புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே புளிப்பு!? Poll_c10ஒரே புளிப்பு!? Poll_m10ஒரே புளிப்பு!? Poll_c10 
60 Posts - 48%
heezulia
ஒரே புளிப்பு!? Poll_c10ஒரே புளிப்பு!? Poll_m10ஒரே புளிப்பு!? Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
ஒரே புளிப்பு!? Poll_c10ஒரே புளிப்பு!? Poll_m10ஒரே புளிப்பு!? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஒரே புளிப்பு!? Poll_c10ஒரே புளிப்பு!? Poll_m10ஒரே புளிப்பு!? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரே புளிப்பு!? Poll_c10ஒரே புளிப்பு!? Poll_m10ஒரே புளிப்பு!? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரே புளிப்பு!? Poll_c10ஒரே புளிப்பு!? Poll_m10ஒரே புளிப்பு!? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஒரே புளிப்பு!? Poll_c10ஒரே புளிப்பு!? Poll_m10ஒரே புளிப்பு!? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே புளிப்பு!?


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 24, 2009 7:34 pm

புவியூர் என்ற நாட்டை சக்கரபாணி என்ற மன்னன் ஆண்டான். அவன் ருசி பார்த்து சாப்பிடுவதில் வல்லவன். வித விதமான உணவுகளையும், தினுசு தினுசான பழ வகைகளையும் அதிக செலவிட்டு வாங்கிச் சாப்பிடுவான். மந்திரிகளும் மன்னனுக்கு பிடித்தமான உணவு வகைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொடுத்தனர்.



ஒரு நாள் மன்னன் சக்கரபாணி சோழ நாட்டுக்கு சென்றான். அந்த நாட்டு மன்னன் அவனை விருந்துக்கு அழைத்திருந்தான். அரண்மனையில் பெரிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விருந்தில் விதம் விதமான மாம்பழங்கள் இடம் பெற்றிருந்தன. மன்னன் சக்கரபாணி இதற்கு முன் மாம்பழங்களைப் பார்த்ததே இல்லை. மாம்பழங்களை அவன் சாப்பிட ஆரம்பித்தான். இதற்கு முன் இவ்வளவு சுவையான பழங்களை அவன் சாப்பிட்டதேயில்லை. அவன் சோழ நாட்டு மன்னனை மிகவும் புகழ்ந்து பாராட்டினான். ""நண்பா, இவ்வளவு சுவையான பழங்கள் உன் நாட்டில் இருக்கிறதா? உன் விருந்து எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்று கூறினான்.




மாம்பழங்களில் மனதை பறிகொடுத்த சக்கரபாணி மன்னன் தன்னுடைய நாட்டிலும் மாமரங்களை வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். தன் ஆசையை சோழ மன்னனுக்கு தெரிவித்தான். சோழ மன்னன் இதைக் கேட்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தான். விருந்து முடிந்து செல்லும் போது நல்ல மாம்பழத் தோட்டக்காரனை உடன் அனுப்புவதாக கூறினான்.




மறுநாள் சோழ மன்னனிடம் விடை பெற்றான் சக்கரபாணி. புவியூர் நாட்டுக்குத் திரும்பினான். அப்போது அவனுடன் சோமு என்ற தோட்டக்காரனை சோழ மன்னன் அனுப்பி வைத்தான்.




புவியூரில் நல்ல மாந்தோட்டம் ஒன்றை அமைக்கும்படி மன்னன் உத்தரவிட்டான். சோமு நல்ல செழிப்பான ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தான். அதில் மாவிதைகளைப் போட்டான். அவற்றை மிகவும் கவனமாக வளர்த்தான். சில ஆண்டுகளில் மாமரங்கள் காய்க்க தொடங்கின.




மாமரங்கள் காய்த்துள்ள செய்தி மன்னனுக்குத் தெரிவிக்கப்பட்டது. மன்னன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். மன்னன் ஒரு நாள் தன் அமைச்சர்களுடன் மாந்தோட்டத்திற்குச் சென்றதும் சோமுவை வரவேற்றான்.




தோட்டமெங்கும் மாம்பழங்கள் பழுத்து தொங்கின. அவைகள் தொங்கும் அழகைக் கண்டு மன்னன் வியப்பு அடைந்தான். சோமுவை பெரிதும் பாராட்டினான். மாம்பழங்களை பார்த்து மன்னன் நாக்கில் எச்சில் ஊறியது.




சோமு நல்ல மாம்பழங்களை பறித்து அவற்றை பணிவுடன் மன்னனிடம் கொடுத்தான். மன்னன் மிகவும் ஆவலாக ஒரு மாம்பழத்தை எடுத்து சுவைத்தான் அவ்வளவுதான். ""தூ... தூ...'' என்று வாயில் வைத்த மாம்பழத்தை எடுத்து துப்பினான். சோமு ஒன்றும் புரியாமல் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தான்.




மன்னன் அவனை பார்த்து, ""என்ன இது மாம்பழம் ஒரே புளிப்பாக இருக்கிறது. வாயில் வைக்க முடியவில்லை,'' என்று கேட்டான். உடனே சோமு ஓடிச் சென்று வேறு சில மரங்களில் இருந்து பழங்களை பறித்து வந்தான். மன்னன் அவற்றையும் சுவைத்து பார்த்தான். அவை அனைத்துமே பயங்கரமாக புளித்தன. இதனால் மன்னன் கடுங்கோபம் அடைந்தான். கண்கள் சிவந்தன. மன்னன் சோமுவைப் பார்த்து, ""நான் எவ்வளவு பணம் செலவிட்டு மாம்பழங்களை பயிரிடச் சொன்னேன். நீ அத்தனையும் நாசமாக்கி விட்டாயே. இவ்வளவு பழத்தையும் இனி என்ன செய்ய முடியும், புளிப்பு மாம்பழத்தை யாராவது சாப்பிட விரும்புவார்களா? எனவே, இதற்கு நீ சரியான தண்டனை அனுபவிக்க வேண்டும். உனக்கு மரண தண்டனை அளிக்கிறேன்,'' என்று உத்தரவிட்டான்.




காவலர்கள் சோமுவைப் பிடித்து இழுத்துச் சென்றனர். அப்போது சோமு மன்னனைப் பார்த்து, ""கட.. கட...'' என சிரித்தான். அவன் சிரிப்பதைப் பார்த்த காவலர்கள் அவனை நன்றாக அடித்து உதைத்தனர். நன்றாக உதைப்பட்ட பின்னரும் சோமு சிரிப்பதை நிறுத்தவில்லை.




மன்னனுக்கு சோமு சிரிப்பது வியப்பாக இருந்தது. சாகப் போகிறவன் அழாமல் சிரிக்கிறானே. இதற்கு என்ன காரணம் என்று வியப்பு ஏற்பட்டது. மன்னன் சோமுவைப் பார்த்து, ""சற்று நேரத்தில் நீ சாகப் போகிறாய் அப்படி இருந்தும் ஏன் சிரிக்கிறாய்?'' என்று கேட்டான். உடனே சோமு, ""மன்னா, உன் முட்டாள்தனத்தை எண்ணித்தான் சிரிப்பு வந்தது. எதற்கெடுத்தாலும் யோசிக்காமல் மரண தண்டனை என்று உத்தரவிடும் உன்னைப் போன்றவர்கள் இருப்பதை நினைத்தேன், சிரிப்பு வந்துவிட்டது. எனக்கு மரண தண்டனை விதிக்கும் முன் நீ கொஞ்சமாவது யோசித்தாயா? மாம்பழம் புளித்தது என்றால் அது என் தவறா? சற்று யோசித்துப் பார்,'' என்று கூறினான். உடனே மன்னன், ""என் தீர்ப்பு தவறு என்று நீ எப்படி சொல்கிறாய்?'' என்று கேட்டான்.




சோமு மிகவும் அமைதியாக, ""மன்னா, தோட்டத்தில் என்னை மாமரங்களைப் பயிரிடச் சொல்லி அழைத்து வந்தீர்கள். சில மா விதைகளை கொடுத்து இந்த இடத்தில் தோட்டம் போடச் சொன்னீர்கள். எனக்கு தாங்கள் இட்ட கட்டளையை நான் முழுவதும் நிறைவேற்றி விட்டேன். பழம் புளிப்பாக இருப்பதற்கு காரணம் தாங்கள்தான்! மா மரம் பயிரிடும் மண், மா விதை போன்றவற்றை தாங்கள் பரிசோதிக்கவில்லை. அவற்றை சார்ந்து தான் பழம் புளிக்குமா? இனிக்குமா என்பது இருக்கிறது. எனவே, தாங்கள் தான் குற்றவாளி,'' என்று கூறினான்.




மன்னனுக்கு உண்மை புரிந்தது. உடனே சோமுவை விடுதலை செய்ய உத்தரவிட்டான். பின்னர் சோமுவை நோக்கி, ""சோமு இந்த மா மரங்கள் இனிக்கும் மாம்பழங்களை தர ஏதாவது வழி இருக்கிறதா?'' என்று கேட்டான்.




சோமு அதற்கு, ""ஆமாம் அரசே... விஞ்ஞான முறையில் இந்த மண்ணை பரிசோதிக்க வேண்டும். பின்னர் அதற்கு தகுந்த உரங்களைப் போட வேண்டும். அப்போது மண்ணின் தன்மை மாற்றம் அடையும். மாமரமும் சுவையான இனிய மாம்பழங்களைத் தரும்,'' என்று கூறினான்.




சோமுவை அவ்வாறு செய்ய ஏற்பாடு செய்யும்படி கூறிவிட்டு மன்னன் அங்கிருந்து சென்று விட்டார். மண்ணை பரிசோதிக்க முற்பட்டான் சோமு. அதற்காக சோழ நாட்டு விஞ்ஞான வல்லுனர்களை அழைத்து வந்தான். மண்ணின் தன்மையை அறிந்து அதற்கு ஏற்ப உரம் இட்டான். சில நாட்களில் மாமரங்கள் இனிய ருசியான மாம்பழங்களை கொடுக்க ஆரம்பித்தது. மன்னன் மீண்டும் மாந்தோட்டத்துக்கு வந்தான். மாம் பழங்களை உண்டு மகிழ்ந்தான். சோமுவின் அறிவுத் திறத்தை வியந்து பாராட்டினான். அவனுக்கு ஏராளமான பரிசுகளை வழங்கி கவுரவித்தான்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக