புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_m10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10 
45 Posts - 57%
heezulia
எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_m10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10 
24 Posts - 30%
mohamed nizamudeen
எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_m10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10 
2 Posts - 3%
prajai
எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_m10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10 
2 Posts - 3%
Barushree
எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_m10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10 
2 Posts - 3%
cordiac
எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_m10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10 
1 Post - 1%
Geethmuru
எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_m10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_m10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_m10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_m10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10 
172 Posts - 55%
heezulia
எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_m10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10 
107 Posts - 34%
T.N.Balasubramanian
எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_m10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10 
12 Posts - 4%
mohamed nizamudeen
எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_m10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10 
11 Posts - 4%
prajai
எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_m10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_m10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10 
2 Posts - 1%
Barushree
எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_m10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_m10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10 
1 Post - 0%
cordiac
எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_m10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10 
1 Post - 0%
JGNANASEHAR
எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_m10எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 10, 2012 10:44 pm

எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Vm1


எல்லையை மிதித்தாலே நமது தொல்லை வினைகளை "இல்லை' என்றாக்கும் தில்லைத் தலத்தில் தினந்தோறும் திருவிழாதான்!

ஆனித் திருமஞ்சனம், தைப்பூசம், மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம், மாதப் பிறப்பு, பிரதோஷம், நால்வர் விழா என அநேக விழா அதி அற்புதமாக நடந்தாலும் சிகரம் வைத்தாற்போல் சிறந்து பொலியும் நன்னாளே ஆருத்ரா தரிசனம்.

சிதம்பரம், திருவாரூர் இரண்டும் மிகப் பழமையான திருத்தலம். "இரண்டில் எது மூத்தது?' என்ற கேள்வி எழலாம்.

தேவாரம் இதற்கு என்ன பதில் சொல்கிறது என்று தெரிந்துகொள்வோமா?

"மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை

மணிதிகழும் அம்பலத்தே மன்னிக்கூத்தை

ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ

அணி ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே'

-எது முந்தி என எவராலும் சொல்ல முடியாது. "முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழம் பொருளாக' நடராஜ மூர்த்தி பொலிகின்றார். ஆனால் அவரது ஆடல் என்றும் புதுமையாக இலங்குகின்றது.

நடன சபாபதியான சிவபிரான், திருவாதிரை நன்னாளில் - ஆருத்ரா தரிசன விழாவில் ஆனந்தம் மிகக் கொள்கிறார். அதனால்தான் "ஆதிரை முதல்வன்' என்றும் "ஆதிரையான்' என்றும் திருப்பெயர் பெற்றுள்ளார்.

மார்கழி மாதம், திருஆதிரை நட்சத்திரத்திற்கு முன் கொடியேற்றி பத்து நாள் விழா நடைபெறுகிறது.

திரு ஆதிரை நட்சத்திரத்தில் "இராஜசபை' என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம் நடைபெறும்.

"குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற்

குமிண் சிரிப்பும்

பனித்த சடையும் பவளம்போல் மேனியில்

பால் வெண்ணீறும்

இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும்

காணப் பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த

மாநிலத்தே!'

-அப்பரடிகள்தான் எவ்வளவு அழகாகச் சொல்லியுள்ளார்.

பிறவி பெற்றதன் பயனே நடராஜரைத் தரிசிப்பதுதான். அதுவும் ஆருத்ரா தரிசனம் பாவ விமோசனம்.

பனி மாதமாக விளங்கும் மார்கழி மாதம் இறைவனைப் பணியும் மாதமாகவும் சிறந்து விளங்குகிறது.

இம்மார்கழி மாதத்தில் அதிகாலையிலேயே நாம் எழுந்து விடுகிறோம். நாம் மட்டுமல்ல. தேவர்களும் எழுந்து தெய்வ தரிசனம் பெறுகிறார்கள்.

எப்படி என்கிறீர்களா?

தை முதல் நாள் முதல் "உத்தராயணம்' என்கிற பகல் பொழுது தேவர்களுக்கு. அப்படியென்றால் தைக்கு முன் வருகின்ற மார்கழி தேவர்களுக்கு அருணோதய நேரம்தானே!

வானவர்களும், மண்ணுலகத்தோரும் ஒரு சேர வணங்கும் மார்கழித் திங்களில்தான் மகாதேவனுக்கும் விழா! மாலவனுக்கும் விழா!

"கோயில்' என்று சொன்னாலே சைவர்களைப் பொறுத்தவரை சிதம்பரம்தான்! வைணவர்களுக்கு ஸ்ரீரங்கம்தான்.

ஸ்ரீரங்கத்தின் சிறப்பு விழா வைகுண்ட ஏகாதசி. அவ்வாறே தில்லையில் சிறப்பு விழா ஆருத்ரா தரிசனம்.

நடராசப் பெருமான், மார்கழி திருவாதிரையிலும், மாசி சுக்ல சதுர்த்தசியிலும், சித்திரை திருவோணத்திலும், ஆனி உத்திரத்திலும், ஆவணி சுக்ல சதுர்த்தசியிலும், புரட்டாசி சுக்ல சதுர்த்தசியிலும் அபிஷேகம் ஏற்கிறார். நமக்கு ஒரு வருடம் என விரிவது தேவர்களுக்கு ஒரு நாளே! மேற்கண்ட வண்ணம் ஒருநாளைக்கு ஆறுமுறை அபிஷேகம் ஏற்கிறார் தேவாதி தேவரான சிவ பரம்பொருள்.

ஒரு நாளின் முதற்குளியல் திருவாதிரைத் திருவிழா அன்றுதான். எனவேதான் ஆருத்ரா தரிசனம் போற்றப் பெறுகிறது. புலவர்களாலே ஏற்றப் பெறுகிறது.

""மார்கழி மாதம் திருவாதிரைநாள்

வரப்போகுது ஐயே'' என நந்தனார் மனம் உருகினார்.

""அருமருந்தொரு திருமருந்து

அம்பலத்தே கண்டேனே'' என முத்துத்தாண்டவர் முழக்கமிடுகிறார்.

""நடுங்க வைக்கும் குளிர்கொண்ட மாதத்திலே குளிர்ந்த தண்ணீரில் விடியற்காலையில் அபிஷேகமா? என்ன சிவபெருமானே இப்படிக் குளிப்பது ஏற்புடைத்தா?' என்று அதியற்புதமாக வினவுகிறார் அப்பைய தீட்சிதர்.

""பெருமானே! தங்கள் சிரத்தில் குளிர்ந்த கங்கை உள்ளது. மேலும் குளிர்ந்த பிறைச் சந்திரனும் பொலிகின்றது. உங்கள் ஒருபக்கத்தில் உறையும் உமாதேவியோ பனிமலை அரசனின் புதல்வி. வதைக்கும் இக்குளிர்நிகழ்வுகள் போதாதா? மார்கழி விடியற்காலையில் சந்தனத்தில் வேறு அபிஷேகமா? இவ்வளவு குளிரைத்தாங்கிக் கொள்வதற்கு ஒரே வழிதான் உள்ளது. காமம், கோபம், மதம் என தீய குணங்களால் என் இதயம் தகிக்கிறது. அங்கே வந்துவிடு குளிர் காயலாம். இதமாக இருக்கும்'' என கவித்துவத்தோடு நயம்பட அழைக்கிறார் அப்பைய தீட்சிதர்.

ஆருத்ரா தரிசனத்தில் என்ன அமுதமயமான கவிதரிசனம் பார்த்தீர்களா?

மார்கழி ஆருத்ரா தரிசன மகோத்சவத்தின்போது வேறொரு வித்தியாசமான நிகழ்வும் நடைபெறுகிறது.

அது என்ன தெரியுமா?

நடராஜப் பெருமான் தன்னை ஆலயத்தில் வந்து வழிபடாத ஆருயிர்கட்கும் அற்புதக் கருணை காட்டி அவர்தம் இல்லங்களுக்கு தாமே எழுந்தருளுகிறார்.

ஆமாம்.

கருவறையை விட்டு ஆருத்ரா தரிசன நன்னாள் அன்று நான்கு வீதிகளிலும் உற்ஸவராக அவரே உலா வருகின்றார். நம் மேல் நடராஜர் காட்டும் கருணைக்குத்தான் அளவேது?

கருவறை மூலவர் தெரு வரை உலா வருவது வேறு ஆலயங்களில் காணமுடியாத எட்டாவது அதிசயம்.

அதிகாலை எழுந்து மலர் பறித்து ஆண்டவனை வழிபட வேண்டும் என்ற ஆசையினால் மரங்கள் ஏற புலிக்காலை வேண்டிப் பெற்றார் ஒருவர்.

திருமால் கண்டு மகிழ்ந்த நடராஜர் திருநடனத்தை தானும் காண ஆசைப்பட்டார் ஆதிசேஷன்.

புலிக்கால் பெற்றவரே வியாக்ர பாதர்.

ஆதிசேஷனே பதஞ்சலி.

இவர்கள் இருவரும் காண சபாபதி இயற்றும் தனிப் பெருங்கூத்தே இவ்வுலகை இயக்கி வருகிறது.

"யாவையும் ஆடிடும் எம் இறை ஆடவே' என்னும் திருமந்திரம் அருளிய திருமூலர் ஆருத்ரா நாயகனை அற்புதமாகப் பணிகின்றார்.

எங்கும் திருமேனி! எங்கும் சிவ சக்தி!

எங்கும் சிதம்பரம்! எங்கும் திருநடம்!

வானாகி,மண்ணாகி, வளியாகி, ஒளியாகி, ஊனாகி, உயிராகி அனைவரையும் கூத்தாட்டுவானாக விளங்குபவன் தானே ஆதிரை முதல்வன் ஆதிசிவன்!

மதிவண்ணன்



எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 11, 2012 10:51 am

:வணக்கம்: பகிர்வுக்கு நன்றி தல

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக