாளை என்று என் ஆவலை இன்னும் அதிகமாக்கிக்கொண்டே இருக்கிறது
மிக அருமை பாராட்டுக்கள் வித்யா தொடரட்டும் உங்கள் பணி

வாழ்த்துகளுடன் பிரகாஸ்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 22, 2009 1:38 pm

காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு 678642
உங்களின் கர பலத்தோடு.. விரைவில் வரும்..

திகபட்சம் எல்லாமே என்றோ குறிப்பெடுத்தி எழுதி வைத்தது தான். எழுதி முடிக்க இப்போது நேரம் அமைந்திருக்கிறது..

விரைவில் பதிவு-3 வரும்.. காத்திருங்கள்..தோழரே!

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 22, 2009 5:46 pm

நீங்களில்லாத பொது எழுதிய கவிதைகளெல்லாம் உங்களின் படத்திற்காக காத்திருக்கிறது சகோதரரே..

(இது படத்திற்க்குனு நினைக்கிறீங்களா, Noooooooooo...., சும்மா படிக்க வைக்க ஒரு ஏற்பாடு)


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக