புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_m10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10 
127 Posts - 54%
heezulia
ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_m10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_m10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_m10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10 
9 Posts - 4%
prajai
ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_m10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_m10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_m10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 28, 2011 1:20 pm

ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  CNI281206

மும்பையில் தொடங்கிய 3 நாள் உண்ணாவிரத போராட்டத்தில் அன்னா ஹசாரே பேசுகையில், ஊழலை ஒழிக்க இறுதி கட்ட போருக்கு தயாராகுமாறு தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அன்னா ஹசாரே பேச்சு

அரசியலிலும், அதிகாரிகள் மட்டத்திலும் ஊழலை ஒழிக்க வலிமையான லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற கோரி, பிரபல சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே திட்டமிட்டபடி மும்பை பாந்திரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் தன்னுடைய 3 நாள் உண்ணாவிரத போராட்டத்தை நேற்று தொடங்கினார்.

அப்போது மைதானத்தில் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் அன்னா ஹசாரே பேசியதாவது:-

சாவதற்கு அஞ்சவில்லை

நாட்டை காப்பாற்றுவதற்காக ஏதாவது தியாகத்தை செய்யத்தான் வேண்டியுள்ளது. நான் என்னுடைய 26-வது வயதில் பொதுச் சேவையை பணியை தொடங்கினேன். திருமணம் செய்து கொண்டால் வீட்டிற்குள்ளேயே முடங்கி, நாட்டு சேவைகள் செய்ய முடியாது என்பதால் நான் இதுவரை திருமணம் செய்யவில்லை.

நான் எதுவரை வாழ்கின்றேனோ, அதுவரையிலும் நாட்டிற்காக சேவை செய்து வாழ வேண்டும். நான் சாவதற்கு ஒருபோதும் பயப்பட்டதில்லை. காலை 9 மணி முதல் 12 மணி வரை காரில் நின்று கொண்டே வந்தேன். முதலில் உடல்நிலை சரியாக இருக்கின்றது என்று சொன்ன டாக்டர்கள் பின்னர் சரியில்லை என்கின்றனர். 25 வருடம் நாட்டிற்காக உழைத்த என்னிடம் போர்வை மற்றும் தட்டு இது இரண்டையும் தவிர வேறு எதுவும் இல்லை.

இறுதிக்கட்ட போருக்கு...

ஊருக்கு சென்று 35 வருடம் ஆகின்றது. ஊரிலும் குடும்பம் உள்ளது. ஆனால் அதனை விடவும் மேன்மையான குடும்பம் நாடு முழுவதும் எனக்கு உள்ளது. சகோதரர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சகோதரி கிரண் பெடி ஆகியோர் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு சொன்னார்கள். டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் என்னுடன் அமர்ந்திருந்த மக்களை பார்த்ததும் எனக்குள் சக்தி கூடிக்கொண்டே சென்றது. 9 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தும் எதுவும் ஆகாத எனக்கு இந்த 3 நாட்கள் உண்ணாவிரதம் ஒன்றும் செய்யாது.

இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளுமாறு யோகா குரு பாபா ராம்தேவிடம் பேசினேன். அவர் நாளை அல்லது நாளை மறுநாள் வருவார்.

அரசு லோக்பால் விவகாரத்தில் அன்னா மற்றும் அன்னா ஹசாரே குழுவினை ஏமாற்றவில்லை, மக்களை ஏமாற்றுகின்றது. லோக்பால் பிரச்சினையில் மத்திய அரசு துரோகம் செய்து விட்டது. இதற்காக மக்கள் ஒருநாள் பாடம் கற்பிப்பார்கள். ஊழலை அடியோடு ஒழிக்கவும், பாராளுமன்றத்துக்குள் குண்டர்கள் நுழையாமல் இருப்பதை உறுதி செய்யவும் நாம் இறுதி கட்ட போருக்கு தயாராக வேண்டும்.

வெள்ளையர்களுக்கு எதிராக முதலாவது சுதந்திர போராட்டம் நடைபெற்றது. இப்போது நாம் நடத்துவது இரண்டாவது சுதந்திர போராட்டம். நாம் ஜெயிலுக்கு போக வேண்டியிருந்தால் கூட கவலைப்படக்கூடாது.

அரசிற்கு எதிராக பிரச்சாரம்

டெல்லியில் உள்ள பாராளுமன்றம் மக்கள் பாராளுமன்றத்தை விடவும் சிறியது. பாராளுமன்றத்தில் உள்ள 150 எம்.பி.க்கள் கிரிமினல்கள். எம்.பி.க்களை திரும்ப பெறும் உரிமை மட்டும் இருந்தால், இவர்கள் புனிதமான ஜனநாயக கோவிலுக்குள் (பாராளுமன்றம்) நுழைய முடியாது. தற்போது குண்டர்களும், கிரிமினல்களும் அரசியலில் நுழைகிறார்கள். சட்டங்களை இயற்றும் நம்முடைய பாராளுமன்றமும், சட்டமன்றங்களும் புனிதமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

5 மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சமயத்தில் நீங்களும், நானும் இத்தகைய துரோகம் தொடர வேண்டுமா? என்று முடிவு செய்ய வேண்டும். வலுவான லோக்பால் மசோதாவினை அரசு நிறைவேற்றாத பட்சத்தில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் அரசுக்கு எதிராக பிரசாரம் செய்வேன். 21/2 வருடங்கள் கழித்து பொதுத்தேர்தல் வரும். அப்போதும் அரசுக்கு எதிராக பிரசாரம் செய்வேன்.

ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  CNI281207

நாட்டின் கருவூலத்துக்கு திருடர்களால் ஆபத்து இல்லை, கருவூலத்தை பாதுகாப்பவர்களால்தான் ஆபத்து என்று எடுத்துச் சொல்வேன். வெளியில் உள்ள எதிரிகளை விட உள்நாட்டில் உள்ள துரோகிகளால்தான் நாட்டுக்கு ஆபத்து உள்ளது.

நீண்ட கால போராட்டம்

தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு செல்லக்கூடாது என்று சிலர் மிரட்டுகின்றனர். (யாருடைய பெயர் விவரங்களையும் தெரிவிக்கவில்லை). இருந்தாலும் நாங்கள் அந்த மாநிலங்களுக்கு செல்வோம். அவர்கள் என்ன செய்து விடுவார்கள் பார்ப்போம்? உங்களுக்கு வலிமையான லோக்பால் சட்டம் கிடைக்காது. எனவே நீங்கள் நீண்ட கால போராட்டத்துக்கு தயாராக வேண்டும்.

திரும்பப் பெறும் உரிமை

வலிமையான லோக்பால் சட்டத்தை உறுதி செய்த பிறகு, எம்.பி., எம்.எல்.ஏ.க்களை திரும்பப் பெறும் உரிமை கோரி அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும்.

இந்த சட்டத்தின்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் மக்கள் வாக்களிக்க விரும்பவில்லை என்றால் அதுபற்றி மக்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற பட்டனில் பதிவு செய்து தெரிவிக்க வேண்டும். வேட்பாளர்களாக நிற்கும் யாருக்கும் மக்கள் வாக்களிக்க விரும்பவில்லை யென்றால் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும். தேர்தலில் தோல்வியடைபவர்கள் மீண்டும் போட்டியிட அனுமதிக்கக்கூடாது. இதற்கான சட்டத்தை நாம் தயாரித்து ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளோம். நிராகரிக்கும் உரிமை சட்டம் வந்தால் கோவில் போன்று மதிக்கத்தக்க பாராளுமன்றம் மற்றும் சட்டசபையின் உள்ளே ரவுடிகளும், குற்றவாளிகளும் செல்ல மாட்டார்கள். லோக்பால் மசோதா குறித்து மக்கள் அபார விழிப்புணர்வு பெறுவதற்கு மீடியாக்களின் பங்கும் மகத்தானது.

நிலத்தை அபகரிக்க கூடாது

நானும், அரவிந்த் கெஜ்ரிவால், கிரண் பெடி போன்றோரும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்காக போராடினோம். இச்சட்டத்தினால்தான் சுரேஷ் கல்மாடி, ஆ.ராசா போன்றோர் சிறையில் உள்ளனர். விவசாயிகளிடமிருந்து நிலத்தை அபகரிப்பதற்கு அரசிற்கு எந்தவிதமான உரிமையும் இல்லை. கிராம சபைகளின் அனுமதி இல்லாமல் நிலத்தை கையகப்படுத்த கூடாது.

வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றம் செய்யும் வரையில் என்னுடைய போராட்டம் தொடரும். ஆயிரக்கணக்கானோர் வலுவான லோக்பால் மசோதாவிற்கு உயிரை விடுவதற்கு துணிந்திருப்பதாக கடிதம் மூலமாக தெரிவித்து வருகின்றனர். நானும் என்னுடைய உயிரை நாட்டிற்காக விடுவதற்காக தயாராக இருக்கின்றேன்.

இவ்வாறு அன்னா ஹசாரே பேசினார்.

கறுப்புக் கொடி

முன்னதாக, பாந்திராவில் உள்ள அரசு இல்லத்தில் இருந்து காலை 10 மணி அளவில் உண்ணாவிரத பந்தலுக்கு அன்னா ஹசாரே புறப்பட்டார். அலங்கரிக்கப்பட்ட திறந்த ஜீப்பில் தேசிய கொடியை பிடித்தபடி அவர் சென்றார். ஜ×கு கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்த சென்றபோது, சுமார் 20 பேர் கறுப்புக் கொடிகளுடன் நின்றிருந்தனர். அவர்கள் அன்னா ஹசாரேவுக்கு எதிராக கோஷமிட்டபடி, அவரது வாகன அணிவகுப்பை தடுத்து நிறுத்தினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

வழியில், ஜுகு கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தியின் வெண்கல சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அன்னா ஹசாரே, அங்கு சிறிது நேரம் தியானம் செய்தார். சத்ரபதி சிவாஜி சிலைக்கும் மரியாதை செலுத்தினார். பின்னர் அன்னா ஹசாரேயின் வாகன அணிவகுப்பு உண்ணாவிரத பந்தல் நோக்கி சென்றது.

சாந்தாகுருஸ், துலிப் ஸ்டார் ஓட்டல், மித்திபாய் கல்லூரி, எஸ்.வி.ரோடு, வில்லே பார்லே, கார், பாந்திரா நெடுஞ்சாலை வழியாக சென்ற ஊர்வலம், 21/2 மணி நேர பயணத்துக்குப் பிறகு எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தை அடைந்தது.

கிரண் பெடி

அங்கு மதியம் 12.30 மணி அளவில் அன்னா ஹசாரே தன்னுடைய உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

74 வயதாகும் ஹசாரேயுடன், அவருடைய குழுவைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்களான அரவிந்த் கெஜ்ரிவால், கிரண்பெடி ஆகியோரும் உண்ணாவிரதம் இருந்தனர். போராட்டம் நடைபெற்ற மைதானத்தில் ஆரம்பத்தில் குறைவானவர்களே இருந்தனர். பின்னர் நேரம் செல்ல செல்ல ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

தினதந்தி



ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக