புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_m10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10 
31 Posts - 53%
heezulia
மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_m10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_m10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_m10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10 
1 Post - 2%
jairam
மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_m10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10 
1 Post - 2%
சிவா
மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_m10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10 
1 Post - 2%
Manimegala
மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_m10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_m10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_m10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_m10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10 
13 Posts - 4%
prajai
மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_m10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10 
9 Posts - 3%
Jenila
மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_m10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10 
4 Posts - 1%
Rutu
மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_m10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10 
3 Posts - 1%
jairam
மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_m10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_m10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_m10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_m10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 30, 2011 11:00 am

நாம் வாழும் பூமி செழிக்க இயற்கை தரும் வரம் தான் மழை.
வானம் பொய்த்து விட்டால் நம் வாழ்க்கை பரிதாபமாகிவிடும்.

- அதனால்தான் திருவள்ளுவர் ``வான் சிறப்பு'' என்று ஒரு அதிகாரத்தையே படைத்துள்ளார்.

இவ்வளவு சிறப்புமிக்க மழை தொடர்ச்சியாகப் பெய்யும் மழைக்காலத்தில், நமக்கு தொல்லைகளும் இல்லாமல் இல்லை.

மழையில் நனைவதாலோ அல்லது தலைமுடியில் நீர் கோர்த்து இருப்பதாலோ, தலைமுடியின் வேர்களின் சின்ன சின்ன கொப்பளங்கள் வரக்கூடும்.

மழைக்காலங்களில் அவ்வளவாக யாரும் தலைக்கு குளிக்க மாட்டார்கள். இதனால் உருவாகும் அழுக்கும், வியர்வையும், தலையில் தடவிக் கொள்ளும் எண்ணெய்யும் சேர்ந்து தேமல், படை போன்றவைகளை தலையில் உருவாக்கலாம். சில சமயங்களில் Fungus அதாவது பூஞ்சைக்காளான் பாதிப்பும் தோன்றும். தலையில் ஈரமும், காற்றில் உள்ள அதிக ஈரப்பதத்தாலும், நம்மை சுற்றியுள்ள நுண் கிருமிகளாலும் தலையிலுள்ள சைனஸ் `Sinus' வீங்கிக் கொள்ளும். அதனுள் நீர் கோத்துக் கொள்வதால் Sinusitis தலைகனம், ஒற்றைத்தலைவலி போன்றவை வர வாய்ப்புள்ளது.

மழைக்காலத்தில் சூரியனின் வெப்பம், மிகமிக குறைவாக இருப்பதால் காற்றில் பல நுண்கிருமிகள் பரவி இருக்கும். இவற்றை சுவாசிப்பதால் தொண்டை கரகரப்பு, இருமல், சளி, நிமோனியா போன்ற வியாதிகள் வரலாம். நுண்கிருமிகளின் தாக்குதலால் விஷக்காய்ச்சலும் தோன்றலாம்.

மழைநீர் ஆங்காங்கே தேங்கிக் கிடப்பதால் கொசு உற்பத்தி அதிகமாகும். இதனால் கொசுவினால் வரும் வியாதிகளான மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல்கள் அதிக அளவில் தாக்கக்கூடும்.

பல இடங்களில் சாக்கடை அடைத்துக் கொண்டு கழிவுநீரும், குடிநீரும் ஒன்றாக கலந்து விடுவதால் வாந்தி, பேதி, காலரா போன்ற வியாதிகள் மழைக்காலத்தில் அதிகம் ஏற்படும்.

மழைக்காலத்தில் திறந்த நிலையில் இருக்கும் தின்பண்டங்களை உண்ணக்கூடாது. குறிப்பாக கிராம்பு, ஏலக்காய், முந்திரி, பாதாம், சர்க்கரையில் செய்யப்பட்ட இனிப்பு வகைகளில் காற்றில் உள்ள பூஞ்சைக்காளான் படிவதற்கு வாய்ப்புள்ளது. இதை கவனிக்காது சுகாதாரமற்ற இனிப்புகளை சாப்பிட்டால் மயக்கம், வாந்தி, பேதி போன்ற கோளாறுகள் ஏற்படும்.

ஈரத்துணிகளையோ, சரியாக உலராத உள்ளாடைகளையோ அணியக்கூடாது. அணிந்தால், உடலில் பல இடங்களில் தேமல், பூஞ்சைத் தொற்று Fungal infection வர வாய்ப்புள்ளது.

மழைக்காலத்தில் காற்றில் பிராணவாயு குறைவாக இருக்கும். இதனால் சுவாசக் கோளாறுகள் ஏற்படும். வீடுகளில் கொசுவின் தொல்லைக்கு பயந்து, கொசு விரட்டிகளை அதாவது கொசுவர்த்தி சுருள், அல்லது திரவங்கள், மேட் போன்றவற்றை உபயோகிப்பார்கள். இதனால் ஒவ்வாமை, ஆஸ்துமா தொந்தரவு போன்றவை தோன்றக்கூடும். இந்த பாதிப்பு ஏற்கனவே இருந்தால், அதிகரிக்கலாம்.

மழைக்காலத்தில் நம் உடலில் இயற்கையாகவே ஜீரண சக்தி மிகக் குறைவாக இருக்கும். ஆனால் இதைப் புரிந்து கொள்ளாமல் காரமான உணவு, அதிக அளவில் எண்ணெய் கலந்த உணவு, அதிக மசாலா கலந்த உணவை சாப்பிட்டால் ஜீரணக் கோளாறு ஏற்படும். நெஞ்செரிச்சல், வாயு தொந்தரவு, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

சுற்றுப் புறங்களில் பல இடங்களில் எலிவளைகள் உள்ளன. அதற்குள் புகும் மழை நீர், குடிநீரோடு கலந்து அதை பருகிவிட்டால் எலி ஜுரம் (Leptos pirosis) தோன்றும். மழைக்காலத்தில் ஏற்படும் சுகாதாரசீர்கேட்டால் விஷக்கிருமிகளும், நுண்கிருமிகளும், தண்ணீரில் கலக்கும். அதனால் மஞ்சள் காமாலை போன்ற வியாதிகள் வர வாய்ப்புள்ளது.

தேங்கியுள்ள மழை நீரில் குழந்தைகள் விளையாடுவார்கள். பெரியவர்கள் அதில் நடந்து செல்வார்கள். அவர்கள் கால்களை கிருமி நாசினி சோப்பு அல்லது திரவத்தை உபயோகித்து சுத்தம் செய்யவேண்டும். இல்லாவிட்டால் கால் விரல்களுக்கு இடையில் புண் ஏற்படும். இதனை ``சேற்றுப்புண்'' என்போம். தண்ணீரில் அதிகம் புழங்கினால் சிலருக்கு கால் அல்லது கைகளில் உள்ள நகங்கள் பாதிக்கப்பட்டு அழுகவும் செய்யும்.

மழைக்காலத்தில் குளிர் அதிகம் இருப்பதால் கம்பளி, ஸ்கார்ப் போன்ற வெதுவெதுப்பான உடைகளை அணிவார்கள். ஒரு சிலருக்கு அது அலர்ஜியை ஏற்படுத்தக் கூடும்.

பொதுவாக பல வீடுகளில் மழைக்காலத்தில் ஒரே அறையில் எல்லோரும் ஒன்றாக தூங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் தலையில் பேன் பெருகும். சிரங்கு, இருமலினால் ஏற்படக்கூடிய `Droplet Infection' போன்றவை பரவ அதிக வாய்ப்புள்ளது.

உடல் கதகதப்பிற்காக மழைக்காலங்களில் புகைபிடிப்போர் அதிகமான எண்ணிக்கையில் சிகரெட், பீடி போன்றவற்றை உபயோகிக்கக் கூடும். இதனால் மார்புச்சளி, இருமல், கபம் போன்ற வியாதிகள் பெருகும். புகைப்பிடிப்பதால் ஏற்படும் ஆபத்தான நோய்களும் தாக்கக்கூடும்.

மழைக்காலத்தில் டீ, காபி போன்றவைகளை உடல் கதகதப்பிற்காக அதிகம் பருகக்கூடாது. பருகினால் குடல்புண், பித்த வாந்தி போன்ற உடற் கோளாறுகள் ஏற்படும்.



மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 30, 2011 11:00 am

மழைக்கால நோய்கள் வராமல் தடுப்பது எப்படி?

* மறக்காமல், தயங்காமல் குடை எடுத்துச் செல்லுங்கள். மழையில் நனைவதை முழுவதுமாக தவிர்த்து விடுங்கள்.

* ஈரமான ஆடைகளை உடனே களைந்து விட்டு உலர்ந்த, சுத்தமான ஆடைகளை அணியுங்கள்.

* வீட்டைச் சுற்றி மழை நீர் தேங்காத அளவிற்கு பார்த்துக்கொள்ளுங்கள்.

* கழிவு நீர் பாதைகளில் அடைப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* மிதமான, எளிதாக ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை உண்ணுங்கள்.

* காய்ச்சிய நீரை பருகுங்கள்.

* கூடியவரையில் வெளி இடங்களில் உணவு உண்பதை தவிர்த்து விடுங்கள். அப்படி சாப்பிட்டே ஆகவேண்டுமென்றால் சூடாக இருக்கும், எளிதாக ஜீரணம் ஆகக் கூடிய உணவுகளை உண்ணுங்கள்.

* டின்னில் அடைத்து வைக்கப்பட்டுள்ள, கெட்டிய காகிதத்தில், பாக்கெட்டில் சுற்றி வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை உண்ணாதீர்கள்.

* எந்த நோயாக இருந்தாலும் நோயின் அறிகுறி தெரிந்த உடனே மருத்துவரை அணுகுங்கள். எந்தக்காரணத்தைக் கொண்டும் மருத்துவர் ஆலோசனையின்றி நீங்களாகவே கடைகளில் மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிடாதீர்கள். அது மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கிவிடும்.

தன்னுடைய சுகாதாரம், தன்னைச்சுற்றியுள்ள சுற்றுப்புற சூழலின் சுகாதாரம், பொது நலத்தில் அக்கறை, விழிப்புணர்ச்சி இவை இருந்தால் மழைக்கால நோய்கள் உங்களை தாக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.

இன்னும் அதிக மழை பெய்யட்டும். நீர்நிலைகள் உயரட்டும்.

விளக்கம்: டாக்டர் அருணா ராமகிருஷ்ணன்



மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக